புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_c10 
4 Posts - 50%
heezulia
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! - Page 7 Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !


   
   

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:40 pm

First topic message reminder :

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.

எனவே,  எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் புன்னகை

இதோ அந்த குறிப்புகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 05, 2014 10:23 pm

தேவையானவை :

1/4 கிலோ பீர்கங்காய்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
2 டீ ஸ்பூன் எள்


செய்முறை :

பீர்க்கங்காயை அலம்பி நறுக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் பீர்கங்காய் துவையல் ரெடி.

குறிப்பு : எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க பீர்க்கங்காயை கூட்டு செய்யும்போது மீறும் தோலி இல் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 05, 2014 10:29 pm

தேவையானவை :

1/4 கிலோ புடலங்காய்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1 -2 மிளகாய் வற்றல் அல்லது 1 ஸ்பூன் மிளகு
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
2 டீ ஸ்பூன் எள்


செய்முறை :

புடலங்காயை அலம்பி நறுக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விடாமல் எள்ளை 'பட பட' வென பொறியும் வரை வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
பிறகு வாணலி இல் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள
புடலங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு அரைக்கவும்;
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் புடலங்காய் துவையல் ரெடி.

குறிப்பு : எள் போடுவதால் ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும். நீங்க புடலங்காய்யை கூட்டு செய்யும்போது உள்ளே இருக்கும் விதைகளில் கூட இந்த துவையல் செய்யலாம்.இது சாதத்துடன் மட்டும் அல்ல தோசை இட்லி க்கு கூட தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 6:50 pm

தேவையானவை :

1 கப் பூண்டு பற்கள்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தய பொடி (தேவையானால் )
2 மிளகாய் வற்றல் / 1 ஸ்பூன் மிளகு
உப்பு
கொஞ்சம் எண்ணை
கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் எண்ணை விட்டு பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.
மிக்சி இல் புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும்.
தண்ணீர் ரொம்ப மட்டாக விடவும்.
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து துவையல் மீது கொட்டவும்.
அவ்வளவுதான் பூண்டு துவையல் ரெடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 6:58 pm

டிபன்கள் என்று பார்க்கும்போது, தோசை, இட்லி, அரிசி உப்புமா, உப்புமா கொழுக்கட்டை போன்றவை தரலாம். ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் தோசை மாவு . இது நல்லா இருந்தாத்தான் நாம் வார்க்கும் தோசையும் நல்லா வரும். எங்க வீடுகளில் எப்பவும் பச்சரிசி தோசை தான். எனவே,

4 ஆழாக்கு பச்சரிசி
1 ஆழாக்கு உளுந்து

தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது அரிசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.

கல் தோசை

தேவையானவை :

உளுத்தம் பருப்பு 1 கப்
புழுங்கல் அரிசி 4 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

புழுங்க அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்த பிறகு,அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்கணும்.
பிறகு காலையில் எழுந்தவுடன் , உளுத்தம் பருப்பை 1 மணிநேரம் ஊரவைத்து, அரைக்கணும்.
அரைத்த அரிசி மாவையும் உளுத்தம் மாவையும் சேர்த்து கலக்கவும்.
அரைத்ததும் தோசை வார்க்கலாம்.
இந்த தோசைக்கு எண்ணெய் விட்டு வார்க்க கூடாது
ஒரு tissue paper அல்லது நறுக்கிய வெங்காயத்தை எண்ணெய் இல் தோய்த்து தோசை கல்லில் தடவவும்.
பிறகு தோசை வார்க்கவும்.
மேலும் இதை 'நான் ஸ்டிக்' இல் வார்க்ககூடாது , 'கல் தோசை' வார்ப்பதற்கு என்று தனி கல் இருக்கு அதில் வார்க்கலாம் ; அல்லது 'வார்ப்பட கல் ' லில் வார்க்கலாம்.


குறிப்பு : கல் தோசைகல், சதுரமாக இருக்கும் .





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 6:59 pm

தேவையானவை :

4 ஆழாக்கு பச்சரிசி
1 ஆழாக்கு உளுந்து
2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்

செய்முறை :

அரிசி பருப்பு மற்றும் வெந்தயம் எல்லாத்தையும் தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைத்து மிக்சி அல்லது கிரைண்டர், ஆட்டுக்கல் என எதிலாவது தனித்தனியாக நன்கு அரைக்கவும்.
ஒன்றாக உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
ஒரு 8 - 10 மணிநேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
இந்த 'வெந்தய தோசை' வெந்தய மனமுடன் லைட் மஞ்சள் கலரில் தோசை அருமையாக இருக்கும்.

குறிப்பு: உடலுக்கு ரொம்ப குளுமை, எனவே, பார்த்து கொடுக்கணும், சளி பிடித்து விடக்கூடாது .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:03 pm

இதற்கு அரிசியில் இருக்கும் நொய் என்னும் சின்னக் குருணை அரிசியே பொருத்தமாய் இருக்கும். இல்லை என்றால் அரிசியைக் களைந்து ஊற வைத்துக்கொண்டு மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ உடைத்துக்கொள்ளவும்.

தேவையானவை :

உடைத்த அரிசி அல்லது குருணை - 2 cup
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு சீரகம் உடைத்தது 1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ
பெருங்காயம் - அரை டீஸ்பூன்


செய்முறை:

ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு,கறிவேப்பிலை பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும்.
ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, வாணலி இல் விடவும்.
உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
நன்கு கிளறவும்.
மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
தண்ணீர் தேவையானால் விடவும்.
நன்கு வெந்ததும், மிளகு சீரகம் தூவி நன்கு கிளறி இறக்கவும்.
ஆறினதும் இந்த அரிசி உப்புமா ரொம்ப நல்லா இருக்கும்.
தொட்டுக்கொள்ள வெறும் தயிரு கூட போறும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:05 pm

இந்த உப்புமா செய்ய அரிசி நொய் என்னும் சின்னக் குருணை அரிசியே பொருத்தமாய் இருக்கும். இல்லை என்றால் அரிசியைக் களைந்து ஊற வைத்துக்கொண்டு மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ, து.பருப்பு, க.பருப்பு சேர்த்து உடைத்துக்கொள்ளவும். 2 கப் அரிசிக்கு 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு போட்டு அரைக்கவும்.

தேவையானவை :

உடைத்த அரிசி அல்லது குருணை (பருப்புகளுடன் ) - 2 cup
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - கொஞ்சம்
தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
உடைத்த மிளகு சீரகம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை , பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும்.
ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, வாணலி இல் விடவும்.
உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
நன்கு கிளறவும்.
மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
அவ்வப்போது ஒருமுறை கிளறி விடவும்.
தேவையானால் கொஞ்சம்  தண்ணீர் விடவும்.
நன்கு கிளறவும்;  நன்கு வெந்ததும், உடைத்து வைத்துள்ள  மிளகு, சீரகம் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
தொட்டுக்க வெறும் தயிரு கூட போறும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:27 pm

தேவையானவை :

அரிசி 2 கப்
துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு 2 டேபிள் ஸ்பூன்
உப்பு

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
வாசனைக்காக 1 பச்சை மிளகாய்
பெருங்காயம் கால் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம்

செய்முறை :

அரிசியை களைந்து உலர்த்தனும்.
மிக்சி இல் ரவையாக பொடிக்கவும்.
தனியாக துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு இவைகளை போடவும்.
கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
இப்போது ரவை பாதி வெந்து இருக்கும்.
அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டவும்.
அது கொஞ்சம் ஆறட்டும்.
ஒரு இட்லி பானையில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவவும்.
ஆறி உள்ள ,பாதி வெந்த உப்புமாவை கைகளில் எடுத்து பிடிகொழுக்கட்டை போல பிடிக்கவும்.
இட்லி தட்டுகளில் அடுக்கவும்.
எல்லாவற்றையும் இவ்வாறு அடுக்கினதும், இட்லி போல ஆவி இல் வேக வைக்கவும்.
அவ்வளவு தான் 'உப்புமா கொழுக்கட்டை ' ரெடி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:31 pm

தேவையானவை:

கெட்டி அவல் 1 கப்
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)
மிளகு சீரகம் 1/2 ஸ்பூன் ( தேவையானால் )
இஞ்சி துருவல் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

கெட்டி அவலை தண்ணீர் விட்டு இரண்டுமுறை அலசவும்.
அழுக்குகள் போனதும் நன்கு பிழிந்து வடிய விடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம், இஞ்சி துருவல் போடவும்.
நன்கு கிளறவும், உப்பு போட்டு வதக்கவும்.
இப்ப அடுப்பை சின்ன தாக்கி விட்டு, பிழிந்து வைத்துள்ள அவலை போட்டு கிளறவும்.
ஒரே நிமிடத்தில் இது நன்கு வெந்தது விடும்.
அதன் மேலே கொத்துமல்லி மற்றும் மிளகு சீரகம் தூவி கிளறி இறக்கவும்.
தேவையானால் எலுமிச்சை சாறு விட்டு ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
தேங்காய் சட்டினி தவிர வேறு எந்த சட்னி உடனும் பரிமாறலாம்.
டொமாடோ கெட்ச் அப் ரொம்ப நல்லா இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 7:41 pm

பொரிச்ச கூட்டு

பொரிச்ச கூட்டு என்றால், புளி இல்லாமல், பருப்பு மற்றும் காய்கறிகள் கலந்து செய்வது.
பீன்ஸ் , புடலங்கை, பெங்களூர் கத்தரிக்காய், காரட், சுரைக்காய், பீர்கங்காய் மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்களை உபயோகிக்கலாம்.
இந்த கூட்டை பயத்தம் பருப்பு மட்டுமே போட்டு செய்யணும்.

தேவையானவை:

மேலே சொன்ன காய்களில் ஏதாவது ஒன்று 1/4 கிலோ
½ கப் பயத்தம் பருப்பு
2 - 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 ஸ்பூன் மிளகு சீரகம் உடைத்தது.
பெருங்காயப்பொடி
உப்பு
கொஞ்சம் எண்ணை
தாளிக்க கொஞ்சம் கடுகு + உளுத்தம் பருப்பு.

செய்முறை:

எடுத்துக்கொண்ட காயை அலம்பி நறுக்கி பருப்புடன் கூட குக்கரில் வைக்கவும்.
வாணலி இல் துளி எண்ணை விட்டு உளுத்தம் பருப்பு மற்றும் மிளகு சீரகத்தை வறுக்கவும்.
பிறகு பொடித்து வைத்துக்கொள்ளவும்.
மீண்டும் வாணலி இல் இன்னும் கொஞ்சம் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
வெந்த காய் மற்றும் பருப்பை அதில் கொட்டவும்.
உப்பு, அரைத்து வைத்துள்ள பொடி, பெருங்காயப்பொடி போடவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
வேண்டுமானால் கொத்துமல்லி துவலாம்.
கறிவேப்பிலை போடலாம்.
அவ்வளவு தான் சாதுவான கூட்டு தயார்.
சாதத்தில் போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக