புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_m10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_m10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_m10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_m10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_m10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_m10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_m10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_m10ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:17 pm

* குழந்தை வளர்ப்பில் பொறுமை மிகவும் அவசியம். நல்லவற்றை திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்க வேண்டும்.
* உன்னையே நீ அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கோபத்திற்கு ஆளாவது கூடாது.
* கொடுமைக்கு ஆளாகும் போது, நியாயம் உன் பக்கம் இருந்தாலும் கூட பொறுமையை இழந்து விடாதே.
* கள்ளம் கபடம் இல்லாத மனதுடன் செய்யும் வழிபாட்டை தெய்வம் ஏற்க மறுப்பதில்லை.
* மனிதனின் உள்ளம் முழுமையும் தெய்வ வடிவம் ஏற்கட்டும். அதனால், வாழ்வு புனிதமாகட்டும்.

- ஸ்ரீஅன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:18 pm

மலர் போல் மலர்ந்திரு!

* உன் தகுதியறிந்தே கடவுள் அருள்புரிகிறார். அதனால், முதலில் உன்னை தகுதிப்படுத்திக் கொள்.
* சொல்வது யாருக்கும் சுலபமான விஷயம். ஆனால், அதை செயல்படுத்துவது மிகவும் கடினமானது.
* அறிவைச் செம்மைப்படுத்து. அதே சமயத்தில் பக்தியையும் செழிப்படையச் செய்.
* எப்போதும் நேர்மையான சூழலில் இருக்கும் உறுதிப்பாட்டுடன் மனநிலையை வைத்துக் கொள்.
* புத்தம்புது மலரைப் போல இரு. வெளிப்படையான அன்புடன் இருக்க முயற்சி செய்.

- ஸ்ரீஅன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:19 pm

முயற்சியைக் கைவிடாதீர்

* சில பழக்கங்களை ஒரேநாளில் கைவிடுவது கடினம். ஆனால், தளராத உறுதி இருந்தால் அதை சரி செய்து கொள்ள முடியும்.
* கடவுள் அளிக்க நினைப்பதை பறிக்கும் சக்தி உலகில் யாருக்கும் கிடையாது.
* ஆன்மிகப்பாதையில் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு அடியும் போராடித் தான் பெற முடியும்.
* ஒரு செயலை செய்து முடிப்பது கஷ்டம் என்பதற்காக முயற்சியைக் கைவிடுவது கூடாது.
* புறம் பேசுவதால் மனிதன் தெய்வத்தை விட்டு வெகுதொலைவிற்குச் சென்று விடுகிறான்.

- ஸ்ரீஅன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:20 pm

[right]வெற்றி! வெற்றி! வெற்றி!

* சகிப்புத் தன்மையே உனது வாழ்வின் குறிக்கோளாகட்டும். மன அமைதியை ஒருபோதும் இழக்க சம்மதிக்காதே.
* சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் சிறந்த சாதனை நிகழ்த்த முடியாது.
* திட சித்தத்தோடு இரு. நம்பிக்கையை கைவிடாதே. மனத்தூய்மையுடன் செயலாற்று. வெற்றி உன்னுடையதாகி விடும்.
* யாரிடமும் வம்பளக்காதே. இது உன்னை கடவுளிடம் இருந்து வெகு தொலைவில் நிறுத்தி விடும்.
* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்தாதே. உன் கடமையில் மட்டும் கருத்தைச் செலுத்து.

- ஸ்ரீஅன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:20 pm

கற்றுக் கொண்டேயிரு!

* கடவுள் ஒருவரால் மட்டுமே உனக்கு பரிபூரணமான பாதுகாப்பை வழங்க முடியும்.
* ஒரு மனிதனின் மதிப்பு, அவனுடைய மனதின் கவன சக்தியின் தன்மையைப் பொறுத்தே இருக்கிறது.
* நீ பிறர் மீது ஆட்சி செலுத்த வேண்டுமானால், முதலில் உன் மீது ஆட்சி செலுத்து.
* ஒரு போதும் கோபம் கொள்ளாதே. பொறுமையும், அமைதியும் உன் இயல்பாகட்டும்.
* முன்னேறுவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறாய். அதனால், எப்போதும் கற்றுக் கொண்டே இரு.

- ஸ்ரீஅன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:21 pm

சிந்தித்துச் செயல்படு!

* உனக்குத் தேவையான அனைத்தும் எப்போதும் கடவுளிடம் இருக்கிறது.
* ஆபத்தான சமயத்தில் அமைதி இழப்பது கூடாது. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படு.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதில் முழுமையான கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
* பிறருடன் சண்டை சச்சரவில் ஈடுபடாதே. அது கடவுளின் பணிக்கு எதிரான போராகும்.
* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசக் கற்றுக் கொள்.

- ஸ்ரீ அன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:21 pm

பலன் கிடைப்பது உறுதி

* மன அமைதியை அக்கறையுடன் பாதுகாத்து கொள்ளுங்கள். அமைதியின் ஆற்றல் எல்லையற்ற வலிமை கொண்டது.
* புகழ், இகழ் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டாம். கடமையில் மட்டும் கருத்தைச் செலுத்துங்கள்.
* பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை சிந்திப்பவர்கள் நேரத்தை வீணில் கழிக்கிறார்கள்.
* கடவுள் துணை என்றும் உண்டு. தெய்வத்திடம் செய்யும் முறையீடு நிச்சயம் ஒருநாள் பலன் அளிக்கும்.
* சிறிய லட்சியத்தில் வெற்றி அடைவதை விட, பெரிய லட்சியத்திற்காக முயன்று தோல்வி அடைவது மேல்.

- ஸ்ரீ அன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:22 pm

வெற்றி நிச்சயம்

* ஒவ்வொரு நாளும் அன்று நடந்தவற்றை மனதில் அசை போடுங்கள்.
* தவறை மீண்டும் செய்யாமல் இருக்க மனதில் உறுதி எடுங்கள்.
* முதலில் உன்னை அடக்கி ஆள கற்றுக்கொள். வாய்ப்பை நழுவ விடாதே.
* விடாமுயற்சியுடன் செயலில் ஈடுபட்டு வந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
* இன்பமும், அமைதியும் உன்னிடம் இருந்தால் மட்டுமே அவற்றை பிறருக்கு உன்னால் வழங்க முடியும்.

- ஸ்ரீஅன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:23 pm

எல்லாம் நன்மைக்கே

* பயம் நம்மை முன்னேற விடாமல் தடுக்கிறது. எதையும் நேருக்கு நேர் சந்திக்க துணிந்து விட்டால் பயம் காணாமல் ஓடி விடும்.
* மனதிற்குள் இருக்கும் குறை, அருவருக்கத் தக்க விஷயம் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பார்க்க பழகு. அப்படியானால் அதை சீர்படுத்த முடியும்.
* மனதிற்குப் போதுமான வேலை தராவிட்டால் சஞ்சலப்படத் தொடங்கிவிடும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது சிறந்த பணி.
* தன்வசமில்லாத நேரத்தில் தான் ஒருவனுக்கு கோபம் உண்டாகிறது. உன்னையே உன்னால் அடக்க முடியாவிட்டால் மற்றொருவராலும் அடக்க முடியாது.
* பிரச்னையைக் கண்டு வருந்தாதீர்கள். "எல்லாம் நன்மைக்கே' என்ற முழுநம்பிக்கை எப்போதும் மனதில் இருக்கட்டும். இந்த எண்ணம் கவசம் போல பாதுகாப்பு தரும்.
- ஸ்ரீஅன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 01, 2014 4:24 pm

வெற்றி அடைவது எப்படி?

* நீ விரும்பியதையெல்லாம் கடவுள்
தரமாட்டார். உன் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு
உன்னைப் பாத்திரமாக்கிக் கொள்.
* முதலில் உன்னுள் உள்ள பொய்யானவை, இருளானவை ஆகியவற்றையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்று. அப்போதுதான் நீ ஒளி பெற்ற தெய்வ சக்தியை உணர முடியும்.
* "நீங்கள் தான் எனக்கு வேண்டும் என்று கடவுளிடம்
உறுதிப்பாட்டுடன் சொல்வீர்களானால், உங்களை
எப்போதுமே நேர்மையாக இருக்கச் செய்யும்படியான சூழ்நிலைகளை கடவுளே அமைத்துத்தருவார்.
* தெய்வ சக்தியை, உன்னுள் பிரதிஷ்டை செய்ய
விரும்பினால், நீ உடல் எனும் கோயிலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* உங்கள் கரங்களை எதிரிகளிடம் நீட்டாதீர்கள். அவர்கள் முன் அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்ளுங்கள்.
நேர்மைக்கும், நியாயத்திற்கும், அடக்கத்திற்கும்,
வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குங்கள்.
அப்போது வெற்றி உங்கள் அருகில் வரும்.

- ஸ்ரீஅன்னை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக