புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 03, 2014 4:08 pm

ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Jigarrr_2037228gமுதல் காட்சியில் ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’ பாட்டின் பின்னணியில் டுமீல் வெடிக்கும்போதே பசங்க என்னமோ செய்யப்போறாங்க என்பது தெரிந்துவிடுகிறது.

ஊரே நடுங்கும் அதிபயங்கர ரவுடிக்கு நடிப்புக் கலை மீது திடீர் ஆசை வருவதால் விளையும் ரகளைதான் ‘ஜிகர்தண்டா’.கார்த்திக்குக்கு (சித்தார்த்) சினிமா இயக்குநராக வேண்டும் என்பது கனவு. ரத்தம் தெறிக்கும் க்ரைம்கதையை எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மதுரையில் உள்ள அதிபயங்கர ரவுடியான ‘அசால்ட்’ சேதுவின் (பாபி சின்ஹா) வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமென்று நினைக்கிறான்.

அவன் வாழ்க்கையை ஆழமாகவும் விவரமாகவும் தெரிந்துகொண்டு படமாக்க விரும்புகிறான். மதுரையில் தன் நண்பன் ஊரணியின் (கருணாகரன்) உதவியுடன் வேலையைத் தொடங்குகிறான்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும் நேரத்தில் சேதுவிடம் மாட்டிக்கொள்கிறான் கார்த்திக். அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான், அவனுடைய சினிமா கனவு என்ன ஆயிற்று என்பதைப் பல திருப்பங்களுடன் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் அக்கினிப் பரீட்சை என்பார்கள். அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாகத் தேறியிருக்கிறார் ‘பீட்சா’வின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ்.

படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளைஞனின் கதையாகத் தொடங்கி, படமாக எடுக்கப்படும் ரவுடியின் கதையாக விரிந்து, படம் எடுக்கப்பட்ட கதையே முக்கியக் கதையாக மாறுவதுதான் திரைக்கதையின் ஆச்சரியம். மையப் பாத்திரம் என்ற ஒன்று இல்லாமல் நிகழ்வுகளை வைத்தே கதையை நகர்த்திக்கொண்டு போன அணுகுமுறையின் மூலம் வித்தியாசப்படுகிறார் கார்த்திக் சுப்பராஜ். தமிழ் சினிமாவின் ஆகிவந்த படிமங்களை அனாயாசமாக உடைத்திருக்கிறார். எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் பகடி செய்யப்படுகின்றன. யாருக்கும் எந்தப் பீடமும் இல்லை.

படத்தின் முக்கியமான சரடு நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட சினிமா மோகத்தின் மீதான பகடி. ரவுடியில் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரியில் இருக்கும் பெண் வரை சினிமா, சினிமாக்காரர்கள் என்றதும் வாயைப் பிளப்பதை இயக்குநர் ‘அசால்டாக’ காட்டியிருக்கிறார்.

சில காட்சிகளை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். உதாரணம் கழிப்பறையில் நடக்கும் கொலை. துரோக கூட்டணியை மடக்கும் காட்சி இன்னொரு உதாரணம்.

சின்னப் பாத்திரங்கள்கூட மனதில் ஒட்டிக்கொள்கின்றன. பெட்டிக்கடை தாத்தா, நாயகனின் அம்மா, கொல்லப்பட்டவனின் மனைவி, குழந்தை... இவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டிருக்கும் மனிதர், கதாநாயகியையும் அவளுடைய காதலையும் இவ்வளவு மேலோட்டமாகவா கையாண்டிருக்க வேண்டும்? புடவை திருடும் கதாநாயகி தமிழுக்குப் புதுசு. ஆனால், அதைத் தாண்டி லட்சுமி மேனனுக்குப் பாவம், படத்தில் வேலையே இல்லை.

பாபி சின்ஹாவின் அபார நடிப்புக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். அலட்டிக்கொள்ளாத ரவுடி, பின்னாளில் உருமாறும் விதத்தைக் கச்சிதமாகவும் நுட்பமாகவும் சித்தரித்திருக்கிறார். கொடுத்த வேலையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் சித்தார்த்.

நடிப்பு வாத்தியாராக வரும் சோமசுந்தரத்தின் நடிப்புக்கும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும் அரங்கில் அடேங்கப்பா ஆரவாரம். ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். நண்பனாக வரும் கருணாகரன், சேதுவின் கையாளாக வரும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் நடிப்பால் படத்துக்கு மதிப்பைக் கூட்டுகிறார்கள்.

சேதுவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வியூகங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. நண்பர்கள் இருவரும் எடுக்கும் ரிஸ்க் நம்பும்படி இல்லை. இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

குற்றப் பின்னணியும் நகைச்சுவையும் கலந்த திரைக்கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடல் ரசிக்க வைக்கிறது. கிணற்றுக்குள் படமாக்கப்பட்டிருக்கும் ‘பாண்டிய நாட்டுக் கொடி’ குத்துப் பாட்டு ரசிகர்களை ஆட்டம்போட வைக்கிறது.

‘என்கவுன்டர்’ காட்சியிலிருந்து சேது எழுந்திருக்கும்போதே படம் முடிந்துவிடுகிறது. அதற்கு அப்புறமும் காட்சிகள் வேண்டுமா என்ன?


தி இந்து


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 03, 2014 4:25 pm

ஜிகர்தண்டா - தினமலர் விமர்சனம்

குறும்படம் இயக்கி விட்டு சினிமா இயக்க வந்தவர்களை குறும்பட இயக்குனர்கள் என்று அழைத்ததாலோ என்னமோ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அவர் பட வசனத்தின் படியே சொல்வதென்றால் ஒரு பெரும்.....படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை சினிமாவில் குடும்பக் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காதல் கதைகளைப் பார்த்திருக்கிறோம், ஆக்ஷன் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காமெடி கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் பிளஸ் காமெடி கதையை இப்போதுதான் பார்க்கிறோம். அது என்ன ஆக்ஷன் பிளஸ் காமெடி கதை என்கிறீர்களா. முதல் பாதி பக்கா ஆக்ஷன் கதை, இரண்டாவது பாதி காமெடி கதை.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சென்டிமென்ட் உண்டு. சினிமாவுக்குள் சினிமா என்பது இதுவரை எடுபடாமல் போன ஒன்று. பாரதிராஜா முதல் பலரும் தொட்டுவிட்ட கதைக்களம், ஆனால் யாருக்கும் ராசியாக அமையவில்லை. ஒருவேளை அந்த ராசியை உடைத்தெறியலாம் என இந்தப் படத்தின் இயக்குனர் முயன்றிருக்கிறாரோ என்னமோ? வித்தியாசமாக படம் பண்ண வேண்டியதுதான், அதற்காக முதல் பாதியை ஆக்ஷனின் உச்சத்திற்கு கொண்டு போய்விட்டு, அப்படியே அதற்கு எதிராக இரண்டாவது பாதி கதையை அமைப்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை முதல் பாதி கதை எழுதி முடித்ததும் 'பவர் ஸ்டார்' படம் எதையாவது பார்த்திருப்பாரோ? அதன் பாதிப்புதான் 'டெரர்' ஆக இருந்த முதல்பாதியை பின்னர் 'டெரர் ஸ்டார்' காமெடி ஆன மாற்றியிருக்கிறார். எங்கே நமது படத்தையும் கொரிய படத்தின் 'காப்பி' படம் மற்றவர்கள் சொல்வதற்கு முன் நாமே சொல்லிவிடுவோம் என அதற்கும் படத்தில் ஒரு காட்சியை வைத்துவிட்டார்.

ஒரு தொலைக்காட்சியின் குறும்படப் போட்டியில் நடுவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில், அந்த போட்டியில் கலந்து கொண்ட சித்தார்த்துக்கு நடுவர்களில் ஒருவரான ஒரு தயாரிப்பாளர் படம் இயக்க வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி விடுகிறார். அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கிற மாதிரி ஒரு ஆக்ஷன் படத்துக்கு கதை எழுதிட்டு வாங்க படம் இயக்கலாம் என்கிறார். ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கைக் கதையை எழுத முடிவெடுத்து மதுரைக்குப் புறப்படுகிறார் சித்தார்த். அங்கு நண்பன் கருணாகரன் உதவியுடன், மதுரையை ஆட்டிப் படைக்கும் ரவுடி சிம்ஹாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து கதையை உருவாக்க ஆரம்பிக்கிறார்.

சிம்ஹாவை 'என்கெளன்ட்ர்' செய்ய காவல்துறையும் முடிவெடுத்திருக்க, சிம்ஹாவின் போட்டியாளர்களும் அவரைக் கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் சித்தார்த்தும், கருணாகரனும் சிம்ஹாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை உளவு பார்க்க வந்தவர்கள் என சிம்ஹா நினைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார் இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கலகலப்பான (?) மீதி கதை.

என்ன இது ஒரு பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படத்துக்குரிய கதையை சொல்லிட்டு, இதன் பின் நடப்பது கலகலப்பான கதை என்று சொல்லியிருக்கிறோமே என ஆச்சரியப்பட வேண்டாம். இடைவேளைக்குப் பின் ஆக்ஷன் டிராக்கை விட கதை வேறு தடத்தில் பயணிக்கிறது. 'நான் வெஜிடேரியன்' ஹோட்டலுக்குப் போய் விட்டு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது நிலைமை...

படத்துல ஹீரோ சித்தார்த்தா அல்லது சிம்ஹாவான்னு படம் பார்க்கிற நமக்கு மட்டுமில்லாம, எல்லாருக்குமே ஒரு குழப்பம் வரும். சித்தார்த்தை விட சிம்ஹாக்குதான் படத்துல காட்சிகள் அதிகமா இருக்கும் போல. சும்மா சொல்லக் கூடாது சிம்ஹா புகுந்து விளையாடியிருக்கிறார். 'அசால்ட்' சேது வாக அட்டகாசமாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். பொதுவா, நம்மைக் கவர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். ஆனால், இந்த சேது கதாபாத்திரத்தைப் பொறுத்தவரையில் வேறு யாரையும் கற்பனையில் கூட கொண்டு வரமுடியவில்லை. நின்று, நிதானமாக நெத்தி அடி அடித்திருக்கிறார். இந்தப் படம் சிம்ஹாவை வேறு ஒரு உயரத்தில் கொண்டு போய் உட்கார வைத்துவிடும்.

திரைப்படம் இயக்கும் ஆசையில் கதை எழுதுவதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் இயக்குனர் கதாபாத்திரத்தில் சித்தார்த். கொஞ்சம் அப்பாவித்தனமான கதாபாத்திரம், எதையுமே யோசித்து யோசித்து செய்கிறார். லட்சுமி மேனனிடம் காதலிலாவது ஜொலிப்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை, சிம்ஹாவிடம் கொஞ்சம் முறைத்துக் கொண்டாவது நிற்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை. இயக்குனர் கார்த்திக், சித்தார்த்திடம் கதாபாத்திரத்தை சரியாக சொல்லவில்லையா, அல்லது சித்தார்த், நமக்கு இருக்கும் முக்கியத்துவத்திற்கு இது போதும் என்று முடிவெடுத்துவிட்டாரா என்பது தெரியவில்லை. திறமையைக் கொட்டி நடிப்பதற்கு காட்சிகள் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சிம்ஹா கதாபாத்திரம் ஸ்டிராங்காக உருவாக்கப்பட்டு விட்டதால், சித்தார்த்தின் கதாபாத்திரம் எடுபடாமல் போய்விட்டது.

லட்சுமி மேனன் மொத்தமாக எத்தனை காட்சிகள் வந்தார் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஒரு முன்னணி நாயகிக்கு இந்த அளவிற்கா குறைவான காட்சிகளை வைப்பது ?. படத்துக்குத் தேவையில்லை என்று நினைத்திருந்தால் மொத்தமாக அவரது கதாபாத்திரத்தைக் கூட வைக்காமல் போயிருக்கலாம். ஆனாலும், ஒரே ஒரு 'ட்விஸ்ட்'டுக்கு மட்டும் அவரது கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது.

சித்தார்த்தின் நண்பனாக கருணாகரன், காமெடிக்கு இவர்தான் பொறுப்பு என்றாலும் ஒரு சில வசனங்களால் மட்டும் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் வரிசையில் அம்பிகா, 'ஆடுகளம்' நரேன் என பலர் இருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தேவையான இடங்களில் மட்டும் வாசித்திருக்கிறார். சிம்ஹா வரும் காட்சிகளில் ஸ்பெஷலாக கவனம் செலுத்தியிருக்கிறார். கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு கோணங்களிலும், லைட்டிங்குகளிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறது.

இடைவேளைக்குப் பின் படத்தில் சிம்ஹா நடிகராகி விடுகிறார். அவரை எந்த அளவிற்கு 'டெரர் ஸ்டார்' ஆக நகைச்சுவையாக காட்டியிருக்கிறார்கள் என்பதை 'அ.குமார்' என்ற படத்துக்குள் படம் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமே புரிந்து கொண்டு பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அது எப்பேர்ப்பட்ட நகைச்சுவை என்பதை 'ஜிகர்தண்டா' படத்தைப் பார்க்கும் நாம் உணர முடியாததால் நமக்கு எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. ஒரு சப்-இன்ஸ்பெக்டரே சிம்ஹாவிடம் வந்து உங்க ஃபைல்களை மேலிடத்துல கேட்டிருக்காங்க, என்கௌண்டர் பண்ண வாய்ப்பிருக்கு என்று சொன்னாலும், கடைசியில் கிளைமாக்ஸ வரை கூட காவல் துறையினர் ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை. வழக்கமான தமிழ் சினிமா போல கடைசியில் வில்லன் திருந்திவிடுவதெல்லாம் இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களிடம் நாம் எதிர்பார்க்காதது.

'ஜிகர்தண்டா' - மற்றுமொரு 'மதுரை ஸ்பெஷல்', 'நிறைய காரம், கொஞ்சம் இனிப்பு...'





ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 03, 2014 7:45 pm

ஜிகர்தண்டா - திரை விமர்சனம் M8cbfZQAQ0OpbuHRh1d8+zzzz
-
 மகிழ்ச்சி மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக