புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
1 Post - 50%
heezulia
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
284 Posts - 45%
heezulia
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
20 Posts - 3%
prajai
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
7 Posts - 1%
mruthun
104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10104-க்கு கால் பண்ணுங்க! Poll_m10104-க்கு கால் பண்ணுங்க! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

104-க்கு கால் பண்ணுங்க!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 12:48 pm

மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நான் ஒதுங்கிய இடம் கோஷா ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும் அரசினர் கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை. உள்ளே 108 ஆம்புலன்ஸுகள் அடிக்கடி போய் வருவதைப் பார்த்து, 'ஏதோ எமர்ஜென்ஸி' என்று உள்ளே நுழைந்தேன். அந்த மருத்துவமனை வளாகத்தில்தான், தமிழகத்தின் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸின் கன்ட்ரோல் ரூம் இருக்கிறது. தமிழகம் முழுவதும் 684 ஆம்புலன்ஸ்கள் ஓடுகின்றன.
104-க்கு கால் பண்ணுங்க! P27b
அங்கிருந்த டெஸ்கில் 50 பேர் பரபரவென பேசியபடி இருந்தனர். பொதுமக்கள் 108-க்கு டயல் செய்ததும் அவர்களின் கால் இந்த கன்ட்ரோல் ரூம் போனுக்குத்தான் வருகிறது. அவர்களிடம் விவரங்களைக் கேட்டு உடனடியாக அந்த ஏரியாவுக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸுக்குத் தகவல் அனுப்பி வைப்பது இவர்களின் வேலை. இங்கே டாக்டர்கள் டெஸ்க்கும் இருக்கிறது. ஆம்புலன்ஸில் இருப்பவர்களின் நிலைமையைக் கேட்டு டாக்டர்கள் டிப்ஸ் கொடுக்கிறார்கள். இப்படியாக, 160 பேர் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஆத்தூரிலிருந்து ஒரு போன்...

''இங்கே டோல்கேட் பக்கத்துல ஒரு பஸ்ஸும் லாரியும் மோதி விபத்து. பஸ்ஸில் இருக்கிறவங்க வலியால கத்திட்டு இருக்காங்க. உடனே ஆம்புலன்ஸை அனுப்புங்க..''

அதையடுத்து, அருகில் இருந்த நான்கு ஆம்புலன்ஸுகளை விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமானர்கள்.

அதே நேரம் தஞ்சாவூரிலிருந்து போன்...

''ஐயா... என் பொண்ணு தீ வைச்சுகிட்டா. உடம்பு முழுக்க தீக்காயம். துடிச்சிட்டு இருக்கா. எப்படியாவது காப்பாத்துங்க''

அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டு, வேனில் இருந்த ஊழியரிடம், கன்ட்ரோல் ரூமில் இருந்து விசாரிக்கிறார்கள்.
104-க்கு கால் பண்ணுங்க! P26
''70% தீக்காயம். என்ன செய்யலாம்?''

''உடனே, சலைன் வாட்டர் ஏற்றுங்கள். எவ்வளவு சீக்கிரமாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடியுமோ கொண்டு போங்கள்''- டாக்டர் அட்வைஸ் கொடுக்கிறார்.

கடலூரிலிருந்து போன்...

''சார்.. நெஞ்சுவலிக்குது. மூச்சு வாங்குது. வியர்த்துக்கொட்டுது. வலது கையைத் தூக்கவே முடியலை!''- பாதிக்கப்பட்டவரே பேசுகிறார்.

இந்தத் தகவல் சொன்னவரின் முகவரிக்கு ஆம்புலன்ஸ் விரைகிறது.

''வென்டிலேட்டர் இணைத்துவிட்டோம். இதயத்துடிப்பு தாறுமாறாக இருக்கிறது. ஆஸ்பத்திரியை நெருங்கிவிட்டோம்'' என்று ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தருகிறார்.

சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்தரியில் இருந்து அவசர அழைப்பு...

''தலையில் காயம். அவரை உடனடியாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும். உடனே வரவும்'' என்று போன் வர, 108 கன்ட்ரோல் ரூம் வளாகத்தில் நின்ற ஆம்புலன்ஸ் நீல விளக்குகள் ஒளிர... சைரன் எழுப்பியபடி கிளம்பியது. நானும் தொற்றிக்கொண்டேன்.
104-க்கு கால் பண்ணுங்க! P27a
வேனில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் நாகேந்திரன், ''இப்படித்தான் சார்... நேத்து பீச் ரோட்டுல பைக் ஸ்கிட் ஆகி ஒருத்தர் விழுந்து கிடந்தாரு. முகமெல்லாம் சிதைஞ்சு கிடந்துச்சு. தூக்கிட்டுப்போய் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அவரோட குடும்பத்தை நினைச்சா கஷ்டமாயிருக்கு. அவரை நம்பி எத்தனை ஜீவன் இருக்கோ?'' என்றார்.

வேன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது. ஒரு இளைஞர் நினைவிழந்து கிடந்தார். அருகில் அவரது குடும்பத்தினர் பதற்றத்துடன் நின்றிருந்தனர்.

''ஐயா... எங்க பையன் பேரு ராஜன். 17 வயசுதாங்க ஆகுது. கொஞ்சம் முன்னாடி, பைக் ஆக்ஸிடென்ட். மூக்குல ரத்தம் வருது. தலைக்காயமா இருக்கு. இங்கே பார்க்க முடியாதுன்னு சொல்றாங்க...'' என்று சொல்லி கதறினர்.

ஸ்ட்ரச்சரில் படுக்கவைத்து வேனில் ஏற்றினர். ஆம்புலன்ஸின் பின்புறம் மினி எமர்ஜென்சி வார்டு இருந்தது. ஹார்ட் அட்டாக், தலைக்காயம், உடல் உறுப்புகள் துண்டானால் அவற்றைப் பாதுகாக்கப் பெட்டி என்று ஏகப்பட்ட உபகரணங்கள் தயார் நிலையில் இருந்தன. ராயப்பேட்டை டூ பொது மருத்துவமனை செல்லும் வழியில், இளைஞரின் உடல்நிலை குறித்து கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கொடுத்தபடி இருந்தனர்.

ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நுழைந்தது. நான் சென்ற ஆம்புலன்ஸில் இருந்த இளைஞரை எமர்ஜென்சி வார்டுக்குள் ஸ்ட்ரச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு ஓடினார்கள். சென்னை மற்றும் புறநகர், வடமாவட்டங்களில் எங்கு விபத்து நடத்தாலும் பெரிய மருத்துவமனை என்பதால் இங்கேதான் ஆம்புலன்ஸில் தூக்கி வருகிறார்கள்.
104-க்கு கால் பண்ணுங்க! P27
ரிட்டர்ன் டு கன்ட்ரோல் ரூம். கால் சென்டர் மாடியில், 104 ஹெல்த் ஹெல்ப் லைன் கால் சென்டர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 'சார், நான் கிண்டியில இருந்து பேசுறேன். காலையில இருந்து வயிறு வலியாக இருக்கு. என்ன மாத்திரை சாப்பிடலாம்?’ என்று கேட்டார் ஒருவர். அவர் பெயரையும், முகவரியையும் கேட்டு அவருக்கு ஒரு ஐ.டி நம்பர் கொடுத்தார்கள். பிறகு, அவரது லைன், டாக்டருக்கு மாற்றப்பட்டது. அவரது பிரச்னைகளை கேட்டார் டாக்டர். 'வயிறு வலிக்கு எடுத்ததும் மாத்திரை போட வேண்டாம். நார்ச் சத்துள்ள காய்கறிகள் நிறைய சாப்பிடுங்க. காலையில் ரெகுலரா வாக்கிங் போங்க... அதுக்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் டாக்டரைப் பாருங்க’ என்று வழிகாட்டினார். மருத்துவம் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் இங்கே 24 மணி நேரமும் ஆலோசனை வழங்குகிறார்கள். அதேபோல், தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏதாவது குறைபாடு என்றாலும், கிராமப்புறங்களில் மர்மக்காய்ச்சல், தொற்றுநோய் எதுவானாலும் இதே எண்ணுக்குப் போன் மூலம் தகவல் தரலாம். இதற்காகவே, 2,500 செல்போன் நம்பர்களை அங்கிருக்கும் முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்து வைத்திருக்கிறார்கள். எங்கிருந்தாவது புகார் வந்தால், இந்த செல்போனுக்கு ஹெல்ப் லைனில் இருந்து போன் போகிறது.

தென் சென்னையில் இருந்து வந்த ஒரு போன் கால்...

''எனக்கு மனசே சரியில்லை. தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன். யாருகிட்டயாவது பேசணும்போல இருந்தது. அதான் போன் பண்ணினேன்'' என்று பேச ஆரம்பித்தார் ஒருவர். அவரை சமாதானப்படுத்திப் பேசினார் கால் சென்டர் ஹேமலதா. நைஸாக அவரது சகோதரரின் போன் நம்பரை வாங்கிவிட்டார். இன்னொரு லைனில் அவரது சகோதரருக்குத் தகவல் சொல்லி அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பினார்கள். அதுவரை அவரிடம் பேச்சுகொடுத்தபடியே இருந்தார் ஹேமலதா.

கால் சென்டரில் இருப்பவர்களிடம் நான் கேட்டேன். ''ஏதாவது மிரட்டல் கால்கள் வந்திருக்கா?''

''நேத்துகூட உயர் நீதிமன்றம் அருகில் குண்டு வெடிக்கும் என்று கால் வந்தது. போலீஸுக்குச் சொல்லிட்டோம். கடலூரில் இருந்து ஒரு பெண்மணி விவகாரத்து ஆன அவரது கணவரை மாட்டிவிடுவதற்காக ஒரு தந்திரம் செய்தார். திருமண பரிசாக கணவர் வாங்கிக்கொடுத்த செல்போனில் இருந்து மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில் மாட்டிக்கொண்டார். இப்படி அடிக்கடி வரும். வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி விஷயத்தை போலீஸுக்குச் சொல்லிவிடுவோம்'' என்றனர்.

''கடந்த ஆறு வருடங்களில் 108-க்கு மூணு கோடி அவசர போன்கள் வந்துள்ளன. அவற்றில் பல லட்சம் பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். குறிப்பாக, எட்டு லட்சம் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இதில் பயணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தது மனசுக்கு நிறைவாக இருந்தது'' என்று சொன்னார்கள்.

ஆந்தை கண்ணில் நல்ல விஷயங்கள் படக்கூடாதா என்ன?


ஜூனியர் விகடன்

14 Sep, 2014


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக