புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலவீனங்களின் அடிமையா நீங்கள்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 02, 2014 6:01 am


சத்குரு என்னிடம் புகை பிடிப்பது, கோபப்படுவது போன்ற எனக்கே கூட பிடிக்காத சில பலவீனங்கள் இருக்கின்றன. நான் விரும்பாவிட்டாலும், அவை என்னிடம் இருக்கின்றன. அவற்றை நிறுத்துவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

'எனக்கு இது வேண்டாம்' என்று அதிகமாக சொல்லச் சொல்ல, அது உங்கள் மனதுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. பிறகு அதே உங்கள் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது, இல்லையா?

ஒரு பரிசோதனையாக, அடுத்த 10 விநாடிகளுக்கு நீங்கள் குரங்கைப் பற்றி நினைக்கவே கூடாது, சரியா? ம், முயற்சித்துப் பாருங்கள் உங்கள் மனதில் குரங்குதான் முழுமையாக உட்கார்ந்திருக்கிறது, இல்லையா? இதுதான் மனதின் குணம்.

இப்படிப்பட்ட மனதை வைத்துக் கொண்டு, ஒரே நோக்கோடு உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே மனதின் செயல்பாட்டைப் புரிந்து கொண்டு, பிறகு இந்த மனதை வைத்து என்ன செய்வது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

மக்கள் என்னிடம் வந்து, 'நான் புகை பிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறேன், அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அதற்கு நான் சொல்வேன், "நீங்கள் எதற்காக புகை பிடிக்க வேண்டும்? உங்கள் உடல் புகைவிடும் இயந்திரம் அல்ல. வாகனங்கள் புகை விடும். ஆனால் உங்கள் உடல் புகை விடாது. புகை பிடிக்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால், புகை பிடிக்க வேண்டாம், அவ்வளவுதானே?” என்பேன்.

அதற்கு அவர்கள் சொல்வார்கள், "இல்லையில்லை. எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது, அதை விட்டுவிட முயற்சிக்கிறேன், ஆனால் பலன் இல்லை”.

இது புகை பிடிப்பது அல்லது புகைக்காமல் இருப்பது பற்றிய கேள்வி அல்ல.

கட்டாயப்படுத்தினால்:

ஒரு நாள் ஒரு மனிதர், தன் பக்கத்து வீட்டுத் தோழியுடன் காரில் வெகுதூரம் சென்று, வண்டியை நிறுத்திவிட்டு, திடீரென்று தன் தோழியைக் கட்டிப்பிடிக்க முயற்சித்தார்.

அதற்கு அவருடைய தோழி, "முட்டாளே! என்ன செய்கிறாய்? நீ ஒழுக்கமானவன் என்று நினைத்துதானே உன்னுடன் வந்தேன், இதென்ன பைத்தியக்காரத்தனம்?” என்றார். அதற்கு அந்த மனிதர், "இல்லை. நான் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்” என்றாராம்.

எதையாவது கட்டாயத்தின் பேரில் நிறுத்திவிட்டால், இப்படித்தான் அது வேறொரு வடிவத்தில் வெளிப்பட்டுவிடும்.

இப்போது நீங்கள் புகை பிடிப்பதன் மூலம் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் சோர்வாக உணரும்போது சிகரெட்டில் இருக்கும் நிகோடின் என்ற ரசாயனப் பொருளின் மூலம் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீர்கள் அல்லது முழுமையற்று இருப்பதாக மனதளவில் உங்களை உணர்வதால் இப்போது ஒரு சிகரெட்டை கையில் வைத்துக் கொள்கிறீர்கள்.

கற்பனையான உணர்வு:

சிகரெட் கையில் இருக்கும்போது, உங்களை மேலானவராக, ஒரு தைரியசாலியான ஆண்மகனாக நினைத்துக் கொள்கிறீர்கள். குழந்தைகள்கூட சீக்கிரம் வளர விரும்பினால், புகை பிடிக்கத் துவங்குகிறார்கள், இல்லையா?

ஒரு 10 வயது சிறுவன் தான் ஒரு பெரியவனாக மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கும் போது என்ன செய்கிறான்? ஒரு சிகரெட்டை புகைக்கிறான். புகையை உள்ளே இழுத்து, யார் முகத்திலாவது ஊதும்போது ஓர் முழுமையான ஆண் மகனைப் போல தன்னை உணர்கிறான்.

இன்றைக்கு அப்பழக்கம் பெருமளவில் இல்லாவிட்டாலும், ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் அப்படித்தான் இருந்தது.

விழிப்புணர்வு தேவை:

இப்ராகிம் என்றொரு சூஃபி துறவி இருந்தார். அவருடைய ஆசிரமத்தில் இருந்த இரு சீடர்கள், அங்கிருந்த தோட்டத்தில் அமர்ந்து சிடுசிடுப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர், 'நான் புகை பிடிக்க விரும்புகிறேன், ஆனால் நாம் ஆன்மிகப் பாதையில் இருக்கின்றோம், இப்போது நான் எப்படி புகைப்பது?' என்று கேட்டார். அதற்கு மற்றவர், 'நானும் புகைக்க விரும்புகிறேன்; எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை' என்றார்.

பிறகு அவர்கள் 'குருவிடம் சென்று புகை பிடிக்கலாமா, வேண்டாமா என்று கேட்போம்' என்று முடிவு செய்தார்கள். ஏனென்றால், பழங்காலத்தில் பல சூஃபி ஞானிகள் தொடர்ந்து புகைக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

பிறகு அடுத்த நாள் மாலை, அந்த இரு சீடர்களில் ஒருவர் தோட்டத்தில் அதே இடத்தில் சோகமாக அமர்ந்திருந்தார். மற்றொரு சீடர் புகைத்துக் கொண்டே அவ்விடத்திற்கு வந்தார்.

அதைப் பார்த்த முதலாமவர், 'நீ மட்டும் எப்படி புகைத்துக் கொண்டிருக்கிறாய்? குரு என்னிடம் புகைக்க வேண்டாம் என்று சொன்னாரே' என்றார்.

அதற்கு புகைத்துக் கொண்டிருந்த மற்றவர், 'நீ குருவிடம் என்ன கேட்டாய்?' என்று கேட்டார்.

முதலாமவர், 'தியானம் செய்யும்போது புகைக்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் கூடாது என்று சொல்லிவிட்டார்' என்று சொன்னார்.

அதற்கு இரண்டாமவர், 'அது உன்னுடைய தப்பு. நான் அவரிடம், புகை பிடிக்கும்போது தியானம் செய்யலாமா என்று கேட்டேன், அதற்கு அவர் செய்யலாம் என்று கூறிவிட்டார்' என்றார்.

எனவே புகைப் பழக்கத்தை கைவிட முயற்சிக்காதீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வாழ்க்கையில் விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்.

வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் விழிப்புணர்வைக் கொண்டு வரும்போது, எதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லையோ அதெல்லாம் தானாகவே உதிர்ந்து விடுவதைப் பார்ப்பீர்கள். நீங்களாக விட்டுவிட முயற்சி செய்தால், போராட்டம்தான் மிஞ்சும்.

அப்படியே நீங்கள் பலமாகப் போராடி புகைப்பதை விட்டுவிட்டாலும், கனவுகளில் இன்னும் அதிகமாகப் புகைத்து, உங்களுக்கு நீங்களே பலத்த சேதம் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

உங்களுக்கு விருப்பமான ஒன்றை விட்டுவிட்டால் அது உங்கள் கனவுகளை இன்னும் பெரிதாக ஆக்கிரமிக்கும். பிறகு கனவில் பெரிய சிகரெட்களாகப் புகைப்பீர்கள், இல்லையா? எனவே இது போன்று செய்வது தேவையற்றது.

உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள். ஏதோ உங்களிடம் ஒரு குறைபாடு இருக்கிறது. அதனால்தான் இது போன்ற பழக்கங்களை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

மனதளவில் இன்னும் சிறிது ஆழமாகச் சென்று உங்கள் தன்மையிலேயே சிறிது விழிப்புணர்வைக் கொண்டு வந்து விட்டால், இது போன்ற விஷயங்கள் அப்படியே உதிர்ந்து காணாமல் போய்விடும்.



பலவீனங்களின் அடிமையா நீங்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 02, 2014 6:15 am

பலவீனங்களின் அடிமையா நீங்கள்? 3838410834 பலவீனங்களின் அடிமையா நீங்கள்? 103459460 பலவீனங்களின் அடிமையா நீங்கள்? 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக