புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
5 Posts - 4%
viyasan
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
18 Posts - 3%
prajai
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வள்ளுவரின் பகைவர்! Poll_c10வள்ளுவரின் பகைவர்! Poll_m10வள்ளுவரின் பகைவர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவரின் பகைவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 20, 2014 8:14 pm

விருப்பும் வெறுப்பும் அற்ற வள்ளுவருக்குப் பகைவர் இருக்க வாய்ப்பில்லை. பகைவர்களைக் குறித்து வள்ளுவர் கையாண்டுள்ள பல்வேறு சொற்களைப் பற்றிக் காண்போம். "பகைவர்' என்ற சொல்லுக்கு இணையான சொற்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு நுட்பமான பொருளைத் தருவதால், தமிழ் மொழியின் வளத்தினை அறிந்து மகிழலாம்.

அபிதானமணிமாலை என்னும் நூல், "பகைவர்' என்னும் சொல்லுக்கு இனமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுத் தருகிறது.

""பகைவர், அடையவர், பகைஞர், பரர், அண்டர்,
அகிதர், தொடர்பிலர், அமித்திரர், அமரார்,
பற்றார், கருதலர், பற்றலர், எதிர்ந்தோர்,
சொற்றார், தரியலர், சேரார், முனைந்தோர்,
பொருந்தவர், வேண்டார், புல்லார், ஒல்லார்,
நள்ளார், கொள்ளார், நண்ணார், சார்பிலார்,
உள்ளார், கூடார், ஒட்டார், விட்டார்,
எண்ணிலர், இன்னார், இகவோர், இரிஞர்,
நண்ணலர், ஒன்னலர், நயனிலர், நேரலர்,
செறுநர், கேளலர், மேவலர், சினவர்,
தெறுநர், நோனார், துன்னார், தெவ்வர்,
மாணார், பேணார், மருவலர், வட்கார்,
மாற்றலர்க்கு இன்னவை ஏற்ற தொல்பெயரே''

இவ்வாறு ஐம்பது சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் மூன்று சொற்கள் (பரர், அகிதர், அமித்திரர்) வடமொழிச் சொற்கள். (அகிதம்-தீங்கு - அகிதர்-பகைவன்; மித்திரன்-நண்பன் - அமித்திரன் பகைவன்).

திருவள்ளுவரின் சொல்லாட்சி:

வள்ளுவரும் பகைவர் என்னும் பதத்திற்கு இணையான பல்வேறு சொற்களை இடத்திற்கு ஏற்பவே பயன்படுத்தியுள்ளதை நூல் முழுவதும் காணமுடியும்.

"ஒட்டார், ஒன்னார், செருநர், செறுவார், செற்றார், தெவ், நண்ணார், பகைவர், பற்றார், மாணார், மாற்றலர், மாற்றார், வேண்டா(தா)ர்'' என்பதாகப் பதின்மூன்று சொற்கûளையும், அபிதானமணிமாலை குறிப்பிடாத ""இனமல்லார், உடம்பாடு இல்லாதவர், ஏதிலார், ஒப்பிலார், நேரா நிரந்தவர், மனத்தின் அமையார், மாணாத செய்வான், செயிர்ப்பவர், வஞ்சர்'' என ஒன்பது சொற்களையும் கையாண்டுள்ளார். மொத்தம் 22 சொற்களைக் காணவியலும்.

அபிதானமணிமாலை குறிப்பிட்டவற்றில் கொள்ளார் என்னும் பதத்தினை இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளார் பொய்யில் புலவன். 404-ஆவது குறட்பாவிலே "ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்' என்னும் பொருளிலும்; 792-ஆம் குறட்பாவிலே "தேர்ந்தெடுக்காதவன்' என்ற பொருளிலும் "கொள்ளார்' என்பதைப் பயன்படுத்தியிருப்பதால், பகைவர் என்ற பொருளில் அச்சொல்லைக் காணவியலாது. அதைப் போலவே, நயனிலாதவன் என்பதை விருப்பமில்லாதவன் என்ற பொருளிலும்; புல்லார் என்பதை அற்பர் என்னும் பொருளிலும்; பேணலர் என்பது விரும்பாதவர் என்ற பொருளிலும் அவர் கையாண்டுள்ளார். எனவே, "பகைவர்' என்ற பொருளில் 22 சொற்களை தெய்வப்புலவர் பயன்படுத்தியுள்ளார் என அறியலாம். சங்க இலக்கியத்தில் காணவியலாத சில சொற்களையும் கையாண்டுள்ளார். ""ஒட்டார், செறுவார், பற்றார், மாணார் ஒப்பிலார், நேரா நிரந்தவர்'' ஆகிய சொற்கள் சங்கப் பாடல்களில் பயிலப்பெறவில்லை.

(முனைவர் க.பலராமனின் "குறளியற் சிந்தனைகள்') - நன்றி தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 8:58 am

நல்ல செய்தி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 21, 2014 9:41 am

அடேயப்பா! பகைவர்க்கு இத்தனை மாற்று சொற்களா?



[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 21, 2014 11:18 am

வள்ளுவரின் பகைவர்! 1571444738 மீண்டும் சந்திப்போம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக