புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
Page 1 of 1 •
ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#1092497சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் டிவிஏசி எனப்படும் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
ஜாமீனில் விடக் கூடாது என்று கூறியதோடு நில்லாமல், ஜெயலலிதா பிரபலமான அரசியல் தலைவர். அவரை இப்போது வெளியே விட்டு விட்டால் மீண்டும் கைது செய்ய முடியாது. அவர் சாட்சிகளைக் கலைக்க முயலலாம் என்றும் டிவிஏசி கூறியுள்ளது அதிமுக தரப்பை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசின் டிவிஏசி இப்படி ஒரு கடுமையான அபிடவிட்டைத் தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பும் கூடியுள்ளது. இந்த அபிடவிட்டானது ஜெயலலிதாவுக்கு எதிராக பாதகமான நிலையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா பெஞ்ச் முன்பு டிவிஏசி தனது அபிடவிட்டைத் தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது. அவர் பிரபலமான அரசியல் தலைவர். அவரை வெளியே விட்டால் மீண்டும் கைது செய்ய முடியாது. மேலும் சாட்சிகள் கலைக்கப்படும் அபாயமும் உள்ளது. மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை சஸ்பெண்ட் செய்யவும் கூடாது என்று டிவிஏசி கூறியுள்ளதாம்.
அதை விட ஆச்சரியமாக கீழ் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்ட பவானி சிங்கை, தனது தரப்பு சிறப்பு அரசு வக்கீலாகவும், டிவிஏசி நியமித்துள்ளது. இதற்கான உத்தரவையும் அது வழங்கியுள்ளது. டிவிஏசியின் அபிடவிட்டையும் பவானி சிங்தான் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக டிவிஏசி செயல்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் கூட டிவிஏசி இப்படித்தான் செய்தாக வேண்டும். காரணம், இது தமிழக அரசின் கீழ் செயல்பட்டாலும் கூட இதன் கடமையிலிருந்து தவற முடியாது என்பதால், இந்த ஆட்சேபனை மனு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.
மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் டிவிஏசிதான் வழக்குகளைப் பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#1092499ஜெயலலிதாவிற்கு எதுவுமே தெரியாதா? மூலாதாரமே அவர்தான்: குன்ஹா
பெங்களூர்: ஜெயலலிதாவிற்கு எதுவுமே தெரியாது என்பதை ஏற்கமுடியாது.ஏனென்றால் அவருடைய வீட்டில்தான் குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும் இருந்துள்ளனர். இந்த குற்றத்திற்கு மூலாதாரமே அவர்தான் என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் 1991-1996 ஆட்சியின் போது சிலபல நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் முறைகேடு செய்திருப்பதாக சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 3000 ஏக்கர்கள் நிலம் என்ற சொத்துகள் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது, இந்த சொத்துக்கள் நிறுவனங்களின் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வங்கிக்கணக்குகள்
இது பற்றி நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், 1991ஆம் ஆண்டுக்கு முன்னரே நிறுவனங்கள் இருந்தன என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த நிறுவனங்களில் கூட்டாளிகளாகச் சேர்ந்த பின்பே, வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு நிறுவனங்களின் முழு நிர்வாகக் கட்டுப்பாடு இவர்களிடம் வந்து சேர்ந்தது. "இந்த நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்தக் கணக்குகள் வழியாகவே நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
18 நிறுவனங்களின் செயல்பாடுகள்
இருப்பினும், கூட்டுறவு நிறுவனங்கள் உட்பட இந்த 18 நிறுவனங்களும் 1991-96ஆம் ஆண்டுகளில் பெரிய அளவுக்கு வணிகம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவு சொத்துக்கள், அதாவது நிறைய நிலங்கள் இந்த நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன.
பணம் வந்த வழி
வங்கி ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த நடவடிக்கைகளுக்கான தொகை ஜெயலலிதா கூட்டாளியாக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கு மூலம் வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது என்று நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு தெரியாதா?
இந்த சொத்துக்கள் வாங்கும் நடவடிக்கை மற்ற மூவரையே சாரும் ஜெயலலிதாவுக்கு இந்த நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது என்று டிபன்ஸ் தரப்பினர் வாதிட்டனர். ஆனால் இந்த வாதத்தினை ஏற்காத நீதிபதி ஒரு மாநில முதல்வராக அவர் வீட்டில் வசித்தவர்கள் மூலம் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கைகள் அவருக்குத் தெரியாது என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார்.
நிருபிக்கப்பட்ட உண்மை
குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் (ஜெயலலிதா) நிறைய தொகைகளை ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கில் கொண்டு சேர்ப்பித்துள்ளதும், அங்கிருந்து பிற கணக்குகளுக்கு அது மாற்றப்பட்டுள்ளதும், இந்தத் தொகை பிறகு சொத்துக்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதும் சாட்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று தனது தீர்ப்பில் கூறினார்.
ஆறு நிறுவனங்கள்
1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளுக்கு இடையே, முக்கியமாக சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மெண்ட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர் வே அக்ரோ புராடக்ட்ஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ், சிங்கோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய 6 வேறுபட்ட நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.
சசி,இளவரசி, சுதாகரன் பின்னணி
இந்த நிறுவனங்கள் மேலும் சில நிறுவனங்களுடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் இந்த நிறுவனங்களிலும் கூட்டாளிகளாகச் சேர்ந்தனர். ஜெயலலிதாவைத் தவிர மற்ற மூவர்களின் பின்னணியைக் கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிபதி, அவர்களிடம் இது போன்ற பெரிய சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் இல்லை என்றும் கூறினார்.
3000 ஏக்கர் நிலங்கள்
குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் சட்டபூர்வமான இந்த நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை வலியுறுத்தியதை நிராகரித்த நீதிமன்றம், "சுமார் 3000 ஏக்கர்கள் நிலம் என்ற சொத்துகள் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது, இந்த சொத்துக்கள் நிறுவனங்களின் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் நிறுவனங்களின் பெயரில் உள்ள சொத்துகளை ஒரு தீர்மானம் நிறைவேற்றி அப்புறப்படுத்திவிடலாம் என்ற வசதியைக் கருத்தில் கொண்டே நிறுவனங்களின் பெயர்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது.
ஆதாரங்கள் இல்லை
இந்த நிறுவனங்களுக்கென்று ஆடிட்டர்கள் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டவுடன் நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் சொந்த ஆடிட்டர்களே கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர்.
நிறுவனங்களின் பெயர்கள்
மேற்கூறிய நிறுவனங்களின் சொத்துக்களாக இவை நோக்க நிறைவேற்றம் பெறவில்லை, எந்த சமயத்திலும் இந்தச் சொத்துக்கள் நிறுவனங்களின் சொத்துகளாகக் கையாளப்படவில்லை, நிறுவனங்களின் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டதைத் தவிர வேறு எதுவும் அது தொடர்பாக நடக்கவில்லை" என்று நீதிபதி கூறினார்.
வங்கிக் கணக்குகளில் பணம்
மேலும் வங்கிக் கணக்குகளில் "விளக்கமுடியா" பெரும் தொகைகள் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளுக்கு பணத்தை கிரெடிட் செய்தவர்கள் ராம் விஜயன் மற்றும் ஜெயராமன் என்ற இருவர்தான். இவர்கள் இருவரும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ஊழியர்கள் என்று நீதிபதி மேலும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
சசிகலா அறிவுறுத்தல்
குற்றம்சாட்டப்பட்ட இரண்டாம் நபரின் (சசிகலா) அறிவுறுத்தலின் படி மேற்கூறப்பட்ட வங்கிக் கணக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரின் (ஜெயலலிதா) ஊழியர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர்.
மூலாதாரம் ஜெயலலிதா
சசிகலாதான் ஜெயலலிதாவின் நிதிவிவகாரங்களை நிர்வகித்து வந்துள்ளார் ஆகவே இந்தப் பணத்திற்கு ஆதாரம் பப்ளிக் செர்வண்ட்தான் (ஜெயலலிதா) என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: ஜெயலலிதாவிற்கு எதுவுமே தெரியாது என்பதை ஏற்கமுடியாது.ஏனென்றால் அவருடைய வீட்டில்தான் குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும் இருந்துள்ளனர். இந்த குற்றத்திற்கு மூலாதாரமே அவர்தான் என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் 1991-1996 ஆட்சியின் போது சிலபல நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் முறைகேடு செய்திருப்பதாக சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 3000 ஏக்கர்கள் நிலம் என்ற சொத்துகள் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது, இந்த சொத்துக்கள் நிறுவனங்களின் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வங்கிக்கணக்குகள்
இது பற்றி நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், 1991ஆம் ஆண்டுக்கு முன்னரே நிறுவனங்கள் இருந்தன என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த நிறுவனங்களில் கூட்டாளிகளாகச் சேர்ந்த பின்பே, வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு நிறுவனங்களின் முழு நிர்வாகக் கட்டுப்பாடு இவர்களிடம் வந்து சேர்ந்தது. "இந்த நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்தக் கணக்குகள் வழியாகவே நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
18 நிறுவனங்களின் செயல்பாடுகள்
இருப்பினும், கூட்டுறவு நிறுவனங்கள் உட்பட இந்த 18 நிறுவனங்களும் 1991-96ஆம் ஆண்டுகளில் பெரிய அளவுக்கு வணிகம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவு சொத்துக்கள், அதாவது நிறைய நிலங்கள் இந்த நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன.
பணம் வந்த வழி
வங்கி ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த நடவடிக்கைகளுக்கான தொகை ஜெயலலிதா கூட்டாளியாக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கு மூலம் வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது என்று நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு தெரியாதா?
இந்த சொத்துக்கள் வாங்கும் நடவடிக்கை மற்ற மூவரையே சாரும் ஜெயலலிதாவுக்கு இந்த நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது என்று டிபன்ஸ் தரப்பினர் வாதிட்டனர். ஆனால் இந்த வாதத்தினை ஏற்காத நீதிபதி ஒரு மாநில முதல்வராக அவர் வீட்டில் வசித்தவர்கள் மூலம் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கைகள் அவருக்குத் தெரியாது என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார்.
நிருபிக்கப்பட்ட உண்மை
குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் (ஜெயலலிதா) நிறைய தொகைகளை ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கில் கொண்டு சேர்ப்பித்துள்ளதும், அங்கிருந்து பிற கணக்குகளுக்கு அது மாற்றப்பட்டுள்ளதும், இந்தத் தொகை பிறகு சொத்துக்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதும் சாட்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று தனது தீர்ப்பில் கூறினார்.
ஆறு நிறுவனங்கள்
1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளுக்கு இடையே, முக்கியமாக சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மெண்ட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர் வே அக்ரோ புராடக்ட்ஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ், சிங்கோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய 6 வேறுபட்ட நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.
சசி,இளவரசி, சுதாகரன் பின்னணி
இந்த நிறுவனங்கள் மேலும் சில நிறுவனங்களுடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் இந்த நிறுவனங்களிலும் கூட்டாளிகளாகச் சேர்ந்தனர். ஜெயலலிதாவைத் தவிர மற்ற மூவர்களின் பின்னணியைக் கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிபதி, அவர்களிடம் இது போன்ற பெரிய சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் இல்லை என்றும் கூறினார்.
3000 ஏக்கர் நிலங்கள்
குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் சட்டபூர்வமான இந்த நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை வலியுறுத்தியதை நிராகரித்த நீதிமன்றம், "சுமார் 3000 ஏக்கர்கள் நிலம் என்ற சொத்துகள் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது, இந்த சொத்துக்கள் நிறுவனங்களின் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் நிறுவனங்களின் பெயரில் உள்ள சொத்துகளை ஒரு தீர்மானம் நிறைவேற்றி அப்புறப்படுத்திவிடலாம் என்ற வசதியைக் கருத்தில் கொண்டே நிறுவனங்களின் பெயர்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது.
ஆதாரங்கள் இல்லை
இந்த நிறுவனங்களுக்கென்று ஆடிட்டர்கள் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டவுடன் நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் சொந்த ஆடிட்டர்களே கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர்.
நிறுவனங்களின் பெயர்கள்
மேற்கூறிய நிறுவனங்களின் சொத்துக்களாக இவை நோக்க நிறைவேற்றம் பெறவில்லை, எந்த சமயத்திலும் இந்தச் சொத்துக்கள் நிறுவனங்களின் சொத்துகளாகக் கையாளப்படவில்லை, நிறுவனங்களின் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டதைத் தவிர வேறு எதுவும் அது தொடர்பாக நடக்கவில்லை" என்று நீதிபதி கூறினார்.
வங்கிக் கணக்குகளில் பணம்
மேலும் வங்கிக் கணக்குகளில் "விளக்கமுடியா" பெரும் தொகைகள் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளுக்கு பணத்தை கிரெடிட் செய்தவர்கள் ராம் விஜயன் மற்றும் ஜெயராமன் என்ற இருவர்தான். இவர்கள் இருவரும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ஊழியர்கள் என்று நீதிபதி மேலும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
சசிகலா அறிவுறுத்தல்
குற்றம்சாட்டப்பட்ட இரண்டாம் நபரின் (சசிகலா) அறிவுறுத்தலின் படி மேற்கூறப்பட்ட வங்கிக் கணக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரின் (ஜெயலலிதா) ஊழியர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர்.
மூலாதாரம் ஜெயலலிதா
சசிகலாதான் ஜெயலலிதாவின் நிதிவிவகாரங்களை நிர்வகித்து வந்துள்ளார் ஆகவே இந்தப் பணத்திற்கு ஆதாரம் பப்ளிக் செர்வண்ட்தான் (ஜெயலலிதா) என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#1092501ஜெயலலிதா மனுவை விசாரிக்காமலேயே ஜாமீன் மறுப்பு
தண்டனை ரத்து மற்றும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்காமலேயே விசாரணையை தள்ளிவைத்து விட்டதாக வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நீதிபதி மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவையும் கர்நாடக ஐகோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கோர்ட்டுக்கு வெளியே அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா 5-வது நாளாக சிறையில் உள்ளார். தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி ரத்தினகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கோரியும் தங்களுக்கு வழங்கப் பட்ட தண்டனை, தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் 4 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பு 11-வது நீதிமன்ற ஹாலில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. காலை 9 மணிக்கு நீதிபதி ரத்னகலா தனது இருக்கையில் அமர்ந்து அவசர கால மனுக்களை விசாரிக்க ஆரம்பித்தார்.
காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் வந்தனர். ஜெயலலிதா தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அவரது உதவி வழக்கறிஞர்கள் 3 பேரும் 10.52 மணிக்கு வந்தனர்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி ரத்னகலா முன்பு காலை 11.05-க்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் ஜாமீன் மனு மீதான வாதத்தை தொடங்குவதற்கு முன்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பேசினார்.
அப்போது,''ஜெயலலிதா மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதால் அன்றுடன் எனது பணி முடிந்துவிட்டது. என்னால் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி வாதாட முடியாது. இது தொடர்பாக கர்நாடக அரசு அரசாணை வெளியிடவில்லை'' என்றார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ரத்னகலா, ''அரசு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது. எனவே வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்றார்.
இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி ரத்னகலா ஏற்காத அதே மனுவை மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர கால சிறப்பு மனுவாக தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அம்ஜத் பாஷா, மூர்த்தி ராவ் ஆகியோர் நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாயை சந்தித்துப் பேசினர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலாவிடம் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கறிஞர்கள் புதிய மனுவை தட்டச்சு செய்து பிற்பகல் 1.30 மணிக்குள் அவசர கால மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவில்,''குற்றவியல் நடைமுறை சட்டம் 389(1) பிரிவின்படி, 7 ஆண்டுகளுக்குள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலே வழக்கை விசாரிக்கலாம். இதற்காக நீதிபதி தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே புதிய மனுக்களை அவசர கால சிறப்பு மனுவாக உடனடியாக விசாரிக்க வேண்டும்''என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாய் இந்த மனு குறித்து விடுமுறை கால நீதிபதிகள் ரத்னகலா, அப்துல் நாஸர் ஆகியோரிடம் ஆலோசித்தார். டெல்லியில் இருந்த தலைமை நீதிபதி வஹேலாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவையும் அவசர கால சிறப்பு மனுவாக ஏற்பதாக பதிவாளர் தேசாய் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஜெயலலிதா தாக்கல் செய்த அவசர கால சிறப்பு மனு மீதான விசாரணையும் அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது அவரது கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நேற்றே அவர் விடுதலையாகி விடுவார் என்று கட்சியினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். கர்நாடக ஐகோர்ட்டுக்கு வெளியே அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலும் அதிமுக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஜெயலலிதா விடுதலைக்காக அவரது கட்சியினர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளையும் ஆராதனைகளையும் நடத்தினர். ஜெயலலிதா விடுதலையாக இன்னும் 5 நாள் காத்திருக்க வேண்டுமா? என்று அவரது கட்சியினரும் பொதுமக்களும் வேதனையோடு கேள்வி எழுப்பினார்கள். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு கூட நிராகரிக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் சோக அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தண்டனை ரத்து மற்றும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்காமலேயே விசாரணையை தள்ளிவைத்து விட்டதாக வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நீதிபதி மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவையும் கர்நாடக ஐகோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கோர்ட்டுக்கு வெளியே அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா 5-வது நாளாக சிறையில் உள்ளார். தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி ரத்தினகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீன் கோரியும் தங்களுக்கு வழங்கப் பட்ட தண்டனை, தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் 4 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ரத்னகலா முன்பு 11-வது நீதிமன்ற ஹாலில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. காலை 9 மணிக்கு நீதிபதி ரத்னகலா தனது இருக்கையில் அமர்ந்து அவசர கால மனுக்களை விசாரிக்க ஆரம்பித்தார்.
காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு வழக்கறிஞர்கள் பவானி சிங், முருகேஷ் எஸ்.மரடி ஆகியோர் வந்தனர். ஜெயலலிதா தரப்புக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அவரது உதவி வழக்கறிஞர்கள் 3 பேரும் 10.52 மணிக்கு வந்தனர்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நீதிபதி ரத்னகலா முன்பு காலை 11.05-க்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் ஜாமீன் மனு மீதான வாதத்தை தொடங்குவதற்கு முன்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் பேசினார்.
அப்போது,''ஜெயலலிதா மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு என்னை அரசு வழக்கறிஞராக நியமித்தது. இந்த வழக்கில் கடந்த 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதால் அன்றுடன் எனது பணி முடிந்துவிட்டது. என்னால் மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராகி வாதாட முடியாது. இது தொடர்பாக கர்நாடக அரசு அரசாணை வெளியிடவில்லை'' என்றார். இதனைத் தொடர்ந்து நீதிபதி ரத்னகலா, ''அரசு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது. எனவே வழக்கை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்'' என்றார்.
இந்நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி ரத்னகலா ஏற்காத அதே மனுவை மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர கால சிறப்பு மனுவாக தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள் பன்னீர் செல்வம், அன்புக்கரசு, அம்ஜத் பாஷா, மூர்த்தி ராவ் ஆகியோர் நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாயை சந்தித்துப் பேசினர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலாவிடம் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வழக்கறிஞர்கள் புதிய மனுவை தட்டச்சு செய்து பிற்பகல் 1.30 மணிக்குள் அவசர கால மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவில்,''குற்றவியல் நடைமுறை சட்டம் 389(1) பிரிவின்படி, 7 ஆண்டுகளுக்குள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் இல்லாமலே வழக்கை விசாரிக்கலாம். இதற்காக நீதிபதி தனது சுய அதிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே புதிய மனுக்களை அவசர கால சிறப்பு மனுவாக உடனடியாக விசாரிக்க வேண்டும்''என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து நீதித்துறை பதிவாளர் ஆர்.கே.தேசாய் இந்த மனு குறித்து விடுமுறை கால நீதிபதிகள் ரத்னகலா, அப்துல் நாஸர் ஆகியோரிடம் ஆலோசித்தார். டெல்லியில் இருந்த தலைமை நீதிபதி வஹேலாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பிற்பகல் 3 மணி அளவில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுவையும் அவசர கால சிறப்பு மனுவாக ஏற்பதாக பதிவாளர் தேசாய் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஜெயலலிதா தாக்கல் செய்த அவசர கால சிறப்பு மனு மீதான விசாரணையும் அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவர் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது அவரது கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நேற்றே அவர் விடுதலையாகி விடுவார் என்று கட்சியினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். கர்நாடக ஐகோர்ட்டுக்கு வெளியே அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலும் அதிமுக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ஜெயலலிதா விடுதலைக்காக அவரது கட்சியினர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளையும் ஆராதனைகளையும் நடத்தினர். ஜெயலலிதா விடுதலையாக இன்னும் 5 நாள் காத்திருக்க வேண்டுமா? என்று அவரது கட்சியினரும் பொதுமக்களும் வேதனையோடு கேள்வி எழுப்பினார்கள். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு கூட நிராகரிக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் சோக அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#1092503- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பச்சிளம் குழந்தை இவர், பால் வடியும் முகம் - இதெல்லாம் தெரியாம பாவம் பழி வாங்கிவிட்டார்கள் நீதிமான்கள்!!!!!!!!!!!!!!!
கண்டிப்பாக விடக் கூடாது - இதேபோல் மற்ற கட்சிகளின் ஊழல் நிரூபிக்கப்பட்டு அவர்களையும் உள்ளே வைத்து அழகு பார்த்தால் தான் நாடு உருப்படும்.
கண்டிப்பாக விடக் கூடாது - இதேபோல் மற்ற கட்சிகளின் ஊழல் நிரூபிக்கப்பட்டு அவர்களையும் உள்ளே வைத்து அழகு பார்த்தால் தான் நாடு உருப்படும்.
Re: ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#1092507நீதிபதிகள் இதற்கு முயற்சிக்கிறார்களோ இல்லையோ, ஜெ வெளியில் வந்ததும் இந்த வேலையைத்தான் பார்ப்பார்!யினியவன் wrote:பச்சிளம் குழந்தை இவர், பால் வடியும் முகம் - இதெல்லாம் தெரியாம பாவம் பழி வாங்கிவிட்டார்கள் நீதிமான்கள்!!!!!!!!!!!!!!!
கண்டிப்பாக விடக் கூடாது - இதேபோல் மற்ற கட்சிகளின் ஊழல் நிரூபிக்கப்பட்டு அவர்களையும் உள்ளே வைத்து அழகு பார்த்தால் தான் நாடு உருப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#1092509- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நிச்சியமா பிடிக்க முடியாது, சின்ன உருவமா அது.
Re: ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#1092602- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் டிவிஏசி எனப்படும் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.//
சபாஷ் !
சபாஷ் !
Re: ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#1092604- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:நீதிபதிகள் இதற்கு முயற்சிக்கிறார்களோ இல்லையோ, ஜெ வெளியில் வந்ததும் இந்த வேலையைத்தான் பார்ப்பார்!யினியவன் wrote:பச்சிளம் குழந்தை இவர், பால் வடியும் முகம் - இதெல்லாம் தெரியாம பாவம் பழி வாங்கிவிட்டார்கள் நீதிமான்கள்!!!!!!!!!!!!!!!
கண்டிப்பாக விடக் கூடாது - இதேபோல் மற்ற கட்சிகளின் ஊழல் நிரூபிக்கப்பட்டு அவர்களையும் உள்ளே வைத்து அழகு பார்த்தால் தான் நாடு உருப்படும்.
Re: ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.. அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..
#0- Sponsored content
Similar topics
» ஜெயலலிதா ஓய்வு எடுக்கிறாரா?: அன்பழகன் கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு
» ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
» முதல்வர் பழனிசாமி மீதான புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்
» வலையிருந்தும் மீன் பிடிக்க முடியாது…
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு
» ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
» முதல்வர் பழனிசாமி மீதான புகார் - லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் அவகாசம்
» வலையிருந்தும் மீன் பிடிக்க முடியாது…
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|