புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 28, 2014 2:49 am

எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி 10302096_710994745640292_8998335481757046758_n

தமிழக அரசின் இந்த அம்மா கூத்து எங்கே போய் முடியுமோ என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் பாணி அறிக்கையில்தான் இப்படிக் கூறியுள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: ஜெயலலிதா ஆட்சியில்தான் திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் பேசியிருக்கிறாரே?

கருணாநிதி: இந்தப் பேச்சுக்கு உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் நடித்த "விஸ்வரூபம்" - நடிகர் விஜய் நடித்த "தலைவா" படங்களைக் கூறலாமே! "விஸ்வ ரூபம்" திரைப்படம் வெளிவருமா என்று இருந்த நிலையையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று அமைச்சர் எண்ணியிருப்பார் அல்லது ஒரு வேளை கிண்டலாகச் சொல்லியிருந்தாலும் சொல்லியிருக்கக் கூடும்!

கேள்வி: "அம்மா" திரையரங்கம் கட்டப் போகிறார்களாமே?

கருணாநிதி: ஆமாம், சோழிங்கநல்லூரில் அம்மா திரையரங்கம் அமைப்பதற்கான இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்திருக்கிறார். சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகம் அருகிலே மாநகராட்சிக்குச் சொந்தமான எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கர் நிலத்தில் கடைகள், சென்னை குடிநீர் அலுவலகம் போக மீதமுள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் "அம்மா" திரையரங்கம், அரசு மருத்துவமனை ஆகியவற்றை அமைப்பதற்காக மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார். "அம்மா" திரையரங்கம் தொடங்குவது வரை வந்திருக்கிறார்கள். இந்த "அம்மா" கூத்து எங்கே போய் முடியுமோ?

அ.தி.மு.க.வினர் சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளு மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மக்கள் அவர்களைப் பெருவாரியாக ஆதரிக்கிறார்களாம். அதனால் கண்ணை மூடிக் கொண்டு எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

கேள்வி: கடலாடியில் 1,500 கோடி ரூபாயில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப் படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறாரே?

கருணாநிதி: 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்த அறிக்கையில் சொன்னதுதானே? 110வது விதி என்பதற்குப் பதிலாக 111 என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!

கேள்வி: சமஸ்கிருத வாரம் தமிழகத்திலே கொண்டாடுவதற்குத் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தது பற்றி?

கருணாநிதி: சமஸ்கிருத வாரம் கூடாது என்று சொன்ன முதலமைச்சர் தமிழுக்கு வாரம் கொண்டாட வேண்டுமென்றும் கூறியிருந்ததை நான் படித்த போது, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் குட்டிகளுக்கு தாரா என்றும் மீரா என்றும் பீமா என்றும், நர்மதா, அனு என்றும், திருவரங்கத்தில் "யாத்ரி நிவாஸ்" என்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியது தான் நினைவுக்கு வந்தது. புலிக்குட்டிகளுக்குப் பெயரிடக் கூடத் தமிழ்ப் பெயர்களா கிடைக்க வில்லை?

இந்த அழகில்தான் "தமிழ்ச் செம்மல்" விருது அறிவித்திருக்கிறார். முதல் விருதை முதல்வருக்கே வழங்கலாமே?

அ.தி.மு.க. அரசுக்குத் தமிழ் மீது உள்ள பற்றுக்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால், தோல்வியே காணாத தமிழ் மன்னன், "அலைகடல் மீது பல கலம் செலுத்தி" பல நாடுகளை வென்றெடுத்த தமிழ் மன்னன், சோழ அரசை சொர்க்க பூமியாக மாற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா கங்கைகொண்டசோழ புரத்தில் தனியார் முயற்சியால் நடைபெறுகிறது.

தி.மு. கழக ஆட்சி நடைபெற்ற போது ராஜ ராஜ சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவைத் தஞ்சையில் தமிழக அரசு சார்பில் வெகு சிறப்பாக நடத்தி, அதில் நானே சென்று கலந்து கொண்டேன். தற்போது நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கூட அல்ல, வேறு எந்த ஒரு அமைச்சராவது பங்கேற்கிறார்களா? இது ஒன்று போதாதா, இந்த ஆட்சியினருக்கு தமிழ் மீதும், தமிழ்ப் பாரம்பரியத்தின் மீதும் எவ்வளவு அக்கறை என்பதை வெளிப்படுத்த?

கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மீதும் அவதூறு வழக்கா?

கருணாநிதி: ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், மணல் கடத்தல் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தாராம். அது முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே உள்ளது என்று முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்குத் தொடுத்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களில் ஒருவரைக் கூட விட்டுவிடாமல் அனைவர் மீதும் அவதூறு வழக்குத் தொடுக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடுத்த கட்டம்தான் இது! வாழ்க கருத்துச் சுதந்திரம்; வாழ்க ஜனநாயகம்!.

கேள்வி: தமிழக அரசு நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்க்கப் போகிறதாமே?

கருணாநிதி: தனியாருக்கு அப்படித் தாரை வார்த்தால்தானே "கமிஷன்" தொகையை கோடிக் கணக்கிலே பெற்று, அதில் ஒரு பகுதியை தேர்தல் நேரத்தில் பாமர மக்களுக்குக் கொடுத்து அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறமுடியும். முதலில் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் யோசனை வந்ததாம். அதற்கு எதிர்ப்பு கடுமையாக இருக்குமென்பதால், தற்போது நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளில் அ.தி.மு.க. அரசினர் வேகமாக இறங்கி விட்டார்களாம்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையால் 11,594 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள் - 11,289 கிலோ மீட்டர் மாவட்ட முக்கிய சாலைகள் - 34,160 கிலோ மீட்டர் மாவட்ட இதர சாலைகள் - 2,250 கிலோ மீட்டர் என மொத்தம் 57,043 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத் துறை சாலைப் பராமரிப்புப் பணிகளில், முதல் கட்டமாக, பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட, 378 கிலோ மீட்டர் சாலையை, ஐந்தாண்டுகளுக்குப் பராமரிக்க 237 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அருப்புக் கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டு விட்டதாம்.

இந்தப் பராமரிப்புப் பணிகளை இதுவரை சாலைப் பணியாளர்கள்தான் கவனித்து வந்தார்கள். அவர்களே தொடர்ந்து இந்தப் பணிகளை ஐந்தாண்டுகளுக்குக் கவனித்தால், 80 கோடி ரூபாய்தான் செலவாகும். தனியாரிடம் இந்தப் பணியைத் தாரை வார்ப்பதால், 157 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் உரிய காரணமின்றி அதிகமாகச் செலவிடப்படும். இதிலே நமக்குத் தெரியாத ஒன்று, இடையிலே அந்தத் தனியார் நிறுவனம் எவ்வளவு ரூபாயைக் கொடுத்தது என்பதுதான்.

பொள்ளாச்சியைத் தொடர்ந்து ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல் என வரிசையாக சாலைப் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவ்வாறு செய்வதின் காரணமாக கழக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 9,600 சாலைப் பணியாளர்களின் பணியும் கேள்விக் குறியாகியுள்ளது. பரிதாபத்திற்குரிய அந்தச் சாலைப் பணியாளர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். மக்கள் நலப் பணியாளர்கள், உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். சாலைப் பணியாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ?

கேள்வி: வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரைவாக முடிக்க வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும்படி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறாரே?

கருணாநிதி: நல்ல யோசனை! பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய யோசனை. இந்தத் திட்டம் அப்போதே எடுக்கப்பட்டிருந்தால், பலருடைய உண்மை உருவம் உலகத்திற்குத் தெரிந்திருக்கும்.

தட்ஸ்தமிழ்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jul 28, 2014 10:06 pm

சிவா wrote:
கேள்வி: வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விரைவாக முடிக்க வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும்படி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறாரே?

கருணாநிதி: நல்ல யோசனை! பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய யோசனை. இந்தத் திட்டம் அப்போதே எடுக்கப்பட்டிருந்தால், பலருடைய உண்மை உருவம் உலகத்திற்குத் தெரிந்திருக்கும்.

தட்ஸ்தமிழ்
மேற்கோள் செய்த பதிவு: 1076098

நம்ம கனிமொழி, ராசா முகத்தையா சொல்றீரு...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 28, 2014 10:41 pm

தாத்தாவின் சாமர்த்தியமான கேள்வி பதில் அசத்தல். தனக்கு ஒன்னுமேயில்லைன்னு நினைக்கிறது தான் இவரது பலகீனம் புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jul 28, 2014 10:42 pm

அசுரன் wrote:தாத்தாவின் சாமர்த்தியமான கேள்வி பதில் அசத்தல். தனக்கு ஒன்னுமேயில்லைன்னு நினைக்கிறது தான் இவரது பலகீனம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1076244

அவரு எப்பவுமே அப்படித்தானே சார்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 28, 2014 10:46 pm

M.M.SENTHIL wrote:
அசுரன் wrote:தாத்தாவின் சாமர்த்தியமான கேள்வி பதில் அசத்தல். தனக்கு ஒன்னுமேயில்லைன்னு நினைக்கிறது தான் இவரது பலகீனம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1076244

அவரு எப்பவுமே அப்படித்தானே சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1076246
இவருக்குன்னா ரத்தம் மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்டினி ஹிஹி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 28, 2014 10:51 pm

அய்யாவோட கூத்து முடியும் நாளில்
அம்மாவோட கூத்தும் முடியுமோ என்னவோ !

அய்யாவோட ஆட்கள் கோரசாக கும்மி அடிச்சாங்க ,
அம்மா தனி ஆவர்தனம் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 28, 2014 10:55 pm

T.N.Balasubramanian wrote:அய்யாவோட கூத்து முடியும் நாளில்
அம்மாவோட கூத்தும் முடியுமோ என்னவோ !

அய்யாவோட ஆட்கள் கோரசாக கும்மி அடிச்சாங்க ,
அம்மா தனி ஆவர்தனம் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1076250

கடைசி வரி அருமை ஐய்யா. புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 29, 2014 12:16 am

இவரு ரொம்ப உத்தமரு போல பேசுறாரு அவ்ளோதான்




எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Mஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Uஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Tஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Hஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Uஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Mஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Oஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Hஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Aஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Mஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி Eஎங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக