புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
by mohamed nizamudeen Today at 9:44 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நான் விபத்தில் சிக்கியிருந்த நேரத்தில் எனக்காக பிரார்த்தனை செய்த என் ஈகரை உறவுகளுக்கு கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ராஜா துவங்கியிருந்த “அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்” திரியைப் முழுதாகப் படித்ததும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. இவ்வளவு அன்பான உள்ளங்களில் நான் இருக்கிறேன் என்பதை எண்ணும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது!
எனக்கு விபத்து நேர்ந்து மீண்டும் ஈகரையில் இணைந்ததும் அதைப்பற்றி எழுத நினைத்தேன், ஆனால் அந்தச் சம்பவங்களை என்னால் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. அதைப் பற்றி நினைக்கத் துவங்கினாலே இரத்த அழுத்தம் அதிகமாகியது, தலையில் அடிபட்ட இடத்தில் வலி ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் எழுத வேண்டும் என்பதை மறந்தே போயிருந்தேன், ஆனால் இன்று மீண்டும் ராஜா துவங்கிய திரியைப் படித்ததும் எனக்கு நிகழ்ந்த விபத்து குறித்து எழுத வேண்டும் என்று எண்ணித் துவங்கிவிட்டேன்!
என் மகள் பிறந்து இரண்டு மாதம் ஆன மகிழ்ச்சியில் தமிழகம் சென்றேன், ஒருவாரம் என் மகளைவிட்டு வெளியில் எங்கும் செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்தேன். (இதற்குமுன் தமிழகம் வந்தால் வீட்டில் சில விநாடிகள் கூட இருப்பதில்லை) இந்நிலையில் நண்பர் ஒருவர் சிறாவயல் மஞ்சுவிரட்டு அருமையாக இருக்கும், வாருங்கள் செல்வோம் என்றார். நானும் சரி என்று கிளம்பிவிட்டேன். ஆனால் அங்கு சென்றதும் தான் தெரிந்தது அது மஞ்சுவிரட்டு இல்லை, ஜல்லிக்கட்டாக மாற்றிவிட்டார்கள் என்று. நின்று பார்க்கக்கூட இடமில்லாததாலும் வெயில் அதிகமாக இருந்ததாலும் வீட்டிற்கு செல்வோம் என்று கிளம்பிவிட்டோம்.
சிறாவயலில் இருந்து சில கிமீ தொலைவில், காரைக்குடிக்கு அருகில் மானகிரி என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தோம், நான் தான் இருசக்கர வாகனத்தை ஓட்டி வண்டு கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது, அதனால் 30கிமீ மேல் வேகமாகச் செல்ல முடியாது, அதனால் மிக மெதுவாகத்தான் வந்துகொண்டிருந்தேன். திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எதிரே வந்த கார் (bolero) நான் வந்து கொண்டிருந்த பக்கமாக வந்து என்னை அடித்துவிட்டது. என் தலை அந்தக் காரில் மோதி சாலையிலிருந்து வெளியே தூக்கியெறிந்ததுதான் தெரியும், அடுத்த அரை மணி நேரம் எனக்கு என்ன ஆனது என்றே தெரியாமல் போயிருந்தது. (கீழே விழும் பொழுது, ராகவேந்திரா... என் மகளை விட்டுவிட்டுச் சாகப் போகிறேனா என்று நினைத்துக் கொண்டுதான் விழுந்தேன்)
அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள், யாரும் உதவவில்லை. காரணம் நான் இரத்த வெள்ளத்தில் மிதந்தேன். அதனால் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே விட்டுவிட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு நண்பர், அவர் ஒரு மெக்கானிக். எனது பைக்கில் ஈகரை.காம் என்று எழுதியிருந்ததைப் பார்த்து நான் தான் என அடையாளம் தெரிந்து என்னை ஓடோடி வந்து தூக்கியுள்ளார். அவர் தூக்கி என் முகத்தில் தண்ணீர் அடித்து இரத்தத்தைக் கழுவியதும் எனக்கு சுயநினைவு வந்துவிட்டது. அவரை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தேன், ஆனால் அவர் யார் என அடையாளம் தெரியவில்லை. கண்பார்வை மங்கிப் போயிருந்தது. பிறகு அவரை அறிமுகம் செய்து கொண்டார். கொஞ்சம் பொறுங்கள் ஆம்புலன்ஸ் வந்துவிடும் என்று கூறினார்.
அப்பொழுதுதான் எனக்கு நினைவு வந்தது, நம் பின்னால் ஒருவர் இருந்தாரே என்று! அவரைத் தேடினேன், அவர் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார். நல்லவேளை அவருக்கு கால் முட்டியில் மட்டுமே அடிபட்டிருந்தது. வேறு எதுவும் ஆகவில்லை. தங்களை விபத்துக்குள்ளாக்கியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்றேன். அப்பொழுதுதான் அவர் கூறினார், அடிபட்டது எனக்கு இல்லை, உங்களுக்குத்தான் தலையிலிருந்து இரத்தம் பீய்ச்சியடிக்கிறது, இதில் நீங்கள் எதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்கிறீர்கள் என்று!
அப்பொழுதுதான் நன்றாக உற்றுப் பார்த்தேன், நான் கீழே விழுந்து கிடந்த இடம் முழுதும் இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது, என் உடல் முழுதும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தலை உடைந்து தனியாக தொங்கிக் கொண்டிருந்தது. இவற்றைப் பார்த்ததும் என் மகளின் முகம் என் கண் முன் வந்து நின்றது. என் மகளுக்காக நான் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னை மயக்க நிலையிலிருந்து மீட்டெடுத்து எழுந்திரிக்க வைத்தது.அங்கு நின்ற ஒருவரிடம் அவர் தோளில் போட்டிருந்த துண்டைக் கேட்டு வாங்கி என் தலையை இறுகக் கட்டினேன். நான் எழுந்ததைப் பார்த்ததும் மெக்கானிக் நண்பர், ஆம்புலன்ஸ் வர தாமதாகும் என நினைக்கிறேன், உங்களால் என் பைக்கில் உட்கார முடியுமா என்றார். உடனடியாக சரி என்று சொல்லி அமர்ந்து அவருடன் மருத்துவமனைக்குச் சென்றேன். மூன்று கிமீ தூரம் இருக்கும் என நினைக்கிறேன், அங்கு செல்வதற்குள் என் மனைவியின் அத்தை மகன் தகவல் அறிந்து அங்கு வந்து நின்றார்.
என்னை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு டெட்டனஸ் ஊசி மட்டும் எனக்கு போடுங்கள் என்று கூறினேன். அதற்கே அங்கிருந்த டாக்டர்கள், வார்டு பாய்கள் ரூ500, ரூ1000 எனப் பிடுங்கிக் கொண்டார்களாம். பணம் தரவில்லையென்றால் இவரை வெளியே அனுப்ப முடியாது என்றிருக்கிறார்கள். காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து என்னை அங்கு கொண்டு சென்றது. அரசு மருத்துவமனையே பரவாயில்லை என்னும் அளவிற்கு இருந்தது அவர்களின் மருத்துவம். எனக்கு தலையில் மரத்துப் போகும் ஊசி (Numbness) எதுவும் போடாமல் தைக்கத் துவங்கிவிட்டார்கள். அந்தச் சூழ்நிலையிலும் எனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டு எழுந்து அடிக்கப் போய்விட்டேன். அதன் பிறகு ஊசிபோட்டு (தலைமுடியைக் கூட நீக்காமல்) தையல் போட்டு இரத்தம் வெளியேறாமல் காப்பாற்றினார்கள்! ஆனால் MRI செய்து பார்த்துவிட்டு இவருக்கு மூளையில் இரத்தக் கசிவு அதிகமாக உள்ளது, இவரை எங்களால் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டார்கள்!
மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று உடனடியாகக் கிளம்பிவிட்டோம். எனக்கு மயக்கம் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தேன். திருப்பத்தூர் சென்றதும் (அங்கு ஒரு கடையில் மாதுளம் பழ ஜூஸ் நன்றாக இருக்கும், மானிக் வீட்டிற்குச் சென்ற பொழுது ஒருமுறை குடித்திருக்கிறேன்) எனக்கு மாதுளம் பழ ஜூஸ் வேண்டும் என்றேன். என் அண்ணனும், மாமனாரும் அதெல்லாம் முடியாது, உடனடியாக நாம் மதுரைக்கு போக வேண்டும் என்றனர். முடியாது எனக்கு ஜுஸ் வேண்டும் என்று கூறி ஜூஸ் வாங்கிவரச் சொல்லி குடித்துவிட்டுத்தான் சென்றேன்.
பாதி தூரம் சென்றது வரை தான் தெரியும், அதற்குமேல் மயக்கமாகிவிட்டேன். என் உறவினர் ஒருவர் அங்கு வேலை மருத்துவராக உள்ளார், அவரிடம் போகும் பொழுதே அழைத்து விவரத்தைச் சொல்லியதால் நாங்கள் மருத்துவமனைக்குள் செல்லும்பொழுதே வெளியில் தயாராக வந்து நின்றிருக்கிறார்கள். அவர்கள் வந்து என்னை தூக்க முயற்சிக்கும் பொழுது (நன் என்ன சின்ன உருவமா, எளிதாக தூக்கிச் செல்ல) நான் மீண்டும் கண்விழித்து என்ன வேண்டும் என்றேன், மருத்துவமனைக்கு வந்துவிட்டோம், உள்ளே செல்ல வேண்டும் என்றனர். அவ்வளவு தானே நகருங்கள் என்று நானே எழுந்து stretcher-ல் படுத்துக் கொண்டேன்.
உள்ளே தள்ளிச் சென்றது மட்டுமே என் நினைவில் இருந்தது, அதன் பிறகு மறுநாள் தான் நான் ICU-ல் இருப்பதை உணர்ந்தேன். தலைவலி வந்தால் கூட மாத்திரை சாப்பிட மாட்டேன், ஆனால் அதற்கெல்லாம் சேர்த்தார்போல் ஊசியும் மருந்தும் அங்கு தந்தார்கள். மருத்துவமனையில் இருந்த நாட்கள் மிகத் துயரம் நிறைந்ததாகவே இருந்தது. ICU-லிருந்து வெளியே வந்ததும் படுத்திருக்க முடியாமல் எழுந்து நடக்கத் துவங்கிவிட்டேன். அப்பொழுது எதார்த்தமாக என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து நானே பயந்துவிட்டேன். முகம் கருத்து, தலை வீங்கி ஒரு பிணத்தைப் போலக் காட்சியளித்தது.
நம் உறவுகள் அனைவரும் அழைத்து நலம் விசாரித்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தி சீக்கிரம் குணமடைய வைத்தது. தற்பொழுது ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் எந்தப் பிரச்சனையும் இன்றி நலமுடன் உள்ளேன். முடி முளைத்தால் தலையில் வலி ஏற்படுவதால் கடந்த ஆறு மாதமாக தொடர்ந்து மொட்டை அடித்து வருகிறேன்! மேலும் வலது சுண்டிவிரலில் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியுள்ளது. என் மகள் பிறந்த நாளுக்குச் செல்லும் பொழுது செய்ய வேண்டும்.
இனிமேல் இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்!
நான் விபத்தில் சிக்கியிருந்த நேரத்தில் எனக்காக பிரார்த்தனை செய்த என் ஈகரை உறவுகளுக்கு கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ராஜா துவங்கியிருந்த “அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்” திரியைப் முழுதாகப் படித்ததும் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருவதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. இவ்வளவு அன்பான உள்ளங்களில் நான் இருக்கிறேன் என்பதை எண்ணும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது!
எனக்கு விபத்து நேர்ந்து மீண்டும் ஈகரையில் இணைந்ததும் அதைப்பற்றி எழுத நினைத்தேன், ஆனால் அந்தச் சம்பவங்களை என்னால் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. அதைப் பற்றி நினைக்கத் துவங்கினாலே இரத்த அழுத்தம் அதிகமாகியது, தலையில் அடிபட்ட இடத்தில் வலி ஏற்பட்டது. அதன் பிறகு மீண்டும் எழுத வேண்டும் என்பதை மறந்தே போயிருந்தேன், ஆனால் இன்று மீண்டும் ராஜா துவங்கிய திரியைப் படித்ததும் எனக்கு நிகழ்ந்த விபத்து குறித்து எழுத வேண்டும் என்று எண்ணித் துவங்கிவிட்டேன்!
என் மகள் பிறந்து இரண்டு மாதம் ஆன மகிழ்ச்சியில் தமிழகம் சென்றேன், ஒருவாரம் என் மகளைவிட்டு வெளியில் எங்கும் செல்ல மனமில்லாமல் வீட்டிலேயே இருந்தேன். (இதற்குமுன் தமிழகம் வந்தால் வீட்டில் சில விநாடிகள் கூட இருப்பதில்லை) இந்நிலையில் நண்பர் ஒருவர் சிறாவயல் மஞ்சுவிரட்டு அருமையாக இருக்கும், வாருங்கள் செல்வோம் என்றார். நானும் சரி என்று கிளம்பிவிட்டேன். ஆனால் அங்கு சென்றதும் தான் தெரிந்தது அது மஞ்சுவிரட்டு இல்லை, ஜல்லிக்கட்டாக மாற்றிவிட்டார்கள் என்று. நின்று பார்க்கக்கூட இடமில்லாததாலும் வெயில் அதிகமாக இருந்ததாலும் வீட்டிற்கு செல்வோம் என்று கிளம்பிவிட்டோம்.
சிறாவயலில் இருந்து சில கிமீ தொலைவில், காரைக்குடிக்கு அருகில் மானகிரி என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தோம், நான் தான் இருசக்கர வாகனத்தை ஓட்டி வண்டு கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது, அதனால் 30கிமீ மேல் வேகமாகச் செல்ல முடியாது, அதனால் மிக மெதுவாகத்தான் வந்துகொண்டிருந்தேன். திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எதிரே வந்த கார் (bolero) நான் வந்து கொண்டிருந்த பக்கமாக வந்து என்னை அடித்துவிட்டது. என் தலை அந்தக் காரில் மோதி சாலையிலிருந்து வெளியே தூக்கியெறிந்ததுதான் தெரியும், அடுத்த அரை மணி நேரம் எனக்கு என்ன ஆனது என்றே தெரியாமல் போயிருந்தது. (கீழே விழும் பொழுது, ராகவேந்திரா... என் மகளை விட்டுவிட்டுச் சாகப் போகிறேனா என்று நினைத்துக் கொண்டுதான் விழுந்தேன்)
அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள், யாரும் உதவவில்லை. காரணம் நான் இரத்த வெள்ளத்தில் மிதந்தேன். அதனால் இறந்துவிட்டதாகக் கருதி அப்படியே விட்டுவிட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு நண்பர், அவர் ஒரு மெக்கானிக். எனது பைக்கில் ஈகரை.காம் என்று எழுதியிருந்ததைப் பார்த்து நான் தான் என அடையாளம் தெரிந்து என்னை ஓடோடி வந்து தூக்கியுள்ளார். அவர் தூக்கி என் முகத்தில் தண்ணீர் அடித்து இரத்தத்தைக் கழுவியதும் எனக்கு சுயநினைவு வந்துவிட்டது. அவரை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தேன், ஆனால் அவர் யார் என அடையாளம் தெரியவில்லை. கண்பார்வை மங்கிப் போயிருந்தது. பிறகு அவரை அறிமுகம் செய்து கொண்டார். கொஞ்சம் பொறுங்கள் ஆம்புலன்ஸ் வந்துவிடும் என்று கூறினார்.
அப்பொழுதுதான் எனக்கு நினைவு வந்தது, நம் பின்னால் ஒருவர் இருந்தாரே என்று! அவரைத் தேடினேன், அவர் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தார். நல்லவேளை அவருக்கு கால் முட்டியில் மட்டுமே அடிபட்டிருந்தது. வேறு எதுவும் ஆகவில்லை. தங்களை விபத்துக்குள்ளாக்கியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்றேன். அப்பொழுதுதான் அவர் கூறினார், அடிபட்டது எனக்கு இல்லை, உங்களுக்குத்தான் தலையிலிருந்து இரத்தம் பீய்ச்சியடிக்கிறது, இதில் நீங்கள் எதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்கிறீர்கள் என்று!
அப்பொழுதுதான் நன்றாக உற்றுப் பார்த்தேன், நான் கீழே விழுந்து கிடந்த இடம் முழுதும் இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது, என் உடல் முழுதும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தலை உடைந்து தனியாக தொங்கிக் கொண்டிருந்தது. இவற்றைப் பார்த்ததும் என் மகளின் முகம் என் கண் முன் வந்து நின்றது. என் மகளுக்காக நான் வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னை மயக்க நிலையிலிருந்து மீட்டெடுத்து எழுந்திரிக்க வைத்தது.அங்கு நின்ற ஒருவரிடம் அவர் தோளில் போட்டிருந்த துண்டைக் கேட்டு வாங்கி என் தலையை இறுகக் கட்டினேன். நான் எழுந்ததைப் பார்த்ததும் மெக்கானிக் நண்பர், ஆம்புலன்ஸ் வர தாமதாகும் என நினைக்கிறேன், உங்களால் என் பைக்கில் உட்கார முடியுமா என்றார். உடனடியாக சரி என்று சொல்லி அமர்ந்து அவருடன் மருத்துவமனைக்குச் சென்றேன். மூன்று கிமீ தூரம் இருக்கும் என நினைக்கிறேன், அங்கு செல்வதற்குள் என் மனைவியின் அத்தை மகன் தகவல் அறிந்து அங்கு வந்து நின்றார்.
என்னை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு டெட்டனஸ் ஊசி மட்டும் எனக்கு போடுங்கள் என்று கூறினேன். அதற்கே அங்கிருந்த டாக்டர்கள், வார்டு பாய்கள் ரூ500, ரூ1000 எனப் பிடுங்கிக் கொண்டார்களாம். பணம் தரவில்லையென்றால் இவரை வெளியே அனுப்ப முடியாது என்றிருக்கிறார்கள். காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வந்து என்னை அங்கு கொண்டு சென்றது. அரசு மருத்துவமனையே பரவாயில்லை என்னும் அளவிற்கு இருந்தது அவர்களின் மருத்துவம். எனக்கு தலையில் மரத்துப் போகும் ஊசி (Numbness) எதுவும் போடாமல் தைக்கத் துவங்கிவிட்டார்கள். அந்தச் சூழ்நிலையிலும் எனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டு எழுந்து அடிக்கப் போய்விட்டேன். அதன் பிறகு ஊசிபோட்டு (தலைமுடியைக் கூட நீக்காமல்) தையல் போட்டு இரத்தம் வெளியேறாமல் காப்பாற்றினார்கள்! ஆனால் MRI செய்து பார்த்துவிட்டு இவருக்கு மூளையில் இரத்தக் கசிவு அதிகமாக உள்ளது, இவரை எங்களால் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டார்கள்!
மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று உடனடியாகக் கிளம்பிவிட்டோம். எனக்கு மயக்கம் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தேன். திருப்பத்தூர் சென்றதும் (அங்கு ஒரு கடையில் மாதுளம் பழ ஜூஸ் நன்றாக இருக்கும், மானிக் வீட்டிற்குச் சென்ற பொழுது ஒருமுறை குடித்திருக்கிறேன்) எனக்கு மாதுளம் பழ ஜூஸ் வேண்டும் என்றேன். என் அண்ணனும், மாமனாரும் அதெல்லாம் முடியாது, உடனடியாக நாம் மதுரைக்கு போக வேண்டும் என்றனர். முடியாது எனக்கு ஜுஸ் வேண்டும் என்று கூறி ஜூஸ் வாங்கிவரச் சொல்லி குடித்துவிட்டுத்தான் சென்றேன்.
பாதி தூரம் சென்றது வரை தான் தெரியும், அதற்குமேல் மயக்கமாகிவிட்டேன். என் உறவினர் ஒருவர் அங்கு வேலை மருத்துவராக உள்ளார், அவரிடம் போகும் பொழுதே அழைத்து விவரத்தைச் சொல்லியதால் நாங்கள் மருத்துவமனைக்குள் செல்லும்பொழுதே வெளியில் தயாராக வந்து நின்றிருக்கிறார்கள். அவர்கள் வந்து என்னை தூக்க முயற்சிக்கும் பொழுது (நன் என்ன சின்ன உருவமா, எளிதாக தூக்கிச் செல்ல) நான் மீண்டும் கண்விழித்து என்ன வேண்டும் என்றேன், மருத்துவமனைக்கு வந்துவிட்டோம், உள்ளே செல்ல வேண்டும் என்றனர். அவ்வளவு தானே நகருங்கள் என்று நானே எழுந்து stretcher-ல் படுத்துக் கொண்டேன்.
உள்ளே தள்ளிச் சென்றது மட்டுமே என் நினைவில் இருந்தது, அதன் பிறகு மறுநாள் தான் நான் ICU-ல் இருப்பதை உணர்ந்தேன். தலைவலி வந்தால் கூட மாத்திரை சாப்பிட மாட்டேன், ஆனால் அதற்கெல்லாம் சேர்த்தார்போல் ஊசியும் மருந்தும் அங்கு தந்தார்கள். மருத்துவமனையில் இருந்த நாட்கள் மிகத் துயரம் நிறைந்ததாகவே இருந்தது. ICU-லிருந்து வெளியே வந்ததும் படுத்திருக்க முடியாமல் எழுந்து நடக்கத் துவங்கிவிட்டேன். அப்பொழுது எதார்த்தமாக என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து நானே பயந்துவிட்டேன். முகம் கருத்து, தலை வீங்கி ஒரு பிணத்தைப் போலக் காட்சியளித்தது.
நம் உறவுகள் அனைவரும் அழைத்து நலம் விசாரித்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தி சீக்கிரம் குணமடைய வைத்தது. தற்பொழுது ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் எந்தப் பிரச்சனையும் இன்றி நலமுடன் உள்ளேன். முடி முளைத்தால் தலையில் வலி ஏற்படுவதால் கடந்த ஆறு மாதமாக தொடர்ந்து மொட்டை அடித்து வருகிறேன்! மேலும் வலது சுண்டிவிரலில் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியுள்ளது. என் மகள் பிறந்த நாளுக்குச் செல்லும் பொழுது செய்ய வேண்டும்.
இனிமேல் இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்!
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072051- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அனைவருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மறுபிறவி எடுக்க வேண்டிய நிலை வரும் அண்ணா.........
கவலை வேண்டாம்........... நீங்கள் இப்போதுதான் உங்கள் பிறவிப்பயனை அடையுங்கள்
கவலை வேண்டாம்........... நீங்கள் இப்போதுதான் உங்கள் பிறவிப்பயனை அடையுங்கள்
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072055- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மாமா அங்கள் முதலில் இங்குள்ள படங்களை மட்டும் எடுத்து விடுங்கள், என்னால் பார்க்க முடியவில்லை, இதயம் வலிக்கிறது. உங்ளை நேரில் பாரத்து வேதனைப் பட்டேன், மீண்டும் படங்களாக பார்க்க எனக்கு தைரியம் இல்லை, அன்புடன் வேண்டுகிறேன். நீங்கள் இன்னும் பல்லாயரம் ஆண்டுகள் வளமாக, நலமாக வாழ்ந்து, உங்கள் பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளை பார்க்க வேண்டும். உங்களநு நல்ல மனதிற்கு இனி இப்படி எதுவும் போன்று நடக்காது, நடக்கவும் கூடாது.
என்றும் சுபிட்சமாக வாழ்கவேன மனதார வாழ்த்துகிறேன் மாமா அங்கள்.
என்றும் சுபிட்சமாக வாழ்கவேன மனதார வாழ்த்துகிறேன் மாமா அங்கள்.
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072139- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
படித்தவுடன் மிகவும் மனது கனக்கிறது. எவ்வளவு மனது திடத்துடன் செயல் பட்டுள்ளிர்கள்.
உங்களை இந்த அளவுக்கு செயல் பட வைத்த ஆண்டவனுக்கு நன்றி!
இனி ஒரு போதும் இந்த மாதிரி உங்களுக்கு நிகழ கூடாது. நிறைந்த சுகத்துடன் வாழ்க வளமுடன்.
உங்களை இந்த அளவுக்கு செயல் பட வைத்த ஆண்டவனுக்கு நன்றி!
இனி ஒரு போதும் இந்த மாதிரி உங்களுக்கு நிகழ கூடாது. நிறைந்த சுகத்துடன் வாழ்க வளமுடன்.
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072140- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072143- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072146- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக மோசமான அனுபவம் இது. அதிலும் குழந்தை பிறந்திருக்கும் வேளையில்....... உங்களது மனநிலையை கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. அந்நேரத்தில் உங்களது மனைவியின் மனஉளைச்சல்..... வேண்டாம்.. இனி இப்படிப்பட்ட அனுபவம் யார்க்குமே நேரவேண்டாம். நடேசன் ஸார் சொன்னது போல மனதை வலிகொள்ள செய்கிறது இந்த படங்கள்.
நல்லவர்களை சோதித்து பார்ப்பது கடவுளுக்கு என்றும் வாடிக்கை தானே..? ஆனாலும், எப்போதும் கைவிட மாட்டான். உங்களது கொள்ளு பேரன்களின் லூட்டிகளை எல்லாம் நிச்சயம் காணச்செய்வான் ஆண்டவன்.
நல்லவர்களை சோதித்து பார்ப்பது கடவுளுக்கு என்றும் வாடிக்கை தானே..? ஆனாலும், எப்போதும் கைவிட மாட்டான். உங்களது கொள்ளு பேரன்களின் லூட்டிகளை எல்லாம் நிச்சயம் காணச்செய்வான் ஆண்டவன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072172படிக்கும் போதே கண்கள் கலங்குகின்றது . படங்கள் பார்க்க தைரியம் இல்லை .
உங்களுக்கு உள்ள மனதைரியம்தான் உங்களுக்கு பாதி வைத்தியம் என்று தெரிகிறது .
என்றும் நலமுடம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072203- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிக்கவே ரொம்ப பயமாய் இருக்கு சிவா ! உங்கள் தலை இல் தழும்பை பார்த்தாலே என் மனசு நடுங்குகிறது, உங்கள் மனைவி பாவம் சின்னவ, அந்த நேரத்தில் என்னமாய் இருந்தாளோ?
என்னவோ போராதா காலம் சிவா, நல்லபடி தேறி வந்திர்களே, ரொம்ப சந்தோசம். உங்கள் மன திடம் தான் உங்களுக்கு பெரும் பலம் என்று நம்புகிறேன்.
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
என்னவோ போராதா காலம் சிவா, நல்லபடி தேறி வந்திர்களே, ரொம்ப சந்தோசம். உங்கள் மன திடம் தான் உங்களுக்கு பெரும் பலம் என்று நம்புகிறேன்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1072219- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அதிகம் சோதிப்பான் நல்லவர்களை ஆண்டவன்
அதிகம் காப்பான் நல்லவர்களை ஆண்டவன்
சோதித்து விட்டான், இனி என்றும் நன்றாய் காப்பான்..
அதிகம் காப்பான் நல்லவர்களை ஆண்டவன்
சோதித்து விட்டான், இனி என்றும் நன்றாய் காப்பான்..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
#1081258- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஐயோ.. படங்கள் பார்த்து உண்மையில் அழுதுவிட்டேன் தல.. இது வரை இந்த தகவல் தெரியாம போச்சு.. கடவுள் உங்களுடன் இருக்கிறார்.. உங்களுக்கு நல்ல மன தைரியம்.. இந்த நிலை யாருக்கும் நடக்க கூடாது..
நீண்ட நாள் நலமுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![ஜனவரி 16 - நான் மறுபிறவி எடுத்த நாள் குறித்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! - Page 2 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நான் என் அலைபேசியில் பயன்படுத்தும் அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
» உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்...
» Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களின் அண்ணன் திரு சின்னதுரை M.A.B.L அவர்கள் இன்று காலை கோவையில் இயற்கை எய்தினார்கள்.
» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
» உங்களுடன் நான்
» உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்...
» Dr.சுந்தரராஜ் தயாளன் அவர்களின் அண்ணன் திரு சின்னதுரை M.A.B.L அவர்கள் இன்று காலை கோவையில் இயற்கை எய்தினார்கள்.
» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
» உங்களுடன் நான்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|