புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_lcapஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_voting_barஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது?


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 04, 2014 2:58 pm

எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது?


ஒரு காட்டில் காட்டாறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.

அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடிக் காற்றை வரவழைக்கும்.

ஒரு நாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக் கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது... இந்தக் காற்று... இப்படி அடிக்குது” என்று புலம்பிக் கொண்டிருந்தது.

அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.

தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்ன இது அநியாயம்... மரத்துல இருந்த என்னைக் காற்று இப்படி ஒடித்துப் போட்டு விட்டதே... அதுவும் இப்படி ஆற்றில் விழுந்து செல்லும்படி ஆகிவிட்டதே...” என்று அழுது புலம்பியது.

அண்ணன் கிளை, “ஆற்றுத் தண்ணீர் நல்ல குளிர்ச்சியாக இருக்கிறதே...” என்றது.

இதைக் கேட்ட தம்பி கிளைக்குக் கோபம் வந்தது. “ச்சீ... நீயெல்லாம் மரக்கிளையா? அடுத்து நாம் பிழைக்க வழி இல்லாமலிருக்கும் பொழுது, ஆற்று நீர் குளிர்ச்சியாக இருக்குது என்று சொல்வதா?” என்று அதைச் சத்தம் போட்டது.

அண்ணன் கிளையோ, “தம்பி, இதை மனிதர்கள் பணம் செலவழித்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைத்திருக்கிறது. ஆற்று நீரில் செல்வது அபார சுகமாக இருக்கிறது” என்றது.

தம்பிக்கிளைக்கு மேலும் கோபமாக வந்தது. ‘இனியும் இவனுடன் பேசக்கூடாது’ என்று முடிவு செய்தது. இறைவன் முதல் அனைவரையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு அழகாக மரத்தில் இருந்த தன்னை இப்படி ஆற்றில் அடித்துச் செல்வதுடன் ஆற்றிலுள்ள பாறையிலும், கரையிலும் முட்டி மோதிக் காயம்படும்படியும் ஆகிவிட்டதே என்று புலம்பியபடி ஆற்றில் போய்க் கொண்டிருந்தது.

அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க் கொண்டிருந்தது.

கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பிக் கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை இன்றோடு முடிந்தது. இந்த நல்லதண்ணீரின் அருகில் எங்காவது கரை ஒதுங்கியிருந்தால் கூட வேர் பிடித்து மரமாக வளர வாய்ப்பிருக்கும். அங்கே கடலுக்குள்ள போனால் நம் மரணம் உறுதிதான்” என்றது.

“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை.

“தெரியுமா? அது தெரிந்துமா மகிழ்ச்சியுடன் வருகிறாய்?”

“ஆமாம், எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் எப்படியும் நம் வாழ்க்கை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிந்துவிட்டது. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம். அப்போது நமக்கிருந்தது இரண்டே வழிகள்தான். ஒன்று அதை அமைதியாக ஏற்றுக் கொண்டு அந்த கஷ்டத்தை இருக்கும் வரை இனிமையாக மாற்றி மகிழ்ச்சியாக இருப்பது. மற்றொன்று, அதை எதிர்த்துக் கொண்டு மன அழுத்தத்துடன் மரணிப்பது. நான் முதல் வாய்ப்பை எடுத்தேன். நீ இரண்டாம் வாய்ப்பை எடுத்தாய். நம் இரண்டு பேருக்கும் முடிவு ஒன்றுதான். ஆனாலும் நான் மகிழ்ச்சியாக மரணம் நோக்கி வந்தேன். நீ அழுது கொண்டே வந்தாய். இந்தப் பூமியில் தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது” என்றது அந்த அண்ணன் கிளை.

தம்பி கிளை, “நீ சொல்றது சரி தான் அண்ணே... நான் கிடைத்த காலத்தை வீணாக்கி விட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கடல் வந்துவிட்டது. இரு கிளைகளும் கடலில் சங்கமித்தன.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 04, 2014 11:12 pm

எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 103459460 எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 05, 2014 5:29 pm

தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது
எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 3838410834 எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 3838410834



எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 6:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது? 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 07, 2014 6:45 pm

//“ஆமாம், எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் எப்படியும் நம் வாழ்க்கை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிந்துவிட்டது. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம். அப்போது நமக்கிருந்தது இரண்டே வழிகள்தான். ஒன்று அதை அமைதியாக ஏற்றுக் கொண்டு அந்த கஷ்டத்தை இருக்கும் வரை இனிமையாக மாற்றி மகிழ்ச்சியாக இருப்பது. மற்றொன்று, அதை எதிர்த்துக் கொண்டு மன அழுத்தத்துடன் மரணிப்பது. நான் முதல் வாய்ப்பை எடுத்தேன். நீ இரண்டாம் வாய்ப்பை எடுத்தாய். நம் இரண்டு பேருக்கும் முடிவு ஒன்றுதான். ஆனாலும் நான் மகிழ்ச்சியாக மரணம் நோக்கி வந்தேன். நீ அழுது கொண்டே வந்தாய். இந்தப் பூமியில் தொடக்கமும், முடிவும் யாருடைய கையிலும் இல்லை. வாழ்க்கை என்பது ஒரு பயணம். இந்த இடைப்பட்ட பயணத்தில் நாம் பயணத்தை எடுத்துக் கொள்ளும் வழியில்தான் நம் மகிழ்ச்சியும் துன்பமும் இருக்கிறது” என்றது அந்த அண்ணன் கிளை.//

சூப்பர் புன்னகை நல்ல பகிர்வு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக