புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_m10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_m10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_m10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_m10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_m10எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 10:03 pm


‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை என்றும், எனவே யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ எனப்படும் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோயால் சுமார் 1,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பும் அறிவித்துள்ளது. எபோலா நோய், மேற்கு ஆப்பிரிக்காவை தாண்டி பரவுவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிக்க வேண்டும். விமான நிறுவனங்கள், அந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும்போது முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள நாடுகளும், விமான நிலையங்களும் அந்நோயை கண்டறிந்து தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவ முன்வர வேண்டும். என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் சான் கூறியுள்ளார்.

இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை என்றும், எனவே யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார். நோய் தாக்கம் நிறைந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் எபோலா நோய் தாக்கம் இதுவரை இல்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறுகையில், ‘இந்தியாவில் ‘எபோலா’ நோய் இருப்பதற்கான தகவல் எதுவும் இந்த நிமிடம் வரையிலும் இல்லை. எனவே யாரும் பதற்றம் அடைய தேவையில்லை’ என்றார். எனினும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செய்து வருவதாக கூறியுள்ள அவர், நோய் தாக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 08, 2014 10:07 pm

பயமுள்ள பதிவு.. பயனுள்ள பதிவும் கூட..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 10:12 pm

வைரஸ் நோய் பரவுவதால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் கர்நாடக மந்திரி வேண்டுகோள்

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘அபல்லோ’ எனப்படும் வைரஸ் நோய் பரவி வருவதால் கர்நாடக மக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கர்நாடகா சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதர், மங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.நோயாளிகளிடம், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘அபல்லோ’ எனப்படும் வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அந்த நாடுகளுக்கு கர்நாடகத்தை சேர்ந்த யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்த வைரஸ் நோய் கர்நாடகத்துக்கு பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பெங்களூர், மங்களூர் விமான நிலையங்களில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்கிறார்கள்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கர்நாடக மக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மந்திரி யு.டி.காதர் கூறினார்.




எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 10:23 pm

இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்கம் இல்லை: மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்கம் இல்லை. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பல உயிர்களை எபோலா வைரஸ் பறித்துள்ளதன் காரணமாகவும், மருந்து சிகிச்சைக்கு கட்டுப்படாமல் நோய் வேகமாக பரவி வருவதாலும், சர்வதேச சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளதாவது: "தற்போது வரை இந்தியாவில் எபோலா வைரஸ் அச்சுறுத்தல் இல்லை. மக்கள் பீதியடைய வேண்டாம். அரசாங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எபோலா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய அரசு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துமாறு கூறியுள்ளது. தேவையில்லாமல் நோய் தொற்றுள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது.

நோய் தொற்று ஏற்பட்டுள்ள லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 45,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 10:24 pm

எபோலா நோய் அச்சுறுத்தல்: தூதரக அதிகாரிகள் நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு

லைபீரியாவில் எபோலா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருக்கு தனது நாட்டு தூதரக அதிகாரிகளை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் லைபீரியாவில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் கடந்த சில மாதங்களில், எபோலா வைரஸால் 932 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 1,711 பேருக்கு எபோலா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லைபீரியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்து அமெரிக்க சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு உதவ சிறப்பு மருத்துவ சேவை மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறையின் நோய் தடுப்பு மையத்தின் 12 மருத்துவர்கள் மற்றும் 13 பேரிடர் சேவை உறுப்பினர்கள் குழு எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்கர்கள் லைபீரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.



எபோலா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அவசரநிலை பிரகடனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக