புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_c10பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_m10பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_c10பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_m10பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_c10பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_m10பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_c10பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_m10பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 3:40 am



இந்திய பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், அதனை மீட்டெடுக்க கசப்பு மருந்துகள் தேவையாக உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமையன்றுதான் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறிய ஒரே வாரத்தில், பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாகவே பயணிகள் ரயில் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் உயர்த்தி மக்களை அதிரவைத்துள்ளது ரயில்வே துறை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடந்த கால ஆட்சியில் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள், குறுகிய கால இடைவெளியில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டண உயர்வுகள், கடுமையான விலைவாசி போன்றவை கடுமையாக வதைத்து வந்த நிலையில், மத்தியில் சரியான மாற்று அரசு ஒன்றை எதிர்பார்த்து காத்திருந்தனர் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழை எளிய மக்களும்.

மக்களின் இந்த எதிர்பார்ப்பை சரியாக அறுவடை செய்துகொள்ள நினைத்த பா.ஜனதா, குஜராத்தை வளர்ச்சிபெற வைத்தவர் என்று ஊதிபெருக்கப்பட்ட மோடி பிம்பத்தை முன்வைத்து, அவரையே நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கியது. ஆனால் மக்களின் அதிருப்தியை துளியும் புரிந்துகொள்ளாமல், மக்களின் வெறுப்பை சம்பாதித்த மன்மோகன் சிங்கிற்கு மாற்றான திறமை மிக்க ஒருவரை பிரதமர் வேட்பாளராகவும் நிறுத்தாமல் காங்கிரஸ் தடுமாற, மன்மோகன் சிங் அரசின் மீதான மக்களின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு, "மோடி ஆட்சிக்கு வந்தால் இனி எல்லாம் சுகமே" என்ற ரீதியில் பிரசாரத்தை மேற்கொண்டனர் பா.ஜனதாவினரும், மோடியும்.

ஆனால் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த ஒரு மாத காலத்திற்குள்ளாகவே, பா.ஜனதாவின் இமேஜை பற்றிகூட கவலைப்படாமல், நாட்டின் பொருளாதார நிலை கவலையளிப்பதாக உள்ளதாகவும், கடுமையான நடவடிக்கைகள் மூலமே இதனை சரிசெய்ய முடியும் என பிரதமர் மோடி போட்டு உடைத்த உண்மை நிலையை பார்த்து, சொந்தகட்சியினரே கூட சற்று அதிர்ந்துதான் போனார்கள். ஆனால் கசப்பு மருந்து இத்தனை சீக்கிரம் வரும் என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை.

"கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது; இருப்பினும் பிரதமர் மோடியை கலந்தாலோசித்துவிட்டுத்தான் இறுதி முடிவெடுக்கப்படும்" என்றெல்லாம் ரயில்வே துறை அமைச்சர் சதானந்தா கவுடா கூறியதை பார்த்தபோது, ஜூலையில் தாக்கலாக உள்ள ரயில்வே பட்ஜெட்டில் ஓரளவுக்கு கட்டண உயர்வு இருக்கலாம் என்பதை பொதுமக்கள் யூகித்துக்கொண்டனர். ஆனால இந்த அளவுக்கு, அதாவது 14.2 சதவீதம் என்ற அளவுக்கு உயரும் என்பதையும், அதுவும் பட்ஜெட்டுக்கு முன்னரே அமலாகும் என்பதையும் அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அதிலும் ரயில் கட்டணம் ஓரளவு உயர்த்தப்படுவதை கூட மோடி விரும்பவில்லை என்பதுபோன்ற பில்டப் செய்திகள் வேறு பா.ஜனதா வட்டாரத்தில் இருந்து கசியவிடப்பட்டன.

ஆனால் ஆட்சியைவிட்டு போகும் கடைசி தருணத்தில் மன்மோகன் சிங் அரசு உயர்த்திய எந்த ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறுத்திவைக்க சொன்னார்களோ, அதனையே துளியும் மாற்றாமல் அப்படியே அமல்படுத்தி உள்ளது பா.ஜனதா தலைமையிலான அரசு.

மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலோ திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமல்லாது, பா.ஜனதா கூட்டணி கட்சிகளான மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால் " எங்களுக்கு வேறு வழியில்லை" என ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா கூறும் நிலையில், உலக தரத்தில் ரயில்வே மாற வேண்டுமானால் கட்டண உயர்வு அவசியமானதுதான் என்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தோ, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரயில்வே துறையை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும், ரயில்வேயில் ரத்தம் வடிந்துகொண்டிருந்ததை தாங்கள் தற்போதுதான் அறிந்துகொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மோடி அரசின் இந்த நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கும் பொருளாதார வல்லுநர்கள், ஜூலையில் தாக்கலாகப்போகும் பொது பட்ஜெட்டில் கடுமையான வரிவிதிப்புகளின் மூலம், தான் ஏற்கனவே கூறிய கசப்பு மருந்தை பிரதமர் மோடி கொடுக்க உள்ளார் என்பதன் அறிகுறிதான், இந்த ரயில்வே கட்டண உயர்வு என்கின்றனர்.

இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடிகளையும், பிரச்னைகளையும் சந்தித்து வருவதையும், இதனை எதிர்கொள்வதில் மோடி அரசு கடுமையான தீவிரம் காட்டுவதையுமே இந்த ரயில் கட்டண உயர்வுகள் உணர்த்துகின்றன. இந்த கட்டண உயர்வு பொதுமக்களை நேரடியாக பாதிக்கும், அதனால் அரசுக்கும் கட்சிக்கும் எதிராக விமர்சனங்கள் எழும் என்பதை நன்றாக உணர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதால், பொது பட்ஜெட்டிலும் எரிபொருள் மற்றும் யூரியா போன்றவற்றுக்கான மானியங்களை குறைப்பது, அரசு கஜானாவுக்கு கடுமையான செலவுகளை ஏற்படுத்தும் முந்தைய காங்கிரஸ் அரசால் தொடங்கப்பட்ட சில திட்டங்களை மாற்றியமைப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால், சர்வதேச சந்தையில் ஏற்படப்போகும் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தை மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் என்பதால், அந்த சுமையையும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மீதான விலையை உயர்த்தி பொதுமக்கள் மீதுதான் இறக்கிவைக்கப்

டீசல் விலையையும், பெட்ரோலைப்போன்றே எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்திற்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற பேச்சுக்கள் பெட்ரோலியத் துறை அமைச்சக வட்டாரத்தில் ஏற்கனவே எழுந்துள்ள நிலையில், ஈராக்கில் எழுந்துள்ள பிரச்னையை காரணம் காட்டி அதுவும் அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மேலும் சமையல் சிலிண்டருக்கான மானியத்தையும் குறைத்து அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இதுதவிர உரத்துறை அமைச்சகம் ஒருபக்கம் யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு வழங்கப்படும் மானியங்களால் ஏற்படும் நிதிச்சுமை தங்களை கடுமையாக அழுத்துவதாகவும், எனவே உரங்கள் மீதான மானியத்தை குறைக்கும் புதிய உரக்கொள்கை வகுக்கப்பட வேண்டும் அல்லது அந்த மானியச் சுமைக்கு ஏற்ப தங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என நிதியமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளதால் விவசாயிகளுக்கும் வில்லங்கம் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் வீணான செலவுகளை குறைத்து, தனியார் துறையினர் கடன்பெற கூடுதல் நிதிகளை விடுவித்தாலே வட்டி விகித சுமை குறைந்து, முதலீடுகள் ஊக்கம் பெற்று அவை பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்கின்றனர் மத்திய நிதித் துறை அமைச்சக அதிகாரிகள்.

எது எப்படியாகினும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தற்போதுதான் பதவியேற்றுள்ளது என்பதால், இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும். ஆட்சி முடியும் தருவாயில் அதாவது நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில், நிலைமை சீரடைந்தால், தேர்தலை கருத்தில்கொண்டு மக்களை கவரும் விலைகுறைப்பு, கவர்ச்சி திட்டங்கள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

ஆனால் அதுவரை மோடி அரசின் கசப்பு மருந்தை மக்கள் பொறுத்துக்கொள்வார்களா?

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக