புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_m10சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை மாவட்டச் செய்திகள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 18, 2014 12:52 am

First topic message reminder :

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 -2-26-10

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!

(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 6:26 pm

அடகு கடைக்காரர் கொலை; தனிப்படை விசாரணை

காளையார்கோவில் : கொல்லங்குடியில் நகை அடகு கடை உரிமையாளர் கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை அருகே கொல்லங்குடியை சேர்ந்தவர் கதிரேசன்,88. நகை அடகு கடை வைத்திருந்தார். அக்.,31 அன்று இரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இவரை கொலை செய்து கயிறால் கை, கால்களை கட்டிப்போட்டு, நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தனிப்படை: காளையார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை எஸ்.பி., அஸ்வின்கோட்னீஸ் பார்வையிட்டார். மேலும், கொலை செய்தவர்களை பிடிக்க, டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில் தனிப்படை அமைத்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 6:27 pm

அரசு ஊழியர்கள் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லை: பன்றிகள் நடமாட்டம் ; புலம்பும் வார்டு மக்கள்

சிவகங்கை நகராட்சி 2வது வார்டில் அரசு ஊழியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். மருதுபாண்டியர் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஏ முதல் சி பிளாக் வரை அலுவலர்கள் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம், துப்புரவு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டு 3 கி.மீ., சுற்றளவில் 600 பேர்கள் வரை வசிக்கின்றனர். இங்கு முக்கிய பிரச்னையாக பன்றி தொல்லைகள் உள்ளன.

சிறிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கினாலும் பன்றிகள் பதம் பார்த்து விடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது. வீட்டு வசதி வாரியத்தின் போதிய பராமரிப்பு இன்றி குடியிருப்புகளை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். இரவில் பாம்புகள் படையெடுப்பும் நடக்கிறது.கலெக்டர் உட்பட முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் இருந்தும் வார்டுக்கான சில பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.

மக்கள் கருத்து

மாரிமுத்து கூறும்போது: வார்டில் மின்மோட்டர், மீட்டர் பெட்டிகள் அடிக்கடி பழுதாகிறது. அரசு குடியிருப்பு வீடுகளின் பால்கனி சேதமடைந்துள்ளது. சாக்கடை கால்வாய்களின்றி கழிவு நீர் தேங்கியுள்ளது. குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டுள்ளன. வீட்டை சுற்றியுள்ள புதர் செடிகளை அகற்றவேண்டும். இரவு குழந்தைகள் வெளியில் விளையாட அஞ்சுகின்றனர். கவுன்சிலரிடம் புகார் அளித்துள்ளோம், என்றார்.

வேலாயுதம் கூறும்போது: போதிய சாக்கடை கால்வாய்கள் இன்றி, கழிவு நீர் தேங்கி கொசுக்கள் மூலம் நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. குடியிருப்பை சுற்றிலும் புதர் செடிகள் மண்டிக்கிடக்கிறது. மழை நேரங்களில் பாம்புகள் அச்சம் நிலவுகிறது. அரசு குடியிருப்பு வீடுகள் உரிய பராமரிப்பின்றி, வெளியில் வாடகை வீடுகளில் குடியேறுகின்றனர், என்றார்.

கவுன்சிலர் லலிதாபாபு (அ.தி.மு.க.,) கூறுகையில், ""வார்டு பகுதியை ஆய்வு செய்து மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் வந்துள்ளது. இவற்றை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். மழைநீர் வடிகால் வசதி குறைவாக உள்ளது.

வாரியத்திற்கு சொந்தமான சில வீடுகள் பழுதடைந்துள்ளது. மின்வினியோக பாதிப்பும் உள்ளன. இவை சரி செய்யப்படும். ரோடு உட்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,''என்றார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 6:30 pm

கண்டதேவி கோயில் பிரச்சனை: ஒருவருக்கு கத்தி குத்து

தேவகோட்டை : தேவகோட்டை அருகே கண்டதேவி மாரியம்மன் கோயிலில் மரியாதை பெறுவது தொடர்பாக பிரச்சனை இருந்தது. ஆர்.டி.ஓ., சிதம்பரம் முன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் சில தினங்களுக்கு முன் கோயில்விழா நடந்தது.

இங்கு கருப்பையா சாமியாடுவதும், அவரது மகன் மாரியப்பன் கரகம் எடுப்பதும் வழக்கம். இவர்கள் திருவிழாவில் கலந்து கொள்ளாததால், அதே ஊரேச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் கரகம் எடுத்தார். இந்நிலையில்,நேற்று கண்டதேவியில் நடந்த திருமணத்திற்காக மாரியப்பன் தரப்பினரும், மகாலிங்கம் தரப்பினரும் சென்றிருந்தனர். இதில் கரகம் எடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை ஏற்பட்டது. மண்டபம் வெளியே நின்ற மகாலிங்கத்தை, முருகப்பன் என்பவர் பிடித்துக் கொள்ள மாரியப்பன் கத்தியால் குத்தினார். அவருக்கு ஆதரவாக சசிக்குமாரும் தாக்கியுள்ளார். காயமுற்ற மகாலிங்கம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆறாவயல் சிறப்பு எஸ்.ஐ., அல்போன்ஸ் விசாரிக்கிறார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2014 6:39 pm

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி: தே.மு.தி.க. கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை அருகே உள்ள பொன்கூண்டுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). நாமனூர் யூனியன் தே.மு.தி.க. கவுன்சிலராக உள்ளார். இவர் மேலூர் தாலுகா புலிப்பட்டியை சேர்ந்த போஸ் (வயது46) என்பவரிடம், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் வாங்கினார்.

பல நாட்கள் கழித்து சங்கரிடம் பணத்தை திருப்பித் தருமாறு போஸ் கேட்டார். பணத்தை தர மறுத்ததுடன் சங்கர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து போஸ், மதகுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 4:54 pm

தேவகோட்டை எம்.எம்.நகர் வீதியில் பெண்ணிடம் செயின் பறிப்பு

தேவகோட்டை எம்.எம்.நகர் வீதியில் வசிப்பவர் சந்திரன். முன்னாள் ராணுவ வீரர்.இவரது மனைவி தேன்மொழி. 40. நேற்று முன்தினம் இரவு 7மணிக்கு தேன்மொழி தனது சகோதரியை பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்பினார்.

ஸ்டேட் பாங்க் காலனி அருகே வந்த போது, அங்கு நின்ற வாலிபர், தேன்மொழி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்தார். தேன்மொழி சப்தம் போடவே, அப்பகுதியில் இருந்தவர்கள் வாலிபரை பிடித்துபோலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தியதில் பிடிப்பட்ட வாலிபர் வேப்பங்குளத்தைச் சேர்ந்த வீரமுத்து மகன் ஆனந்தன் என தெரியவந்தது.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 04, 2014 5:51 pm

சிவா அவர்களுக்கு நன்றி ! சிவகங்கை எங்கள் மாவட்டம் ! காரைக்குடி மாவட்டமாக அது வரவேண்டியது; உடையப்பா சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் முந்திக்கொண்டார் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 103459460 சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 04, 2014 6:10 pm

Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களுக்கு நன்றி ! சிவகங்கை எங்கள் மாவட்டம் ! காரைக்குடி மாவட்டமாக அது வரவேண்டியது; உடையப்பா சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் முந்திக்கொண்டார் !
எப்படியிருந்தாலும் எங்கள் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் !

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 103459460 சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு

சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 1571444738 சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 1571444738 சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 1571444738



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 06, 2015 9:51 pm

தேவகோட்டை அருகே கோட்டூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ரேவதி. இருவரும் தேவகோட்டை க.க.மு. தெருவில் பைனான்ஸ் நிறுவனம் நடத்துகின்றனர்.

இவர்களிடம் கோட்டூரை சேர்ந்த சிவகுருநாதன்,45, ஏலச்சீட்டு சேர்ந்தார். கடந்த 2013ல் ரூ.1லட்சம், ரூ.50 ஆயிரம் சீட்டுக்களில் சேர்ந்து பணம் கட்டினார்.

ஏலச்சீட்டு தவணை காலமும் முடிந்தது. இதையடுத்து, சீட்டு பணத்தை தருமாறு செல்வத்திடம் அடிக்கடி சிவகுருநாதன் கேட்டார். இது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் கோட்டூர் முனை ஆர்ச் அருகே சிவகுருநாதன் அவரது நண்பர்களுடன் நின்றிருந்தார். அங்கு வந்த செல்வம், அவர் மனைவி ரேவதி வருவதை பார்த்து சீட்டு பணத்தை தருமாறு கேட்டார். இதில் ஆத்திரமுற்ற செல்வம், சிவகுருநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

வேலாயுதபட்டிணம் போலீசில் சிவகுருநாதன் அளித்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் அண்ணாத் துரை விசாரிக்கிறார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 1:29 am

காரைக்குடியில் மனைவி தாக்கியதில் கணவன் படுகாயம்

காரைக்குடி, : காரைக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக மத்துகட்டையால் மனைவி தாக்கியதில் கணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரைக்குடி ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி யமுனா (23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண்குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த யமுனா வீட்டில் இருந்த பருப்பு கடையும் மத்துகட்டையால் பாலகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீஸ் எஸ்ஐ ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 4:27 am


சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 15 ஆயிரத்து 983 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பிளஸ்-2 தேர்வுகள்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் நேற்று முதல் தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 15 ஆயிரத்து 983 மாணவ-மாணவிகள் இந்த பிளஸ்-2 தேர்வினை எழுதுகின்றனர்.

சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 311 மாணவர்களும், 4 ஆயிரத்து 174 மாணவிகளும் சேர்த்து 7 ஆயிரத்து 485 பேரும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 800 மாணவர்களும், 4 ஆயிரத்து 698 மாணவிகளும் சேர்த்து 8 ஆயிரத்து 498 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 28 தேர்வு மையமும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் முனுசாமி சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று தேர்வுகள் நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 111 மாணவர்களும், 8 ஆயிரத்து 872 சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 983 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி விருதுநகர், சிவகங்கை ஆகிய 2 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஒரு பறக்கும் படையும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் ஒரு பறக்கும் படையும், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் 3 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் 54 மையங்களிலும் தலா ஒரு நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது போல சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை புனிதஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, என்.எஸ்.எம்.வி.பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி, தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற தேர்வுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




சிவகங்கை மாவட்டச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக