புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
7 Posts - 64%
heezulia
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_m10ந.க. துறைவன் புதுக்கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க. துறைவன் புதுக்கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Aug 27, 2014 10:26 am

*
அவனுக்கென்னவாயிற்று?
*
அறிவாளி, ஆற்றல், துணிவு
மனிதநேயமிக்கவன் என்று
பலராலும் பாராட்டப்பட்டவன்
சிறந்த நிர்வாகி என்று
பெயரெடுத்தவனாயிற்றே…
அவனுக்கென்னவாயிற்று?
*
ஐந்தாண்டுகளாக அவனுக்கு
நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின்
மையக் கரு எது?
மனக்குழப்பமா? மனச்சிதைவா?
எது அவனுள்ளிருந்து
ஆட்டிப்படைகின்றது?
எல்லோராலும்
நேர்மையானவனென்று
மதிக்கப்பட்டவனுக்கு
என்னவாயிற்று?
*
எவரிடமும் மனம்விட்டுப்
பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட
துணிவின்றி மனக்குகைக்குள்
அடைத்து வைத்து வைத்து
நோய்க்கு ஆளாகி விட்டவனை
எதிரிகள் கூட நல்லவனென்று
புகழ்வார்களே
அப்படிப்பட்டவனுக்கு என்னவாயிற்று?


..*
வீட்டுச் சிறைக்குள்
அடைப்பட்ட கைதியாகி
பேச்சுக் குறைந்து மௌனமாகி
கேட்பதற்குப் பதில் சொல்லி
மருந்தே உணவு
உணவே மருந்தென்று
தூங்கிக் கழிக்கிறானே
ஒவ்வொரு நாள் பொழுதும்…
எதையும் பட்டென்று
வெளிப்படையாய் பேசுவானே?
அவனுக்கென்னவாயிற்று?
*
சில நேரம் நன்றாகப் பேசுகிறான்
சில நேரம் ஆர்ப்பாட்டம் செய்கிறான்
அறையில் அமர்ந்து மெல்லிசைக்
கேட்டு ரசிக்கிறான். சன்னலின்
அருகில் வந்தமர்ந்து அழைக்கும்
சி்ட்டுக்குருவியோடு எதையோ
பேசிச் சிரிக்கிறான்.
செல்லக் குழந்தையை அழைத்து
நகைச்சுவையாய் பேசி
மகிழ்ந்துப் புன்னகை செய்கிறான்.
இப்படியெல்லாம்
எப்பொழுதும் சிரித்த முகத்தோடு
கலகலப்பாக இருப்பானே
அவனுக்கென்னவாயிற்று?
*
எந்தக் குற்றமும் அறியாத
வெள்ளந்தியானவனின்
மனதைப் பாதித்தச் சம்பவம் எது?
மனத் தெளிவாகி மனிதனாய்
மீண்டுத் திரும்பினால் போதுமென்று
காத்திருக்கிறார்களே….
குடும்பத்தில் அனைவரிடத்தும்
அன்புக் காட்டியவனுக்கு
என்னவாயிற்று?
*
எல்லோருக்கும் ஆலோசனைச்
சொல்லி வழிகாட்டியவனுக்கு
இன்று
மனநல மருத்துவ ஆலோசனை
அவனுக்கு வழிகாட்டுகிறது.
*



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Aug 29, 2014 9:18 am

கவிதை எழுதுவேன்…!!
*
கவிதை எழுதுவேன் – புதுக்
கவிதை எழுதுவேன்.
எதுகை மோனை வைச்சி
கவிதை எழுதுவேன்.

கதிரவனின் கருத்தைக் கேட்டுச்
சமூகக் கவிதை எழுதுவேன்.
காற்றின் இசை உணர்ந்து
ஆன்மீகக் கவிதை எழுதுவேன்.
*
பண்பாட்டின் சூழல் கேட்டை
புதுக் கவிதையில் எழுதுவேன்.
பனிக் குளிரின் அமைதியிலே
ஹைக்கூ கவிதை எழுதுவேன்.
*
தும்பிகள் விளையாட்டு ரசித்து
சிறுவர் பாடல் எழுதுவேன்
அகம் புறம் வெளிச்சமிடும் – தமிழ்
மரபுக் கவிதை எழுதுவேன்.
*
நிலவு வெட்கப்படாலிருக்கும்
காதல் கவிதை எழுதுவேன்.
வெள்ளை இருட்டில் நடக்கும்
உண்மைக் கவிதை எழுதுவேன்.
*
வண்டுகளின் வன்கொடுமையினை
வன்மையாக எழுதுவேன்.
மலர்களின் அழகைப் போற்றி
பெண்ணியக் கவிதை எழுதுவேன்.
*
மரத்தின் அடிவேராகியே – இம்
மண்ணின் கவிதை எழுதுவேன்.
மனிதனின் உள்ளத் தவிப்பை – என்
மரணம் வரை எழுதுவேன்.!!.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Sep 01, 2014 11:45 am

*
பேனா இல்லாத பாக்கெட்…!!
*
அலுவலகம் கதவுகளைத் திறந்து
விழிப்போடு வரவேற்கின்றன
வாடிக்கையாளர்களை அன்போடு,
கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கும்
அலுவலர்கள் தலைத் தொங்க
இமைகள் கணினியின்மீது பதியப்
பணியாற்றுகிறார்கள் எத்தனையோ
மனஉளைச்சலோடு,
*
உள்ளே வருவதும்
வெளியே போவதுமான
வாடிக்கையாளர்கள்
கவுண்டர் கவுண்டராய்
கால்கள் கடுக்க நின்று
அவசரஅவசரமாய் தன்
பணிகளை முடிக்கடிவெனப்
பரபரப்பான மனஉணர்வோடு,
*
வேலைமுடிந்தவர்கள்
புன்சிரிப்போடும்
வேலைமுடியாதவர்கள்
கடுகடுப்போடும்
வெளியேறுகின்றார்கள்
அலுவலகம் விட்டு,
*
விண்ணப்பங்களை எழுதுவதும்
தவறுகளைத் திருத்துவதுமாகப் பலர்
எழுதுபலகையின் மீது வைத்து
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
தவறு நேராமல் கவனம் வைத்து,
*
அவசரஅவசரமாய்
அருகில் வந்து நின்ற ஒருவர்
குனிந்த தலைநிமிராமல்
எழுதிக் கொண்டிருந்தவரிடம்
“ சார், கொஞ்சம் பேனா
கொடுக்க முடியுமா? “ என்றார்.
நிமிர்ந்துப் பார்த்தவர்
கண்களின் வழியே
பதில் சொன்னார்.
பேனா, கேட்டவர் மீண்டும்
அடுத்த நபரை நோக்கிப் போய்க்
கேட்டு நின்றார்.
அவர் கொடுத்தவுடன்
எழுதத் தொடங்கினார்.
நன்றாக எழுதுகிறது போலும்
அந்த இரவல் பேனா.
பேனா இல்லாத பாக்கெட்டே
பாக்கெட் அல்ல
பேனா இருக்கும் பாக்கெட்டின்
தனிப் பெருங் கருணையே
தனிப்பேரழகு….!!
*


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 01, 2014 12:09 pm

ஒரு பேனா கூட வச்சிருக்க மாட்டாங்களா? அருமையான கவிதை

உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Postஉமேரா Mon Sep 01, 2014 12:35 pm

ந.க. துறைவன் புதுக்கவிதைகள் 3838410834 ந.க. துறைவன் புதுக்கவிதைகள் 3838410834 ந.க. துறைவன் புதுக்கவிதைகள் 1571444738

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Sep 01, 2014 4:52 pm

மிக்க நன்றி அசுரன்...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Sep 01, 2014 4:53 pm

நன்றி உ.மேரா....

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 01, 2014 5:07 pm

சூப்பருங்க அன்பு மலர் பாடகன் மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Sep 05, 2014 8:14 am

*
ஊர்க் கோடி….!!
*
பொன்னிறமான நெல்மணிகள்
பரந்துவிரிந்தக் களத்தில்
வெயிலில் காய்ந்து காய்ந்து
சூடேறக் கொண்டிருக்கின்றன
மேனிக் கொதிக்க கொதிக்க
வெளியில் சொல்ல முடியாமல்…
*
இன்னொரு பக்கம்
முத்துக் கொட்டைகளாய்
மண்நிறத்தில் வேர்க்கடலைகள்
பரவியிருக்கின்ற பகுதியில்
வேலையாட்கள் பேசிக்கொண்டே
உதிர்க்கும் வார்த்தைகளாய்
காலில் துழாவும் போது
கலகலவென சத்தமிட்டு
சூரிய வெப்ப அனலில்
காய்ந்து தவிக்கின்றன
உள்ளிருக்கும் பதமானப்
பச்சைப் பருப்புகள்.
*
அரைக்கும் மிஷினில்
கூலியாட்கள் வாரிவாரிக்
கொட்டுகிறார்கள் நெல்லை
அரிசி வேறாகவும்
உமி வேறாகவும் பிரிந்துக்
குவிகிறது மனிதர்களி்ன்
உறவைப்போல….
அதே போன்று தான்
வேர்க்கடலை மிஷினும்
பருப்பு வேறாகவும்
பொட்டுக்களை வேறாகவும்
வெளியே தள்ளிகின்றது
குவியல் குவியலாய்…
*
வாலிப ஆண்களும் பெண்களும்
குவிந்த அரிசியை, வேர்க்கடலையை
முறங்களில் வாரிவாரி
கோணியில் போட்டு தைத்து
ஒதுக்கி வைக்கிறார்கள்
எண்ணிக்கைப்படி….
*
முன்னிரவு வேளையில்
வெளியூரிலிருந்து வந்த
லாரியில் மூட்டைகளை
ஏற்றி அடுக்கிறார்கள்
உள்மூச்சு வெளிமூச்சு வாங்க
வியர்வை வழியவழிய
அலுப்பின்றி, களைப்பின்றி…
*

இப்படியெல்லாம்
பரபரப்பாக இயங்கி
பலருக்கும் படியளந்த தொழில்
நலிவடைந்தப் பின் மூடபட்டு,
*
இன்று, இளைஞர்கள், வாலிபர்கள்
எந்நேரமும் சுறுசுறுப்பாகக்
கில்லி, கிரிக்கெட்,
பேட்மிட்டன் விளையாடும்
மைதானமாய் காட்சியளிக்கின்றது
அந்த ஊர்க்கோடி அரிசி ஆலை….!!
*
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Sep 11, 2014 10:54 am

காத்திருந்து…!!
*
அட, என்னப்பா கொடுமையிது
புரட்டாசி மாசம் முழுக்கவும்
கல்யாணமே நடக்காதாமே
கல்யாணம் ஆகப்போற
வாலிபன் வாலிபி இவங்க
மனசெல்லாம் என்னமாய்
கஷ்டப்படும் வேதனைப்படும்
கல்யாண ஏற்பாடெல்லாம்
செஞ்சி வைச்சி காத்திருக்கிறது
கொடுமையிலும் கொடுமைப்பா?
என்னமோ ராக்கெட்
வானத்திலே விட்டுக்கிட்டு
ஆராய்ச்சியெல்லாம் பண்ணிக்கிட்டு
விஞ்ஞானம்பத்தி பேசுறோம்.
முற்போக்கா சிந்திக்கிறோம்.
ஆனா, வாலிபங்களின்
மனசிலே இருக்கிற உணர்ச்சிகளை
இன்னும் புரிஞ்சிதாம்
இப்படி செய்றோமா?
மாப்பிள்ளைகளெல்லாம்
ஓண்ணு சேந்து
“ புரட்டாசி ” என்கிற
வார்த்தையிலே இருக்கிற
“ டா ” – வை எடுத்துட்டு
அதையாவது பண்ணுகப்பா?
புரட்டாசிக்குப் பிறகு
காத்திருந்து காத்திருந்துக்
கல்யாணம் பண்ணிக்கப் போற
மாப்பிள்ளைகளுக்கு
எனது அன்பான மணநாள்
நல்வாழ்த்துக்கள்
*


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக