புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Oct 07, 2014 9:50 am

"ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்; பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்" என்பது நம் நாட்டில் மக்கள் பேசும் பேச்சாக இருக்கிறது.

இதை உறுதி செய்யும் விதமாக, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஏழை, பணக்காரன் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாகவும், ஏழைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சமூக, பொருளாதார ஆணையம் (யுஎன்-இஎஸ்சிஏபி - United Nations - Economic and Social Commission for Asia and Pacific) தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளின் மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் ஏழைகளாக உள்ளனர். இவர்களில் 10 சதவிகிதம் பேர் தேசிய சராசரி வருமான அளவில் 10 சதவிகிதத்தையே ஊதியமாக பெறுகின்றனர் என இந்த ஆய்வறிக்கை சொல்லியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 40 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்றத்தாழ்வு விகிதம்

இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வருமானத்தில் அதிக அளவு ஏற்றத்தாழ்வு நிலவுவதாக இந்த ஆய்வறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. வருமானத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கிடுவதற்கு 1990-2000 ஆண்டு வரையிலான காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தப் பத்து ஆண்டுகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு விகிதம் இந்தியாவில் 30.8 புள்ளியிலிருந்து 33.9 புள்ளியாக உயர்ந்துள்ளது. சீனாவில் இது 32.4லிருந்து 42.1 புள்ளியாக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் இது 29.2 புள்ளியிலிருந்து 38.1 புள்ளியாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கம்போடியா, கிர்கிஸ்தான், மலேசியா, நேபால், பிலிபைன்ஸ், தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைப்பது, போதிய அளவில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காதது. கல்வித் தரம் குறைவாக இருப்பது, கடன் கிடைப்பதில் சிரமம், ஒரு சாரார் அதிக அளவில் அசையா சொத்துகளில் முதலீடு செய்து வைத்திருப்பது உள்ளிட்ட விஷயங்கள்தான் ஏற்றத்தாழ்வுக்குக் காரணங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் அதிக சொத்து (184.83 கோடி ரூபாய்க்கு மேல்) உள்ள தனி நபர் எண்ணிக்கை அளவு 30 சதவிகிதமாக உள்ளது. சொத்து குவிக்கும் போக்கு அதிகரித்ததே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணமாகும்.

ஏழை, பணக்காரர்கள் சதவிகிதம்

சொத்து, வருமானம் அதிகரித்ததற்கு நாட்டின் மொத்த வருவாய் அதிகரிப்பும் முக்கியக் காரணமாகும். இதனால் பணக்காரர்கள் ஒரு சதவிகிதம் இருந்தால் ஏழைகளின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக உள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஏற்றத்தாழ்வு என்பது இங்கு நிலவும் மிக முக்கியமான சமூக, பொருளாதார பிரச்னையாகும்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தப் பிராந்தியங்களில் பெருநகரங்களில் வருமானத்தில் பெருமளவு ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும், ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது சமூகத்தில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப் பெரிய சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இந்த ஆய்வறிக்கை மூலம் எச்சரித்திருக்கிறது.

காரணம் என்ன?

அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்று சேராததால் அவர்களால் முறையாக முன்னேற முடிவதில்லை. உதாரணத்துக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை மக்களுக்கு கிடைக்கும் போது தனியார் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி செலவு செய்யும் பணத்தை சேமிப்புக்கு பயன்படுத்துவதன் மூலம் ஏழைகளும், நடுத்தர மக்களும் நிச்சயமாக பொருளாதார அடிப்படையில் அவர்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

அதே போல வெளியூர்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகளில் சரியான வசதிகள் செய்து தராததாலும் எல்லா நேரங்களிலும் சரியாக பேருந்துகள் இயக்கப்படாததாலும் மக்கள் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் நிலவி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளாலும் சாதாரண மக்களின் பொருளாதார முன்னேற்றம் தடைபடுகிறது. பணக்காரர்களாக இருப்பவர்கள் எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்கும் தன்மையுடனும், ஏழைகளால் அதை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தாத சூழ்நிலையும் உருவாகியுள்ளதால் இன்று இவ்விரு தரப்பினர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது.

திறனற்ற அரசு

சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராம சீனுவாசன், "ஏழை, பணக்காரர்கள் இடையே இடைவெளி அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் முதலாவது அரசின் திறனற்ற தன்மை. மற்றொன்று தான் வர்த்தகத்திற்கு விடும் பொருட்கள் மூலம் தயாரிப்பாளர்கள் ஏழை, எளிய மக்களை சுரண்டும் சூழல் நம் நாட்டில் இருப்பது. நமது அரசாங்கம் ஏழை மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேராத வரை இந்த ஏற்றத்தாழ்வானது குறையாது. அதேபோல நுகர்வோர்களை சுரண்டும் சூழ்நிலையானதும் மாறவேண்டும். இதற்கான நடவடிக்கையையும் நம் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

மக்கள் சொத்து

பங்குச் சந்தை நிபுணர் மற்றும் நிதி ஆலோசகர் வி.நாகப்பன், "ஏழை, பணக்காரர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்க மிக முக்கியமான காரணம் மக்களின் சொத்துக்கள் அரசாங்கத்தால் சரியாக கையாளப்படவில்லை என்பதுதான். 1993-94ல் அரசு ஆரம்பித்த திட்டமான 'முதலில் முந்துபவருக்கே முன்னுரிமை" என்பதும் இந்த சூழ்நிலை உருவானதில் பெரும்பங்கை வகிக்கிறது. ஒரு நாட்டில் ஏழைகளே இருக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அவர்களின் விகிதம் மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அதேபோல மேல்தட்டு மக்களும் ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே இருக்க வேண்டும். இவர்களுக்கு இடைப்பட்ட நடுத்தரவர்க்கத்தினரே அதிக அளவில் இருக்க வேண்டியது அவசியம். இப்படி இருக்கும்பட்சத்தில் ஏழை, பணக்காரர்களுக்கான ஏற்றத்தாழ்வு விகிதமானது குறைந்து காணப்படும்" என்றார்.

அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியாக அரசின் நடவடிக்கை அமையும் பட்சத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இந்த ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும்!

Nandri:Vikatan

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 12:37 pm


அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியாக அரசின் நடவடிக்கை அமையும் பட்சத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இந்த ஏற்றத்தாழ்வுகளை ஓரளவுக்கேனும் குறைக்க முடியும்!


இது நடக்குமா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 07, 2014 1:46 pm

நடக்க வேண்டும் அம்மா !!!

ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு குறையாவிட்டாலும் அரசு ஏழை நுகர்வோரின் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்...
அரசு மருத்துவமனை அரசு பேருந்து மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் இவற்றின் தரங்கள் உயர்த்தப்பட வேண்டும் ...
இதை அரசு செய்தாலே ஏழை மக்கள் தனியார் சார்ந்த எதையும் நாடி செல்ல மாட்டார்கள்...
அரசு கருவூலத்தை நிரப்புவதை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் இந்த மாதிரியான உருப்படியான செயல்கள் ஏதும் நடைபெறாது..

தெருவிற்கு தெரு மதுக்கடைகள் இருக்கின்றதே ஒழிய மின்விளக்குகள் கிடையாது,சாலை ஒழுங்காக இருப்பது இல்லை.

அரசுக்கு எல்லாம் தெரிந்தும் மது குடித்து மடியடா என்றுதான் இருக்கிறது...இதற்க்கு தீர்வுதான் என்ன ??? அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 2:14 pm

//தெருவிற்கு தெரு மதுக்கடைகள் இருக்கின்றதே ஒழிய மின்விளக்குகள் கிடையாது,சாலை ஒழுங்காக இருப்பது இல்லை.//

இதனால் தான் கேட்டேன் சரண்யா ...." இது நடக்குமா"? என்று? ................

ஒருத்தன் ஒரு குடிகாரனை கேட்டானாம் "எடுக்கு இப்படி குடித்து விட்டு தள்ளடுகிறாய்? " என்று

அதற்கு அவன் சொன்னானாம்........" நான் தள்ளடுவதை நிறுத்தி விட்டால்.....தமிழக அரசு தள்ளாடும்" என்றானாம்.....அவ்வளவு மது விற்கிரார்கள்.........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 07, 2014 2:50 pm

குடிகாரனுக்கு தெரியுது நம் அரசின் நிலைமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஏழை,பணக்காரர் இடைவெளி குறைய என்ன செய்ய வேண்டும்? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 07, 2014 3:06 pm

M.Saranya wrote:குடிகாரனுக்கு தெரியுது நம் அரசின் நிலைமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1093500

ம்..........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக