புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P40b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zmziyt/images/p40b.jpg)
சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையும் (தில்லை), வைணவர்களுக்கான கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தையும் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் பெரியகோயில் என்றால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம்தான்!
சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிற பிரமாண்டமான ஆலயம். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜசோழன், தன்னை சிவபாதசேகரன் என அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டான். இவனின் மகன் ராஜேந்திர சோழன், தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாக 'சிவசரணசேகரன்’ எனும் பெயரைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டான். சைவத்தின் மீதும் சிவபெருமானின் மீதும் மாறாப் பற்றுக் கொண்ட தந்தையும் மகனும் கட்டிய ஆலயங்கள் ஏராளம்.
தாங்கள் அடைந்த பெருவெற்றியின் அடையாளமாகவோ அல்லது தங்கள் பெருமித வெற்றி தந்த ஆணவத்தின் வெளிப்பாடாகவோ அவர்கள் கோயில்களைக் கட்டவில்லை. கடவுளின் முன்னே அனைவரும் சமம் எனும் உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே ஆலயங்களை அமைத்தார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு பெரியகோயிலில், திருமாளிகைப் பத்தி எனும் திருவூற்று மண்டபத் தின் ஒரு பகுதியைக் கடைக்கால் வரை தோண்டி, அடித்தளமாக விளங்கும் முண்டுக் கற்களை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பகுதியை முழுவதுமாகச் சீரமைத்தனர். அப்போது உள்ளிருந்து எடுக்கப்பட்ட முண்டுக் கற்களில் மாமன்னன் ராஜராஜசோழனின் படைவீரர்களின் பெயர்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எதற்காக அங்கே பெயர் பொறித்தான் மன்னன்? கற்களை எவர் வழங்கினாரோ, அவர்களின் பெயரைக் கல்வெட்டுகளாகப் பொறித்து, அவர்களுக்குப் பெருமைச் சேர்த்த உயர்ந்த குணம் கொண்ட மன்னன் அவன்.
இதையெல்லாம் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஓர் உண்மை புலப்படும் நமக்கு. இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூட மன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின் பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கி ஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது.
அதேபோல், கோயிலின் திருச் சுற்று மாளிகையைப் பார்த்திருக் கிறீர்கள்தானே! அதன் அழகில் அசந்து போய்விடுவோம். அத்தனை அழகு; அத்தனை பிரமாண்டம்! அவன் நினைத்திருந்தால், அக்கா குந்தவை நாச்சியார் பெயரில், தன் மனைவியர் பெயரில், மகன் பெயரில், ஏன்... தன் பெயரில்கூட இந்தத் திருச்சுற்று மாளிகையைச் சொல்லியிருக்கலாம். ஆனால், தன் சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் பெயரில் திருச்சுற்று மாளிகையை அமைக்கச் செய்தான். இந்தத் தகவலை கோயிலில் உள்ள தூண் ஒன்றில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான். அதாவது, சோழ தேசத்தின் மிக முக்கியமான கோயிலாக மட்டுமின்றி, உலகமே வியந்து பார்க்கும் ஆலயத்தின் கட்டுமானத்தில், அதன் பெருமை யில் அனைவரின் பங்களிப்பும் பெயர்களும் இருக்கவேண்டும் என்று பரந்த மனத்துடன் யோசித்துச் செயல்பட்டிருக்கிறான், மன்னன்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P40](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zmziyt/images/p40.jpg)
அதேபோல், இன்னொரு சிலிர்ப்பான விஷயம்... கோயிலில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்குமான பூஜைகளுக்கு நிவந்தம் அளித்துள்ளார்கள், பலரும். தனிநபர்கள், வணிகர்கள், ஊர்ச்சபையினர் என நிவந்தம் அளித்தவர்களின் பெயர்களை யெல்லாம் கல்வெட்டுக்களில் பொறித்து, அவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறான் ராஜராஜசோழன்.
கோயில் விமானத்தின் வடக்குப் புறத்தில், சண்டீசர் சந்நிதிக்கு எதிரில், வாய்மொழி ஆணையாகச் சொன்னதை அப்படியே பதித்திருக்கிறான் மன்னன். 'தஞ்சாவூரில் தான் எடுப்பித்த கற்கோயிலான ராஜராஜச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரசாமிக்கு, தான் கொடுத்தது, தன் அக்கன் (சகோதரி) குந்தவைதேவியார் கொடுத்தது, தன் தேவிமார்கள் கொடுத்தது ஆகியோருடன் சிவனார்க்கு யார் யாரெல்லாம் எது எதெல்லாம் கொடுத்தார்களோ அந்தக் கொடை விவரங்களை தன் கொடை விவரத்துடன் சேர்த்துப் பொறிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப் பித்துள்ளான். அத்துடன், அருகிலேயே மிகப் பெரிய பட்டியலையும் குறித்துள்ளான். அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் பார்க்கலாம்.
அதுமட்டுமா? தஞ்சைப் பெரிய கோயிலுக்கென 400 ஆடல்மகளிரை நியமித்துள்ளான் மன்னன். இசைக்கவும் பக்கவாத்தியம் முழங்கவும் 220 பேரையும், தேவாரம் பாடுவதற்கு 50 ஓதுவாரையும், நூற்றுக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களையும் நியமித்திருக்கிறான் ராஜராஜசோழன். அவர்களின் பெயர், ஊர், ஊதியம், வேலை எனப் பலவற்றையும் கல்லில் பதித்திருக்கிறான்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P40c](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zmziyt/images/p40c.jpg)
கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன். அவனைக் கௌரவிக்கும் பொருட்டு, அவன் பெயருடன் தன் பெயரையும் இணைத்து ராஜராஜப் பெருந்தச்சன் எனப் பட்டம் அளித்துச் சந்தோஷப்படுத்தியிருக்கிறான். அதுமட்டுமா? ஆயிரத்துக்கும் மேலான கோயில் பணியாளர்களின் வசதிக்காக ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்பாளர் கள்), சிகை அலங்காரம் செய்யும் நாவிதர் கள் எனப் பலரையும் நியமித்து, சிகை அலங்காரக் கலைஞன் ஒருவனுக்கு, ராஜராஜ நாவிதன் எனப் பட்டமளித்தான் மன்னன். இறைப் பணியில் எல்லா வேலையும் போற்றத்தக்கதே என்பதை வலியுறுத்திய பெரிய மனம் கொண்ட மன்னன், ராஜராஜ சோழன். இன்னொரு முக்கியமான விஷயம்... கலைகள் அனைத்தும் வளர்ந்த இடம் ஆலயம். கலைஞர்களுக்கு எஜமானன், பெருங்கோயில் ஈசனே! இதை உலகத்தார் உணரும் வகையில், ஈசனின் பண்டாரத்தில் இருந்து கலைஞர்களுக்கு ஊதியமும், கோயில் நிர்வாகிகளுக்கு அரசு பண்டாரத்தில் இருந்து ஊதியமும் அளித்து, கலைஞர்கள் இறைவனின் அடிமை என்பதையும், அரசனுக்கு ஒருபோதும் அவர்கள் அடிமை இல்லை என்பதையும் நிலைநாட்டி, அதனைக் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்துள்ளான் மன்னன்.
பஞ்சபூதங்களால் இயங்குகிற உலகம் இது. தஞ்சைப் பெரியகோயிலின் கட்டுமான அமைப்புகளும் பஞ்சபூதங்களின் வடிவமாகக் கட்டப்பட்டுள்ளன. இயற்கையையும் இறைவனையும், குறிப்பாக மக்களையும் ஒரு வரிசையில் கோத்து, சமமாகப் பாவித்து, பொற்கால ஆட்சியையே நடத்திச் சென்றான், ராஜராஜசோழன் என்பதை இன்னமும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன, கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.
- புரட்டுவோம்
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P40b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zmziyt/images/p40b.jpg)
சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையும் (தில்லை), வைணவர்களுக்கான கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தையும் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் பெரியகோயில் என்றால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம்தான்!
சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிற பிரமாண்டமான ஆலயம். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜசோழன், தன்னை சிவபாதசேகரன் என அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டான். இவனின் மகன் ராஜேந்திர சோழன், தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாக 'சிவசரணசேகரன்’ எனும் பெயரைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டான். சைவத்தின் மீதும் சிவபெருமானின் மீதும் மாறாப் பற்றுக் கொண்ட தந்தையும் மகனும் கட்டிய ஆலயங்கள் ஏராளம்.
தாங்கள் அடைந்த பெருவெற்றியின் அடையாளமாகவோ அல்லது தங்கள் பெருமித வெற்றி தந்த ஆணவத்தின் வெளிப்பாடாகவோ அவர்கள் கோயில்களைக் கட்டவில்லை. கடவுளின் முன்னே அனைவரும் சமம் எனும் உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே ஆலயங்களை அமைத்தார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு பெரியகோயிலில், திருமாளிகைப் பத்தி எனும் திருவூற்று மண்டபத் தின் ஒரு பகுதியைக் கடைக்கால் வரை தோண்டி, அடித்தளமாக விளங்கும் முண்டுக் கற்களை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பகுதியை முழுவதுமாகச் சீரமைத்தனர். அப்போது உள்ளிருந்து எடுக்கப்பட்ட முண்டுக் கற்களில் மாமன்னன் ராஜராஜசோழனின் படைவீரர்களின் பெயர்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எதற்காக அங்கே பெயர் பொறித்தான் மன்னன்? கற்களை எவர் வழங்கினாரோ, அவர்களின் பெயரைக் கல்வெட்டுகளாகப் பொறித்து, அவர்களுக்குப் பெருமைச் சேர்த்த உயர்ந்த குணம் கொண்ட மன்னன் அவன்.
இதையெல்லாம் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஓர் உண்மை புலப்படும் நமக்கு. இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூட மன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின் பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கி ஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது.
அதேபோல், கோயிலின் திருச் சுற்று மாளிகையைப் பார்த்திருக் கிறீர்கள்தானே! அதன் அழகில் அசந்து போய்விடுவோம். அத்தனை அழகு; அத்தனை பிரமாண்டம்! அவன் நினைத்திருந்தால், அக்கா குந்தவை நாச்சியார் பெயரில், தன் மனைவியர் பெயரில், மகன் பெயரில், ஏன்... தன் பெயரில்கூட இந்தத் திருச்சுற்று மாளிகையைச் சொல்லியிருக்கலாம். ஆனால், தன் சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் பெயரில் திருச்சுற்று மாளிகையை அமைக்கச் செய்தான். இந்தத் தகவலை கோயிலில் உள்ள தூண் ஒன்றில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான். அதாவது, சோழ தேசத்தின் மிக முக்கியமான கோயிலாக மட்டுமின்றி, உலகமே வியந்து பார்க்கும் ஆலயத்தின் கட்டுமானத்தில், அதன் பெருமை யில் அனைவரின் பங்களிப்பும் பெயர்களும் இருக்கவேண்டும் என்று பரந்த மனத்துடன் யோசித்துச் செயல்பட்டிருக்கிறான், மன்னன்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P40](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zmziyt/images/p40.jpg)
அதேபோல், இன்னொரு சிலிர்ப்பான விஷயம்... கோயிலில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்குமான பூஜைகளுக்கு நிவந்தம் அளித்துள்ளார்கள், பலரும். தனிநபர்கள், வணிகர்கள், ஊர்ச்சபையினர் என நிவந்தம் அளித்தவர்களின் பெயர்களை யெல்லாம் கல்வெட்டுக்களில் பொறித்து, அவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறான் ராஜராஜசோழன்.
கோயில் விமானத்தின் வடக்குப் புறத்தில், சண்டீசர் சந்நிதிக்கு எதிரில், வாய்மொழி ஆணையாகச் சொன்னதை அப்படியே பதித்திருக்கிறான் மன்னன். 'தஞ்சாவூரில் தான் எடுப்பித்த கற்கோயிலான ராஜராஜச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரசாமிக்கு, தான் கொடுத்தது, தன் அக்கன் (சகோதரி) குந்தவைதேவியார் கொடுத்தது, தன் தேவிமார்கள் கொடுத்தது ஆகியோருடன் சிவனார்க்கு யார் யாரெல்லாம் எது எதெல்லாம் கொடுத்தார்களோ அந்தக் கொடை விவரங்களை தன் கொடை விவரத்துடன் சேர்த்துப் பொறிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப் பித்துள்ளான். அத்துடன், அருகிலேயே மிகப் பெரிய பட்டியலையும் குறித்துள்ளான். அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் பார்க்கலாம்.
அதுமட்டுமா? தஞ்சைப் பெரிய கோயிலுக்கென 400 ஆடல்மகளிரை நியமித்துள்ளான் மன்னன். இசைக்கவும் பக்கவாத்தியம் முழங்கவும் 220 பேரையும், தேவாரம் பாடுவதற்கு 50 ஓதுவாரையும், நூற்றுக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களையும் நியமித்திருக்கிறான் ராஜராஜசோழன். அவர்களின் பெயர், ஊர், ஊதியம், வேலை எனப் பலவற்றையும் கல்லில் பதித்திருக்கிறான்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P40c](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zmziyt/images/p40c.jpg)
கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன். அவனைக் கௌரவிக்கும் பொருட்டு, அவன் பெயருடன் தன் பெயரையும் இணைத்து ராஜராஜப் பெருந்தச்சன் எனப் பட்டம் அளித்துச் சந்தோஷப்படுத்தியிருக்கிறான். அதுமட்டுமா? ஆயிரத்துக்கும் மேலான கோயில் பணியாளர்களின் வசதிக்காக ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்பாளர் கள்), சிகை அலங்காரம் செய்யும் நாவிதர் கள் எனப் பலரையும் நியமித்து, சிகை அலங்காரக் கலைஞன் ஒருவனுக்கு, ராஜராஜ நாவிதன் எனப் பட்டமளித்தான் மன்னன். இறைப் பணியில் எல்லா வேலையும் போற்றத்தக்கதே என்பதை வலியுறுத்திய பெரிய மனம் கொண்ட மன்னன், ராஜராஜ சோழன். இன்னொரு முக்கியமான விஷயம்... கலைகள் அனைத்தும் வளர்ந்த இடம் ஆலயம். கலைஞர்களுக்கு எஜமானன், பெருங்கோயில் ஈசனே! இதை உலகத்தார் உணரும் வகையில், ஈசனின் பண்டாரத்தில் இருந்து கலைஞர்களுக்கு ஊதியமும், கோயில் நிர்வாகிகளுக்கு அரசு பண்டாரத்தில் இருந்து ஊதியமும் அளித்து, கலைஞர்கள் இறைவனின் அடிமை என்பதையும், அரசனுக்கு ஒருபோதும் அவர்கள் அடிமை இல்லை என்பதையும் நிலைநாட்டி, அதனைக் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்துள்ளான் மன்னன்.
பஞ்சபூதங்களால் இயங்குகிற உலகம் இது. தஞ்சைப் பெரியகோயிலின் கட்டுமான அமைப்புகளும் பஞ்சபூதங்களின் வடிவமாகக் கட்டப்பட்டுள்ளன. இயற்கையையும் இறைவனையும், குறிப்பாக மக்களையும் ஒரு வரிசையில் கோத்து, சமமாகப் பாவித்து, பொற்கால ஆட்சியையே நடத்திச் சென்றான், ராஜராஜசோழன் என்பதை இன்னமும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன, கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.
- புரட்டுவோம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 2
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சதாசிவலிங்கம்!
ராஜராஜீச்சரம் எனப்படும் தஞ்சை பெரியகோயிலின் விமானம் 216 அடி உயரம். தரையில் இருந்து கலசம் வரைக்கும் முழுக்க முழுக்கக் கருங்கல் கட்டுமானம். சுமார் 10 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போதே, பெருவுடையார் கோயில் விமானத்தைத் தரிசிக்கலாம்.
எல்லாக் கட்டடங்களையும் போல இதுவும் ஒரு கட்டடம், கோயில் விமானம் என்று நினைத்தால், அது தவறு. ராஜராஜப் பெருவுடையார் அப்படி நினைத்துக் கட்டவில்லை. இது, மகா சதாசிவலிங்கத் தோற்றத்தின் வடிவம். மகுடாகமம் அப்படித்தான் இதைத் தெரிவிக்கிறது. திருவதிகை வீரட்டம், திருவானைக்கா போன்ற தலங்களில் திருச்சுற்று மண்டபங்களில் சதாசிவலிங்கங்கள் (முகலிங்கம்) இருப்பதைப் பார்க்கலாம். அதாவது, பாணத்தின் நான்கு திசைகளிலும் நான்கு முகங்கள் இடம்பெற்றிருக்கும். திண்டிவனம் அருகில் உள்ள திருவக்கரை சிவாலயத்தின் மூலஸ்தானத்தில் முகலிங்கத்தைத் தரிசிக்கலாம்.
தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என சிவனாரின் ஐந்து வடிவத்தைச் சொல்வார்கள். இவற்றில், முதல் நான்கு வடிவங்களின் திருமுகங்களை, லிங்க பாணத்தில் காணலாம். ஈசான முகத்தை, ஊர்த்துவ முகம் எனக் கற்பனையில் கொள்ளவேண்டும்.
தஞ்சாவூர்ப் பகுதியில் சில சிவாலயங்களில், தாமரை மலரில் அமர்ந்தவராக நான்கு திருமுகங்களும் கொண்டு, சிவனாரின் திருவுருவத்தைக் காணலாம். இதனை 'வாக்ச சிவா’ என அழைப்பார்கள்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P20d](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zwyzju/images/p20d.jpg)
தஞ்சைக் கோயிலில் கல்வெட்டுச் சாசனம் ஒன்றில், ராஜராஜ சோழ மன்னன் செய்து அளித்த செப்புத் திருமேனி பற்றிய குறிப்பு உள்ளது. சிவனாரின் உருவமான அந்தத் திருமேனியை 'பஞ்சதேக மூர்த்தி’ என்பார்கள். திருமேனியின் உயரம், வடிவம் ஆகியவற்றின் துல்லிய அளவையும் கல்வெட்டில் பொறித்துள்ளான், மன்னன். ஒருவேளை... பிற்காலத்தில் இந்தத் திருமேனி அதாவது திருவிக்கிரகம் கிடைக்கப் பெறாமல் போனால்கூட, அந்த விக்கிரகம் எப்படி இருந்திருக்கும் என்பதை அந்தக் கல்வெட்டின் மூலம் தெளிவுற அறியலாம். இதுகுறித்து இன்னொரு செய்தி... இந்தியாவில் எந்தவொரு சிவாலயத்திலும் பஞ்சதேகமூர்த்தி எனும் பெயரில் செப்புத் திருமேனி இருந்ததாகத் தெரியவில்லை.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P20b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zwyzju/images/p20b.jpg)
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P20](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zwyzju/images/p20.jpg)
சிவனாரின் ஐந்து தேகங்களையும் இணைத்து, செப்புச் சிலை வடிவில் ஓர் உருவமாகச் செய்து வழிபட்டிருக்கிறான் ராஜராஜ சோழன். அதுமட்டுமா? ஐந்து திருவுருவங்களையும் தனித்தனியே வடித்து, ஸ்ரீவிமானத்தின் கோஷ்டப் பகுதிகளில் வைத்து, விமானத்தையே சதாசிவலிங்கமாகக் காட்டி மகிழ்ந்திருக்கிறான். சிவனாரின் அந்த ஐந்து வடிவங்களை, பெரியகோயில் தவிர, வேறு எந்த ஆலயத்திலும் தரிசிக்க வாய்ப்பே இல்லை.
மூலவர் ஸ்ரீபிரகதீஸ்வரரை வணங்கிவிட்டு, அர்த்த மண்டபம் வழியே தெற்கு வாயிலுக்கு வரும் வழியில், கீழ்ப்புற கோஷ்டத்தில் தத்புருஷ மூர்த்தியும், விமானத்தின் தெற்குப் புற கோஷ்டத் தில் அகோர மூர்த்தியும் நின்று அருள்பாலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இல்லையெனில், அடுத்த முறை செல்லும்போது கவனிக்கத் தவறாதீர்கள். மேலிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன் இடது கரத்தில் மாதுளம்பழத்தை ஏந்தியபடி, முன் வலது கரத்தில் அபயம் காட்டி நிற்பார் தத்புருஷர். உடல் முழுவதும் பாம்புகளை ஆபரணம் போலச் சூடிக்கொண்டு, எட்டுத் திருக்கரங்களும், எடுப்பான மீசையும் கொண்டு அகோரமூர்த்தியும், விமானத் தின் மேற்கு கோஷ்டத்தில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் அபய வரதம் காட்டி சத்யோஜாத மூர்த்தியும், கோஷ்டத் தின் வடக்கில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் வாளும் கேடயமும் ஏந்தியபடி வாமதேவ மூர்த்தியும், விமானத்தின் வட கீழ்த் திசையில், அர்த்தமண்டபம் செல்லும் வாசலுக்கு அருகில் கோஷ்டத்தில் வலது கரத்தில் நீண்ட திரிசூலத்தை ஏந்தி, இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி ஈசான மூர்த்தியும் காட்சி தருகின்றனர். இந்த மூர்த்திகளைத் தரிசித்துவிட்டு, உலகமே போற்றுகிற 216 அடி உயர விமானத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அப்போது... அது, சதாசிவலிங்க திருவடிவம் என்பது புரியும்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P20a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zwyzju/images/p20a.jpg)
கிழக்கு ராஜகோபுரமான கேரளாந் தகன் நுழைவாயிலின் மேல் நிலையில் வடதிசையிலும் மேற்குத் திசையிலும் பத்துக் கரங்கள், ஐந்து தலைகளுடன் கூடிய சதாசிவ மூர்த்தியின் சுதை வடிவங்களையும் தரிசிக்கலாம். தவிர, பெரியகோயிலில் சிவனாரின் பல்வேறு வடிவங்களான ஆடவல்லார், பிட்சாடனர், காலகால தேவர், விஷ்ணு அநுக்கிரஹ மூர்த்தி, ஹரிஹரர், லிங்கோத்பவர், சந்திர சேகரர், கங்காதரர், கௌரி பிரசாதர், திரிபுரம் எரித்த தேவர், ஆலமர்ச் செல்வர் ஆகிய மூர்த்தங்களும் உண்டு.
திருமந்திரத்தின் 7-ஆம் தந்திரத்தில், சதாசிவலிங்கத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார் திருமூலர். திருஞான சம்பந்தர் திருவாஞ்சியப் பதிகத்தில் 'உடல் அஞ்சினர்’ என்றும், திருநாவுக்கரசர் திருவதிகை வீரட்டானத்துப் பதிகத்தில் 'அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகை வீரட்டனீரே’ என்றும் சதாசிவ மூர்த்தியின் பெருமைகளை உரைத்துள்ளனர்.
- புரட்டுவோம்
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சதாசிவலிங்கம்!
ராஜராஜீச்சரம் எனப்படும் தஞ்சை பெரியகோயிலின் விமானம் 216 அடி உயரம். தரையில் இருந்து கலசம் வரைக்கும் முழுக்க முழுக்கக் கருங்கல் கட்டுமானம். சுமார் 10 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போதே, பெருவுடையார் கோயில் விமானத்தைத் தரிசிக்கலாம்.
எல்லாக் கட்டடங்களையும் போல இதுவும் ஒரு கட்டடம், கோயில் விமானம் என்று நினைத்தால், அது தவறு. ராஜராஜப் பெருவுடையார் அப்படி நினைத்துக் கட்டவில்லை. இது, மகா சதாசிவலிங்கத் தோற்றத்தின் வடிவம். மகுடாகமம் அப்படித்தான் இதைத் தெரிவிக்கிறது. திருவதிகை வீரட்டம், திருவானைக்கா போன்ற தலங்களில் திருச்சுற்று மண்டபங்களில் சதாசிவலிங்கங்கள் (முகலிங்கம்) இருப்பதைப் பார்க்கலாம். அதாவது, பாணத்தின் நான்கு திசைகளிலும் நான்கு முகங்கள் இடம்பெற்றிருக்கும். திண்டிவனம் அருகில் உள்ள திருவக்கரை சிவாலயத்தின் மூலஸ்தானத்தில் முகலிங்கத்தைத் தரிசிக்கலாம்.
தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என சிவனாரின் ஐந்து வடிவத்தைச் சொல்வார்கள். இவற்றில், முதல் நான்கு வடிவங்களின் திருமுகங்களை, லிங்க பாணத்தில் காணலாம். ஈசான முகத்தை, ஊர்த்துவ முகம் எனக் கற்பனையில் கொள்ளவேண்டும்.
தஞ்சாவூர்ப் பகுதியில் சில சிவாலயங்களில், தாமரை மலரில் அமர்ந்தவராக நான்கு திருமுகங்களும் கொண்டு, சிவனாரின் திருவுருவத்தைக் காணலாம். இதனை 'வாக்ச சிவா’ என அழைப்பார்கள்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P20d](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zwyzju/images/p20d.jpg)
தஞ்சைக் கோயிலில் கல்வெட்டுச் சாசனம் ஒன்றில், ராஜராஜ சோழ மன்னன் செய்து அளித்த செப்புத் திருமேனி பற்றிய குறிப்பு உள்ளது. சிவனாரின் உருவமான அந்தத் திருமேனியை 'பஞ்சதேக மூர்த்தி’ என்பார்கள். திருமேனியின் உயரம், வடிவம் ஆகியவற்றின் துல்லிய அளவையும் கல்வெட்டில் பொறித்துள்ளான், மன்னன். ஒருவேளை... பிற்காலத்தில் இந்தத் திருமேனி அதாவது திருவிக்கிரகம் கிடைக்கப் பெறாமல் போனால்கூட, அந்த விக்கிரகம் எப்படி இருந்திருக்கும் என்பதை அந்தக் கல்வெட்டின் மூலம் தெளிவுற அறியலாம். இதுகுறித்து இன்னொரு செய்தி... இந்தியாவில் எந்தவொரு சிவாலயத்திலும் பஞ்சதேகமூர்த்தி எனும் பெயரில் செப்புத் திருமேனி இருந்ததாகத் தெரியவில்லை.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P20b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zwyzju/images/p20b.jpg)
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P20](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zwyzju/images/p20.jpg)
சிவனாரின் ஐந்து தேகங்களையும் இணைத்து, செப்புச் சிலை வடிவில் ஓர் உருவமாகச் செய்து வழிபட்டிருக்கிறான் ராஜராஜ சோழன். அதுமட்டுமா? ஐந்து திருவுருவங்களையும் தனித்தனியே வடித்து, ஸ்ரீவிமானத்தின் கோஷ்டப் பகுதிகளில் வைத்து, விமானத்தையே சதாசிவலிங்கமாகக் காட்டி மகிழ்ந்திருக்கிறான். சிவனாரின் அந்த ஐந்து வடிவங்களை, பெரியகோயில் தவிர, வேறு எந்த ஆலயத்திலும் தரிசிக்க வாய்ப்பே இல்லை.
மூலவர் ஸ்ரீபிரகதீஸ்வரரை வணங்கிவிட்டு, அர்த்த மண்டபம் வழியே தெற்கு வாயிலுக்கு வரும் வழியில், கீழ்ப்புற கோஷ்டத்தில் தத்புருஷ மூர்த்தியும், விமானத்தின் தெற்குப் புற கோஷ்டத் தில் அகோர மூர்த்தியும் நின்று அருள்பாலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இல்லையெனில், அடுத்த முறை செல்லும்போது கவனிக்கத் தவறாதீர்கள். மேலிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன் இடது கரத்தில் மாதுளம்பழத்தை ஏந்தியபடி, முன் வலது கரத்தில் அபயம் காட்டி நிற்பார் தத்புருஷர். உடல் முழுவதும் பாம்புகளை ஆபரணம் போலச் சூடிக்கொண்டு, எட்டுத் திருக்கரங்களும், எடுப்பான மீசையும் கொண்டு அகோரமூர்த்தியும், விமானத் தின் மேற்கு கோஷ்டத்தில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் அபய வரதம் காட்டி சத்யோஜாத மூர்த்தியும், கோஷ்டத் தின் வடக்கில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் வாளும் கேடயமும் ஏந்தியபடி வாமதேவ மூர்த்தியும், விமானத்தின் வட கீழ்த் திசையில், அர்த்தமண்டபம் செல்லும் வாசலுக்கு அருகில் கோஷ்டத்தில் வலது கரத்தில் நீண்ட திரிசூலத்தை ஏந்தி, இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி ஈசான மூர்த்தியும் காட்சி தருகின்றனர். இந்த மூர்த்திகளைத் தரிசித்துவிட்டு, உலகமே போற்றுகிற 216 அடி உயர விமானத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அப்போது... அது, சதாசிவலிங்க திருவடிவம் என்பது புரியும்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P20a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/04/zwyzju/images/p20a.jpg)
கிழக்கு ராஜகோபுரமான கேரளாந் தகன் நுழைவாயிலின் மேல் நிலையில் வடதிசையிலும் மேற்குத் திசையிலும் பத்துக் கரங்கள், ஐந்து தலைகளுடன் கூடிய சதாசிவ மூர்த்தியின் சுதை வடிவங்களையும் தரிசிக்கலாம். தவிர, பெரியகோயிலில் சிவனாரின் பல்வேறு வடிவங்களான ஆடவல்லார், பிட்சாடனர், காலகால தேவர், விஷ்ணு அநுக்கிரஹ மூர்த்தி, ஹரிஹரர், லிங்கோத்பவர், சந்திர சேகரர், கங்காதரர், கௌரி பிரசாதர், திரிபுரம் எரித்த தேவர், ஆலமர்ச் செல்வர் ஆகிய மூர்த்தங்களும் உண்டு.
திருமந்திரத்தின் 7-ஆம் தந்திரத்தில், சதாசிவலிங்கத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார் திருமூலர். திருஞான சம்பந்தர் திருவாஞ்சியப் பதிகத்தில் 'உடல் அஞ்சினர்’ என்றும், திருநாவுக்கரசர் திருவதிகை வீரட்டானத்துப் பதிகத்தில் 'அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகை வீரட்டனீரே’ என்றும் சதாசிவ மூர்த்தியின் பெருமைகளை உரைத்துள்ளனர்.
- புரட்டுவோம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/p42a.jpg)
கும்பகோணம் நகரத்துக்குத் தென்மேற்கே கும்பகோணம்- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புறநகராக விளங்குவது தாராசுரம் எனும் பேரூர். காவிரியின் கிளை நதியான அரசிலாறு, இந்த இரண்டு ஊர்களையும் பிரித்து நடுவே செல்கிறது. சோழப் பேரரசர்களின் கோநகரமான பழையாறை என்ற தலைநகரத்தின் ஒரு பகுதியாக ராசராசபுரம் விளங்கியது. இந்த ராசராசபுரம் நாளடைவில் ராராபுரமாக மருவி, பின்பு தாராசுரம் என அழைக்கப்படலாயிற்று.
சோழப் பெருமன்னன் இரண்டாம் ராசராசன் (கி.பி.1146-1163) இந்த ஊரை நிர்மாணம் செய்து, அங்கு ராசராசேச்சரம் என்ற பெயரில் பெரிய சிவாலயம் ஒன்றை எடுப்பித்தான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், ராசராசபுரத்தின் சிறப்பையும் அங்கு திகழும் ராசராசேச்சரத்தின் பெருமையையும் 'தக்கயாகப்பரணி’ எனும் அருந்தமிழ் நூலில் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் அந்தக் கோயில் ஐராவதீஸ்வரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
சேக்கிழார் பெருமானையும் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற பேறுடையவன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனான இரண்டாம் ராசராசன். இவன், தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் தில்லையில் பெரிய புராணம் அரங்கேற்றம் நிகழ்ந்ததைக் கண்டு களித்தவன். பெரிய புராணத்தில் கூறப்படுகிற நாயன்மார் வரலாறு இந்த மன்னனை ரொம்பவே ஈர்த்தது. சேக்கிழார் பெருமான் சொல்லால் வடித்த அடியார்களின் வாழ்வை, கல்லில் சிற்பக் காட்சிகளாக வடித்து, அவற்றை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் இடம்பெறச் செய்தான். ஒன்றரை அடி நீளம், ஆறு அங்குல உயரமுள்ள பகுதிகளுக்குள்ளே ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளன.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/p42.jpg)
சுந்தரர் வரலாறு திருத்தொண்டர் புராணத்தில் எவ்வாறு உபமன்யு மகரிஷியால் விரித்துரைக்கப்பட்டுள்ளதோ, அதே போலவே சிற்பக் காட்சிகள் தொடங்கி, ஞானசம்பந்தர் வரலாறு, திருநாவுக்கரசர் வரலாறு, நாவுக்கரசர் 'மாதற்பிறைக் கண்ணியானை’ எனத் தொடங்கும் பதிகம் பாடும் காட்சி, பின்பு சுந்தரர் குறிப்பிடும் அறுபத்து மூவர் வரலாற்றுக் காட்சிகள் என நீண்டு, மொத்தம் 90 காட்சிகளில் சுந்தரரும் சேரமான் பெருமாளும் கயிலை செல்லும் காட்சியுடன் பெரிய புராணச் சிற்பக் காட்சிகள் நிறைவு பெறுகின்றன.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/p42b.jpg)
ஐராவதீஸ்வரர் திருக்கோயிலின் முக மண்டபத்தை, தேர் வடிவில் 'ராஜகம்பீரன் திருமண்டபம்’ என்ற பெயரில் சிற்பக்கலையின் கருவூலமாகவே படைத்திருக்கிறான் மன்னன். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் உள்ள நான்கு தூண்களின் நான்கு பக்கங்களிலும் 48 சிற்பக் காட்சிகள் உள்ளன. இவற்றில் கந்த புராணம் முழுவதும் சித்திரிக்கப் பெற்றிருப்பதைப் பார்த்தால், சிலிர்த்துப் போவீர்கள். கச்சியப்ப சிவாச்சார்யரின் கந்தபுராணம் எழுதப்படுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு கந்தபுராணம் சிற்பங்களாக வழங்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று!
இன்னொரு விஷயம்... இந்தக் கோயிலின் கோஷ்டங்களில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் உலகின் கலை வல்லுநர்களால் இன்றைக்கும் பிரமிப்போடு பார்க்கப் படுகின்றன; போற்றப்படுகின்றன. ஸ்ரீநரசிம்ம உருவத்தை அழிக்கும் சரபமூர்த்தி வடிவம் அரியதொரு பொக்கிஷம்! சிறகுகள் பெற்ற சிங்கவடிவாகிய சரபப்புள் பறந்து வந்து, சினமுற்ற நரசிங்கத்தை வான மண்டலத்துக்குத் தூக்கிச் செல்கிற அற்புதக் காட்சியைச் சிற்பமாக வடித்திருப்பதைப் பார்த்தால், நம் விழிகள் விரியும்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42c(1)](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/P42c(1).jpg)
வான மண்டலமும், அங்கு திகழும் தேவர்களும், கழுகு மீனைத் தூக்கிச் செல்வது போல் நரசிங்கத்தை சரபம் தூக்கிச் செல்வதும் தத்ரூபமான காட்சிகளாகும். ராஜகம்பீரன் மண்டபத்தின் கிழக்குச் சுவரில் அமைந்த கோஷ்டம் ஒன்றில் காணப்பெறும் அர்த்தநாரியின் சூரிய வடிவம் உலகில் வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத ஒன்று! சிவசூரியன் இங்கே தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் எனும் நான்கு முகங்களுடன், உடலில் ஒரு பாதி ஆணாகவும், ஒரு பாதி பெண்ணாகவும் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். கோஷ்டத்துக்கு மேல், சோழர் கால செந்தூர எழுத்துக்களில், 'அர்த்தநாரி சூரியன்’ என எழுதப்பட்டுள்ளது.
சங்க நிதி, பதும நிதி, அகத்தியர், உபமன்யு மகரிஷி, அகோர மூர்த்தி, நான்கு திருமுகங்களுடன் 14 பாம்புகளை உடலில் தரித்த வண்ணம் ஆடும் ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீஆலமர்ச் செல்வர், ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜர், ஸ்ரீகணபதி, ஸ்ரீதிரிபுராந்தகர், ஆனை உரிச்ச தேவர், ஸ்ரீபைரவர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீஆதிசண்டேஸ்வரர், ஸ்ரீராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்கள் கல்வெட்டுப் பொறிப்புகளோடு கோஷ்டங்களில் இடம் பெற்றிருந்தன. இவற்றில் சில, பிற்காலத்தில் அகற்றப்பட்டுவிட்டன.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42d](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/P42d.jpg)
இந்தக் கோயிலிலிருந்து தஞ்சைக் கலைக்கூடத்துக்கு எடுத்துச் சென்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி என்ற ஆனை உரிச்ச தேவரின் சிற்பம் அற்புதமானது. ஸ்ரீகாலபைரவராக கஜாசுரன் என்ற அரக்க யானையின் உடலுள் புகுந்து, அதனைக் கிழித்தவாறு ஆடிக்கொண்டே வெளிவரும் அண்ணலைக் கண்டு உமாதேவி அஞ்சி, தன் கையில் அணைத்துள்ள குழந்தை முருகன் அந்தக் கோலத்தைப் பார்க்காதபடி மறைத்து நிற்கிறாள். அது கண்டு, கோபத்துடன் இருந்த ஆடுத்தேவர் புன்னகை செய்கிறார். அற்புதமான இந்தச் சிலையின் 45 டிகிரி கோணத்தில் ஒரு பக்கம் இருந்து பார்த்தால், முகத்தில் கோபம் தெரியும். அதே முகத்தில் தேவி இருக்கும் திசையில் 45 டிகிரி கோணத்திலிருந்து பார்த்தால் புன்னகை தெரியும். ஒரே முகத்தில் இரண்டு விதமான பாவங்களைச் சிற்பி காட்டியுள்ளார்.
'விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆக வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திகு மணிவாய்விள்ளச்
சரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’
என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல், இங்கு சிற்பமாகி நிற்பதையும் தரிசிக்கலாம்.
- புரட்டுவோம்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/p42a.jpg)
கும்பகோணம் நகரத்துக்குத் தென்மேற்கே கும்பகோணம்- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புறநகராக விளங்குவது தாராசுரம் எனும் பேரூர். காவிரியின் கிளை நதியான அரசிலாறு, இந்த இரண்டு ஊர்களையும் பிரித்து நடுவே செல்கிறது. சோழப் பேரரசர்களின் கோநகரமான பழையாறை என்ற தலைநகரத்தின் ஒரு பகுதியாக ராசராசபுரம் விளங்கியது. இந்த ராசராசபுரம் நாளடைவில் ராராபுரமாக மருவி, பின்பு தாராசுரம் என அழைக்கப்படலாயிற்று.
சோழப் பெருமன்னன் இரண்டாம் ராசராசன் (கி.பி.1146-1163) இந்த ஊரை நிர்மாணம் செய்து, அங்கு ராசராசேச்சரம் என்ற பெயரில் பெரிய சிவாலயம் ஒன்றை எடுப்பித்தான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், ராசராசபுரத்தின் சிறப்பையும் அங்கு திகழும் ராசராசேச்சரத்தின் பெருமையையும் 'தக்கயாகப்பரணி’ எனும் அருந்தமிழ் நூலில் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் அந்தக் கோயில் ஐராவதீஸ்வரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
சேக்கிழார் பெருமானையும் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற பேறுடையவன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனான இரண்டாம் ராசராசன். இவன், தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் தில்லையில் பெரிய புராணம் அரங்கேற்றம் நிகழ்ந்ததைக் கண்டு களித்தவன். பெரிய புராணத்தில் கூறப்படுகிற நாயன்மார் வரலாறு இந்த மன்னனை ரொம்பவே ஈர்த்தது. சேக்கிழார் பெருமான் சொல்லால் வடித்த அடியார்களின் வாழ்வை, கல்லில் சிற்பக் காட்சிகளாக வடித்து, அவற்றை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் இடம்பெறச் செய்தான். ஒன்றரை அடி நீளம், ஆறு அங்குல உயரமுள்ள பகுதிகளுக்குள்ளே ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளன.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/p42.jpg)
சுந்தரர் வரலாறு திருத்தொண்டர் புராணத்தில் எவ்வாறு உபமன்யு மகரிஷியால் விரித்துரைக்கப்பட்டுள்ளதோ, அதே போலவே சிற்பக் காட்சிகள் தொடங்கி, ஞானசம்பந்தர் வரலாறு, திருநாவுக்கரசர் வரலாறு, நாவுக்கரசர் 'மாதற்பிறைக் கண்ணியானை’ எனத் தொடங்கும் பதிகம் பாடும் காட்சி, பின்பு சுந்தரர் குறிப்பிடும் அறுபத்து மூவர் வரலாற்றுக் காட்சிகள் என நீண்டு, மொத்தம் 90 காட்சிகளில் சுந்தரரும் சேரமான் பெருமாளும் கயிலை செல்லும் காட்சியுடன் பெரிய புராணச் சிற்பக் காட்சிகள் நிறைவு பெறுகின்றன.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/p42b.jpg)
ஐராவதீஸ்வரர் திருக்கோயிலின் முக மண்டபத்தை, தேர் வடிவில் 'ராஜகம்பீரன் திருமண்டபம்’ என்ற பெயரில் சிற்பக்கலையின் கருவூலமாகவே படைத்திருக்கிறான் மன்னன். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் உள்ள நான்கு தூண்களின் நான்கு பக்கங்களிலும் 48 சிற்பக் காட்சிகள் உள்ளன. இவற்றில் கந்த புராணம் முழுவதும் சித்திரிக்கப் பெற்றிருப்பதைப் பார்த்தால், சிலிர்த்துப் போவீர்கள். கச்சியப்ப சிவாச்சார்யரின் கந்தபுராணம் எழுதப்படுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு கந்தபுராணம் சிற்பங்களாக வழங்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று!
இன்னொரு விஷயம்... இந்தக் கோயிலின் கோஷ்டங்களில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் உலகின் கலை வல்லுநர்களால் இன்றைக்கும் பிரமிப்போடு பார்க்கப் படுகின்றன; போற்றப்படுகின்றன. ஸ்ரீநரசிம்ம உருவத்தை அழிக்கும் சரபமூர்த்தி வடிவம் அரியதொரு பொக்கிஷம்! சிறகுகள் பெற்ற சிங்கவடிவாகிய சரபப்புள் பறந்து வந்து, சினமுற்ற நரசிங்கத்தை வான மண்டலத்துக்குத் தூக்கிச் செல்கிற அற்புதக் காட்சியைச் சிற்பமாக வடித்திருப்பதைப் பார்த்தால், நம் விழிகள் விரியும்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42c(1)](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/P42c(1).jpg)
வான மண்டலமும், அங்கு திகழும் தேவர்களும், கழுகு மீனைத் தூக்கிச் செல்வது போல் நரசிங்கத்தை சரபம் தூக்கிச் செல்வதும் தத்ரூபமான காட்சிகளாகும். ராஜகம்பீரன் மண்டபத்தின் கிழக்குச் சுவரில் அமைந்த கோஷ்டம் ஒன்றில் காணப்பெறும் அர்த்தநாரியின் சூரிய வடிவம் உலகில் வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத ஒன்று! சிவசூரியன் இங்கே தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் எனும் நான்கு முகங்களுடன், உடலில் ஒரு பாதி ஆணாகவும், ஒரு பாதி பெண்ணாகவும் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். கோஷ்டத்துக்கு மேல், சோழர் கால செந்தூர எழுத்துக்களில், 'அர்த்தநாரி சூரியன்’ என எழுதப்பட்டுள்ளது.
சங்க நிதி, பதும நிதி, அகத்தியர், உபமன்யு மகரிஷி, அகோர மூர்த்தி, நான்கு திருமுகங்களுடன் 14 பாம்புகளை உடலில் தரித்த வண்ணம் ஆடும் ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீஆலமர்ச் செல்வர், ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜர், ஸ்ரீகணபதி, ஸ்ரீதிரிபுராந்தகர், ஆனை உரிச்ச தேவர், ஸ்ரீபைரவர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீஆதிசண்டேஸ்வரர், ஸ்ரீராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்கள் கல்வெட்டுப் பொறிப்புகளோடு கோஷ்டங்களில் இடம் பெற்றிருந்தன. இவற்றில் சில, பிற்காலத்தில் அகற்றப்பட்டுவிட்டன.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42d](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/yzuzyz/images/P42d.jpg)
இந்தக் கோயிலிலிருந்து தஞ்சைக் கலைக்கூடத்துக்கு எடுத்துச் சென்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி என்ற ஆனை உரிச்ச தேவரின் சிற்பம் அற்புதமானது. ஸ்ரீகாலபைரவராக கஜாசுரன் என்ற அரக்க யானையின் உடலுள் புகுந்து, அதனைக் கிழித்தவாறு ஆடிக்கொண்டே வெளிவரும் அண்ணலைக் கண்டு உமாதேவி அஞ்சி, தன் கையில் அணைத்துள்ள குழந்தை முருகன் அந்தக் கோலத்தைப் பார்க்காதபடி மறைத்து நிற்கிறாள். அது கண்டு, கோபத்துடன் இருந்த ஆடுத்தேவர் புன்னகை செய்கிறார். அற்புதமான இந்தச் சிலையின் 45 டிகிரி கோணத்தில் ஒரு பக்கம் இருந்து பார்த்தால், முகத்தில் கோபம் தெரியும். அதே முகத்தில் தேவி இருக்கும் திசையில் 45 டிகிரி கோணத்திலிருந்து பார்த்தால் புன்னகை தெரியும். ஒரே முகத்தில் இரண்டு விதமான பாவங்களைச் சிற்பி காட்டியுள்ளார்.
'விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆக வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திகு மணிவாய்விள்ளச்
சரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’
என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல், இங்கு சிற்பமாகி நிற்பதையும் தரிசிக்கலாம்.
- புரட்டுவோம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்! -4
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/zdynmu/images/p42b.jpg)
கும்பகோணம்- தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலின் முக மண்டபமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் நிற்கிறோம்.
இங்கே, மேல்தளத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் உள்ளன. அதன் மேலேறி முதல் தளத்துக்குச் சென்றால், அங்கே ஸ்ரீவிமானத்தையட்டி ஒரு மண்டபமும், அதன் மேல்தளத்தில் மேலும் ஒரு சிறுமண்டபமும் இருக்கின்றது.
கீழ் மண்டப வெளிச்சுவரிலும் உட்சுவரிலுமாக மொத்தம் எட்டு கோஷ்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நீங்கலாக, மற்ற ஏழு கோஷ்டங்களின் மாடங்களிலும் வேறு எந்த ஆலயத்திலும் இடம்பெற்றிராத ஏழு பெண்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏழு பெண்களும், நதி தெய்வங்கள்.
இடுப்புக்கு மேலே பெண் உருவமும், இடுப்புக்குக் கீழே நீர்ச்சுழலுமாகத் திகழும் அந்தப் பெண்களின் ஒரு கரத்தில் தண்ணீர்ச் சொம்பு, மறு கரத்தில் தாமரை, குவளை போன்ற மலர்களில் ஒன்று எனக் காணலாம். இவை, நம் இந்திய தேசத்தின் புனித நதி தெய்வங்களின் உருவங்கள். நதிப்பெண்கள் என்பதால், இடுப்புக்குக் கீழே தண்ணீர்த்திரளைச் சுழலுடன் சோழச் சிற்பிகள் நயமாகக் காட்டியுள்ளனர்.
மேல் தளத்தில், ஏழு நதிப் பெண்களின் சிற்பங்கள் காணக் கிடைத்தாலும், கங்கை எனும் நதிமகளை, தரைத்தளமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் உள்ளே மாடம் ஒன்றில் முழுப் பெண்ணாகவே வடித்துள்ளான் சிற்பி. கருப்பு நிறத்திலான, உயர்ந்த கருங்கல்லில் இந்தச் சிற்பத்தை வெகு அழகாக வடித்துள்ள விதம் ரசிக்கத்தக்கது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/zdynmu/images/p42.jpg)
மகுடம் அணிந்து, பேரெழிலுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீகங்காதேவி. வலது கரத்தில் மலர்ந்திருக்கிற தாமரைப் பூவையும், இடது கரத்தில் தண்ணீர்ச் சொம்பையும் ஏந்தியபடி இருக்கிறாள் அவள். இந்தச் சிற்பத்துக்கு மேலே கோஷ்டப் பகுதியில், சோழர் கால எழுத்துப் பொறிப்பாக, 'கங்காதேவி’ என்ற பெயர் செந்தூர எழுத்துகளில் மங்கிய நிலையில் காணப்படுகிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் ஸ்ரீநாகேஸ்வரன் கோயிலில் பதிகம் பாடிய திருநாவுக்கரசர் கங்கை, யமுனை, சரஸ்வதி, தாவி (சிந்து நதியில் இணையும் காஷ்மீர நாட்டு நதி), கோமதி, கோதாவரி, பொன்னியாம் காவிரி என ஏழு நதி தெய்வங்கள் கும்பகோணத்துக்கு வந்து ஈசனை வழிபட்டதாகப் பாடியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள ஏழு நதி தெய்வங்களை, இங்கே தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலில் சிற்பமாகப் பார்க்கிறோம்.
அதேபோல், இந்தக் கோயிலில் வியக்க வைக்கும் இன்னொரு சிற்ப நுட்பம்... திருக்கயிலாயக் காட்சி. ஏழு நதி தெய்வங்கள் உள்ள மண்டபத்தின் மேற்தளத்தில் உள்ள சிறுமண்டபம், ஸ்ரீவிமானத்தின் கிழக்கு முகத்துடன் இணைந்துள்ளது. அந்த மண்டபத்தின் தென்புறம் மற்றும் வடபுறம் உள்ள சுவர்களின் வெளிப்புறம் திருக்கயிலாய மலையில் சிவபெருமானைத் தொழுது நிற்கும் தெய்வங்கள், இருடிகள், கணங்கள் என நூற்றுக்கணக்கானவர்களின் சிற்றுருவச் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இந்தச் சிறுமண்டபமும் ஸ்ரீவிமானமும் இங்கே திருக்கயிலாய மலையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிறுமண்டபத்தின் உள்ளே உள்ள கற்பீடத்தின் மேலே, அமர்ந்த கோலத்தில் சிவபெரு மானும் உமாதேவியும் இருக்க, அருகே மற்றொரு பெண் தெய்வம் நின்ற கோலத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இந்த மூன்று வடிவங்களும் கி.பி.15-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு, சுண்ணாம்புச் சுதையால் வடிக்கப்பட்டவை.
ஸ்ரீவிமானமும் திருக்கயிலாயக் காட்சியைக் காட்டுகிற மண்டபமும் சோழர் காலப் படைப்பாக இருக்கும்போது, இவை மட்டும் ஏன் பிற்காலத்தில் சுதையால் அமைக்கப்பட்டன என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே நெடுங்காலம் தவித்து வந்தேன். சமீபத்தில்தான் அதற்கு விடை தெரிந்தது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/zdynmu/images/p42a.jpg)
அதாவது, கி.பி.14-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், தமிழகத்தில் உள்ள கோயில்கள் பலவும் சூறையாடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் கோயில் உடைமைகளைக் காப்பாற்றும் விதமாக கோயிலின் வளாகத்துக்குள்ளேயே வைத்துப் புதைத்தனர். தாராசுரத்தில் அப்படிப் புதைக்கப்பட்ட இருபத்தொரு செப்புச்சிலைகளை, இந்தியத் தொல்லியல் துறையினர் பூமியில் இருந்து அகழ்ந்து எடுத்தார்கள். அவற்றில், திருக்கயிலாய மண்டபத்து பீடத்தின் மேல் வைக்கப்பட்ட கயிலாயப் பகுதி மற்றும் ஸ்ரீஉமாதேவி என இரண்டு செப்புச் சிலைகளும் அடங்கும்.
இரண்டாம் ராஜராஜ சோழன், ராஜராஜேச்சரம் என்ற பெயரில் எடுத்த கயிலாய மலையான தாராசுரம் திருக்கோயிலின் ஸ்ரீவிமானத்துக்கு, அந்தப் பேரரசனின் மகன் மூன்றாம் குலோத்துங்கன் பொற்தகடுகளைப் போர்த்தி, பொன்மலையாகவே மாற்றி இருந்தான். இதனை அவனுடைய கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
தாராசுரம் கோயில் மண்டபத்தின் மேற்தளத்தில் ஏறி நின்று, நதி தெய்வங்களைக் கண்டு வணங்கி, அங்கே உள்ள திருக்கயிலாயக் காட்சி மண்டபத்தில், புதையுண்டு கிடைத்த செப்புத் திருமேனிகளையும் அந்த ஸ்ரீவிமானத்தை பொற்தகடுகள் போர்த்தியிருந்த பொற்கயிலையாகவும் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால், சோழப் பேரரசர்கள் காலத்தில் திகழ்ந்த அந்த பொன் கயிலாயத்தின் மாட்சிமையும், அவர்களுக்கு சிவனார் மீதும் சிவாலயங்கள் மீதும் இருந்த பக்தியும் தெளிவுறப் புலப்படும்.
- புரட்டுவோம்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/zdynmu/images/p42b.jpg)
கும்பகோணம்- தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலின் முக மண்டபமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் நிற்கிறோம்.
இங்கே, மேல்தளத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் உள்ளன. அதன் மேலேறி முதல் தளத்துக்குச் சென்றால், அங்கே ஸ்ரீவிமானத்தையட்டி ஒரு மண்டபமும், அதன் மேல்தளத்தில் மேலும் ஒரு சிறுமண்டபமும் இருக்கின்றது.
கீழ் மண்டப வெளிச்சுவரிலும் உட்சுவரிலுமாக மொத்தம் எட்டு கோஷ்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நீங்கலாக, மற்ற ஏழு கோஷ்டங்களின் மாடங்களிலும் வேறு எந்த ஆலயத்திலும் இடம்பெற்றிராத ஏழு பெண்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏழு பெண்களும், நதி தெய்வங்கள்.
இடுப்புக்கு மேலே பெண் உருவமும், இடுப்புக்குக் கீழே நீர்ச்சுழலுமாகத் திகழும் அந்தப் பெண்களின் ஒரு கரத்தில் தண்ணீர்ச் சொம்பு, மறு கரத்தில் தாமரை, குவளை போன்ற மலர்களில் ஒன்று எனக் காணலாம். இவை, நம் இந்திய தேசத்தின் புனித நதி தெய்வங்களின் உருவங்கள். நதிப்பெண்கள் என்பதால், இடுப்புக்குக் கீழே தண்ணீர்த்திரளைச் சுழலுடன் சோழச் சிற்பிகள் நயமாகக் காட்டியுள்ளனர்.
மேல் தளத்தில், ஏழு நதிப் பெண்களின் சிற்பங்கள் காணக் கிடைத்தாலும், கங்கை எனும் நதிமகளை, தரைத்தளமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் உள்ளே மாடம் ஒன்றில் முழுப் பெண்ணாகவே வடித்துள்ளான் சிற்பி. கருப்பு நிறத்திலான, உயர்ந்த கருங்கல்லில் இந்தச் சிற்பத்தை வெகு அழகாக வடித்துள்ள விதம் ரசிக்கத்தக்கது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/zdynmu/images/p42.jpg)
மகுடம் அணிந்து, பேரெழிலுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீகங்காதேவி. வலது கரத்தில் மலர்ந்திருக்கிற தாமரைப் பூவையும், இடது கரத்தில் தண்ணீர்ச் சொம்பையும் ஏந்தியபடி இருக்கிறாள் அவள். இந்தச் சிற்பத்துக்கு மேலே கோஷ்டப் பகுதியில், சோழர் கால எழுத்துப் பொறிப்பாக, 'கங்காதேவி’ என்ற பெயர் செந்தூர எழுத்துகளில் மங்கிய நிலையில் காணப்படுகிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் ஸ்ரீநாகேஸ்வரன் கோயிலில் பதிகம் பாடிய திருநாவுக்கரசர் கங்கை, யமுனை, சரஸ்வதி, தாவி (சிந்து நதியில் இணையும் காஷ்மீர நாட்டு நதி), கோமதி, கோதாவரி, பொன்னியாம் காவிரி என ஏழு நதி தெய்வங்கள் கும்பகோணத்துக்கு வந்து ஈசனை வழிபட்டதாகப் பாடியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள ஏழு நதி தெய்வங்களை, இங்கே தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலில் சிற்பமாகப் பார்க்கிறோம்.
அதேபோல், இந்தக் கோயிலில் வியக்க வைக்கும் இன்னொரு சிற்ப நுட்பம்... திருக்கயிலாயக் காட்சி. ஏழு நதி தெய்வங்கள் உள்ள மண்டபத்தின் மேற்தளத்தில் உள்ள சிறுமண்டபம், ஸ்ரீவிமானத்தின் கிழக்கு முகத்துடன் இணைந்துள்ளது. அந்த மண்டபத்தின் தென்புறம் மற்றும் வடபுறம் உள்ள சுவர்களின் வெளிப்புறம் திருக்கயிலாய மலையில் சிவபெருமானைத் தொழுது நிற்கும் தெய்வங்கள், இருடிகள், கணங்கள் என நூற்றுக்கணக்கானவர்களின் சிற்றுருவச் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இந்தச் சிறுமண்டபமும் ஸ்ரீவிமானமும் இங்கே திருக்கயிலாய மலையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிறுமண்டபத்தின் உள்ளே உள்ள கற்பீடத்தின் மேலே, அமர்ந்த கோலத்தில் சிவபெரு மானும் உமாதேவியும் இருக்க, அருகே மற்றொரு பெண் தெய்வம் நின்ற கோலத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இந்த மூன்று வடிவங்களும் கி.பி.15-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு, சுண்ணாம்புச் சுதையால் வடிக்கப்பட்டவை.
ஸ்ரீவிமானமும் திருக்கயிலாயக் காட்சியைக் காட்டுகிற மண்டபமும் சோழர் காலப் படைப்பாக இருக்கும்போது, இவை மட்டும் ஏன் பிற்காலத்தில் சுதையால் அமைக்கப்பட்டன என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே நெடுங்காலம் தவித்து வந்தேன். சமீபத்தில்தான் அதற்கு விடை தெரிந்தது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P42a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/05/zdynmu/images/p42a.jpg)
அதாவது, கி.பி.14-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், தமிழகத்தில் உள்ள கோயில்கள் பலவும் சூறையாடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் கோயில் உடைமைகளைக் காப்பாற்றும் விதமாக கோயிலின் வளாகத்துக்குள்ளேயே வைத்துப் புதைத்தனர். தாராசுரத்தில் அப்படிப் புதைக்கப்பட்ட இருபத்தொரு செப்புச்சிலைகளை, இந்தியத் தொல்லியல் துறையினர் பூமியில் இருந்து அகழ்ந்து எடுத்தார்கள். அவற்றில், திருக்கயிலாய மண்டபத்து பீடத்தின் மேல் வைக்கப்பட்ட கயிலாயப் பகுதி மற்றும் ஸ்ரீஉமாதேவி என இரண்டு செப்புச் சிலைகளும் அடங்கும்.
இரண்டாம் ராஜராஜ சோழன், ராஜராஜேச்சரம் என்ற பெயரில் எடுத்த கயிலாய மலையான தாராசுரம் திருக்கோயிலின் ஸ்ரீவிமானத்துக்கு, அந்தப் பேரரசனின் மகன் மூன்றாம் குலோத்துங்கன் பொற்தகடுகளைப் போர்த்தி, பொன்மலையாகவே மாற்றி இருந்தான். இதனை அவனுடைய கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
தாராசுரம் கோயில் மண்டபத்தின் மேற்தளத்தில் ஏறி நின்று, நதி தெய்வங்களைக் கண்டு வணங்கி, அங்கே உள்ள திருக்கயிலாயக் காட்சி மண்டபத்தில், புதையுண்டு கிடைத்த செப்புத் திருமேனிகளையும் அந்த ஸ்ரீவிமானத்தை பொற்தகடுகள் போர்த்தியிருந்த பொற்கயிலையாகவும் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால், சோழப் பேரரசர்கள் காலத்தில் திகழ்ந்த அந்த பொன் கயிலாயத்தின் மாட்சிமையும், அவர்களுக்கு சிவனார் மீதும் சிவாலயங்கள் மீதும் இருந்த பக்தியும் தெளிவுறப் புலப்படும்.
- புரட்டுவோம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 5
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
குடந்தை நாகேச்சரம்
பல்லவ தேசமான காஞ்சிபுரத்தையும், சோழ தேசமான திருக்குடந்தை எனும் கும்பகோணத்தையும் 'கோயில் நகரம்’ என்று சொல்வார்கள். எங்கு திரும்பினாலும் கோபுரங்கள்; எந்தத் தெருவில் நுழைந்தாலும் கோயில்கள்.
வடமேற்கில் கும்பேச்சரம் ஸ்ரீசார்ங்கபாணி கோயிலும், தென்மேற்கில் ஸ்ரீபிரம்மன் கோயிலும், தென்கிழக்கில் மகாமகக் குளத்துடன் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலும் (காரோணம்), வடகிழக்கில் ஸ்ரீபாணபுரீஸ்வரர் கோயிலும், வடக்கில் ஸ்ரீசக்ரபாணி கோயிலும் எனக் கோயில்களால் சூழ்ந்த கும்பகோணத்தில், இவை அனைத்துக்கும் நடுவில் கீழ்க்கோட்டம் எனும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது, திருநாகேஸ்வரம் எனும் தலத்தில் இருந்து வேறுபட்டது. திருநாவுக்கரசர் இந்த ஆலயத்தை 'குடந்தைக் கீழ்க்கோட்டம்’ எனத் தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முற்காலச் சோழர் காலக் கோயில்கள் வரிசையில் இந்த ஆலயம் முக்கிய இடம் வகிக்கும் தலமாகத் திகழ்கிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்கள், சூரியக் கதிர்கள் ஸ்ரீநாகேஸ்வரர் திருமேனியைத் தீண்டுவது சிறப்பு. கருவறை கோஷ்டங்களில் உள்ள தெய்வத் திருமேனிகளும் சோழ அரச- அரசியர் சிற்பங்களும் நேர்த்தியான கலைப் படைப்புகளாகத் திகழ்கின்றன.
மூலஸ்தானத்துக்கு முன்னே உள்ள மண்டபத்தின் தென்புறம், சிறிய கோயில் அமைந்துள்ளது. அதில் ஸ்ரீகணபதியார் சிற்பம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் இப்படியான கலை வடிவுடன் கூடிய கணபதியாரைக் காண்பது அரிது! வழவழப்பான கறுப்பு வண்ணக் கல்லில், பீடத்தின் மேல் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீபிள்ளையார். கீழ் நோக்கிய இரண்டு கரங்களில் அட்சமாலையும் கதையும் கொண்டிருக்க, வலது முன்கரத்தில் ஒடிந்த தந்தமும், இடது முன்கரத்தில் மோதகப் பாத்திரமும் ஏந்தியுள்ளார்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P22a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/zjblzt/images/p22a.jpg)
அதுமட்டுமா? விநாயகப் பெருமானின் துதிக்கை, மோதகத்தை ஒடுக்கும் நிலையில் உள்ளது. தலைக்கும் மேலே உள்ள அலங்கார திருவாசியும் அதற்கும் மேலாக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருக்கிற கந்தர்வர்களும் கொள்ளை அழகு! கீழே ஒருபக்கம் எலியும் மறுபக்கம் சிவகணமும் இருப்பதைப் பார்க்கலாம்.
தமிழகத்தின் சிற்ப அமைப்பில் இருந்து மாறுபட்ட இந்த விநாயகப் பெருமானுக்குச் சுவையான வரலாறு ஒன்றும் உண்டு. கி.பி.1012-ல் இருந்து 1044-ஆம் வருடம் வரை ஆட்சி செய்த கங்கை கொண்ட சோழன் எனப்படும் முதலாம் ராஜேந்திர சோழனின் படைகள், தற்போதைய வங்க தேசம் வரை சென்று பல நாடுகளை வென்று வந்தன. அங்கிருந்து பொருட்களை அள்ளி வந்தார்கள். அப்போது குடம் குடமாகக் கங்கை நீரையும் இங்கே எடுத்து வந்தார்கள்.
வங்க தேசத்து பாலர் மரபு அரசனான மகிபாலனை வென்ற சோழப்படை, வங்கத்தில் வழிபாட்டில் இருந்த கணபதியார் திருமேனி ஒன்றையும் எடுத்து வந்து, அதைக் குடந்தை கீழ்க்கோட்டமான ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்து, வழிபடலானார்கள். அந்தச் சிற்பமே இந்த ஸ்ரீவிநாயகர் திருமேனி. இவரை கங்கைகொண்ட விநாயகர் என்றே அழைக்கின்றனர்.
இந்தக் கோயிலில் நாம காணவேண்டிய மற்றொரு இடம்... கூத்தம்பலம் எனும் ஸ்ரீநடராஜ பெருமானின் மண்டபம். இந்த மண்டபம், ஆகாயத்தில் செல்லும் தேர் மண்டபம்போல் கட்டப்பட்டிருப்பது சிறப்பு. கல் தேராகத் திகழும் மண்டபத்தின் இரண்டு பக்கமும் சுமார் 9 அடி உயரத்தில் இரண்டு தேர்ச் சக்கரங்கள் உள்ளன. அந்தச் சக்கரங்களின் ஆரக்கால்களாக பன்னிரு ஆதித்தர்களின் (சூரியர்களின்) சிற்பங்களைக் கண்டு ரசிக்கலாம்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P22b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/zjblzt/images/p22b.jpg)
ஒரே கல்லால் ஆன சக்கரம், தேரின் அச்சில் மாட்டப்பட்டிருக்கும். சக்கரங்களுக்கு முன்னே இரண்டு பக்கமும் குதிரைகள் தரையில் கால்கள் பாவாத நிலையில், பாய்ந்தபடி தேரை விண்ணில் இழுத்துச் செல்கின்ற சாதுர்யத்தை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.
தேர் மண்டபத்தின் உள்ளே சென்று பார்த்தால், பிரபஞ்ச பேரியக்கமாக விளங்கும் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் ஆடிய வண்ணம் இருக்க, ஸ்ரீஉமாதேவி கைத்தாளம் இசைத்தபடி நிற்கிறார். திருமாலோ குழலொன்றினை இசைத்தபடி காட்சி தருகிறார். செம்பில் வடிக்கப் பெற்ற இவை, சோழர்தம் கலைத்திறனின் உச்சபட்ச வெளிப்பாடாகத் திகழ்கின்றன.
ஸ்ரீவிமானத்தின் தென்புறம் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோஷ்டத்துக்கு மேலாக முதல் தளத்தில் காணப்படும் ஸ்ரீவீணாதரர் சிற்பத்துக்கு இணையானதொரு சிற்பத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. 'வருங்கடல் மீள எம் இறை நல்வீணை வாசிக்குமே’ என்ற நாவுக்கரசரின் வாக்கு, இங்கு உயிர்ப்புடன் திகழ்வதைக் காணலாம்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P22](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/zjblzt/images/p22.jpg)
ஸ்ரீவிமானத்தின் அடித்தளமான அதிஷ்டானத்து கண்டபாத வரியில் 4 அங்குல உயரம் 4 அங்குல அகலம் உள்ள சிறுசிறு பகுதிகளாக 56 சிற்பப் படைப்புகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ராமாயணக் காட்சிகள். கலைக்கோட்டு முனிவர் செய்யும் புத்திர காமேஷ்டி யாகக் காட்சியில் தொடங்கி, ஸ்ரீராம கதை முழுவதும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இதே ஸ்ரீவிமானத்தில் சிவபுராணக் காட்சிகளும், நடன இசைக் கலைஞர்களின் சிற்பங்களும் அழகுற இடம் பெற்றுள்ளன.
இந்தக் கோயிலில் உள்ள செப்பேடு, சிறப்புக்கு உரியது. 18-ஆம் நூற்றாண்டில், தஞ்சை மராட்டிய மன்னர் துளஜாராஜா காலத்தில் இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி, அறக்கட்டளை ஒன்றை இந்தக் கோயிலில் அமைத்தனர். அதுகுறித்து செப்பேட்டு சாசனமும் எழுதிவைத்தனர். அந்தச் செப்பேட்டின் ஒரு பக்கத்தில் இந்தக் கோயில் இறையுருவங் களையும், கலைஞர்கள் வாசித்த 50 இசைக்கருவிகளையும் சிறிய உருவங்களாகச் செய்து அதில் பதித்துள்ளனர். இத்தனைப் பெருமைகள் கொண்டதாலும் நுண்கலைப் படைப்புகளாலும் தனித்தன்மையுடன் திகழ்கிறது குடந்தை ஸ்ரீநாகேச்சரம்.
- புரட்டுவோம்
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
குடந்தை நாகேச்சரம்
பல்லவ தேசமான காஞ்சிபுரத்தையும், சோழ தேசமான திருக்குடந்தை எனும் கும்பகோணத்தையும் 'கோயில் நகரம்’ என்று சொல்வார்கள். எங்கு திரும்பினாலும் கோபுரங்கள்; எந்தத் தெருவில் நுழைந்தாலும் கோயில்கள்.
வடமேற்கில் கும்பேச்சரம் ஸ்ரீசார்ங்கபாணி கோயிலும், தென்மேற்கில் ஸ்ரீபிரம்மன் கோயிலும், தென்கிழக்கில் மகாமகக் குளத்துடன் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலும் (காரோணம்), வடகிழக்கில் ஸ்ரீபாணபுரீஸ்வரர் கோயிலும், வடக்கில் ஸ்ரீசக்ரபாணி கோயிலும் எனக் கோயில்களால் சூழ்ந்த கும்பகோணத்தில், இவை அனைத்துக்கும் நடுவில் கீழ்க்கோட்டம் எனும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது, திருநாகேஸ்வரம் எனும் தலத்தில் இருந்து வேறுபட்டது. திருநாவுக்கரசர் இந்த ஆலயத்தை 'குடந்தைக் கீழ்க்கோட்டம்’ எனத் தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முற்காலச் சோழர் காலக் கோயில்கள் வரிசையில் இந்த ஆலயம் முக்கிய இடம் வகிக்கும் தலமாகத் திகழ்கிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்கள், சூரியக் கதிர்கள் ஸ்ரீநாகேஸ்வரர் திருமேனியைத் தீண்டுவது சிறப்பு. கருவறை கோஷ்டங்களில் உள்ள தெய்வத் திருமேனிகளும் சோழ அரச- அரசியர் சிற்பங்களும் நேர்த்தியான கலைப் படைப்புகளாகத் திகழ்கின்றன.
மூலஸ்தானத்துக்கு முன்னே உள்ள மண்டபத்தின் தென்புறம், சிறிய கோயில் அமைந்துள்ளது. அதில் ஸ்ரீகணபதியார் சிற்பம் ஒன்று உள்ளது. தமிழகத்தில் இப்படியான கலை வடிவுடன் கூடிய கணபதியாரைக் காண்பது அரிது! வழவழப்பான கறுப்பு வண்ணக் கல்லில், பீடத்தின் மேல் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீபிள்ளையார். கீழ் நோக்கிய இரண்டு கரங்களில் அட்சமாலையும் கதையும் கொண்டிருக்க, வலது முன்கரத்தில் ஒடிந்த தந்தமும், இடது முன்கரத்தில் மோதகப் பாத்திரமும் ஏந்தியுள்ளார்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P22a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/zjblzt/images/p22a.jpg)
அதுமட்டுமா? விநாயகப் பெருமானின் துதிக்கை, மோதகத்தை ஒடுக்கும் நிலையில் உள்ளது. தலைக்கும் மேலே உள்ள அலங்கார திருவாசியும் அதற்கும் மேலாக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருக்கிற கந்தர்வர்களும் கொள்ளை அழகு! கீழே ஒருபக்கம் எலியும் மறுபக்கம் சிவகணமும் இருப்பதைப் பார்க்கலாம்.
தமிழகத்தின் சிற்ப அமைப்பில் இருந்து மாறுபட்ட இந்த விநாயகப் பெருமானுக்குச் சுவையான வரலாறு ஒன்றும் உண்டு. கி.பி.1012-ல் இருந்து 1044-ஆம் வருடம் வரை ஆட்சி செய்த கங்கை கொண்ட சோழன் எனப்படும் முதலாம் ராஜேந்திர சோழனின் படைகள், தற்போதைய வங்க தேசம் வரை சென்று பல நாடுகளை வென்று வந்தன. அங்கிருந்து பொருட்களை அள்ளி வந்தார்கள். அப்போது குடம் குடமாகக் கங்கை நீரையும் இங்கே எடுத்து வந்தார்கள்.
வங்க தேசத்து பாலர் மரபு அரசனான மகிபாலனை வென்ற சோழப்படை, வங்கத்தில் வழிபாட்டில் இருந்த கணபதியார் திருமேனி ஒன்றையும் எடுத்து வந்து, அதைக் குடந்தை கீழ்க்கோட்டமான ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்து, வழிபடலானார்கள். அந்தச் சிற்பமே இந்த ஸ்ரீவிநாயகர் திருமேனி. இவரை கங்கைகொண்ட விநாயகர் என்றே அழைக்கின்றனர்.
இந்தக் கோயிலில் நாம காணவேண்டிய மற்றொரு இடம்... கூத்தம்பலம் எனும் ஸ்ரீநடராஜ பெருமானின் மண்டபம். இந்த மண்டபம், ஆகாயத்தில் செல்லும் தேர் மண்டபம்போல் கட்டப்பட்டிருப்பது சிறப்பு. கல் தேராகத் திகழும் மண்டபத்தின் இரண்டு பக்கமும் சுமார் 9 அடி உயரத்தில் இரண்டு தேர்ச் சக்கரங்கள் உள்ளன. அந்தச் சக்கரங்களின் ஆரக்கால்களாக பன்னிரு ஆதித்தர்களின் (சூரியர்களின்) சிற்பங்களைக் கண்டு ரசிக்கலாம்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P22b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/zjblzt/images/p22b.jpg)
ஒரே கல்லால் ஆன சக்கரம், தேரின் அச்சில் மாட்டப்பட்டிருக்கும். சக்கரங்களுக்கு முன்னே இரண்டு பக்கமும் குதிரைகள் தரையில் கால்கள் பாவாத நிலையில், பாய்ந்தபடி தேரை விண்ணில் இழுத்துச் செல்கின்ற சாதுர்யத்தை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.
தேர் மண்டபத்தின் உள்ளே சென்று பார்த்தால், பிரபஞ்ச பேரியக்கமாக விளங்கும் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் ஆடிய வண்ணம் இருக்க, ஸ்ரீஉமாதேவி கைத்தாளம் இசைத்தபடி நிற்கிறார். திருமாலோ குழலொன்றினை இசைத்தபடி காட்சி தருகிறார். செம்பில் வடிக்கப் பெற்ற இவை, சோழர்தம் கலைத்திறனின் உச்சபட்ச வெளிப்பாடாகத் திகழ்கின்றன.
ஸ்ரீவிமானத்தின் தென்புறம் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோஷ்டத்துக்கு மேலாக முதல் தளத்தில் காணப்படும் ஸ்ரீவீணாதரர் சிற்பத்துக்கு இணையானதொரு சிற்பத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. 'வருங்கடல் மீள எம் இறை நல்வீணை வாசிக்குமே’ என்ற நாவுக்கரசரின் வாக்கு, இங்கு உயிர்ப்புடன் திகழ்வதைக் காணலாம்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P22](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/zjblzt/images/p22.jpg)
ஸ்ரீவிமானத்தின் அடித்தளமான அதிஷ்டானத்து கண்டபாத வரியில் 4 அங்குல உயரம் 4 அங்குல அகலம் உள்ள சிறுசிறு பகுதிகளாக 56 சிற்பப் படைப்புகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ராமாயணக் காட்சிகள். கலைக்கோட்டு முனிவர் செய்யும் புத்திர காமேஷ்டி யாகக் காட்சியில் தொடங்கி, ஸ்ரீராம கதை முழுவதும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இதே ஸ்ரீவிமானத்தில் சிவபுராணக் காட்சிகளும், நடன இசைக் கலைஞர்களின் சிற்பங்களும் அழகுற இடம் பெற்றுள்ளன.
இந்தக் கோயிலில் உள்ள செப்பேடு, சிறப்புக்கு உரியது. 18-ஆம் நூற்றாண்டில், தஞ்சை மராட்டிய மன்னர் துளஜாராஜா காலத்தில் இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி, அறக்கட்டளை ஒன்றை இந்தக் கோயிலில் அமைத்தனர். அதுகுறித்து செப்பேட்டு சாசனமும் எழுதிவைத்தனர். அந்தச் செப்பேட்டின் ஒரு பக்கத்தில் இந்தக் கோயில் இறையுருவங் களையும், கலைஞர்கள் வாசித்த 50 இசைக்கருவிகளையும் சிறிய உருவங்களாகச் செய்து அதில் பதித்துள்ளனர். இத்தனைப் பெருமைகள் கொண்டதாலும் நுண்கலைப் படைப்புகளாலும் தனித்தன்மையுடன் திகழ்கிறது குடந்தை ஸ்ரீநாகேச்சரம்.
- புரட்டுவோம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 6
ஆலயம் ஆயிரம்!
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P30](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p30.jpg)
குடுமியான்மலை. புதுக் கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம். ஒருகாலத்தில், பண்டு திருநலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் அழைக் கப்பட்டதாக, இந்த ஊர் ஆலயத்தின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
சின்ன ஊர். அதன் நடுவே அழகிய மலை. அதன் அடிவாரத்தில் குடைவரைக் கோயில். இதையட்டி, பிற்காலப் பாண்டிய மன்னன் எடுப்பித்த ஸ்ரீசிகாநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு நேர்கிழக்கே, அழகிய இடப மண்டபம்; மண்டபத்துக்கு முன்னே கோயிலின் புஷ்கரணியான பாற்குளம். ஒருமுறையேனும் இந்த இடத்துக்கு வந்து, சிற்ப நுட்பங்களையும் ஆலயக் கட்டுமானத்தையும் கண்ணாரப் பார்க்கவேண்டும்.
இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னம் இது. அதேநேரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகச் சிறந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்று என்றும் போற்றப்படுகிறது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P31](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p31.jpg)
கோயிலுக்குள் நுழைந்தால்... களஞ்சியமெனக் காட்சி தரும் சிற்பங்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவோம். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவாலயம் இது. கருவறையில் சிவலிங்கம், முன்மண்டபத்தில் ரிஷபம், சுவரில் ஸ்ரீகணபதி, கருவறை வாசலில் துவாரபாலகர்கள் என மிக நேர்த்தியான சிற்பங்கள்; நுட்பமான வேலைப்பாடுகள்! மலையைக் குடையும்போதே சிற்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிய, ஆச்சரியப்பட்டுப் போகிறது மனம்.
பல்லவ மன்னர்கள்தான் குடைவரைக் கோயில்களுக்குப் பெயர் பெற்று விளங்கினார்கள். கருவறையை அப்படியே வெட்டியெடுத்து, பிறகு சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்வது அவர்கள் வழக்கம். ஆனால், முற்காலப் பாண்டியர் குடைவரைகளில், மலையைக் குடையும்போதே லிங்கத் திருமேனியையும் ரிஷபத்தையும் உருவாக்கிவைத்தார்கள். இதோ, இங்கே குடுமியான்மலை தலத்திலும் குடைவரைக் கோயிலாக அவற்றைக் காண முடிகிறது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P31a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p31a.jpg)
அதுமட்டுமா? முற்காலப் பாண்டியர்கள் தனியே தோற்றுவித்த ஸ்ரீசண்டீசர் திருமேனியும் அழகுற அமைந்துள்ளது, இங்கே. அற்புதமான திருமேனியில், அழகே உருவெனக் கொண்டு காட்சி தரும் அழகே அழகு!
இந்தியாவில் வேறு எந்த ஆலயத்துக்கும் இல்லாத சிறப்பு இந்தக் குடைவரைக் கோயிலுக்கு உண்டு. அதாவது, கோயிலின் வெளிப்புறம் மலைப்பாறையின் நடுவே ஸ்ரீவிநாயகரின் திருவுருவத்தை அமைத்து, அதைச் சுற்றிலும் கல்வெட்டு எழுத்துக்களைப் பொறித்து வைத்துள்ளனர். இசையின் இலக்கணத்தைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் இவை.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P32](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p32.jpg)
ஏழாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில், 'சித்தம் நமசிவாய’ என்று சிவ வணக்கத்துடன் துவங்குகிற குறிப்புகளைப் படிக்க முடிகிறது. இங்கு 'பரிவாதினி’ என்று வீணை பற்றிய குறிப்பும் உள்ளது.
இந்தக் குடைவரைக் கோயிலுக்கென பின்னாளில் (கி.பி.13-ஆம் நூற்றாண்டில்) துக்கையாண்டி என்பவரின் மகள் நாச்சி எனும் தேவரடியார், அம்மன் கோயில் ஒன்றை இங்கே எழுப்பியுள்ளாள்.
குடைவரைக்கோயிலுக்கு எதிரில் பெரிய அளவில் எடுக்கப்பட்ட ஸ்ரீசிகாநாதர் ஆலயத்தின் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. திருமாலின் தசாவதாரம், ரதி- மன்மதன், ராவணன், வாலி, ஸ்ரீஅனுமன், அகோர வீரபத்திரர், ஸ்ரீகாளி, ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீஆறுமுகப் பெருமான் ஆகியோரின் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P32a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p32a.jpg)
குறிப்பாக, கோயிலின் உள்ளே இருந்தபடி, குடுமியான்மலையின் மேலே உள்ள முகடு ஒன்றை உற்றுநோக்கினால், அங்கே ரிஷபாரூடராக சிவனார் எழுந்தருள... அறுபத்து மூன்று நாயன்மார்களும் அருகில் கைகூப்பியபடி நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். அந்த மலைமுகட்டில் சிவனாரும் நாயன்மார்களும் வானமண்டலத்தில் தோன்றி நமக்குக் காட்சி அளிப்பது போலான அந்தச் சிற்பப் படைப்பை வேறங்கும் காண்பது அரிது!
கோயிலுக்குக் கிழக்கில் உள்ள ரிஷப மண்டபத்தை அடுத்து உள்ள திருக்குளத்தில், அற்புதமான சிற்பம் அமைந்துள்ளது. அதாவது, குளத்துக்கு மழை நீரைக் கொண்டு வரும் கால்வாயில் கற்பலகை ஒன்று குறுக்கே நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பசுவின் உருவத்தைக் காணலாம். பசுவின் மடிக்காம்பு உள்ள இடத்தில், சிற்பப் பலகையில் துளையிடப்பட்டுள்ளது. அந்தத் துளை வழியே, மழை நீரானது குளத்துக்குள் வந்து விழும். அதாவது, சட்டென்று பார்த்தால், பசுவின் மடியில் இருந்து பால் பெருக்கெடுத்து வந்து குளத்தில் விழுவதுபோல் தோன்றும். அதனால்தான் இந்தக் குளத்துக்கு பாற்குளம் என்று பெயர் அமைந்ததாம்.
என்ன அழகிய கற்பனை பாருங்களேன்! அதாவது, திருக்குளத்து நீரையும் புனிதமான பசும்பாலாகக் கருதவேண்டும் என நமக்குக் கற்பித்த அந்தச் சிற்பியை எவ்வளவு பாராட்டினாலும் தகுமல்லவா!
- புரட்டுவோம்
ஆலயம் ஆயிரம்!
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P30](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p30.jpg)
குடுமியான்மலை. புதுக் கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம். ஒருகாலத்தில், பண்டு திருநலக்குன்றம் என்றும், சிகாநல்லூர் என்றும் அழைக் கப்பட்டதாக, இந்த ஊர் ஆலயத்தின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
சின்ன ஊர். அதன் நடுவே அழகிய மலை. அதன் அடிவாரத்தில் குடைவரைக் கோயில். இதையட்டி, பிற்காலப் பாண்டிய மன்னன் எடுப்பித்த ஸ்ரீசிகாநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு நேர்கிழக்கே, அழகிய இடப மண்டபம்; மண்டபத்துக்கு முன்னே கோயிலின் புஷ்கரணியான பாற்குளம். ஒருமுறையேனும் இந்த இடத்துக்கு வந்து, சிற்ப நுட்பங்களையும் ஆலயக் கட்டுமானத்தையும் கண்ணாரப் பார்க்கவேண்டும்.
இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னம் இது. அதேநேரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிகச் சிறந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்று என்றும் போற்றப்படுகிறது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P31](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p31.jpg)
கோயிலுக்குள் நுழைந்தால்... களஞ்சியமெனக் காட்சி தரும் சிற்பங்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவோம். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவாலயம் இது. கருவறையில் சிவலிங்கம், முன்மண்டபத்தில் ரிஷபம், சுவரில் ஸ்ரீகணபதி, கருவறை வாசலில் துவாரபாலகர்கள் என மிக நேர்த்தியான சிற்பங்கள்; நுட்பமான வேலைப்பாடுகள்! மலையைக் குடையும்போதே சிற்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை அறிய, ஆச்சரியப்பட்டுப் போகிறது மனம்.
பல்லவ மன்னர்கள்தான் குடைவரைக் கோயில்களுக்குப் பெயர் பெற்று விளங்கினார்கள். கருவறையை அப்படியே வெட்டியெடுத்து, பிறகு சிவலிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்வது அவர்கள் வழக்கம். ஆனால், முற்காலப் பாண்டியர் குடைவரைகளில், மலையைக் குடையும்போதே லிங்கத் திருமேனியையும் ரிஷபத்தையும் உருவாக்கிவைத்தார்கள். இதோ, இங்கே குடுமியான்மலை தலத்திலும் குடைவரைக் கோயிலாக அவற்றைக் காண முடிகிறது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P31a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p31a.jpg)
அதுமட்டுமா? முற்காலப் பாண்டியர்கள் தனியே தோற்றுவித்த ஸ்ரீசண்டீசர் திருமேனியும் அழகுற அமைந்துள்ளது, இங்கே. அற்புதமான திருமேனியில், அழகே உருவெனக் கொண்டு காட்சி தரும் அழகே அழகு!
இந்தியாவில் வேறு எந்த ஆலயத்துக்கும் இல்லாத சிறப்பு இந்தக் குடைவரைக் கோயிலுக்கு உண்டு. அதாவது, கோயிலின் வெளிப்புறம் மலைப்பாறையின் நடுவே ஸ்ரீவிநாயகரின் திருவுருவத்தை அமைத்து, அதைச் சுற்றிலும் கல்வெட்டு எழுத்துக்களைப் பொறித்து வைத்துள்ளனர். இசையின் இலக்கணத்தைப் பறைசாற்றும் கல்வெட்டுகள் இவை.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P32](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p32.jpg)
ஏழாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில், 'சித்தம் நமசிவாய’ என்று சிவ வணக்கத்துடன் துவங்குகிற குறிப்புகளைப் படிக்க முடிகிறது. இங்கு 'பரிவாதினி’ என்று வீணை பற்றிய குறிப்பும் உள்ளது.
இந்தக் குடைவரைக் கோயிலுக்கென பின்னாளில் (கி.பி.13-ஆம் நூற்றாண்டில்) துக்கையாண்டி என்பவரின் மகள் நாச்சி எனும் தேவரடியார், அம்மன் கோயில் ஒன்றை இங்கே எழுப்பியுள்ளாள்.
குடைவரைக்கோயிலுக்கு எதிரில் பெரிய அளவில் எடுக்கப்பட்ட ஸ்ரீசிகாநாதர் ஆலயத்தின் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. திருமாலின் தசாவதாரம், ரதி- மன்மதன், ராவணன், வாலி, ஸ்ரீஅனுமன், அகோர வீரபத்திரர், ஸ்ரீகாளி, ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீஆறுமுகப் பெருமான் ஆகியோரின் சிற்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P32a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/06/yjyyjq/images/p32a.jpg)
குறிப்பாக, கோயிலின் உள்ளே இருந்தபடி, குடுமியான்மலையின் மேலே உள்ள முகடு ஒன்றை உற்றுநோக்கினால், அங்கே ரிஷபாரூடராக சிவனார் எழுந்தருள... அறுபத்து மூன்று நாயன்மார்களும் அருகில் கைகூப்பியபடி நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். அந்த மலைமுகட்டில் சிவனாரும் நாயன்மார்களும் வானமண்டலத்தில் தோன்றி நமக்குக் காட்சி அளிப்பது போலான அந்தச் சிற்பப் படைப்பை வேறங்கும் காண்பது அரிது!
கோயிலுக்குக் கிழக்கில் உள்ள ரிஷப மண்டபத்தை அடுத்து உள்ள திருக்குளத்தில், அற்புதமான சிற்பம் அமைந்துள்ளது. அதாவது, குளத்துக்கு மழை நீரைக் கொண்டு வரும் கால்வாயில் கற்பலகை ஒன்று குறுக்கே நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பசுவின் உருவத்தைக் காணலாம். பசுவின் மடிக்காம்பு உள்ள இடத்தில், சிற்பப் பலகையில் துளையிடப்பட்டுள்ளது. அந்தத் துளை வழியே, மழை நீரானது குளத்துக்குள் வந்து விழும். அதாவது, சட்டென்று பார்த்தால், பசுவின் மடியில் இருந்து பால் பெருக்கெடுத்து வந்து குளத்தில் விழுவதுபோல் தோன்றும். அதனால்தான் இந்தக் குளத்துக்கு பாற்குளம் என்று பெயர் அமைந்ததாம்.
என்ன அழகிய கற்பனை பாருங்களேன்! அதாவது, திருக்குளத்து நீரையும் புனிதமான பசும்பாலாகக் கருதவேண்டும் என நமக்குக் கற்பித்த அந்தச் சிற்பியை எவ்வளவு பாராட்டினாலும் தகுமல்லவா!
- புரட்டுவோம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 7
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P46d](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjnimu/images/p46d.jpg)
நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட பிரமாண்டமான கோயில் நகரம், காஞ்சிபுரம். தொண்டை நன்னாட்டுக் காஞ்சி எனப் போற்றுவார்கள். அத்தனைக் கோயில்களின் வரிசையில், திலகமெனத் திகழ்கிறது ஒரு சிவாலயம்.
கி.பி.700 முதல் 726-ஆம் வருடம் வரை நல்லாட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், மிக அருமையான சிவன் கோயில் ஒன்றை எழுப்பினான். இந்தக் கோயிலில் உள்ள இறைவனின் திருநாமம்- ஸ்ரீகயிலாசநாதர். தமிழகத்தின் சிற்பக் களஞ்சியம் என்றே இந்தக் கோயிலைச் சொல்லலாம். அதுமட்டுமா?
காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு காலத்தால் அழிக்க முடியாத மற்றொரு வரலாற்றுச் சிறப்பும் உண்டு. சோழ தேசத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழ மன்னன், இன்றைக்கும் எல்லோரும் வியக்கும்படியான பெரிய கோயிலைக் கட்டினான் அல்லவா! அப்படியரு கோயிலைக் கட்டவேண்டும், மிக அரிதான கோயிலாக அதை அமைக்க வேண்டும் என அவனுக்குள் ஆர்வத்தையும் வேகத்தையும் ஊட்டியதே இந்த ஸ்ரீகயிலாசநாதர் கோயில்தான்!
சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் எனும் இளைஞன், அரியணை ஏறியதும் வீர சபதம் ஒன்றை மேற்கொண்டான். தன் முன்னோரின் தலைநகரமான வாதாபியை பல்லவர்கள் அழித்ததால், அவர்களின் தலைநகரமான காஞ்சியைப் பூண்டோடு அழிப்பதாகச் சபதம் செய்தான். அதன்படி பெரும் படையுடன் காஞ்சிக்குள் நுழைந்தான்.அங்கே... அவன் முதலில் கண்டது ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைத்தான்!
உள்ளே நுழைந்தான். அங்கே வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு வியந்தான். கோயிலின் அழகில் சொக்கிப் போனான். கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவனின் கோபமும் பழி வாங்கும் உணர்ச்சியும் மெள்ள மெள்ள வடிந்து, காணாமல் போனது. ஸ்ரீகயிலாசநாதரின் சந்நிதிக்கு வந்து, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, சிவனாருக்குப் பொன்னையும் பொருட்களையும் வாரி வாரி வழங்கி, காணிக்கை செலுத்தினான். அங்கேயே கல்வெட்டும் பொறித்தான்!
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P46](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjnimu/images/p46.jpg)
அதுமட்டுமா? மயக்கவும் வியக்கவும் செய்த சிற்பங்களைப் படைத்த சிற்பிகளைக் கௌரவித்தான். அவர்களை சாளுக்கிய தேசத்துக்கு அழைத்துச் சென்றான். பட்டடக்கல் எனும் ஊரில், ஸ்ரீவிருபாட்சர் கோயிலைக் கட்டினான். அந்த உன்னதச் சிற்பிகளின் கைவண்ணத்தால், அந்தக் கோயில் சரித்திரத்தில் இடம்பெற்றுப் பொக்கிஷமெனத் திகழ்கிறது.
இத்துடன் முடிந்ததா சுவாரஸ்யம்?!
காஞ்சி நகரத்துச் சிற்பிகளின் கலைத் திறனில் வியந்து மிரண்ட ராஷ்டிரகூட கிருஷ்ணன், அவர்களை எல்லோராவுக்கு அழைத்துச் சென்றான். அங்கேயும் அழகியதொரு பிரமாண்ட ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உருவானது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P46b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjnimu/images/p46b.jpg)
ஆக... மரபுகளும் தேசங்களும் கடந்த மன்னர்கள் பலரும் வியந்து போற்றிய காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலே அனைத்துக்கும் மூலகாரணமாகத் திகழ்ந்தது. கோயிலின் கட்டட அமைப்பையும், அங்கே உள்ள சிற்பங்களையும் பார்த்தால்... மலைத்துப் போய்விடுவோம்.
ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு முன்னால் உள்ள திறந்த வெளியில் ஒருபுறம் சிம்மத்தூண்கள் உள்ள மேடை ஒன்று இருக்கிறது. அந்த மேடையில் ரிஷபம் ஒன்று படுத்துக் கொண்டிருக்கும் பேரழகைப் பார்க்கலாம். ஈசான மூலையில் கோயிலின் திருக்குளம் அமைந்துள்ளது. ரிஷபத்துக்கு அருகில் உடைந்த தூணில், சிம்மம் செதுக்கப் பட்டிருக்கிறது. சுமார் 1,200 வருடங்களாக, அந்தச் சிம்மம் உயிர்ப்புடன் உறுமிக்கொண்டிருக்கும் அழகே அழகு!
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P46a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjnimu/images/p46a.jpg)
ஸ்ரீகயிலாசநாதர் கோயில் திருமதிலின் கிழக்குப் பகுதியில் சிறிய கோபுரவாயில் ஒன்று உள்ளது. அந்த வாசலுக்கு வெளியே தென்புறம் இரண்டும், வடக்கில் ஆறும் என எட்டு சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் தாராலிங்கங்கள் இருந்துள்ளன. அந்த லிங்கங்களுக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் சிவபெருமான், உமையவள், மைந்தன் முருகன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பதை இன்றைக்கும் காணலாம்.
ஒவ்வொரு சிற்பமும் பேரழகு வாய்ந்தவை. இந்தச் சிற்றாலயங்களின் வெளிப்புறச் சுவர்களில் சிவபெருமானின் பல்வேறு திருக்கோலங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
திருவாயிலின் வடக்குப் புறம் உள்ள ஆறு ஆலயங்களில் முதல் ஆலயத்துக்கு 'நித்ய வினிதீஸ்வரம்’ என்ற பெயர் கல்வெட்டாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் உள்ள மூன்றாவது கோயிலை, ராஜசிம்ம பல்லவனின் பட்டமகிஷி ரங்கபதாகை என்பவள் எடுப்பித்ததாகச் சொல்கிறது கல்வெட்டு.
நுழைவாயில் கோபுரம் கடந்து உள்ளே சென்றால், சிறிய பிராகாரங்களுடன் நடுவே ஒரு பெருங்கோயில் உள்ளது. இதனை ராஜசிம்ம பல்லவனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் அமைத்துள்ளான். 'மகேந்திர வர்மேஸ்வர கிருஹம்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கோயிலின் வெளிப்புறச் சுவர்களிலும் மதிலின் இரண்டு பக்கங்களும் அற்புதமான சிற்பங்கள், நேர்த்தியுடன் வடிக்கப் பட்டுள்ளன. இடையிடையே பாய்கிற சிம்மங்கள், அதன் மேல் வீரர்கள், அகத்தியர் பெருமான், ஸ்ரீலட்சுமி, சிவ திருக்கோலங்கள் என ஒவ்வொரு சிற்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
கோயிலின் கருவறையில், எழிலார்ந்த தாராலிங்கமும் சோமாஸ்கந்தர் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபப் பக்கச் சுவர்களில் ஸ்ரீபிட்சாடனரும் சம்ஹாரத் தாண்டவரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் கோயிலுக்குப் பின்னே, அந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த ஸ்ரீகயிலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.
- புரட்டுவோம்
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P46d](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjnimu/images/p46d.jpg)
நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட பிரமாண்டமான கோயில் நகரம், காஞ்சிபுரம். தொண்டை நன்னாட்டுக் காஞ்சி எனப் போற்றுவார்கள். அத்தனைக் கோயில்களின் வரிசையில், திலகமெனத் திகழ்கிறது ஒரு சிவாலயம்.
கி.பி.700 முதல் 726-ஆம் வருடம் வரை நல்லாட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், மிக அருமையான சிவன் கோயில் ஒன்றை எழுப்பினான். இந்தக் கோயிலில் உள்ள இறைவனின் திருநாமம்- ஸ்ரீகயிலாசநாதர். தமிழகத்தின் சிற்பக் களஞ்சியம் என்றே இந்தக் கோயிலைச் சொல்லலாம். அதுமட்டுமா?
காஞ்சிபுரம் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு காலத்தால் அழிக்க முடியாத மற்றொரு வரலாற்றுச் சிறப்பும் உண்டு. சோழ தேசத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ராஜராஜ சோழ மன்னன், இன்றைக்கும் எல்லோரும் வியக்கும்படியான பெரிய கோயிலைக் கட்டினான் அல்லவா! அப்படியரு கோயிலைக் கட்டவேண்டும், மிக அரிதான கோயிலாக அதை அமைக்க வேண்டும் என அவனுக்குள் ஆர்வத்தையும் வேகத்தையும் ஊட்டியதே இந்த ஸ்ரீகயிலாசநாதர் கோயில்தான்!
சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் எனும் இளைஞன், அரியணை ஏறியதும் வீர சபதம் ஒன்றை மேற்கொண்டான். தன் முன்னோரின் தலைநகரமான வாதாபியை பல்லவர்கள் அழித்ததால், அவர்களின் தலைநகரமான காஞ்சியைப் பூண்டோடு அழிப்பதாகச் சபதம் செய்தான். அதன்படி பெரும் படையுடன் காஞ்சிக்குள் நுழைந்தான்.அங்கே... அவன் முதலில் கண்டது ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைத்தான்!
உள்ளே நுழைந்தான். அங்கே வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு வியந்தான். கோயிலின் அழகில் சொக்கிப் போனான். கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தான். அவனின் கோபமும் பழி வாங்கும் உணர்ச்சியும் மெள்ள மெள்ள வடிந்து, காணாமல் போனது. ஸ்ரீகயிலாசநாதரின் சந்நிதிக்கு வந்து, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, சிவனாருக்குப் பொன்னையும் பொருட்களையும் வாரி வாரி வழங்கி, காணிக்கை செலுத்தினான். அங்கேயே கல்வெட்டும் பொறித்தான்!
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P46](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjnimu/images/p46.jpg)
அதுமட்டுமா? மயக்கவும் வியக்கவும் செய்த சிற்பங்களைப் படைத்த சிற்பிகளைக் கௌரவித்தான். அவர்களை சாளுக்கிய தேசத்துக்கு அழைத்துச் சென்றான். பட்டடக்கல் எனும் ஊரில், ஸ்ரீவிருபாட்சர் கோயிலைக் கட்டினான். அந்த உன்னதச் சிற்பிகளின் கைவண்ணத்தால், அந்தக் கோயில் சரித்திரத்தில் இடம்பெற்றுப் பொக்கிஷமெனத் திகழ்கிறது.
இத்துடன் முடிந்ததா சுவாரஸ்யம்?!
காஞ்சி நகரத்துச் சிற்பிகளின் கலைத் திறனில் வியந்து மிரண்ட ராஷ்டிரகூட கிருஷ்ணன், அவர்களை எல்லோராவுக்கு அழைத்துச் சென்றான். அங்கேயும் அழகியதொரு பிரமாண்ட ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உருவானது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P46b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjnimu/images/p46b.jpg)
ஆக... மரபுகளும் தேசங்களும் கடந்த மன்னர்கள் பலரும் வியந்து போற்றிய காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலே அனைத்துக்கும் மூலகாரணமாகத் திகழ்ந்தது. கோயிலின் கட்டட அமைப்பையும், அங்கே உள்ள சிற்பங்களையும் பார்த்தால்... மலைத்துப் போய்விடுவோம்.
ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு முன்னால் உள்ள திறந்த வெளியில் ஒருபுறம் சிம்மத்தூண்கள் உள்ள மேடை ஒன்று இருக்கிறது. அந்த மேடையில் ரிஷபம் ஒன்று படுத்துக் கொண்டிருக்கும் பேரழகைப் பார்க்கலாம். ஈசான மூலையில் கோயிலின் திருக்குளம் அமைந்துள்ளது. ரிஷபத்துக்கு அருகில் உடைந்த தூணில், சிம்மம் செதுக்கப் பட்டிருக்கிறது. சுமார் 1,200 வருடங்களாக, அந்தச் சிம்மம் உயிர்ப்புடன் உறுமிக்கொண்டிருக்கும் அழகே அழகு!
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P46a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjnimu/images/p46a.jpg)
ஸ்ரீகயிலாசநாதர் கோயில் திருமதிலின் கிழக்குப் பகுதியில் சிறிய கோபுரவாயில் ஒன்று உள்ளது. அந்த வாசலுக்கு வெளியே தென்புறம் இரண்டும், வடக்கில் ஆறும் என எட்டு சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் தாராலிங்கங்கள் இருந்துள்ளன. அந்த லிங்கங்களுக்குப் பின்புறம் கருவறைச் சுவரில் சிவபெருமான், உமையவள், மைந்தன் முருகன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பதை இன்றைக்கும் காணலாம்.
ஒவ்வொரு சிற்பமும் பேரழகு வாய்ந்தவை. இந்தச் சிற்றாலயங்களின் வெளிப்புறச் சுவர்களில் சிவபெருமானின் பல்வேறு திருக்கோலங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
திருவாயிலின் வடக்குப் புறம் உள்ள ஆறு ஆலயங்களில் முதல் ஆலயத்துக்கு 'நித்ய வினிதீஸ்வரம்’ என்ற பெயர் கல்வெட்டாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் உள்ள மூன்றாவது கோயிலை, ராஜசிம்ம பல்லவனின் பட்டமகிஷி ரங்கபதாகை என்பவள் எடுப்பித்ததாகச் சொல்கிறது கல்வெட்டு.
நுழைவாயில் கோபுரம் கடந்து உள்ளே சென்றால், சிறிய பிராகாரங்களுடன் நடுவே ஒரு பெருங்கோயில் உள்ளது. இதனை ராஜசிம்ம பல்லவனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் அமைத்துள்ளான். 'மகேந்திர வர்மேஸ்வர கிருஹம்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கோயிலின் வெளிப்புறச் சுவர்களிலும் மதிலின் இரண்டு பக்கங்களும் அற்புதமான சிற்பங்கள், நேர்த்தியுடன் வடிக்கப் பட்டுள்ளன. இடையிடையே பாய்கிற சிம்மங்கள், அதன் மேல் வீரர்கள், அகத்தியர் பெருமான், ஸ்ரீலட்சுமி, சிவ திருக்கோலங்கள் என ஒவ்வொரு சிற்பமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
கோயிலின் கருவறையில், எழிலார்ந்த தாராலிங்கமும் சோமாஸ்கந்தர் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபப் பக்கச் சுவர்களில் ஸ்ரீபிட்சாடனரும் சம்ஹாரத் தாண்டவரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் கோயிலுக்குப் பின்னே, அந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த ஸ்ரீகயிலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.
- புரட்டுவோம்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 8
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P36t](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjuyja/images/p36t.jpg)
உலகப் புகழ்மிக்க தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்த காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியரு வியப்பின் உச்சம், இந்த ஆலயம்!
பரந்த முன்வெளியில் ரிஷபம், கோயிலுக்கு வெளியே சிறிது சிறிதான எட்டு ஆலயங்கள், அவற்றுக்குப் பின்புறத்தில் மூன்றாம் மகேந்திர பல்லவ மன்னன் எடுப்பித்த நித்திய வனிதீஸ்வரம் எனப்படும் சிவன் கோயில்.... 'கச்சிப்பேட்டுப் பெரிய தளி’ என்று பராந்தக சோழனும் ராஜராஜ சோழனும் கல்வெட்டுகளில் குறிப்பிடும் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு முன்னே உள்ள பிரமிக்கத்தக்க விஷயங்கள் இவையெல்லாம்!
கோயிலின் நான்குபுறமும் பிரமாண்ட மதில் சூழ்ந்திருக்க, திருக்கயிலாய மலையாகவே திகழ்கிறது ஆலயம். இதனை ராஜசிம்ம பல்லவ மன்னன் எடுப்பித்தான். எனவே, இந்தத் தலம் 'ராஜசிம்ம பல்லவ ஈஸ்வரம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P36](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjuyja/images/p36.jpg)
பிராகாரச் சுவரில், திருமதிலின் வெளிப்புறம் முழுவதிலும் பாய்ந்து நிற்கிற சிம்மச் சிற்பங்களைக் காணலாம். உள்ளே... வேறு எந்தக் கோயிலிலும் தரிசிப்பது அரிது என்னும்படியாக, சுமார் 53 சிற்றாலயங்கள், சிம்மத்தூண் மண்டபங்களுடன் திகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலான இடங்களில், சிவபெருமான் உமையவளுடனும் பிள்ளை கந்தபிரானுடனும் காட்சி தரும் புடைப்புச் சிற்பங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.
கோயிலின் உள்ளே உள்ள பல சிற்றாலயங்களில் சிவபெருமான், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு முதலானோரின் தெய்வத் திருவுருவங்கள், பல்வேறு திருக்கோலங்களில் வடிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், ஸ்ரீதுர்கையின் சிற்பம் ஒன்று பேரழகுடன் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டால், பிரமித்துப் போவீர்கள்.
ஆமாம்... ஒற்றைக் காலைத் தூக்கியபடி, கடும் கோபமான முகத்துடன், சிங்கத்தின் முதுகின் மேல் தன் இடதுகாலை ஊன்றியபடி, தரையில் நின்றிருக்கும் ஸ்ரீதுர்கையின் திருக்கோலத்தை வேறெங்கும் பார்ப்பது அரிதான ஒன்று! எட்டுத் திருக்கரங்களுடன் செம்மாந்து நிற்கும் தேவி, இடது கரங்களில் முறையே வில், கேடயம், சங்கு, கிளி ஆகியவற்றையும், வலது கரங்களில் அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பின் மீது வைத்தபடி நிற்கிறாள். இத்தனை இருந்தாலும், அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தால், அதில் ததும்பி நிற்கிற கருணையை உங்களால் உணரமுடியும்!
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P36b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjuyja/images/p36b.jpg)
ஸ்ரீதுர்கையின் சிற்றாலயத்துக்கு அடுத்து உள்ள சிறிய கோயிலில், சுவர் ஒன்றில் ஸ்ரீநரசிம்மரின் திருவுருவம் காணப்படுகிறது. இரணியனுடன் போர் புரியும் ஸ்ரீநரசிம்மத் தோற்றம். எட்டுத் திருக்கரங்கள். கடும் உக்கிரத்துடன் திருமுகம். இரணியனை ஆவேசமாகத் தாக்கும் காட்சி தத்ரூபமாக வடிக்கப் பட்டுள்ளது. இது, கருடனுக்கும் ஸ்ரீநரசிம்மருக்கும் நிகழும் போர் என்று ஆய்வாளர்கள் சிலர் குறித்துள்ளனர்.
தெற்கு மதிலுக்கு அருகில், மற்றொரு சிற்றாலயத்தில் ஸ்ரீபிரம்மாவின் தலையைக் கொய்து போடும் சிவனாரின் திருக்கோலம் வடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிம்மத் தூண்களுக்குப் பின்னே காணப்படுகிற இந்தக் காட்சியில் எட்டு திருக்கரங்களுடன் திகழும் சிவபெருமான் வில், வாள் முதலான பல ஆயுதங்களை ஏந்தியவராக, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலால் பாய்ந்தோடி வரும் நிலையில் காட்சி தரும் அழகே அழகு! மிக அற்புதமான சிற்ப நுட்பத்துடன் அமைத்திருக்கிறார்கள்.
கோப முகம், வாள் தூக்கிய திருக்கரம், ஒரு கரத்தில் துண்டித்த ஸ்ரீபிரம்மாவின் தலை, கீழே ஒரு தலையை இழந்து நான்முகனாய் காட்சி தரும் பிரம்மா சிவபெருமானை வணங்குவதும், அடியவர் ஒருவர் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் அமர்ந்திருப்பதும் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
அட்டவீரட்டம் எனப்படும் சிவபெருமானின் பராக்கிரமங்கள் நிகழ்ந்த திருத்தலங்களின் வரிசையில், தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் திருத்தலமும் ஒன்று. ஸ்ரீபிரம்மாவின் தலையைக் கொய்த தலம் அதுதான். ஆனால், அந்த நிகழ்வை இங்கே சிற்பமாக வடித்துள்ளனர் என்பது சிறப்பான ஒன்று.
- புரட்டுவோம்
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P36t](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjuyja/images/p36t.jpg)
உலகப் புகழ்மிக்க தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்த காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியரு வியப்பின் உச்சம், இந்த ஆலயம்!
பரந்த முன்வெளியில் ரிஷபம், கோயிலுக்கு வெளியே சிறிது சிறிதான எட்டு ஆலயங்கள், அவற்றுக்குப் பின்புறத்தில் மூன்றாம் மகேந்திர பல்லவ மன்னன் எடுப்பித்த நித்திய வனிதீஸ்வரம் எனப்படும் சிவன் கோயில்.... 'கச்சிப்பேட்டுப் பெரிய தளி’ என்று பராந்தக சோழனும் ராஜராஜ சோழனும் கல்வெட்டுகளில் குறிப்பிடும் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு முன்னே உள்ள பிரமிக்கத்தக்க விஷயங்கள் இவையெல்லாம்!
கோயிலின் நான்குபுறமும் பிரமாண்ட மதில் சூழ்ந்திருக்க, திருக்கயிலாய மலையாகவே திகழ்கிறது ஆலயம். இதனை ராஜசிம்ம பல்லவ மன்னன் எடுப்பித்தான். எனவே, இந்தத் தலம் 'ராஜசிம்ம பல்லவ ஈஸ்வரம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P36](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjuyja/images/p36.jpg)
பிராகாரச் சுவரில், திருமதிலின் வெளிப்புறம் முழுவதிலும் பாய்ந்து நிற்கிற சிம்மச் சிற்பங்களைக் காணலாம். உள்ளே... வேறு எந்தக் கோயிலிலும் தரிசிப்பது அரிது என்னும்படியாக, சுமார் 53 சிற்றாலயங்கள், சிம்மத்தூண் மண்டபங்களுடன் திகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலான இடங்களில், சிவபெருமான் உமையவளுடனும் பிள்ளை கந்தபிரானுடனும் காட்சி தரும் புடைப்புச் சிற்பங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.
கோயிலின் உள்ளே உள்ள பல சிற்றாலயங்களில் சிவபெருமான், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு முதலானோரின் தெய்வத் திருவுருவங்கள், பல்வேறு திருக்கோலங்களில் வடிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், ஸ்ரீதுர்கையின் சிற்பம் ஒன்று பேரழகுடன் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டால், பிரமித்துப் போவீர்கள்.
ஆமாம்... ஒற்றைக் காலைத் தூக்கியபடி, கடும் கோபமான முகத்துடன், சிங்கத்தின் முதுகின் மேல் தன் இடதுகாலை ஊன்றியபடி, தரையில் நின்றிருக்கும் ஸ்ரீதுர்கையின் திருக்கோலத்தை வேறெங்கும் பார்ப்பது அரிதான ஒன்று! எட்டுத் திருக்கரங்களுடன் செம்மாந்து நிற்கும் தேவி, இடது கரங்களில் முறையே வில், கேடயம், சங்கு, கிளி ஆகியவற்றையும், வலது கரங்களில் அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பின் மீது வைத்தபடி நிற்கிறாள். இத்தனை இருந்தாலும், அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தால், அதில் ததும்பி நிற்கிற கருணையை உங்களால் உணரமுடியும்!
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P36b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/07/zjuyja/images/p36b.jpg)
ஸ்ரீதுர்கையின் சிற்றாலயத்துக்கு அடுத்து உள்ள சிறிய கோயிலில், சுவர் ஒன்றில் ஸ்ரீநரசிம்மரின் திருவுருவம் காணப்படுகிறது. இரணியனுடன் போர் புரியும் ஸ்ரீநரசிம்மத் தோற்றம். எட்டுத் திருக்கரங்கள். கடும் உக்கிரத்துடன் திருமுகம். இரணியனை ஆவேசமாகத் தாக்கும் காட்சி தத்ரூபமாக வடிக்கப் பட்டுள்ளது. இது, கருடனுக்கும் ஸ்ரீநரசிம்மருக்கும் நிகழும் போர் என்று ஆய்வாளர்கள் சிலர் குறித்துள்ளனர்.
தெற்கு மதிலுக்கு அருகில், மற்றொரு சிற்றாலயத்தில் ஸ்ரீபிரம்மாவின் தலையைக் கொய்து போடும் சிவனாரின் திருக்கோலம் வடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிம்மத் தூண்களுக்குப் பின்னே காணப்படுகிற இந்தக் காட்சியில் எட்டு திருக்கரங்களுடன் திகழும் சிவபெருமான் வில், வாள் முதலான பல ஆயுதங்களை ஏந்தியவராக, ஒரு காலை மடக்கி, மற்றொரு காலால் பாய்ந்தோடி வரும் நிலையில் காட்சி தரும் அழகே அழகு! மிக அற்புதமான சிற்ப நுட்பத்துடன் அமைத்திருக்கிறார்கள்.
கோப முகம், வாள் தூக்கிய திருக்கரம், ஒரு கரத்தில் துண்டித்த ஸ்ரீபிரம்மாவின் தலை, கீழே ஒரு தலையை இழந்து நான்முகனாய் காட்சி தரும் பிரம்மா சிவபெருமானை வணங்குவதும், அடியவர் ஒருவர் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் அமர்ந்திருப்பதும் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
அட்டவீரட்டம் எனப்படும் சிவபெருமானின் பராக்கிரமங்கள் நிகழ்ந்த திருத்தலங்களின் வரிசையில், தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருக்கண்டியூர் திருத்தலமும் ஒன்று. ஸ்ரீபிரம்மாவின் தலையைக் கொய்த தலம் அதுதான். ஆனால், அந்த நிகழ்வை இங்கே சிற்பமாக வடித்துள்ளனர் என்பது சிறப்பான ஒன்று.
- புரட்டுவோம்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
எத்தனை ஆச்சர்யம்
பெயரை பொறிக்காமலேயே பெயரை நிலைக்க செய்த மாபெரும் சோழ மன்னன்
இவ்வளவு நல்ல குணங்கள் பொருந்திய மன்னன் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியம்
அரசியல் ஆட்சியை விட அரசாட்சியே மேலானது போலும்
பெயரை பொறிக்காமலேயே பெயரை நிலைக்க செய்த மாபெரும் சோழ மன்னன்
இவ்வளவு நல்ல குணங்கள் பொருந்திய மன்னன் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியம்
அரசியல் ஆட்சியை விட அரசாட்சியே மேலானது போலும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 9
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P28b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/08/njrlmg/images/p28b.jpg)
ராஜசிம்மேஸ்வரம் எனும் காஞ்சிபுரத்து ஸ்ரீகயிலாசநாதர் கோயிலின் கருவறையில், புறச்சுவர்களில் முறையே ஸ்ரீகௌரி பிரசாததேவர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஉமாமகேஸ்வரர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஹரிஹரர், ஸ்ரீலிங்கோத்பவர், பிச்சை உகக்கும் பிட்சாடனர், சந்தியா தாண்டவமூர்த்தி, சம்ஹார தாண்டவமூர்த்தி, ஸ்ரீகணேசர், ஸ்ரீவீணாதரர், ஊர்த்துவ தாண்டவர், காலசம்ஹாரர், சிம்மவாஹினியாக தேவி, ஸ்ரீதிரிபுரசம்ஹாரர், ஸ்ரீபைரவி, ஸ்ரீபைரவர், ஸ்ரீயோகேச மூர்த்தி, ஸ்ரீகௌசிகி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஜேஷ்டாதேவி, ஸ்ரீகங்காதரன் என இருபத்து மூன்று எழிலார்ந்த தெய்வ வடிவங்கள் இடம் பெற்றிருப்பதைத் தரிசிக்கலாம்.
இந்தச் சிற்பங்கள் அனைத்தும் இந்தியக் கலை இயல் வரலாற்றில் தனி இடம் பெற்றுத் திகழ்பவை. தென்புறச் சுவரில் காணப்படும் ஆலமர்ச்செல்வரின் சிற்பம் தனித்தன்மை வாய்ந்தது. ஆலமரத்தின் கீழ் அண்ணல் நான்கு திருக்கரங்களுடனும், ஒரு காலை மடக்கிக்கொண்டு மறு காலைத் தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்த நிலையில், அழகே உருவெனக் காட்சி தருகிறார்.
வலது மேற்கரத்தில் உருத்திராட்ச மாலையும், இடது மேற்கரத்தில் எரி கொள்ளியும் திகழ, ஜடாபாரத்துடன் காணப்பெறுகிறார். வலது முன்கரம் உடைந்துள்ளது. இடது முன்கரத்தால் வியாக்கியான முத்திரை காட்டுகிறார். காலடியில் இரண்டு மான்களும், யானையும் படுத்துள்ளன. ஸ்வாமியின் தலைக்கு மேலே மகர தோரணத்தில் கணபதியார் திருவுருவம் உள்ளது. தாமரைத்தடாகம், உருமும் சிம்மங்கள், சனகாதி முனிவர்கள் ஆகிய சிற்பங்கள் இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்றன.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P28](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/08/njrlmg/images/p28.jpg)
மேற்குத் திசையில், எட்டுத் திருக்கரங்களுடன் சந்தியா தாண்டவமாடும் சிவனாரின் சிற்பம், பிரமிக்கத்தக்க ஒன்று. அந்தி மயங்கும் வேளையில் உமையவள் பார்க்க, அவர் ஆடுகிறார் என்பதை நமக்கு உணர்த்துவது அற்புதம். ஒரு கையை ஊன்றியும், ஒரு காலைத் தூக்கி மடித்த நிலையில் நின்றவாறும் காட்சி தருகிறார் உமையவள். சிவனாரின் திருமுகத்தில் ஆனந்தத்தையும் அன்னையின் திருமுகத்தில் சாந்தத்தையும் தத்ரூபமாகக் காட்டுகிற சிற்ப நுட்பத்தில் நாம் கிறங்கி நிற்போம், அங்கேயே!
இதையடுத்து, சம்ஹாரத் தாண்டவமாடுகிற சிவபெருமானின் சிற்பம். பத்துத் திருக்கரங்களும் விரித்த சடையும் கொண்டு ஆடுகிற ஈசன், ஒரு கரத்தைத் தலைக்கு மேலே உயர்த்தி, ஒரு காலை மண்டியிட்டபடி, இன்னொரு காலைப் பின்னோக்கி மடக்கி வைத்து ஆடும் அழகே அழகு! அந்தியில் நடனமாடியபோது இருந்த ஆனந்தம் இங்கே இல்லை. மாறாக, ரௌத்திரமே சிற்ப முகத்திலும் கண்களிலும் தெறிக்கிறது. அது சரி... சம்ஹாரத் தாண்டவத்தில் இருக்கும்போது ஆனந்தம் எப்படி ஒளிரும்?!
இங்கே, இந்தச் சிற்பத்தில் இன்னொரு ஆச்சரிய பிரமிப்பு! திருக்கரத்தில் சாமரம் ஏந்தியபடி நிற்கும் ஸ்ரீகங்காதேவியின் சிற்பத்தை வேறு எங்கும் பார்க்கவே முடியாது. அத்தனை நுட்பமாக இதை வடித்துள்ளனர், சிற்பிகள்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P28a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/08/njrlmg/images/p28a.jpg)
அடுத்து, கருவறையின் புறச்சுவரில் ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தைத் தரிசிக்கலாம். ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்தவாறு, மார்பில் வீணையை வைத்துக்கொண்டு திருக்காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அவரின் காலடியில் குள்ள பூதம் ஒன்று கைத்தாளம் தட்டி மகிழும் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.
சிவனாரின் முடியழகும், படம் எடுத்தாடும் பாம்பின் சீற்றமும், சிவனார் தரித்துள்ள இடுப்பு ஆடையின் மடிப்புகளும் தத்ரூபமாகக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
இன்னொரு பக்கத்தில், பூதகணங்களின் அணிவகுப்பு. சிம்ம முக பூதமும் இசைக் கருவிகளை இயக்குகிற பூதங்களும் என வரிசையாகக் காட்சி அளிக்கிற சிற்பத்தைப் பார்க்கலாம்.
கருவறையின் மேற்குத் திசையில் லிங்கோத்பவர் தரிசனம் தருகிறார். ஒருபக்கம் திருமாலும் சூரிய- சந்திரர்களும் ஈசனை வணங்கியபடி நிற்க, ஜோதி வடிவான ஈசன் நெருப்புத் தூணில் இருந்து எட்டுத் திருக்கரங்கள் கொண்டு வெளிப்படும் சிற்ப நுட்பம், நம்மைப் பிரமிக்க வைக்கும்.
மேலே உள்ள மகர தோரணத்தில், யோக மூர்த்தியாகத் திகழும் சிவபெருமானின் சிற்றுருவச் சிற்பம் உள்ளது. பன்றியாக பூமியை அகழ்ந்து பார்க்கிற திருமாலின் வடிவம் சற்றே சிதைந்துள்ளது. பறக்கும் பிரம்மாவின் வடிவமோ பேரெழிலுடன் திகழ்கிறது. ஒவ்வொரு சிற்பக் காட்சிக்கும் இடையே பாயும் சிம்மங்கள் உயிர்ப்புடன் திகழ்வதைக் காணலாம்.
காஞ்சி ஸ்ரீகயிலாயநாதர் கோயிலின் தனிச் சிறப்புகளில் இவையும் ஒன்று.
- புரட்டுவோம்
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P28b](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/08/njrlmg/images/p28b.jpg)
ராஜசிம்மேஸ்வரம் எனும் காஞ்சிபுரத்து ஸ்ரீகயிலாசநாதர் கோயிலின் கருவறையில், புறச்சுவர்களில் முறையே ஸ்ரீகௌரி பிரசாததேவர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஉமாமகேஸ்வரர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஹரிஹரர், ஸ்ரீலிங்கோத்பவர், பிச்சை உகக்கும் பிட்சாடனர், சந்தியா தாண்டவமூர்த்தி, சம்ஹார தாண்டவமூர்த்தி, ஸ்ரீகணேசர், ஸ்ரீவீணாதரர், ஊர்த்துவ தாண்டவர், காலசம்ஹாரர், சிம்மவாஹினியாக தேவி, ஸ்ரீதிரிபுரசம்ஹாரர், ஸ்ரீபைரவி, ஸ்ரீபைரவர், ஸ்ரீயோகேச மூர்த்தி, ஸ்ரீகௌசிகி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஜேஷ்டாதேவி, ஸ்ரீகங்காதரன் என இருபத்து மூன்று எழிலார்ந்த தெய்வ வடிவங்கள் இடம் பெற்றிருப்பதைத் தரிசிக்கலாம்.
இந்தச் சிற்பங்கள் அனைத்தும் இந்தியக் கலை இயல் வரலாற்றில் தனி இடம் பெற்றுத் திகழ்பவை. தென்புறச் சுவரில் காணப்படும் ஆலமர்ச்செல்வரின் சிற்பம் தனித்தன்மை வாய்ந்தது. ஆலமரத்தின் கீழ் அண்ணல் நான்கு திருக்கரங்களுடனும், ஒரு காலை மடக்கிக்கொண்டு மறு காலைத் தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்த நிலையில், அழகே உருவெனக் காட்சி தருகிறார்.
வலது மேற்கரத்தில் உருத்திராட்ச மாலையும், இடது மேற்கரத்தில் எரி கொள்ளியும் திகழ, ஜடாபாரத்துடன் காணப்பெறுகிறார். வலது முன்கரம் உடைந்துள்ளது. இடது முன்கரத்தால் வியாக்கியான முத்திரை காட்டுகிறார். காலடியில் இரண்டு மான்களும், யானையும் படுத்துள்ளன. ஸ்வாமியின் தலைக்கு மேலே மகர தோரணத்தில் கணபதியார் திருவுருவம் உள்ளது. தாமரைத்தடாகம், உருமும் சிம்மங்கள், சனகாதி முனிவர்கள் ஆகிய சிற்பங்கள் இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்றன.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P28](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/08/njrlmg/images/p28.jpg)
மேற்குத் திசையில், எட்டுத் திருக்கரங்களுடன் சந்தியா தாண்டவமாடும் சிவனாரின் சிற்பம், பிரமிக்கத்தக்க ஒன்று. அந்தி மயங்கும் வேளையில் உமையவள் பார்க்க, அவர் ஆடுகிறார் என்பதை நமக்கு உணர்த்துவது அற்புதம். ஒரு கையை ஊன்றியும், ஒரு காலைத் தூக்கி மடித்த நிலையில் நின்றவாறும் காட்சி தருகிறார் உமையவள். சிவனாரின் திருமுகத்தில் ஆனந்தத்தையும் அன்னையின் திருமுகத்தில் சாந்தத்தையும் தத்ரூபமாகக் காட்டுகிற சிற்ப நுட்பத்தில் நாம் கிறங்கி நிற்போம், அங்கேயே!
இதையடுத்து, சம்ஹாரத் தாண்டவமாடுகிற சிவபெருமானின் சிற்பம். பத்துத் திருக்கரங்களும் விரித்த சடையும் கொண்டு ஆடுகிற ஈசன், ஒரு கரத்தைத் தலைக்கு மேலே உயர்த்தி, ஒரு காலை மண்டியிட்டபடி, இன்னொரு காலைப் பின்னோக்கி மடக்கி வைத்து ஆடும் அழகே அழகு! அந்தியில் நடனமாடியபோது இருந்த ஆனந்தம் இங்கே இல்லை. மாறாக, ரௌத்திரமே சிற்ப முகத்திலும் கண்களிலும் தெறிக்கிறது. அது சரி... சம்ஹாரத் தாண்டவத்தில் இருக்கும்போது ஆனந்தம் எப்படி ஒளிரும்?!
இங்கே, இந்தச் சிற்பத்தில் இன்னொரு ஆச்சரிய பிரமிப்பு! திருக்கரத்தில் சாமரம் ஏந்தியபடி நிற்கும் ஸ்ரீகங்காதேவியின் சிற்பத்தை வேறு எங்கும் பார்க்கவே முடியாது. அத்தனை நுட்பமாக இதை வடித்துள்ளனர், சிற்பிகள்.
![சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் P28a](https://2img.net/h/www.vikatan.com/sakthi/2013/08/njrlmg/images/p28a.jpg)
அடுத்து, கருவறையின் புறச்சுவரில் ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தைத் தரிசிக்கலாம். ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்தவாறு, மார்பில் வீணையை வைத்துக்கொண்டு திருக்காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அவரின் காலடியில் குள்ள பூதம் ஒன்று கைத்தாளம் தட்டி மகிழும் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.
சிவனாரின் முடியழகும், படம் எடுத்தாடும் பாம்பின் சீற்றமும், சிவனார் தரித்துள்ள இடுப்பு ஆடையின் மடிப்புகளும் தத்ரூபமாகக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
இன்னொரு பக்கத்தில், பூதகணங்களின் அணிவகுப்பு. சிம்ம முக பூதமும் இசைக் கருவிகளை இயக்குகிற பூதங்களும் என வரிசையாகக் காட்சி அளிக்கிற சிற்பத்தைப் பார்க்கலாம்.
கருவறையின் மேற்குத் திசையில் லிங்கோத்பவர் தரிசனம் தருகிறார். ஒருபக்கம் திருமாலும் சூரிய- சந்திரர்களும் ஈசனை வணங்கியபடி நிற்க, ஜோதி வடிவான ஈசன் நெருப்புத் தூணில் இருந்து எட்டுத் திருக்கரங்கள் கொண்டு வெளிப்படும் சிற்ப நுட்பம், நம்மைப் பிரமிக்க வைக்கும்.
மேலே உள்ள மகர தோரணத்தில், யோக மூர்த்தியாகத் திகழும் சிவபெருமானின் சிற்றுருவச் சிற்பம் உள்ளது. பன்றியாக பூமியை அகழ்ந்து பார்க்கிற திருமாலின் வடிவம் சற்றே சிதைந்துள்ளது. பறக்கும் பிரம்மாவின் வடிவமோ பேரெழிலுடன் திகழ்கிறது. ஒவ்வொரு சிற்பக் காட்சிக்கும் இடையே பாயும் சிம்மங்கள் உயிர்ப்புடன் திகழ்வதைக் காணலாம்.
காஞ்சி ஸ்ரீகயிலாயநாதர் கோயிலின் தனிச் சிறப்புகளில் இவையும் ஒன்று.
- புரட்டுவோம்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|