புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 18, 2014 10:50 pm



எக்ஸ்-ரே எடுக்கும் அறைகளில் ஆண் ஊழியர்களே அதிகம் பணியாற்றுவதால், பெண் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண், சென்னையில் ஒரு மருத்துவமனையில் அலறி யடித்து ஓடிவந்த சம்பவம் இப்பிரச் சினையின் தீவிரத்தை படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது.

சென்னை ராஜா அண்ணா மலைபுரம், எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிகிச்சைக் காக வந்தார். அங்கு இருந்த ஆண் ஊழியர் எக்ஸ்-ரே எடுப்பதற்காக ஆடைகளைக் கழற்றச் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் மறுத்தாலும், பின்னர் கட்டாயத்தால் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. அதன்பிறகு, அந்த ஊழியர் தவறான முறையில் தொட்டதால் அந்த பெண் அச்சத்தில் வெளியே ஓடிவந்தார்.

அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேலூரை சேர்ந்த ஊழியர் கார்த்திகேயனை (37) கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆண் ஊழியர்கள் அதிகம்

தமிழகத்தில் பெரும்பாலான எக்ஸ்-ரே மையங்களில் ஆண் களே பணிபுரிகின்றனர். அங்கு பெண்கள் தயக்கத்துடனே செல்ல வேண்டியுள்ளது. சில தவறான சம்பவங்கள் நடைபெற்றபோதி லும், பிரச்சினையைத் தவிர்ப் பதற்காக, பெண்கள் வெளியே சொல்லாமல் விட்டுவிடும் நிலை உள்ளது.

தற்போது இசிஜி, எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், கருப்பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யும் இடங்களில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பாதுகாப்பு இல்லை

எக்ஸ்-ரே எடுக்க வரும் பெண்கள் தங்கள் உடைகளை சிறிது களைய வேண்டியுள்ளது. எக்ஸ்-ரே அறையில் ஆண் ஊழியர் பணியாற்றுவதால், பெண்கள் தங்களுடைய உடைகளை களைய தயக்கம் காட்டுகின்றனர். ஆனாலும் வேறு வழியில்லாததால் பெண்கள் அவர்கள் சொல்வதை செய்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை ஒரு சில பெண்களை தவிர, பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. இதனால் எக்ஸ்-ரே அறைக்கு வரும் பெண் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருக்கிறது.

பெண்களுக்கு ஆர்வம் இல்லை

எக்ஸ்-ரே பிரிவில் பெண் நிபுணர்கள் குறைவாக இருப்பது தொடர்பாக அரசு டாக்டர்கள் கூறியதாவது:

எக்ஸ்-ரே, இசிஜி போன்ற தொழில்நுட்ப படிப்பை மாண வர்கள்தான் அதிக அளவில் படிக்கின்றனர். மாணவிகள் படிக்க விருப்பம் காட்டுவதில்லை. அதனால்தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள எக்ஸ்-ரே அறைகளில் ஆண் ஊழியர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். சில மருத்துவ மனைகளில் மட்டும் பெண்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர் என்றார்.

பெண் உதவியாளர்

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெண் நோயாளியை, ஆண் டாக்டரோ தொழில்நுட்ப வல்லுநரோ பரிசோதனை செய்தால், அந்த இடத்தில் ஒரு பெண் உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். பெண் உதவியாளர் இல்லாமல், பெண் நோயாளியை பரிசோதனை செய்யக்கூடாது. இதற்கான மருத்துவ நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பெண் நோயாளியை பரிசோதனை செய்யும் போது, பெண் உதவி யாளர் கூடவே இருப்பார் என்றார்.

பெண்கள் தைரியமாக படிக்க வரலாம்

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸ்-ரே போன்ற தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது மாணவிகள் அதிக அளவில் படிக்க வருகின்றனர். தொழில்நுட்ப படிப்புகளில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. புதிதாக பல தொழில்நுட்ப படிப்புகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. எக்ஸ்-ரே அறைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் ஆபத்து ஏற்படுமோ என மாணவிகள் பயப்பட வேண்டாம். கதிர்வீச்சு தாக்காமல் பாதுகாப்பாக பணியாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தி இந்து



எக்ஸ்-ரே அறைகளில் கேள்விக்குறியாகும் பெண் நோயாளிகள் பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 18, 2014 10:56 pm

வெளிநாட்டினரிடம் இப்படி நடப்பதால் நமது மானம் தான் போகும் சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 19, 2014 12:41 am

பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு இடத்தை காட்டமுடியுமா , நம் சமூகத்தால் ?
வேதனையான விஷயம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 19, 2014 7:18 am

பெண்களுக்கான பரிசோதனை அறைகளில்
பெண் ஊழியர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும்
என பணிக்கலாம்...அவர் தொழில் நுட்பம் தெரிந்தவராக
இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை..!
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 19, 2014 10:45 am

என்னத்தை சொல்ல , இது போல செய்திகளை படிக்கும் பொது எங்காவது migrate ஆகிவடலாமா என்று தோணும். இந்தியா எனது நாடு என்ற சிந்தனை அடிமனதில் தீவிரமாக உள்ளதால் ஒவ்வொரு முறையும் தள்ளி தள்ளி போகிறது சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக