புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_m10ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 5:23 pm

First topic message reminder :

காஷ்மீரில் 50,000 பேர் மீட்பு: வெள்ளம் வேகமாக வடிவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம்

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர்.

சீறிப்பாயந்த ஜீலம் நதி காஷ்மீரையே புரட்டிப்போட, தெற்கு, மத்திய காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் பல வெள்ளத்தல் சூழப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மத்திய, தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மட்டும் 20 ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இந்த முகாம்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகாம்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பான்மை பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்டுள்ளதால், போதிய அளவு உணவுப் பொருட்கள் இல்லாமல் ராணுவத்தினர் குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 1000 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்" என்றார்.

50,000 பேர் மீட்பு

காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மாநிலமே கடும் பாதிப்புக்குள்ளானது.

தற்போது அங்கு மழை குறைந்துள்ளது, வெள்ளம் வடிந்து வருகிறது. இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே நீரில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். அப்போதுதான் பலி எண்ணிகையை துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவந்த பலர் தாங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர். தாங்கள் மீட்கப்படும்போது அப்பகுதியில் மற்றும் சிலர் எழுப்பிய அபயக்குரல் அடங்கியது என்றும், எனவே அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர் மீது தாக்குதல்:

இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய பேர் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மீட்புப் படை வீரர் ஒருவரது கை பலமாக பாதிக்கப்பட்டது. காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மீட்புக் குழுவினர் மீது மக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்திவருவது வருத்தமளிக்கிறது. மீட்புக்குழுவினருக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.

இதற்கிடையில் ஜம்மு - காஷ்மீரில் நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்கை காஷ்மீர் செல்லுமாறு அரசு பணித்துள்ளது.




ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 6:58 pm

சிவா wrote:
வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது ஒருபுறமிருக்க, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

வெள்ள பாதிப்பினால் துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் நவாஸ் ஷெரிப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது:-

“பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பினால் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும், துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது எனவும் நீங்கள் எனக்கு எழுதியிருந்த நேற்றைய கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையோரம் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இந்த வெள்ளத்தினால் உயிரிழப்பும், உடமையிழப்பும் ஏற்பட்டுள்ளதையும் அறிவேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளுக்கும், நிவாரணத்துக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில்,

இயற்கை பேரிடர்களை சந்திக்கும் மனத்திறனை நமது மக்களுக்கு உண்டாக்கும் வகையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1086382

ம்.............. ஏதோ ஒத்துமையாக ஆனால் நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 10, 2014 7:01 pm

மிகவும் மனதை உருக்கும் பேரிடர் .
ராணுவத்தினர் செய்கின்ற சேவை , மிக மிக போற்றப்படவேண்டிய ஒன்று
எனது flat இற்கு அடுத்த flat கணவன் ,மனைவி இருவரும் சனி அன்று அங்கே
சென்று , மாட்டிக்கொண்டு விட்டனர் .
தீயணைக்கும் நிலையத்தில் தங்கி இருந்த அவர்களை , ஹெலிகாப்டர் மூலம்
ராணுவ முகாமிற்கு கூட்டி சென்று , அங்கே இருந்து மிலிடரி விமானம் மூலம் ,
டெல்லி கூட்டி வந்துள்ளனர் . ( இது விஷயம் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் /
சென்னை பதிப்பில் , போட்டோ வுடன் வந்துள்ளது )
ராணுவத்தினர் செயல் பெருமை பட வேண்டிய ஒன்று
ஜெய் ஜவான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 7:04 pm

இவ்வளவு வெள்ளம் வட நாட்டில்??? ஆனால் தெற்கே வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை .....என்ன முரண்பாடு பாருங்கோ...........இனியாவது நதிகளை இணைக்க முன் வருவாங்களா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 7:05 pm

T.N.Balasubramanian wrote:மிகவும் மனதை உருக்கும் பேரிடர் .
ராணுவத்தினர் செய்கின்ற சேவை , மிக மிக போற்றப்படவேண்டிய ஒன்று
எனது flat இற்கு அடுத்த flat கணவன் ,மனைவி இருவரும் சனி அன்று அங்கே
சென்று , மாட்டிக்கொண்டு விட்டனர் .
தீயணைக்கும் நிலையத்தில் தங்கி இருந்த அவர்களை , ஹெலிகாப்டர் மூலம்
ராணுவ முகாமிற்கு கூட்டி சென்று , அங்கே இருந்து மிலிடரி விமானம் மூலம் ,
டெல்லி கூட்டி வந்துள்ளனர் . ( இது விஷயம் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் /
சென்னை பதிப்பில் , போட்டோ வுடன் வந்துள்ளது )
ராணுவத்தினர் செயல் பெருமை பட வேண்டிய ஒன்று
ஜெய் ஜவான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1086396

ஆமாம் ஐயா ! ஜெய் ஜவான் !! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 10, 2014 8:26 pm

krishnaamma wrote:இவ்வளவு வெள்ளம் வட நாட்டில்??? ஆனால் தெற்கே வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை .....என்ன முரண்பாடு பாருங்கோ...........இனியாவது நதிகளை இணைக்க முன் வருவாங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1086397

நதிகள் இணைப்பு அவ்வளவு சுலபமான காரியம் இல்லை . பூகோளம் சம்பந்தப்பட்டது .சமவெளி,பள்ளத்தாக்கு ,மலைகள் , நிதி , திட்டமிடல் etc etc
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 8:40 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இவ்வளவு வெள்ளம் வட நாட்டில்??? ஆனால் தெற்கே வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை .....என்ன முரண்பாடு பாருங்கோ...........இனியாவது நதிகளை இணைக்க முன் வருவாங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1086397

நதிகள் இணைப்பு அவ்வளவு சுலபமான காரியம் இல்லை . பூகோளம் சம்பந்தப்பட்டது .சமவெளி,பள்ளத்தாக்கு ,மலைகள் , நிதி , திட்டமிடல் etc etc
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1086405

ஈசி இல்லைத்தான் ஐயா, சீனப்பெருஞ்சுவரை விடவா கஷ்டம்? சொல்லுங்கோ.....சுதந்திரம் வாங்கி 60 வருஷத்துக்கும் மேலாச்சு.............பாரதி எப்பவோ பாடிட்டார்..............நமக்கு ஒத்துமை இல்லை...........அவங்களுக்கு வெள்ள நிவாரணம்.............இவங்களுக்கு வறட்சி நிவாரணம் என்று தந்தால்தானே சுவிஸ் வங்கி இல் பணம் சேரும்........யாருக்கும் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து விட்டால்??????????????அரசியல் எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை இங்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Sep 10, 2014 9:28 pm

krishnaamma wrote:அரசியல் எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை இங்கு சோகம்


உண்மைதான்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 1:15 am

மீட்பு பணியில் ஒமர் அரசு எங்கே? மக்கள் கோபம்

ஸ்ரீநகர்: மீட்பு பணியில் ராணுவத்தினரை மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும், மாநில அரசு இல்லை என ஸ்ரீநகர் மக்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், ஸ்ரீநகரில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. பல அடி தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஒமர் அப்துல்லா உணவு பொருட்களை விநியோகம் செய்தன. இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு பின் கடுமையான வெள்ளம் பாதித்த காஷ்மீரில், 6 நாட்களுக்கு பின் சில பகுதிகளில் தற்போது தான் நிவாரண பொருட்கள் கிடைத்துள்ளதாக மக்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர். பலர் நிவாரண முகாம்கள் சரியில்லை எனவும் புகார் கூறியுள்ளனர். நிவாரண பணிகளில் ஈடுபடுவதில் ஒமர் அரசு தடுமாறி வருவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றியுள்ளனர். பல நாட்களாக ராணுவத்தினர் மீது குற்றம்சாட்டி வந்த மக்கள் எண்ணத்தில், அவர்கள் பற்றிய எண்ணத்தில் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ராணுவத்தினர் மீட்ட பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், மீட்பு பணியில் ராணுவத்தினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதில் ஒமர் அரசின் பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என கூறினார். இதேகருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், கனமழை துவங்குவதற்கு முன்னர், மசூதி மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அவர்கள் உயர்நிலை பள்ளிகளில் தங்க வேண்டும் என அறிவுரை வலியுறுத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பை புறக்கணித்தனர் என கூறினர்.

இதனிடையே, சட்டசபை தேர்தல் தள்ளிப்போகலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. சேதாரங்களை சரிப்படுத்தவும், மறுவாழ்வு பணிகளை துரிதப்படுத்த மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய அவகாசம் வழங்கும் வகையில், தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.



ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 1:17 am

காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 76,500 மக்களை மீட்ட ராணுவம்

புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 76,,500 பேரை ராணுவத்தினர் மீட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில், கடந்த சில நாட்களாக, மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள், தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுவரை, 200 பேர் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களின் வீடுகளும், உடைமைகளும் பறிபோய் விட்டன; ஏராளமானோரை காணவில்லை.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவப் படையினர், போலீசார் உள்ளிட்ட, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக்கெட், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஷ்மீரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தவர்களில் 76, 500க்கும் மேற்பட்டவர்களை ராணுவத்தினர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 80 ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ விமானப்போக்குவரத்து அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என கூறியுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், 807 டன் நிவாரண பொருட்களை விமானப்படையினர் விநியோகம் செய்துள்ளனர். தண்ணீர் பாட்டீல்கள் மற்றும் உணவுப்பொருட்களை ராணுவத்தினர் விநியோகம் செய்து வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், இதுவரை 2,10,000 லிட்டர் தண்ணீர், 2.6 டன் பிஸ்கட், 7 டன் குழந்தைகளுக்கான உணவு மற்றும் 31 ஆயிரம் உணவுப்பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.தொலை தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த, 9 சாட்டிலைட் போன்களை மாவட்ட நிர்வாகத்திற்கு ராணுவம் வழங்கியுள்ளது. கார்கிலில் இருந்து ஸ்ரீநகரிலிருந்து பதாமி பாக் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள, 30 ஜெனரேட்டர்கள் வசதியுடன் மொபைல் போன் சார்ஜர்களையும் விநியோகம் செய்துள்ளது. கடைசி ஆள் மீட்கப்படும் வரை மீட்பு பணி தொடரும் என ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இதனிடையே,காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவ தளபதி ஆய்வு: வெள்ளம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாத் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,காஷ்மீரில் ராணுவத்தினர் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

சவாலான பணி: ஒமர்: காஷ்மீரில் வெள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். மேலும் அவர், அனைத்து மக்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாகவும், மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒமர் கூறியதாவது: ஸ்ரீநகர், தண்ணீரில் மிதக்கிறது. அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. பல பகுதிகளில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் வசதியும் சீராகி வருகின்றன.மாநிலத்தை மறு சீரமைப்பது மிகவும் சவாலானது. எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கணித்ததை விட வெள்ள நீரின் அளவு பெருக்கெடுத்து ஓடியது. மாநிலத்தில் இலக்கு மாறியுள்ளது எனவும், மக்களுக்கு உணவுப்பொருட்களை சப்ளை செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது என கூறினார்.



ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 1:17 am

thesa wrote:
krishnaamma wrote:அரசியல் எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை இங்கு சோகம்


உண்மைதான்..

வருக @thesa அவர்களே! நலமா?



ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக