புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
7 Posts - 64%
heezulia
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
3 Posts - 1%
mruthun
வழி ! Poll_c10வழி ! Poll_m10வழி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 25, 2014 10:52 pm

என் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டேன்.வாழ்க்கையில் பல்வேறு தோல்விகளை கண்டவன் நான்! ஆறு ஆண்டாய் வேலை தேடி அலைகிறேன்; ஒரு வேலையும் கிடைத்தபாடில்லை. குடும்பத்திலோ பணப் பிரச்னை, காதல் தோல்வி, வீட்டில், 'தண்டச்சோறு' அர்ச்சனை. அதனால் தான், இதற்கெல்லாம் ஒரே முடிவு, உயிரை முடித்துக் கொள்வது தான்.
படித்தது பி.எஸ்சி., கணிதம்; மேலே படிப்பதற்கு வீட்டில் பண வசதி இல்லை. இதை படிக்க வைப்பதற்கே அப்பாவும், அம்மாவும் படாதபாடு பட்டு விட்டனர்.

வேலை தேடுவதையே வேலையாக ஏற்று, நான் ஏறி, இறங்கிய கம்பெனிப் படிகள், என் உடம்பை மெருகேற்ற தான் உதவியதே தவிர, வேலை கிடைத்தபாடில்லை. நான் எழுதிய வங்கித் தேர்வுகளும், அரசு தேர்வுகளும் என் தலையெழுத்தை போலவே, பயன்படாத எழுத்துத் தேர்வுகளாக போய் விட்டன.
என் அப்பா ஒருவரின் சம்பளத்தில் தான் நான், அம்மா மற்றும் என், மூன்று தங்கைகள் என, ஆறு ஜீவன்கள் சாப்பிட வேண்டும். 'எனக்கு பின் எதற்காக மூணு பொம்பளப் புள்ளங்கள பெத்தே...' என அப்பாவை கேட்கும் போதெல்லாம், அவர் அளிக்கும் ஒரே பதில், 'எல்லாம் அவன் செயல்!'

சாப்பிடுவதற்காக நான் வீட்டிற்குள் நுழைந்து விட்டாலே, 'வந்துட்டான் பாரு... வக்கணையா கொட்டிக்க; தண்டச்சோறு! ஒரு வேலை தேடிக்க வழி இல்ல; சாப்பிடுறதுக்கு மட்டும் நேரம் தவற மாட்டேங்குது... தண்டச்சோறு... தண்டச்சோறு...' என்பார். ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவது, எனக்கு அனிச்சை செயலாகவே இருந்தது.

எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் காதல் வந்தது. நான், அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்க, அவளோ பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு போய் விட்டாள்.பொறுத்தார் பூமி ஆள்வாராம்... இந்த பழமொழியின் உண்மையை சோதித்து பார்க்க, இனிமேலும் எனக்கு பொறுமை இல்லை.

புத்தருக்கு, போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல, எனக்கு எங்கள் வீட்டு மாமரத்தடியில், என் துன்பங்களில் இருந்து விடுதலை பெற ஒரே வழி, தற்கொலையே என்ற தெளிவு பிறந்தது. அதுதான் கிளம்பி விட்டேன்... ரயில் தண்டவாளத்தை நோக்கி! இந்த திட்டத்தையாவது ஒழுங்காகச் செய்து முடிக்கணும் என ஆசைப்பட்டேன்.

விஷத்தை குடிக்கலாம் என்றாலோ எக்ஸ்பயரி தேதி தாண்டிய விஷத்தைக் குடிக்க போக, அது சரியாக வேலை செய்யாத பட்சத்தில், யாராவது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பிழைக்க வைத்துவிடக் கூடும்.

தூக்கு போட்டுக் கொள்ளலாம் என்றால், கயிறு அறுந்து பிழைத்து விட்டால், மறுபடியும் வறுமை, தண்டச்சோறு அர்ச்சனை! அது மட்டுமா... தற்கொலை முயற்சி செய்ததற்காக, அப்பா, என் மீது பச்சாதாபம் படப் போவதில்லை; மாறாக அதற்கும் சேர்த்து திட்டுத்தான் கிடைக்கும்.
அதனால் தான் ரயில் தண்டவாளத்தில் உயிரை போக்க முடிவு செய்தேன்.

குண்டும், குழியுமான அந்த ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஆங்காங்கே இருந்த ஒரு சில தெரு விளக்குகள் கோமா நிலையில், தன் கடமையைச் செய்து கொண்டிருந்தன. வேகமாக நடையை முடுக்கி விட்டேன்; நேரம் ஆகிவிட்டால் வண்டி சென்று விடக்கூடும்.

விரைவாக நடந்து சென்று கொண்டிருக்கையில், திடீரென்று மின்வெட்டு; எங்கும் இருட்டு; பாதையே தெரியவில்லை. சாகப் போகிறவனுக்கு, இருட்டில் நடக்க என்ன பயம்! ஆனால், இருட்டில் எங்கேயாவது குண்டு, குழியில் விழுந்து விட்டால், என் திட்டம் பாழாய் போய்விடுமே! நேரமோ ஓடிக் கொண்டிருந்தது; செய்தவறியாது திகைத்தேன்.

ரயில் போய் விடுமோ... கடவுளே... ரயில் வரும் சத்தம் கேட்கிறதே... அடுத்த ரயிலுக்கெல்லாம் காத்திருக்க முடியாது. ரயில்களுக்கென்ன வந்து கொண்டுதான் இருக்கும்; ஆனால், ரயிலில் விழுந்து உயிரை விட முடிவெடுந்திருக்கும் என்னுடை துணிச்சல், அடுத்த ரயில் வரும் வரை அப்படியே இருக்குமா என, சொல்ல முடியாது. என் மனது மாறிவிட்டால், அப்புறம் மீண்டும் அதே நரக வாழ்க்கை. ஐய்யோ... அந்த வாழ்க்கையை நினைக்கவே பயமாக இருக்கிறது. வேண்டவே வேண்டாம்; இதே ரயிலிலேயே, என் வாழ்வு முடிந்து விட வேண்டும். மின்சாரமே உடனே வா...

வாழத்தான் வழி தெரியவில்லை; சாகவும் முடியாதா... அதற்கும் நான் லாயக்கற்றவனா...
திடீரென்று, ஒரு ஒளி தென்பட்டது; எனக்குப் பின்னால் மங்கலாகத் தோன்றி, சிறிது சிறிதாக பெரிதாகி, என் பின்னாலிருந்து வந்து, என்னை கடந்து சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் என் பார்வையை விட்டு மறைந்தது ஒரு டூவீலர். அது தந்த ஒளியில், நான் நடக்க வேண்டிய பாதையை, மனதில் படம் பிடித்துக் கொண்டேன். என் மனம் வந்த வேலையைச் செய்ய தூண்டியது; வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
ஓடினேன்... ஓடினேன்...பின்னங்கால் பிடரியில் பட ஓடினேன். மூச்சு வாங்க ஓரிடத்தில் நின்றேன். திடீரென்று என் மனதில், ஒரு யோசனை.

நான் எடுத்துள்ளதோ திரும்பி வர முடியாத முடிவு. நான் ஏன் சாக வேண்டும்?
இருட்டில் வழி தெரியாமல் தவித்த எனக்கு, இருசக்கர வாகன ஒளி, வழி காட்டியது.
நான், அந்த வாகன ஓட்டியை, எனக்கு பாதை காட்டச் சொல்லி உதவி கேட்கவில்லை.
ஆனால், கண் இமைக்கும் நேரத்தில், தானாகவே எனக்கு உதவி கிடைத்திருக்கிறது. இருட்டில் தடுக்கி விழாமல், சரியான பாதையை காட்டி எனக்கு உதவி செய்தது, அந்த வாகன ஓட்டிக்கே தெரியாது. இதே போல் வாழ்க்கைப் பாதையிலும், யாராவது அவர்களையே அறியாமல் கூட எனக்கு வழி காட்டக் கூடும்!
வாழ்ந்து தான் பார்ப்போமே!

முடிவை மாற்றினேன்; வீடு நோக்கி நடந்தேன்.

வெ.ராஜாராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Aug 25, 2014 10:56 pm

நல்ல முடிவு, தோல்விக்கெல்லாம் தற்கொலை என்றால், எங்கே யாரும் உயிரோடு இருக்க முடியாதே. கதை அருமை அம்மா.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 26, 2014 12:57 pm

கிடைக்கிற வேலையை செய்யலாமே நல்ல கதை புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சே.சையது அலி
சே.சையது அலி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014

Postசே.சையது அலி Tue Aug 26, 2014 1:15 pm

நல்ல கதை தோல்விகளுக்கு தற்கொலை முடிவல்ல கதையின் முடிவு அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 26, 2014 9:21 pm

M.M.SENTHIL wrote:நல்ல முடிவு, தோல்விக்கெல்லாம் தற்கொலை என்றால், எங்கே யாரும் உயிரோடு இருக்க முடியாதே. கதை அருமை அம்மா.

ஆமாம் செந்தில், ஆனால் எனக்கு அவன் அப்படியே ஓடிப்போய் விடுவானோ என்று இருந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 26, 2014 9:22 pm

ஜாஹீதாபானு wrote:கிடைக்கிற வேலையை செய்யலாமே நல்ல கதை புன்னகை

அதுதானே புன்னகை எவ்வளவோ உடம்பு முடியாதவர்கள் எல்லாம் வசவில்லையா? கை கால் நல்லா இருக்கும் இவன்..........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 26, 2014 9:22 pm

சே.சையது அலி wrote:நல்ல கதை தோல்விகளுக்கு தற்கொலை முடிவல்ல கதையின் முடிவு அருமை

நன்றி சையத் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 26, 2014 9:31 pm

சரியான முடிவு. நல்ல கதை.



வழி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவழி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வழி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Aug 26, 2014 10:46 pm

நல்ல பதிவு..........

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 2:06 am

Namma oorla ithukku thaan adikkadi pavar kat pannuraanga புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக