புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_c10நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_m10நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_c10நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_m10நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_c10நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_m10நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_c10நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_m10நாய் வளர்த்தால் நோய் வருமா? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் வளர்த்தால் நோய் வருமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 12:29 pm

.

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கு மிடையே உறவானது, ஆதிகாலத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது. விலங்குகளோடு விலங்குகளாக மனிதன் வாழ்ந்த காலத்திலிருந்து இந்த பழக்கம் தொடர்ந்து இருந்து வந்திருக் கின்றது. மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களும், முன்னே ற்றங்களும் வரத் துவங்கிய பின்னர், மனிதன் மெல்ல மெல்ல விலங்குகளிடமிருந்து விலகி வாழ ஆரம்பித்தான். இருப்பினும் மனிதன் தனது பாதுகாப்பு கருதி ஓரிரு விலங்குகளை தொடர்ந்து பேணி பாதுகாத்துவந்தான். அவ்வாறு தான் விரும்பி வளர்க்கின்ற விலங்குகள் தனக்கு உபயோகமானதாகவும், தனக்கு எந்த விதத்திலும் கெடுதல் செய்யாத வண்ணமும் இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். அதன் காரண மாகத்தான் மற்ற விலங்குகளைவிட நாயையும், பூனையையும் மட்டும் விரும்பி வளர்க்க தலைப்பட்டான். காரணம் இந்த இரண்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளாக வளர்க்க தகுதியானவை என்று மனிதன் உணர்ந்தது மட்டுமல்ல, இவைகள் எந்த கெடுதலும் மனிதர்களுக்கு செய்யாது என்றும் மனி தன் நம்பினான். அதனால்தான் இவற்றை வீடுகளில் மனிதன் வளர்க்க முற்பட்டான். மேலும் நாய் வளர்ப்பது பல மனிதர்களின் சுய பாதுகாப்புக்கு ஏற்றதாக இருந்ததுகூட ஒரு காரணம் என்று குறிப்பிட வேண்டும்.

மற்ற விலங்குகளைவிட நாயை மனிதன் பெரிதும் வளர்க்க ஆசைப்பட்டதற்கு இன்னும் சில காரணங்கள்கூட உண்டு. நாயானது குறிப்பிடத்தக்க சில குணங்களைக் கொண்டிருப்பது மனிதனுக்கு பிடித்தமானதாக இருந்ததும் ஒரு காரணமாகும்.. எஜமானனின் சொல் பேச்சை கேட்கும் நாயின் சிறப்பு குணம் மனிதனின் சுயநலத்திற்கு உதவி யாக இருப்பதினாலும்தான்.

சரி... நாய் போன்ற வீட்டு விலங்குகளை செல்ல பிராணியாக வளர்ப்பதனால் மனிதர்களுக்கு நோய் வருமா என்கின்ற கேள்வியை கொஞ்சம் ஆராய்வோம்.

மனிதர்களுக்கு பலவகையான நோய்கள் வருகின்றன. இப்படி மனிதர் களுக்கு வருகின்ற பல வகையான நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்படி பலவகையான நோய்களில் அலர்ஜி பாதிப்புகளும் ஒன்று. அலர்ஜி என்பது ஒருபொருள் ஒருவருக்கு ஒத்துக் கொள்ளாததினால் ஏற்படுவதாகும். இதனைத்தான் ஒவ்வாமை என்கி;றோம். காய்கறிகளில் சில சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. குளிர்க்காற்று சிலருக்கு பாதிப்பை உண்டாக்கும். மழையில் நனைந்தால் உடனே லொக்கு லொக்கென்று இருமு வோரும் உண்டு. இதுபோலத்தான் லட்சத்தில் ஒருவருக்கு நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் முடிகளினால் சில பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ஆஸ்துமா என்பது மனிதர்களின் நுரையீரல் தொடர்புள்ள ஒரு பாதிப்பு. இந்த ஆஸ்துமா ஒரு அலர்ஜி நோயாகும். இந்த ஆஸ்துமா ஏற்பட பல ஒவ்வாமைகள் காரணமாக இருக்கின்றன. அதில் ஒன்று செல்லப் பிராணிகளின் முடிகளாகும். உதாரணத்திற்கு, ஆஸ்துமா நோயாளிகளுக்கு படுக்கை தலையணை, தரைகள், டேபிள் மேiஜகள் மேலிருக்கும் தூசிகளும், பஞ்சுகளும், தும்பட்டைகளும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். இது போலவே வாகனப் புகைகள், ஊதுபத்தி, சாம்பிராணிப் புகைகள் போன்றவைகளும், குளிர்ந்த காற்று, குளிர்ந்த நீர் போன்றவைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பூக்களின் மகரந்தத் தூள்கள், முக பவுடர்கள், மூக்குப் பொடிகள், மாவுப் பொருட்கள் போன்றவைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆக, ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் இவை இவை என்று பட்டியல் போட்டால் அவை ஐம்பதுக்கும் மேல் நீளக்கூடிய வகையில் உள்ளது. இப்படி ஒரு ஆஸ்துமா நோயாளியின் பல்வேறு விதமான, ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களில் ஒன்றுதான் செல்லப் பிராணிகளின் முடிகள்.

இப்போது சொல்லுங்கள், ஆஸ்துமா என்கின்ற நோய் அல்லது அலர்ஜி பாதிப்பு ஏற்பட செல்லப்பிராணிகள் மட்டும்தானா காரணம்? இல்லவே இல்லை. ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் அவர்களின் உடல்நலக் கேடு கருதி வீட்டு விலங்குகளான நாய், பூனையிடமிருந்து விலகி இருக்கலாம். மற்றவர்களுக்கு அதாவது ஒவ்வாமை பாதிப்பு இல்லாத எவருக்கும் நாய்களினால் நோய்கள் பெரும்பாலும் வருவதேயில்லை. இருப்பினும் நம் செல்லப்பிராணிதானே என்று நாயை விலங்கு என்பதை மறந்து மனிதர்கள் மாதிரியே பாவித்து கொஞ்சுவதும், குலாவுவதும் மடியில் போட்டு ஆலாவணை செய்வதும் கூட ஆபத்தானதே. என்ன இருந்தாலும் நாயும், பூனையும் நமது விருப்பத்திற்குரிய வளர்ப்பு பிராணியாக இருந்தாலும்கூட அவற்றிடமிருந்து ஒரு சில செ.மீ. ராவது விலகி நின்று நமது அன்பை, கருணையை அவைகளிடம் காட்டுவதே நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 12:30 pm

நாம் வீட்டு விலங்குகளாக நாய்களை வளர்ப்பதை பல காலமாக மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறு செல்லப்பிராணிகளாக வளர்க்கின்ற நாய்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாப்பதும், பராமரிப்பதும்கூட நம்மை நாமே பாதுகாப்பதற்கு ஒப்பானதாகும். சுத்தமாக பரா மரிக்கப்படாத, செல்லமாக வளர்க்கப்படாத கண்ட இடங்களில் கண்டதை தின்று வாழும் தெரு நாய்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த நாய்களால் நிச்சயமாக மனிதர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை நீங்களே அறிவீர்கள். தெருவில் போவோர் வருவோரை கடிப்பது, ஒவ்வாமைகளை ஏற்படுத்துவது அந்த தெரு நாய்களின் கழிவுகளில் இருந்து நோய்கிருமிகள் மனிதருக்கு தொற்றுவதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். ஆக செல்லப் பிராணிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், அதற்கே உரிய மருத்துவமும்- உணவு முறைகளையும் கையாண்டால் நிச்சயமாக செல்லப் பிராணிகளிட மிருந்து நமக்கு எந்த நோயும் வராது என்று திட்டவட்டமாக குறிப்பிடலாம்.

அடுத்து, செல்லப் பிராணியோ அல்லது தெரு நாயோ எதுவாயினும் நாயிடமிருந்து மனிதர்களுக்கு நோய் வருவதற்கு வாய்ப்பாக உள்ள சில விஷயங்களையும் பார்ப்போம்.

கண்ட இடங்களை கழிப்பிடங்களாக கொள்ள நமது செல்லப்பிராணிகளுக்கு நாம் இடம் தரக்கூடாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினசரி அவைகளை குறிப்பிட்ட நேரத்தில் அழைத்துச் சென்று கழிவுப்பொருட்களை அகற்ற பழக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாயின் கழிவுகளில் இருக்கும் நாயின் குடற்புழு முட்டைகள் மண்ணோடு மண்ணாக கலந்து பின்னர் விஷக்கிருமிகளாக மாறிவிடலாம். இவை மனிதர்களின் தோல் பகுதியை பாதிக்கும் தன்மையைக் கொண்டவை. மேலும் இந்த கிருமிகள் ஆஸ்துமா, இளைப்பு போன்ற நோய்களைக் கூட உருவாக்கலாம். எனவே நம்மை பாது காத்துக்கொள்ள நாயை நாம் சுகாதாரமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.

நாயை குழந்தைகளை கொஞ்சு வதுபோல வார்த்தைகளால் மட்டுமே கொஞ்ச வேண்டும். தூக்கி உச்சி முகர்ந்து அள்ளி அரவணைத்து கொஞ்சிக் குலாவு வதை கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது. நாயின் (அது எந்த நாயாக இருந்தாலும்) எச்சிலில் சிலவகை நோய்க் கிருமிகள் இருப்பதினால் நாயின் எச்சிலை வீட்டில் ஒழுக விடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. அவ்விதம் தொடர்ந்து ஒழுகினால் நல்ல கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

நாய்களின் உடம்பில் தனாசு என்னும் ஒருவகை சிறிய பூச்சிகள் உள்ளன. இவை நாயின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் தன்மையைக் கொண்டவை. இந்த பூச்சி இனங்கள் மூலமாகவும் மனிதர்களுக்கு நாயிடமிருந்து நோய் தொற்றலாம். எனவேதான் நாயிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்று சொல்கிறோம்.

வெறிநாய்க்கடி வராமலிருக்க வெறி நாய்க்கடி பாதிப்புள்ள நாயிடமிருந்து அல்லது மனிதனிடமிருந்து நாம் விலகியே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நாயோ அல்லது மனிதர்களோ அருகில் இருந்தாக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவர்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முற்காப்பு தடுப்பூசி (புரோ பைலேக்டிக் வேக்சினேசன்) போட்டுக்கொள்ள. வேண்டும். அதாவது இந்த தடுப்பூசிகளை கால அட்டவணைப்படி 6, பி.சி.பி.இ.சி. மேற் கையில் போட்டுக்கொள்ள வேண்டும்;.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக