புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்வெளி இந்தியன்!
Page 1 of 1 •
'சந்திராயன்’, 'மங்கள்யான்’... வரிசையில் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் பெயரிடப்படாத, தீவிரமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அடுத்த திட்டத்தின் பெயர், 'மேன் ஆன் மிஷன்’ (இது தோராயமான பெயர்தான்!). விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்பி சில நாட்கள் மிதக்கவைத்து, மீண்டும் கீழே இறக்குவதுதான் மேன் ஆன் மிஷன். கிட்டத்தட்ட ஒரு டூர் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது மாதிரி. என்ன... அது விண்வெளி ட்ரிப் என்பதால், எக்கச்சக்க டெக்னாலஜி அக்கப்போர், உலக நாடுகளின் பனிப்போர் எல்லாம் ஈர்த்துக் கவனம் பெறுகிறது; கோடிகளில் செலவு பிடிக்கிறது!
சரி... முதலில், எதற்கு மனிதனை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்?
நாடு, நாடோடி... என எல்லோருக்கும் இடம் பிடிக்கும் ஆசை என்பது, ஆழ்மனதில் ஊறிய விஷயம். துணையின் மனதில் முதல் இடம் பிடிப்பதில் இருந்து, 'சென்னைக்கு மிக அருகில்’ திண்டிவனம் தாண்டி இடம் பிடிப்பதாகட்டும், அமெரிக்கா போல அடுத்த நாட்டின் அதிகாரத்தை வளைத்துப் பிடிப்பதாகட்டும், உலக வரலாற்றில் இடம் பிடிப்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு.
இருக்கும் உலகத்தைக் குப்பைமேடு ஆக்கிவிட்டோம்; கடலைக் கழிவுநீர்த்தொட்டி ஆக்கிவிட்டோம். எரிபொருள், குடிநீர் இரண்டும் அதிவேகமாகத் தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விரிசல் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சில நூறு வருடங்கள் இந்தப் பூமி தாக்குப்பிடிக்கலாம். அதற்குப் பிறகு பூமி பயன்படாமலே போய்விட்டால், மனிதனுக்கு வேறு கிரகங்களில் குடியேற வாய்ப்பு கிடைக்குமா? இப்படி யோசித்த வல்லரசுகள் அண்ணாந்து பார்த்ததில் அம்புட்டதுதான் விண்வெளி.
'செவ்வாயில் ஒருகாலத்தில் நீர் இருந்திருக்கலாம்’ என்ற ஒரு வரி ஆய்வு முடிவுகள் அமெரிக்காவுக்கு ஆசையைத் தூண்டியது. உலக நாடுகளிடையே விண்வெளிப் போட்டியைத் தூண்டியது. சோஜர்னர், கியூரியாசிட்டி விண்கலங்களை அமெரிக்கா அனுப்ப, வேறு சில நாடுகள் செயற்கைக் கோள்களை அனுப்பிவைத்தன. அந்த வரிசையில் இந்தியா அனுப்பிய 'குறைந்த செலவு கர்ச்சீஃப்’தான் மங்கள்யான். இந்த விண்வெளிப் போட்டியின் அடுத்த கட்டத் திட்டமே 'மேன் ஆன் மிஷன்’!
ஒரு செயற்கைக்கோளை ராக்கெட்டில் வைத்து ஏவி புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதுகூட எளிது. ஆனால், அதை மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவது... ஏவுவதைவிட செலவு எகிறும், ரிஸ்க் நிறைந்த கடினமான சவால். அதனாலேயே விண்வெளியில் செயற்கைக்கோள் பழுதடைந்தால், அதை அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அதுவாகவே ஒருநாள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விழுந்துவிடும். இது அப்படி அல்ல. ஒரு மனிதனை ராக்கெட்டில் அனுப்பி, சில நாட்கள் விண்வெளியில் சுற்றவைத்து, அவரை மீண்டும் பூமிக்குக் கொண்டுவரவேண்டும்.
மனிதனை எப்படி அனுப்புவார்கள்?
செயற்கைக்கோளை அனுப்ப, பி.எஸ்.எல்.வி வகையறா ராக்கெட்கள் போதும். ஆனால், மனிதன் பயணம் செய்யும் கேப்சூலை அனுப்ப ஜி.எஸ்.எல்.வி வகையறா ராக்கெட்கள் வேண்டும். பி.எஸ்.எல்.வி அதிகபட்சமாக இரண்டு டன் எடையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் என்றால், ஜி.எஸ்.எல்.வி ஆறு டன் வரை தூக்கிக்கொண்டு பறக்கும். மேன் ஆன் மிஷனின் முதல் தேவை... மனிதன் உள்ளே அமரும் அளவுக்கு, மிதந்துகொண்டே தூங்கும் அளவுக்கு ஒரு கேப்சூல் வேண்டும். அதற்குள்ளே ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, சிறுநீரைக் குடிநீராக மாற்றும் உபகரணங்கள், (அங்கே அம்மா மினரல் வாட்டர் எல்லாம் கிடைக்காதே..!) வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் கருவிகள், ஆக்சிஜன் அளவைப் பராமரிக்கும் கருவிகள் எல்லாம் வேண்டும். இதையெல்லாம் வைத்து கேப்சூல் செய்தால், அது எக்கச்சக்க எடையுடன் இருக்கும். இவ்வளவு எடை மிகுந்த கேப்சூலைத் தூக்கிக்கொண்டு குறைந்தது 160 கிலோமீட்டர் உயரம் பறக்க மெகா சைஸில் இருக்கும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள்தான் லாயக்கு. ஆனால், அவ்வளவு எடைகொண்ட ராக்கெட்களை விண்ணில் செலுத்த கிரையோஜெனிக் இன்ஜின்கள் தேவை. அந்த வகை இன்ஜின்கள் தயாரிப்பில், இந்திய விஞ்ஞானிகள் இப்போதுதான் ஆரம்பக் கட்டங்களைத் தாண்டி வருகிறார்கள்.
எப்படித் திரும்பக் கொண்டுவருவார்கள்?
ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் கேப்சூலை, விண்வெளியில் சில நாட்கள் மிதக்கவிடுவார்கள். பின்னர் குறிப்பிட்ட நாள் வந்ததும், கேப்சூலில் இருக்கும் எரிபொருள் மூலம் உந்துதல் உண்டாக்கி கேப்சூலை அதிவேகமாக பூமியை நோக்கிச் செலுத்துவார்கள். விநாடிக்கு எட்டு கி.மீ வேகத்தில் கேப்சூல் பூமியை நோக்கிப் பயணித்து, வளிமண்டலத்தில் நுழையும்போது காற்றில் உரசி கேப்சூலின் வெளிப்புறம் முழுவதும் தீப்பிடித்துக்கொள்ளும். இந்தத் தீயும் வெப்பமும் உள்ளே பரவாமல் இருக்க, வெப்பத் தடுப்பு மற்றும் தீ தடுப்பு தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும்.
தீ அணைந்த பின், ஒரு பாராசூட் விரியும். அப்போது கேப்சூலின் வேகம் விநாடிக்கு 101 மீட்டராகக் குறைந்துவிடும். இன்னும் கொஞ்சம் தூரம் கடந்த பின், இன்னொரு பாராசூட் விரியும். அப்போது கேப்சூலின் வேகம் விநாடிக்கு 47 மீட்டராகச் சரியும். இந்த வேகத்தில் கடலில் விழும் கேப்சூல், அதன் ஆழத்துக்குச் சென்றுவிடும். அதனால், கடலை நெருங்கியதும் கேப்சூலைச் சுற்றி பெரிய பலூன் படாரென விரிந்து, கேப்சூல் கடலில் மூழ்காமல் மிதக்கவைக்கும். கடலில் கேப்சூல் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, அதன் உச்சியில் அடர் ஆரஞ்சு நிறத்தில் ஒரு பலூன் முளைக்கும். வெப்பம் தணிந்த பின், கேப்சூலைப் பத்திரமாகக் கரைக்கு இழுத்துவருவார்கள். இதுதான் பொதுவான, அடிப்படையான நடைமுறை.
இந்தத் திட்டத்தின் முதல் கட்ட முயற்சியாக, 2007-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி சி7 ராக்கெட் மூலமாக 555 கிலோ எடையுள்ள ஒரு கேப்சூலை (ஆள் இல்லாமல்) விண்வெளிக்கு அனுப்பியது இஸ்ரோ. 12 நாட்கள் விண்வெளியில் சுற்றிய பின் மேற்சொன்ன முறைப்படி வங்காளவிரிகுடாவில் அதைக் கீழே விழ வைத்தார்கள். அந்தக் கேப்சூல், இப்போது பெங்களூரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அடுத்த கட்டத்தை முயற்சிக்கிறது இஸ்ரோ.
அந்த 'இந்தியன்’ தயாரா?
இந்த முறையும் கேப்சூலில் ஆள் இருக்கப்போவது இல்லை. ஆளுக்குப் பதிலாக தோராயமாக 60 கிலோ எடை கொண்ட பொம்மை ஒன்று இருக்கும். மனிதன் சென்றால் என்னென்ன வசதிகள் செய்யவேண்டி இருக்குமோ, அதெல்லாம் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று டன் எடை கொண்ட அந்தக் கேப்சூலைப் பத்திரமாக பூமிக்குத் திரும்பக் கொண்டுவந்துவிட்டால், அது பெரிய வெற்றிதான். இதுவரை விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியர் ராகேஷ் சர்மா. அதுவும் ரஷ்ய விண்வெளி ஓடமான சோயூஸில் பயணித்தவர். அவரையே மீண்டும் விண்வெளிக்கு அனுப்பிவைக்கலாம் என்பது இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரின் ஐடியா. ஆனால், அவர் விண்வெளிக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவருக்கு வயதும் 65 ஆகிவிட்டது. எனவே 'புதிய இளம் இந்தியன்’ ஒருவரைத் தேடிப் பிடித்துப் பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது இஸ்ரோ.
எப்படிப் பயிற்சி கொடுப்பார்கள்?
மும்பையில் இருக்கும் அமெரிக்க அறிவியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவியல் மென்பொருளாளர் சுதாகர் கஸ்தூரி, விண்வெளி பயிற்சி குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். ''முன்பு விண்வெளி வீரர்களுக்கு நீலப் பச்சைப் பாசி போன்ற திரவ வகை உணவுகளைப் பதப்படுத்திக் கொடுப்பார்கள். அப்படிப் பதப்படுத்தப்படும் உணவு, விண்வெளி வீரரில் உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிவிடாததாக இருக்க வேண்டும். அதனால் இப்போது கார்போஹைட்ரேட், புரதச்சத்து நிறைந்த மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். 12 நாட்கள் விண்வெளியில் மிதக்க வேண்டும் என்றால் மனோதிடப் பயிற்சி அவசியம். இந்தப் பயணத்துக்குப் பெரும்பாலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குத்தான் உயரம், வேகம் குறித்த நடுக்கமோ பயமோ இருக்காது. அதிநவீனக் கருவிகளைக் கையாளவும் தெரியும். விண்வெளியில் சிறிய அறை ஒன்றில், அமைதியாக இருக்க, அதுவும் தனிமையில் அமைதியாக இருக்க பெரும் பயிற்சி தேவைப்படும். அதுதான் பயிற்சியின் மிக முக்கியமான கட்டம். விண்வெளிக்குச் சென்ற பின், நேரம் காலம் தெரியாததால் ஒருவரது உடலில் இருக்கும் உயிர்ச்சூழல் கடிகாரம் பாதிக்கப்படும். இதயத்துடிப்பு குறையும். உப்பு கூடும். அந்தச் சிக்கல்களை எல்லாம் தானாகவே கண்டுபிடித்துச் சரிசெய்ய வேண்டும். இதற்காக பூமியிலேயே விண்வெளி போன்ற ஈர்ப்பு விசையற்ற நிலையை உருவாக்கி, அதில் விண்வெளி வீரரை முதலில் மணிக்கணக்கில் தங்கவைப்பார்கள். பிறகு ஒரு நாள், இரண்டு நாட்கள், நான்கு நாட்கள்... எனப் பயிற்சியை அதிகரிப்பார்கள். சமயங்களில் தனிமையில் கேப்சூலில் ஒரு மாதம் முழுக்கக்கூடத் தங்கவைப்பார்கள். அப்போதுதான் 'சவாலே சமாளி’ மனதிடம் அதிகரித்து, விண்வெளியில் 12 நாட்கள்கூடத் தாக்குப்பிடிப்பார். கொதிக்கும் மதிய வெயிலில் தார் சாலையில் நடக்கச் சொன்னால் யோசிப்பீர்கள்தானே? ஆனால், வெறும் காலோடு தார் பாலைவனத்தில் நடந்து பயிற்சி பெற்ற பின், தார் சாலை நடை என்பது ஜூஜூபிதானே... அதே டெக்னிக்தான் இது!''
இந்த வருடத்துக்குள் 'பொம்மை இந்தியன்’ விண்வெளியில் பறந்து திரும்பி வருவான் என்பது இஸ்ரோவின் நம்பிக்கை. அது சாத்தியமானால், நீல் ஆம்ஸ்ட்ராங்கை நாம் படித்தது போல, நமது குழந்தைகள் படித்துப் படித்து மனப்பாடம் செய்யவிருக்கும் அந்த 'இந்தியன்’ தேடுதல் வேட்டையை ஆரம்பித்துவிடும் இஸ்ரோ!
- ஆனந்த விகடனிலிருந்து...
சரி... முதலில், எதற்கு மனிதனை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்?
நாடு, நாடோடி... என எல்லோருக்கும் இடம் பிடிக்கும் ஆசை என்பது, ஆழ்மனதில் ஊறிய விஷயம். துணையின் மனதில் முதல் இடம் பிடிப்பதில் இருந்து, 'சென்னைக்கு மிக அருகில்’ திண்டிவனம் தாண்டி இடம் பிடிப்பதாகட்டும், அமெரிக்கா போல அடுத்த நாட்டின் அதிகாரத்தை வளைத்துப் பிடிப்பதாகட்டும், உலக வரலாற்றில் இடம் பிடிப்பது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு.
இருக்கும் உலகத்தைக் குப்பைமேடு ஆக்கிவிட்டோம்; கடலைக் கழிவுநீர்த்தொட்டி ஆக்கிவிட்டோம். எரிபொருள், குடிநீர் இரண்டும் அதிவேகமாகத் தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விரிசல் பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சில நூறு வருடங்கள் இந்தப் பூமி தாக்குப்பிடிக்கலாம். அதற்குப் பிறகு பூமி பயன்படாமலே போய்விட்டால், மனிதனுக்கு வேறு கிரகங்களில் குடியேற வாய்ப்பு கிடைக்குமா? இப்படி யோசித்த வல்லரசுகள் அண்ணாந்து பார்த்ததில் அம்புட்டதுதான் விண்வெளி.
'செவ்வாயில் ஒருகாலத்தில் நீர் இருந்திருக்கலாம்’ என்ற ஒரு வரி ஆய்வு முடிவுகள் அமெரிக்காவுக்கு ஆசையைத் தூண்டியது. உலக நாடுகளிடையே விண்வெளிப் போட்டியைத் தூண்டியது. சோஜர்னர், கியூரியாசிட்டி விண்கலங்களை அமெரிக்கா அனுப்ப, வேறு சில நாடுகள் செயற்கைக் கோள்களை அனுப்பிவைத்தன. அந்த வரிசையில் இந்தியா அனுப்பிய 'குறைந்த செலவு கர்ச்சீஃப்’தான் மங்கள்யான். இந்த விண்வெளிப் போட்டியின் அடுத்த கட்டத் திட்டமே 'மேன் ஆன் மிஷன்’!
ஒரு செயற்கைக்கோளை ராக்கெட்டில் வைத்து ஏவி புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதுகூட எளிது. ஆனால், அதை மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவது... ஏவுவதைவிட செலவு எகிறும், ரிஸ்க் நிறைந்த கடினமான சவால். அதனாலேயே விண்வெளியில் செயற்கைக்கோள் பழுதடைந்தால், அதை அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அதுவாகவே ஒருநாள் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்து விழுந்துவிடும். இது அப்படி அல்ல. ஒரு மனிதனை ராக்கெட்டில் அனுப்பி, சில நாட்கள் விண்வெளியில் சுற்றவைத்து, அவரை மீண்டும் பூமிக்குக் கொண்டுவரவேண்டும்.
மனிதனை எப்படி அனுப்புவார்கள்?
செயற்கைக்கோளை அனுப்ப, பி.எஸ்.எல்.வி வகையறா ராக்கெட்கள் போதும். ஆனால், மனிதன் பயணம் செய்யும் கேப்சூலை அனுப்ப ஜி.எஸ்.எல்.வி வகையறா ராக்கெட்கள் வேண்டும். பி.எஸ்.எல்.வி அதிகபட்சமாக இரண்டு டன் எடையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் என்றால், ஜி.எஸ்.எல்.வி ஆறு டன் வரை தூக்கிக்கொண்டு பறக்கும். மேன் ஆன் மிஷனின் முதல் தேவை... மனிதன் உள்ளே அமரும் அளவுக்கு, மிதந்துகொண்டே தூங்கும் அளவுக்கு ஒரு கேப்சூல் வேண்டும். அதற்குள்ளே ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, சிறுநீரைக் குடிநீராக மாற்றும் உபகரணங்கள், (அங்கே அம்மா மினரல் வாட்டர் எல்லாம் கிடைக்காதே..!) வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் கருவிகள், ஆக்சிஜன் அளவைப் பராமரிக்கும் கருவிகள் எல்லாம் வேண்டும். இதையெல்லாம் வைத்து கேப்சூல் செய்தால், அது எக்கச்சக்க எடையுடன் இருக்கும். இவ்வளவு எடை மிகுந்த கேப்சூலைத் தூக்கிக்கொண்டு குறைந்தது 160 கிலோமீட்டர் உயரம் பறக்க மெகா சைஸில் இருக்கும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்கள்தான் லாயக்கு. ஆனால், அவ்வளவு எடைகொண்ட ராக்கெட்களை விண்ணில் செலுத்த கிரையோஜெனிக் இன்ஜின்கள் தேவை. அந்த வகை இன்ஜின்கள் தயாரிப்பில், இந்திய விஞ்ஞானிகள் இப்போதுதான் ஆரம்பக் கட்டங்களைத் தாண்டி வருகிறார்கள்.
எப்படித் திரும்பக் கொண்டுவருவார்கள்?
ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் கேப்சூலை, விண்வெளியில் சில நாட்கள் மிதக்கவிடுவார்கள். பின்னர் குறிப்பிட்ட நாள் வந்ததும், கேப்சூலில் இருக்கும் எரிபொருள் மூலம் உந்துதல் உண்டாக்கி கேப்சூலை அதிவேகமாக பூமியை நோக்கிச் செலுத்துவார்கள். விநாடிக்கு எட்டு கி.மீ வேகத்தில் கேப்சூல் பூமியை நோக்கிப் பயணித்து, வளிமண்டலத்தில் நுழையும்போது காற்றில் உரசி கேப்சூலின் வெளிப்புறம் முழுவதும் தீப்பிடித்துக்கொள்ளும். இந்தத் தீயும் வெப்பமும் உள்ளே பரவாமல் இருக்க, வெப்பத் தடுப்பு மற்றும் தீ தடுப்பு தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும்.
தீ அணைந்த பின், ஒரு பாராசூட் விரியும். அப்போது கேப்சூலின் வேகம் விநாடிக்கு 101 மீட்டராகக் குறைந்துவிடும். இன்னும் கொஞ்சம் தூரம் கடந்த பின், இன்னொரு பாராசூட் விரியும். அப்போது கேப்சூலின் வேகம் விநாடிக்கு 47 மீட்டராகச் சரியும். இந்த வேகத்தில் கடலில் விழும் கேப்சூல், அதன் ஆழத்துக்குச் சென்றுவிடும். அதனால், கடலை நெருங்கியதும் கேப்சூலைச் சுற்றி பெரிய பலூன் படாரென விரிந்து, கேப்சூல் கடலில் மூழ்காமல் மிதக்கவைக்கும். கடலில் கேப்சூல் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க, அதன் உச்சியில் அடர் ஆரஞ்சு நிறத்தில் ஒரு பலூன் முளைக்கும். வெப்பம் தணிந்த பின், கேப்சூலைப் பத்திரமாகக் கரைக்கு இழுத்துவருவார்கள். இதுதான் பொதுவான, அடிப்படையான நடைமுறை.
இந்தத் திட்டத்தின் முதல் கட்ட முயற்சியாக, 2007-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி சி7 ராக்கெட் மூலமாக 555 கிலோ எடையுள்ள ஒரு கேப்சூலை (ஆள் இல்லாமல்) விண்வெளிக்கு அனுப்பியது இஸ்ரோ. 12 நாட்கள் விண்வெளியில் சுற்றிய பின் மேற்சொன்ன முறைப்படி வங்காளவிரிகுடாவில் அதைக் கீழே விழ வைத்தார்கள். அந்தக் கேப்சூல், இப்போது பெங்களூரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது அடுத்த கட்டத்தை முயற்சிக்கிறது இஸ்ரோ.
அந்த 'இந்தியன்’ தயாரா?
இந்த முறையும் கேப்சூலில் ஆள் இருக்கப்போவது இல்லை. ஆளுக்குப் பதிலாக தோராயமாக 60 கிலோ எடை கொண்ட பொம்மை ஒன்று இருக்கும். மனிதன் சென்றால் என்னென்ன வசதிகள் செய்யவேண்டி இருக்குமோ, அதெல்லாம் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று டன் எடை கொண்ட அந்தக் கேப்சூலைப் பத்திரமாக பூமிக்குத் திரும்பக் கொண்டுவந்துவிட்டால், அது பெரிய வெற்றிதான். இதுவரை விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியர் ராகேஷ் சர்மா. அதுவும் ரஷ்ய விண்வெளி ஓடமான சோயூஸில் பயணித்தவர். அவரையே மீண்டும் விண்வெளிக்கு அனுப்பிவைக்கலாம் என்பது இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரின் ஐடியா. ஆனால், அவர் விண்வெளிக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அவருக்கு வயதும் 65 ஆகிவிட்டது. எனவே 'புதிய இளம் இந்தியன்’ ஒருவரைத் தேடிப் பிடித்துப் பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது இஸ்ரோ.
எப்படிப் பயிற்சி கொடுப்பார்கள்?
மும்பையில் இருக்கும் அமெரிக்க அறிவியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவியல் மென்பொருளாளர் சுதாகர் கஸ்தூரி, விண்வெளி பயிற்சி குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். ''முன்பு விண்வெளி வீரர்களுக்கு நீலப் பச்சைப் பாசி போன்ற திரவ வகை உணவுகளைப் பதப்படுத்திக் கொடுப்பார்கள். அப்படிப் பதப்படுத்தப்படும் உணவு, விண்வெளி வீரரில் உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிவிடாததாக இருக்க வேண்டும். அதனால் இப்போது கார்போஹைட்ரேட், புரதச்சத்து நிறைந்த மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். 12 நாட்கள் விண்வெளியில் மிதக்க வேண்டும் என்றால் மனோதிடப் பயிற்சி அவசியம். இந்தப் பயணத்துக்குப் பெரும்பாலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்குத்தான் உயரம், வேகம் குறித்த நடுக்கமோ பயமோ இருக்காது. அதிநவீனக் கருவிகளைக் கையாளவும் தெரியும். விண்வெளியில் சிறிய அறை ஒன்றில், அமைதியாக இருக்க, அதுவும் தனிமையில் அமைதியாக இருக்க பெரும் பயிற்சி தேவைப்படும். அதுதான் பயிற்சியின் மிக முக்கியமான கட்டம். விண்வெளிக்குச் சென்ற பின், நேரம் காலம் தெரியாததால் ஒருவரது உடலில் இருக்கும் உயிர்ச்சூழல் கடிகாரம் பாதிக்கப்படும். இதயத்துடிப்பு குறையும். உப்பு கூடும். அந்தச் சிக்கல்களை எல்லாம் தானாகவே கண்டுபிடித்துச் சரிசெய்ய வேண்டும். இதற்காக பூமியிலேயே விண்வெளி போன்ற ஈர்ப்பு விசையற்ற நிலையை உருவாக்கி, அதில் விண்வெளி வீரரை முதலில் மணிக்கணக்கில் தங்கவைப்பார்கள். பிறகு ஒரு நாள், இரண்டு நாட்கள், நான்கு நாட்கள்... எனப் பயிற்சியை அதிகரிப்பார்கள். சமயங்களில் தனிமையில் கேப்சூலில் ஒரு மாதம் முழுக்கக்கூடத் தங்கவைப்பார்கள். அப்போதுதான் 'சவாலே சமாளி’ மனதிடம் அதிகரித்து, விண்வெளியில் 12 நாட்கள்கூடத் தாக்குப்பிடிப்பார். கொதிக்கும் மதிய வெயிலில் தார் சாலையில் நடக்கச் சொன்னால் யோசிப்பீர்கள்தானே? ஆனால், வெறும் காலோடு தார் பாலைவனத்தில் நடந்து பயிற்சி பெற்ற பின், தார் சாலை நடை என்பது ஜூஜூபிதானே... அதே டெக்னிக்தான் இது!''
இந்த வருடத்துக்குள் 'பொம்மை இந்தியன்’ விண்வெளியில் பறந்து திரும்பி வருவான் என்பது இஸ்ரோவின் நம்பிக்கை. அது சாத்தியமானால், நீல் ஆம்ஸ்ட்ராங்கை நாம் படித்தது போல, நமது குழந்தைகள் படித்துப் படித்து மனப்பாடம் செய்யவிருக்கும் அந்த 'இந்தியன்’ தேடுதல் வேட்டையை ஆரம்பித்துவிடும் இஸ்ரோ!
- ஆனந்த விகடனிலிருந்து...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|