புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Harriz
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
435 Posts - 47%
heezulia
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_m10நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதர் கதைகள் - எழுத்துச் சித்தர் பாலகுமாரன்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:04 am

First topic message reminder :

நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 F3tDCalRRLCZg0Uw3j11+p14bநாரதர் கதைகள் வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவை அல்ல. எதனால், நாடகத்தில் நாரதர் கோமாளியானார் என்பது எனக்குப் புரியவில்லை. நாரதரது சரித்திரத்தைப் படிக்கும்போது அவர் மிகக் கூர்மையானவராக, மிகச் சிறந்த குணவானாக, மிக அமைதியானவராக, மிகுந்த ஒழுக்கச்சீலராக, தத்துவ விசாரம் உள்ளவராக, ஸ்ரீமந் நாராயணனையே சரணடைந்தவராக, சரணாகதிக்கு உதாரணமாகத் திகழ்ந்திருப்பதை உணர முடிகிறது. எதனாலோ மேடைகளில் அவர் கோணங்கியாகிவிட்டார்.

ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருவர் முன் வைத்து, இது சரியா என்று பார்க்கச் சொல்லி, 'இல்லை’ என்று அவரைச் சொல்ல வைத்து, இரண்டு பேருக்கும் இடையே கலகத்தை மூட்டுவதால் அவர் கோமாளியாகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால், அது கலகமல்ல. 'இதுதான் சரி’ என்று ஒரு குழுவினரும், 'இல்லை, இதுவே சரி’ என்று இன்னொரு குழுவினரும் வாழ்ந்து வரும்போது, 'எது உண்மையில் சரி?’ என்று கேள்வி எழுப்புவது எப்படிக் கலகமாகும்? அது உண்மையை நோக்கிய பயணம். சத்தியத்தை நோக்கிய சாதனை. எனவே, 'நாராயண... நாராயண...’ என்று சொல்லிக்கொண்டே அவர் மேடையில் நுழைந்தால், அத்தனை பேருக்கும் சிரிப்பாகிவிடுகிறது. அப்படிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்ததாலேயே அந்த நடிகர், அந்த 'நாராயண... நாராயண’ என்பதை மிகச் சரியான ஒரு நேரத்தில், மிகக் கேலியான ஒரு குரலில் வெளிப்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. உண்மையில் அந்த 'நாராயண... நாராயண’ என்ற சப்தம் வியப்பின்பால் வருவது என்பதாகவே நான் உணர்கிறேன்.

'அடடே! இதுவா உண்மை! அப்ப, இதுவா உண்மை’ என்று பல திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி, உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதே அவருடைய தன்மையாக இருக்கிறது. தான் மட்டும் அறிந்த உண்மையை தனக்குள்ளே பொதித்துக் கொள்ளாது, தன் சரிதமாக அவர் வெளியிடுகிறார். தன் வாழ்க்கை யின் நோக்கமாகவும் அதைக் கொண்டுவிடுகிறார். எனவே, ஓர் உன்னத புருஷனுடைய வாழ்க்கையாகத்தான் நாரதருடைய கதைகளை நான் கவனிக்கிறேன்.

நாடகக் கொட்டகைக்குள் மக்கள் ஆணி அடித்ததுபோல் திகைப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைத் தளரவிடுவது நல்லது என்று ஆலோசித்து, நாடகக்காரர்கள் யாரை அனுப்புவது என்று யோசித்து, நாரதரை அனுப்புவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த உச்சிக் கொண்டையும், காவி உடையும், பூணூலும், மார்பிலே தொங்குகிற வீணையுமாக அவர் உள்ளே நுழைய, கைதட்டல் ஆரவாரம் பொங்குகிறது. 'அப்பாடா, இனி அடுத்த பத்து நிமிடமும் நல்ல நகைச்சுவையாகப் போகும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள். அதை விரும்பவும் செய்கிறார்கள். நாடகக் காரர்களுக்கும் தங்களுடைய சாதனை பற்றிச் சந்தோஷம். பல நாடகங்களில் நாரதர் தம்பூரா வைத்துக்கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நாரதரிடம் இருப்பது தம்பூரா அல்ல; அது மஹதி என்கிற வீணை. கந்தர்வ லோகத்து சமாசாரம்.

நாரதர் யார்? சப்த ரூபம். எது சப்தம்? உலகத்தில் ஏற்படுகிற எல்லா அசைவுகளும் சப்தத்தை உண்டு பண்ணுகின்றன. அந்த சப்தங்களில் உன்னதமானது எது? இசை. அந்த இசையில் உன்னதமானது எது? வீணை இசையே என்று சொல்லப்பட்டிருக்கிறது. சப்தத்தினுடைய இன்னொரு வடிவம் என்ன என்று யோசித்தால், பேச்சு. பேச்சின் உன்னதம் கவிதை. கவிதையின் இன்னொரு வடிவம் விவாதம். நாரதர் எல்லா இடங்களிலும் விவாதம் பேசி, மக்களுடைய திசையைத் திருப்பி, நல்லது நோக்கிப் பயணிக்கச் செய்கிறார்.

இங்கே எவர் கர்வம் கொண்டு அலைகிறாரோ, எங்கே ஆணவம் தலைவிரித்து ஆடுகிறதோ, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கே வீராவேசம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் நாரதர் போய் சமனம் செய்கின்ற பணியிலே தாமாக ஈடுபடுகிறார். இதற்கு, நாரதர் பாட்டுப் பாடவில்லை; கவிதை சொல்லவில்லை. மாறாக, பேச்சுகளில் இறங்குகிறார். 'என்ன இது?’ என்ற கேள்விதான் நாரதருடைய அடிப்படையான விஷயம். உண்மையை அறியும்பொருட்டு 'என்ன இது?’ என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர் நாரதருடைய தன்மையைக் கொள்கிறார். அப்படிக் கேட்கும்போது உள்ளுக்குள்ளே கலவரம் ஏற்படத்தான் செய்கிறது. அந்தக் கலவரம்தான் நல்ல விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறது. எது குழம்புகிறதோ, அதுவே தெளியும். எது கடையப்படுகிறதோ, அதிலிருந்தே அமிர்தம். எனவே, நாரதர் ஏற்படுத்துகிற கலவரம், அதாவது கடையல், நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கிறது; அமுதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறது.

பிரம்மா- படைப்புத் தொழில். ஓர் உயிரின் ஆரம்பம்; ஓர் உருவத்தின் தொடக்கம். சிவன் அழிக்கும் தொழில். ஒரு முடிவின் ஆரம்பம்; ஒரு வாழ்க்கையின் முடிவு! எது வளர்ச்சி? விஷ்ணுவே வளர்ச்சி. வளர்வது என்பது விஷ்ணுவாகவும், படைப்பது என்பது பிரம்மாவாகவும், முடிவது என்பது சிவமாகவும் மூன்று வித சக்திகளுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் சநாதன தர்மத்தின் அடிப்படை விதி.

ஆக, விவகாரங்கள் எல்லாம் வளர் வது பற்றித்தான் இருக்கின்றன. எது வாழ்க்கை என்பதைப் பற்றித்தான் இருக்கின்றன. அதைப் பற்றித் தவறாகக் கூறப்படும்போது, அது பற்றி மோசமாக பிரசாரம் செய்யப்படுகிறபோது, அது பற்றிய ஞானமில்லாமல் பேசப் படுகிறபோது, அவற்றை உடைத்து உண்மையை நிலைநாட்டுவதற்கு நல்லவர்கள் இடைவிடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு வடிவம்தான் நாரதர்.

நாரதர் என்பவர் படைப்புத் தொழிலோடும் சம்பந்தப்படவில்லை; ஒரு வாழ்க்கையின் முடிவோடும் சம்பந்தப்படவில்லை. அவர் வளர்ச்சி மீதே அக்கறை காட்டுகிறார். எது வளர்கிறதோ, அந்த வளர்ச்சியை நோக்கிச் சரணடைந்து, எது வளர்கிறது, எப்படி வளர்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார். எனவே, விஷ்ணுவின் பக்தராக, ஸ்ரீமந் நாராயணரைச் சரணாகதி அடைந்தவராக நாரதர் உருக்காட்டப்படுகிறார்.

படைப்புத் தொழிலைப் பற்றி விமர்சனம் இல்லை; முடிவு பற்றிய விமர்சனம் இல்லை. எது வளர்கிறதோ அதைப் பற்றி மட்டுமே விமர்சனம். அந்த விமர்சன சக்திதான், அந்த விமர்சன ரூபம்தான், எழுப்பப்படுகிற கேள்வி என்கிற மகோன்னதமான ஒரு மாறுதல்தான் நாரதர். இந்த விமர்சனம் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. அல்லது, வளர்ச்சி கோணலாகப் போகும். ஆட்டு மந்தைகள் போல முன்னால் போவதன் பின்னாலேயே போகாமல், 'இது என்ன?’ என்று கேள்வி கேட்கும் நம் விமர்சன சக்தியே, நம்முடைய கேள்வி கேட்கும் திறனே நம்முள் தெளிவை உண்டாக்கும். அப்படித் தெளிந்து நடக்கிற பயணமே வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையே நாரதர் வகுத்த வழி! இந்தக் கேள்வி கேட்டலே நாரத சக்தி. இந்த விஷயம்தான் விதம் விதமான கதைகளாக்கப்பட்டிருக்கிறது.

நல்லவன், கெட்டவன் என்று பிரித்து, நல்லவனுடைய விளக்கத்தையும் கேட்டு, கெட்டவனுடைய விளக்கத்தையும் கேட்டு, எது சரியான வழி என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. எனவே, இங்கு கெக்கலித்துச் சிரிப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, கூர்த்த புத்தியும், விமர்சன புத்தியும் உள்ளவர்களுக்கே நாரதர் கதை புரியும்.

வழக்கம் போலல்லாது, பாலகுமாரன் மிக வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீராயின் அது மிகப் பெரிய தவறு. முன்னைவிட இந்த நாரதர் கதைகள் மிகக் கூர்மையாகவும் கனமாகவும் இருக்கும்.

இந்தப் பிரபஞ்சம் பூமியை மட்டும் கொண்டதல்ல; வெவ்வேறு வடிவான உருவங்கள் வாழ்கிற பல்வேறு உலகங்கள் இருக்கின்றன என்பது சநாதன தர்மத்தின் கருத்து. மிகச் சமீபமாக, பூமியில் ஒரு பெரிய நட்சத்திரக் கல் வந்து விழுந்தபோது, அதை இடைமறித்து ஒரு விண்கலம் தாக்கிச் சிதறடித்து, பூமிக்கு அப்பால் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, பல்வேறு உலகக் கதைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படிப்பட்ட உலகங்களில் ஒன்று கந்தர்வ உலகம். எந்த மாதிரியான ஆன்மாக்கள் கந்தர்வ உலகத்தில் ஜீவிக்கின்றன? இசையை பக்தியின் வெளிப்பாடாக, குழல், யாழ் போன்றவற்றை நன்கு பயின்று மீட்டி, அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறைவனை வணங்குகிற ஆன்மாக்கள் அங்கு வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதாவது, புனிதப்பட்ட ஆன்மாக்கள் பசி, தூக்கமில்லாது, வேறு உடல் உபாதைகள் இல்லாது, சங்கீதமே வாழ்வாகக் கொண்டு கந்தர்வ உலகத்தில் வாழ்கின்றன. ஆனால் மன மயக்கங்கள், மதி சறுக்கல்கள் அங்கேயும் உண்டு.

உபன் என்ற கந்தர்வனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு உபவருக்கன் என்று பெயரிட்டார்கள். உபன் இசையையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவன். இறைவனை இசையால் வழிபடுவதையே எந்நேரமும் செய்துகொண்டிருந்தவன். தன் மகனை நன்கு பயிற்றுவித்தான். தன்னிலிருந்து பிரிந்த, கிளர்ந்த அந்தச் சக்தியை மிகவும் பாராட்டி வளர்த்தான். அவனுக்கு, தான் வாசிக்கிற மஹதி என்ற யாழை வாசிக்கக் கற்றுக் கொடுத்தான். உபவருக்கன் தந்தையை மிஞ்சிய சீடனாக அந்த வீணையைத் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டான். எல்லா உலகத்தாரும் உபவருக்கனை அழைத்து, அவனை மஹதி வாசிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம். நல்ல விழாக்கள் எதுவும் மஹதி வீணை இல்லாது, அதை வாசிக்கின்ற உபவருக்கன் இல்லாது நடைபெறுவதில்லை.

தேவர் உலகில் ஒருமுறை, பிரம்மசிரேஷ்டர் என்கிற முனிவர் மிகப் பெரிய யாகங்கள் செய்தபோது, அங்கே வீணை வாசிக்க உபவருக்கன் அழைக்கப்பட்டான். உபவருக்கனும் மனம் ஒருமித்து சாம கானம் வாசித்து, அங்குள்ளோரைத் தன் வயப்படுத்தினான்.

அந்த இடத்தில் இசை ஞானமுள்ள அந்தணக் கன்னிகை ஒருத்தியும் இருந்தாள். உபவருக்கனின் வீணை இசையில் சொக்கிப் போனாள். அதன் சுரத்தோடு அவள் மனமும் கலந்தது. தான் அவனுக்கு உரியவளாக வேண்டும் என்றும், அவனை போஷிக்க வேண்டும் என்றும், அவனை இன்னும் சிறப்பானவனாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் அவன் மீது காதல் கொண்டாள். அவன் கவனத்தை ஈர்க்கும்படியாக நெகிழ்ந்தும், அசைந்தும், கண்களால் அழைத்தும், பார்க்கும்போது உதடு பிரித்துச் சிரித்தும், வெட்கப்பட்டும், ஆர்வப்பட்டும் பல்வேறு பாவனைகள் காண்பிக்க, உபவருக்கன் மனம் சிதறினான். பாடலில் இருந்த கவனம் நகர்ந்து போயிற்று. சாம கானம் வாசிப்பதில் பிழை ஏற்பட்டது. மிகப் பெரிய சிரேஷ்டர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையில், சாம கானத்தை கரதலப் பாடமாகக் கற்ற பெரியவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில், பிசிறு பிசிறாக சாம கானம் வாசிக்கப்பட்டதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியுற்றார்கள்.

ஏன் தவறு செய்கிறான், எதனால் பிழை செய்கிறான் என்று கவலைப்பட்டார்கள். அவன் கவனம் ஒரு கன்னிகையிடத்தில் சிதறியிருப்பதைக் கண்டு வருத்தப்பட்டார்கள். கவனம் சிதறாமல் இருந்தால் மிக அற்புதமான ஒரு சாம கானம் வெளிப்பட்டிராதா, என்ன வாசிக்கிறோம் என்றுகூடத் தெரியாது இப்படிக் கவனம் சிதறலாமா, இது நல்லதா, இது பலருக்குத் துன்பம் நேர்விக்குமே என்று கலங்கினார்கள்.

யாகம் செய்த பிரம்மசிரேஷ்டர் கோபம் அடைந்தார். சபை சலசலப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வாசிப்பு தவறாக இருப்பதால் சபை தனது மௌனத்தை இழந்துவிட்டது என்பதைப் புரிந்து ஆவேசப் பட்டார். ''கந்தர்வனே, போதும் நிறுத்து!'' என்று கட்டளையிட்டார். வீணை இசை நின்றது.

''என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ஓர் உன்னதமான காரியம் செய்கிறபோது மனம் பிழன்று மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறாய் என்றால், நீ இந்த மஹதி வீணையை வாசிக்கத் தகுதி இல்லாதவன். இந்த சாம கானம் இசைக்க யோக்கியதை இல்லாதவன். எனவே, யோக்கியதை இல்லாமல் ஒரு பெரிய சபையில் இந்த வித்தையை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதால், நீ கந்தர்வனாக இனி இருக்க வேண்டாம். அது உனக்குத் தகாது. எனவே, நீ பூமியில் பிற!'' என்று சாபமிட்டார்.

உபவருக்கன் தன் தவற்றை உணர்ந்தான். கந்தர்வன் என்ற இடத்திலிருந்து நகர்ந்து, ஒரு மானுடனாக பூமியில் வந்து பிறந்தான். அவனது வெகு இளம் வயதிலேயே அவனின் தந்தை இறந்தார். தாய் பல்வேறு வீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்து வந்தாள்.

சாம கானம் என்ற உன்னதத்தை, அதைத் தெரிந்த சபைக்கு நடுவே தவறாக வாசித்து தன்னுடைய தகுதியை இழந்தது மட்டுமல்ல; கந்தர்வனாக இருந்தபோது கிடைத்த ஓர் அற்புதமான தந்தையின் சிநேகமும் பூலோகத்தில் இருக்கும்போது கிடைக்கவில்லை. தந்தையின் அணைப்பும் அந்தச் சாபத்தில் அடித்துக்கொண்டு போயிற்று.

உபவருக்கன் தன் விதவைத் தாயுடன் ஓர் அந்தணர் வீட்டில் வசித்து வந்தான். அவள், அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து, தன்னோடே தன்னுடைய பிள்ளையை வைத்துக் கொண்டாள். ஒரு மழைக்காலத்தில் அந்த அந்தணர் வீட்டுக்கு நாராயணனுடைய அடியார்கள் வந்தார்கள். பரத கண்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கோயில்களைத் தரிசிக்கவும், நாராயணனின் புகழ் பாடவும் அவர்கள் ஒரு கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மழைக்காலம் முழுவதும் அவர்கள் அந்த அந்தணர் வீட்டில் தங்கி, நாராயணனைப் பற்றி விதம்விதமான பாடல்களைப் பாடினார்கள். இசை என்ற ஓர் அற்புதமான வித்தை, அவனுக்குக் கந்தர்வ உலகத்தில் கிடைத்திருந்ததால், அந்த இசையால் அவன் பல பேரை மகிழ்வித்திருந்ததால், மானுடனாகப் பிறந்த உபவருக்கனுக்கும் அந்த இசை ஞானம் இருந்தது. அந்த அடியவர்கள் பாடும்போது, அவனும் தன்னுடைய இனிய குரலில் சேர்ந்து பாடினான். அவர்களோடு அமர்ந்து அந்தப் பாடல்களை எழுதிக்கொண்டு, மனனம் செய்தான். அவர்கள் பாட மறந்ததை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு சிறுவனின் புத்திசாலித்தனத்தையும், இசை மீதுள்ள நாட்டத்தையும், இசையின்பால் அவன் கொண்டிருந்த ஞானத்தையும் அறிந்து அந்த அடியவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவனுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தார்கள்.

''இது மிக உயர்ந்தது. இசையைக் காட்டிலும் உயர்ந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது. பேச்சைக் காட்டிலும் இந்த நாராயண மந்திரம் உயர்ந்தது. நமக்குப் பேச்சுத் திறன் இருக்கிறதே, அது கவிதை எழுத மட்டுமல்ல, பாட மட்டுமல்ல, ஆட மட்டுமல்ல, நாடகம் போட மட்டுமல்ல, இந்த மாதிரியான மந்திரங்களைச்சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இடையறாது, இடையறாது நாராயணன் பெயரைச் சொல். நாராயணன் உனக்கு நேரே வருவார். நீ வேண்டுகின்ற வரங்களைத் தருவார்'' என்று சொன்னார்கள். அந்தச் சிறுவன் மனமகிழ்ந்தான். அவர்களை வணங்கி, வழியனுப்பி வைத்தான்.

அவன் தாயார் இறந்தபோது என்ன செய்வது என்று தெரியாது தவித்தான். இசையா, கவிதையா, எது முக்கியம்? இரண்டும் இல்லை, நாராயண மந்திரமே முக்கியம் என்று தெளிந்தான். வனத்திற்குப் போனான். இடையறாது நாராயண மந்திரம் சொன்னான். தனக்குள்ளே அந்த மந்திரத்தை வைத்துப் பெரிய தீயாக்கி, சதா காலமும் அதனுள்ளேயே மூழ்கிக் கிடந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் மனம் மகிழ்ந்தார். அவனுக்குக் காட்சியளித்தார். ''தொடர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிரு. இந்த உலகம் முடியப் போகிறது. பெரிய ஊழிக்காலம் வரப்போகிறது. சிருஷ்டிகள் அழியப் போகின்றன. மறுபடியும் சிருஷ்டி துவங்கும். அப்போது பிரம்மாவே உனக்குத் தந்தையாக இருந்து, உனக்குச் சகலமும் சொல்லிக் கொடுப்பார்'' என்று சொல்லி விடைபெற்றார்.

ஊழிக்காலம் வந்தது. உயிரினங்கள் அழிந்தன. சகலமும் நீர்மயமாயிற்று. நீர்மயத்திலிருந்து பிரம்மா உலகை சிருஷ்டிக்கத் துவங்கினார்.

வரிசி முதலிய முனிவர்களோடு, மஹதி என்ற வீணையோடு உபவருக்கன் மறுபடி பூமியில் பிறந்தான். அவனுக்கு 'நாரதர்’ என்று பெயரிட்டார் பிரம்மா. நாரதர் தன்னுடைய மகன் என்று பெருமையோடு உலகுக்கு அறிவித்தார். இந்த உலகம் மட்டுமல்லாது, எல்லா உலகங்களுக்கும் செல்கிற தகுதியோடு, நாரதர் மஹதி என்ற வீணையோடு பிறந்தார்.

சந்தோஷம் கொடுக்கிற இசை மட்டுமல்ல, துன்பத்தை நீக்கி ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்த்துகிற இசை மட்டுமல்ல, சத்தியத்தை நோக்கிக் கேள்வி கேட்டுத் தெளிகிற ஞானத்தோடும் நாரதர் பிறந்தார். அவருடைய வாக்கு பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் ஒலித்தது. சாதாரண பிறப்பல்ல அது. மாமுனி என்கிற பிறப்பு. சகலமும் அறிந்து தெளிந்த பிறப்பு. கடும் தவத்தால் அது அவருக்குக் கிடைத்தது.

நாராயண மூல மந்திரம், மறுபிறப்பில் மிகச் சிறப்பான ஓர் அம்சத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. அந்தச் சிறப்பான அம்சத்திற்குப் பெயர் நாரதர். அவர் எடுத்துரைத்த உண்மைக்குப் பெயர் நாரத புராணம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:35 am


''ஆனாலும், அவரது இந்தக் கடும் தவத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், எம்பெருமானே! வேறு ஏதேனும் விபரீதமாக நடந்துவிடக்கூடாது என்று தேவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே, அந்த முனிவருக்குத் தரிசனம் தந்து, அவரை உங்களுக்குள் அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று நாரதர் வேண்ட, அதன்படியே சிவபெருமான் அந்த முனிவர் முன் திருக் காட்சி தந்து, அவரை ஆசிர்வதித்து, தன்னோடு வருமாறு கைநீட்ட, சிவனாரின் கையைப் பற்றிக் கயிலைக்கு வந்தார் முனிவர். தேவர்கள் நிம்மதியானார்கள்.

''நாராயணா... நான் அறிந்துகொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவு இருக்கிறது!

இது வேண்டும், அது வேண்டும் என்று கோரிக்கையோடு தவம் செய்யும் மனிதருக்கிடையே, 'எதுவும் வேண்டாம், இது என் இயல்பு’ என்று சொல்கிற ஒரு மனிதரிடம் என்னைப் பாட வைத்தீரே! இப்படியும் ஒரு தவம் இருக்கும் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நாராயணா... நான் அறிந்துகொள்ள வேண்டியது எவ்வளவு இருக்கிறது!'' என்று கை கூப்பி, கண்ணீர் துளிர்க்க நாராயணரை வணங்கினார் நாரதர்.

எல்லாம் அறிந்த நாரதரே இன்னும் அறிய வேண்டியது இருக்கிறது என்று எண்ணும்போது, நாரதருடைய அவையடக்கமும் மேன்மையான குணமும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

அறிந்துகொள்ளுதல் என்பதற்கு முடிவே இல்லை. மனிதர்களைவிடப் பன்மடங்கு மேம்பட்ட தேவர்களுக்கும் இது பொருந்தும். தேவர்களே தேடலில் இருப்பாரெனில், மனிதனின் கடமையும் அதுவே ஆகிறது.

காந்திப்பட்டினம் என்ற ஊரில், சம்புகண்டன் என்ற அரசர் சிறப்பாக ஆண்டு வந்தார். அவருக்குக் குணசுந்தரி என்று ஒரு மகள் இருந்தாள். பெயருக்கேற்ப மிக உன்னதமான குணங்களை உடையவள்; நல்ல அழகி.

பருவ வயது வந்ததும் அவளுக்குத் திருமணம் என அறிவித்தார் அரசர். எல்லா அரசர்களும் சுயம்வரத்தில் வந்து கலந்துகொள்ளும்படி வேண்டினார். அரசர்கள் வர மறுத்தார்கள். காரணம் கேட்டதற்கு...

''நீங்கள் அயோத்தியில் இருக்கிற ஸ்ரீராமருக்கும் அனுப்புவீர்கள். ஸ்ரீராமரும் வந்து சேருவார். ராமருடன் அவருடைய குழந்தைகளும் வருவார்கள். முன்னே ஒரு முறை, அவரின் குழந்தைகளால் ஒரு சச்சரவு ஏற்பட்டுவிட்டது. அதேபோல, மறுபடியும் நடக்கும். எனவே, ஸ்ரீராமர் வராது போனால், நாங்கள் வருகிறோம். ஸ்ரீராமரை நீங்கள் அழைத்தால் நாங்கள் வரமாட்டோம்!'' என்று தீர்மானமாகச் சொன்னார்கள்.

சம்புகண்டன் யோசித்தார். பின்பு, 'சரி’ என்றார். ஸ்ரீராமரைத் தவிர, மற்ற எல்லா அரசர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அரசர்கள் வந்து கலந்துகொண்டார்கள். மிகப் பெரிய சேனைகள் காந்திப்பட்டினத்தைச் சூழ்ந்துகொண்டன. வான் வழியாகப் போய்க் கொண்டிருந்த நாரதர், சேனைகள் இருப்பதைப் பார்த்து பூமியில் இறங்கினார். நடந்து வந்தார். அரண்மனைக்குள் நுழைந்து 'என்ன நடக்கிறது இங்கே?’ என்று கேட்டார். 'திருமணம்’ என்று சொன்னார்கள். 'யாருக்கு?’ என்று விசாரித்தார். 'அரசருடைய மகளுக்கு’ என்று சொன்னார்கள்.

அரசருடைய மகளைப் பார்க்க அந்தப்புரம் வந்தார். நாரதரைத் தடுக்க, அங்கு ஆட்களே இல்லை. யாருக்கும் நாரதர் வருகை தெரியவில்லை. நாரதர், குணசுந்தரியின் அருகில் போய் நின்று ஆசிர்வதித்தார். குணசுந்தரி அவரது வருகையைத் தெரிந்துகொண்டு, திடுக்கிட்டாள். சட்டென அவரது கால்களில் விழுந்து வணங்கினாள்.

''மிக்க சந்தோஷம்! யாரிடம், எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்தேன். உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். நான் மனக்கிலேசத்தில் இருக்கிறேன். இங்கு வந்துள்ள அரசர்களைப் பார்க்கப் பார்க்க, அந்தக் கிலேசம் அதிகமாகிறது. தயவுசெய்து எனக்கு உதவி செய்ய வேண்டும்'' என்று மறுபடியும் மண்டியிட்டாள்.

''சொல்லம்மா! நீ நல்ல பெண்; குணவதி. உனக்கு என்ன குறை, சொல்?'' என்று வாஞ்சையோடு கேட்டார் நாரதர்.

நல்லவருக்கு உதவி செய்ய நாரதருக்கு எப்போதும் பிடிக்கும்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:35 am


''இந்த அரசர்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது. அவர்கள் வீரத்தைக் கேட்கும்போது குலை நடுங்குகிறது. உத்தமமான புருஷன் என்பவர் ஸ்ரீராமபிரான்தானே! அப்படியரு உத்தமமான புருஷன் இருக்கிற ஒரு வீட்டில்தான் நான் குடியேறவேண்டும். ஒரு நல்ல குடும்பத்தில்தான் நான் வாழ்க்கைப்பட வேண்டும் ஸ்ரீராமருக்கு மருமகளாகப் போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது மிக நல்ல குடும்பம்.

சீதை என்கிற உயர்ந்த பெண்மணியும், மற்ற நல்ல அரசிகளும் இருக்கிற குடும்பம் அது. பரதனும் சத்ருக்னனும் லட்சுமணனும் அங்கு இருக்க... அவர்கள் வீர தீரச் செயல்களைக் கேட்டுக்கொண்டு, அவர்களைப் பார்த்து வியந்தபடி, அவர்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறேன். அந்தக் குடும்பத்தில் நானும் ஒருத்தியாய்ப் போய் சேரக்கூடாதா? அவர்களின் மருமகளாக ஆகக் கூடாதா?'' என்று கெஞ்சினாள்.

நாரதர் சந்தோஷப்பட்டார்.

''நல்ல பெண்ணம்மா நீ! நல்ல பெண்ணாக இருப்பதால்தான் உனக்கு இப்படியரு நல்ல எண்ணம் தோன்றியிருக்கிறது. ஆனால், என்ன செய்வது? உனக்கு அதிர்ஷ்டம் இல்லையே! உன் தகப்பன் வேறு விதமான நடவடிக்கைகள்தானே எடுத்திருக்கிறான்! சரி, இருக்கட்டும். நான் போய் ஸ்ரீராமருடைய குடும்பத்தில் உன்னைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களை இங்கு அழைத்து வருகிறேன். அதுவரை நீ சற்றுப் பொறுமையாக இரு!'' என்றார்.

சட்டென்று அங்கிருந்து மறைந்து, வான் வழியே சென்றார். அப்போது, தமஸா நதிக் கரையில் சத்ருக்னனுடைய மகன் யூப கேது நீராடிக்கொண்டிருந்தான். அவன் சிறிய படையோடு அங்கே வேட்டையாடுவதற்காக வந்திருந்தான். அங்கே போய் இறங்கினார் நாரதர்.

யூப கேது அவரை வணங்கி வரவேற்றான். ''உங்களைச் சந்தித்தது மிகப் பெரிய பாக்கியம்! உங்களைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன் முதலாகச் சந்திக்கிறேன். ஸ்ரீமந் நாராயணரையே நீங்கள் நெஞ்சில் தரித்திருப்பதை நான் அறிவேன். அம்மாதிரி யான கொடுப்பினை எனக்கும் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்'' என்று கை கூப்பினான்.

''அதெல்லாம் காலாகாலத்தில் கிடைக்குமய்யா! அதற்கு முன், நீ திருமணம் செய்து கொள்ள வேண்டாமா? குடித்தனம் செய்ய வேண்டாமா? பூமிக்கு வந்துவிட்டாய்; அந்த வாழ்க்கையை முழுவதும் வாழ வேண்டாமா?'' என்று நாரதர் கேட்க,

''நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அது மாதிரியே செய்கிறேன்'' என்று அவன் மறுபடியும் நாரதரை வணங்கினான்.

'ஸ்ரீராமரை கேலி செய்கிறார்களய்யா!'' என்றார் நாரதர். யூப கேது சட்டென்று நிமிர்ந்தான்.

''யார்? யார் கேலி செய்வது?''

''சம்புகண்டன்.''

''அவர் எங்கிருக்கிறார்?''

''காந்திப்பட்டினத்தில்.''

''என்னவென்று கேலி செய்கிறார்?''

''ஸ்ரீராமரை வரவழைத்தால், உங்கள் குடும்பத்தினர் அனைவரும்

வந்துவிடுவீர்களாம். உங்கள் குடும்பம் வந்துவிட்டால், பெரிய கலவரம்தான் வரும்;

அதனால் நாங்கள் வரமாட் டோம் என்று மற்ற அரசர்கள் சொல்லியிருக்கிறார்களாம். அதனால், ஸ்ரீராமரை விட்டு விட்டு, மற்ற அரசர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பியிருக் கிறார் சம்புகண்டன்.''

''எதற்கு எல்லோரை யும் வரவழைக்கிறார் அவர்?''

''குணசுந்தரி என்று அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். மிக அழகி. குணவதி. உத்தமி. அவளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்து, சகலருக்கும் ஓலை அனுப்பி, சுயம்வரத்துக்கு விழா எடுத்திருக்கிறார். அரசர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். நாளை சுயம்வரம். நீ ஏதேனும் செய்யமுடியுமா? விரைந்து செயல்பட்டால், அந்த அற்புதமான பெண் குணசுந்தரி உனக்கு மனைவி ஆவாள்.

ஸ்ரீராமருக்கு, நல்ல இடத்திலிருந்து தனக்கு மருமகள் வரவேண்டும் என்பது விருப்பம். எனவே, ஸ்ரீராமரின் உள்ளம் களிக்கும்படியாக, அந்த குணசுந்தரியை நீ திருமணம் செய்து கொள்!'' என்று நாரதர் சொல்ல, அவனும் ''சரி'' என்று தன் படையோடு விரைவாகப் புறப்பட்டான்.

அங்கே, விழா உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. இசை ஒலியும், கூச்சலும், மிருகங்களின் நடமாட்டமும், மக்களின் ஆரவாரமும், விதம்விதமான கூத்தாடிகளின் சாகசங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. விருந்துகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அரசர்கள் சந்தோஷத்தில் மூழ்கியிருந்தார்கள்.

மறுநாள், விடியற்காலையில் குணசுந்தரி நீராடிவிட்டு, நன்கு உடுத்திக்கொண்டு, அந்தப் புரத்தில் காத்துக்கொண்டிருந்தாள்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:36 am


'நாரதர் ஏதோ நடக்கும் என்று சொன்னாரே; இதுவரை ஒன்றுமே நடக்க வில்லையே! அத்தனை அரசர்களும் சபைக்கு வந்து கொண்டிருக்கிறார்களே! நாரதர் சொன்னது எப்போது நடக்கும், என்ன நடக்கும்’ என்று தவித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது, யூப கேது தன் படையோடு அந்தப்புரத்துக்குள் நுழைந்தான். எதிர்ப்பட்டுத் தடுத்த வீரர்களை வெட்டி வீழ்த்தினான். உள்ளுக்குள் நுழைந்து, குணசுந்தரியைக் கைப்பிடித்து இழுத்தான். ''வா, என்னோடு தேரில் ஏறிக்கொள்!'' என்றான். அவள் பயந்து மயங்கிச் சரிந்தாள். அவளை அப்படியே அள்ளிக்கொண்டு போய், தேரில் கிடத்தினான். குதிரையைச் செலுத்தினான். வெகு விரைவாக அரண்மனையை விட்டு வெளியேறிப் பறந்தான்.

குணசுந்தரியை யாரோ கடத்திக்கொண்டு போகிறார்கள் என்ற செய்தி, சம்புகண்டனுக்கு எட்டியது. மற்ற அரசர்களுக்கும் தெரிந்தது. உடனே அவர்கள் தங்கள் படையோடு யூப கேதுவைப் பின்தொடர்ந்தார்கள். சம்புகண்டன் ஆரவாரமாக முன்னேறிக் கொண்டிருந்தார்.

மயக்கம் தெளிந்த குணவதியை ஒரு மண்டபத்தில் அமர வைத்துவிட்டு, யூபகேது குதிரையில் ஏறி, அவருக்கு எதிரே வந்து நின்றான். சம்புகண்டனின் படைகளைச் சிதற அடித்தான். மற்ற அரசர்கள் எதிர்க்க, அவர்களையும் தனது சிறு படையின் மூலமே அடித்து விரட்டினான். வேகமாகச் சண்டை செய்தான். அவனுடைய பலத்துக்கும் போர்த் திறமைக்கும் ஈடுகொடுக்கும்படியாக எதிரே யாரும் இல்லை. அவனது வாள் வீச்சும், ஈட்டி எறிதலும், குதிரையின்மீது நின்றபடியே அம்பு தொடுத்தலும் எதிரிகளை பிரமிக்க வைத்தன. அவன் வீரம் போற்றத்தக்க வகையில் இருந்தது. அரசர்கள் பின்வாங்கினார்கள். ''எதற்கு இந்தச் சுயம்வரம்? இங்கு சண்டையிடவா வந்தோம்?'' என்று சொல்லி, மெள்ள மெள்ளக் கழன்றுகொண்டார்கள்.

சம்புகண்டன் தனியாக விடப்பட்டார். யூப கேது அவரை வெட்டிவிட வாள் உயர்த்தியபோது, தொலைவிலிருந்து 'வேண்டாம்’ என்று உரத்துக் கத்தி, குணசுந்தரி அவனைத் தடுத்தாள். ஓடிவந்தாள். 'விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சினாள். சம்புகண்டன் தலைகுனிந்தார்.

யூபகேது சம்புகண்டனை விட்டுவிட்டு, வாளை உறையில் இட்டான். குணசுந்தரியை அணைத்துக்கொண்டான்.

''குணசுந்தரியை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள். நான் அயோத்தியின் அரசன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தகப்பனார் சத்ருக்னன். என்னுடைய பெரியப்பாவை, என் தந்தையை, இன்னும் மற்றவர்களை சுயம்வரத்துக்கு அழைக்காதது உங்கள் குற்றம். அதற்காக நீங்கள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்'' என்று கர்ஜித்தான்.

சம்புகண்டன் செய்வதறியாது, அவனது உத்தரவை ஏற்றுக் கொண்டார். ஸ்ரீராமரிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டார்.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி எளிதாக அவனை மன்னித்தார். யூபகேதுவின் வீரத்தைப் பாராட்டினார். சம்புகண்டனின் அழைப்பை ஏற்று, அவன் ஊரான காந்திப்பட்டினம் வந்தார். யூபகேதுவுக்கும் குணசுந்தரிக்கும் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.

குணசுந்தரி தன்னுடைய இல்லத்தை விட்டு வெளியே போகும் முன்பு, நாரதரை மனத்தால் நினைத்தாள். பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். கை கூப்பினாள். நாரதர் அவளுக்கு மட்டும் சூட்சுமமாகக் காட்சியளித்தார்.

''மிக்க நன்றி, மிக்க நன்றி'' என்று சொல்லிப் பாதம் பணிந்தாள். அவள் பூமியை வணங்குவதாக எல்லோரும் நினைத்துக்கொள்ள, அவள் நாரதரை நோக்கிச் சிரித்தாள். நாரதர் ஆசிர்வதித்தார். அவர்கள் எல்லோரும் கிளம்பி, அயோத்திக்குப் போனார்கள்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:36 am


நல்லவர்களை நல்லவர்களுக்கு மணம் முடிக்க, ஒரு திறமை வேண்டும். யாரால் இந்தக் காரியத்தைச் செலுத்த முடியுமோ, அவரை அந்தக் காரியத்தில் செலுத்த வேண்டும். யாருக்கு உத்தமமான நட்பும் உறவும் தேவைப்படுகிறதோ, அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மனிதர்களின் மனம் அறிந்து, அவர்களின் யோக்கியதை அறிந்து உதவி செய்வது நாரதரின் இயல்பு. நாரதரைப் போற்றி வணங்கினால், அவர் நமக்கும் உதவி செய்வார்.

பரத கண்டத்தின் தென் பகுதியில், திராவிட பூமியில், மிகச் சிறந்த நகரமாக விளங்கிற்று திருவண்ணாமலை. எல்லாக் காலமும் அது மக்களின் வருகையால், விழாக்களின் சிறப்பால் மிக உன்னதமான இடமாக விளங்கிற்று.

கோயிலில் மட்டுமல்லாது, அந்தக் கோயிலை ஒட்டி இருக்கின்ற மலையையும் மக்கள் தெய்வமென வணங்கினார்கள். சிவனின் ரூபம் எனக் கும்பிட்டார்கள். அதைச் சுற்றி வருவதே மிகப் பெரிய பூஜை என கிரிவலம் வந்தார்கள்.

அந்த மலையால் ஈர்க்கப்பட்டு யோகிகளும், தபஸ்விகளும், சாதுக்களும், சித்த புருஷர்களும் எல்லாக் காலத்திலும் இடையறாது வந்து சரணடைந்தார்கள். தான- தர்மங்களுக்குப் பெயர் பெற்ற ஊராக அது விளங்கிற்று. 'திருவண்ணாமலையில் பிறந்தாலே முக்தி’ என்று சொற்றொடர் ஏற்பட்டது. அந்த ஊரில் குடியிருக்க நல்லவர்கள் அதிகம் விரும்பினார்கள்.

அந்த ஊரின் அரசனுக்குப் பெயர் வல்லாள மகாராஜன். மிகச் சிறந்த அரசனாக, படைபலம் மிக்கவனாக, ஒழுக்கம் உள்ளவனாக, கூர்மையான அறிவு மிக்கவனாக, கருணை மிக்கவனாக, அழகனாக, திடகாத்திரனாக, பண்புள்ளவனாக, பணிவுள்ளவனாக விளங்கினான். அவனுக்கு மக்கட்பேறு இல்லை. தனக்குப் பிறகு தன் தேசத்தை ஆட்சி செய்ய வாரிசு இல்லையே என்று அவன் கவலைப்பட்டான். அதற்காக அவன் வெள்ளை நிறமுள்ள அன்னக்கொடியை ஏற்றி, யார் எது கேட்டாலும் கொடுப்பது என்ற கொள்கையோடு இடையறாது தான- தர்மங்கள் செய்து வந்தான். குறிப்பாக சாதுக்களை, சிவபக்தர்களை அதிகம் கொண்டாடினான்.

வடக்கேயிருந்து தெற்கு நோக்கிப் பயணப்பட்டு ராமேஸ்வரம் போவதற்கு முன்பு, திருவண்ணாமலையில் தங்கி, சிவ பூஜை செய்கின்ற பெரியோர்களை மிகக் கவனமாக பார்த்துக்கொண்டான். யாருடைய அருட்பார்வையிலாவது தனது வேதனை விலகி, தனக்கு நல்லதொரு ஆண் மகவு பிறக்காதா என்று ஏங்கினான்.

அவனுடைய ஆட்சியின் திறத்தால், ஜனங்கள் குதூகலமாக இருந்தார்கள். ஜனங்கள் குதூகலமாக இருந்ததால், சிவ பூஜைகள் அற்புதமாக நடந்தன. பூஜைகள் சரிவர நடந்ததால், அந்த இடம் பிரகாசமாக இருந்தது. அந்த இடம் பிரகாசமாக இருந்ததால், தேவர்கள் அடிக்கடி தரையிறங்கும் இடமாக இருந்தது. தேவர்கள் வருகையால், அந்த ஊரின் புனிதத்தன்மை மேலும் மேலும் பிரகாசித்தது. அந்த பிரகாசத்தால் நாரத முனி ஈர்க்கப்பட்டார்.

'ஆஹா! இவ்வளவு பிரகாசமாக இரவு- பகலெல்லாம் ஒளிர்கின்ற இடமாக, இதமான சூழ்நிலையோடு, நல்ல வாசனையோடு, நல்ல அதிர்வோடு பரத கண்டத்தில் ஒரு நகரம் இருக்கிறதே..! வேறு எந்த நகரமும் இவ்வளவு சிறப்பாக இல்லையே!’ என்ற வியப்போடு நாரத மகரிஷி அங்கு வந்து இறங்கினார். அந்தப் பிரகாசத்துக்கு யார் காரணம் என்பதையும், இந்த அத்தனைச் சிறப்புக்கும் உரியவன் திருவண்ணாமலையை ஆளும் வல்லாள மகாராஜன் என்பதையும் புரிந்துகொண்டார். ஒரு சாதாரண சாதுவைப் போல உருவெடுத்து, அவனிடம் வந்து பேச்சுக் கொடுத்தார்.

''இந்தக் காலத்தில் எந்த அரசன் அன்னக் கொடி ஏற்றி, விதம் விதமான தான- தர்மங்கள் செய்கிறான்! ஓர் அற்புதமான க்ஷேத்திரத்தை நீ இன்னும் பிரகாசமாக்கிக்கொண்டு இருக்கிறாய். உன்னுடைய ஆட்சியால் இந்த இடம் தேவர்கள் வந்து தங்குகின்ற இடமாக இருக்கிறது. இதனால், உன்னுடைய ஆட்சியில் எந்தத் துன்பமும் இல்லை; அகால மரணம் இல்லை; நோய் இல்லை; வறுமை இல்லை; கோபம் இல்லை; பொறாமை இல்லை. எல்லா மக்களும் எல்லாருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார்கள். நீ வாரி வழங்குவதைப் பார்த்து, மக்களும் தங்களிடம் இருக்கின்ற தொகையை மனமகிழ்ச்சியோடு தானம் செய்து, சிறப்பாக வாழ்கிறார்கள். அப்படி தானம் வழங்கியதால் இங்குள்ள சாதுக்களும், தவசீலர்களும் இந்த நகரத்தை ஆசிர்வதிக்கிறார்கள். இந்த நகரத்தில் எந்தக் குறையும் இல்லை. மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காமதேனுவின் புல்வெளியாக இந்த நகரம் இருக்கிறது!'' என்று பல்வேறு விதமாகப் போற்றிப் புகழ்ந்தார் நாரதர்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:36 am


ஒளிரும் கண்களும், கூரிய மூக்கும், நெடுநெடு உயரமும், மெல்லிய உடம்பும் கொண்ட அந்த சாதுவின் தோற்றம் கண்டு ஈர்க்கப்பட்ட வல்லாள மகாராஜன் கை கூப்பி வணங்கினான்; வலம் வந்து நமஸ்கரித்தான்.

''உங்கள் வாக்கு என் காதில் தேனாகப் பாய்கிறது. ஆனால், இவையெல்லாவற்றுக்கும் நான் காரணம் இல்லை. இது சிவஸ்தலம். இங்கு ஆட்சி செய்வது சிவனே அன்றி, வேறு எவரும் அல்ல! சிவன்தான் இங்கு சகலமும் நடத்துகிறார். நான் அவருக்குப் பணியாளாக இருந்து இந்த அரச பதவியை ஏற்றிருக்கிறேன். எனவே, நீங்கள் புகழ்வது என்றால், என்னைப் புகழாதீர்கள். சிவபெருமானை ஸ்தோத்திரம் செய்யுங்கள்'' என்று சொன்னான்.

அவனை நாரதர் கூர்ந்து கவனித்தார். 'இதற்குக் காரணம் நான் இல்லை. கடவுள்’ என்ற வாக்கியம் மனப்பூர்வமாகச் சொல்லப் பட்டால், அந்த த்வனி வேறு விதமாக வெளிப்படும். ஆனால், இவன் குரலில் கர்வம் ததும்பியிருக்கிறது. தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கிறது. அப்படிச் சொல்வது நாகரிகமாக இருக்காது என்பதால், அவையடக்கமாகப் பேசுகிறான். பணிவுள்ளவன் போன்று நடிக்கிறான். இவன் நல்லவன்தான். ஆனாலும், இவன் தன்னாலேயே எல்லாம் மிகத் திறம்பட நடத்தப்படுகிறது என்று உள்ளூர ஒரு கர்வத்தோடு இருக்கிறான். இவனுக்கு மெல்லியதாய் ஒரு பாடம் சொல்லிக் கொடுப்பது, இவனை இன்னும் உச்சத்தில் கொண்டு வந்து வைக்கும். இவனை உலகம் அறியச் செய்யும். பூமி உள்ளவரை

இவன் பெயர் நிலைக்கச் செய்யும் சூரிய- சந்திரர் உள்ள வரையிலும் இவனைப் பற்றிச் சரித்திரம் பேசும்.இவனது கர்வத்தை அழிப்பதோடு, இவனது சிறப்பைக் கொண்டாடுகிற ஒரு விஷயத்தையும் செய்யவேண்டும் என்று நாரதர் தீர்மானித்தார். அரசனை ஆசீர்வதித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.

நேராகக் கயிலையை அடைந்து, சிவனாரை வணங்கினார். நாராயணனைப் பற்றிப் புகழ்ந்து பாடினார். சிவன் அகம் மலர, அந்தப் பாடலைச் செவிமடுத்தார்.

''வாருங்கள். என்ன வேண்டும்?'' என்று விசாரித்தார்.

''அன்னக்கொடி ஏற்றி உங்கள் பெயரைச் சொல்லி, திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜா இடையறாது தான- தர்மங்கள் செய்து வருகிறான். பெரிய யாகங்கள் செய்வதைவிட, விக்கிரகங்கள் வைத்துப் பூஜை செய்வதைவிட, பெரிதாய்க் கோயில் கட்டுவதைவிட... வந்தவர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்து, உடை கொடுத்து, தங்க இடம் கொடுத்து, களைப்பாறுவதற்கு வசதி செய்து கொடுத்து, வழிப்போக்கரை தெய்வமாகக் கொண்டாடுகிற அவனது இந்தச் செயல் மிகச் சிறப் பாக இருக்கிறது. எல்லா யாகத்தையும்விட மிக உயர்வாக இருக்கிறது. சிவ பூஜையிலேயே மிகச் சிறந்த விஷயமாக இருக்கிறது. இந்த பூஜையால் அந்தப் பிரதேசம் முழுவதும் பிரகாசமாக இருக்கிறது. அந்த அரசனுக்கு ஒரே ஒரு குறை. குழந்தை இல்லை. வாரிசு இல்லை. தன்னுடைய தேசத்தைத் தொடர்ந்து சீரும் சிறப்புமாக ஆட்சி செய்ய ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்புகிறான். நீங்கள் அவனை ஆசீர்வதிக்கவேண்டும்'' என்று நாரதர் சொன்னதும், சிவ பெருமான் கண்களை மூடிக்கொண்டார். பிரகாசமான புன்னகை அவர் முகத்தில் மின்னியது.

எதற்கு வாரிசு? தனக்குக் குழந்தை வேண்டுமென்று ஒருவன் ஏன் நினைக்கிறான்? தன்னுடைய நல்ல செயலை, தனக்கு வயதான பிறகு அல்லது தன் இறப்புக்குப் பிறகு

தன் மகன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுதானே? வல்லாள மகாராஜாவுக்குக் குழந்தை இல்லாது போனால் என்ன? அவன் செய்த தான- தர்மத்தை அவன் மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டார்கள். அரசன் செய்வது போல வாரி வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி தர்மத்துக்கு என்று முடிவு செய்துவிட்டார்கள். எனவே, இவனுக்குப் பிள்ளை இல்லை என்ற குறை, இவன் ஆதரித்து வளர்த்த இவனது குடிமக்களாலேயே தீரும். பிறகு, மகன் எதற்கு? தன் உறவினர்களைப் பார்த்துக் கொள்ளவா? அதையும் இவன் ஊரே செய்யும். தான் இறந்த பிறகு, தனக்கு நீர் வார்க்கவேண்டும், தனக்கு ஆத்ம சுகம் அளிக்கின்ற தர்ப்பணம் தரவேண்டும் என்ற காரணமாக இருக்குமோ? அதற்குத்தான் ஓர் ஆண் மகன் வாரிசு தேடுகிறானோ என்று யோசிக்க, அவர் புன்னகை மேலும் கூடிற்று.

வல்லாள மகாராஜனுக்கு அருள் செய்வதென்று தீர்மானித்துவிட்டார். ஆனால், நாரதர் அவனிடத்தில் ஏதோ குறை கண்டுபிடித்திருக்கிறார் போலிருக்கிறதே என்பதையும் புரிந்துகொண்டார். 'சரி... அது, குறையல்ல; ஒரு சிறிய கறை. அதையும் துடைத்து எறிந்துவிடுவோம்’ என நினைத்தவராய், ''நாம் திருவண்ணாமலைக்குக் கிளம்பு கிறோம்'' என்று நாரதரிடம் சொன்னார். நாரதர் மிகுந்த மகிழ்ச்சியோடு கைகூப்பினார்.

தனது பூதகணங்களோடு திருவண்ணாமலையில் வந்திறங்கினார் சிவன்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:37 am


சிவனடியார் ரூபத்தில் சிவனார் வந்திறங்கியதும், திருவண்ணாமலை நகரமே பிரகாசமாயிற்று. வல்லாள அரசன் பரபரப்பானான். ''யார் வந்திருப்பது?'' என்று விசாரிக்கச் சொன்னான். வந்தவரை முறைப்படி வரவேற்று உபசரிக்கச் சொன்னான். அவனே வாசலுக்கு விரைந்து வந்தான். சிவனடியார் வருவது கண்டு, காலில் விழுந்து வணங்கினான். அவரைக் கைப்பிடித்துத் தன் அரண்மனைக்குள் அழைத்துப்போய் உட்கார வைத்தான். அவர் பாதங்கள் குளிர்விக்கப்பட்டன.

உடம்பு சுத்தமாகத் துடைக்கப்பட்டது. வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டன. குடிப்பதற்கு மோரும் இளநீரும், சுவையான பானங்களும், உணவும் தரப்பட்டன.

கம்பீரமான ஆசனத்தில் அமர்ந்த சிவனார், மனம் குளிர வல்லாள மகாராஜனை ஆசீர்வதித்தார்.

''மிக அற்புதமாக தான தர்மங்கள் செய்கிறாய் என்று கேள்விப்பட்டேன். அதன் பொருட்டே இந்தப் பக்கம் வந்தேன். நான் நினைத்ததைவிட மிகச் சிறப்பாக உன் தேசம் இருக்கிறது. மிகச் சீரிய முறையில் தான தர்மங்கள் செய்கிறாய். நீ செய்யும் தொண்டுகள் உன் தேசத்தைச் சிறக்கச் செய்கின்றன. மனித இனத்துக்கே நீ திலகமாகத் திகழ்கிறாய். நீ வாழ்க!'' என்று ஆசீர்வதித்தார்.

சிவனடியாராக வந்த சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் வல்லாள மகாராஜன் சந்தோஷம் அடைந்தான்.

''உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? சொல்லுங்கள்; செய்து தருகிறேன்!'' என்று வற்புறுத்தினான்.

''எனக்கு ஒரு தேவை இருக்கிறது. ஆனால், அதை உன்னிடம் எப்படிக் கேட்பது என்று தயக்கமாக உள்ளது!'' என்றார் சிவனடியார்.

''என்னிடம் இல்லாததையா கேட்கப் போகிறீர்? இந்தத் தேசத்தில் என்ன இருக்கிறதோ, எதுவானாலும் கேளுங்கள்; அதை உங்களுக்குத் தர நான் சித்தமாக இருக்கிறேன். என் அரச பதவியையும்கூட உங்களுக்குத் தர நான் ஆவலாக இருக்கிறேன்'' என்று பணிவுடன் சொன்னான் அரசன்.

''அரச பதவியா? எனக்கா? அதெல்லாம் வேண்டாம். நான் கேட்பது மிகச் சாதாரணமான விஷயம். ஆனால், ஒரு மன்னனிடம் போய் இதை யாசிப்பதா என்று தெரியவில்லை.''

''என்னால் கொடுக்க முடிவதாக இருந்தால், அதைக் கொடுப்பது என் கடமை. தயக்கமின்றிக் கூறுங்கள்; என்ன வேண்டும்?''

''நான் பரதகண்டம் முழுவதும் சஞ்சரித்து வருகிறேன். இரவு, பகலாக நடக்கிறேன். கடும் தவங்கள் செய்கிறேன். கண் மூடி உள்ளுக்குள் ஆழ்ந்துவிடுகிறேன். சிலசமயம் நாள் கணக்கில் உணவு, உறக்கம் இல்லாது ஓர் இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறேன். இதனால் உடம்பு சூடு அதிகரிக்கிறது. என்னுடைய ஜீவ சக்தி இறுகி, உடம்பில் ஒரு வாதையை ஏற்படுத்துகிறது. எனவே, அதை வெளியேற்றுவதற்கான உபாயம் வேண்டும்.''

''என்ன உபாயம்?''

''பொதுமகளிர் வேண்டும். அவர்களோடு கூடி இன்பம் பெறுவதால், உடம்பின் சூடு குறைந்து, நான் நன்கு தூங்கி எழுந்திருக்க முடியும்; நன்கு உணவு உண்ண முடியும். இதனால் என் உடம்பு பழைய நிலைக்கு வரும்; பழைய சுறுசுறுப்பைப் பெறும்...''

''அவ்வளவுதானே... நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன். மிகச் சிறந்த கணிகை ஒருத்தியை உங்களுக்குக் கொண்டு வரச் சொல்லுகிறேன்'' என்றான் அரசன். அவ்வாறே உத்தரவிட்டான்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:37 am


ஆனால், திருவண்ணாமலையில் அவன் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் உள்ள கணிகையர் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற தகவல் அவனுக்கு எட்டியது. எந்தக் கணிகையும் அதை மீறுவதற்குத் தயாராக இல்லை. ''இரவு வருகிறேன் என்று சொல்லி, அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டார். அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது அழகல்ல! வருபவர் யாராயினும் அவரை ஏற்பது எங்கள் கடமை. எனவே, மன்னிக்கவும்... அரச உத்தரவே ஆனாலும், எங்கள் வாக்கினை மீறி, வருவதற்கு இயலாது!'' என்று கணிகையர் அத்தனைப்பேருமே மறுத்துவிட்டார்கள். தன்னைச் சோதிப்பதற்காக சிவனடியார் ரூபத்தில் வந்துள்ள சிவனாரின் ஏற்பாடே இது; அவரின் பூத கணங்களே மானிட வடிவில் சென்று அத்தனைக் கணிகையரையும் ஏற்பாடு செய்துகொண்டுள்ளனர் என்கிற விஷயம் அரசனுக்குத் தெரியாது.

கணிகையர்கள் சொன்னது அரசனுக்கு நியாயமாகவே பட்டது. எனவே, அவர்களை அவன் வற்புறுத்தவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தான். இரவு நேரம் நெருங்கியது. சிவனடியார் காத்திருக்கிறார் என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. 'எதுவானாலும் நிறைவேற்றித் தருவதாக வாக்குக் கொடுத்துவிட்டோமே, எதிர்பாராமல் இப்படியரு சிக்கல் நேர்ந்ததே, இப்போது என்ன செய்வது’ என்று தெரியாமல் தடுமாறினான்.

அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார் கள். வல்லம்மை, சல்லம்மை என்பது அவர்களின் பெயர்கள். அரசனுடைய கவலை அறிந்து, அவர்களும் கவலைகொண்டனர். அரசனின் இரண்டாவது மனைவியான சல்லம்மை அரசனிடம் வந்தாள். ''உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில், உங்கள் துயரம் தீர்க்க நான் ஓர் உபாயம் சொல்கிறேன். இங்கு கணிகை எவரும் கிடைக்கவில்லையெனில், சிவனடியாருக்குக் கணிகையாக நான் போகிறேன். இன்று இரவு அவரோடு நான் இருக்கிறேன். அவரை அமைதிப்படுத்துகிறேன். இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஆனால், நீங்கள் மனப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும்'' என்று கை கூப்பினாள்.

''எனக்கு உயிர் கொடுத்தாய், தோழி! எது குறித்து எனக்குக் கெடுதல் வந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருக்கும் நேரத்தில், என் தேசத்துக்கு வந்த சிவனடியார் வைத்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் வாக்குத் தவறிவிடுவேனோ என்று துக்கப் பட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில், நீ உதவி செய்ய முன்வருகிறாய். எனக்கு மிகுந்த சந்தோஷம்; சம்மதம். என்னோடு, வா!'' என்று அவளை அழைத்துக்கொண்டு சிவனடியாரிடம் போனான்.

''என்னுடைய தேசத்திலேயே மிக அழகான பெண் இவள். இன்று இரவு இவள் உங்களை மகிழ்விப்பாள். நான் விடைபெறுகிறேன்'' என்று கை கூப்பி வணங்கிவிட்டு, வெளியேறினான்.

''நான் போய் அலங்கரித்துக் கொண்டு வருகிறேன்'' என்று சிவனடியாரிடம் சல்லம்மை உத்தரவு பெற்றுக்கொண்டு, விரைவாக தன் அந்தப்புரம் சென்றாள். நன்கு குளித்து, வாசனைத் திரவியங்கள் பூசிக்கொண்டு, புத்தாடை உடுத்தி, திலகம் இட்டு, மிக அழகாகத் தன்னை ஒப்பனை செய்துகொண்டு, அவர் இருப்பிடம் போனாள்.

சிவனடியார் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மெல்ல விசிறிவிட்டாள். அவர் பாதங்களை இதமாகப் பிடித்து விட்டாள். இரவு நெருங்கியது. எழுப்ப முயன்றாள். அவர் எழுந்திருக்கவில்லை. அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தாள். அப்போதும் எழுந்திருக்கவில்லை.

'இப்போது என்ன செய்வது? இவர் எழுந்து சந்தோஷம் அடைந்தால்தானே என் கணவர் இவருக்குக் கொடுத்த வாக்கு நிறைவேறினதாக அர்த்தம்!’ என நினைத்தவளாக, சிவனடியாரை ஆரத் தழுவிக்கொண்டாள். கன்னங்களில் முத்தமிட்டாள். சட்டென்று அந்தச் சிவனடியார் பச்சிளம் குழந்தையாக மாறிப் போனார். சல்லம்மை திடுக்கிட்டாள். அந்தக் குழந்தையை வாரியெடுத்து அணைத்துக் கொண்டாள்.

''என்ன இது மாயம்! வந்தவர் சிவனடியார் அல்லவா? அந்தச் சிவனே இவர்தானோ?'' என்று திகைத்தாள். உடனே, அரசனை அழைத்து வர ஆள் அனுப்பினாள். அரசன் ஓடோடி வந்தான். குழந்தையைப் பார்த்தான். வாரித் தழுவிக் கொண்டான்.

''என் குறை தீர்க்க நீரே குழந்தையாக வந்தீரா? எனக்கு மகனாக வந்தீரா? வாரும், வாரும்!'' எனக் குழந்தையை முத்த மாரி பொழிந்தான். மூத்த மனைவியையும் அழைத்து, அவள் மடியிலும் குழந்தையைப் போட்டான். அவர்கள் மூவரும் சந்தோஷத்தின் எல்லையைத் தொட்டார்கள். தங்களைச் சோதிக்க சிவபெருமானே வந்ததைப் புரிந்துகொண்டார்கள். தங்களுக்கு மகன் சிவன் என்ற பெருமையை அடைந்தார்கள்.

சட்டென்று அந்தக் குழந்தை மறைந்தது. அவர்கள் துயரமுற்றார்கள். ''ஏன் மறைந்துவிட்டீர்கள்?'' என்று கதறினார்கள். விம்மி விம்மி அழுதார்கள்.

சிவனார் மனமிரங்கி, அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:37 am


''வாழையடி வாழையாய் என் வம்சம் தழைக்க எனக்கு ஒரு மகன் வேண்டும். இதுவே என் பிரார்த்தனை!'' என்று அரசன் கை கூப்பிக் கேட்க, சிவனார் சிரித்தார்.

''உனக்கு மகனாக நாமே பிறந்தோம். உன் மனைவியர் எமக்குத் தாயானார்கள். உன்னால் அள்ளியெடுத்து அணைக்கப்பட்டோம். எனவே வல்லாளா, நீ வருந்தாதே! உன் அரசு மிகச் சிறப்பாக ஆட்சி செய்யப்படும். உனக்குப் பின்னரும் நல்லவர்கள் இங்கே பிறந்து, வளர்ந்து, இந்தப் பகுதியை நல்ல முறையில் ஆட்சி செய்வார்கள். எனவே, உனது தேசத்தைப் பற்றிக் கவலைப்படாதே!

உனக்கு மகனாக நான் பிறந்ததால், நீ இறந்த பின்பு உனக்குச் செய்யவேண்டிய நீத்தார் கடனை நானே செய்வேன். நீ என்னிடத்தில் வந்து சேர்ந்துவிட்டாய். எனவே, உனக்கு நீத்தார் கடனே அவசியம் இல்லை. ஆனாலும், உலகத்தாருக்கு உன் புகழையும் பெருமையையும் தெரிவிக்கவேண்டி, உன் சரித்திரத்தைக் காலாகாலமாய் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டி, ஒவ்வொரு வருடமும் நீ இறந்த திதி அன்று நானே குளக்கரையில் உனக்குத் தர்ப்பணம் செய்வேன்'' என்றார்.

இதுவரை யாரும் பெறாத ஓர் உன்னதமான நிலையை வல்லாள மகாராஜன் அடைந்தான். கடவுளே அவனுக்கு நீர் தாகம் தணிக்கின்ற தர்ப்பணம் செய்கிற காரியம் இன்றளவும் நடைபெற்று வருகிறது. நாரதருடைய யோசனைதான் அவனை இந்த உச்சநிலைக்குக் கொண்டு போயிற்று; அவருடைய முயற்சிதான் அவனைச் சிறக்க வைத்தது.

ஒருவர் நல்லவராக இருந்தால் போதும்; முனிவர்களும், யோகிகளும், தவச்சீலர்களும், தேவர்களும் அவனுக்கு அருகே வந்து, அவனை மேலும் உயர்த்துவார்கள். உலகம் முழுவதும் அவன் புகழைப் பரப்புவார்கள்.

கீழே ஏதோ ஒரு நல்ல மனம் சஞ்சலம் அடைந்து கிடக்கிறதே. மஹதி யாழ் மெள்ள ஸ்ருதி கலைகிறதே. தனக்கும் அந்த சஞ்சல உணர்வு ஏற்படுகிறதே. யார் வருத்தப்படுவது? நாரதர், வருத்தப்படும் இடம் நோக்கி மெள்ள நகர்ந்தார்.

அவர், உணர்வுமயமானவர். உன்னத புருஷர். மற்றவரின் துன்பம் எங்கிருந்தாலும் அவருக்குத் தெரியும். மனம் ஒருமித்து யார் என்று விசாரித்தால், எந்த இடத்தில் துக்கம் இருக்கிறதோ அங்கு போய்ச் சேர முடியும். நாரதர், பிரம்மாவின் மகன்.படைத்தவரின் பிள்ளை. எனவே, அவருக்கு விசேஷ குணங்கள் இருந்தன. நல்லவர்கள் வேதனைப் படக்கூடாது என்ற நல்ல மனம் இருக்கும்போது, இந்த மாதிரியான நகர்வுகள் எல்லாம் சாத்தியமாகின்றன. உண்மையாக மற்றவருக்காக அக்கறைப்படும்போது, எது வேண்டுமானாலும் செய்கின்ற திறன் வந்துவிடுகிறது. அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை.

நாரதர் பூமிக்கு அருகே வந்ததும் சஞ்சலப்படுபவர் வியாச மகரிஷி என்று தெரிந்துபோயிற்று. 'வியாசருக்கா சஞ்சலம்? மகா ஞானியாயிற்றே! இப்பேர்ப்பட்ட ஞானிகள் எல்லாம் சஞ்சலப்பட்டால் பூமியில் பயிர்ப் பச்சைகள் நன்கு வளராதே. மக்களால் சந்தோஷமாக இருக்க முடியாதே. என்ன கவலை? என்ன காரணம்? யார் துன்புறுத்துகிறார்கள்?’ அவர் இன்னும் நெருக்கமாக வியாசரிடம் வந்து சேர்ந்தார். அவருடைய ஆசிரமத்தில் இறங்கினார். மெள்ள நடந்தார். குனிந்து வணக்கம் செய்தார். கோவிந்த நாமாவளியைப் பாடினார். வியாசமகரிஷியும் கை கூப்பி நாரதரை வரவேற்றார். இனிமையான குரலில் நாரதர் பாடுவதைக் காது குளிரக் கேட்டார். மறுபடியும் வணக்கம் சொன்னார்.

''என்ன குரல், எவ்வளவு அமிர்தமான கானம்!'' என்று சிலாகித்தார்.

''ஏதோ கவலையாக இருப்பதுபோல் தெரிந்தது. அதனால்தான் காரணம் கேட்க வந்தேன். தவறாயின் மன்னிக்க'' என்று மிகுந்த விநயத்துடன் நாரதர் பேசினார்.

''உண்மை. முக்காலமும் அறிந்த ஞானியான உங்களுக்கு இந்த சாதாரண முனிவனின் சஞ்சலம் தெரிந்துவிட்டது.

நான் வேதங்களைத் தொகுத்து எழுதினேன். அனாதியாக பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்ற அந்தச் சொற்றொடர்களை செவிமடுத்து, நான்கு பாகங்களாகப் பிரித்துத் தொகுத்து முடித்தேன். மகாபாரத காவியம் எழுதினேன். இந்த பரத கண்டத்தில் நடந்த மிகப் பெரிய போரை, அதற்குக் காரணமான விஷயங்களைத் தொகுத்து எழுதினேன்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:38 am


இந்தப் போரின் காரணகர்த்தாவான கிருஷ்ணனையும் நான் உயர்த்தி எழுதினேன். நன்கு எழுதியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எழுதியதை மறுபடியும் படித்துப் பார்த்தால் திருப்தி உண்டாகிறது. எந்தத் திருத்தமும் செய்யத் தேவையில்லை. தானாகவே மகாபாரதம் செம்மையாக வந்துவிட்டது. வேத விஷயங்கள் நல்ல அடுக்காக உட்கார்ந்து விட்டன என்று தோன்றுகிறது. நன்கு செய்திருக்கிறோம் என்ற நிறைவு ஏற்பட்டாலும், இன்னும் ஏதோ ஒன்று நடைபெறவில்லை என்று தோன்றுகிறது. இவை இரண்டும் செய்வதற்காக மட்டும் நான் வரவில்லை. இன்னும் ஏதோ ஒன்று எழுத வேண்டும். எழுதினால்தான் என் மனம் நிம்மதி அடையும். நான் எழுதாதது என்ன? வேறு யாருடைய சரித்திரத்தை எழுத வேண்டும்? உலகம் முழுக்க சுற்ற வேண்டுமா? உலகத்தின் கதை எழுத வேண்டுமா?'' என்று வியாசர் மெள்ளக் கேட்க, நாரதர் பதில் சொன்னார்...

''பாரதத்தின் கதைதான் உலகத்தின் கதை. வேறு எதுவும் எழுதுவதற்கில்லை. நீங்கள் மிக அற்புதமாக மகாபாரதம் எழுதியிருக்கிறீர்கள். வேதங்களை நீங்கள் தொகுத்ததுதான் மிகப்பெரிய விஷயம். வேறு எந்த மனிதராலும் செய்ய முடியாததை, மிகுந்த கவனத்தோடும் பொறுப்போடும் நீங்கள் செய்திருக்கிறீர்கள். சூரிய- சந்திரர்கள் உள்ள வரையிலும் இந்த விஷயங்கள் படிக்கப்படும்.அப்போது உங்களை மனிதர்கள் கொண்டாடுவார்கள். வியாச மகரிஷியே, ஏன் உங்களுக்கு சஞ்சலம் என்பதை உங்களுக்காக நான் யோசிக்கிறேன்'' என, நாரதர் அவரையே உற்றுப் பார்த்தார்.

''என்னால் இயலவில்லை. பல காலம் முயன்று ஏதோ ஒன்று குறை எனத் தெரிகிறதே தவிர, என்னவென்று தெரியவில்லை. எனக்காக முன் வந்து நீங்களே செய்கிறீர்கள் என்றால், அது என்னுடைய நல்ல காலம். நான் செய்த புண்ணியம். என் மூத்தோர் ஆசி. அதுமட்டுமல்ல, எல்லாம் வல்ல இறைவனின் ஆணையாகத்தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்'' என்று வியாச மகரிஷி சொன்னார்.

நாரதர் வாய்விட்டுச் சிரித்தார். அவரைக் கனிவோடு பார்த்தார்.

''வியாச மகரிஷியே, கடைசியில் சொன்ன வார்த்தை அற்புதமான வார்த்தை. இது இறைவனின் கட்டளையாகத்தான் இருக்கும். ஏனெனில், இந்த வழியாக நான் போகும்போது உங்கள் சஞ்சலம் என்னைத் தொடுவானேன்? நான் அதைக் கண்டு கவலைப்பட்டு இங்கு வருவானேன்? எல்லாம் வல்ல இறைவன் என்னையும் உங்களையும் இயக்கி இருக்கிறான். அவன் இயக்கியபடியே நாம் நடந்துகொண்டிருக்கிறோம். இப்போது என்ன என்பது பற்றி யோசிப்போம்.

யார் இயக்குகிறானோ, எந்த பரந்தாமன் இந்த விஷயத்தைச் செய்கிறானோ, எது பூமியினுடைய அசைவுக்கும், வளர்வுக்கும், மாறுதலுக்கும் காரணமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம் உலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்குக் காரணமான திருமாலைப் பற்றி நீங்கள் எழுத வேண்டாமா. மகாவிஷ்ணுவின் சரிதம் சொல்ல வேண்டாமா? இவரால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்தான் மூல காரணம். இவர்தான் இங்கு பூமியினுடைய சகல அசைவுக்கும் காரணகர்த்தா. படைத்தது பிரம்மா. இங்கு பிரளயத்தில் பூமி அழிய உதவி செய்யப் போவது சிவன். ஆனால், பூமி உயிர் வாழ வேண்டுமல்லவா? இங்குள்ள ஒவ்வோர் உயிரும் அதனுடைய பக்குவத்தை அடைய வேண்டுமல்லவா? மாறுபாடு செய்ய வேண்டுமல்லவா. அந்த மாறுதலை நிகழ்த்துவது விஷ்ணு என்கிற திருமால். அவர் கதையை நீங்கள் சொல்ல வேண்டும்.

அந்தத் திருமால் இந்த பூமியில் பிறந்து பல்வேறு விதமான அவதாரங்கள் எடுத்து அதன் காரணங்களை விரிவாக சொல்லியிருக்கிறார். தன்னுடைய நிலைமையைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இங்கு, தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார். எப்போது மறுபடியும் பிறப்பார் என்ற ஏக்கத்தோடேயே பூமி இருக்கிறது. பூமியில் அவர் பிறந்து செய்த லீலைகளை நீங்கள் தொகுக்க வேண்டும். அதற்கு பாகவதம் என்று பெயரிட வேண்டும். ஆமாம், நீங்கள் பாகவதம் எழுத வேண்டும். திருமாலின் பெயரை, அவதாரங்களை வரிசைப்படுத்தி அந்தக் கதையை பூமியில் உள்ளோருக்குச் சொல்ல வேண்டும். நீங்கள் தொகுத்த வேதங்களைப் போல, நீங்கள் எழுதிய மகாபாரதம் போல இந்த பாகவதமும் இந்த உலகத்தில் சந்திரர், சூரியர் உள்ள வரை நிலைத்து நிற்கும். பாகவதம் வெறும் கதையல்ல. தர்மத்தின் சரித்திரம். சாதுக்களை ரட்சிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டவும், அவதாரங்கள் எடுக்கப்பட்டன. எது தர்மம், எது அதர்மம், அதர்மத்தின் முடிவென்ன என்று உலகம் அறிய நடத்தப்பட்ட லீலைகள் பாகவதம்.

இந்தக் குறைதான் உங்கள் மனத்தில் இருக்கிறது. இன்னும் ஏதோ எழுதவில்லையென்று இருக்கிறது. நீங்கள் யோசித்திருந்தால் தெரிந்திருக்கும். நான் வந்து இறங்கி உங்களுக்குச் சொல்லும்படியாகிவிட்டது. எனவே, வியாச முனிவரே, நல்ல நாள் பார்த்து பாகவதம் எழுதத் துவங்குங்கள்'' என்று சொல்ல, நாரதரின் கைகளைப் பற்றி வியாச முனிவர் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

''நல்லது, மிக அருமையாக வழி காட்டினீர்கள். மிகச் சிறப்பான விஷயத்தைச் சொன்னீர்கள். எனக்கு இப்போதுதான் புரிகிறது. பல அவதாரங்கள் திருமால் எடுத்திருப்பதும், பல்வேறு விதமாக இந்த உலகத்தை தீயதிலிருந்து காப்பாற்றியிருப்பதும், நல்லதை வளர்ப்பதும், அதற்காக அவர் முனைப்புடன் செயல்பட்டதும் எழுதப்பட வேண்டிய விஷயங்கள். பூமி யாரால் வாழ்கிறதோ, எவரால் வளர்கிறதோ அவரை போற்ற வேண்டியது அவசியம். நிச்சயம் செய்கிறேன்'' என்று சொன்னார்.

நாரதர் விடைபெற, சரஸ்வதி நதியில் போய் நீராடி, மனம் ஒருமித்து பாகவதம் எழுதுவதற்காக வியாச முனிவர் உட்கார்ந்தார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 3:38 am


காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். அந்த அரசர் போய் இந்த அரசர் வரலாம். அந்த மதம் நகர்ந்து, வேறு மதம் வரலாம். ஆனால் தர்மம் மாறாதது. நிலைத்து இருக்க வேண்டிய விஷயம் இது. காலம் என்பதன் பிரமாண்டத்தையும், பல்வேறு காலங்களில் பிறந்த வலிமையுள்ளோரையும் அவர்களின் நல்லது கெட்டதுகளையும் சொல்லும் கதையாக பாகவதம் அமையவேண்டும். சாதாரண ஜனங்கள் வலிமையுள்ளோரால் வேதனைப் படக்கூடாது. பூமி அமைதியாய் இருத்தல் அவசியம். அதற்காகவே அவதாரங்கள்! வியாசர் மனம் ஒருமித்தார்.

இன்று நமக்குக் கிடைக்கின்ற பாகவதத்தி னுடைய ஆணிவேர்- ஆரம்பம், நாரத மகரிஷி. எழுதியவர் வியாசராக இருந்தாலும், அந்த விளக்கைத் தூண்டியது அந்த சிறிய துரும்பு. தன்னைக் கொஞ்சமும் முன்னிலைப்படுத்தாது விளக்கு எரிவதற்கே உதவி செய்த நாரதர் இந்த பூமியின் கரும்பு!

உலகத்தில் ஜனங்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெகுதூரம் பயணப்பட்டு, நதி தீரங்களுக்குப் போய் அங்கு தங்கி, தினமும் ஸ்நானம் செய்து, ஜபம் செய்து, 'இது புண்ணிய தீர்த்தம். இப்படி நீராடுவதில் புண்ணியம் கிடைக்கிறது’ என்று சொல்கிறார்கள். அப்படியே செய்தும் வருகிறார்கள்.

உடம்பைச் சுத்தம் செய்துகொள்வது நீராட்டத்தால் முடியும். ஆனால், இந்த உடம்பைச் சுத்தம் செய்கிற நீராட்டம் மனத்தை எப்படிச் சுத்தம் செய்கிறது? எப்படிப் புண்ணியம் கிடைக்கிறது?

நாரத மகரிஷி தன் தந்தையும், படைப்புக் கடவுளுமான பிரம்மாவை நோக்கி வினவினார். கேட்ட கேள்விக்கு அப்பால் போய் சூட்சுமமான விஷயத்தை சொல்லித் தரத் தந்தைக்குத் தெரியும் என்ற தெளிவினால், மிகுந்த ஆவலு டன் வினா எழுப்பினார்.

'படைப்புக் கடவுளை யாரும் நெருங்க முடியாது; கேள்வி கேட்டு விவாதிக்க முடியாது; என்னால் நெருங்க முடியும். என் தகப்பனை நான் நெருங்குவதைப் போலவே சாதாரண மனிதர்களை யும் நான் நெருங்க முடியும். கல்விமான்களுக்கு நடுவே போய் உட்கார முடியும். தந்தை சொன்ன சூட்சுமத்தை அப்படியே உள்வாங்கி, கல்விமான்களிடமும் நல்ல மனிதர்களிடமும் பரப்பினால், அவர்கள் அதை உலகத்திலுள்ள சாதாரண ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வர். நான்முகனின் வாக்கு தேவ வாக்கு அல்லவா? அதை சாதாரண ஜனங்களும் தெரிந்துகொள்ள வேண் டும்’ என்ற தூய மனத்தோடு நாரதர் செயல்பட்டார்.

நாரதருக்குச் சாதாரண ஜனங்கள் மீது இடையறாத வாஞ்சை பொங்கிக் கொண்டே இருந்தது.

''உடலைச் சுத்தம் செய்ய மனிதர்கள் நீரில் மூழ்குகிறார்கள். உடலைச் சுத்தம் செய்வதுபோல உள்ளத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இது மிக அவசியம். உடலின் சூடு அடங்கி, மூளையின் கொதிப்பு குறைந்து, குளிர்ந்த நீர் உடம்பில் படும்போது ஏற்படும் மகிழ்ச்சி மனத்தை லேசாக்கி, அமைதியாக்கி, ஆழ்ந்து தன்னுள்ளே நோக்குவதற்கு உதவி செய்கிறது.

எவனொருவன் தனக்குள்ளே பார்க்கத் துவங்குகிறானோ, அவனுக்கு ஞானம் கைகூட வாய்ப்பு இருக்கிறது. விடியல் நேரத்தில் குளியல் செய்வது என்பது மனத்தை குளிர்விக்கின்ற ஒரு முயற்சி. இது நிச்சயம் நல்ல பயனைத் தரும். ஆனால், இது மட்டுமே போதாது. ஸ்நானங்கள் பத்து வகைப்படும். அவற்றை நான் சொல்லச் சொல்ல, மனத்திலே குறித்துக் கொள்வாயாக.

நீரில் வெறுமனே நீந்திக் குளிக்காமல், கிழக்குப் பக்க மாகப் பார்த்து மந்திரங்கள் சொல்லி, தலை முழுவதும் நனையும்படி உள்ளுக் குள்ளே மூழ்கி மேலே எழுவதும், மறுபடி மூழ்குவதும் ஒரு நல்ல விதமான ஸ்நானம். இதற்கு வாருணம் என்று பெயர்.

அக்னி ஹோத்திரத்தில் கிடைத்த சாம்பலை நெற்றியில் தரித்துக்கொள்வது, தலையில் தடவிக்கொள்வது ஆக்ஞேய ஸ்நானம். வெயில் அடிக்கும்போது மழையில் நனைவது மிக திவ்யமானது. அது திவ்ய ஸ்நானம். பசுவின் குளம்பில் கிளம்பிய புழுதி நம் உடலில் படிய நேர்ந் தால், அது வாயவ்யம் என்கிற ஸ்நானம்.

நீரில் குளிக்காமலேயே, மந்திரங்களை ஓரிடத்திலே உட்கார்ந்து ஜபிப்பது பிராம்மம் என்கிற ஸ்நானம். மேலும், துளசியில் கிடந்த நீர், சிவலிங்கத்திலிருந்து வடிந்த நீர், பசுக்களின் கொம்புகளிலிருந்து வடிந்த நீர், வேத வித்துக்களின் பாத தீர்த்தம், குரு ஸ்தானத்தில் இருக்கின்றவரின் பாத தீர்த்தம் ஆகியவற்றைத் தலையில் தெளித்துக் கொள்வதும் மிக முக்கியமான ஸ்நானங்கள்.

இவையெல்லாம் மக்களை நல்வழிப் படுத்தும் என்றாலும், மனத்தில் சிறிதளவும் ஆசைக்கு இடம் கொடுக்காமல், தனது கடமைகளை எவனொருவன் செம்மை யாகச் செய்து வருகிறானோ, அது எல்லா ஸ்நானங்களைக்காட்டிலும் மேலானதொரு ஸ்நானம்.

புனிதப்படுத்துவதுதானே ஸ்நானத்தின் குறிக்கோள்! எது மனிதனைப் புனிதப் படுத்தும்? நெல்முனையளவும் ஆசை இல்லாது அமைதியாக வாழ்கிறவன் எவனோ, அவனே மிகப்பெரிய புண்ணிய ஸ்நானம் செய்தவனாகிறான். ஆசைகளற்ற மனம் எப்போதும் புனித மாகவே இருக்கிறது; எப்போதும் குளுமையாக இருக்கிறது; எப்போதும் அமைதியாக இருக்கிறது; எப்போதும் இறைவன் அடியில் இருக்கிறது. எனவே, ஆசையற்ற மனமே மிக உன்னதமான ஸ்நானம், இதைப் பற்றி ஒரு கதை இருக்கிறது, சொல்லவா?'' - நான்முகன் விசாரிக்க, நாரதர் கை கூப்பி, ''சொல்லுங்கள்'' என்று பிரியத்துடன் கேட்டார்.




நாரதர் கதைகள்  - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக