புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2014 காமன்வெல்த் போட்டிகள்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா
இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா
2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
நான்கு முறை
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அதிக முறை (4) நடத்திய நாடுகள் வரிசையில், ஆஸ்திரேலியா (1938, 62, 82, 2006), கனடா (1930, 54, 78, 94) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. வரும் 2018ல் நடக்கவுள்ள 21வது காமன்வெல்த் விளையாட்டை நடத்தும் வாய்ப்பு 5வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளது.
* நியூசிலாந்து (1950, 74, 90) மூன்று முறை நடத்தியது. ஸ்காட்லாந்து (1970, 86), இங்கிலாந்து (1934, 2002) தலா 2 முறை நடத்தின. இம்முறை வாய்ப்பு பெற்றுள்ள ஸ்காட்லாந்து 3வது முறையாக நடத்துகிறது.
* இந்தியா (2010), மலேசியா (1998), ஜமைக்கா (1966), வேல்ஸ் (19580 நாடுகள் தலா ஒரு முறை நடத்தின.
மூன்று பிரிவு
காமன்வெல்த்தில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகள், நிரந்தர போட்டிகள் (கோர் ஸ்போர்ட்ஸ்), விருப்ப போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* குத்துச்சண்டை, தடகளம், நீச்சல், பளுதுாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நிரந்தர போட்டிகள் பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு காமன்வெல்த்திலும் இப்போட்டிகள் கட்டாயம் இடம் பெறும்.
* தொடரை நடத்தும் நாடுகள், விருப்ப போட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம். கடந்த முறை டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் வில்வித்தை, டென்னிஸ், இந்தியாவின் விருப்ப போட்டிகளாக சேர்க்கப்பட்டன.
* அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளை, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (சி.ஜி.எப்.,) மட்டுமே முடிவு செய்யும். கிரிக்கெட்டை, சி.ஜி.எப்., அங்கீகாரம் செய்ததால், 1998ல் மலேசியாவில் நடந்த காமன்வெல்த்தில் இடம் பெற்றது. பில்லியர்ட்ஸ், கால்பந்து, கோல்ப், ரக்பி லீக், வாலிபால், வாட்டர் போலோ உள்ளிட்டவை அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளின் கீழ் உள்ளன. இதுவரை ஒரு முறை கூட இப்போட்டிகள் காமன்வெல்த்தில் இடம் பெறவில்லை.
ஆஸி., ஆதிக்கம்
காமன்வெல்த் விளையாட்டில், ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள் அசத்துகின்றனர். இதுவரை நடந்த 19 போட்டிகளில், 12 முறை பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆஸ்திரேலியா. இங்கிலாந்து 6, கனடா ஒரு முறை முதலிடம் பிடித்தன.
* இதுவரை நடந்த 19 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், 804 தங்கம், 672 வெள்ளி, 604 வெண்கலம் உட்பட 2080 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் இங்கிலாந்து (1836 = 611 தங்கம், 612 வெள்ளி, 613 வெண்கலம்), கனடா (1392 = 437 தங்கம், 461 வெள்ளி, 494 வெண்கலம்) நாடுகள் உள்ளன. இப்பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 15 முறை காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்தியா, 141 தங்கம், 123 வெள்ளி, 108 வெண்கலம் உட்பட 372 பதக்கங்கள் வென்றது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை அதிக முறை (4) நடத்திய நாடுகள் வரிசையில், ஆஸ்திரேலியா (1938, 62, 82, 2006), கனடா (1930, 54, 78, 94) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. வரும் 2018ல் நடக்கவுள்ள 21வது காமன்வெல்த் விளையாட்டை நடத்தும் வாய்ப்பு 5வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளது.
* நியூசிலாந்து (1950, 74, 90) மூன்று முறை நடத்தியது. ஸ்காட்லாந்து (1970, 86), இங்கிலாந்து (1934, 2002) தலா 2 முறை நடத்தின. இம்முறை வாய்ப்பு பெற்றுள்ள ஸ்காட்லாந்து 3வது முறையாக நடத்துகிறது.
* இந்தியா (2010), மலேசியா (1998), ஜமைக்கா (1966), வேல்ஸ் (19580 நாடுகள் தலா ஒரு முறை நடத்தின.
மூன்று பிரிவு
காமன்வெல்த்தில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகள், நிரந்தர போட்டிகள் (கோர் ஸ்போர்ட்ஸ்), விருப்ப போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட போட்டிகள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* குத்துச்சண்டை, தடகளம், நீச்சல், பளுதுாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நிரந்தர போட்டிகள் பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு காமன்வெல்த்திலும் இப்போட்டிகள் கட்டாயம் இடம் பெறும்.
* தொடரை நடத்தும் நாடுகள், விருப்ப போட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம். கடந்த முறை டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் வில்வித்தை, டென்னிஸ், இந்தியாவின் விருப்ப போட்டிகளாக சேர்க்கப்பட்டன.
* அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளை, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (சி.ஜி.எப்.,) மட்டுமே முடிவு செய்யும். கிரிக்கெட்டை, சி.ஜி.எப்., அங்கீகாரம் செய்ததால், 1998ல் மலேசியாவில் நடந்த காமன்வெல்த்தில் இடம் பெற்றது. பில்லியர்ட்ஸ், கால்பந்து, கோல்ப், ரக்பி லீக், வாலிபால், வாட்டர் போலோ உள்ளிட்டவை அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளின் கீழ் உள்ளன. இதுவரை ஒரு முறை கூட இப்போட்டிகள் காமன்வெல்த்தில் இடம் பெறவில்லை.
ஆஸி., ஆதிக்கம்
காமன்வெல்த் விளையாட்டில், ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள் அசத்துகின்றனர். இதுவரை நடந்த 19 போட்டிகளில், 12 முறை பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆஸ்திரேலியா. இங்கிலாந்து 6, கனடா ஒரு முறை முதலிடம் பிடித்தன.
* இதுவரை நடந்த 19 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், 804 தங்கம், 672 வெள்ளி, 604 வெண்கலம் உட்பட 2080 பதக்கங்களை பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் இங்கிலாந்து (1836 = 611 தங்கம், 612 வெள்ளி, 613 வெண்கலம்), கனடா (1392 = 437 தங்கம், 461 வெள்ளி, 494 வெண்கலம்) நாடுகள் உள்ளன. இப்பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 15 முறை காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்தியா, 141 தங்கம், 123 வெள்ளி, 108 வெண்கலம் உட்பட 372 பதக்கங்கள் வென்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவ அணிகள்
ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் இதுவரை நடந்த 19 காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்ற பெருமை பெற்றுள்ளன.
தங்கத்தின் தங்கங்கள்
காமன்வெல்த் விளையாட்டில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் இயான்
தோர்ப் பெற்றுள்ளார். இவர் 1998 (4 தங்கம்) மற்றும் 2002 (6 தங்கம், 1 வெள்ளி) ம் ஆண்டு நடந்த போட்டிகளில் இவர் 10 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி உட்பட 11 பதக்கங்கள் வென்றுள்ளார்.
* காமன்வெல்த்தில் அதிக தங்கம் வென்ற வீராங்கனையாக திகழ்கிறார் ஆஸ்திரேலியாவின் சுசி ஓ நெயில். இவர், 1990 (1 தங்கம், 1 வெள்ளி), 1994 (3 தங்கம், 2 வெள்ளி), 1998 (6 தங்கம், 2 வெள்ளி) ம் ஆண்டில் நடந்த போட்டிகளில், 10 தங்கம், 5 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
பதக்க வேட்டை
காமன்வெல்த் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்றவர் ஆஸ்திரேலிய துப்பாக்கி சுடுதல் வீரர் பிலிப் ஆதம்ஸ். 1982 (2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்), 1986 (1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம்), 1990 (3 தங்கம், 2 வெள்ளி), 1994 (1 தங்கம், 2 வெள்ளி), 2002 (1 வெள்ளி) ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 18 பதக்கங்களை தன்வசப்படுத்தி உள்ளார்.
இளம் வீராங்கனை
குறைந்த வயதில் (14), காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், தங்கம் வென்றவர் ஆஸ்திரேலியாவின் ஜென்னி டர்ரால். இவர், கடந்த 1974 ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த போட்டியில், 400 மீ., "பிரீ ஸ்டைல்' நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்.
* டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் (2010) பங்கேற்ற கென்ய ஸ்குவாஷ் வீராங்கனை காலிகா நிம்ஜி (12 வயது), காமன்வெல்த் அரங்கில் மிகக் குறைந்த வயதில் பங்கேற்கும் வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.
‘சீனியர்’ வீரர்
ஸ்காட்லாந்தை சேர்ந்த ‘லான் பால்’ வீரர் வில்லி உட், அதிக முறை காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றக வீரர் ஆவார். இவர், இதுவரை 8 முறை (1974, 1978, 1982, 1990, 1994, 1998, 2002, 2010) பங்கேற்றுள்ளார். இவர் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளார்.
* இவர், டில்லி காமன்வெல்த்தில் பங்கேற்றதன் மூலம், அதிக வயதில் (72 வயது) காமன்வெல்த் போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்றார்.
ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் இதுவரை நடந்த 19 காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்ற பெருமை பெற்றுள்ளன.
தங்கத்தின் தங்கங்கள்
காமன்வெல்த் விளையாட்டில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் இயான்
தோர்ப் பெற்றுள்ளார். இவர் 1998 (4 தங்கம்) மற்றும் 2002 (6 தங்கம், 1 வெள்ளி) ம் ஆண்டு நடந்த போட்டிகளில் இவர் 10 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி உட்பட 11 பதக்கங்கள் வென்றுள்ளார்.
* காமன்வெல்த்தில் அதிக தங்கம் வென்ற வீராங்கனையாக திகழ்கிறார் ஆஸ்திரேலியாவின் சுசி ஓ நெயில். இவர், 1990 (1 தங்கம், 1 வெள்ளி), 1994 (3 தங்கம், 2 வெள்ளி), 1998 (6 தங்கம், 2 வெள்ளி) ம் ஆண்டில் நடந்த போட்டிகளில், 10 தங்கம், 5 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
பதக்க வேட்டை
காமன்வெல்த் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்றவர் ஆஸ்திரேலிய துப்பாக்கி சுடுதல் வீரர் பிலிப் ஆதம்ஸ். 1982 (2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்), 1986 (1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம்), 1990 (3 தங்கம், 2 வெள்ளி), 1994 (1 தங்கம், 2 வெள்ளி), 2002 (1 வெள்ளி) ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 18 பதக்கங்களை தன்வசப்படுத்தி உள்ளார்.
இளம் வீராங்கனை
குறைந்த வயதில் (14), காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், தங்கம் வென்றவர் ஆஸ்திரேலியாவின் ஜென்னி டர்ரால். இவர், கடந்த 1974 ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த போட்டியில், 400 மீ., "பிரீ ஸ்டைல்' நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்.
* டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் (2010) பங்கேற்ற கென்ய ஸ்குவாஷ் வீராங்கனை காலிகா நிம்ஜி (12 வயது), காமன்வெல்த் அரங்கில் மிகக் குறைந்த வயதில் பங்கேற்கும் வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.
‘சீனியர்’ வீரர்
ஸ்காட்லாந்தை சேர்ந்த ‘லான் பால்’ வீரர் வில்லி உட், அதிக முறை காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றக வீரர் ஆவார். இவர், இதுவரை 8 முறை (1974, 1978, 1982, 1990, 1994, 1998, 2002, 2010) பங்கேற்றுள்ளார். இவர் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளார்.
* இவர், டில்லி காமன்வெல்த்தில் பங்கேற்றதன் மூலம், அதிக வயதில் (72 வயது) காமன்வெல்த் போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இது வரலாறு...
பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியின் கீழ் முன்பு இருந்த உறுப்பு நாடுகளை, ஒரு விளையாட்டின் மூலம் ஒருங்கிணைக்கும் முயற்சியாகத் தான், காமன்வெல்த் போட்டி உருவானது. முதன் முதலில் கனடாவின் ஹாமில்டனில் 1930ல் நடந்தது. மொத்தம் 11 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. தடகளம், குத்துச் சண்டை, லான் பால், படகு வலித்தல், நீச்சல் மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட ஆறு போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன. அனைத்திலும் ஆண்கள் தான் பங்கேற்றனர். நீச்சல் போட்டியில் மட்டும் பெண்கள் பங்கேற்றனர். இதில், இங்கிலாந்து 60 பதக்கங்களுடன் (25 தங்கம், 22 வெள்ளி, 13 வெண்கலம்) முதலிடத்தை தட்டிச் சென்றது.
முதன் முறை
லண்டனில் (1934) 2 வது காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. இதில், முதன் முறையாக இந்தியா பங்கேற்றது. மல்யுத்த வீரர் ரசித் அன்வர், 74 கி.கி., வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இது, காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.
வந்தது உலக போர்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 46ல் நடக்கவில்லை. 1938க்கு பின் 1950ல் தான் 4வது காமன்வெல்த் போட்டி நடந்தது.
தங்கம் தந்த மில்கா
கடந்த 1958 ம் ஆண்டு வேல்சில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மில்கா சிங் (400 மீ., ஓட்டம்), லீலா ராம் சங்வான் (மல்யுத்தம், ஹெவிவெயிட்) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கமாக அமைந்தது.
ஆசியாவில் ஆரம்பம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 1998ல் முதன்முறையாக ஆசிய கண்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது. அதன்பின் 2010ல் இந்திய தலைநகர் டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது.
எத்தனை பெயர்
காமன்வெல்த் விளையாட்டு, பல பெயர் மாற்றங்களை கொண்டு நடத்தப்பட்டது. 1930 முதல் 1950 வரை நடந்த நான்கு போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. அதன்பின் 1954 முதல் 1966 வரையிலான போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் போட்டிகள் என அழைக்கப்பட்டன. 1970 மற்றும் 1974 ம் ஆண்டு நடந்த இரு போட்டிகள், பிரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. 1978 ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்படுகிறது.
புறக்கணிப்பு
அரசியல் பிரச்னைகளின் காரணமாக காமன்வெல்த் போட்டியை, பல்வேறு நாடுகள் புறக்கணிப்பு செய்த சம்பவங்களும் நடந்து உள்ளன. நியூசிலாந்து, நிறவெறி கொண்ட தென் ஆப்ரிக்காவுடன் கொண்ட நெருக்கத்தை காரணமாகக் காட்டி, 1978ம் ஆண்டு போட்டியை, நைஜீரியா புறக்கணித்தது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர், தென் ஆப்ரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டித்து, ஆப்ரிக்காவின் 32 நாடுகள், கரீபியன் தீவுகள் மற்றும் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் 1986 ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியை புறக்கணித்தன.
பிரிட்டிஷ் பேரரசின் ஆட்சியின் கீழ் முன்பு இருந்த உறுப்பு நாடுகளை, ஒரு விளையாட்டின் மூலம் ஒருங்கிணைக்கும் முயற்சியாகத் தான், காமன்வெல்த் போட்டி உருவானது. முதன் முதலில் கனடாவின் ஹாமில்டனில் 1930ல் நடந்தது. மொத்தம் 11 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. தடகளம், குத்துச் சண்டை, லான் பால், படகு வலித்தல், நீச்சல் மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட ஆறு போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன. அனைத்திலும் ஆண்கள் தான் பங்கேற்றனர். நீச்சல் போட்டியில் மட்டும் பெண்கள் பங்கேற்றனர். இதில், இங்கிலாந்து 60 பதக்கங்களுடன் (25 தங்கம், 22 வெள்ளி, 13 வெண்கலம்) முதலிடத்தை தட்டிச் சென்றது.
முதன் முறை
லண்டனில் (1934) 2 வது காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. இதில், முதன் முறையாக இந்தியா பங்கேற்றது. மல்யுத்த வீரர் ரசித் அன்வர், 74 கி.கி., வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இது, காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.
வந்தது உலக போர்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 46ல் நடக்கவில்லை. 1938க்கு பின் 1950ல் தான் 4வது காமன்வெல்த் போட்டி நடந்தது.
தங்கம் தந்த மில்கா
கடந்த 1958 ம் ஆண்டு வேல்சில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், இந்தியாவின் மில்கா சிங் (400 மீ., ஓட்டம்), லீலா ராம் சங்வான் (மல்யுத்தம், ஹெவிவெயிட்) ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். இது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா கைப்பற்றிய முதல் தங்கமாக அமைந்தது.
ஆசியாவில் ஆரம்பம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 1998ல் முதன்முறையாக ஆசிய கண்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு நடத்தப்பட்டது. அதன்பின் 2010ல் இந்திய தலைநகர் டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது.
எத்தனை பெயர்
காமன்வெல்த் விளையாட்டு, பல பெயர் மாற்றங்களை கொண்டு நடத்தப்பட்டது. 1930 முதல் 1950 வரை நடந்த நான்கு போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. அதன்பின் 1954 முதல் 1966 வரையிலான போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் போட்டிகள் என அழைக்கப்பட்டன. 1970 மற்றும் 1974 ம் ஆண்டு நடந்த இரு போட்டிகள், பிரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. 1978 ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்படுகிறது.
புறக்கணிப்பு
அரசியல் பிரச்னைகளின் காரணமாக காமன்வெல்த் போட்டியை, பல்வேறு நாடுகள் புறக்கணிப்பு செய்த சம்பவங்களும் நடந்து உள்ளன. நியூசிலாந்து, நிறவெறி கொண்ட தென் ஆப்ரிக்காவுடன் கொண்ட நெருக்கத்தை காரணமாகக் காட்டி, 1978ம் ஆண்டு போட்டியை, நைஜீரியா புறக்கணித்தது. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர், தென் ஆப்ரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டித்து, ஆப்ரிக்காவின் 32 நாடுகள், கரீபியன் தீவுகள் மற்றும் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் 1986 ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியை புறக்கணித்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரதமர் மோடி வாழ்த்து
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் இன்று துவங்கும் காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும், இந்திய நட்சத்திரங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘கிளாஸ்கோவில் இன்று துவங்கும் காமன்வெல்த் விளையாட்டில், இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் முழுத்திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு பெருமை தேடித்தருவார்கள் என நம்புகிறேன். காமன்வெல்த் விளையாட்டின் மூலம், பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் அதிகரிக்கும்,’’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘கிளாஸ்கோவில் இன்று துவங்கும் காமன்வெல்த் விளையாட்டில், இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் முழுத்திறமையை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு பெருமை தேடித்தருவார்கள் என நம்புகிறேன். காமன்வெல்த் விளையாட்டின் மூலம், பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் அதிகரிக்கும்,’’ என தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியா உள்பட 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள்ம் மற்றும் இங்கிலாந்தின் ஆட்சி அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித்திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு. நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளுக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டாக இது கருதப்படுகிறது. இதுவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்தப்படுகிறது. 1930–ம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டி கடைசியாக 2010–ம் ஆண்டு டெல்லியில் அரங்கேறியது.
இந்த நிலையில் 20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கா நகரில் இன்று(புதன்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 3–ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 17 வகையான விளையாட்டுகளுக்கு 261 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
215 இந்தியர்
இந்திய தரப்பில் 215 பேர் கொண்ட விளையாட்டு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தடகளம், ஆக்கி, நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, லான் பவ்ல்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 14 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
டெல்லி காமன்வெல்த்தில் ஊழல் பிரச்சினை தலைவிரித்தாடிய போதிலும் களத்தில் இந்திய வீரர்களின் செயல்பாடு பிரமிக்க வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 39 தங்கம் உள்பட 101 பதக்கங்களை அள்ளி குவித்து வரலாறு படைத்தது. ஒரு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா சேகரித்த அதிகபதக்கங்கள் இது தான்.
முதல் 3 இடங்கள் இலக்கு
ஆனால் அதே போன்று இந்த தடவையும் பதக்கங்களை அள்ளுவது என்பது கடினமான விஷயம். ஏனெனில் இந்தியாவுக்கு சாதகமான சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வில்வித்தை மற்றும் டென்னிஸ் போட்டி இந்த முறை கிடையாது. இவற்றின் மூலம் இந்தியா கடந்த காமன்வெல்த்தில் 12 பதக்கங்களை வென்றிருந்தது. மல்யுத்தம் விளையாட்டில் இந்தியர்கள் முத்திரை பதிக்கக்கூடிய ‘கிரேக்கோ–ரோமன்’ பிரிவு கழற்றிவிடப்பட்டுள்ளது. இதே போல் 2010–ம் ஆண்டு காமன்வெல்த்தில் துப்பாக்கி சுடுதலில் கடந்த முறை இந்தியா 30 பதக்கங்களை கைப்பற்றியது. இந்த முறை துப்பாக்கி சுடுதலில் 44–ல் இருந்து 19 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. தவிர பேட்மிண்டன் புயல் சாய்னா நேவால் காயத்தால் விலகி விட்டார். இதனால் இந்த தடவை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை முன்பு போல் இருக்காது. என்றாலும் பதக்கப்பட்டியலில் குறைந்தது 3–வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என்று இந்தியா இலக்காக கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா(417 பேர் அணி) அல்லது இங்கிலாந்து (416 பேர் அணி) ஆகிய நாடுகள் முதல் இரு இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
யார்–யாருக்கு வாய்ப்பு?
இந்திய தரப்பில் மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், யோகேஷ்வர்தத், துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற அபினவ் பிந்த்ரா, விஜய்குமார், ககன்நரங் மற்றும் மனவ்ஜித் சிங் சந்து, ராஹி சர்னோபாத், ஹீனா சித்து, ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல், டேபிள் டென்னிசில் சரத் கமல், சவும்யாஜித் கோஷ், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, காஷ்யப், குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், ஷிவ தாபா, மனோஜ்குமார், சரிதாதேவி, தினேஷ் குமார், பளுதூக்குதலில் நடப்பு சாம்பியன் ரவிகுமார், சஞ்சிதா சானு உள்ளிட்டோர் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
மற்றபடி உலக நட்சத்திரங்கள் என்று பார்த்தால், உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட், இங்கிலாந்தின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் மோ பாரா ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இன்று தொடக்க விழா
இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வண்ணமயமான தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் 288 நாட்களில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த காமன்வெல்த் ஜோதி (குயின் பேட்டன்) இறுதி கட்ட தொடர் ஓட்டமாக தொடக்க விழா நடைபெறும் செல்டிக் பார்க் மைதானத்திற்குள் கொண்டு வரப்படும். இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிசபெத், வாழ்த்துரை செய்தியை வாசித்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.
71 நாடுகளின் அணிவகுப்பும் தொடக்க விழாவில் இடம் பெறும். இதில் இந்திய அணிக்கு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் தேசிய கொடியை ஏந்த இருக்கிறார். தொடக்க நாள் அன்று போட்டி ஏதும் கிடையாது. 24–ந்தேதி இருந்து போட்டிகள் தொடங்கும்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள்ம் மற்றும் இங்கிலாந்தின் ஆட்சி அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித்திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு. நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகளுக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டாக இது கருதப்படுகிறது. இதுவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்தப்படுகிறது. 1930–ம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டி கடைசியாக 2010–ம் ஆண்டு டெல்லியில் அரங்கேறியது.
இந்த நிலையில் 20–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கா நகரில் இன்று(புதன்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 3–ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 17 வகையான விளையாட்டுகளுக்கு 261 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
215 இந்தியர்
இந்திய தரப்பில் 215 பேர் கொண்ட விளையாட்டு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தடகளம், ஆக்கி, நீச்சல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பேட்மிண்டன், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, லான் பவ்ல்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 14 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
டெல்லி காமன்வெல்த்தில் ஊழல் பிரச்சினை தலைவிரித்தாடிய போதிலும் களத்தில் இந்திய வீரர்களின் செயல்பாடு பிரமிக்க வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 39 தங்கம் உள்பட 101 பதக்கங்களை அள்ளி குவித்து வரலாறு படைத்தது. ஒரு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா சேகரித்த அதிகபதக்கங்கள் இது தான்.
முதல் 3 இடங்கள் இலக்கு
ஆனால் அதே போன்று இந்த தடவையும் பதக்கங்களை அள்ளுவது என்பது கடினமான விஷயம். ஏனெனில் இந்தியாவுக்கு சாதகமான சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வில்வித்தை மற்றும் டென்னிஸ் போட்டி இந்த முறை கிடையாது. இவற்றின் மூலம் இந்தியா கடந்த காமன்வெல்த்தில் 12 பதக்கங்களை வென்றிருந்தது. மல்யுத்தம் விளையாட்டில் இந்தியர்கள் முத்திரை பதிக்கக்கூடிய ‘கிரேக்கோ–ரோமன்’ பிரிவு கழற்றிவிடப்பட்டுள்ளது. இதே போல் 2010–ம் ஆண்டு காமன்வெல்த்தில் துப்பாக்கி சுடுதலில் கடந்த முறை இந்தியா 30 பதக்கங்களை கைப்பற்றியது. இந்த முறை துப்பாக்கி சுடுதலில் 44–ல் இருந்து 19 பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. தவிர பேட்மிண்டன் புயல் சாய்னா நேவால் காயத்தால் விலகி விட்டார். இதனால் இந்த தடவை இந்தியாவின் பதக்க எண்ணிக்கை முன்பு போல் இருக்காது. என்றாலும் பதக்கப்பட்டியலில் குறைந்தது 3–வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என்று இந்தியா இலக்காக கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா(417 பேர் அணி) அல்லது இங்கிலாந்து (416 பேர் அணி) ஆகிய நாடுகள் முதல் இரு இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
யார்–யாருக்கு வாய்ப்பு?
இந்திய தரப்பில் மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், யோகேஷ்வர்தத், துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற அபினவ் பிந்த்ரா, விஜய்குமார், ககன்நரங் மற்றும் மனவ்ஜித் சிங் சந்து, ராஹி சர்னோபாத், ஹீனா சித்து, ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல், டேபிள் டென்னிசில் சரத் கமல், சவும்யாஜித் கோஷ், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, காஷ்யப், குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், ஷிவ தாபா, மனோஜ்குமார், சரிதாதேவி, தினேஷ் குமார், பளுதூக்குதலில் நடப்பு சாம்பியன் ரவிகுமார், சஞ்சிதா சானு உள்ளிட்டோர் பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
மற்றபடி உலக நட்சத்திரங்கள் என்று பார்த்தால், உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட், இங்கிலாந்தின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் மோ பாரா ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இன்று தொடக்க விழா
இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வண்ணமயமான தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் 288 நாட்களில் 1 லட்சத்து 90 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த காமன்வெல்த் ஜோதி (குயின் பேட்டன்) இறுதி கட்ட தொடர் ஓட்டமாக தொடக்க விழா நடைபெறும் செல்டிக் பார்க் மைதானத்திற்குள் கொண்டு வரப்படும். இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிசபெத், வாழ்த்துரை செய்தியை வாசித்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.
71 நாடுகளின் அணிவகுப்பும் தொடக்க விழாவில் இடம் பெறும். இதில் இந்திய அணிக்கு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் தேசிய கொடியை ஏந்த இருக்கிறார். தொடக்க நாள் அன்று போட்டி ஏதும் கிடையாது. 24–ந்தேதி இருந்து போட்டிகள் தொடங்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை வென்ற பதக்கங்கள்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இநதிய அணி இதுவரை 141 தங்கம், 123 வெள்ளி, 108 வெண்கலம் என்று மொத்தம் 372 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 1942 மற்றும் 1946–ம் ஆண்டுகளில் இரண்டாம் உலக போர் காரணமாக போட்டி நடைபெறவில்லை. 1930, 1950, 1962, 1986–ம் ஆண்டுகளில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை. ஆண்டு வாரியாக இந்தியா வென்ற பதக்கங்கள் விவரம் வருமாறு:–
ஆண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் பிடித்த இடம்
1934 0 0 1 1 12
1938 0 0 0 0 0
1954 0 0 0 0
1958 2 1 0 3 8
1966 3 4 3 10 8
1970 5 3 4 1 2 6
1974 4 8 3 1 5 6
1978 5 5 5 1 5 6
1982 5 8 3 1 6 6
1990 13 8 11 32 5
1994 6 11 7 24 6
1998 6 11 7 24 6
1998 7 10 8 25 7
2002 30 22 13 69 4
2006 22 17 10 49 4
2010 39 26 36 101 2
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இநதிய அணி இதுவரை 141 தங்கம், 123 வெள்ளி, 108 வெண்கலம் என்று மொத்தம் 372 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 1942 மற்றும் 1946–ம் ஆண்டுகளில் இரண்டாம் உலக போர் காரணமாக போட்டி நடைபெறவில்லை. 1930, 1950, 1962, 1986–ம் ஆண்டுகளில் இந்திய அணி கலந்து கொள்ளவில்லை. ஆண்டு வாரியாக இந்தியா வென்ற பதக்கங்கள் விவரம் வருமாறு:–
ஆண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் பிடித்த இடம்
1934 0 0 1 1 12
1938 0 0 0 0 0
1954 0 0 0 0
1958 2 1 0 3 8
1966 3 4 3 10 8
1970 5 3 4 1 2 6
1974 4 8 3 1 5 6
1978 5 5 5 1 5 6
1982 5 8 3 1 6 6
1990 13 8 11 32 5
1994 6 11 7 24 6
1998 6 11 7 24 6
1998 7 10 8 25 7
2002 30 22 13 69 4
2006 22 17 10 49 4
2010 39 26 36 101 2
இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவர், மல்யுத்த வீரர் ரஷித் அன்வர். சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1934–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட ரஷித் அன்வர், மல்யுத்தத்தில் பிரீஸ்டைல் வெல்டர்வெயிட் பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றார். 73–வது வயதில் மரணம் அடைந்தார்.
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவர், மல்யுத்த வீரர் ரஷித் அன்வர். சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1934–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட ரஷித் அன்வர், மல்யுத்தத்தில் பிரீஸ்டைல் வெல்டர்வெயிட் பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றார். 73–வது வயதில் மரணம் அடைந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேசிய வீராங்கனைக்கு வந்த சோதனை
டெல்லியில் 2010–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற மலேசிய துப்பாக்கி சுடுதல் நூர் அயூனி பர்ஹானா அப்துல் ஹலிம், ஸ்காட்லாந்து காமன்வெல்த் போட்டியிலும் சாதிக்கும் துடிப்புடன் புறப்பட்டார். ஆனால் வழியில் இப்படியொரு சோதனையை வரும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கமாட்டார்.
மலேசியாவில் இருந்து ஸ்காட்லாந்துக்கு புறப்பட்ட அவர் லண்டன் விமான நிலையத்திற்கு வந்த போது தனது உடைமைகளை தொலைத்து விட்டார். அதில் தான் அவர் துப்பாக்கி சுடுதலுக்கு பயன்படுத்த வேண்டிய ‘ஜாக்கெட்’ (துப்பாக்கி தோட்டா வைப்பது உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு உடை) இருந்தது. மூன்று நாட்களாக தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மலேசிய அணி நிர்வாகம் அவருக்கு வேறு ஜாக்கெட்டை தயார் செய்ய முயற்சித்தது. ஆனால் எதுவும் தனக்கு ஒத்து வராது. ஒரு ஜாக்கெட் எனக்கு சவுகரியமாக இருப்பதாக உணர 2 மாதங்கள் பிடிக்கும் கூறி விட்டார். போட்டிக்கான பெயரை பதிவு செய்வதற்கான கடைசி நாள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து விட்டதால், வேறு வழியின்றி வேதனையுடன் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது.
டெல்லியில் 2010–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற மலேசிய துப்பாக்கி சுடுதல் நூர் அயூனி பர்ஹானா அப்துல் ஹலிம், ஸ்காட்லாந்து காமன்வெல்த் போட்டியிலும் சாதிக்கும் துடிப்புடன் புறப்பட்டார். ஆனால் வழியில் இப்படியொரு சோதனையை வரும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கமாட்டார்.
மலேசியாவில் இருந்து ஸ்காட்லாந்துக்கு புறப்பட்ட அவர் லண்டன் விமான நிலையத்திற்கு வந்த போது தனது உடைமைகளை தொலைத்து விட்டார். அதில் தான் அவர் துப்பாக்கி சுடுதலுக்கு பயன்படுத்த வேண்டிய ‘ஜாக்கெட்’ (துப்பாக்கி தோட்டா வைப்பது உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு உடை) இருந்தது. மூன்று நாட்களாக தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மலேசிய அணி நிர்வாகம் அவருக்கு வேறு ஜாக்கெட்டை தயார் செய்ய முயற்சித்தது. ஆனால் எதுவும் தனக்கு ஒத்து வராது. ஒரு ஜாக்கெட் எனக்கு சவுகரியமாக இருப்பதாக உணர 2 மாதங்கள் பிடிக்கும் கூறி விட்டார். போட்டிக்கான பெயரை பதிவு செய்வதற்கான கடைசி நாள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்து விட்டதால், வேறு வழியின்றி வேதனையுடன் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காமன்வெல்த் போட்டி 2014 : பளுதூக்குதலில் சஞ்சிதா குமுக்சம் தங்கப் பதக்கமும், சானு சாய்கோம் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்
ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
மகளிருக்கான 48 கிலோ பளுதூக்குதலில் குமுக்சம் சஞ்சிதா தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மகளிருக்கான 48 கிலோ ஜூடோ இறுதி போட்டியில் இந்தியாவின் சுஷீலா லிக்மாம்பம் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோ இறுதி போட்டியில் இந்திய வீரர் நவ்ஜொட் சானா வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
மகளிருக்கான 48 கிலோ பளுதூக்குதலில் குமுக்சம் சஞ்சிதா தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மகளிருக்கான 48 கிலோ ஜூடோ இறுதி போட்டியில் இந்தியாவின் சுஷீலா லிக்மாம்பம் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோ இறுதி போட்டியில் இந்திய வீரர் நவ்ஜொட் சானா வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாழ்த்துகள் இருவருக்கும் ..
இந்தொடரில் இந்தியா இன்னும் பல பதக்கங்கள் பெற்று சாதனை படைக்க வாழ்த்துகள்
இந்தொடரில் இந்தியா இன்னும் பல பதக்கங்கள் பெற்று சாதனை படைக்க வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» காமன்வெல்த்: பளு தூக்குதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்
» 2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
» காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்
» 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
» ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)
» 2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
» காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்று ஆரம்பம் : 8,500 வீரர்கள் டில்லியில் குவிந்தனர்
» 17 -வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2014
» ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|