புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 0:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
53 Posts - 60%
heezulia
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Aug 2014 - 2:01


‘‘பசுமையான மரம் ஒன்றில் ஒரு கிளிநீண்ட காலமாகத் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தது.

ஒரு நாள் அந்த வழியே வந்த ஒரு காகம், அந்த மரத்தைப் பார்த்தது.‘இவ்வளவு பசுமையான மரமா?’ என்று ஆச்சர்யப்பட்டது. அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்தது.

இனிமேல் இங்கேயே குடியேறிவிட வேண் டியதுதான் என்று முடிவுசெய்தது. தன் பழைய கூட்டைக் கலைத்துவிட்டு, இந்த மரத்தில் கூடு கட்டியது. அப்போது கிளி எங்கோ வெளியே போயிருந்தது.

திரும்பி வந்த கிளி, காக்கையின் கூட்டைப்பார்த்து, ‘‘ஏய்.. காக்கையே... எங்க மரத்தில் எதுக்குக் கூடு கட்டினே? இது நான் வசிக்கிற மரம்... இங்கு வேறு யாரும் தங்கக்கூடாது. உடனே இங்கிருந்து கிளம்பிவிடு’’ என்று மிரட்டியது.

அதற்கு காகம், ‘‘அதெல்லாம் முடியாது. மரம் எல்லோருக்கும் பொதுவானது. யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று பதிலடி கொடுத்தது.

இப்படியே சண்டை வலுத்துக்கொண்டு இருக்கும்போது அந்த வழியே இரண்டு நரிகள் வந்தன. ‘‘ஏன் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?’’ என்று கேட்டது ஒரு நரி.

காகம் நரிகளிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறியது. நரிகள் நன்றாக யோசித்துவிட்டு, ‘‘சரி... இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி சொல்கிறோம்’’ என்றன.

காகமும் கிளியும் ‘‘என்ன... என்ன...’’ என்று ஆவலுடன் கேட்டன.

உடனே நரிகளும், ‘‘உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறோம். அதில் ஜெயிப்பவர்தான் இந்த மரத்தில் இருக்கவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’’ என்றன.

காகம், கிளியும் ஒன்றை ஒன்று முறைத்துக்கொண்டு ‘‘சரி’’ என்று தலை ஆட்டின.

நரிகள் போய் மைக், ஸ்பீக்கர் செட் எல்லாம் எடுத்து வந்து பொருத்த ஆரம்பித்தன.

கிளி, கழுகு என்று பார்வையாளர்களும் ஆவலோடு போட்டியைப் பார்க்க மெள்ள மெள்ளக் கூடத் தொடங்கின.

போட்டி அன்று மாலைதான் நடக்க இருந்தது. அதற்கு முன்பாக கிளி தன் குஞ்சுகளுக்காக, இரை தேடிச் சென்றது.

அங்கு இதுவரையிலும் பார்த்திராத பழங்களைப் பார்த்து, ஆனந்தத்தோடுப் பறித்துக்கொண்டது.

தானும் சாப்பிட்டுவிட்டு, குஞ்சு களுக்கும் எடுத்து வந்தது.

போட்டி தொடங்க, சில மணித் துளிகளே இருக்கையில், வெளியே சென்றிருந்த காகம் திரும்பி வந்தது.

நரிகளும் வந்து சேர்ந்தன.

‘‘இது பாட்டுப் போட்டி. இதில் முதலில் காகத்தைப் பாட வருமாறு அழைக்கிறோம்’’ என்று கம்பீரமாக அழைத்தன நடுவர்களான நரிகள்.

காகம் வந்தது. மைக்கின் முன்னால் நின்று, தன் தொண்டையைச் செருமிக்கொண்டது. தன் கரகரத்த குரலில், ‘‘காகா... காகா...’’ என்று பாடி முடித்தது.

கிளியும், கிளிக்குஞ்சுகளும் விழுந்து விழுந்து சிரித்தன. சிரித்த சிரிப்பில் அவற்றுக்கு வயிற்று வலியே வலித்துவிட்டது. நரிகளும் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தன.

பிறகு, கிளி பாடத் தொடங்கியது. தன் இனிய குரலெடுத்து ‘கீ... கீ...’ என்று பாடும் என்று எதிர்பார்த்தால், அதன் தொண்டையிலிருந்து, எந்த சத்தமும் வரவில்லை. கிளியால் ஒரு வார்த்தை கூடப் பாடமுடியவில்லை.

நரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

இப்போது காகம் வாய்விட்டுச் சிரித்தது. ‘‘உனக்கு நல்லா வேணும். என்னைக் கிண்டல் செஞ்ச இல்ல... இப்ப உன்னாலே பாட முடியலை, பார்த்தியா? அடுத்தவங்களை கேலி பண்ணினா இப்படித்தான் ஆகும்’’ என்று சொன்னது.

ஒன்றுமே பாடாத கிளி, தோல்வி அடைந்ததாக நரிகள் அறிவித்தன.

வெற்றி பெற்ற காகத்தைப் பாராட்டிவிட்டு, ‘‘இனிமேல் காகம் இங்கேதான் இருக்கும். போட்டி விதிப்படி, தோற்ற கிளி இந்த மரத்தைவிட்டு வேறு மரத்திற்குப் போய்விட வேண்டும்’’ என்று அறிவித்தன.

‘‘ஒரு நிமிடம்...’’ என்று காகம் பேச ஆரம்பித்தது. ‘‘கிளி வேறு எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே, என்னுடனேயே இருக்கட்டும். ஒரு மரம் பொதுவானது. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஏதோ பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, அதன் தொண்டை இன்று கெட்டுப் போய்விட்டது. இல்லை என்றால் நன்றாகப் பாடி ஜெயித் திருக்கும்.இந்தப் போட்டியின் மூலம் மற்றவரின் இயற்கையான குறைபாடுகளை கேலி பண்ணக்கூடாது என்பதைக்கிளி புரிந்து கொண்டு இருக்கும். அத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு கிளி வாழ வேண்டும் என்பது தான் என் விருப்பம்’’ என்று சொன்னது.

இதைக் கேட்ட கிளி, வெட்கத்தோடு தலை குனிந்து‘‘என்னை மன்னித்துவிடு’’ என்பது போல்காகத்தைப் பார்த்தது.

நரிகள் விடைபெற்றுச் செல்ல, கறுப்புக் காகமும் பச்சைக் கிளியும் தங்கள் குஞ்சுகளோடு எந்த வேற்றுமையும் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தன.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 13 Aug 2014 - 17:56

சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 13 Aug 2014 - 19:47

விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை நல்ல கதை பகிர்வுக்கு நன்றீ தம்பி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed 13 Aug 2014 - 21:22

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

அருமையான பகிர்வு

எங்கே போனது இந்த பஞ்ச தந்திர கதைகள் எல்லாம் ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக