புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்மை செய்யும் நல்ல நாட்கள்!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நாள்- நட்சத்திரம் பார்க்கும் விவரங்களையும், எந்தெந்த நாட்களில் என்னென்ன சுபகாரியங்களைச் செய்யலாம் என்பது குறித்த விவரங்களையும் இங்கே சுருக்கமாகத் தந்துள்ளோம்.
இந்த அட்டவணைத் தகவல்கள், வாசகர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். அதேநேரம், சில சம்பவங்கள் எதிர்பாராமல் ஏற்படுவது உண்டு. திடீர்ப் பயணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் உடற்பிணிகளின் காரணமாக மருத்துவம் பார்க்கவேண்டிய தருணங்களில், சாஸ்திரங்களில் குறிப்பிட்ட நாள்- நட்சத்திரம் பார்த்துச் செய்வதெல்லாம் கடினம். அப்போது, தெய்வங்களை வழிபட்டுப் பிரார்த்தனை செய்வதுடன், கூடியமட்டில் ராகுகாலம் முதலான வேளைகளைத் தவிர்த்துச் செயல்படலாம்.
சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள், சட்டம் ஒழுங்கைக் கண்காணித்து நடத்தும் காவல்துறையினர், சட்ட நிபுணர்கள் போன்றவர்களுக்குச் சட்டப்புத்தகம் மிகவும் அவசியம். அதன் கோட்பாடுகள் மிகவும் முக்கியம். மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மொழியின் இலக்கண- இலக்கிய நூல்களும், அகராதியும் மிகவும் அவசியம். அதுபோலவே சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நல்ல காரியங்களைச் செய்து நல்ல பலன்களை அடைய விரும்புகிறவர்களுக்குப் 'பஞ்சாங்கம்’ மிகவும் அவசியம். அதில் குறிப்பிட்ட நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து, நல்ல காரியங்களைச் செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஜோதிடம் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு நல்ல காரியங்களுக்கு நல்ல நாளைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறவர்கள், இந்த அட்டவணையின் முக்கியமான அம்சங்களை மனப்பாடம் செய்துகொள்ளலாம்; அல்லது, பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லலாம்.
பஞ்சாங்கத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டுதான் ஜோதிடர்கள் நல்ல நாள் குறிக்க வேண்டும். நாமாகவே பார்த்துக்கொள்ளவும் பஞ்சாங்கம் உதவும். ஆனால், அந்தந்தக் காரியத்துக்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்துத் தெரிந்துகொள்வது நல்லது. வைதீக காரியங்களை நடத்தித் தரும் புரோகிதர்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த அட்டவணைத் தகவல்கள், வாசகர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். அதேநேரம், சில சம்பவங்கள் எதிர்பாராமல் ஏற்படுவது உண்டு. திடீர்ப் பயணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் உடற்பிணிகளின் காரணமாக மருத்துவம் பார்க்கவேண்டிய தருணங்களில், சாஸ்திரங்களில் குறிப்பிட்ட நாள்- நட்சத்திரம் பார்த்துச் செய்வதெல்லாம் கடினம். அப்போது, தெய்வங்களை வழிபட்டுப் பிரார்த்தனை செய்வதுடன், கூடியமட்டில் ராகுகாலம் முதலான வேளைகளைத் தவிர்த்துச் செயல்படலாம்.
சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள், சட்டம் ஒழுங்கைக் கண்காணித்து நடத்தும் காவல்துறையினர், சட்ட நிபுணர்கள் போன்றவர்களுக்குச் சட்டப்புத்தகம் மிகவும் அவசியம். அதன் கோட்பாடுகள் மிகவும் முக்கியம். மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மொழியின் இலக்கண- இலக்கிய நூல்களும், அகராதியும் மிகவும் அவசியம். அதுபோலவே சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நல்ல காரியங்களைச் செய்து நல்ல பலன்களை அடைய விரும்புகிறவர்களுக்குப் 'பஞ்சாங்கம்’ மிகவும் அவசியம். அதில் குறிப்பிட்ட நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து, நல்ல காரியங்களைச் செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஜோதிடம் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு நல்ல காரியங்களுக்கு நல்ல நாளைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறவர்கள், இந்த அட்டவணையின் முக்கியமான அம்சங்களை மனப்பாடம் செய்துகொள்ளலாம்; அல்லது, பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லலாம்.
பஞ்சாங்கத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டுதான் ஜோதிடர்கள் நல்ல நாள் குறிக்க வேண்டும். நாமாகவே பார்த்துக்கொள்ளவும் பஞ்சாங்கம் உதவும். ஆனால், அந்தந்தக் காரியத்துக்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்துத் தெரிந்துகொள்வது நல்லது. வைதீக காரியங்களை நடத்தித் தரும் புரோகிதர்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சுபமுகூர்த்தங்கள் உள்ள நாட்கள் குறித்த தகவல்கள் பஞ்சாங்கங்களில் குறிக்கப்பட்டிருக்கும். ஒரு மாதத்தில் பல சுப முகூர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் தனிப்பட்ட ஒருவருடைய திருமணத்துக்கு உகந்த சுபமுகூர்த்தம் எது என்பதை ஜோதிட சாஸ்திரம் காட்டும் வழிமுறைப்படி தெரிந்துகொண்டு, திருமண நாளை முடிவு செய்ய வேண்டும். குடும்ப ஜோதிடரைக் கலந்து ஆலோசித்து முடிவு செய்வது நலம்.
அதேநேரம், நாள்- நட்சத்திரம், முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்கள் எப்படி நிச்சயிக்கிறார்கள் என்பதற்கான ஆதார விவரங்களை நாமும் அறிந்துவைத்திருப்பது சிறப்பு.
மாதங்கள்: ஆடி, மார்கழி மாதங்கள் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் திருமணத்துக்கான முகூர்த்தங்கள் வைக்கப்படுவது தற்காலத்தில் சம்பிரதாயமாகிவிட்டது.
நாள்: பொதுவாக சுபமுகூர்த்தங்கள் வைப்பதற்கு சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்கள் உத்தமமாகக் கருதப்படுகின்றன. வடஇந்தியாவில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மங்கள் வாரம் என்ற அடிப்படையில், அந்த நாளிலும் திருமணம் நடைபெறுகிறது.
திதி: திருமண முகூர்த்தம் நிச்சயிக்க, அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்ப்பார்கள். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த திதிகள் இருந்தாலும், முகூர்த்தம் வைக்கும் நேரத்தில் அந்த திதிகள் மாறிவிட்டால், அந்த நாளை எடுத்துக்கொள்ளலாம்.
நட்சத்திரம்: மணமகன், மணமகள் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரங்களை மனத்தில் கொண்டு, அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமண முகூர்த்தம் வைக்க வேண்டும்.
ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 10-வது நட்சத்திரம் கர்மம், 16-வது நட்சத்திரம் சாங்காதிகம், 18-வது நட்சத்திரம் சாமுதாயிகம், 23-வது நட்சத்திரம் வைணாதிகம், 25-வது நட்சத்திரம் மானசம் என்று பெயர் பெறும். இந்த நட்சத்திரங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை நிச்சயிக்கக்கூடாது. உதாரணமாக, மணமகனின் நட்சத்திரம் அசுவினி என்றால், அதற்கு 10-வது நட்சத்திரம் மகம்; 16-வது நட்சத்திரம் விசாகம்; 18-வது கேட்டை, 23-வது அவிட்டம், 25-வது பூரட்டாதி. ஆக, இந்த நட்சத்திர நாட்களில் அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு முகூர்த்தம் வைப்பதை தவிர்க்கவேண்டும்.
தாரா பலம்: எந்த ஒரு சுப காரியம் செய்யும்போதும் 'தாராபலம் சந்திரபலம் ததேவா, வித்யா பலம் தெய்வ பலம், ததேவா’ - என்று மந்திரம் சொல்லி ஆரம்பிப்பார்கள்.
இவற்றில் திருமண முகூர்த்தங்களுக்கு 'தாரா பலம்’ மிக அவசியம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு சில நட்சத்திரங்கள் தாரா பலம் இல்லாதவையாக இருக்கும்.
இதை மிக எளிதில் நிர்ணயிக்கலாம். சுப முகூர்த்தத்துக்காக ஒன்றிரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த நாளுக்கு உரிய நட்சத்திரத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நபரின் ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் நிர்ணயிக்கப்படும் நாளுக்கு உரிய நட்சத்திரம் வரையிலும் எண்ண வேண்டும். அந்த எண்ணை 9-ஆல் வகுத்தால், வரும் மீதியைக் கொண்டு தாரா பலத்தை நிர்ணயிக்கலாம்.
மீதி 1 எனில், ஜென்ம தாரை. இதைத் தவிர்க்கவேண்டும்.
மீதி 2 எனில், சம்பத்து தாரை. இதில் முகூர்த்தம் வைக்கலாம்.
மீதி 3 எனில், விபத்து தாரை; தவிர்க்க வேண்டும்.
மீதி 4 எனில், க்ஷேம தாரை; இது சிறப்பானது.
மீதி 5 எனில், பிரத்யுக் தாரை; தவிர்க்க வேண்டும்.
மீதி 6 எனில், சாதக தாரை; அனுகூலம் ஏற்படும்.
மீதி 7 எனில், வதை தாரை; ஏற்கலாம்.
மீதி 8 எனில், மைத்ர தாரை; ஏற்கலாம்.
மீதி 9 எனில், பரம மைத்தர தாரை; சேர்த்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, ஜென்ம நட்சத்திரம் அசுவினி. இந்த நபருக்கு உத்திராடம் நட்சத்திரம் உள்ள நாளில் திருமணம் நடத்தத் தீர்மானித்தால், தாரா பலத்தைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
அசுவினிக்கு 21-வது நட்சத்திரம் உத்திராடம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 3. அது விபத்து தாரை. எனவே, அந்த நாள் சரியாகாது. அசுவினிக்கு 24-வது நட்சத்திரம் சதயம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 6. அது சாதக தாரை. எனவே, அந்த நாளில் முகூர்த்தம் வைக்கலாம்.
ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் வைக்கும் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை 9-க்கும் குறைவாக இருந்தால், அந்த எண்ணிக்கையையே மீதியாகக் கொள்ள வேண்டும்.
நேரம்: பொதுவாக அந்தந்த நாளுக்கு உரிய ராகு காலத்தையும், யமகண்டத்தையும் தவிர்த்து, சுபமுகூர்த்தத்தை நிச்சயிக்க வேண்டும். காலை நேரங்களில் திருமண முகூர்த்தம் வைப்பது நலம். வட இந்தியாவிலும், வேறு சில சமய தர்மங்களை கடைப்பிடிப்பவர்களும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும்கூட திருமணம் நடத்துவது உண்டு. அது அவரவர் குல சம்பிரதாயமாக இருக்கிறது. அப்படி இருந்தாலும், அதுவும் மேற்கூறிய பலன்களை அனுசரித்தே நிர்ணயிக்கப்படும்.
கரிநாள்: பஞ்சாங்கத்தைப் பார்த்தால் அதில் சில நாட்களை கரிநாள் என்று குறித்திருப்பார்கள். அந்த நாட்களிலும் திருமணம் செய்யக்கூடாது.
சந்திராஷ்டமம்: ஒருவர் பிறந்த நட்சத்திரம் இருக்கும் ராசிக்கு, 8-வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நக்ஷத்திரங்கள் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமணம் வைக்காமல் இருத்தல் நலம். இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
சந்திராஷ்டம நாட்களில் தொடங்கும் புதிய காரியங்கள் கலகத்திலும் தாமதத்திலும் முடியலாம். மிக முக்கியமான நிகழ்வுகளுக்காக நாட்கள் பார்க்கும்போது, சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். திருமணம் பற்றித் தீர்மானிக்கும்போது மணமகன், மணமகள் இருவருக்கும் சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ள எல்லாரது நட்சத்திரங்களுக்கும் சந்திராஷ்டமம் பார்த்து நாள் நிர்ணயிக்க வேண்டுமென்றால், எந்த நாளும் கிடைக்காது. அது தேவையில்லை. ஒரு நிகழ்வுக்கு உரிய முக்கிய கர்த்தாவுக்கு மட்டுமே சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்களைத் தெரிந்துகொள்ள எளிய அட்டவணை. கீழே தரப்பட்டுள்ளது.
அதேநேரம், நாள்- நட்சத்திரம், முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்கள் எப்படி நிச்சயிக்கிறார்கள் என்பதற்கான ஆதார விவரங்களை நாமும் அறிந்துவைத்திருப்பது சிறப்பு.
மாதங்கள்: ஆடி, மார்கழி மாதங்கள் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் திருமணத்துக்கான முகூர்த்தங்கள் வைக்கப்படுவது தற்காலத்தில் சம்பிரதாயமாகிவிட்டது.
நாள்: பொதுவாக சுபமுகூர்த்தங்கள் வைப்பதற்கு சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்கள் உத்தமமாகக் கருதப்படுகின்றன. வடஇந்தியாவில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மங்கள் வாரம் என்ற அடிப்படையில், அந்த நாளிலும் திருமணம் நடைபெறுகிறது.
திதி: திருமண முகூர்த்தம் நிச்சயிக்க, அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்ப்பார்கள். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த திதிகள் இருந்தாலும், முகூர்த்தம் வைக்கும் நேரத்தில் அந்த திதிகள் மாறிவிட்டால், அந்த நாளை எடுத்துக்கொள்ளலாம்.
நட்சத்திரம்: மணமகன், மணமகள் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரங்களை மனத்தில் கொண்டு, அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமண முகூர்த்தம் வைக்க வேண்டும்.
ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 10-வது நட்சத்திரம் கர்மம், 16-வது நட்சத்திரம் சாங்காதிகம், 18-வது நட்சத்திரம் சாமுதாயிகம், 23-வது நட்சத்திரம் வைணாதிகம், 25-வது நட்சத்திரம் மானசம் என்று பெயர் பெறும். இந்த நட்சத்திரங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை நிச்சயிக்கக்கூடாது. உதாரணமாக, மணமகனின் நட்சத்திரம் அசுவினி என்றால், அதற்கு 10-வது நட்சத்திரம் மகம்; 16-வது நட்சத்திரம் விசாகம்; 18-வது கேட்டை, 23-வது அவிட்டம், 25-வது பூரட்டாதி. ஆக, இந்த நட்சத்திர நாட்களில் அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு முகூர்த்தம் வைப்பதை தவிர்க்கவேண்டும்.
தாரா பலம்: எந்த ஒரு சுப காரியம் செய்யும்போதும் 'தாராபலம் சந்திரபலம் ததேவா, வித்யா பலம் தெய்வ பலம், ததேவா’ - என்று மந்திரம் சொல்லி ஆரம்பிப்பார்கள்.
இவற்றில் திருமண முகூர்த்தங்களுக்கு 'தாரா பலம்’ மிக அவசியம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு சில நட்சத்திரங்கள் தாரா பலம் இல்லாதவையாக இருக்கும்.
இதை மிக எளிதில் நிர்ணயிக்கலாம். சுப முகூர்த்தத்துக்காக ஒன்றிரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த நாளுக்கு உரிய நட்சத்திரத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நபரின் ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் நிர்ணயிக்கப்படும் நாளுக்கு உரிய நட்சத்திரம் வரையிலும் எண்ண வேண்டும். அந்த எண்ணை 9-ஆல் வகுத்தால், வரும் மீதியைக் கொண்டு தாரா பலத்தை நிர்ணயிக்கலாம்.
மீதி 1 எனில், ஜென்ம தாரை. இதைத் தவிர்க்கவேண்டும்.
மீதி 2 எனில், சம்பத்து தாரை. இதில் முகூர்த்தம் வைக்கலாம்.
மீதி 3 எனில், விபத்து தாரை; தவிர்க்க வேண்டும்.
மீதி 4 எனில், க்ஷேம தாரை; இது சிறப்பானது.
மீதி 5 எனில், பிரத்யுக் தாரை; தவிர்க்க வேண்டும்.
மீதி 6 எனில், சாதக தாரை; அனுகூலம் ஏற்படும்.
மீதி 7 எனில், வதை தாரை; ஏற்கலாம்.
மீதி 8 எனில், மைத்ர தாரை; ஏற்கலாம்.
மீதி 9 எனில், பரம மைத்தர தாரை; சேர்த்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, ஜென்ம நட்சத்திரம் அசுவினி. இந்த நபருக்கு உத்திராடம் நட்சத்திரம் உள்ள நாளில் திருமணம் நடத்தத் தீர்மானித்தால், தாரா பலத்தைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
அசுவினிக்கு 21-வது நட்சத்திரம் உத்திராடம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 3. அது விபத்து தாரை. எனவே, அந்த நாள் சரியாகாது. அசுவினிக்கு 24-வது நட்சத்திரம் சதயம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 6. அது சாதக தாரை. எனவே, அந்த நாளில் முகூர்த்தம் வைக்கலாம்.
ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் வைக்கும் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை 9-க்கும் குறைவாக இருந்தால், அந்த எண்ணிக்கையையே மீதியாகக் கொள்ள வேண்டும்.
நேரம்: பொதுவாக அந்தந்த நாளுக்கு உரிய ராகு காலத்தையும், யமகண்டத்தையும் தவிர்த்து, சுபமுகூர்த்தத்தை நிச்சயிக்க வேண்டும். காலை நேரங்களில் திருமண முகூர்த்தம் வைப்பது நலம். வட இந்தியாவிலும், வேறு சில சமய தர்மங்களை கடைப்பிடிப்பவர்களும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும்கூட திருமணம் நடத்துவது உண்டு. அது அவரவர் குல சம்பிரதாயமாக இருக்கிறது. அப்படி இருந்தாலும், அதுவும் மேற்கூறிய பலன்களை அனுசரித்தே நிர்ணயிக்கப்படும்.
கரிநாள்: பஞ்சாங்கத்தைப் பார்த்தால் அதில் சில நாட்களை கரிநாள் என்று குறித்திருப்பார்கள். அந்த நாட்களிலும் திருமணம் செய்யக்கூடாது.
சந்திராஷ்டமம்: ஒருவர் பிறந்த நட்சத்திரம் இருக்கும் ராசிக்கு, 8-வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நக்ஷத்திரங்கள் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமணம் வைக்காமல் இருத்தல் நலம். இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
சந்திராஷ்டம நாட்களில் தொடங்கும் புதிய காரியங்கள் கலகத்திலும் தாமதத்திலும் முடியலாம். மிக முக்கியமான நிகழ்வுகளுக்காக நாட்கள் பார்க்கும்போது, சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். திருமணம் பற்றித் தீர்மானிக்கும்போது மணமகன், மணமகள் இருவருக்கும் சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ள எல்லாரது நட்சத்திரங்களுக்கும் சந்திராஷ்டமம் பார்த்து நாள் நிர்ணயிக்க வேண்டுமென்றால், எந்த நாளும் கிடைக்காது. அது தேவையில்லை. ஒரு நிகழ்வுக்கு உரிய முக்கிய கர்த்தாவுக்கு மட்டுமே சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்களைத் தெரிந்துகொள்ள எளிய அட்டவணை. கீழே தரப்பட்டுள்ளது.
- Sponsored content
Similar topics
» நெய் உடலுக்குச் செய்யும் நன்மை பற்றி அறியாத சில விடயங்கள்
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» வெள்ளி மணி கிண்ணத்தில... நல்ல நல்ல சந்தனம் தான்...
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» வெள்ளி மணி கிண்ணத்தில... நல்ல நல்ல சந்தனம் தான்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|