புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு:
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதில் அன்னை தெரசாவுக்கு பின்னர் அமைதி விருதை இந்தியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் நோபல் பரிசு பெறும் 8வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அன்னை தெரசாவுக்குப்பின், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம் தேதி பிறந்தார். 1990ல் "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க உதவியுள்ளார்.
இவர் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள் பிரச்னைகள் பற்றி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கை தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, எழுத்தறிவின்மை, மக்கள் தொகை பெருக்கம் போன்ற சமூக பிரச்னைக்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். யுனஸ்கோ அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார். இதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்து வருகிறார். தற்போது இவர் டில்லியில் வசித்து வருகிறார்.
விருதுகள்:
இவரது பணிகளை பாராட்டி ஏற்கனவே பல்வேறு நாடுகள் இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. இதில் ராபர்ட் எப்.கென்னடி மனித உரிமைகள் விருது (அமெரிக்கா) , அச்செனர் சர்வதேச அமைதி விருது (ஜெர்மனி), அல்போன்சா காமின் சர்வதேச விருது (ஸ்பெயின்), இத்தாலியன் செனட் விருது ஆகியவை குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு பெற்றது குறித்து கைலாஷ் வித்யார்த்தி கூறுகையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளின் உரிமைக்காக போராடி வருபவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருது, இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். நாடு முழுவதும உள்ள குழந்தைகளுக்கு இந்தவிருதை சமர்ப்பிக்கின்றேன். சிறுவர்களின் நலனுக்கான எனது போராட்டம் தொடரும். தற்போது விருது பெற்றுள்ள மலாலாவுடன் இணைந்து போராட நான் தயாராக இருக்கிறேன் இவ்வாறு கைலாஷ் தெரிவித்தார்.
இதே போல், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி வருபவர் மலாலா (17). பெண் கல்விக்காக போராடியதால், தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் மலாலா. நோபல் பரிசு பெறும் மிகவும் குறைந்த வயது பெண் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதிக்கான நோபல் பரிசு வரும் டிசம்பர் 10ம் தேதி, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வழங்கப்படுகிறது.
தலிபான்களை எதிர்த்து போராடிய மலாலா : மலாலா யூசப்சாய் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள அங்கோராவில் 1997, ஜூலை 12ல் பிறந்தார். இவரது தந்தை ஜியாவுதின் யுசப்சாய், தாயார் தூர்பெகாய் யுசப்சாய். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலிபான்கள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து மலாலா பள்ளி சென்று வந்தார். பெண்களின் உரிமைகள் மற்றும் கல்விக்காக சிறுவயதிலேயே போராட துவங்கினார். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்ந்து இணையதளத்தில் கருத்துகள் வெளியிட்டு வந்தார். இதனால் 2012, அக்.9ல் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளானார். தலையில் குண்டடி பட்ட மலாலாவுக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் வசித்து வருகிறார்.
தலிபான் தாக்குதலுக்கு பின் இவரது போராட்டம் தீவிரமானது. இதனால் உலகின் பார்வை இவர் மீது திரும்பியது. உலக அரங்கில் பல்வேறு நாடுகள் இவருக்கு அமைதிப்பரிசை வழங்கியுள்ளன. கடந்த ஆண்டு பிறந்த நாளின் போது ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். அப்போது உலகில் உள்ள அனைத்து குழந்தைளும் கல்வி கற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இத்தினத்தை ஐ.நா., மலாலா தினமாக அறிவித்தது. பாகிஸ்தானின் தேசிய அமைதி விருது, வீரதீர விருது, சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து பெறுகிறார். இதன்மூலம் குறைந்த வயதில் (17) நோபல் பரிசு வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-- தினமலர்
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
எத்தனை அடி, எத்தனை போராட்டம்.. கைலாஷ் சத்யார்த்தியின் போராட்ட வாழ்க்கை!
பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பின் தலைவரும், நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளவருமான கைலாஷ் சத்யார்த்தி, 2004ம் ஆண்டு உ.பி மாநிலத்தில் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகி உயிர் பிழைத்தவர் ஆவார். ரோமன் சர்க்கஸ் என்ற சர்க்கஸ் கம்பெனியிலிருந்து குழந்தைத் தொழிலாளர்களை மீ்ட்க அவர் முயன்றபோது சர்க்கஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த குண்டர்கள் அவரை சரமாரியாகத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர். துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டினர். ஆனாலும் உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்களிடம் நிராயுதபாணியாக மோதினார் சத்யார்த்தி. 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.
தங்களது பிள்ளைகளை சர்க்கஸ் நிறுவனத்தார் குழந்தைத் தொழிலாளர்களாக வைத்திருப்பதாக 11 பேரின் பெற்றோர் சத்யார்த்தியிடம் குமுறினர். இதையடுத்து தனது இயக்கத்தாருடன் சேர்ந்து களத்தில் குதித்தார் சத்யார்த்தி.
கலெக்டருடன் ரெய்டு :
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இதுகுறித்து அவர் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சர்க்கஸில் ரெய்டு நடத்த உத்தரவிடப்பட்டது. கலெக்டரும் கூடவே வந்தார். கலெக்டர், சத்யார்த்தி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெற்றோர்கள் என சகலரும் சர்க்கஸ் நிறுவனத்திற்கு படையெடுத்தனர்.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய மேலாளர் :
ஆனால் சர்க்கஸ் கம்பெனிக்காரர்கள் குண்டர்களாக மாறினர். சர்க்கஸ் நிறுவன மேலாளர் சத்யார்த்தியை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். மற்றவர்கள், அனைவரையும் தாக்கத் தொடங்கினர். சத்யார்த்தியையும் தாக்கினர். இதில் அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் அசரவில்லை.
கால், தலையில் படுகாயம்:
தலையிலும், காலிலும் சத்யார்த்திக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரது குழுவில் இடம் பெற்றிருந்த அவரது மகன் உள்பட பலரும் காயமடைந்தனர்.
கேரளாவிலும் துணிகர மீட்பு
இதேபோல அதற்கு முன்பு ஏப்ரல் மாதத்தில் கேரளாவின் பிரபலமான தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கம்பெனியில் பத்து வருடத்திற்கும் மேலாக கொத்தடிமைகள் போல வேலை வாங்கப்பட்ட பல சிறார்களையும் சத்யார்த்தி மீட்டிருந்தார்.
-- ஒன் இந்தியா
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இன்னும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது வேதனை- கைலாஷ்
சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துப் பார்த்து மனம் வெதும்பிப் போய்த்தான் பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பை ஆரம்பித்து குழந்தைத் தொழிலாளர்களைக் காக்கும் சேவையை தொடங்கினேன் என்று கூறியுள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி.
அவருக்கும் 2012ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமியான மலாலா யூசபஸாய்க்கும் நோபல் அமைதிப் பரிசு இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடியவர் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.
30 வருடங்களுக்கு முன்பு எலக்ட்ரிகல் என்ஜீனியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் சத்யார்த்தி. ஆனால் குழந்தைத் தொழிலாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பைத் தொடங்கினார். தனது என்ஜீனியர் வேலையை விட்டு விட்டார்.
இன்று இந்தியாவின் முன்னணி குழந்தைத் தொழிலாளர் மீட்பு இயக்கமாக பச்பன் பச்சாவ் அந்தோலன் உருவெடுத்துள்ளது. இதற்காக சத்யார்த்தி செய்த தியாகங்கள் மிகப் பெரியது. 2011ம் ஆண்டு அவர் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து சில துளிகள் இங்கே.
பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பைத் தொடங்க என்ன காரணம்...
சிறு வயதிலேயே எனக்கு குழந்தைத் தொழிலாளர்களின் நிலை குறித்த கவலை பெரிதாக இருந்தது. அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதைப் பார்த்து வேதனைப்பட்டுள்ளேன். ஆனால் இதில் நாம் மட்டும் கவலைப்பட்டு ஆகாது, ஒரு இயக்கமாக இதற்காகப் போராட வேண்டும் என்று நான் பின்னர் உணர்ந்தேன்.
மக்களை இணைத்து போராட...
இதற்கான இயக்கத்தை உருவாக்கி அதில் மக்களையும் இணைத்து நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படி உருவானதுதான் பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பு.
சமூகப் பிரச்சினைகளின் கலவை...
குழந்தைத் தொழிலாளர்கள் என்பது சாதாரண பிரச்சினை அல்ல, பொருளாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல, சட்டப் பிரச்சினையும் அல்ல. அது பல்வேறு விதமான சமூகப் பிரச்சினைகளின் கலவையாகும்.
முக்கிய லட்சியம்...
சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான விஷயமாகும். இதை முற்றாக அழிப்பதே எனது இயக்கத்தின் முக்கிய லட்சியம்.
மிகத்தீவிரமான பிரச்சினை...
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை மிகத்தீவிரமாக உள்ளது. இதுவேகமாகப் பரவியும் வருகிறது. மாநிலங்களுக்கு இடையே குழந்தைகளை வேலைசெய்வதற்காக கடத்துவது அதிகரித்தபடி உள்ளது. இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மிக மிக குறைவாக உள்ளன.
அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்...
பீகாரிலிருந்து டெல்லிக்கு குழந்தைகளை கடத்துகிறார்கள். மும்பைக்குக் கொண்டு செல்கிறார்கள். கொல்கத்தா கொண்டு செல்கிறார்கள். இது அதிகரித்தவண்ணம் உள்ளது.
கொத்தடிமைகளாகின்றனர்...
இப்படி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழந்தைகளை கடத்துகிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களில் 20 சதவீதம் பேர் அதாவது 10 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர் என்பது அதிர்ச்சியான விஷயம்.
கொத்தடிமை பெற்றோரின் குழந்தைகள்...
பெரும்பாலான குழந்தைகள் கொத்தடிமைப் பெற்றோர்களுக்குப் பிறக்கின்றன. பிறந்ததுமே அதுவும் கொத்தடிமை முறைக்குள் வந்து விடுகிறது. இது மிகக் கொடுமையானது.
முக்கிய நகரங்களில்...
குழந்தைகள் கடத்தல் அதிகம் நடப்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களில்தான். இதேபோல பிற பெருநகரங்களிலும் உள்ளன.
விபச்சாரம், வீட்டு வேலைகள்...
பல பெண் குழந்தைகளைக் கடத்தி விபச்சாரத்திலும் ஈடுபடுத்துகிறார்கள். வீட்டு வேலைகளுக்கு பெருமளவில் குழந்தைகளை கடத்துகிறார்கள்,.
மும்பை செல்லும் குழந்தைகள்...
பீகாரில் இப்படி கடத்தப்படும் குழந்தைகள் அதிகம் உள்ளன. ஜார்க்கண்டிலும் அதே நிலைமைதான். சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கத்திலும் இதே நிலைதான். ராஜஸ்தானிலிருந்து கடத்தப்படும் குழந்தைகள் அகமதாபாத், மும்பைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
சோகமான விஷயம்...
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இதுபோன்ற குற்றங்களை, சமூக அவலத்தை தடுக்க முடியாமல் இருப்பது மிகவும் சோகமான விஷயமாகும் என்றுகூறியுள்ளார் சத்யார்த்தி.
-- ஒன் இந்தியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் இருவருக்கும்
(வீட்ல அமைதியா இருக்கறதுக்கு எல்லாம் பரிசே தர மாட்டேங்குறாங்க)
(வீட்ல அமைதியா இருக்கறதுக்கு எல்லாம் பரிசே தர மாட்டேங்குறாங்க)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மிகவும் தகுதி ஆனவர்கள் .
வாழ்த்துகள் பல பல
ரமணியன்
வாழ்த்துகள் பல பல
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|