புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
4 Posts - 3%
bala_t
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
1 Post - 1%
prajai
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
293 Posts - 42%
heezulia
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
6 Posts - 1%
prajai
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_m10குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையில் உள்ளுறை உவமம் - பேராசிரியர்


   
   
avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Tue Jun 24, 2014 10:56 am

அன்புள்ள இலக்கியச் சுவை அருந்தும் ஈகரை நண்பர்களே !
உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கமும் வாழ்த்துக்களும் !

இது இன்று நான் இந்த வலைத் தளத்தில் வரையும் முதல் கடிதம் !


'' குறுந்தொகையில் உள்ளுறை உவமம் '' என்பது அதன் தலைப்பு !


'' உள்ளுறை உவமம் '' என்றால் உள்ளே மறைந்து வெளியே தெள்ளெனத் தெரியாமல் கிடக்கும் உவமை  என்று

பொருள் !




'' நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறோடு
ஒத்தப் பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்ற
இத்திறத்த எட்டுத் தொகை ''


என்ற தனிப் பாடலில் உள்ள எட்டுத் தொகை நூல்கள்

1. நற்றிணை

2. குறுந்தொகை

3 .ஐங்குறுநூறு

4. பதிற்றுப் பத்து

5. பரிபாடல்

6. கலித் தொகை

7 . அகநானூறு

8 .புறநானூறு

என்ற எட்டு நூல்களில் நல்ல குறுந்தொகை என்று இது சிறப்பிக்கப்பட்டுள்ளது !



சில குறுகிய அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது .

பல நீண்ட அடிகளைக் கொண்ட அகத் துறைப் பாடல்கள் கொண்ட நெடுந்தொகை என்ற நூல் பின்னால் அகநானூறு எனப் பெயர் பெற்றது .





இன்று ஒரு குறுந்தொகைப் பாடல் !

காதற்பரத்தை கூற்று :


(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’ என்று கூறியது ! )

இது ஒரு மருத நிலத்துப் பாடல் !

இந்தப் பாடலை இயற்றியவர் ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் !





ஒரு தலைவன் ஒரு தலைவியை மணக்கிறான் .

அவர்களுக்கு ஒரு புதல்வனும் பிறக்கிறான் .

அவனுக்கு இல்லற வாழ்வில் ஒரு மாற்றம் காண மனம் விழைகிறது !

ஒரு பரத்தையை நாடுகிறான் .

அவளும் அவனுக்கு இன்பம் நல்குகிறாள் !

'' பழகப் பழகப் பாலும் புளிக்கும் '' என்பார்களே , அது போல அவளும் புளிக்கிறாள் !

கோவலன் போல பழைய படியும் தனது மனைவியை நாடுகிறான் !

ஒரு வண்டு தேனை நாடி மலருக்கு மலர் தாவுவது போலவே ஆணின் மனமும் பல பெண்களை நாடும் போலும் !





இப்போது அந்தப் பரத்தை தனது தோழியிடம் சொல்வது போல் ஒரு பாடல் !

'' கழனி மாவத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியிற் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''


பாடலைக் கொஞ்சம் மாற்றி வரைகிறேன் .


'' கழனி மா அத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூவும் ஊரன்
எம் இல் பெரு மொழி கூறித் தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடியில் பாவை போல மேவன செய்யும்
தன் புதல்வன் தாய்க்கே ''





அருஞ்சொற்பதவுரை :

கழனி - வயல்

மா - மாமரம்

அத்து - அசைச் சொல்

உகு - பழுது கீழே விழுகின்ற

தீம் - இனிமையான

பழன - வயலில் உள்ள வாய்க்கால்

வாளை - பாம்பு வடிவத்தில் இருக்கும் ஒரு மீன்

கதூவும் - கவ்விப் பிடித்துக் கொள்ளும்

ஊரன் - ஊருக்கு அரசன்

எம் இல் - எமது வீட்டில்

பெரு மொழி - புகழ்ந்து சொல்லும் சொற்கள்

தம் இல் - தனது வீட்டில்

ஆடி - கண்ணாடி , முகம் பார்க்கும் கண்ணாடி , கண்ணுக்கு அணிவது தான் கண்ணாடி , முகம் பார்ப்பது ஆடி !

மேவன - அவள் விரும்புகிற


பாடலின் விளக்கம் :


வயல்களின் குறுக்கே ஓடும் வாய்க்காலில் உள்ள தண்ணீரில் வசிக்கும் வாளை மீன் அந்த வயலின் வரப்பில் இருக்கும் மாமரத்தில் காய்த்துக் கனிந்து விழும் மாங்கனியைக் கவ்விப் பிடித்து உண்ணும் மருத நிலங்களுக்கு சொந்தமான தலைவன் என்னுடன் இருக்கும் போது என்னைப் புகழ்ந்து பேசி விட்டு ,

தனது வீட்டுக்குச் சென்ற பின்பு அவன் வீட்டில் கண்ணாடி முன் நின்று கையையும் காலையும் தூக்கினால் அந்தக் கண்ணாடியில் தெரியும் பிம்பமும் தனது கையையும் காலையும் தூக்குமே , அந்தப் பிம்பத்தைப் போலத் தனது மனைவி சொல்லைத் தட்டாமல் அவளது சொற்களைக் கேட்டு வாழ்கிறான் .


பாடல் நயம் :

1. இந்தப் பரத்தை அவளாகவே தலைவனை நாடிச் செல்லவில்லை , மாறாக அவனே வந்து அவளிடம் இன்பம் துய்க்க வந்தான்

2. மாமரத்தின் மாங்கனியை நாடி வாளை மீன் போகவில்லை , மாங்கனியே தானாக வந்து வாளை மீனின் வாயில் விழுந்தது

3. இங்கு வாளை மீன் பரத்தைக்கும் , மாங்கனி தலைவனுக்கும் உவமை ஆகின்றன . இந்த உவமைக்கு உள்ளுறை உவமம் என்று பெயர் .

4. நமது வலது கையை அசைத்தால் ஆடியில் காணும் பிம்பம் தனது இடது கையை அசைக்கும் .

இதன் பொருள் என்னவென்றால் , தலைவன் தலைவியின் கருத்துக்கு மாறாகத் தான் செயல் படுகிறான் . அவள் கருத்துக்கு இசைந்து செயல் படுவதாக அவளுக்குக் காட்டிக் கொள்ளுகிறான் . குற்றம் புரிந்த நெஞ்சம் அல்லவா, அவனது நெஞ்சம் !

5. இயற்பியலில் இது LAW OF REFLECTION !

'' THE INCIDENT RAY AND THE REFLECTED RAY ARE REVERSED BY 180 DEGREES ''

6. தலைவனது மனைவியை அவள் அவனது மகனின் தாய் என்றே அழைக்கிறாள் , அவனது மனைவி என்று அழைக்க அவள் விரும்பவில்லை . ஏனெனில் மனைவிக்கு உரிய உரிமை தனக்கும் இருப்பதாக அவள் கருதுகிறாள் !




இங்கு உள்ளுறை உவமம் என்பது யாதெனில் ,

வாளை மீன் பரத்தைக்கும் , தலைவன் மாங்கனிக்கும் உவமையாக்கப்படுகிறார்கள் !

ஆனால் இந்த உவமை வெளியே தெரிவதில்லை !

உள்ளே மறைந்து கிடக்கிறது

அதனால் தான் இது உள்ளுறை உவமை ஆயிற்று !



அன்பர்களே !

இது '' ஆசை பற்றி அறையலுற்ற '' கடிதம் !

தவறுகள் இருந்தால் கோடிட்டுக் காட்டுங்கள் , திருத்திக் கொள்கிறேன் !

அன்புடன்

பேராசிரியர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 12:46 pm

அண்ணாவுக்கு உங்கள் தம்பியின் அன்பான வேண்டுகோள், உங்கள இலக்கிய படைப்பை இன்னும் படிக்கவில்லை, பச்சை நிறத்தில் உள்ளதை வேறு நிறத்திற்கு மாற்ற முடியுமா, படிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது அண்ணா.  

நன்றியுடன் உங்கள் தம்பி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக