புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
30 Posts - 55%
heezulia
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
21 Posts - 38%
Manimegala
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
1 Post - 2%
jairam
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
12 Posts - 4%
prajai
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்மை பரிசோதனை... Poll_c10ஆண்மை பரிசோதனை... Poll_m10ஆண்மை பரிசோதனை... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மை பரிசோதனை...


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 11:56 am

ஆண்மைக் குறைவு, இல்லற உறவில் விருப்பம் இல்லாமை போன்ற காரணங்களுக்காகக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க, திருமணத்துக்கு முன்பாகவே மணமகனுக்கு ஆண்மை பரிசோதனையைக் கட்டாயமாக்கும் சட்டத்தை ஏன் கொண்டுவரக் கூடாது? ஆண்மைக் குறைவு இருப்பதை மறைத்து திருமணம் செய்தவரை தண்டிக்க, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஏன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது?’

- மதுரை, உயர் நீதிமன்றத்தின் நீதிபதி இருக்கையில் அமர்ந்தபடி, மத்திய - மாநில அரசுகளை நோக்கி நீதிபதி கிருபாகரன் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகள், பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஓர் இளைஞருக்கும், திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மாதங்கள் உருண்ட நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், பெண்ணின் தரப்பில் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யும்படி அந்த இளைஞரின் குடும்பத்தினர் மதுரை, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்தபோது, அந்த இளைஞனுக்கு ஆண்மைக் குறைவு இருந்ததுதான் பிரச்னை என்பதும், வேறு காரணத்தைச் சொல்லி கீழ் கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் தெரியவரவேதான், அந்த அதிரடி கேள்விகளை எழுப்பியிருக்கிறார் நீதிபதி கிருபாகரன்.

வரவேற்கத்தக்க சிந்தனைகள்தான் என்று தோன்றினாலும், நடைமுறைக்கு சாத்தியமா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பிரபல 'செக்ஸாலஜிஸ்ட்' நாராயண ரெட்டியிடம் கேட்டபோது, மிகவிரிவாகவே நம்மிடம் பேசினார்.

''ஆண்மை சோதனை என்பது, ஆய்வகத்தில் மருத்துவ முறைப்படி செய்யப்படும் ஒரு பரிசோதனை. ஆனால், தாம்பத்ய வாழ்க்கை என்பது வெறுமனே ஆண்மை சார்ந்தது மட்டுமல்ல, மனதும் சமபங்காற்றும் ஓர் அற்புதம் அது. எனவே, மனதின் பங்களிப்பின்றி, உடலின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும் இந்தச் சோதனையின் முடிவை நூறு சதவிகிதம் சரி என்று சொல்ல முடியாது. அதோடு போலி சான்றிதழ்கள் நடமாடும் இந்த உலகில் இதையெல்லாம் எந்த அளவுக்கு நம்ப முடியும்? ஆக, இதை வைத்து மட்டுமே ஆண்மைக்கான சான்றிதழ் தருவது, சாத்தியமில்லாதது.

ஓர் ஆண் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அது அவர் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்கும். அப்படிப்பட்டவரை ஆண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தினால், 100 சதவிகிதம் தகுதியானவர் என்றே முடிவு வரலாம். ஆனால், அவர்களுக்கு பெண்களுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது விருப்பமான ஒன்றாக இருக்காது. அதேபோல, விந்தணுக் குறைபாடு உள்ளவர்களும், ஆண்மைப் பரிசோதனையில் தேறிவிடுவார்கள். ஆனால், அவர்களுக்கு குழந்தைப்பேறில் சிக்கல் இருக்கக்கூடும். சிலருக்கு பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்று சொல்லக்கூடிய மனம் சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம். வேலை, வெளிவட்டம் என்று எப்போதும் பரபரவென இருக்கும் இவர்களுக்குக் குடும்பத்தைப் பற்றியோ, மனைவியைப் பற்றியோ, குறிப்பாக தாம்பத்யத்தைப் பற்றியோ யோசிக்கத் தோன்றாது. அப்படியே யோசித்தாலும் அவர்களால் தாம்பத்ய உறவில் முழுமையாக ஈடுபட முடியாது. இவர்களை ஆண்மைப் பரிசோதனை செய்தால், எந்தக் குறையும் இல்லை என்றுதான் முடிவு வரும். ஆனால், இதன் அடிப்படையில் ஒரு பெண்ணை அவருக்கு மணம் முடித்தால், அந்தத் திருமணம் தோல்வியில்தான் முடியும்'' என்று சொன்ன டாக்டர், இந்தப் பிரச்னையின் இன்னொரு கோணத்தையும் பேசினார்.

''மாப்பிள்ளையை ஆண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் அதேநேரத்தில், மணப்பெண்ணும் பெண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று குரல்கள் எழலாம். ஆண்மைப் பரிசோதனை போல, பெண்மைக்கான பரிசோதனை சுலபமாகக் கண்டறியக்கூடியதல்ல. எனவே, இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் தங்களின் மனசாட்சிக்கு உண்மையாக இருந்து, ஏதேனும் பிரச்னை இருந்தால் திருமணத்துக்கு முன்பாகவே மருத்துவ ஆலோசனை பெற்று, தாம்பத்யத்துக்குத் தகுதி இருக்கிறதா, குழந்தைப்பேறுக்கு தகுதி இருக்கிறதா, இவற்றில் ஏதேனும் சிக்கல்கள் எனில் அதை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்து, அதன் பின் திருமணத்துக்குத் தயாராக வேண்டும். இந்த உணர்வுபூர்வமான விஷயத்துக்கு, சட்டம் மூலமாக தீர்வு ஏற்படுத்துவது என்பது, இயலாத காரியம்.

பெற்றோர் கட்டாயப்படுத்திய திருமணம், சூழல், விருப்பங்கள் வேறுபடுவது, உடலும் மனமும் நேர்கோட்டில் இல்லாமல் இருப்பது என ஒரு புதுமண ஜோடி முழுமையான தாம்பத்ய வாழ்க்கையை எட்டவே சில மாதங்கள் ஆகலாம். மேலும், ஆண்மை, பெண்மை பரிசோதனை முடிவுகள் நூறு சதவிகிதம் சரியாக இருந்தாலும், இருவரின் உடற்கூறு சார்ந்த விஷயங்களால் சிலருக்குக் கருத்தரிக்கத் தாமதமாகலாம். கருத்தரிக்காமல்கூட போகலாம். எனவே, திருமணமாகி சில வருடங்கள் வரை முழுமையான தாம்பத்ய உறவில் இருந்தும் கருத்தரிக்கவில்லை என்றால் மட்டுமே, மருத்துவரை நாடவேண்டும். மேலும் ஒரு திருமணம் முறிவதற்கு, தாம்பத்யம் மற்றும் குழந்தைப்பேறின்மை காரணமாக அமைவது, வெகு சில தம்பதிகளுக்கே. பெரும்பாலான பிரச்னை மனநலம் சார்ந்ததே. தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்னைகள் என்றாலும் சரி, குழந்தைப்பேறில் ஏற்படும் பிரச்னைகள் என்றாலும் சரி... 95 சதவிகிதம் சரிசெய்யக் கூடிய பிரச்னைகளே!'' என்ற டாக்டர் நாராயண ரெட்டி,
ஆண்மை பரிசோதனை... P24a(1)
''பள்ளிக்கூட அளவிலிருந்தே மாணவர்களுக்கு எல்லாவித பரிசோதனைகளையும் தொடர்ந்து செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமாக, பலவிதமான பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சைகள் மூலமாக தீர்வு காணமுடியும். இதை நிறைவேற்ற அரசாங்கம் அக்கறை காட்ட வேண்டும்'' என்று வேண்டுகோளும் வைத்தார்!

''பெண்மை பரிசோதனை அவசியமில்லை!''

ஆண்மை பரிசோதனை... P24(1)
சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா பேசியபோது, ''ஒரு பெண், 'ஆண்மைப் பரிசோதனை சான்றிதழ் வேண்டும்’ என்று கோரினால், அவளை இந்த சமூகம் திமிர்பிடித்தவள் என்ற முத்திரை குத்தி, கல்யாணச் சந்தையில் இருந்தே தூக்கி வீசிவிடும். ஆனால், இதுவே சட்டமாக்கப்படும்போது, அதை மீற வழியிருக்காது என்பதால் நீதிபதியின் இந்தப் பரிந்துரை வரவேற்புக்குரியது. ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் தப்பிக்கவும் இது வழி ஏற்படுத்தும். இதற்காக, பெண்களுக்கும் பெண்மை சோதனையைக் கட்டாயமாக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தாம்பத்யம்தான் முக்கியமே தவிர, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை'' என்றார்.

சமூக சேவகி நந்தினிஸ்ரீ இதுபற்றிப் பேசும்போது, ''மற்ற குடும்பப் பிரச்னைகளைப் போல சட்டென இந்தப் பிரச்னை வெளிப்படுத்தப்படுவதில்லை. திருச்சி பெண்ணின் வழக்கில்கூட, மேல் கோர்ட்டில்தான் உண்மை வெளிவந்திருக்கிறது. எனவே, நம் சமூக அமைப்பின் காரணமாக வெளிக்கொண்டு வர இயலாத பிரச்னையாக பல குடும்பங்களிலும் இருக்கும் இப்பிரச்னையை முளையிலேயே கிள்ளும்விதமாக, ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் நீதிபதியின் பரிந்துரை, அவசியம் சட்டமாக்கப்பட வேண்டியதுதான்!'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக