புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செல்லமே...
‘செல்லம்..!’ இந்தக் கொஞ்சலுக்குள் ஒளிந்திருக்கிறது ஒருவரை எந்த வயதிலும் குழந்தையாக உணரச் செய்யும் மந்திரம். வயது கரைந்து, அகந்தை உடைந்து, கோபங்கள் உதிர்ந்து, அன்பு மிகுந்து வழுவழுப்பான கூழாங்கல்லாக மனம் மாறுவது எவ்வளவு இனிமை! அப்போது ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள இவ்வுலகில் முத்தம் மட்டுமே மிச்சமாக இருக்கும்.
யாழினிக்கு 10 வயது. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். பயங்கரமான வால். ஒருநாள் டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்ததும் புலம்பத் தொடங்கினாள். ‘‘காலையில் எழுந்ததும் பரபரன்னு ஸ்கூலுக்குக் கிளம்பணும்... அதுக்கு திட்டு. அங்கே தோழிகள் டீச்சர்ட்ட போட்டுக் கொடுக்கறாங்க... மறுபடியும் திட்டு. டியூஷன்ல படிப்புல மட்டும் கவனமா இருக்கணும்... பேசினா திட்டு. வீட்டுக்கு வந்து, டி.வி. பார்த்தா ‘சீக்கிரம் தூங்கு’ன்னு திட்டு. எங்களை யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்களா? எங்களுக்கும் மனசிருக்கு, நாங்களும் மனுஷங்கதான்.
எங்களை யாரும் கொஞ்சவே மாட்டீங்களா?’’ - தொடரும் அவளது கேள்விகள் அழுகையில் முட்டி, அம்மாவின் மடியில் தலை சாய்க்கத் தூண்டுகின்றன. அம்மா, தலைகோதி முத்தமிட்டதும் அழுகை மெல்லக் கரைகிறது. ‘குழந்தைகளுக்கு எவ்வளவு செல்லம் கொடுக்கலாம்?’ யாழினியிடம் கேட்டால் இப்படி சொல்கிறாள்... ‘‘அது குழந்தையோட கேரக்டரை பொறுத்தது. என்னைப் போல அடம்பிடிக்கும் குழந்தைக்கு மீடியமா செல்லம் கொடுத்தா போதும்.
குழந்தை தப்பு செய்யும் போது திட்டுறது, அடிக்கறதுக்கு பதிலா மூணு முறை அன்பா எடுத்துச் சொல்லுங்க. அதுக்குள்ள குழந்தை தன்னைத் திருத்திக்கும். தயவு செஞ்சு எதுக்காகவும் திட்டாதீங்க. ‘உன் கூட பேச மாட்டேன்’னு சொல்லி காயப்படுத்தாதீங்க’’ -கெஞ்சுகிறது இந்தக் குழந்தை. ஒவ்வொரு குழந்தையும் நமக்கு செல்லம்தான். ‘அவர்களுக்கு எந்தளவுக்கு செல்லம் கொடுக்கலாம்’ என்பதை விளக்குகிறார் சண்முகா நர்சிங் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர் மரகதம்...
கருவிலேயே தொடங்கலாமே!
‘செல்லம் கொடுப்பது’ குழந்தைகள் மீது காட்டும் மிகை அன்பு. கருவில் இருக்கும்போதே குழந்தையுடன் உரையாட வேண்டியது அவசியம். ‘உன் வருகைக்காக யாரெல்லாம் காத்திருக்கிறார்கள் பார்! உனக்குப் பரிசளிப்பதற்காக என்னவெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? நீ எப்படி இருப்பாய் என்று வீட்டிலுள்ளவர்கள் எப்படியெல்லாம்
கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் தெரியுமா..?’ - மனதால் தாய் பேசுவதை கருவில் வளரும் குழந்தை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கும். உணர்வுகளால் குழந்தையைத் தொட தாய்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அனுபவத்தை எந்தப் பெண்ணும் தவறவிடக் கூடாது. இந்தச் சிறிய கவனிப்பு குழந்தையின் பண்பை ஒழுங்குபடுத்தும்.
அன்பு ஏ.டி.எம். மெஷினா?
அதிகபட்ச அன்பு, அதிகபட்ச கண்டிப்பு - இரண்டுமே தவறு. பெற்றோரில் ஒருவர் செல்லம் தருவதும் மற்றவர் கண்டிப்பதும் கூடாது. இரண்டுக்குமே அளவு இருக்கிறது. கண்மூடித்தனமான அன்பு குழந்தைகளுக்கு எதிரியாகவே அமையும். குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க அன்பு உதவ வேண்டும். அவர்களது சின்னச் சின்ன ஆசைகளைப் புரிந்து கொள்வது, விருப்பத்தை நிறைவேற்றுவது எனப் பலவிதங்களில் வெளிப்பட வேண்டும். அதே நேரத்தில், ‘குழந்தை கேட்டுவிட்டதே’ என தகுதிக்கு மீறிய விஷயங்களை செய்ய பெற்றோர் முயற்சிக்கக் கூடாது. அவரவர் குடும்ப, நிதிச்சூழலுக்கு ஏற்றதை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முடியாத நேரத்தில் ‘நோ’ சொல்லத் தயங்கக் கூடாது. அதிகம் செல்லம் பெறும் குழந்தை, பெற்றோரை ‘ஏ.டி.எம்.’ மெஷினாக பார்க்கிறது. ஆசைகளை வகைப்படுத்த வேண்டும். சரி-தவறுகளை புரிய வைத்து நியாயமானதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
கசக்காது கண்டிப்பு!
வீட்டில் சுதந்திரம் கிடைக்கப்பெற்ற குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென இருப்பார்கள். உடைப்பது, தொலைப்பது, விழுவது என ஏதாவது ஒரு களேபரம் நடந்தபடி இருக்கும். அப்போதெல்லாம் பெற்றோர் எடுக்கும் ஆயுதம் ‘அடி’ அல்லது அட்வைஸ். ‘இத்தனை நாட்களாக செல்லம் கொடுத்த அப்பாவும் அம்மாவும் வில்லன்களாக மாறிவிட்டார்களே’ என்று குழந்தைகள் காயப்படுவார்கள். ராணுவத்தனமான கண்டிப்பால் குழந்தையைத் திருத்த நினைப்பது தவறான விளைவையே ஏற்படுத்தும். குறும்பு செய்வது குழந்தைகளுக்கு கரும்பு சாப்பிடுவது மாதிரி.
அதைத் தடுக்க வேண்டாம். குறும்பின் எல்லை எது என்பதை குழந்தையுடன் ஆலோசித்து முடிவு செய்யலாம். எதையாவது தான் உடைத்து விடும் போது குழந்தை பயப்படுகிறது, அதிகமாகத் திட்டும் போது வெறுப்படைகிறது. அந்த நேரத்தில் ஆதரவான அணுகுமுறை அவசியம். தூங்கப் போகும் நேரத்தில் அன்று நடந்த விஷயங்களை அசை போட்டு, அளவுக்கு மீறிய குறும்பால் ஏற்பட்ட இழப்பு, ஆபத்து பற்றிச் சொல்ல வேண்டும். ‘நாளையில் இருந்து இப்படிச் செய்யக் கூடாது. பத்திரமாக இருக்க வேண்டும். எல்லாம் உன் பாதுகாப்புக்காகத்தான்...’ என்றெல்லாம் புரிய வைத்தால் கண்டிப்பும் கசக்காது.
தொடரும்...................
‘செல்லம்..!’ இந்தக் கொஞ்சலுக்குள் ஒளிந்திருக்கிறது ஒருவரை எந்த வயதிலும் குழந்தையாக உணரச் செய்யும் மந்திரம். வயது கரைந்து, அகந்தை உடைந்து, கோபங்கள் உதிர்ந்து, அன்பு மிகுந்து வழுவழுப்பான கூழாங்கல்லாக மனம் மாறுவது எவ்வளவு இனிமை! அப்போது ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள இவ்வுலகில் முத்தம் மட்டுமே மிச்சமாக இருக்கும்.
யாழினிக்கு 10 வயது. ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். பயங்கரமான வால். ஒருநாள் டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்ததும் புலம்பத் தொடங்கினாள். ‘‘காலையில் எழுந்ததும் பரபரன்னு ஸ்கூலுக்குக் கிளம்பணும்... அதுக்கு திட்டு. அங்கே தோழிகள் டீச்சர்ட்ட போட்டுக் கொடுக்கறாங்க... மறுபடியும் திட்டு. டியூஷன்ல படிப்புல மட்டும் கவனமா இருக்கணும்... பேசினா திட்டு. வீட்டுக்கு வந்து, டி.வி. பார்த்தா ‘சீக்கிரம் தூங்கு’ன்னு திட்டு. எங்களை யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்களா? எங்களுக்கும் மனசிருக்கு, நாங்களும் மனுஷங்கதான்.
எங்களை யாரும் கொஞ்சவே மாட்டீங்களா?’’ - தொடரும் அவளது கேள்விகள் அழுகையில் முட்டி, அம்மாவின் மடியில் தலை சாய்க்கத் தூண்டுகின்றன. அம்மா, தலைகோதி முத்தமிட்டதும் அழுகை மெல்லக் கரைகிறது. ‘குழந்தைகளுக்கு எவ்வளவு செல்லம் கொடுக்கலாம்?’ யாழினியிடம் கேட்டால் இப்படி சொல்கிறாள்... ‘‘அது குழந்தையோட கேரக்டரை பொறுத்தது. என்னைப் போல அடம்பிடிக்கும் குழந்தைக்கு மீடியமா செல்லம் கொடுத்தா போதும்.
குழந்தை தப்பு செய்யும் போது திட்டுறது, அடிக்கறதுக்கு பதிலா மூணு முறை அன்பா எடுத்துச் சொல்லுங்க. அதுக்குள்ள குழந்தை தன்னைத் திருத்திக்கும். தயவு செஞ்சு எதுக்காகவும் திட்டாதீங்க. ‘உன் கூட பேச மாட்டேன்’னு சொல்லி காயப்படுத்தாதீங்க’’ -கெஞ்சுகிறது இந்தக் குழந்தை. ஒவ்வொரு குழந்தையும் நமக்கு செல்லம்தான். ‘அவர்களுக்கு எந்தளவுக்கு செல்லம் கொடுக்கலாம்’ என்பதை விளக்குகிறார் சண்முகா நர்சிங் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர் மரகதம்...
கருவிலேயே தொடங்கலாமே!
‘செல்லம் கொடுப்பது’ குழந்தைகள் மீது காட்டும் மிகை அன்பு. கருவில் இருக்கும்போதே குழந்தையுடன் உரையாட வேண்டியது அவசியம். ‘உன் வருகைக்காக யாரெல்லாம் காத்திருக்கிறார்கள் பார்! உனக்குப் பரிசளிப்பதற்காக என்னவெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? நீ எப்படி இருப்பாய் என்று வீட்டிலுள்ளவர்கள் எப்படியெல்லாம்
கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் தெரியுமா..?’ - மனதால் தாய் பேசுவதை கருவில் வளரும் குழந்தை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கும். உணர்வுகளால் குழந்தையைத் தொட தாய்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அனுபவத்தை எந்தப் பெண்ணும் தவறவிடக் கூடாது. இந்தச் சிறிய கவனிப்பு குழந்தையின் பண்பை ஒழுங்குபடுத்தும்.
அன்பு ஏ.டி.எம். மெஷினா?
அதிகபட்ச அன்பு, அதிகபட்ச கண்டிப்பு - இரண்டுமே தவறு. பெற்றோரில் ஒருவர் செல்லம் தருவதும் மற்றவர் கண்டிப்பதும் கூடாது. இரண்டுக்குமே அளவு இருக்கிறது. கண்மூடித்தனமான அன்பு குழந்தைகளுக்கு எதிரியாகவே அமையும். குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க அன்பு உதவ வேண்டும். அவர்களது சின்னச் சின்ன ஆசைகளைப் புரிந்து கொள்வது, விருப்பத்தை நிறைவேற்றுவது எனப் பலவிதங்களில் வெளிப்பட வேண்டும். அதே நேரத்தில், ‘குழந்தை கேட்டுவிட்டதே’ என தகுதிக்கு மீறிய விஷயங்களை செய்ய பெற்றோர் முயற்சிக்கக் கூடாது. அவரவர் குடும்ப, நிதிச்சூழலுக்கு ஏற்றதை மட்டுமே அனுமதிக்க வேண்டும். முடியாத நேரத்தில் ‘நோ’ சொல்லத் தயங்கக் கூடாது. அதிகம் செல்லம் பெறும் குழந்தை, பெற்றோரை ‘ஏ.டி.எம்.’ மெஷினாக பார்க்கிறது. ஆசைகளை வகைப்படுத்த வேண்டும். சரி-தவறுகளை புரிய வைத்து நியாயமானதை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
கசக்காது கண்டிப்பு!
வீட்டில் சுதந்திரம் கிடைக்கப்பெற்ற குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென இருப்பார்கள். உடைப்பது, தொலைப்பது, விழுவது என ஏதாவது ஒரு களேபரம் நடந்தபடி இருக்கும். அப்போதெல்லாம் பெற்றோர் எடுக்கும் ஆயுதம் ‘அடி’ அல்லது அட்வைஸ். ‘இத்தனை நாட்களாக செல்லம் கொடுத்த அப்பாவும் அம்மாவும் வில்லன்களாக மாறிவிட்டார்களே’ என்று குழந்தைகள் காயப்படுவார்கள். ராணுவத்தனமான கண்டிப்பால் குழந்தையைத் திருத்த நினைப்பது தவறான விளைவையே ஏற்படுத்தும். குறும்பு செய்வது குழந்தைகளுக்கு கரும்பு சாப்பிடுவது மாதிரி.
அதைத் தடுக்க வேண்டாம். குறும்பின் எல்லை எது என்பதை குழந்தையுடன் ஆலோசித்து முடிவு செய்யலாம். எதையாவது தான் உடைத்து விடும் போது குழந்தை பயப்படுகிறது, அதிகமாகத் திட்டும் போது வெறுப்படைகிறது. அந்த நேரத்தில் ஆதரவான அணுகுமுறை அவசியம். தூங்கப் போகும் நேரத்தில் அன்று நடந்த விஷயங்களை அசை போட்டு, அளவுக்கு மீறிய குறும்பால் ஏற்பட்ட இழப்பு, ஆபத்து பற்றிச் சொல்ல வேண்டும். ‘நாளையில் இருந்து இப்படிச் செய்யக் கூடாது. பத்திரமாக இருக்க வேண்டும். எல்லாம் உன் பாதுகாப்புக்காகத்தான்...’ என்றெல்லாம் புரிய வைத்தால் கண்டிப்பும் கசக்காது.
தொடரும்...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திணிப்புத் தேவையில்லை!
பல பெற்றோர் தாங்கள் வளர்ந்த சூழலை, பழக்கங்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்துகிறார்கள். இன்றைய குழந்தைகள் நம்மைவிட பல மடங்கு மேம்பட்ட சிந்தனைக்கான வாய்ப்புக் கொண்டவர்களாக வளர்கிறார்கள். ஒரு விஷயத்தை அவர்கள் அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். தங்களது விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்ட வார்ப்புகளாக குழந்தைகளை உருவாக்க முயற்சிக்கும்போது குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகிச் செல்கிறார்கள். திணிக்கப்படும் விஷயங்கள் குழந்தைகளால் விரும்பப்படுவதில்லை. இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தை ஆளும் மூளையையும் மனதையும் கொண்டவர்கள். கண்டங்கள் தாண்டியும் பல தலைமுறைகளின் தோள்களில் நின்றும் சிந்திக்கும் வல்லமை படைத்தவர்கள். இதைப் புரிந்து கொள்வது நல்லது.
வெற்றிக்கான விதை!
அன்பும் கண்டிப்பும் குழந்தைகளின் ‘கேரக்டர்’ உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கல்வி, பழக்கவழக்கம் இரண்டிலும் வெற்றியாளராகத் திகழ வளர்ப்பு முறையில் சரியான அணுகுமுறை அவசியம். ஒரு விஷயத்தைச் சரியாக செய்தால் பிடித்ததைப் பரிசளிக்கலாம்... விரும்பிய இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்... கதை சொல்லலாம்... பிடித்த பொருளை சேர்ந்து உருவாக்கலாம்! ஒவ்வொரு முறையும் புதுமையான பரிசுகளைத் தர வேண்டும் (சாக்லெட் முழுமையான பரிசு அல்ல). தவறு செய்யும் போது, குழந்தை விரும்பாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. புன்னகையுடன் எடுத்துக் கூறும்போது கண்டிப்பும் இனிக்கும்.
அவனாக மாறு!
குழந்தைகள் செய்யும் தவறை விளையாட்டாக உணர்த்த, தவறின் பாதிப்பை உணரச் செய்ய ‘ரோல் பிளே’ விளையாட்டு உதவும். தாய் குழந்தையாகவும், குழந்தை தாயாகவும் மாறிக் கொள்ளலாம். அம்மா அடம் செய்வதையும் குறும்பு செய்வதையும் கண்டிக்க முடியாமல் திணறும் குழந்தை! அதன் மூலம் தன் தவறுகள் எப்படி பெற்றோரை பாதிக்கின்றன என்பதை புரிந்து கொள்ளும். குழந்தைகளை எல்லாச் சூழலையும் எதிர்கொள்ளப் பழக்க வேண்டும். பிரச்னை வரும் போது அதிலிருந்து தப்பிக்கும் வழிகளைக் கற்றுத்தர வேண்டும். ‘அவன் இடத்தில் நீ இருந்தால் என்ன செய்வாய்?’ என்பது போன்ற மாற்றுச் சிந்தனைகள் மூலம் மாற்றத்தை உருவாக்கலாம்.
குழந்தைகளின் எதிர்பார்ப்பு!
எது சரி, எது தவறு என வலியுறுத்தப்படுகிறதோ, அதை மற்றவர்களும் பின்பற்றுகிறார்களா என்று கவனிக்கிறது குழந்தை. பெற்றோர் கடைப்பிடிக்கும் ஒழுக்க விதிகளை ஏற்றுக் கொள்கிறது. பெற்றோரிடம் அன்பையும் தேவைகளுக்கான உதவியையும் எதிர்பார்க்கிறது. பிரச்னையான சூழலில் நட்பையும் ஆதரவையும் தேடுகிறது. குழந்தையின் தேவையை அறிந்து, அதற்கேற்ப அன்பை வழங்கலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது செல்லம், கண்டிப்பு இரண்டுக்குமே பொருந்தும்.
நன்றி : குங்குமம் தோழி
பல பெற்றோர் தாங்கள் வளர்ந்த சூழலை, பழக்கங்களை குழந்தைகளிடம் வெளிப்படுத்துகிறார்கள். இன்றைய குழந்தைகள் நம்மைவிட பல மடங்கு மேம்பட்ட சிந்தனைக்கான வாய்ப்புக் கொண்டவர்களாக வளர்கிறார்கள். ஒரு விஷயத்தை அவர்கள் அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். தங்களது விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்ட வார்ப்புகளாக குழந்தைகளை உருவாக்க முயற்சிக்கும்போது குழந்தைகள் பெற்றோரை விட்டு விலகிச் செல்கிறார்கள். திணிக்கப்படும் விஷயங்கள் குழந்தைகளால் விரும்பப்படுவதில்லை. இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தை ஆளும் மூளையையும் மனதையும் கொண்டவர்கள். கண்டங்கள் தாண்டியும் பல தலைமுறைகளின் தோள்களில் நின்றும் சிந்திக்கும் வல்லமை படைத்தவர்கள். இதைப் புரிந்து கொள்வது நல்லது.
வெற்றிக்கான விதை!
அன்பும் கண்டிப்பும் குழந்தைகளின் ‘கேரக்டர்’ உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கல்வி, பழக்கவழக்கம் இரண்டிலும் வெற்றியாளராகத் திகழ வளர்ப்பு முறையில் சரியான அணுகுமுறை அவசியம். ஒரு விஷயத்தைச் சரியாக செய்தால் பிடித்ததைப் பரிசளிக்கலாம்... விரும்பிய இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்... கதை சொல்லலாம்... பிடித்த பொருளை சேர்ந்து உருவாக்கலாம்! ஒவ்வொரு முறையும் புதுமையான பரிசுகளைத் தர வேண்டும் (சாக்லெட் முழுமையான பரிசு அல்ல). தவறு செய்யும் போது, குழந்தை விரும்பாத வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. புன்னகையுடன் எடுத்துக் கூறும்போது கண்டிப்பும் இனிக்கும்.
அவனாக மாறு!
குழந்தைகள் செய்யும் தவறை விளையாட்டாக உணர்த்த, தவறின் பாதிப்பை உணரச் செய்ய ‘ரோல் பிளே’ விளையாட்டு உதவும். தாய் குழந்தையாகவும், குழந்தை தாயாகவும் மாறிக் கொள்ளலாம். அம்மா அடம் செய்வதையும் குறும்பு செய்வதையும் கண்டிக்க முடியாமல் திணறும் குழந்தை! அதன் மூலம் தன் தவறுகள் எப்படி பெற்றோரை பாதிக்கின்றன என்பதை புரிந்து கொள்ளும். குழந்தைகளை எல்லாச் சூழலையும் எதிர்கொள்ளப் பழக்க வேண்டும். பிரச்னை வரும் போது அதிலிருந்து தப்பிக்கும் வழிகளைக் கற்றுத்தர வேண்டும். ‘அவன் இடத்தில் நீ இருந்தால் என்ன செய்வாய்?’ என்பது போன்ற மாற்றுச் சிந்தனைகள் மூலம் மாற்றத்தை உருவாக்கலாம்.
குழந்தைகளின் எதிர்பார்ப்பு!
எது சரி, எது தவறு என வலியுறுத்தப்படுகிறதோ, அதை மற்றவர்களும் பின்பற்றுகிறார்களா என்று கவனிக்கிறது குழந்தை. பெற்றோர் கடைப்பிடிக்கும் ஒழுக்க விதிகளை ஏற்றுக் கொள்கிறது. பெற்றோரிடம் அன்பையும் தேவைகளுக்கான உதவியையும் எதிர்பார்க்கிறது. பிரச்னையான சூழலில் நட்பையும் ஆதரவையும் தேடுகிறது. குழந்தையின் தேவையை அறிந்து, அதற்கேற்ப அன்பை வழங்கலாம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது செல்லம், கண்டிப்பு இரண்டுக்குமே பொருந்தும்.
நன்றி : குங்குமம் தோழி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கருவிலேயே தொடங்கலாமே!
‘செல்லம் கொடுப்பது’ குழந்தைகள் மீது காட்டும் மிகை அன்பு. கருவில் இருக்கும்போதே குழந்தையுடன் உரையாட வேண்டியது அவசியம். ‘உன் வருகைக்காக யாரெல்லாம் காத்திருக்கிறார்கள் பார்! உனக்குப் பரிசளிப்பதற்காக என்னவெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? நீ எப்படி இருப்பாய் என்று வீட்டிலுள்ளவர்கள் எப்படியெல்லாம்
கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் தெரியுமா..?’ - மனதால் தாய் பேசுவதை கருவில் வளரும் குழந்தை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கும். உணர்வுகளால் குழந்தையைத் தொட தாய்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அனுபவத்தை எந்தப் பெண்ணும் தவறவிடக் கூடாது. இந்தச் சிறிய கவனிப்பு குழந்தையின் பண்பை ஒழுங்குபடுத்தும்.//
மேலே உள்ள எல்லாமே சூப்பர் என்றாலும்....இது...............நானும் follow செய்தது
நாரதர் சொல்வதை ப்ரஹல்லாதனும், அர்ஜுனன் சொன்னதை அபிமன்யுவும் கேட்கலையா என்று நான் அந்த காலத்திலேயே வயற்றில் இருக்கும் 'கிருஷ்ணா' விடம் இப்படி இப்படி இருக்கணும் என்று சொல்வேன்
it works
‘செல்லம் கொடுப்பது’ குழந்தைகள் மீது காட்டும் மிகை அன்பு. கருவில் இருக்கும்போதே குழந்தையுடன் உரையாட வேண்டியது அவசியம். ‘உன் வருகைக்காக யாரெல்லாம் காத்திருக்கிறார்கள் பார்! உனக்குப் பரிசளிப்பதற்காக என்னவெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? நீ எப்படி இருப்பாய் என்று வீட்டிலுள்ளவர்கள் எப்படியெல்லாம்
கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் தெரியுமா..?’ - மனதால் தாய் பேசுவதை கருவில் வளரும் குழந்தை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கும். உணர்வுகளால் குழந்தையைத் தொட தாய்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த அனுபவத்தை எந்தப் பெண்ணும் தவறவிடக் கூடாது. இந்தச் சிறிய கவனிப்பு குழந்தையின் பண்பை ஒழுங்குபடுத்தும்.//
மேலே உள்ள எல்லாமே சூப்பர் என்றாலும்....இது...............நானும் follow செய்தது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|