புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
21 Posts - 66%
heezulia
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
63 Posts - 64%
heezulia
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_m10மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 04, 2014 6:40 am

இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன. பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன. நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன.

ஸ்மார்ட் போன் ஒன்று இணைய இணைப்புடன் இருந்தால், கூகுள் மேப் மூலம், நமக்குத் தெரியாத எந்த ஊரிலும், நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். நம் தெருவின் முனையில் இருக்கும் மாரியம்மன் கோவில் குறித்துச் சொல்லி, கூகுள் மேப் வழி காட்டும்.

கைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அல்லது டேப்ளட் பி.சி.யாக இருந்தாலும், மக்களின் வாழ்வினையும், வேலையையும் முழுமையாக மாற்றிவிட்டது என டிஜிட்டல் தொழில் பிரிவில் செயல்படுவோர் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு நம் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளன.

கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சாதனங்கள், நமக்குத் தேவைப்படும் அனைத்தையும்கொண்டுள்ளன. தொலைபேசி, கேமரா, உடனடியாக செய்தி அனுப்பும் இன்ஸ்டண்ட் மெசேஜ் சிஸ்டம், மியூசிக் பாக்ஸ், திசை காட்டி, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை தரும் சிஸ்டம், தொலைக்காட்சி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் 10 கோடி பேரில், 7 கோடியே 20 லட்சம்பேர், சமுதாய வலைத்தளங்களை, தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாகவே இணைத்துக் கொள்கின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல, இணையம் பயன்படுத்தும் பல கோடி மக்களில், 89 சதவீதத்தினர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கண்டறியப் பட்டுள்ளது.
எத்தனையோ சிறு வயது மாணவ மாணவியர், தாங்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி தங்கள் கல்வி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த தகவல்களைத் தங்கள் நண்பர்களுடன் எளிதாகவும், விரைவாகவும் பகிர்ந்து கொள்வதாகப் பெருமை பட்டுக் கொள்வது இன்று சகஜமாகிவிட்டது.


இவை மட்டுமின்றி, தங்களின் வகுப்பு பாடங்கள் குறித்த பாடங்களை வகுப்புத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் பாடத்தில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து விளக்கிக் கொள்ளுதலையும் மொபைல் போன் வழியாக மேற்கொள்வதாகவும் பல சிறு வயது மாணவர்கள் கூறி உள்ளனர்.

தொழில் ரீதியாகவும், டேப்ளட் பி.சி.க்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை மெதுவாகப் பிடித்து வருகின்றன. உலக அளவில், மொபைல் ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பி.சி.க்களும் தொடர்ந்து விற்பனையில் உயர்ந்து வருகையில், கம்ப்யூட்டர்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, குறைந்து வருகிறது.

ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், இணைய இணைப்பு மற்றும் தொலை தொடர்புக்குத் தேவையான அலைக்கற்றைக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், மற்ற நாடுகளில் ஏற்பட்டு வருவதைப் போல வளர்ச்சி, இந்த நாடுகளில் ஏற்படுவதில்லை. குறிப்பாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மொபைல் சாதனங்களில், ஸ்ட்ரீமிங் முறையில் தரும் தொழில் நுட்பம், இன்னும் இங்கு வளர்ச்சி அடையவில்லை. தொலை தொடர்பு தருவதில், சராசரி வேகத்தில், உலக அளவில் இந்தியா 119 ஆவது இடத்தையே பெற்றுள்ளது.


4ஜி அலைக்கற்றை சேவை கிடைக்கும் என்ற தகவல் இன்னும் தரப்பட்ட உறுதிமொழியாகவே உள்ளது. இதற்கான காரணம், இந்தியாவில் 15 கோடியே 30 லட்சம் பேர் வயர்லெஸ் இணைப்பு பெற்று டேட்டா பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இரண்டு கோடியே 53 லட்சம் பேர் மட்டுமே, வயர்லெஸ் பிராட்பேண்ட் பயன்படுத்துகின்றனர். இந்த வகைப் பயனாளர் எண்ணிக்கை அதிகமானால்தான், தகவல் தொலை தொடர்பு நிறுவனங்கள், நவீன தொலைதொடர்பு சாதனங்களை அமைப்பதில் முதலீடு செய்திட துணிந்து முன்னுக்கு வருவார்கள். ஆனால், இது விரைவில் நடக்கும். 1990 ஆம் ஆண்டு வாக்கில், மொபைல் போன் பயன்பாடு அறிமுகமானபோது, தெருவோர காய்கறி விற்பனை செய்திடும் பெண்மணியும், வீடுகளில் வேலை உதவி செய்வோரும், மொபைல் போன் பயன்படுத்துவார்கள் என்று கனவில் கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம்.

மாறிவரும் வாழ்க்கை முறை: மொபைல் சாதனங்கள் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளன. பரிசுப் பொருட்கள், மொபைல் போன் மூலம் இணையதளங்களில் பார்க்கப்பட்டு, நண்பர்களுக்கு வழங்கப்படுகின்றன. உணவுப் பண்டங்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆர்டர் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. வாட்ஸ் அப் மூலமே, அனைத்து உரையாடல்களும், போட்டோ பகிர்தலும்,, ஏன், வர்த்தகமும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இது ஒரு குடும்பத்தில் உள்ளவர்களிடையே, உறவுப் பாலத்தைத் தகர்ப்பதாக, ஒரு குடும்பத் தலைவி கருத்து தெரிவிக்கிறார்.

ஒரே ஹாலில் அமர்ந்து இயங்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் கைகளில் வைத்து இயக்கும் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களால், தனித் தனித் தீவுகளாக இயங்குகின்றனர்.

வயதான மூதாட்டி, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவருடைய மகன்களில் இருவர் டேப்ளட் பி.சி.யில், கேம்ஸ் விளையாடிக் கொண்டுள்ளனர். ஒரு மகள் தன் தோழியுடன் தான் எடுத்த சேலையின் போட்டோவினை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி, கருத்து கேட்டு தொடர்ந்து மெசேஜ் அனுப்புகிறார். மற்ற இருவர், தங்கள் பள்ளி நண்பர்களுடன் மொபைல் போனில், மெசேஜ் மூலம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும், ஒரு வீட்டில் ஒரே ஹாலில் தான் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், மெட்ரோ நகரங்களில் 19 சதவீத பள்ளி மாணவர்கள், ஒரு நாளில் மூன்று முதல் ஆறு மணி நேரம் மொபைல் போன் பயன்படுத்தி வந்தனர். இப்போது இது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல் போன் பழக்கத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது.

இது அவர்களின், வாழ்க்கை முறையையும், மற்றவர்களுடன் பழகும் தன்மையினையும் வெகுவாகப் பாதிக்கிறது. மொபைல் போனில் அதிக நேரம் செலவழிப்போர், மனித இனத்துடன் கூடிய நல்ல உறவினை விடுத்தே இருக்கின்றனர் என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எச்சரித்துள்ளனர். இந்த நிலை மோசமான ஒரு சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளக் கூடாது எனவும் இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், அதற்கு என்னதான் வழி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 04, 2014 8:28 am

மனித இனத்துடன் கூடிய நல்ல உறவினை
இழக்கும் அபாயம் இருப்பதை உணர்ந்து
மொபைல் போன் பழக்கத்திற்கு அடிமையாகாமல்
இருப்பதே சிறந்தது...
-



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 8:34 pm

//இது அவர்களின், வாழ்க்கை முறையையும், மற்றவர்களுடன் பழகும் தன்மையினையும் வெகுவாகப் பாதிக்கிறது. மொபைல் போனில் அதிக நேரம் செலவழிப்போர், மனித இனத்துடன் கூடிய நல்ல உறவினை விடுத்தே இருக்கின்றனர் என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எச்சரித்துள்ளனர். இந்த நிலை மோசமான ஒரு சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளக் கூடாது எனவும் இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், அதற்கு என்னதான் வழி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.//

கரெக்ட், ரொம்ப அவசியமான பதிவு ராஜ் புன்னகை நன்றி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Sun Oct 05, 2014 10:06 pm

மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை!!! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக