புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_vote_lcapபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_voting_barபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
பட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_vote_lcapபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_voting_barபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_vote_lcapபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_voting_barபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
பட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_vote_lcapபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_voting_barபட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம்


   
   

’பட்டைய கௌப்பணும் பாண்டியா’ திரைப்படத்திற்கு நீங்கள் அளிக்கும் மதிப்பீடு! [3Vote ]

  • ஐந்து

    00%
  • நான்கு

    00%
  • மூன்று

    133%
  • இரண்டு

    133%
  • ஒன்று

    133%

You are not connected. Please login or register

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 4:09 am

பட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் 1409850262-7592

பாண்டி என்ற மினி பஸ் ஓட்டுநர், கண்மணி என்ற நர்ஸைக் கெளப்பிய கதை தான் பட்டையக் கிளப்பணும் பாண்டியா. இதில் நகைச்சுவை மசாலா கலந்திருப்பதால், பயணம் ஓரளவு தாக்குப் பிடிக்கிறது.

வேல்பாண்டியாக விதார்த், முத்துப்பாண்டியாகச் சூரி. இருவரும் சகோதர்கள். பழனியில் ஓடும் சிற்றுந்தில் (மினி பஸ்) விதார்த் ஓட்டுநர், சூரி நடத்துநர். அந்தச் சிற்றுந்தில் தினமும் பயணிக்கும் செவிலிப் பெண் கண்மணியாக மனிஷா யாதவ். மனிஷா வரும் வரைக்கும் வண்டி பழுது என்று சொல்லி, சிற்றுந்தை நிறுத்தி வைப்பதும் அவரது பிறந்த நாளுக்காக மின்னல் என்ற சிற்றுந்தின் பெயரையே கண்மணி என்று மாற்றுவதும் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் எனப் பாடல்களை ஒலிபரப்புவதுமாக விதார்த்தின் காதல் அத்தியாயம் வளர்கிறது.

மனிஷாவுக்காக நகைச் சீட்டு எடுத்து, இரண்டு பேரும் இணைந்து பராமரிக்கும் வங்கிக் கணக்குத் தொடங்கி, மனிஷா பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு எடுத்து, தன் பெயரில் ஆயுள் காப்பீடு செய்து, அந்தப் பாலிசிக்கான நாமினியாக மனிஷா பெயரைச் சேர்த்து எனப் புதுமையாக விதார்த் தனது காதலை வெளிப்படுத்துகிறார்.

விதார்த்தின் காதலை மனிஷா மறுப்பதுடன் தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார். அது பொய் என்று தெரிய வருகிறது. அப்போதுதான் அவர் காதலை ஏற்க மறுப்பதன் காரணமும் தெரிய வருகிறது. விதவை அம்மா, கண் தெரியாத அக்கா, வீடே தன் சம்பாத்தியத்தைத் தான் நம்பியிருக்கிறது எனப் பழைய வசனத்தைப் பேசுகிறார் மனிஷா.

ஆனால், இந்தப் பின்னணியைக் கேட்டதும் விதார்த் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, நான் உங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறேன் என்றுதானே. ஆனால், அவரோ, இனிமேல் நீ இருக்கும் திசையையே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறார். மினி பஸ் வேலையையும் விட்டு விடுகிறார். இரண்டு நாள் அவரைச் சிற்றுந்தில் காணாத மனிஷா, தானே போய் எனக்கும் உங்க மேலே ஒரு இது என்கிறார். அப்புறம் என்ன, பாட்டு தான்.

மனிஷாவின் பார்வையில்லாத அக்காவுக்குத் திருமணம் செய்ய விதார்த் முயல்வதும் அவர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு ஏற்படும் சிக்கல்களும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டார்கள் என்பதும் தான் பின்பாதி கதை.

இந்தப் படத்தில் சூரியின் நகைச்சுவைக் காட்சிகள், நன்கு எடுபடுகின்றன. வழக்கம் போல ஏசுவதும் பேசுவதுமாக இருந்தாலும் அங்கங்கே முத்திரை வசனங்கள் (பஞ்ச் டயலாக்) பளிச்சிடுகின்றன. சீறும் பாம்பை நம்புடா, சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற பாட்டுக்கு ஒல்லி உடம்புடன் துள்ளி ஆடுகிறார். சந்தையில சவ்வு மிட்டாய் விக்கிறவன் மாதிரி, ஓணானுக்கு ஓவரா மேக்கப் போட்ட மாதிரி என வசனங்களில் மோனை அழகு மேலோங்கி இருக்கிறது.

சூரி மட்டுமின்றி, இமான் அண்ணாச்சி, கோவை சரளா, இளவரசு, டிபி கஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் எனப் பலரும் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் டிபி கஜேந்திரன் மருத்துவராக இருந்து நடத்தும் மருத்துவமனையில் நடக்கும் கூத்துகளும் கொள்ளைகளும் செம ரகளை. இந்த மருத்துவமனைக்காக, உள்ளுர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய, ஒரு வசனம் சொல்லு என்கிறார் கஜேந்திரன். அதற்கு, கூட்டிட்டு வாங்க, எடுத்துட்டுப் போங்க என்றும் பணம் எங்களுக்கு, பொணம் உங்களுக்கு என்றும் லொள்ளு சபா மனோகர் சொல்லும் முத்திரை வாசகம் அருமை.

சிற்றுந்தின் உரிமையாளராக இமான் அண்ணாச்சி, சிறப்பாக நடித்திருக்கிறார். எதையும் நம்பிவிடும் அவரைச் சூரி ஏமாற்றுவது மட்டுமின்றி, அவரைக் கூமுட்டை, அது இது என்று பேசுவதைத் தவிர்த்திருக்கலாம். நல்லவராக இருப்பதைத் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. பழைய படங்களில் இப்படி ஒருவரை ஏமாற்றினால், கடைசிக் காட்சிக்குள்ளாக அவரிடம் மன்னிப்பு கேட்பதாக ஒரு காட்சியாவது வரும். இப்போது அது இல்லை.

செல்பேசியில் பேசும்போது மீண்டும் மீண்டும் ரசத்தை ஊத்தட்டுமா? எனக் கேட்கும் மனைவியிடம் என் தலையில ஊத்து என இமான் அண்ணாச்சி சொல்லும்போதே ரசத்தை ஊற்றிவிடுகிறார் மனைவி. அங்கே டைமிங் கொஞ்சம் தவறுகிறது.

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவ், மெல்லிய உடல்வாகுடன் அளவாக நடித்துள்ளார். அண்மைக் காட்சிகளில், அவர் இன்னும் அழகாய் இருக்கிறார். செவிலியர் பாத்திரத்தில் நடித்துள்ளதால், எப்போதும் அவரை வெள்ளைச் சேலையிலேயே காட்டுகிறார்கள். பாடல் காட்சிகள் மட்டும்தான் விதிவிலக்கு. அவர் அறிமுகமாகும் காட்சி, இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அதுபோல், மனிஷா, விதார்த்தைக் காதலிப்பதற்கு அழுத்தமான காரணத்தை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் உருவாக்கியிருக்க வேண்டும்.

பார்வையற்ற பெண்ணை மணக்க விரும்பிய மாப்பிள்ளையாக விஜயானந்த் நடித்துள்ளார். பேருந்து நடத்துநரான இவர், தன் பணி நிரந்தம் ஆக வேண்டும் என்பதற்காக, தன் வீட்டை விற்று, லஞ்சம் கொடுத்துள்ளதாகக் காட்சி வருகிறது. அவர் எதிர்பார்த்தபடி பணி நிரந்தரம் ஆகுமா என்ற எதிர்பார்ப்பைப் படத்தின் கடைசி வரை இழுத்துக்கொண்டு செல்கிறார் இயக்குநர். கடைசியில் அவருக்குப் பணி நிரந்தரம் ஆகிவிடுகிறது. ஆனால், இப்படிக் குறுக்கு வழியில் முயல்வது தவறு என்றோ, அப்படிப் பெறும் வாய்ப்பு நிலைக்காது என்றோ காட்ட, இயக்குநர் தவறிவிட்டார்.

அருள்தேவ் இசையில் குத்துப் பாடல்கள் கிடுகிடுக்கின்றன. உருளை உருளைக் கிழங்கு, உரிச்ச உருளைக் கிழங்கு பாடல், ஓர் உதாரணம். பின்னணி இசையும் துள்ளாட்டம் போடுகிறது. அந்த நேரம் அந்தி நேரம் பாடல், மென்மையாக வருடுகிறது. மூவேந்தரின் ஒளிப்பதிவு, பழனியின் அழகைச் சிறப்பாகக் காட்டுகிறது.

சிற்றுந்தில் பெண்களை ஆபாசமாகச் செல்பேசியில் படம் எடுப்பவனை வில்லனாகக் காட்டியது நன்று. பழனியையும் ஒரு பழைய சிற்றுந்தையும் பத்து காமெடியன்களையும் வைத்துப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர். தலைப்புக்கு ஏற்றபடி, பெரிதாகப் பட்டையைக் கெளப்பவில்லை. ஆனால், இந்தப் பழனிக் கதை, பஞ்சாமிர்தமாக இல்லாவிட்டாலும் பஞ்சு மிட்டாய் அளவுக்காவது ரசிக்க வைக்கிறது.

வெப்துனியா விமர்சனம்



பட்டைய கௌப்பணும் பாண்டியா - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 09, 2014 9:50 am

எங்க ஊர்ல பட்டைன்னா, பட்டையா இருக்கிற புட்டி யத்தான் சொல்லுவோம், இத எங்க சரக்கடிப்போர் சங்க தலைவர் இன்னும் சிறப்பான விளக்கம் தருவார்னு நெனைக்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 09, 2014 11:44 am

படம் பார்க்காம எப்படி மதிப்பீடு தருவது , நீங்க முதலில் HD  அல்லது DVD சுட்டி தாங்க பார்த்துட்டு மதிப்பெண் போடுறோம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Sep 09, 2014 1:31 pm

ராஜா wrote:படம் பார்க்காம எப்படி மதிப்பீடு தருவது , நீங்க முதலில் HD  அல்லது DVD சுட்டி தாங்க பார்த்துட்டு மதிப்பெண் போடுறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1085898

அஞ்சானுக்கு தேவல தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக