புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
81 Posts - 67%
heezulia
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
1 Post - 1%
viyasan
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
273 Posts - 45%
heezulia
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
18 Posts - 3%
prajai
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_m10பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 4:45 pm

பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Jinna2ஒற்றைப்படையாக பாகிஸ்தானை உருவாக்கியவர் என்று மட்டுமே நம்மால் அறியப்படுகிற ஜின்னா சுவையான முரண்பாடுகளின் ஒட்டுமொத்த கலவை. இஸ்லாம் என்கிற மதத்தின் பெயரால்ஒரு நாட்டை கட்டமைத்த அவர் மதப்பற்றாளர் எல்லாம் இல்லை. மது அருந்துவார்,உருது ஒழுங்காக பேச வராது அவரே உண்மையில் குஜராத்தி ! காந்தி படித்த அதே சட்டக்கல்லூரியில் தான் அவரும் படித்தார். பன்றிக்கறியும் சாப்பிடுவார் என்பார்கள்; ''தொழுகை எல்லாம் பெரும்பாலும் செய்யவே மாட்டார்.“குரானில் ஜின்னாவை விட எனக்கு அதிகமான வாசகங்கள் தெரியும் !” என்று காந்தி சொல்கிற அளவுக்கு தான் மதத்தின் மீது அவருக்கு இருந்த பற்று.

ஜின்னா ஷியா முஸ்லீம் குடும்பத்தில் குஜராத்தில் வணிகக்குடும்பத்தில் பிறந்தார். லிங்கன்ஸ் இன்னில் சட்டம் படித்துவிட்டு மிகப்புகழ் பெற்ற வழக்கறிஞராக மாறினார் அவர். பாம்பேவில் நடந்த முதல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். கோகலே மற்றும் தாதாபாய் நவ்ரோஜி எனும் இருவரின் கவனத்தையும் ஈர்த்தார். தேசியத்தை தூக்கிப்பிடித்த ஜின்னா முஸ்லீம் லீகில் ஆரம்ப காலங்களில் சேரவில்லை. அதன் மதவாத போக்கை உண்மையில் கண்டித்தார் அவர். திலகருக்கு எதிராக ஆங்கிலேய அரசு தொடுத்த வழக்கில் ஆஜராகி அவருக்காக சிறப்பாக வாதாடினார்.‘முஸ்லீம் கோகலே !’ என்று பட்டம் கொடுக்கிற அளவுக்கு அவரின் பணிகள் இருந்தன. “இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்கான தூதர்” என்று சரோஜினி நாயுடு போற்றுகிற அளவுக்கு செயல்பட்டார் .

மின்டோ-மார்லி சீர்த்திருத்தத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இம்பீரியல் சட்ட கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கே காந்தியின் தென் ஆப்ரிக்க போராட்டத்தை ஆதரித்து பேசினார். முஸ்லீம் லீக் கட்சியின் மதவாத போக்கை எதிர்த்து தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் வசம் கட்சி வந்திருந்தது ; ஜின்னா அதனால் இரண்டு கட்சிகளிலும் உறுப்பினராக இருந்தார்.

ஹோம் ரூல் இயக்கத்தின் போராட்டங்களில் தளபதியாக செயல்பட்டார். தனித்தனி தொகுதிகள் என்பதை எதிர்த்தார் ஜின்னா ,இந்துக்களும்,இஸ்லாமியர்களும் தனித்தனி அங்கங்கள் இல்லை என்று தெளிவாக பேசினார். ஆனால்,காங்கிரஸ் மற்றும் லீக் ஒப்பந்தம் லக்னோவில் கையெழுத்து ஆன பொழுது தனித்தொகுதிகள்,மத ரீதியான இட ஒதுக்கீடு ஆகியவற்றை காங்கிரஸ் ஏற்க செய்தார். காந்தி, காங்கிரசின் போராட்ட முறையை அமைதி வழிக்கு திருப்பியதை ஜின்னாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்ட ரீதியான போராட்டம் தேவை என்று அவர் சொன்னார்; சட்டத்தை உடைக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். நாக்பூர் காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மேடையை விட்டு அவரைத்தள்ளியது அவரைக்காயப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.

இதுவரை இஸ்லாமியர்களும்,இந்துக்களும் இணைந்திருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்த ஜின்னா இஸ்லாமியர்கள் தங்களை கூட்டாக இணைத்துக்கொண்டு போராட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார். சுயராஜ்ய கட்சியோடு இணைந்து கொண்டு ஆங்கிலேய அரசாங்கத்தை சட்ட சபைகளில் எதிர்த்தார்.1925இல் ஒரு இஸ்லாமிய இளைஞன்,”நான் முதலில் ஒரு இஸ்லாமியன் !” என்ற பொழுது அவனைக்கண்டித்து,”நீ முதலில் இந்தியன்;பிறகு தான் முஸ்லீம் !” என்றார். சைமன் கமிஷனை புறக்கணித்த காங்கிரசின் போராட்டத்தை ஆதரித்தார்,ஆனால்,அதில் பங்குபெறவில்லை.

சைமன் கமிஷனுக்கு போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளை கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல்,வட கிழக்கு மாகாணத்தை தனி மாகாணமாக நடத்துதல்,மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல்,இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.

இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித்தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு புள்ளி அறிக்கையை உருவாக்கினார் இதற்கு இணையாக காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பது தான் அது ! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள். இன்னொரு புறம் ஹிந்து மகா சபை,சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

ஜின்னா தோல்வி முகத்தை தாங்கிக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து போய் அங்கிருந்தபடியே வட்ட மேசை மாநாடுகளில் பங்குகொண்டார். நான்கு வருடங்கள் கழித்து முஸ்லீம் லீகின் தலைவர் பதவியை ஏற்க அவரை அழைத்தார்கள். ஜின்னா இந்த்முறை காயங்களை ஆற்றிக்கொள்வது என்று முடிவு செய்துகொண்டு வந்திருந்தார். இந்திய அரசு சட்டம் மீண்டும் தேர்தல்களை கொண்டு வந்திருந்தது. தேர்தல்களில் போட்டியிட்டார்.
ஏற்கனவே பதினான்கு புள்ளி அறிக்கைகளில் இருந்த எல்லா கோரிக்கைகளையும் ஆங்கிலேய அரசு நிறைவேற்றியிருந்தது.

அடுத்த நடந்த தேர்தலில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமிய தொகுதிகளையே லீக் வென்றிருந்தது. காங்கிரசுடன் பேச வேண்டும் என்றால் காங்கிரஸ் தன்னை ஒரு ஹிந்து கட்சி என்று அறிவித்துக்கொண்டு பேசவரட்டும் என்று லடாய் போட்டார். இனிமேல் சமூக மாற்றம் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்துகொண்டு கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணத்தை குறைத்தார்,பல்வேறு மாகணங்களில் பயணம் செய்து மதவாதத்தை பரப்பினார்.

காங்கிரஸ் அரசுகள் உருதுக்கு பதிலாக ஹிந்தியை மாகாண மொழியாக அறிவித்தது,வந்தே மாதரம் பாடலை பாடியது, பசுவதையை எதிர்த்து சட்டங்கள் இயற்றப்பட்டது எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக ஜின்னா மாற்றிக்கொண்டார். அல்லா மற்றும் குரானின் பெயரால் இயங்குங்கள்; இந்து அரசை அமைக்க பார்க்கும் காஃபிர்களின் சதிக்கு பலியாகாதீர்கள் ! என்று முழங்க ஆரம்பித்தார். லாகூர் மாநாட்டில் சிறுபான்மை என்பதை தனி நாடு என்று மாற்றிக்கொண்டார் . பாகிஸ்தான் கோரிக்கை எழுந்தது.

உலகப்போர் சமயத்தில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவு தந்தார் ஜின்னா. அப்பொழுது பாகிஸ்தான் கோரிக்கையை பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லி வைத்தார்கள் ஆங்கிலேயர்கள். வெள்ளையனே வெளியேறு என்றது காங்கிரஸ் ,”வெட்டிவிட்டு வெளியேறு !” என்று சொன்னார் ஜின்னா. காந்தியுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்,ஆனால்,ஒரு இம்மிகூட நகராமல் தன்னுடைய நிலைப்பாட்டிலேயே நிற்பார் அவர்.

“இஸ்லாமை காப்பாற்ற ஒரே வழி பாகிஸ்தான் தான் ! நாத்திகவாதிகளுக்கும்,இஸ்லாமின் பாதுகாவலர்களுக்குமான போராட்டம் இது” என்று அழுத்தி சொன்னார். நம்மையும் ஹிந்துக்கள் ஆக்கிவிடுவார்கள் என்று சொல்லி தேர்தல்களை சந்தித்தார். முஸ்லீம் தொகுதிகளை அப்படியே அள்ளியது லீக். எண்பத்தி எட்டு சதவிகித இஸ்லாமிய ஓட்டுக்களை பெற்றிருந்தது லீக். பஞ்சாப் மற்றும் வங்கத்தில் இருந்த 207 தொகுதிகளில்188 தொகுதிகளை வென்று மிரட்டியது.

கேபினெட் மிஷன் பாகிஸ்தான் என்கிற கோரிக்கையை நிராகரித்து மூன்று பிரிவாக மாகாணங்களை பிரித்துக்கொள்ளும் திட்டத்தை அறிவித்தது. அதை தங்களுக்கு சாதகமான அம்சமாக காங்கிரஸ் மற்றும் லீக் இரண்டுமே அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் . மாகாண அரசுகளிடம் முக்கியமான எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டுமே என்று கேட்டார் ஜின்னா. முடியாது என்று காங்கிரஸ் மறுத்தது.

நேரடி நாள் என்று அறிவித்து பாகிஸ்தானுக்கு போராட சொன்னார் மக்களை. மதக்கலவரங்கள் வெடித்தன. வங்கம், பஞ்சாப், பீகார் எல்லாம் ரத்தமயமானது. நிலைமை கைமீறி போவதை பார்த்தார்கள்; காந்தி ஜின்னாவையே நாட்டின் தலைவர் ஆக்கிவிடலாம் என்கிற அளவுக்கு இறங்கி வந்தார். நேருவும்,படேலும் கேட்கிற மனநிலையில் இல்லை. பிரிவினையை மவுன்ட்பேட்டன் முடித்துவைத்தார்.

ஜின்னா ஒரே ஒரு ஸ்டெனோ, டைப்ரைட்டரை வைத்து தன்னுடைய தேசத்தை சாதித்தார். அதற்கு பிறகு பாகிஸ்தானை ஒரு மதச்சார்பற்ற தேசமாக கனவு கண்டார்,”இங்கே அரசு ஒரு மதத்துக்காக இயங்காது. பாகிஸ்தான் மதச்சார்பற்ற தேசமாகவே இருக்கும் !” என்று சொன்னார் அவர். ஆனால்,அவரின் மரணத்துக்கு பிறகு அவர் வளர்த்த மதவாதம் பாகிஸ்தானை இஸ்லாமிய தேசமாக்கியது. மும்பையில் தனக்கிருந்த வீட்டை ஜின்னா விற்கவில்லை; இந்த பிரிவினை நிரந்தரமானதில்லை என்றே அவர் நம்பினார். ஆனால்,அது காலத்துக்குமான பிரிவுக்கோடாக ஆகிப்போனது !

[thanks]விகடன்[/thanks]



பாகிஸ்தானை உருவாக்கியவர் ஜின்னா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக