புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
48 Posts - 43%
heezulia
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
2 Posts - 2%
prajai
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
414 Posts - 49%
heezulia
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
28 Posts - 3%
prajai
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10இனி பாலைவனமாகும் பூமி! Poll_m10இனி பாலைவனமாகும் பூமி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி பாலைவனமாகும் பூமி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 20, 2014 4:22 pm

நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில் தான் பல்லுயிரியம் செழித்துக் காணப்படுகிறது.தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பாலுாட்டி வகைகள், 400-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.

தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், உணவைக் கொஞ்சமாகவும், மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவானது. இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது. ஒரு இழையைத் தட்டினாலும், மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும்.உலகெங்கும் பல்லுயிரியத்தைக் காக்க பல்வேறு அமைப்புகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பல்லுயிரியப் பகுதிகள் என அறிவிக்கப்பட்டு அதிமுக்கியத்துவம் தரப்படுகிறது. ஐ.யு.சி.என்., எனும் அமைப்பு, ஆண்டுதோறும் அழியும் நிலையில் உள்ள உயிரிகளைப் பற்றி 'ரெட் டேட்டா' எனும் புத்தகத்தை வெளியிடுகிறது.வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே 'பல்லுயிரியம்' என்கிற 'பயோடைவர்சிட்டி' தான். மரங்கள், செடி கொடிகள், பாலுாட்டிகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, நீர்-நிலை வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழத் தகுதியான பூமி நம்முடையது.நம்மைச் சுற்றி நன்மை மட்டுமே செய்யும் நண்பர்களைப் பற்றி தெரிந்து கொண்டால் தான், எதிர்கால சந்ததியினராவது அவற்றை காப்பாற்ற முன்வருவர்.

பாம்புகள் :

பூமியில் 3000 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 275 இனங்களில், நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவை மட்டுமே விஷத்தன்மையுடையன. நமது சுற்றுப்புறச்சூழலின் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் வகிப்பவை பாம்புகள். மண்புழுவைப் போலவே விவசாயிகளின் நண்பர்கள்.விவசாயிகளின் வயலில் விளைந்தவற்றை அழிப்பது எலிகள் தான். ஒரு ஜோடி எலிகள் மூலம் ஆண்டுக்கு 800க்கும் மேற்பட்ட குட்டிகள் உருவாகின்றன. இவற்றை பாம்புகள் பிடித்து உண்பதால், பயிர்ச்சேதம் தவிர்க்கப்படுகிறது.

தேனீக்கள் :

தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடி முழுகிபோய்விடும் என்று கேட்பவர்கள், அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத் தானிருக்க முடியும். மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும், பயிர்கள் விளைவதும் நடக்கின்றன. மகரந்தச் சேர்க்கையின் 'மன்மத துாதர்கள்' தேனீக்கள்தான். விவசாயத்தில் மூன்றில் ஒரு பங்கு பயிர்வகைகள் தேனீக்கள் வந்து, மகரந்தச் சேர்க்கையை செயல்படுத்துவதையே நம்பியிருக்கின்றன.தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று மேலை நாடுகளில் மட்டுமல்ல. விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான். இவற்றின் எண்ணிக்கை குறைந்து போனால், அயல் மகரந்த சேர்க்கையும் குறைந்து போகும். உணவு உற்பத்தி குறைந்து மனித இனமும் அழியத் துவங்கும். சத்தில்லாத உணவுகளால் உடல்நலம் பாதிக்கும். தொற்றுநோய்கள் மனிதர்களை எளிதாகத் தாக்கும். பிறகு மானிட குலத்தின் கதி?தேனீக்கள் மட்டும் மண்ணிலிருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்கிறார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தேனீக்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பெரு நகரங்கள், சிறு நகரங்களிலும் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இவை அழிவதற்குக் காரணம், பயிர்களைப் பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சிமருந்துகள் தான்.சிட்டுக்குருவிகள் போன்ற பறவையினங்கள் இருந்தாலே, பயிர்களை அழிக்கும் பூச்சியினங்களை உண்டு, அவற்றைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி, நம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

கொசுக்களின் எமன் :

தண்ணீர்ப் பூச்சிகள், வவ்வால், தட்டான், தலைப்பிரட்டைகளின் தலையாய பணி என்ன தெரியுமா? சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் லார்வாக்களை உணவாகக் கொள்வது தான். பூச்சிக்கொல்லிகள் நமக்கு கெடுதல் தரும் பூச்சிகளை மட்டுமல்ல... நன்மை செய்யும் பூச்சிகளையும் அழிப்பது தான், சுற்றுச்சூழலுக்கு தீங்காகிறது.தரையிலும் தண்ணீரிலும் வாழக்கூடிய இயல்பு படைத்த தவளைகள் குறைந்து போனதே, கொசுக்கள் பெருகுவதற்கு காரணம். தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் கொசுக்கள் முட்டையிட, அவற்றை தலைப்பிரட்டைகள் உணவாக்கிக் கொள்கின்றன. கொசுக்கள் பிறப்பதற்கு முன்பே அவற்றின் கருவை அழிக்கும் தவளைகள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் நிற்கின்றன.

வவ்வால்கள் :

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை வவ்வால்கள் உணவாக உட்கொள்கின்றன. சிறிய பழுப்பு நிற வவ்வால்கள், ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணும். வாழை, மாம்பழம், கொய்யா, பேரீச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதன் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகிறது. இவற்றின் கழிவுகளில் மிக அதிக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால், சிறந்த உரமாகிறது. பல நாடுகளில் வவ்வால் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகின்றது.வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போதுள்ள பருவநிலைக் கோளாறுகளினால் கோடிக்கணக்கான எக்டேர்களில் ஏற்படும் காட்டுத்தீயாலும், வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.''இந்த உலகம் மனிதனுடையது மட்டும் அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும்''. இந்த மகத்தான வாழ்வியல், வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நுாலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக, ஒருநாள் பூமியை மாற்றிவிடும்.

-எம்.ராஜேஷ் @ தினமலர்



இனி பாலைவனமாகும் பூமி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 20, 2014 5:04 pm

நல்ல தகவல்கள்..இயற்கையை நேசிப்பவர்கள் கூட அறிந்தும் அறியாமலும் இயற்கையை கெடுக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள்..தவறு என்று தெரிந்தே செய்யப்படும் தவறு செய்பவர்களை என்ன செய்வது...வெளியூர்களுக்கு சென்றால் ஆகா..அருமை..என்று பசுமையை ரசிப்பவர்கள் பலர்..தங்கள் வாழ்நாளில் ஒரு செடிக்குகூட நீர் ஊற்றி இருக்கமாட்டார்கள்..

விழிப்புணர்வு தரும் பதிவுக்கு நன்றிகள் அண்ணா.. நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 20, 2014 6:20 pm

படிக்கும் போதே பகீரென்று இருக்கிறது , தன்னுடைய பேராசையாலும் அலட்சியத்தாலும் நம் மண்ணின் வளத்தையும் சுற்றுபுறசூழலையும்அழித்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில்.


நான் சிறுவயதில் பார்த்த மைனா , சிட்டுக்குருவிகள் ஆகியவை இங்கு கத்தாரில் கண்டு வியந்திருக்கிறேன் , வருடம் இருமுறை எங்கள் வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்தில் தேனீக்கள் கூடுகட்டும் அவற்றை ஒய்வு நேரத்தில் பார்த்துகொண்டிருப்பேன்.

.''இந்த உலகம் மனிதனுடையது மட்டும் அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும்''. இந்த மகத்தான வாழ்வியல், வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நுாலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக, ஒருநாள் பூமியை மாற்றிவிடும்.
உண்மை சோகம்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 20, 2014 6:54 pm

//பூச்சிக்கொல்லிகள் நமக்கு கெடுதல் தரும் பூச்சிகளை மட்டுமல்ல... நன்மை செய்யும் பூச்சிகளையும் அழிப்பது தான், சுற்றுச்சூழலுக்கு தீங்காகிறது.//

இது ரொம்ப சரி சிவா.....மறுபடி நாம் 'இயற்கை உரம் ' போட ஆரம்பிக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக