புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
3 Posts - 6%
prajai
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
2 Posts - 4%
viyasan
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
Rutu
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
சிவா
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
2 Posts - 15%
Rutu
அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_m10அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 2:32 am

விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாமல் அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.


திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்:

ஜெயலலிதா ஆட்சியில் விலைவாசி நாளுக்கு நாள் கொடிய விஷம்போல் ஏறிக் கொண்டே போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை மக்கள் அளித்து விட்டார்கள் என்ற மமதையில் அதிமுக ஆட்சியினர் மக்கள் படும் வேதனைகளை எண்ணிப் பார்க்கவே மறுக்கிறார்கள். அவர்களுக்குள்ள முதல் கவலை பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? மத்தியில் யாரையாவது பிடிக்கலாமா? யாராவது உதவிட முன் வருவார்களா? அதற்காக என்ன செய்தாலும் பரவாயில்லை என்பது பற்றித்தான். திமுக ஆட்சியில் இருந்தபோது விலைவாசி பற்றி எத்தனை அறிக்கைகளை விட்டார்கள்? இப்போது கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. ஏன், காய்கறி விலையில் தொடங்கி, எதையெடுத்தாலும் விலை உயர்வுதான் .அதைப்பற்றிக் கவலைப்பட்டு, இந்த ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுக்க முன் வருகிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக அமையும். 14.10.2007ல் ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்தார்.

அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் சிமென்ட், மணல், செங்கல், கம்பி, ஜல்லி போன்ற கட்டுமானப் பொருள்கள் என்ன விலை விற்றன? ஆனால் திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு இவை விலை உயர்ந்து விட்டன என்று சுட்டிக்காட்டி, இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக கட்டுமானத் தொழில் நலிவடைந்து விட்டதோடு, இதையே நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டு, அதற்காக 15.10.2007 இல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதை மக்கள் மறந்திருப்பார்கள் என்றோ அல்லது யார் நினைவூட்டப் போகிறார்கள் என்றோ அதிமுக ஆட்சியினர் இன்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா அவ்வாறு அறிக்கை விட்டபோது, சிமென்ட் விலை ரூ.270 என்று குறிப்பிட்டிருந்தார். அந்த விலையைக் குறைக்க திமுக ஆட்சியில் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன தெரியுமா? சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அதிபர்களை அழைத்துப் பேசினோம்.

விலையைக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் அதனையேற்று சிமென்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு ரூ.20 குறைக்க ஒப்புக் கொண்டார்கள். அப்போதே அது செய்தியாக வெளிவந்தது. சிமென்டை கொள்முதல் செய்து, ஒரு மூட்டை சிமென்ட் சலுகை விலையில் ரூ.200 வீதம் விற்பனை செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. 2007 - 2008 இல், 31.3.2008 வரை 48,496 மெட்ரிக் டன் சிமென்டும் 2008 - 2009 இல் 5 லட்சத்து 63 ஆயிரத்து 955 மெட்ரிக் டன்னும் 2009 - 2010இல் 9 லட்சத்து 79 ஆயிரத்து 330 மெட்ரிக் டன்னும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அரசே தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலை குறைத்து விற்க நடவடிக்கை எடுத்ததால், வெளிச் சந்தையிலும் சிமென்ட் விலை கணிசமாகக் குறைந்தது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? எந்த சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தையாவது அழைத்து விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா? மதுவகைகளின் விலையை உயர்த்திட மறைமுக பேரத்தில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறதே தவிர, சிமென்ட் விலை உயர்வு பற்றி அவர்களுக்கு என்ன கவலை? திமுக ஆட்சியில் சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.200 என்று விற்கப்பட்ட போதே, அதற்காகப் போராட்டம் நடத்த அறிக்கை விட்ட இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தற்போது சிமென்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.340 என்றும், ரூ.350 என்றும் விற்கப்படுகின்ற இந்த நேரத்தில் அதைக் குறைக்கவும், கட்டுமானத் தொழிலைக் காப்பாற்றிடவும் எடுத்த நடவடிக்கை என்ன? கட்டுமான பொருள்களின் இந்த விலை உயர்வு பற்றி,அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் வெளியிட்ட செய்தியில், கடந்த 10 நாட்களில் சிமென்ட், ஜல்லி, செங்கல் போன்ற அனைத்து கட்டுமானப் பொருள்களின் விலை 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சிமென்ட் விலை தற்போது மூட்டைக்கு ரூ.70 வரை உயர்ந்துள்ளது.

சாதாரணமாக வீடு கட்டுபவர்கள் சதுர அடி ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை விலை உயர்வைச் சந்திக்க வேண்டியுள்ளது. அரசுத்துறை ஒப்பந்தங்களில் குறிப்பாக மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் இந்த விலை உயர்வுக்கு முன் போட்ட ஒப்பந்தங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்கள் 19 முதல் 90 சதவீதம் வரை அதிகமாக செலவு செய்தால்தான் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பணிகளை கடந்த 10 நாட்களாக தொடர முடியாத தேக்க நிலை உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூ.70 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஜல்லிகள் விலை 30 சதவீதமும், மணல் விலை 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வீடுகளுக்கான கட்டுமான செலவு ஒரு சதுர அடிக்கு ரூ. 300 முதல் ரூ.400 வரை உயர்ந்துள்ளது.

இதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் வாங்கும் வீடுகளுக்கு ரூ. 2 லட்சம் வரை கூடுதலாக செலவிட வேண்டும். சிமென்ட் விலை உயர்வால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் ஒட்டு மொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர், இங்குள்ள உற்பத்தியாளர்களை அழைத்து பேசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து உண்ணாவிரதம் முதலான போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளி வந்து எத்தனை நாட்களாகிறது? அரசாங்கம் ஏதாவது இது பற்றிச் சிந்தித்ததா? அக்கறை செலுத்தியதா? திமுக ஆட்சியில் சிமென்ட் நிறுவன அதிபர்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து நான் பேசி, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததுபோல் தற்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கெல்லாம் நேரம் செலவழிக்க மனம் இல்லையா? மார்க்கம் தெரியவில்லையா? சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் வெங்கடாசலம் கூறும்போது, ‘ சிமென்ட், மணல், ஜல்லி விலை உயர்வால், அனைத்து வகை கட்டுமானப் பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கட்டுமானப் பணிக்கான சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது‘ என்று தெரிவித்திருக்கிறார். தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படுமென்று தெரிவித்திருக்கிறார்களே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா? இல்லையென்றால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று விட்டோம், இனி விலைவாசி உயர்வு பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் பதிலா? அம்மா உணவகங்களையும், மருந்தகங்களையும் திறந்து வைத்து, உப்பு வியாபாரத்தையும் நடத்திவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்களா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக