புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கயா' யாத்திரை !


   
   

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

First topic message reminder :

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  - Page 6 KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 25, 2014 11:13 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பேஷ் பேஷ் , கயா போய் வந்தீர்களா , நல்ல காரியம் .
உங்கள் தொடரை இன்று தான் பார்த்தேன் . இனிமேல் தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும் . பஹாமாஸ் தொடரில் சிறிது மும்முரமாக இருந்து விட்டேன் .
எனது அண்ணன் ,மன்னி , எங்கள் தாயாரோடு சென்று ,காசி ,கயா எல்லாம் சென்று ஸ்ரார்தங்கள் செய்து , சுமங்கிலி பூஜை ,முடித்துக் கொண்டு வந்தார் , 1980 இல்
கூடிய சீக்கிரத்தில் உங்கள் தொடரை படிக்கிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1075513

ஆமாம் ஐயா, ஜூன் 26 அங்கு - கயாவில் ஸ்ரார்தங்கள் செய்து வந்தோம். நாங்கள் ( வைஷ்ணவர்கள்) கயாவில் மட்டுமே பிண்டங்கள் போடுவது வழக்கம் . எனவே, கயா மட்டும் சென்று வந்தோம் புன்னகை .
.
பொறுமையாக படியுங்கள் ஐயா புன்னகை உங்கள் தொடர் சூப்பர் !  அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1075538

நான் தவறாக சுமங்கலி பூஜை என்று குறிப்பிட்டு விட்டேன் . அது வேணி பூஜை . 34 வருட பழைய சம்பவம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jul 26, 2014 12:24 am

ங்களுக்காக சுருக்கமாக சொன்னேன், ஓரளவு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்  இல்லாவிட்டால் மீண்டும் கேளுங்கள் சரியா?
புரிந்தது கிருஷ்ணாம்மா. எனது பக்கத்து வீட்டிலும், உங்களவர்கள் தான் இருந்தார்கள். அவர்களும் இப்படி தான் செய்வார்கள். அவர்கள் நான்கு பிராமணர்களை அழைப்பார்கள். எதனால் இப்படி...? என்று கேட்ட போது, 'எங்கள் வீடுகளில் இப்படித்தான் செய்வோம்' என்றார்கள் அந்த மாமி. அதையே நீங்கள் கயாவிலும் செய்ததாக சொல்லவே, அதன் சரியான விளக்கம் தெரிந்து கொள்ள நினைத்து உங்களிடம் கேட்டேன். நீங்களும் அழகாக விளக்கினீர்கள். நன்றி!

அக்ஷய வடம் என்ற ஆலமரத்தின் சிறப்பு என்ன?அங்கு எதற்கு சென்றீர்கள்?




'கயா' யாத்திரை !  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 11:35 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பேஷ் பேஷ் , கயா போய் வந்தீர்களா , நல்ல காரியம் .
உங்கள் தொடரை இன்று தான் பார்த்தேன் . இனிமேல் தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும் . பஹாமாஸ் தொடரில் சிறிது மும்முரமாக இருந்து விட்டேன் .
எனது அண்ணன் ,மன்னி , எங்கள் தாயாரோடு சென்று ,காசி ,கயா எல்லாம் சென்று ஸ்ரார்தங்கள் செய்து , சுமங்கிலி பூஜை ,முடித்துக் கொண்டு வந்தார் , 1980 இல்
கூடிய சீக்கிரத்தில் உங்கள் தொடரை படிக்கிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1075513

ஆமாம் ஐயா, ஜூன் 26 அங்கு - கயாவில் ஸ்ரார்தங்கள் செய்து வந்தோம். நாங்கள் ( வைஷ்ணவர்கள்) கயாவில் மட்டுமே பிண்டங்கள் போடுவது வழக்கம் . எனவே, கயா மட்டும் சென்று வந்தோம் புன்னகை .
.
பொறுமையாக படியுங்கள் ஐயா புன்னகை உங்கள் தொடர் சூப்பர் !  அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1075538

நான் தவறாக சுமங்கலி பூஜை என்று குறிப்பிட்டு விட்டேன் . அது வேணி பூஜை . 34 வருட பழைய சம்பவம்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1075737

ஒ...அப்ப சரி ஐயா புன்னகை இந்த பூஜை திரிவேணி சங்கமத்தில் செய்வா தானே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 11:42 am

விமந்தனி wrote:
ங்களுக்காக சுருக்கமாக சொன்னேன், ஓரளவு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்  இல்லாவிட்டால் மீண்டும் கேளுங்கள் சரியா?
புரிந்தது கிருஷ்ணாம்மா. எனது பக்கத்து வீட்டிலும், உங்களவர்கள் தான் இருந்தார்கள். அவர்களும் இப்படி தான் செய்வார்கள். அவர்கள் நான்கு பிராமணர்களை அழைப்பார்கள். எதனால் இப்படி...? என்று கேட்ட போது, 'எங்கள் வீடுகளில் இப்படித்தான் செய்வோம்' என்றார்கள் அந்த மாமி. அதையே நீங்கள் கயாவிலும் செய்ததாக சொல்லவே, அதன் சரியான விளக்கம் தெரிந்து கொள்ள நினைத்து உங்களிடம் கேட்டேன். நீங்களும் அழகாக விளக்கினீர்கள். நன்றி!

அக்ஷய வடம் என்ற ஆலமரத்தின் சிறப்பு என்ன?அங்கு எதற்கு சென்றீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1075750

நன்றி விமந்தினி புன்னகை ஆமாம் எங்கள் வீடுகளில் வாத்தியார் சேர்த்து 3 - 4 பேர் வருவார்கள் புன்னகை
.
அக்ஷய வட ஆலமரம் பற்றியும் , பல்குனி நதி இன் சாபம் பற்றியும் மதியம் அல்லது நாளை எழுதுகிறேன் புன்னகை கொஞ்சம் காத்திருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 9:20 pm

விமந்தனி wrote:

அக்ஷய வடம் என்ற ஆலமரத்தின் சிறப்பு என்ன?அங்கு எதற்கு சென்றீர்கள்?[/justify]
மேற்கோள் செய்த பதிவு: 1075750

அங்கு மீண்டும் ஒருமுறை 64 பிண்டங்கள் அந்த ஆல மரத்தடி இல் வைக்கணும் விமந்தினி. அது தான் ரொம்ப விசேஷமாம். நாங்கள் வீடுகளில் ஸ்ரார்த்தம் செய்யும் போது கூட, முடிவில் 'கயா கயா கயா' என்றும் 'அக்ஷயவடம் அக்ஷய வடம் அக்ஷயவடம்' என்றும் தான் சொல்லி முடிப்போம். அதை அன்று பிரத்யக்ஷமாய் நேரில் பார்த்து செய்தோம். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 9:33 pm

நாங்க இருந்த அந்த சத்திரத்திலிருந்து 10 நிமிஷ டிரைவ் இல் இருந்தது அக்ஷய வடம். எனவே, சீனா மாமா 3 - 4  வண்டிகள் ஏற்ப்பாடு செய்திருந்தார். எங்களிடம் கார் 'இருந்ததால் நாங்கள் நால்வரும் அந்த வண்டிகளை பின் தொடர்ந்தோம். 'அக்ஷய வடம்' என்றால் 'வாடாத ஆல மரம்' - 'நிரந்தரமான ஆல மரம் 'என்று அர்த்தமாம்.  அந்த மரம் கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்ததால் நிறைய படிகள் ஏறி அஷய வடம் சென்றோம்.

வாத்தியார் எங்களுடனே வந்தார். அஷய வடத்தின் இலைகள் இலையுதிர்காலத்தில் கூட பசுமையாக இருந்தது. அஷய வடம் மரத்திற்கு அடியில் கிருஷ்ண விக்ரகம் இருந்து.  மரத்தை வலம்வந்து அதனடியில் அமர்ந்து காரியங்களை செய்யவேண்டும். மீண்டும் காலை போல 64 பிண்டங்கள் வைத்தார்கள். அதிலிருந்து ஒரு பிண்டத்தை மட்டும் காகத்திற்கு வைத்தார்கள்.

பிறகு, நாங்கள் - பெண்கள் எல்லோரும் அவா அவா ஆத்துக்கரரின் பின் போய் நின்று கொண்டோம். ( வாத்தியார் சொற்படி புன்னகை ) நாங்கள் காலைலிருந்து  செய்து வரும் தர்பண காரியங்களை ஒரு வயசான மாமா கூட  இருந்தே பார்த்து வந்தார் , பார்த்தால் அவர் தான் 'கயா பிராமணர்' நாங்கள் செய்தது அவருக்கு திருப்தியா என்று கேட்டு அவர் திருப்தி என்று சொன்னால்தான் எங்களுடைய அன்றைய காரியம் பூர்த்தியாகுமாம். வாத்தியார் அந்த மாமா வை கேட்டார், இவா எல்லோரும் செய்த காரியங்களால் உங்களுக்கு திருப்தியா? என்று.

அவர் உடனே சொன்னார் திருப்தி என்று ( தமிழில் சொன்னார் புன்னகை )

உடனே மீண்டும் வாத்தியார் கேட்டார், " இவா முன்னோர்களும், பிண்டம் போட்டவாளும் மோக்ஷம் போயாச்சா ? "

அவர் சொன்னார் " போயாச்சு போயாச்சு  " என்று புன்னகை

மீண்டும் வாத்தியார் கேட்டார், "இவர்களின் ஸ்ரர்தத்தால்  நீங்க திருப்தியா? "

"எனக்கு திருப்தி, திருப்தி திருப்தி " என்றார் அவர். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

இன்னும் ஒரு காரியம் பாக்கியாக இருந்தது அங்கு..............அது தான் ரொம்ப முக்கியமான வேலை ....அது ........நாளை புன்னகை

தொடரும் .........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 29, 2014 9:04 am

என்ன விமந்தினி இன்னும் இதை பார்க்கலையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 29, 2014 9:52 am

சரி , நான் தொடருகிறேன் .  

இந்த புனித யாத்திரையை மேற்கொண்டவர்கள் காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று பற்றுகளை விட்டு விட்டதன் அடையாளமாக ஒரு காய், ஒரு பழம், ஒருஇலை ஆகியவற்றை அந்த கயா மாமாவிடம் கை இல் அடித்து சத்தியம் செய்து இங்கு விடணும். பிறகு அவற்றை நம் வாழ்நாளில் பயன்படுத்தக்கூடாது. இறந்த பிறகும் நம் குழந்தைகள் நமக்கு ஸ்ரார்த்தம் செய்யும்போது இந்த பழத்தையோ  , காயையோ இலையையோ கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது .

நாம் விடும்போது, முக்கனிகளான மா பலா வாழை விடக்கூடாது, முடிந்தால் ஸ்ராத்தத்தில் பயன்படுத்தப்படும் காய்களையும் தவிர்க்கலாம் என்று சொன்னார் வாத்தியார் மாமா.

மேலே சொன்னதை நிறைவேற்றுவதற்காக அந்த கயா மாமா எங்களிடம் ,  அதாவது ஒவ்வொரு தம்பதியாக கிட்டே வந்தார். இங்கு ஒன்று சொல்லணும். நாம் அங்கு விடும் பழமோ  காயோ நமக்கு ரொம்ப பிடித்ததாக இருக்கணும். பிடித்ததைத்தான் விட்டுக்கொடுக்கணும்.புன்னகை அந்த மனப்பக்குவம் நமக்கு வரணும் என்று தான் இந்த சடங்கு. மேலும் அகமுடையான் பெண்டாட்டி
( புருஷன் பெண்டாட்டி ) இருவரும் ஒரேபழம் ஒரே காய் தான் விடணும்.

நாங்கள் இருவரும் அவ்வாறே எங்களுக்கு பிடித்த கொத்தவரங்காய், சப்போட்டா விட்டோம். இலை என்று வரும்போது எல்லோரும் பொதுவாக 'ஆலிலையை' விட்டு விடுவார்கள். ஆனால் நாங்கள்..............ஐயோ! என்னால் முடியாது கூடாது கூடாது கூடாது என்று  நான் சொல்லிவிட்டேன்.  ஏன் என்றால் அது என் ஸ்வாமி, கிருஷ்ணர்  படுக்கும் இலை இல்லையா? அதை விட்டால் அவரையே விடுவது போல எனக்கு ப்பட்டது. எனவே, நாங்கள் 'பூவரசு இலை'யை விட்டோம் ஜாலி ஜாலி ஜாலி

அந்த கயா பிராம்ஹணரிடம்  கை இல் அடித்து சத்தியம் செய்து கொடுத்தோம் இவைகளை இனி எங்கள் வாழ்நாளில் மட்டும் அல்ல இறப்புக்கு பிறகும் உபயோகிக்க மாட்டோம் என்று புன்னகை

மேலும் அந்த வாத்தியார் மாமா சொன்னார், " நீங்க எல்லோரும் இப்போ தான் இந்த யாத்திரையை தொடங்கி இருக்கீங்க, யாத்திரையில் எது எப்போது சாப்பிடக்கிடைக்கும்  என்று தெரியாது. எனவே, நீங்க யாத்திரை முடிந்து வீட்டுக்கு போனபிறகு ஸ்வாமி சேவித்துவிட்டு பிறகு இந்த காய் கனிகளை சாப்பிடாதீங்கோ"  என்றார்.

மேலும், "அந்த காய் கனிகளை நீங்க தொடலாம் சமைக்கலாம் மற்றவர்களுக்கு பரிமாறலாம்.; நீங்க மட்டும் சாப்பிடக்கூடாது "  என்றார் . ஒருவேளை, இப்போ யாத்திரை இன்போது இந்த காயோ பழமோ சாப்பிட நேர்ந்தால், வரும் கார்த்திகை பௌர்ணமி அன்று அந்த காய் அல்லது பழத்தை நிறைய   வாங்கி ஒரு பிராம்ஹணருக்கு தானமாய் கொடுத்துடுங்கோ " என்றும் சொன்னார் புன்னகை

தொடரும்........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 29, 2014 10:03 am

பிறகு வாத்தியார் மாமாவிற்கு தக்ஷணை கொடுத்தோம். எங்கள் மூதாதையர்கள் அனைவரும் ஸ்வர்க்கத்தில் நீர், உணவு, ஆசை, பற்று இன்றிமறு பிறப்பின்றி, முக்தி அடையவேண்டி பிரார்த்தனை செய்து அங்குள்ள பிராம்ஹணருக்கு தானம் அளித்தோம். அவரும் மிகுந்த திருப்தியுடன் ஆசீர்வதித்தார் புன்னகை

அங்கு பேசும்போது வாத்தியார் மாமா அந்த அக்ஷய வடத்தின் சிறப்பை விளக்க , ஏன் அங்கு உட்கார்ந்து பிண்ட தானம் தரணும் என்று சொன்னார்.  

அக்ஷய வடம் என்ற ஆலமரம் கயாவிலிருக்கு. அதன் வேர் ப்ரயாகை(அலஹாபாத்)  நடு உடம்பு காசி,  இலைகளுள்ள  நுனிபாகம் கயாவிலிருக்குன்னு முன்பே சொன்னேன் இல்லையா? எல்லா யுகத்திலும் இருந்த, இருக்கும் இருக்கப்போகும் மரமாம் அது. ஸ்ரீ ராமர் தன் மனைவி சீதா மற்றும் தம்பியுடன் இங்கு வந்து ஸ்ரார்த்தம் செய்தாராம். அந்த கதையை சொன்னார் அவர்.

யுக முடிவில் இந்த ஆலிலை இல் தான் கிருஷ்ணர் அவதரிப்பார் என்றும் சொன்னார் புன்னகை மேலும்,
கிருஷ்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன் என்றும் விளக்கினார் புன்னகை

அதாவது, " தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான்." என்றார்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 29, 2014 10:19 am

பிறகு, மற்ற பிண்டங்களை எல்லாம் அந்த ஆல மரத்தடி இல் சேர்த்தோம். மரத்துக்கு தண்ணீர் விட்டோம். மரத்தை பிரதக்ஷணமாக வந்து சேவித்தோம்; கையெடுத்து வணங்கினோம். மீண்டும் சத்திரம் வந்தோம். அங்கு தான் எங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பிடும் முன் உங்களுக்காக ஒரு குட்டி  கதை புன்னகை இங்கு ஸ்ரார்தம் செய்வது எவ்வவளவு புண்ணியம் என்று விளக்கும் கதை. ( சீதா கதையும் சொல்கிறேன் புன்னகை )

கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது??????????????

இந்திரனிடம் அது குறித்துக் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை, ஏன் அவனுடைய பித்ருக்களுக்குக் கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால்தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு ஸ்ரார்தம் செய்து  பிண்டம்  போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.

அவ்வளவு புண்ணியம் இங்கு ஸ்ரார்தம் செய்தால் புன்னகை

தொடரும்........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக