புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 5:23 pm

First topic message reminder :

காஷ்மீரில் 50,000 பேர் மீட்பு: வெள்ளம் வேகமாக வடிவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம்

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர்.

சீறிப்பாயந்த ஜீலம் நதி காஷ்மீரையே புரட்டிப்போட, தெற்கு, மத்திய காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் பல வெள்ளத்தல் சூழப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மத்திய, தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மட்டும் 20 ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இந்த முகாம்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகாம்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பான்மை பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்டுள்ளதால், போதிய அளவு உணவுப் பொருட்கள் இல்லாமல் ராணுவத்தினர் குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 1000 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்" என்றார்.

50,000 பேர் மீட்பு

காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மாநிலமே கடும் பாதிப்புக்குள்ளானது.

தற்போது அங்கு மழை குறைந்துள்ளது, வெள்ளம் வடிந்து வருகிறது. இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே நீரில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். அப்போதுதான் பலி எண்ணிகையை துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவந்த பலர் தாங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர். தாங்கள் மீட்கப்படும்போது அப்பகுதியில் மற்றும் சிலர் எழுப்பிய அபயக்குரல் அடங்கியது என்றும், எனவே அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர் மீது தாக்குதல்:

இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய பேர் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மீட்புப் படை வீரர் ஒருவரது கை பலமாக பாதிக்கப்பட்டது. காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மீட்புக் குழுவினர் மீது மக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்திவருவது வருத்தமளிக்கிறது. மீட்புக்குழுவினருக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.

இதற்கிடையில் ஜம்மு - காஷ்மீரில் நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்கை காஷ்மீர் செல்லுமாறு அரசு பணித்துள்ளது.




ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 10:50 am

thesa wrote:
krishnaamma wrote:அரசியல் எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை இங்கு சோகம்


உண்மைதான்..
மேற்கோள் செய்த பதிவு: 1086416

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:12 am

வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரம்: இதுவரை ஒரு லட்சம் பேர் மீட்பு

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை சுமார் 1 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் உதவிகளை நாடி தவித்து வருகின்றனர். இது, கடந்த 109 ஆண்டுகளில் காணாத இயற்கைப் பேரழிவாக கருதப்படுகிறது.

முப்படைகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் முழு கவனம் திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தலைநகர் ஸ்ரீநகரில் 21,000 வீரர்கள், ஜம்முவில் 9,000 வீரர்கள் என மொத்தம் 30,000 ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவ உதவிகளை நாடும் மக்களுக்காக, 80 மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 21,500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவு பொருட்கள், போர்வைகள், தண்ணீர் பாட்டில்கள் அனைத்தும் ஹைதராபாத், பரோடா, அமிர்தசரஸ், அம்பாலா மற்றும் டெல்லியிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றைச் ஏற்றி செல்லும் பணிகளில் 930 முறை நமது ஹெலிகாப்டர்களும் விமானங்களும் ஈடுபட்டன.

இதன் மூலம் சுமார் 1,237 டன்கள் நிவாரணப் பொருட்கள், காஷ்மீர் மக்களுக்காக விமானப்படையின் மூலம் மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. மக்களை ஏற்றி வருவதற்கு படகுகள் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிய வந்தவுடன், ராணுவத்தின் மூலம் 90 படகுகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர நமது ராணுவத்தால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் 19 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுபுறம், மழை - வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட எல்லையோர சாலைகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் அவசர நிலையில் சுமார் 5,700 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காஷ்மீர் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவசர நிலையில் அளித்திட நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.



ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:27 am

பேரவலம்!

இதுவரை சந்தித்திராத அளவிலான பேரிடரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எதிர்கொள்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் இப்படியொரு மோசமான வெள்ளம் அந்த மாநிலத்தைத் தாக்கியதில்லை. ஏறத்தாழ நான்கு லட்சம் பேர் வீட்டின் கூரையிலும் மொட்டை மாடியிலும் நிவாரணம் வராதா, தாங்கள் காப்பற்றப்பட மாட்டோமா என்று காத்துக் கிடக்கும் அவலநிலை நிலவுகிறது.

முதலில், தொடர்மழையால் ஜம்மு பகுதியில் சில பகுதிகள் மட்டும்தான் பாதிக்கப்பட்டன. இப்போது ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கும், எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. பருவ மழையின் காரணத்தால் ஜீலம் நதி கரையை உடைத்துக் கொண்டு பெருகிப் பரவியதால், சில பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் இரண்டாவது தளம்வரை தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகர் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் போதாதென்று, ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவதால் நிலைமை மேலும் மோசமாகிவிட்டிருக்கிறது. விமான நிலையம், முக்கியமான ராணுவ, நிர்வாக அமைப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் எல்லாமே வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதால், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவதுகூட இயலாத நிலை காணப்படுகிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத் தலைநகரும் இதுபோல வெள்ளத்தால் இவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டது இல்லை.

வெள்ளத்தின் சீற்றம் எல்லைகளைக் கடந்து காஷ்மீரத்தைத் தாக்கி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காணப்படுவதைவிட அதிகமான பாதிப்பு, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதிகளில் காணப்படுகிறது. பாகிஸ்தானிலுள்ள மேற்குப் பஞ்சாப் பகுதியும் இந்த வெள்ளச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

திடீர் வெள்ளப்பெருக்குதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்றாலும், தட்பவெப்ப நிலையைத் துல்லியமாகத் தெரிவித்து எச்சரிக்கும் விண்வெளிக் கோள்கள் போன்ற தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், இப்படியொரு பேராபத்து ஏற்பட இருப்பது எப்படித் தெரியாமல் போயிற்று என்கிற கேள்வி எழாமல் இல்லை.

இமயமலையிலிருந்து உருவாகும் நதிகளில் அடிக்கடி இதுபோல வெள்ளப் பெருக்குகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில், ஏன் முறையான எச்சரிக்கை அமைப்புகள் செயல்படுவதில்லை என்று தெரியவில்லை.

ஏறத்தாழ 2,500-க்கும் அதிகமான கிராமங்களும், பல நகரங்களும் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி விட்டிருக்கின்றன. அழிந்து போய்விட்ட மானிட உயிர்களும், விலங்குகளும் எத்தனை, நாசமாகிவிட்ட பயிர்களும், உடைமைகளும் எவ்வளவு என்றெல்லாம் கணக்குப் பார்க்கும் நேரமல்ல இது. எப்படி நிவாரணத்தை முடுக்கிவிட்டு எஞ்சி இருப்பவர்களை காப்பாற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச் செல்வது, ஏற்பட்டிருக்கும் பேரழிவை எப்படி ஈடுகட்டி அனைவருக்கும் மறுவாழ்வளிப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாகத் தகர்ந்திருக்கும் நிலையில், பழைய நிலைக்கு ஜம்மு-காஷ்மீரை உருவாக்கப் பல லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படப் போகிறது.

இந்தப் பேரிடருக்கு நடுவிலும் ஒரு நம்பிக்கை துளிர்க்கிறது. நிவாரணப் பணிகள் முழுமையாகவும், விரைவாகவும், நேர்மையாகவும் நடைபெற்றால், காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை இந்தியா பெற முடியும். இயற்கைச் சீற்றத்திற்கு முன்னால், எல்லைகள் செயலற்றுப் போய்விடுகின்றன என்கிற உண்மையை அவர்கள் புரிந்து கொண்டால், அதுவேகூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தங்களுக்கு ஏற்படும் பேரழிவை இந்தியா போன்ற பெரிய தேசத்தால் மட்டுமே எதிர்கொண்டு ஈடுகட்ட முடியும் என்பது புரிந்தால், பிரிவினை கோஷம் வலுவிழந்து விடும்.

அதேபோல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் வெள்ளச் சீற்றத்தால் ஏற்பட்ட பேரிடரை எதிர்கொள்ள எல்லைகளைக் கடந்து உதவ முன்வந்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். 2005இல் இந்தியா அளித்த நிவாரணப் பொருள்களையும், 2010இல் இந்தியா அளித்த நிவாரண நிதியையும் நிராகரித்த பாகிஸ்தான், இப்போது நேசக்கரம் நீட்ட முன்வந்திருப்பதும், அனுதாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளத் தயாராகி இருப்பதும், வெள்ளச் சேதத்துக்கு இடையில் ஏற்படும் ஆறுதல்.

முன்பு உத்தரகண்டில் கங்கை. இப்போது காஷ்மீரத்தில் ஜீலம். நதிகள் பெருக்கெடுத்துப் பேரழிவை ஏற்படுத்துகின்றன என்பதல்ல உண்மை. இயற்கையை நாம் சீண்டி விளையாட முற்பட்டிருப்பதால், அது வெள்ளப் பெருக்காகச் சீற்றம் கொள்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பேரவலம்!




ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 8:58 pm

காஷ்மீருக்காக பெருந்தன்மையுடன் நிதி அளிப்பீர்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு மக்கள் பெருந்தன்மையுடன் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

"எனது சக மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், ஜம்மு - காஷ்மீரில் எதிர்பாராத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நிறைய எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்துள்ளனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களும் உள்கட்டமைப்புகளும் அழிந்து போயுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு இத்தகைய நெருக்கடி நிலையில், அவர்கள் வாழ்க்கை மீண்டும் புனரமைக்கப்பட நமது உதவி பெரிதும் தேவைப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட நமது சகோதரர், சகோதரிகளுக்கு இத்தகைய நெருக்கடி தருணத்தில் தோள் கொடுப்பது நமது கடமையாகும். ஆகவே, பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு நாட்டு மக்கள் அனைவரும் பெருந்தன்மையுடன் நிதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மோடி.

இதற்கான தொகையை காசோலை, டிராஃப்ட் அல்லது ரொக்கம் ஆகிய முறைகளில் அனுப்பலாம். பிரதமர் அலுவலக இணையதளம் மூலமும் நிதியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இதற்காக டிராஃப்ட் எடுத்தால் எந்த விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை ஜம்மு - காஷ்மீர் நிவாரணத்திற்காக அளித்ததையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.



ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 13, 2014 5:46 am


வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படும் அவலம்

காஷ்மீரில் பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளைவிட்டு வெளியேற தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக உயிர்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, மழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த சம்பவங்களால் பலியானோர் எண்ணிக்கை 200-கும் மேல் அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 20,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முப்படையினரும் இரவும் பகலுமாக மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் ஒரு லட்சம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளைவிட்டு வெளியேற தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீநகரில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்காரணத்தால் மக்கள் மீட்பு படையினரோடு பாதுகாப்பான இடத்திற்கு செல்லக்கூட தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 5:12 pm

கார்ப்பரேட் நிறுவன முன்னேற்றத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நதிகள் இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்தலாம்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 16, 2014 3:25 am

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு காஞ்சி காமகோடி பீடம் ரூ.10 லட்சம் நிதியுதவி

காஞ்சி காமகோடி பீடம் சென்னபூரி பக்த ஜன சமாஜம் ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பேரழிவுக்கு நாடு முழுவதிலிருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்ரீகாஞ்சி மடம் சார்பில் ரூ.10 லட்சம், பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து பக்தர்களால் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 16, 2014 3:26 am

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை, தன்னுடைய கிரிக்கெட் கிட்டை முதல் மாடிக்கு தூக்கிச்சென்றது தான். அதன் பின் பதினோரு நாட்களுக்கு தான் அவதிப்பட்டது குறித்து அவரே கூறியதாவது; சமூகத்திலிருந்து என்னை முற்றிலும் விலக்கியதுடன் தொலைபேசி மற்றும் செல்போன்களும் வேலை செய்யவில்லை. இண்டர்நெட் இணைப்பும் சிடைக்கவில்லை. நானும் எனது பெற்றோரும் உதவிக்கு யாருமின்றி தவித்து வந்தோம்.

தரைதளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் நாங்கள் முதல் தளத்திற்கு வந்துவிட்டோம். தற்போது நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று எனது நண்பர்கள் மற்றும் ஏனையோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரசூல் கூறினார். அம்மாநில ரஞ்சி அணியின் தலைவராக உள்ள ரசூல், இந்த வருடம் தான் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் செல்போன் இணைப்பு வேலை செய்வதாக ரசூல் கூறியுள்ளார். ஆனால் தன்னையும், தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரையும் காணவில்லை என்ற போலியான செய்தி தனக்கு கிடைத்ததால் தான் வெளியுலகை தொடர்பு கொண்டதாக ரசூல் தெரிவித்தார்.



ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 16, 2014 3:26 am

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர் பர்வேஸ் ரசூல்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை, தன்னுடைய கிரிக்கெட் கிட்டை முதல் மாடிக்கு தூக்கிச்சென்றது தான். அதன் பின் பதினோரு நாட்களுக்கு தான் அவதிப்பட்டது குறித்து அவரே கூறியதாவது; சமூகத்திலிருந்து என்னை முற்றிலும் விலக்கியதுடன் தொலைபேசி மற்றும் செல்போன்களும் வேலை செய்யவில்லை. இண்டர்நெட் இணைப்பும் சிடைக்கவில்லை. நானும் எனது பெற்றோரும் உதவிக்கு யாருமின்றி தவித்து வந்தோம்.

தரைதளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால் நாங்கள் முதல் தளத்திற்கு வந்துவிட்டோம். தற்போது நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று எனது நண்பர்கள் மற்றும் ஏனையோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ரசூல் கூறினார். அம்மாநில ரஞ்சி அணியின் தலைவராக உள்ள ரசூல், இந்த வருடம் தான் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது தனது வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் செல்போன் இணைப்பு வேலை செய்வதாக ரசூல் கூறியுள்ளார். ஆனால் தன்னையும், தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரையும் காணவில்லை என்ற போலியான செய்தி தனக்கு கிடைத்ததால் தான் வெளியுலகை தொடர்பு கொண்டதாக ரசூல் தெரிவித்தார்.



ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக