புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
புரிதல்! I_vote_lcapபுரிதல்! I_voting_barபுரிதல்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிதல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 1:20 pm

மாலை, 7:00 மணி; பார்த்தசாரதி சுவாமி கோவில் தூணில் சாய்ந்து இருந்தார் விஸ்வநாதன். அவரையும் அறியாமல், கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

காலையில், மருமகள் பேசிய வார்த்தைகளே, நினைவில் நின்று, கண்ணீரை வரவழைத்தது.
'ஏங்க உங்க அப்பாவுக்கு, கொஞ்சமாவது அறிவு இருக்கா... ஆபீஸ் போற அவசரத்தில, நானே அரக்க பரக்க வேல செய்துகிட்டு இருக்கேன்... அந்த நேரத்தில, டீ கொண்டா, பேப்பர் வந்திருச்சா, சுடு தண்ணீர் கொடு, மாத்திரை எடுத்துத்தான்னு ஒரே இம்சை...
'மதிய நேரம் சும்மா தானே உட்காந்து இருக்காரு. சமையல் கட்டுல வந்து, சாப்பாட எடுத்து போட்டு சாப்பிட மாட்டாரா... டிபனை டைனிங் டேபில்ல வையின்னு ஒரு ஆர்டர். வீட்டுல தானே இருக்காரு, மெதுவா காபி குடிச்சிட்டு பேப்பர் பாக்க வேண்டியது தானே...' என்று, புலம்பி தள்ளினாள்.

இதை காதில் கேட்டவர் தான், பச்சை தண்ணீர் கூட குடிக்காமல், கோவிலுக்கு வந்து உட்காந்து விட்டார் விஸ்வநாதன்.
தன் நண்பர் ராகவனுக்காக காத்திருந்தார். ஆனால், மூன்று நாட்களாகவே அவர் கோவிலுக்கு வராதது உறுத்தவே, உடல் நல குறைவோ என, பயமும், கவலையும் கொண்டார்.விஸ்வநாதனும், ராகவனும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்கள். இருவரும், ஒரே ஊரில் வசிப்பதால், இவர்களது நட்பு, இன்னும் தொடர்கிறது.

இருவருக்கும் மனைவியர் இல்லை. மகன்களிடம், சிக்க வைத்து விட்டு, இருவரும் சுதந்திரமாக சென்று விட்டதாக கூறிக் கொள்வர்.
இன்றும் நண்பர் ராகவன் கோவிலுக்கு வராததால், நாளையாவது வீட்டுக்கு சென்று பார்த்து வரலாம் என, நினைத்துக் கொண்டு, வீட்டிற்கு கிளம்பிப் போனார் விஸ்வநாதன்.

காலை, 7:00 மணி; அழைப்பு மணி ஒலித்தது. டீ குடித்துக் கொண்டிருந்த ராகவன், யார் இந்த நேரத்தில் என்று யோசித்துக் கொண்டே, எழுந்து போய் கதவை திறந்தார். வெளியில் நின்றிருந்தார் விஸ்வநாதன்.
''விச்சு நீயா...'' என்று, ஆச்சரியப்பட்டவர், ''வா... வா,'' என்று கூறி, விஸ்வநாதன் கையைப் பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர வைத்தவர், உள்ளே சென்று டீ கொண்டு வந்து கொடுத்தார்.

''நான் போட்ட டீ; குடிச்சு பாத்திட்டு சொல்லு,''என்றார் ராகவன்.
அளவான இனிப்பு, இஞ்சி வாசம், டீ தூள் மணம் அருமையாய் இருந்தது.
''ரொம்ப நல்லா இருக்கு ராகவா; மூணு நாளா நீ கோவிலுக்கு வராததால, பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன். ஆமா... ஏன் வீடு ரொம்ப அமைதியா இருக்கு... மகன், மருமக, பேரப் பசங்கள காணோம். ஊருக்கு போயிட்டாங்களா, அதனால தான், கோவிலுக்கு வரலயா?'' என்று கேட்டார்.

அவர் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, பெட்ரூம் கதவை திறந்து, மகன் பாலாவும், மருமகள் கீதாவும் தூங்கி எழுந்து வந்தனர். பேரக் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். இரவில் எழுதிய நோட்டு புத்தகங்கள் சிதறிக் கிடந்தன.
''சாரிப்பா நல்லா தூங்கிட்டேன்,'' என்றாள் மருமகள் கீதா.
''எதுக்குமா சாரி... மொதல்ல நீ போய் குளிச்சிட்டு வா. டீ போட்டுக் கொடுக்கறேன்.'
வியப்பாய் இருந்தது விஸ்வநாதனுக்கு. 'மணி, 7:00 ஆயிருச்சு. இனி சமையல் முடிச்சு, ரெண்டு பேரும் எப்ப ஆபீஸ் கிளம்பறது...' என்று யோசித்தார்.

''கீதா...'' என்று, கூப்பிட்டார் ராகவன்.
''என்னப்பா...''
''இட்லி நாலு தட்டு எடுத்துட்டேன்; தேங்காய் சட்டினி அரைச்சுட்டேன். குக்கர்ல அரிசி போட்டு வச்சு இருக்கேன். சாம்பாருக்கு பருப்பை வேக வச்சு, காய்கறி நறுக்கிட்டேன். ரசத்துக்கு புளி, தக்காளி கரைச்சு வச்சு இருக்கேன். புளிப்பு, உப்பு சரியா இருக்கான்னு பாத்துக்கம்மா,'' என்றார்.

ராகவன் சொல்ல சொல்ல, விஸ்வநாதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது; அதுவும் மருமகள் கீதா, 'அப்பா' என்று கூப்பிடுவது.
அன்றைய நாளிதழை கையில் கொடுத்து, ''விச்சு இத பாத்திட்டு இரு. பத்து நிமிஷத்தில வந்துடறேன்,'' என்று சொல்லி சென்றவர், பேரக் குழந்தைகளை தயார்படுத்தி, பள்ளி வேனில் அனுப்பினார். 'தாத்தா சாய்ங்காலம் அமாவாசை கதை சொல்லணும்...' என்று சொல்லி, டாடா காட்டி சென்றனர்.

மகனுக்கும், மருமகளுக்கும் சிறு சிறு உதவிகள் செய்தார். மதியத்துக்கு, டிபன் பாக்சில் உணவு போட்டு விட்டார். கேனில் தண்ணீர் ஊற்றி, மருமகளின் ஹேண்ட் பேக்கில் வைத்தார்.

அலுவலகத்திற்கு கிளம்பி வெளியில் வந்த கீதா, ''அப்பா... சாப்பாடு டைனிங் டேபிள்ல வச்சு இருக்கேன்; காலைக்கும், மதியத்துக்கும் சாப்பிட மாத்திரையும், தனித்தனியா எடுத்து வச்சு இருக்கேன். வீட்டுல இனி, ஒரு வேலையும் செய்யக் கூடாது. மதியம் நல்லா படுத்து தூங்கணும். மூட்டு வலி ஆயின்மென்டு தீந்திடுச்சுன்னு சொன்னீங்க... வர்றப்ப, நானே வாங்கிட்டு வர்றேன்பா,'' என்றவள், விஸ்வநாதனைப் பார்த்து, ''அங்கிள் நீங்க கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும்,'' என்று சொல்லி, கணவனுடன் சென்றாள்.

அவர்கள் அலுவலகம் புறப்பட்டு சென்ற பின், விஸ்வநதான், ''ராகவா... எனக்கு ஆச்சரியமாக இருக்கு. உம் மருமக, உன்னை அப்பான்னு கூப்பிடறது,''என்றார்.
''ஆமா, விச்சு. எனக்கு பெண் குழந்தைகன்னா, ரொம்ப இஷ்டம்ன்னு உனக்கு தெரியும்ல்லே... ஆனா, பாலாவோட சரி. மறுபடி குழந்தை பாக்கியத்த அந்த கடவுள் எனக்கு கொடுக்கல. வர்ற மருமகள, மகளா நினைச்சுக்குவோம்ன்னு என் மனைவி சொன்னா. அதேபோல, கடவுள் ஒரு நல்ல மகள கொடுத்துட்டார். கீதா இந்த வீட்டுக்கு மருமகளா வந்த மறுநாளே, 'மாமா, நான் அப்பா இல்லாம வளந்தவ; இனி மேல், நீங்க தான் எல்லாம். உங்கள அப்பான்னு தான், கூப்பிட போறேன்'னு சொன்னா. இந்த எட்டு வருஷமா, அப்பான்னு தான் கூப்பிடுறா. என் மனைவி இறந்த பின், பாலாவும், கீதாவும் என் மேலே ரொம்ப அன்பா, என் மனைவி இல்லேங்கிற குறை தெரியாம பாத்துக்குறாங்க.

''விஸ்வநாதா... இத்தனை கஷ்டப்பட்டு ஓடி ஓடி சம்பாதிக்கிறாங்களே எதுக்காக? நம்ம மகன், பேரப் புள்ளைங்க, நல்லா இருக்கணும்ன்னு தானே. இப்ப ஆபிசுக்கு கிளம்பி போறவங்க சாயங்காலம், 6:00 மணிக்கு தான் வருவாங்க. அது வரைக்கும், நாம நல்ல ஓய்வு எடுக்கலாம்; தூங்கலாம். அதனால, அவங்க கிளம்பறப்ப, நம்மால முடிஞ்ச சின்ன சின்ன உதவிகள செஞ்சா, அவங்களுக்கு உதவியா இருக்கும்; நமக்கும் சந்தோஷமாக இருக்கும்,'' என்றார் ராகவன்.

தன்னை மருமகள் திட்டியதில் தவறே இல்லை என்று உணர்ந்த விஸ்வநாதன், தானும், இது போல் மருமகளுக்கு உதவி செய்ய வேண்டும் என, முடிவெடுத்தார்.
''சரி ராகவா, நா கிளம்பறேன். சாய்ங்காலம் கோவில்ல பாக்கலாம்,''என்றார் விஸ்வநாதன்.
''இரு விச்சு, சாப்பிட்டு போகலாம்.''

''வேண்டாம் ராகவா, அங்க, என் மக தனியா வேலை செய்திட்டு இருப்பா. இனிமே, நானும் உன்ன மாதிரி சின்ன சின்ன உதவிகள செய்யப் போறேன், '' என்று சொல்லி சிரித்தார் விஸ்வநாதன்.
அங்கு, ஒரு புரிதல் ஆரம்பம் ஆனது.

மலர்விழி




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 22, 2014 4:37 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக