புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_m10கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 8:18 pm

கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா!
பெங்களூரு டிராவல்ஸ்


ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து கிளம்பப் போகிறார் என்றாலே தலைமைச் செயலகம் பரபரப்புச் செயலகம் ஆகிவிடும். அவ்வளவு எளிதில் யாரும் உள்ளே போக முடியாது. அமைச்சர்கள் பவ்யமாக அவர்களது அறைகளில் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருப்பார்கள். ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருக்கிறார் என்றால் எம்.எல்.ஏ-க்களும், அதிகாரிகளும் வரும் தடமும் தெரியாது, போகும் இடமும் தெரியாது. அந்த அளவுக்குக் கட்டுப்பாடான 'கோட்டை’யாக இருந்தது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. அவர் முதல்வர் பதவியிலும் இல்லை.



இப்போது தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது?

'ஓ.பன்னீர்செல்வம் என்னும் நான்...’ என்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டவர், சில அறிக்கைகள்... சில ஆலோசனைகள் என்று மட்டுமே நாட்களை நகர்த்தி வருகிறார். அமைச்சர்கள் யாரும் முதல்வரை கண்டுகொள்வதே இல்லை. நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியலிங்கம் ஆகிய மூன்று அமைச்சர்கள் மட்டும் எப்போதும் முதல்வரோடு வருகிறார்கள், போகிறார்கள். மற்ற அமைச்சர்களில் சிலர் அவரவர் சொந்த ஊர்களில் உண்ணாவிரதம், போராட்டம் என்று கோதாவில் இறங்கிவிட்டனர். இன்னும் சிலரோ, பெங்களூரில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ரூம்போட்டு பரப்பன அக்ரஹாராவில் தினமும் அட்டண்டென்ஸ் போட்டுத் திரும்புகிறார்கள். பதவியேற்பு விழாவில் கண்ணீர்விட்டு அழுது புரண்ட அமைச்சர்கள் சிலர், பெங்களூரில் அந்தச் சோகத்தைத் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுற்றி வருகிறார்கள். 'க்ளைமேட் ரொம்ப நல்லா இருக்கு. இங்கேயே இருந்திடலாம்போல!’ என்றும் சிலர் பேசிக்கொண்டார்களாம்.

பதவியேற்ற பிறகு அதிகம் கோட்டை பக்கம் வராமல் இருந்த முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட பிறகு தினமும் வர ஆரம்பித்துள்ளார். சரியாக 10 மணிக்கு அவருடைய சீட்டில் இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது ஒதுக்கப்பட்ட அறையில்தான் இன்னும் இருக்கிறார். 'நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்’ என்ற போர்டுதான் அவரது அறை முகப்பில் தொங்குகிறது. அவரது பங்களாவிலும் 'முதலமைச்சர்’ என்ற பெயர் பலகை இல்லை. முதல்வர் அறையில் இருந்த ஜெயலலிதாவின் பெயர் பலகை பலத்த யோசனைக்குப் பிறகு அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வேறு பெயர் பலகை எதுவும் இல்லை. பன்னீர்செல்வம் முதல்வரான பிறகு முதல்வர் அறைக்குள் நுழையவே இல்லை. அதேபோல முதல்வர் கார் நிறுத்தும் இடத்திலும் பன்னீரின் கார் நிறுத்தப்படுவதில்லை. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அவரது கார் நிற்கிறது.

முதல்வரோடு எப்போதும் உடனிருக்கும் அந்த மூன்று அமைச்சர்களும், அதே நேரத்துக்கு வந்து விடுகின்றனர். முதல்வர் அறைக்குச் சென்று அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டுத்தான், தங்களுடைய அறைக்கு வருகிறார்கள். முதல்வர் காலையில் வந்ததும், எல்லா செய்தித்தாள்களையும் படிப்பதை முதல் வேலையாக வைத்திருக்கிறார். தினமும் 11 மணிக்கு டீ போகிறது. 'டீ யாருப்பா போட்டது. ரொம்பா நல்லா இருக்கே...’ என்று விசாரித்திருக்கிறார் டீக்கடைக்கார முதல்வர். முதல்வர் அறையில் உள்ள டி.வி-யில் ஜெயா டி.வி மட்டுமே ஒளிபரப்பாகிறது. சபரிமலைக்கு மாலை போட்டவரைப்போல ஜெயலலிதா ஜெயிலுக்குப்போன நாளில் இருந்து முதல்வர் பன்னீர்செல்வம் ஷேவ் பண்ணவே இல்லை. 'அம்மா போயஸ் தோட்டம் வந்த பிறகுதான் தாடியை எடுப்பேன். அவங்க உள்ளே இருக்கும்போது நான் எப்படி இருந்தால் என்ன?’ என்று கவலையோடு சொல்லி வருகிறாராம். வழக்கமாக ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில், பெசன்ட்நகர் விநாயகர் கோயிலுக்குச் செல்வது பன்னீரின் வழக்கம். தற்போது அங்கேயும் செல்வதில்லை. முதல்வரைச் சந்திக்க, தொழிலதிபர்கள் பலரும் கோட்டைக்குப் படையெடுத்து வருகிறார்கள். 'எனக்கு இப்போ யாரையும் பார்க்க விருப்பம் இல்லை. தயவு செஞ்சு அவங்களை அனுப்பிடுங்க...’ என்று சொல்லிவிட... வந்தவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் சாக்குபோக்கு சொல்லி திருப்பி அனுப்புகிறார்கள்.
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! P15
அமைச்சர்களைப் பொறுத்தவரை காலை டீ சாப்பிடும் வரை மட்டுமே அவர்களுடைய அறையில் இருக்கிறார்கள். அதன்பிறகு தங்கள் அமைச்சர் நண்பர்கள் அறைகளுக்குக் கிளம்பிவிடுகிறார்கள். மதியம் வரை அவர்களுக்குள் ஆலோசனை(?) நடத்திவிட்டு தங்கள் அறைக்குத் திரும்புகிறார்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஆய்வுப் பணிகள், அரசு விழாக்கள் இல்லாத நாட்களில் அமைச்சர்கள் 11 மணி அளவில் கோட்டைக்கு வருவார்கள். அவர்களிடம் துறை சார்ந்த விஷயங்கள் குறித்து பேச அதிகாரிகள் வருவார்கள். டிரான்ஸ்ஃபர், பரிந்துரைக் கடிதங்கள் வாங்க ஒவ்வொரு அமைச்சர்களின் அறைகளுக்கு முன்பும் கட்சியினர் கூட்டம் அலைமோதும். இதெல்லாம் கடந்த 27-ம் தேதிக்கு முன்பு. இப்போது தொண்டர்கள் சிபாரிசு விஷயங்களுக்காகக்கூட அமைச்சர்களைப் பார்க்க வருவதில்லை. அமைச்சரும், அவருடைய உதவியாளரும் மட்டுமே அறையில் இருக்கிறார்கள்.

இதற்குள் வீட்டில் இருந்து மதிய சாப்பாடு வருகிறது. மதிய சாப்பாட்டை அங்கேயே முடித்துவிட்டு, ரிமோட்டை எடுத்து சேனல் மாற்ற ஆரம்பிக்கிறார்கள். 'நம்ம ஊருல என்ன செஞ்சுட்டு இருக்கீங்க. போராட்டம் எல்லாம் சரியா போகுதுல்ல...’ - சொந்த ஊருக்கு போன் போட்டு விசாரிக்கவும் தவறுவது இல்லை. இதெல்லாம் முடிந்ததும் அமைச்சர்கள் பலரும் 3 மணிக்கு பங்களாவுக்குத் திரும்பி விடுகிறார்கள். ஆனால், முதல்வர் அவரது அறையிலேயே இருக்கிறார். 'பத்திரிகைக்காரங்க யாராவது வெளியில இருக்காங்களான்னு பாருங்க...’ என்று தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகே அறையை விட்டு வெளியே வருகிறார் முதல்வர்.
கோட்டை காலி... அமைச்சர்களின் மெகா ஜகா! P14
தனது செயலாளர்களை மட்டும் தினமும் சந்திக்கிறார் முதல்வர். துறை சார்ந்த அதிகாரிகளையும் பார்க்கிறார். ஆனால், வாழ்த்து சொல்லவோ, பொக்கே கொடுக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. மின்வாரிய அதிகாரிகள் முதல்வரைச் சந்தித்தபோது, 'அம்மா இங்கே இருந்தபோது எப்படி மின் தடையில்லாமல் வழங்கப்பட்டதோ அதேபோல இனியும் இருக்க வேண்டும். அம்மா எல்லா விஷயங்களையும் அங்கே இருந்து கவனிச்சுட்டுதான் இருக்காங்க. இது தீபாவளி சமயம் என்பதால் எந்தக் குறையும் இல்லாம பார்த்துக் கொள்ளுங்கள். இது சம்பந்தமாக எந்தப் பிரச்னை இருந்தாலும் உடனுக்குடன் எனக்குத் தெரியப்படுத்துங்க...’ என்று சொல்லி அனுப்பினாராம் முதல்வர்.

''அரசு சம்பந்தமான செய்திகளில் என்னோட போட்டோ வர வேண்டிய அவசியம் இல்லை. என்ன தகவலோ அது மட்டும் பொதுமக்களுக்குப் போய் சேர்ந்தால் போதும். வார்த்தைக்கு வார்த்தை முதல்வர் என்று போடுவதைத் தவிருங்கள்!’ என்று அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறார் முதல்வர். 'சார் முதல்வரோட அதிகாரப்பூர்வ படத்தை வெளியிட வேண்டும்!’ என்று அதிகாரிகள் கேட்க, 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார் முதல்வர்.

சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்காக அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பால்குடம் எடுக்கலாம், யாகமும் நடத்தலாம். ஆனால், அதே மாவட்டச் செயலாளர்கள் தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதாவைப் பற்றி மட்டுமே சிந்திப்பது, செயல்படுவது எந்தவிதத்திலும் நாட்டு மக்களுக்கு நன்மை தராது!

- எஸ்.முத்துகிருஷ்ணன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 8:21 pm

//பதவியேற்ற பிறகு அதிகம் கோட்டை பக்கம் வராமல் இருந்த முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட பிறகு தினமும் வர ஆரம்பித்துள்ளார். சரியாக 10 மணிக்கு அவருடைய சீட்டில் இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது ஒதுக்கப்பட்ட அறையில்தான் இன்னும் இருக்கிறார். 'நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்’ என்ற போர்டுதான் அவரது அறை முகப்பில் தொங்குகிறது. அவரது பங்களாவிலும் 'முதலமைச்சர்’ என்ற பெயர் பலகை இல்லை. முதல்வர் அறையில் இருந்த ஜெயலலிதாவின் பெயர் பலகை பலத்த யோசனைக்குப் பிறகு அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வேறு பெயர் பலகை எதுவும் இல்லை. பன்னீர்செல்வம் முதல்வரான பிறகு முதல்வர் அறைக்குள் நுழையவே இல்லை. அதேபோல முதல்வர் கார் நிறுத்தும் இடத்திலும் பன்னீரின் கார் நிறுத்தப்படுவதில்லை. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அவரது கார் நிற்கிறது.//

இதெல்லாம் தப்பு இல்லையோ??????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 8:35 pm

முதல்வர் நாற்காலி, முதல்வர் பெயர்ப்பலகை, முதல்வர் கார்நிறுத்துமிடம், இதை புறக்கணிப்பதால் மக்களுக்கு நட்டம் ஒன்றுமில்லை. முதல்வருக்கான பணிகளை செய்யாமல் நான் அமைச்சர் பணிகளை மட்டும்தான் பார்ப்பேன் என்று பம்மாமல் இருந்தால் சரி புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 8:39 pm

பம்மல் ஒ பன்னீர்செல்வம்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக