புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_c10கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_m10கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_c10 
42 Posts - 63%
heezulia
கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_c10கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_m10கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_c10கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_m10கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_c10கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_m10கனவாகும் மெடிக்கல் படிப்பு! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவாகும் மெடிக்கல் படிப்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 23, 2014 3:37 am

மாட்டுப்பண்ணை,கோழிப்பண்ணை போன்று தமிழ்நாட்டில் தற்போது 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக 'பள்ளிப்பண்ணைகள்' வைத்து நடத்துபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

அதனால்தான் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் கணித பாடப்பிரிவில் 3,882 பேர்,இயற்பியலில் 2,710 பேர், வேதியியலில் 1,693 பேர், உயிரியியலில் 652 பேர் என்று 200 க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில்,மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்ணாக 132 பேர் 200க்கு 200, 102 பேர் 200 க்கு 199.75, 223 பேர் 200 க்கு 199.50 என பெற்றுள்ளனர். இத்தனைபேர் ஒரே கட் ஆப் மதிப்பெண் எடுத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இவ்வாறு மருத்துவ படிப்புக்கான சொற்ப 'சீட்'டுகளில் 457 இடங்களை மேற்கூறிய முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் வாரி சுருட்டிக்கொண்டு போகும் நிலையில்,கிராமப்புற மற்றும் இதர பள்ளிகளில் பயின்று 90 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு கூட மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதற்கு என்ன காரணம்..தீர்வுதான் என்ன? என்று கல்வியாளரும் 'தேவை இயக்க'த்தின் ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவிடம் கேட்டோம்.அவர் கூறியது...

"தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த பாடத்திட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மாற்றி இருக்க வேண்டும். பல்வேறு நிர்வாக பிரச்னைகள் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம், 11 ஆம் வகுப்புக்கு அடுத்த ஆண்டும், அதற்கு அடுத்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்கும் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள பாடத்திட்டத்தில் மனப்பாடம் அடிப்படையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்து விடுகின்றனர். குறிப்பாக, 12 ஆம் வகுப்பில் முன்னணி இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் 11 ஆம் வகுப்பு பாடங்களை படிக்காமலேயே இரண்டு ஆண்டுகள் 12 ஆம் வகுப்பு பாடங்களை படித்தே இத்தகைய மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது சாதனை அல்ல.இந்த முறை மாணவ செல்வங்களின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாக்கும்.இந்த முறையை அனுமதிக்கவே கூடாது.இத்தகைய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திட்டமிட்ட இந்த தாக்குதல்களால்தான் அரசு பள்ளிகளுக்கும் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கும் மெடிக்கல் சீட் கனவாகவே இருக்கிறது.

மேலும், பெரும்பாலும் கணிதம், வேதியியல்,இயற்பியல்,உயிரியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் புத்தகங்களில் இருந்து அப்படியே கேட்க்கப்படுகிறது.அதுவும் கேள்விகள் வரும் பகுதிகளையும் புளூபிரிண்ட் எனப்படும் வினாத்திட்டத்தையும் கொடுத்து விடுகின்றனர்.எனவே, எந்த பகுதியில் இருந்து எந்தெந்த கேள்விகள் வரும் என்பதெல்லாம் தெரிந்து விடுகிறது.

இப்போது நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டங்கள் வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பதால் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மிக எளிதாக எந்தெந்த கேள்விகள் முக்கியமனது; பொதுத்தேர்வுகளுக்கு கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கேள்விகளை எவை என்பதை எளிதாக ஜட்ஜ் பண்ணி விடுகின்றனர். அதுமாதிரியே கேள்விகளும் அமைந்து விடுகிறது.

இந்த ஆண்டு மெடிக்கல் மற்றும் இன்ஜினியரிங் படிப்புக்கு கட் ஆப் பார்க்க எடுத்துக்கொள்ளப்படும் முக்கிய பாடங்களில் சென்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.கணக்கு, வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களில் ஏதாவது ஒரு வினா கடினமாக கேட்க்கப்படும். ஆனால், இந்த தடவை அனைத்து வினாக்களுமே புத்தகங்களில் இருந்து எந்த வித டிவிஸ்ட்டும் இல்லாமல் அப்படியே நேரடியாக வந்தது. இது, அதிக சென்டம் வாங்க வசதியாக அமைந்துவிட்டது.

இத்தகைய மனப்பாடம் சார்ந்த பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வெழுதி அதிகமதிப்பெண் எடுக்கும் தமிழக மாணவர்களால் மத்திய அரசு நடத்தும் ஆல் இன்டியா இன்ஜினியரிங், அல் இன்டியா மெடிக்கல், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றுக்கான முக்கியத்துவம் வாய்ந்த நுழைவுத் தேர்வுகளில் ஜொலிக்க முடியவில்லை. பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதால் வேறு வழியின்றி தரமான உயர்கல்வியை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, தமிழகத்துக்கும் வெளியே உள்ள மாணவர்களோடும் மோதும் அளவுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழக பள்ளிகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் ஒவ்வொரு ஆண்டு பொதுத்தேர்வுகளிலும் நடத்து வருகிறது. அதாவது, தனியார் பள்ளி மாணவர்களே அதிகமதிப்பெண் வரிசையில் கோலோச்சுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும் எந்த அரசும் முயன்றதாக தெரியவில்லை.

சமச்சீர் கல்வி தரமானது என்றால் அந்த கல்வி முறை ஆரம்பித்து மூன்று நான்கு ஆண்டுகள் ஆனபிறகும் தனியார் பள்ளிகள் மோகம் குறையாதது ஏன்? இன்னும் தனியார் பள்ளியில் படிக்த்தால்தான் எதிர்காலம் என்று இரவு முழுவதும் கண்விழித்து காத்துக்கிடந்து எல்.கே.ஜி.க்கு சீட் வாங்கும் அவல நிலை இன்றளவும் மாறவில்லையே ஏன்?

உதாரணத்தோடு சொல்ல வேண்டும் என்றால் சி.பி.எஸ்.சி.கல்வித் தரத்தை விட உயர்ந்த, சிறந்த கல்வித்திட்டத்தை உருவாக்க வேண்டும். அதை தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும். பாடம் கடினம்; படிக்க முடியவில்லை என்பதெல்லாம் வெற்றுவாதம். படிக்கும் முறையை எளிமையாக்கினால் எல்லாம் எளிதாகும்.

அனைவருக்கும் கல்வியை இலவசமாக்க வேண்டும்.வகுப்பறைகள் மட்டுமல்லாது ஆசிரியர் பெருமக்களையும் அதற்கு ஏற்றாற் போல தரமாக்க வேண்டும். சமச்சீர் கல்வியை புத்தாக்கம் செய்ய வேண்டும். அதாவது, அகில இந்திய அளவில் உள்ள மாணவர்களோடு போட்டி போட்டு ஜெயிக்கும் வகையில் பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற வேண்டும்.

இதையெல்லாம் செய்தால் தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையும். அரசு பள்ளிகளில் ஆசை ஆசையாய் சேர்ப்பார்கள்.தமிழ்நாட்டு பெற்றோர்கள் அனைவரும் அரசின் கல்வி திட்டத்தை கைதட்டி ஆதரித்து வரவேற்பார்கள்" என்கிறார்.

கவனம் செலுத்துமா தமிழக அரசு?

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக