புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_m10போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 12:40 am

First topic message reminder :

10 குழந்தைகள் உள்பட மேலும் 40 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கிறார்களா? அதிர்ச்சி தகவல்கள்

9 பேரை காணவில்லை

சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த 28–ந் தேதி நடந்த கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 36 தொழிலாளர்கள் உள்பட 72 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் மீட்புப்பணிகள் கடந்த 5 நாட்களாக இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து யூகிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் பேர் உயிருடனும், பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் நேற்று விபத்து நடந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் விபத்து குறித்த தகவல் மைய அதிகாரிகளிடம் ‘‘எங்களுடைய கிராமத்தைச் சேர்ந்த 9 பேரை காணவில்லை. அவர்கள் இந்த கட்டிடத்தில் தான் வேலை செய்தார்கள். அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. கண்டுபிடித்து தாருங்கள்’’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

உறவினர்கள் யாரும் இல்லை

உடனே அதிகாரிகள் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அடையாளம் தெரியாமல் வைக்கப்பட்டு இருந்த 20 உடல்களை காட்டினர். ஆனால் அதில் யாரும் தங்களுடைய ஊரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

மேலும், ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த சீமாத்தலம் என்பவரும், ‘‘தங்களது உறவினர்கள் சச்சிநாராயணன் (வயது 50), அவருடைய மனைவி ஜெயம்மா (40), வாலிபர் திருப்பதி ஆகிய 3 பேரையும் காணவில்லை, அவர்கள் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா?’’ என்று தகவல் மைய அதிகாரிகளிடம் கேட்டார்.

அதிகாரிகள், அவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பிணங்களை காண்பித்தனர். அதில் தங்களது உறவினர்கள் யாரும் இல்லை என்று சீமாத்தலம் கூறினார்.

மேலும் 30 பேர் சிக்கியிருக்கலாம்

இதையடுத்து உறவினர்களால் தேடப்பட்டு வரும் நபர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்ட பகுதியில் தங்களது உறவினர்களை தேடி வருகின்றனர். இதனால் கட்டிட இடிபாடுகளில் மேலும் 30 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் விபத்து நடந்த கட்டிடத்திலேயே தங்கி பணியாற்றியதாகவும், 10–க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.

இதனால் அந்த குழந்தைகளின் கதி என்னவென்று தெரியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் விபத்து நடந்த பகுதியைச் சுற்றிலும் துர்நாற்றம் பயங்கரமாக வீசுகிறது.

தற்போது வரை 50 சதவீத கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு உள்ளது. தரைத்தள கட்டிட இடிபாட்டு பகுதி இன்னும் அகற்றப்படவில்லை. எனவே அந்த இடிபாடு பகுதிகளை அகற்றம் செய்யும்போது மேலும் பல உடல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 12:52 am

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: சென்னையில் நடந்த 11 அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ அனுப்பியுள்ளது.

பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானாக முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது ஆணையம். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஆணையம், 2 வாரங்களுக்குள் இதற்குப் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் நோட்டீஸில் கூறுகையில், இந்த விபத்து, கட்டுமானத் தவறுகள், குறைபாடுகள், பில்டரின் விதிமீறல் ஆகியவற்றின் காரணமாக நடந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதையே பத்திரிகைச் செய்திகளும் தெரிவிக்கின்றன. அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். பல உயிர்கள் இதில் பலியாகியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 12:58 am


72 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளைஞர் தனது செருப்பைக் கேட்ட வினோதம்

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 72 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர் இன்று உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட மறு நிமிடம் அவர் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது என்னவென்றால், "எனது செருப்பு எங்கே?".

சென்னை போரூர் அருகில் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த மூன்றாவது நாள் காலையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் மோப்ப நாய் ரஸ்டாம் இடிபாடுகளுக்கிடையே மோப்பம் பிடித்து வந்தது. அவ்வாறு மோப்பம் பிடித்தபோது கான்கிரீட் சிலாப் ஒன்றின் துளைக்குள் கண்களை செலுத்தியவாறே நாய் குரைக்க ஆரம்பித்தது.

அது குரைக்க ஆரம்பித்தவுடன், இடிபாடுகளுக்கிடையே யாரேனும் இருக்கக்கூடும் என அதன் பயிற்றுனருக்கு புரிந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட மீட்புப்படையினர் எட்டு மணி நேரம் போராடி மஞ்சள் நிற டீ-சர்ட் அணிந்த ஒடிசாவை சேர்ந்த 29 வயதான விகாஸ் குமார் என்பவரை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட பின் அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? - தனது செருப்பு எங்கே என்று அவர் மீட்பு படையினரைப் பார்த்து கேட்டார்.

அவருக்கு பொறுமையாக பதிலளித்த மீட்பு படை தலைவரான எம்.கே.வர்மா, புதிய செருப்பை தானே அவருக்கு வாங்கி தருவதாக தெரிவித்தார். பின்னர் பாட்டிலில் வழங்கப்பட்ட குடிநீரை அருந்திய அவர் வானத்தை பார்த்தவாறே நீண்ட நேரம் சோகத்துடன் உட்கார்ந்திருந்தது மற்றவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 1:16 am

தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதி

சென்னை: கட்டட இடிபாடுகளில் சிக்கிய,தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர் களுக்கான தங்குமிடங்களை, அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால், அவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை, மவுலிவாக்கத்தில், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிய தமிழகம், ஆந்திரா, ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.அவர்களை மீட்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கி யவர்களின் உறவினர்கள், அவர்களை தேடி, சம்பவ இடத்தில் குவிந்தனர்.ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், இடிந்த கட்டடம் அருகே அமைந்துள்ள, ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு உணவு வழங்கப்பட்டது.ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்க, இடம் ஒதுக்கப்படவில்லை. உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பள்ளிக்கு சென்றால், அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால், அவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். இது குறித்து, உளுந்தூர்பேட்டை அடுத்த, கணையாழி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறியதாவது:என் தம்பி திருவேங்கடம், 28, இந்த கட்டடத்தில், வேலை செய்து வந்தார். அவரை தேடி வந்தேன். இதுவரை விவரம் தெரியவில்லை. நாங்கள் தங்க இடம் இல்லை. உணவும் ஏற்பாடு செய்யவில்லை. தம்பி நிலை குறித்த தகவலையும், அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர்களுக்கு, தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்படாதது குறித்து, இடிந்த கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள, தகவல் மையத்தில் அமர்ந்திருந்த, ஆர்.டி.ஓ.,விடம் கேட்டபோது, 'தமிழகத்தை சேர்ந்தவர்கள் எங்காவது தங்கிக் கொள்வர் எனக்கருதி, எந்த ஏற்பாடும் செய்யவில்லை' என, கூலாக பதில் அளித்தார்.




போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 1:16 am

ஆந்திர தொழிலாளர்களின் உடல்-உறவினர்களிடம் ஒப்படைப்பு

கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள், ஆந்திராவிற்கு எடுத்து செல்லப்பட்டன. அவர்களின் உறவினர்களும், ஆந்திர அரசு ஏற்பாடு செய்த பஸ்சில், புறப்பட்டு சென்றனர். மவுலிவாக்கத்தில், இடிந்த கட்டடத்தில், ஆந்திராவை சேர்ந்த, 35 குடும்பத்தினர் தங்கி, வேலை செய்து வந்தனர்.

கட்டட இடிபாடுகளில், ஆந்திர தொழிலாளர்கள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தேடி, ஆந்திராவிலிருந்து உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு உதவ, ஆந்திர மாநில அதிகாரிகளும், சென்னையில் முகாமிட்டுள்ளனர்.நேற்று மாலை வரை, ஆந்திராவை சேர்ந்த, நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. எட்டு பெண்கள் உட்பட, 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல் மருத்துவப் பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர்களின் உடல், ஆம்புலன்ஸ் மூலம், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.உடன் செல்வோருக்கு, ஆந்திர அதிகாரிகள், 2,000 ரூபாய் பணம் கொடுத்து அனுப்புகின்றனர்.

அவர்களின் உறவினர்கள் செல்ல, ஆந்திர அரசு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.நேற்று மாலை, உயிர் தப்பிய தொழிலாளர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் என, 50 பேர், பஸ்சில் ஆந்திரா புறப்பட்டு சென்றனர்.



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 1:17 am

பணமின்றி பரிதவித்த தொழிலாளி -போக்குவரத்து ஆய்வாளர் உதவி:

பணம் இல்லாமல் பரிதவித்த, ஆந்திர தொழிலாளிக்கு, வட்டார போக்குவரத்து ஆய்வாளர், 1,000 ரூபாய் கொடுத்து உதவினார்.ஆந்திராவை சேர்ந்தவர் சீனு. இவர் தன் மனைவியுடன், சென்னையில் இடிந்து விழுந்த கட்டடத்தில், வேலை செய்து வந்தார். இவர் உயிர் தப்ப, இவரது மனைவி நிலை என்னவென்று தெரியவில்லை. மனைவி நிலை அறிய, நான்கு நாட்களாக, அங்கேயே உள்ளார். கையில் பணமின்றி தவித்தார். இதை அறிந்த, ஆந்திர மாநிலம், செவலூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுதாகர்ரெட்டி, தன் சொந்தப் பணம், 1,000 ரூபாயை, சீனுவிற்கு கொடுத்து உதவினார்.

மீட்பு படையினருக்கு உதவும் ஐந்து மோப்ப நாய்கள்:

இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்க, ஜான்சி, மேரி, பினா, ஜாக், ஜூலி, ருஸ்தம் என, ஐந்து மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தங்கள் மோப்ப சக்தி மூலம், இடிபாடுகளில் சிக்கியிருப்போரை கண்டறிகின்றன. இடிபாடுகளில் சிக்கியோர் உயிரோடு இருந்தால், பயிற்சியாளர்களை பார்த்து குரைக்கின்றன. இறந்த உடலாக இருந்தால், காலால் தரையைக் கீறுகின்றன. இதை வைத்து, மீட்பு படையினர் உடனடியாக களத்தில் இறங்குகின்றனர்.

பெரிய இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை:

பேரிடர் மீட்பு குழு டி.ஐ.ஜி., பேட்டி:''இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை, உயிரோடு மீட்க, பெரிய அளவிலான இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை,'' என, தேசிய பேரிடர் மீட்பு குழு டி.ஐ.ஜி., செல்வம் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் அளித்த பேட்டி:

இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்?

இடிபாடுகளில் சிக்கியவர்கள், எத்தனை பேர் என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டோரும், மழைக்கு ஒதுங்கியவர்களும், இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்.

இடிபாடுகளில் குழந்தைகள் சிக்கியுள்ளனரா?

அதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. இதுவரை குழந்தைகள் யாரும் மீட்கப்படவில்லை.

மீட்பு படையினருக்கு இடையில், ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறப்படுகிறதே?

தினசரி காலை மற்றும் மாலை, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள, அனைத்து துறை அதிகாரிகளும், அன்று மேற்கொண்ட நடவடிக்கை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்து, முடிவு செய்கிறோம்.

மீட்பு பணி மந்தமாக நடப்பதாக பேசப்படுகிறதே?

இடிபாடுகளில் சிக்கியவர்களை, உயிரோடு மீட்க வேண்டும் என்பதற்காக, கவனமுடன் செயல்படுகிறோம். இதனால், பெரிய அளவிலான இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை.இதன் காரணமாக, பணி மந்தமாக உள்ளதுபோல் தெரியலாம். அனைவரையும் உயிரோடு மீட்க வேண்டும் என்ற துடிப்புடன் பணிபுரிகிறோம்.

இவ்வாறு, அவர் பதிலளித்தார்.




போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 1:18 am

மீட்பு குழுவில் மோதல்:

கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள, தீயணைப்பு வீரர்களுக்கும், கமாண்டோ படையினருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மவுலிவாக்கத்தில், கட்டட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும், தொழிலாளர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தமிழக கமாண்டோ படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், மீட்பு பணி மந்தமாக நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில், நேற்று காலை 10:45 மணிக்கு, ஜெயலட்சுமி என்ற பெண்ணை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, அவரை தீயணைப்பு வீரர்கள் சூழ்ந்து நின்றனர். அவர்களை கலைந்து செல்லும்படி, கமாண்டோ படையினர் கூறினர். இதற்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்களை சமாதானப் படுத்தினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 4:00 pm

மவுலிவாக்கம் பலி 58 ஆக அதிகரிப்பு: இன்னும் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது.

கடந்த 28-ம் தேதி மாலை மவுலிவாக்கத்தில் 11 அடுக்க மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து 6-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளில் 72 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை சடலமாகவும் உயிருடனும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80- க்கும் மேலாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அரசு வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர், இன்னும் 25 முதல் 30 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்றார்.

இடிந்து விழுந்த கட்டிடத்தில் மொத்தம் 72 தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 58 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி இன்னும் முடிவடையாததால் மேலும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என தெரியாமல் மீட்புக் குழுவினரும், அரசு அதிகாரிகளும் குழப்பமடைந்துள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிலாளர்கள் சிலர் குடும்பத்துடன் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. குழந்தைகளும் உடன் இருந்ததாக கூறுகின்றனர். சனிக்கிழமை வேலைக்கு வராதவர்களும் மாலையில் சம்பளம் வாங்குவதற்காக வந்துள்ளனர். மழை பெய்ததால், அனைவரும் கட்டிடத்துக்குள் சென்று நின்றுள்ளனர். அதனால், கட்டிட இடிபாடுகளில் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அண்ணனை காணவில்லை, தம்பியைக் காணவில்லை, கணவரை காணவில்லை என பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதனால், இன்னும் 30-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

மீட்புப் பணி முடிவது எப்போது?

மவுலிவாக்கம் கட்டிட விபத்து மீட்புப் பணிகள் இன்னும் 2 நாட்களில் முடியும் என்று டிஐஜி தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு டிஐஜி செல்வம் கூறுகையில், "இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவடையும்" என்றார்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை அனுப்பும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தையடுத்து, அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடிந்த கட்டிடத்தில் 200 தொழிலாளர்கள்?

ஆந்திராவைச் சேர்ந்த ராமு என்ற தொழிலாளி அளித்த தகவலின்படி, இடிந்த கட்டிடத்தில் 200 தொழிலாளர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

கல்லூரி மாணவர் பலியான சோகம்

மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியான கல்லூரி மாணவர் ஒருவர், விடுமுறையில் வேலைக்கு வந்தபோது சோக நிகழ்வுக்கு ஆளானார் என்பது தெரியவந்துள்ளது. அவரது பெற்றோர் கதறினர்.

உயிர் பிழைத்தவர்கள் பேட்டி

கட்டிட விபத்தில் சிக்கிய தாங்கள் உயிர் பிழைப்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று உயிர் தப்பியவர்கள் உருக்கமான பேட்டியை அளித்தனர்.

பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் கோரிக்கை

இதனிடையே, மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகில் இருந்த சில வீடுகள் சேதமடைந்தன. அந்த வீடுகளை கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வசித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 4:01 pm

விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவு

மவுலிவாக்கம் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், நீதிபதி சு.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணிகளும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 27 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாயும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டதோடு, உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு அரசு செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு செலவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதோடு, அவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை 29.6.2014 அன்று நேரில் பார்வையிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறி, நிவாரண உதவியினையும் நான் வழங்கினேன்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், ஓய்வு பெற்ற நீதிபதி சு. ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தினை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விசாரணை ஆணையம்,

1. 28.6.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததன் விளைவாக 55 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் படுகாயமடைந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான அனைத்து அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள்

2. பல கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழப்பதற்கும், படுகாயம் அடைந்ததற்கும் காரணமான இந்தத் துயரச் சம்பவம் யாருடைய அலட்சியப் போக்கினால் நடந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு பொறுப்பானவர்களை முடிவு செய்தல்

3. இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில், கடைபிடிக்க வேண்டிய தீர்வு முறைகளை பரிந்துரை செய்தல்

ஆகியவற்றை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையினை அளிக்கும். விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கும்". இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 4:51 pm


பணத்தை திருப்பித் தருகிறேன்: கட்டுமான நிறுவன அதிபர் அறிவிப்பு



இடிந்து விழுந்த 11 மாடி கட்டி டத்தை கட்டிய மதுரையை சேர்ந்த பிரைம் சிருஷ்டி நிறுவனத் தின் உரிமையாளர் மனோகரன், அவரிடம் வீடு வாங்கியவர் களுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.

அதில், “நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன்” என்று கூறியிருக் கிறார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். அவர் விடுதலையாகி வந்த பிறகு பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக் கையை எடுப்பார் என்று வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டேங்க் உடைந்ததால் விபத்தா?

“அடித்தளம் சரியாக போடாததால் தான் மழை பெய்ததும் கட்டிடம் இடிந்துவிட்டது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், 11 மாடி கட்டிடத்தின் மேலே கட்டப்பட் டிருந்த பிரம்மாண்ட தண்ணீர் தொட்டியில் மின்னல் தாக்கிய தில் தண்ணீர் தொட்டி உடைந்து கட்டிடத்தின் மேலே விழுந்ததால் தான் மொத்த கட்டிடமும் இடிந்து விட்டது. மற்றபடி கட்டிட வடி வமைப்பில் எந்த தவறும் இல்லை” என்று கட்டுமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்டிட வடிவமைப் பாளர் விஜய் பர்காத்ரா முறை யான அங்கீகாரம் பெற்றவர் அல்ல என்றும், 11 மாடிகள் கட்டுவதற்கு அவருக்கு போதிய பயிற்சி இல்லை என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆந்திர தொழிலாளர்கள் 14 பேரை காணவில்லை

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இருந்து 39 பேர் மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட பணிக்கு வந்தனர். இவர்களில் 15 பேர் கட்டிட விபத்தில் இறந்துள்ளனர். 10 பேர் காயமடைந்து மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 14 பேரை காணவில்லை.

கைதான 6 பேரிடம் விசாரணை

பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுப்பிரமணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுமான நிறுவன உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து, இன்ஜினீயர்கள் துரைசிங்கம், விஜய், சங்கரராமகிருஷ்ணன், வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிந்தது தொடர்பாக இவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 2:24 am


முகலிவாக்க கட்டட விபத்து: மீட்பு பணி நிறைவு பெற்றதாக அறிவிப்பு!

சென்னை: போரூர் அருகேயுள்ள முகலிவாக்கத்தில் நடந்த 11 மாடி கட்டட விபத்தில் மீட்புப்பணிகள் நிறைவு பெற்றதாக தமிழக வருவாய்த்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த 28ஆம் தேதி மாலை சென்னை, போரூர் அருகேயுள்ள முகலிவாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

இந்த கட்டட இடிபாடுகளுக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 750 போலீசார், 360 தீயணைப்புப் படை வீரர்கள், 402 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விபத்தில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தமிழக தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''முகலிவாக்கத்தில் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி முடிவடைந்து விட்டது. இந்த கட்டட விபத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயம் அடைந்தள்ளனர்.

மேலும், விபத்து நடந்த பகுதியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படடு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை காவல்துறையினர் கடடுப்பாட்டில் எடுத்து கண்காணித்து வருவார்கள். முகலிவாக்கம் மக்களுக்கு குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளையும் செய்துதர வேண்டியுள்ளது'' என்றார்.



போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக