புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_m10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_m10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_m10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_m10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_m10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_m10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_m10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_m10தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 1:12 pm

செட்டிநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள காரைக்குடிக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலக மகா கவிஞன் கம்பனுக்கு விழா எடுத்த முதல் ஊர் காரைக்குடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திங்கள் மகநாள் தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் கம்பன் விழாவில் பங்குபெறாத சொற்பொழிவாளர்களோ, தமிழ் அறிஞர்களோ இல்லை எனும் அளவிற்கு காரைக்குடி கம்பன் விழா சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களில் காரைக்குடியின் ஒரு பகுதியான கழனிவாசல் குறிப்பிடப்பெற்றுள்ளது. பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும் இடையே போர் நடைபெற்றபோது கழனி வாசல் பகுதியில் ஏழகப்படை செயல்பட்டதாக குறிப்புகள் உள்ளன. கழனிவாசல் பகுதியில் உள்ள வைணவத் திருக்கோவில் ஏழகப் பெருமாள் என்று இப்போதும் வழங்கப்படுகிறது.

காரைக்குடி பெயர் எப்படி வந்தது?

உலகத்திலேயே முதன்முதலாக மொழியைத் தெய்வமாக்கிக் கோவில் அமைக்கும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவியவரான கம்பன் அடிபொடி சா.கணேசனுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த்தாய் கோவில் காரைக்குடியில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

தமிழ்த்தாய் கோவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள கம்பன் மணிமண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கோடி கொடுத்த கொடைஞன் வள்ளல் அழகப்பர் உருவாக்கிய அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.

காரைக்குடி எனப் பெயர் பெற்று விளங்கும் இவ்வூர் காரைச்செடி மிக்கமையால் வந்த பெயராகும். காரைச் செடிகள் மிகுதியாக இருந்த பகுதியை அழித்து மக்கள் வாழும் ஊராக மாற்றியதால் காரைக்குடி எனப் பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர்.

தமிழ்த்தாய்க்கு கோவில் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் கம்பன் அடிபொடி சா.கணேசனின் நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 23-4-1975 அன்று தமிழ்த்தாய் கோவிலுக்கு கால்கோள் விழா நடந்தது. பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கம்பன் அடிபொடி சா.கணேசனும், சிற்ப கலா சாகரம் ம.வைத்திய நாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை.கணபதி ஸ்தபதியும் இணைந்து தமிழ்த் தாய்க்கு வடிவம் கொடுத்தனர். கோவிலின் இறுதிக்கட்டப்பணிக்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெருமுயற்சியால் தமிழக அரசு மீண்டும் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிப்பணிகள் நிறைவேறின. பிறகு கருணாநிதியால் தமிழ்த்தாய் கோவில் 16-4-1993 அன்று திறக்கப்பட்டு தொடர்ந்து தமிழ் வழிபாடு நிகழ்ந்து வருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 22, 2009 1:12 pm

திருக்கோவில் அமைப்பு

தமிழ்த்தாய் கோவில் வடக்கு நோக்கியவாறு கம்பன் மணிமண்டபத்தின் வலப்புறம் அமைந்துள்ளது. மும்முனை நிலத்தில் ஆறுபட்டை, ஆறுநிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோவிலாக அமைந்து காணப்படுகிறது. தமிழ்த்தாய் கோவிலின் பரிவார தெய்வங்களாக, வடகீழ் கோடியில் வள்ளுவரும், தென்கோடியில் இளங்கோவடிகளும், வட மேல் கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர். தமிழ்த்தாய் கோவிலின் நுழை வாயிலின் முன் ஓலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக நிறுவப்பெற்றிருக்கின்றனர்.

தமிழ்த்தாயின் திருவுருவ அமைதி

கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி யளிக்கின்றாள். வலது முன்கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உத்ராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த் தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக் கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் வலது கால் கீழே தொங்கியவாறு, இடதுகால் மடிந்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த் தாயின் கால்களைச்சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன. நடராச மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச் செறிவும் உடையது எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன என்று ம.வைத்தியநாத ஸ்தபதி வியந்து குறிப்பிடுகிறார்.

வழிபாட்டு நெறிமுறைகள்

மலர், மாலை, நறும்புகை முதலியவை திருமுற்றத்தில் அதற்கென உள்ள தாம்பாளம் முதலியவற்றிலேயே படைக்கப்பெறும். ஒவ் வொரு மாதமும் முதல்நாள் திருவுருங்கட்கு எண்ணெய் சார்த்தித் திரு நீராட்டுச் செய்யப் பெறும்.

மூர்த்திக்கட்கு திருநீராட்டு செய்யும்போது அதற்கென்று ஆக்கிய தொன்னை போன்றவற்றாலேயே நீராட்ட வேண்டும். உலோகம், மரம், மண் கலன்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. (திருக்குட நீராட்டு விழா போன்ற பெருஞ்சாந்திக் காலங்களில் மட்டும் இவ்விதி தளர்த்தப்பெறும்.)

தமிழ்த்தாய் முதலிய வழிபாட்டுத் திருவுருங் கட்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் மூர்த்திகளை எவ்வகையானும் ஒட்டாமல் அணி செய்யப்படும்.

மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் எங்கமில்லாத தமிழ்த்தாய் கோவிலை வெங்கா தலைமையிலான கம்பன் அற நிலை செவ்வனே நிர்வாகம் செய்து வருகிறது. இந்தக் கோவில் தமிழுக்கும், தமிழகத்துக்கும் என்றும் சீரும், சிறப்பும் தருவதாக அமைந்துள்ளது.

avatar
Rajeswar
Guest

PostRajeswar Sun Feb 22, 2009 2:32 pm

நல்ல இருந்தது
பயனுள்ள தகவல்கள்

avatar
prabas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/02/2009

Postprabas Sun Mar 01, 2009 3:44 am

why not post a picture of Thamil Thaai..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:12 am

தமிழகத்தை தலை நிமிரவைக்கும் காரைக்குடி தமிழ்த்தாய் கோவில் 1311

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 8:48 am

சூப்பர் அருமையான தகவல் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக