புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
Page 6 of 15 •
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலகில் அதிக மக்களை கவர்ந்த விளையாட்டு கால்பந்து தான். வலிமையான கால்கள், உறுதியான மனம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கால்பந்து விளையாடலாம். மூன்றாம் நூற்றாண்டில் சீனாவில் பிறந்த கால்பந்து, இங்கிலாந்து மண்ணில் வளர்ச்சி கண்டது. கடந்த 1904, மே 22ல் பாரிசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிபா) உதயமானது. "பிபா' சார்பில் 1930ல் முதலாவது உலக கோப்பை தொடர் உருகுவேயில் நடந்தது.
பிரேசில் மண்ணில்: தற்போது "பிபா' உறுப்பினர்களாக 209 நாடுகள் உள்ளன. இதிலிருந்து 32 நாடுகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. இம்முறை 20வது உலக கோப்பை தொடர் பிரேசிலில் ஜூன் 12ம் தேதி துவங்குகிறது. வரும் ஜூலை 13ம் தேதி நிறைவு பெறுகிறது.
நாயகன் நெய்மர்: கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் பிரேசில் முன்னிலை வகிக்கிறது. 64 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் களமிறங்குவது கூடுதல் பலம். பயிற்சியாளர் லுாயிஸ் பிலிப் ஸ்காலரியின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். இளம் முன்கள வீரர் நெய்மர், 22, மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மின்னல் வேகத்தில் ஓடுதல், பந்தை துடிப்பாக கடத்திச் சென்று கோல் அடிப்பதில் வல்லவரான இவரை, பிரேசில் ஜாம்பவான் பீலேவுடன் ஒப்பிடுகின்றனர். 2013ல் நடந்த கான்படரேஷன் கோப்பை பைனலில் ஸ்பெயினுக்கு எதிராக கோல் அடித்த இவர், சாம்பியன் பட்டம் பெற்று தந்தார். 'நம்பர்-10' ஜெர்சி அணிந்து களமிறங்கும் இவர், பிரேசில் அணி ஆறாவது முறையாக உலக கோப்பை வெல்ல கைகொடுப்பார் என நம்பலாம். இவருக்கு கேப்டன் தியாகோ சில்வா, ஆஸ்கர், ரமிரஸ், டேவிட் லுாயிஸ் போன்றோர் கைகொடுக்கலாம்.
மெஸ்சி 'மேஜிக்': அடுத்து, அர்ஜென்டினாவுக்கு வாய்ப்பு அதிகம். மாரடோனா போல, களத்தில் பம்பரமாக சுழன்று ஆடும் திறன்படைத்த முன்கள வீரர் லியோனல் மெஸ்சி, 26, மீது எதிர்பார்ப்பு அதிகம். லா லிகா தொடரில் இளம் வயதில் 200 கோல் அடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து நான்கு முறை 'பிபா' சிறந்த வீரர் விருது பெற்ற இவரது மந்திர ஆட்டம் தொடரலாம். செர்ஜி அகியுரோ, ஹிகுவேன், ரிக்கார்டோ ஆல்வராஸ் அசத்தலாம். ஐரோப்பிய அணிகளில் முன்னாள் சாம்பியன்களான இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், உருகுவே அணிகள் கோப்பை வெல்ல கடுமையாக போராடும். பிரான்ஸ் அணிக்கு காயம் காரணமாக பிராங்க் ரிபரி நீக்கப்பட்டது பின்னடைவு. இருப்பினும் கேப்டன் ஹயுகோ லியோரிஸ், பாட்ரிஸ் எவ்ரா, கரிம் பென்சிமா போன்றோர் முக்கிய பங்கு வகிக்கலாம்.
இங்கிலாந்துக்கு ரூனே, ஸ்டீவன் ஜெரார்டு, பிராங் லாம்பார்ட், கிளன் ஜான்சன் போன்றோர் அசத்தினால், கோப்பை கனவு நனவாகலாம். ஜெர்மனிக்கு கேப்டன் பிலிப் லாம், குளோஸ், ஸ்கீவன்ஸ்டீகர், ஓசில், தாமஸ் முல்லர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
சிக்கலில் கிறிஸ்டியானோ: போர்ச்சுகல் அணியை பொறுத்தவரை முன்கள் வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ தான் மிகப் பெரும் பலம். உலகின் 'காஸ்ட்லியான' வீரரான இவர், அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து 400 கோல்கள் என்ற மைல்கல்லை இந்த ஆண்டு எட்டினார். 'பிரீ-கிக்', 'பெனால்டி கிக்' அடிப்பதில் வல்லவர். காயத்தால்(இடது தொடை, முழங்கால் தசையில்) அவதிப்படுவது சற்று பின்னடைவு. இவர், விரைவில் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர். இம்முறை 'குரூப் ஆப் டெத்' எனப்படும் ஆபத்தான 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் ஜெர்மனி, கானா, அமெரிக்க அணிகள் இடம் பெற்றுள்ளதால், போர்ச்சுகல் கவனமாக விளையாட வேண்டும். 'சூப்பர்' ஸ்பெயின்: 'நடப்பு உலக சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கும் ஸ்பெயின் அணிக்கு இனியஸ்டா, ஜெரார்டு பிக், டேவிட் வில்லா, பெர்ணான்டோ டோரஸ், டியாகோ கோஸ்டா, கேப்டனும் கோல்கீப்பருமான இகர் கேசிலாஸ் பலம் சேர்க்கின்றனர்.
ஆசியா சார்பில் ஈரான், ஜப்பான், கொரியா ஆறுதல் அளிக்கலாம். ஆப்ரிக்கா தரப்பில் காமரூன் அதிர்ச்சி தரலாம்.
உலகின் முன்னணி அணிகள் மோதுவதால், சாம்பியன் பட்டம் வெல்லும் அணியை கணிப்பது மிகவும் கடினம். அதிகம் பிரபலம் இல்லாத அணிகள் கூட சாதிக்கலாம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் யார் கோப்பை வெல்கிறார் என்பதைவிட, மிகச் சிறந்த கால்பந்து ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு மகிழலாம். சின்னம் 'புலெக்கோ'
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு என, பொதுவாக ஒரு சின்னம் இருக்கும். கடந்த 1966 முதல், போட்டியை நடத்தும் நாடு, சொந்தமாக சின்னத்தை தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.
இம்முறை பிரேசிலில் நடக்கும் 20வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின், அதிகாரப்பூர்வ சின்னமாக கார்ட்டூன் வடிவ, கிழக்கு பிரேசிலில் காணப்படும், 14 வயதான எறும்பு திண்ணி தேர்வு செய்யப்பட்டது.
இதற்கு 'புலெக்கோ', 'அமிஜுபி', 'ஜுஜெகோ' என, மூன்று பெயர்கள் முடிவு செய்யப்பட்டு, கடைசியில் 17 லட்சம் பேர் ஓட்டளித்த 'புலெக்கோ' தேர்வானது.
பியுட்போல் (கால்பந்து), எகோலோகியா ('எக்காலஜி') என்ற போர்த்துகீசிய வார்த்தைகள் இணைந்து,'புலெக்கோ' உருவானது. முதுகுப்பகுதியில் காணப்படும் நீல நிறம், வானத்தையும், பிரேசிலை சுற்றியுள்ள சுத்தமான நீரையும் குறிக்கும்.
பிரேசில் மண்ணில்: தற்போது "பிபா' உறுப்பினர்களாக 209 நாடுகள் உள்ளன. இதிலிருந்து 32 நாடுகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்கின்றன. இம்முறை 20வது உலக கோப்பை தொடர் பிரேசிலில் ஜூன் 12ம் தேதி துவங்குகிறது. வரும் ஜூலை 13ம் தேதி நிறைவு பெறுகிறது.
நாயகன் நெய்மர்: கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் பிரேசில் முன்னிலை வகிக்கிறது. 64 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் களமிறங்குவது கூடுதல் பலம். பயிற்சியாளர் லுாயிஸ் பிலிப் ஸ்காலரியின் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். இளம் முன்கள வீரர் நெய்மர், 22, மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மின்னல் வேகத்தில் ஓடுதல், பந்தை துடிப்பாக கடத்திச் சென்று கோல் அடிப்பதில் வல்லவரான இவரை, பிரேசில் ஜாம்பவான் பீலேவுடன் ஒப்பிடுகின்றனர். 2013ல் நடந்த கான்படரேஷன் கோப்பை பைனலில் ஸ்பெயினுக்கு எதிராக கோல் அடித்த இவர், சாம்பியன் பட்டம் பெற்று தந்தார். 'நம்பர்-10' ஜெர்சி அணிந்து களமிறங்கும் இவர், பிரேசில் அணி ஆறாவது முறையாக உலக கோப்பை வெல்ல கைகொடுப்பார் என நம்பலாம். இவருக்கு கேப்டன் தியாகோ சில்வா, ஆஸ்கர், ரமிரஸ், டேவிட் லுாயிஸ் போன்றோர் கைகொடுக்கலாம்.
மெஸ்சி 'மேஜிக்': அடுத்து, அர்ஜென்டினாவுக்கு வாய்ப்பு அதிகம். மாரடோனா போல, களத்தில் பம்பரமாக சுழன்று ஆடும் திறன்படைத்த முன்கள வீரர் லியோனல் மெஸ்சி, 26, மீது எதிர்பார்ப்பு அதிகம். லா லிகா தொடரில் இளம் வயதில் 200 கோல் அடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து நான்கு முறை 'பிபா' சிறந்த வீரர் விருது பெற்ற இவரது மந்திர ஆட்டம் தொடரலாம். செர்ஜி அகியுரோ, ஹிகுவேன், ரிக்கார்டோ ஆல்வராஸ் அசத்தலாம். ஐரோப்பிய அணிகளில் முன்னாள் சாம்பியன்களான இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், உருகுவே அணிகள் கோப்பை வெல்ல கடுமையாக போராடும். பிரான்ஸ் அணிக்கு காயம் காரணமாக பிராங்க் ரிபரி நீக்கப்பட்டது பின்னடைவு. இருப்பினும் கேப்டன் ஹயுகோ லியோரிஸ், பாட்ரிஸ் எவ்ரா, கரிம் பென்சிமா போன்றோர் முக்கிய பங்கு வகிக்கலாம்.
இங்கிலாந்துக்கு ரூனே, ஸ்டீவன் ஜெரார்டு, பிராங் லாம்பார்ட், கிளன் ஜான்சன் போன்றோர் அசத்தினால், கோப்பை கனவு நனவாகலாம். ஜெர்மனிக்கு கேப்டன் பிலிப் லாம், குளோஸ், ஸ்கீவன்ஸ்டீகர், ஓசில், தாமஸ் முல்லர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
சிக்கலில் கிறிஸ்டியானோ: போர்ச்சுகல் அணியை பொறுத்தவரை முன்கள் வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ தான் மிகப் பெரும் பலம். உலகின் 'காஸ்ட்லியான' வீரரான இவர், அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து 400 கோல்கள் என்ற மைல்கல்லை இந்த ஆண்டு எட்டினார். 'பிரீ-கிக்', 'பெனால்டி கிக்' அடிப்பதில் வல்லவர். காயத்தால்(இடது தொடை, முழங்கால் தசையில்) அவதிப்படுவது சற்று பின்னடைவு. இவர், விரைவில் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் உள்ளனர். இம்முறை 'குரூப் ஆப் டெத்' எனப்படும் ஆபத்தான 'ஜி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் ஜெர்மனி, கானா, அமெரிக்க அணிகள் இடம் பெற்றுள்ளதால், போர்ச்சுகல் கவனமாக விளையாட வேண்டும். 'சூப்பர்' ஸ்பெயின்: 'நடப்பு உலக சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கும் ஸ்பெயின் அணிக்கு இனியஸ்டா, ஜெரார்டு பிக், டேவிட் வில்லா, பெர்ணான்டோ டோரஸ், டியாகோ கோஸ்டா, கேப்டனும் கோல்கீப்பருமான இகர் கேசிலாஸ் பலம் சேர்க்கின்றனர்.
ஆசியா சார்பில் ஈரான், ஜப்பான், கொரியா ஆறுதல் அளிக்கலாம். ஆப்ரிக்கா தரப்பில் காமரூன் அதிர்ச்சி தரலாம்.
உலகின் முன்னணி அணிகள் மோதுவதால், சாம்பியன் பட்டம் வெல்லும் அணியை கணிப்பது மிகவும் கடினம். அதிகம் பிரபலம் இல்லாத அணிகள் கூட சாதிக்கலாம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் யார் கோப்பை வெல்கிறார் என்பதைவிட, மிகச் சிறந்த கால்பந்து ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு மகிழலாம். சின்னம் 'புலெக்கோ'
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு என, பொதுவாக ஒரு சின்னம் இருக்கும். கடந்த 1966 முதல், போட்டியை நடத்தும் நாடு, சொந்தமாக சின்னத்தை தேர்வு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.
இம்முறை பிரேசிலில் நடக்கும் 20வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின், அதிகாரப்பூர்வ சின்னமாக கார்ட்டூன் வடிவ, கிழக்கு பிரேசிலில் காணப்படும், 14 வயதான எறும்பு திண்ணி தேர்வு செய்யப்பட்டது.
இதற்கு 'புலெக்கோ', 'அமிஜுபி', 'ஜுஜெகோ' என, மூன்று பெயர்கள் முடிவு செய்யப்பட்டு, கடைசியில் 17 லட்சம் பேர் ஓட்டளித்த 'புலெக்கோ' தேர்வானது.
பியுட்போல் (கால்பந்து), எகோலோகியா ('எக்காலஜி') என்ற போர்த்துகீசிய வார்த்தைகள் இணைந்து,'புலெக்கோ' உருவானது. முதுகுப்பகுதியில் காணப்படும் நீல நிறம், வானத்தையும், பிரேசிலை சுற்றியுள்ள சுத்தமான நீரையும் குறிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோப்பை வரலாறு
கடந்த 1930 முதல் உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு 'ஜூல்ஸ் ரிம்மட்' கோப்பை வழங்கப்பட்டு வந்தது. 1970ல் பிரேசில் அணி மூன்றாவது முறையாக கோப்பை வென்றதால், 'ஜூல்ஸ் ரிம்மட்' டிராபி சொந்தமானது.
இதனால், 1974ல் நடந்த 10வது உலக கோப்பை தொடரில், புதிய கோப்பை வடிமைக்கப்பட்டது. மொத்தம் 7 நாடுகளில் இருந்து 53 'டிசைன்கள்' அனுப்பப்பட்டன. கடைசியில், இத்தாலிய ஓவிய கலைஞர் சில்வியோ கஜானிகாவின் 'டிசைன்' தேர்வானது.
18 காரட் தங்கத்தினால் ஆன இந்தக் கோப்பை 36.8 செ.மீ., உயரம், 6.175 கி.கி., எடை கொண்டது. அடிப்பகுதி இரண்டு அடுக்குகளை கொண்டது.1974 ல் இருந்து கோப்பை வென்ற அணிகளின் பெயர் இதில் பொறிக்கப்பட்டு இருக்கும்.
2042 வரை கோப்பை (17 தொடர்கள்) வெல்லும் அணிகளின் பெயர்கள் பொறிக்க, இதில் இடம் உள்ளது. இதன் பின் புதிய கோப்பை தயாரிக்கப்படும். சாம்பியன் அணிகளுக்கு, சொந்தமாக வைத்துக்கொள்ள, இந்த கோப்பையின் மாதிரி தான் இப்போது தரப்படுகிறது.
கடந்த 1930 முதல் உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு 'ஜூல்ஸ் ரிம்மட்' கோப்பை வழங்கப்பட்டு வந்தது. 1970ல் பிரேசில் அணி மூன்றாவது முறையாக கோப்பை வென்றதால், 'ஜூல்ஸ் ரிம்மட்' டிராபி சொந்தமானது.
இதனால், 1974ல் நடந்த 10வது உலக கோப்பை தொடரில், புதிய கோப்பை வடிமைக்கப்பட்டது. மொத்தம் 7 நாடுகளில் இருந்து 53 'டிசைன்கள்' அனுப்பப்பட்டன. கடைசியில், இத்தாலிய ஓவிய கலைஞர் சில்வியோ கஜானிகாவின் 'டிசைன்' தேர்வானது.
18 காரட் தங்கத்தினால் ஆன இந்தக் கோப்பை 36.8 செ.மீ., உயரம், 6.175 கி.கி., எடை கொண்டது. அடிப்பகுதி இரண்டு அடுக்குகளை கொண்டது.1974 ல் இருந்து கோப்பை வென்ற அணிகளின் பெயர் இதில் பொறிக்கப்பட்டு இருக்கும்.
2042 வரை கோப்பை (17 தொடர்கள்) வெல்லும் அணிகளின் பெயர்கள் பொறிக்க, இதில் இடம் உள்ளது. இதன் பின் புதிய கோப்பை தயாரிக்கப்படும். சாம்பியன் அணிகளுக்கு, சொந்தமாக வைத்துக்கொள்ள, இந்த கோப்பையின் மாதிரி தான் இப்போது தரப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
'பிரஜுகா' பந்து
பிரேசில் உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்தும் பந்தின் பெயர் 'தி பிரஜுகா' என்றழைக்கப்படுகிறது. இந்த பெயரை 10 லட்சத்துக்கும் அதிகமாக பிரேசில் மக்கள், ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்தனர்.
'போசாநோவா', 'கார்னவெலஸ்கா' என்ற பெயர்கள் இருந்த போதும், 78.8 சதவீத ஓட்டுக்களை பெற்றது 'பிரஜுகா' தான். பிரேசில் மக்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையில் இந்த பந்து அமைந்துள்ளது.
நீலம், ஆரஞ்சு, பச்சை நிறங்களால் ஆன வளையங்களும், ஆங்காங்கே நட்சத்திரங்கள் மின்னுவது போலவும் வரையப்பட்டு இருக்கும்.இந்த நட்சத்திரங்கள் 'கால்பந்தின் மெக்கா' என, பிரேசிலை குறிக்கும். இந்த பந்தின் எடை 437 கிராம். சுற்றளவு 69 செ.மீ., இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பரிசு எவ்வளவு
உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் 32 அணிகளுக்கு தரப்படும் மொத்த பரிசுத் தொகை ரூ. 2,119 கோடி. இது, 2010ஐ விட 37 சதவீதம் அதிகம்.தொடரில், சாம்பியன் பட்டம் வென்று, கோப்பை கைப்பற்றும் அணிக்கு மட்டும் ரூ. 207 கோடி கிடைக்கும். இது கடந்த 2010 ஐ விட, ரூ. 30 கோடி அதிகம்.
பைனலில் தோற்கும் அணிக்கு ரூ. 148 கோடி கிடைக்கும். மூன்று, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 130 கோடி, ரூ. 118 கோடி தரப்படும். இது தவிர, பிற அணிகளுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை விவரம்:
* காலிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ. 83 கோடி கிடைக்கும்.
* 'ரவுண்டு-16' சுற்றுடன் திரும்பும் அணிகள் ஒவ்வொன்றும் ரூ. 53.25 கோடி பெறும். * முதல் சுற்றுடன் திரும்பினால் ரூ. 47.34 கோடி கிடைக்கும்.
* தவிர, உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற 32 அணிகளுக்கும், தலா ரூ. 8.9 கோடி தரப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரேசில் போகலாமா...
தென் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரியது பிரேசில். பூகோள அமைப்பு, மக்கள் தொகையில்(20 கோடி) உலகின் 5வது பெரிய நாடு. கடந்த 150 ஆண்டுகளாக உலக காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 7,491 கி.மீ., துாரத்துக்கு கடற்கரை கொண்ட பிரேசிலில், 120 ஆண்டுகளுக்கு முன், கால்பந்து அறிமுகம் ஆனது. மக்களை ஈர்க்கக்கூடிய பொழுது போக்கு எதுவும் இல்லாததால், கால்பந்து பிரபலமானது. குடிசைகள் நிறைந்த சேரிப்பகுதிகளில், கடற்கரையில், மோசமான தரையிலும் கூட, பந்துகளை சுழற்றிக் கொண்டு தான் இருப்பர். 1950க்குப் பின் 64 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இங்கு உலக கோப்பை தொடர் நடக்கிறது.
சுற்றுலா உலகின் சொர்க்கம் பிரேசில் என்றாலும், போதை மருந்து கடத்தல், திருட்டு, வன்முறை இங்கு அதிகம். கடந்த 1979 முதல் 2003 வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர்.
தவிர, இங்கு பாலியல் தொழிலுக்கு சட்டப்படி அனுமதி உண்டு. உலக கோப்பை தொடரை காண வருபவர்களை கவர, 5 லட்சம் சிறுமிகள் உட்பட, சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் தயாராக உள்ளனர் என்பது வேதனையான விஷயம்.
இத்துடன், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 'பிரேசில் திருவிழா' மிகவும் பிரபலம். இதில் அரைகுறை ஆடையுடன் இடம் பெறும் 'சம்பா' நடனம் தான், பிரேசிலின் முகமாக உள்ளது. உலக கோப்பை போட்டிக்காக மக்கணின் வரிப்பணம் தண்ணீராக செலவிடப்படுவதை கண்டித்து, கடந்த ஆறு ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. இதனால் ஏற்படும் குழப்பங்கள், கலவரங்களால் போட்டி நாட்களில் சிக்கல் வரலாம்.
தென் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரியது பிரேசில். பூகோள அமைப்பு, மக்கள் தொகையில்(20 கோடி) உலகின் 5வது பெரிய நாடு. கடந்த 150 ஆண்டுகளாக உலக காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 7,491 கி.மீ., துாரத்துக்கு கடற்கரை கொண்ட பிரேசிலில், 120 ஆண்டுகளுக்கு முன், கால்பந்து அறிமுகம் ஆனது. மக்களை ஈர்க்கக்கூடிய பொழுது போக்கு எதுவும் இல்லாததால், கால்பந்து பிரபலமானது. குடிசைகள் நிறைந்த சேரிப்பகுதிகளில், கடற்கரையில், மோசமான தரையிலும் கூட, பந்துகளை சுழற்றிக் கொண்டு தான் இருப்பர். 1950க்குப் பின் 64 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இங்கு உலக கோப்பை தொடர் நடக்கிறது.
சுற்றுலா உலகின் சொர்க்கம் பிரேசில் என்றாலும், போதை மருந்து கடத்தல், திருட்டு, வன்முறை இங்கு அதிகம். கடந்த 1979 முதல் 2003 வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர்.
தவிர, இங்கு பாலியல் தொழிலுக்கு சட்டப்படி அனுமதி உண்டு. உலக கோப்பை தொடரை காண வருபவர்களை கவர, 5 லட்சம் சிறுமிகள் உட்பட, சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் தயாராக உள்ளனர் என்பது வேதனையான விஷயம்.
இத்துடன், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 'பிரேசில் திருவிழா' மிகவும் பிரபலம். இதில் அரைகுறை ஆடையுடன் இடம் பெறும் 'சம்பா' நடனம் தான், பிரேசிலின் முகமாக உள்ளது. உலக கோப்பை போட்டிக்காக மக்கணின் வரிப்பணம் தண்ணீராக செலவிடப்படுவதை கண்டித்து, கடந்த ஆறு ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. இதனால் ஏற்படும் குழப்பங்கள், கலவரங்களால் போட்டி நாட்களில் சிக்கல் வரலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பைனலுக்கு முன்னேறுவது எப்படி
பிரேசிலில் நடக்கும் உலக கோப்பை தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தலா 4 வீதம், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கும்.
* ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
* 48 லீக் போட்டிகள் முடிந்த பின், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு அதாவது 'ரவுண்டு-16' என்ற 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். * இதில் வெல்லும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
* பின் ஜூலை 8, 9ல் அரையிறுதி போட்டிகள் நடக்கும். இதில் தோற்கும் அணிகள் 3வது இடத்துக்கான போட்டியில் (ஜூலை 12) மோதும்.
* 20 வது உலக கோப்பை தொடரின் பைனல், ஜூலை 13ல் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும். இளமையும், முதுமையும்
பிரேசில் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் மிக இளம் வயது வீரர் என்ற பெயரை தட்டிச் செல்கிறார் காமரூன் வீரர் பேப்ரிஸ் ஆலிங்கா. கடந்த மே 12ல் தான் இவருக்கு 18 வயதானது. * கொலம்பியாவின் 'ரிசர்வ்' கோல்கீப்பர் பர்த் மாண்டிராகன் தான் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களில் அதிக வயது (43) உடையவர். இதே அணியின் தற்காப்பு வீரர் மரியோ ஏப்ஸ் (38) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பிரேசிலில் நடக்கும் உலக கோப்பை தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தலா 4 வீதம், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கும்.
* ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
* 48 லீக் போட்டிகள் முடிந்த பின், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு அதாவது 'ரவுண்டு-16' என்ற 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். * இதில் வெல்லும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
* பின் ஜூலை 8, 9ல் அரையிறுதி போட்டிகள் நடக்கும். இதில் தோற்கும் அணிகள் 3வது இடத்துக்கான போட்டியில் (ஜூலை 12) மோதும்.
* 20 வது உலக கோப்பை தொடரின் பைனல், ஜூலை 13ல் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும். இளமையும், முதுமையும்
பிரேசில் உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் மிக இளம் வயது வீரர் என்ற பெயரை தட்டிச் செல்கிறார் காமரூன் வீரர் பேப்ரிஸ் ஆலிங்கா. கடந்த மே 12ல் தான் இவருக்கு 18 வயதானது. * கொலம்பியாவின் 'ரிசர்வ்' கோல்கீப்பர் பர்த் மாண்டிராகன் தான் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களில் அதிக வயது (43) உடையவர். இதே அணியின் தற்காப்பு வீரர் மரியோ ஏப்ஸ் (38) இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சேம் சைடு கோல் அடித்த பிரேசில் வீரர்
உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் ஆரம்பவிழா நேற்று பிரேசில் நாட்டில் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் போட்டியில் நேற்று போட்டியை நடத்தும் நாடான பிரேசில் 3-1 என்ற கோல்கணக்கில் மிக அபாரமாக வெற்றியை பெற்றது.
20-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலே சேம்சைடு கோலாகும். குரோஷியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் மார்சிலோ சேம்சைடு கோல் அ டித்தார். 11-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவிகா ஒலிக் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது பந்து அவரது காலின் ஓரத்தில் பட்டு கோல் எல்லைக்கு நுழைந்தது. இதை எதிர்பாராத அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.
நல்ல வேளையாக பிரேசில் அணி வெற்றி பெற்று விட்டதால் மார்சிலோ தப்பினார். உலக கோப்பை கால்பந்தில் அடிக்கப்பட்ட 37-வது சேம்சைடு கோல் இதுவாகும்.
1994-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் எஸ்கோபர் சேக்சைடு கோல் அடித்தார். இந்த சேம்சைடு கோலால் கொலம்பியா தோற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்நாட்டு ரசிகர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் ஆரம்பவிழா நேற்று பிரேசில் நாட்டில் தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் போட்டியில் நேற்று போட்டியை நடத்தும் நாடான பிரேசில் 3-1 என்ற கோல்கணக்கில் மிக அபாரமாக வெற்றியை பெற்றது.
20-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலே சேம்சைடு கோலாகும். குரோஷியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் மார்சிலோ சேம்சைடு கோல் அ டித்தார். 11-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவிகா ஒலிக் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது பந்து அவரது காலின் ஓரத்தில் பட்டு கோல் எல்லைக்கு நுழைந்தது. இதை எதிர்பாராத அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.
நல்ல வேளையாக பிரேசில் அணி வெற்றி பெற்று விட்டதால் மார்சிலோ தப்பினார். உலக கோப்பை கால்பந்தில் அடிக்கப்பட்ட 37-வது சேம்சைடு கோல் இதுவாகும்.
1994-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் எஸ்கோபர் சேக்சைடு கோல் அடித்தார். இந்த சேம்சைடு கோலால் கொலம்பியா தோற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்நாட்டு ரசிகர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெற்றியுடன் துவங்கியது பிரேசில் : குரோஷியா தோல்வி
சாவ் பாலோ: உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் போட்டியில் நட்சத்திர நாயகன் நெய்மர் கைகொடுக்க, பிரேசில் அணி, குரோஷியாவை 3-1 என வீழ்த்தியது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை கால்பந்து தொடர், நேற்று பிரேசிலில் கோலாகலமாக துவங்குகியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும், இத்தொடரின் போட்டிகளில் மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. சாவ் பாலோவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.
சொதப்பல் துவக்கம்:
பரபரப்பாக துவங்கிய முதல் பாதியின் 11வது நிமிடத்தில் பிரேசில்வீரர் மார்செலோ, 'சேம் சைடு ' கோல் அடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளி்த்தார். இதனால் குரோஷியா அணி 1-0 என ஆரம்பத்திலேயே சுலமாக முன்னிலை பெற்றது. அசராமல் தொடர்ந்து போராடிய பிரேசில் அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் (29வது நிமிடம்) முதல் கோல் அடித்து ஆறுதல் அளித்தார். மும்முரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க முயன்றனர். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதியின் முடிவில், போட்டி 1-1 என சமநிலை வகித்தது.
நெய்மர் அபாரம்:
பின் விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் (71) ஒரு கோல் அடித்தார். இதற்கு குரோஷியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து அசத்திய பிரேசில் அணிக்கு ஆஸ்கர் (90+1) மேலும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டநேர முடிவில், பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
தொடரும் வரலாறு:
இதுவரை நடந்த உலக கோப்பை தொடர்களில், போட்டியை நடத்தும் நாடு, துவக்க போட்டிகளில் தோற்றதே கிடையாது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசிலும் நேற்று இதை இச்சாதனையை தக்கவைத்துக்கொண்டது. தவிர, குரோஷியா அணிக்கு எதிராக 2 வது வெற்றி பெற்ற பிரேசில் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.
சாவ் பாலோ: உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் போட்டியில் நட்சத்திர நாயகன் நெய்மர் கைகொடுக்க, பிரேசில் அணி, குரோஷியாவை 3-1 என வீழ்த்தியது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை கால்பந்து தொடர், நேற்று பிரேசிலில் கோலாகலமாக துவங்குகியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும், இத்தொடரின் போட்டிகளில் மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. சாவ் பாலோவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.
சொதப்பல் துவக்கம்:
பரபரப்பாக துவங்கிய முதல் பாதியின் 11வது நிமிடத்தில் பிரேசில்வீரர் மார்செலோ, 'சேம் சைடு ' கோல் அடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளி்த்தார். இதனால் குரோஷியா அணி 1-0 என ஆரம்பத்திலேயே சுலமாக முன்னிலை பெற்றது. அசராமல் தொடர்ந்து போராடிய பிரேசில் அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் (29வது நிமிடம்) முதல் கோல் அடித்து ஆறுதல் அளித்தார். மும்முரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க முயன்றனர். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதியின் முடிவில், போட்டி 1-1 என சமநிலை வகித்தது.
நெய்மர் அபாரம்:
பின் விறுவிறுப்பாக துவங்கிய இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் (71) ஒரு கோல் அடித்தார். இதற்கு குரோஷியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து அசத்திய பிரேசில் அணிக்கு ஆஸ்கர் (90+1) மேலும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டநேர முடிவில், பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
தொடரும் வரலாறு:
இதுவரை நடந்த உலக கோப்பை தொடர்களில், போட்டியை நடத்தும் நாடு, துவக்க போட்டிகளில் தோற்றதே கிடையாது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசிலும் நேற்று இதை இச்சாதனையை தக்கவைத்துக்கொண்டது. தவிர, குரோஷியா அணிக்கு எதிராக 2 வது வெற்றி பெற்ற பிரேசில் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எல்லைக்கோட்டை கடந்து பந்து கோலுக்குள் நுழைந்ததா? உலக கோப்பையில் முதல் முறையாக கோல் லைன் தொழில்நுட்பம் அறிமுகம்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக கோல் லைன் டெக்னாலஜி என்ற நவீன தொழில்நுட்பத்தை உலக கால்பந்து கூட்டமைப்பு (பிபா) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் கோல் போஸ்ட்டில் பக்கவாட்டு வலைகளில் உயர் தொழில்நுட்ப அதிவேக கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். கோல்போஸ்ட்டில் 7 இடங்களில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். கால்பந்து வீரர் உதைத்ததாலோ, தலையால் முட்டியதாலோ கோலை நோக்கி வரும் பந்து கோல் லைனைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் செல்கிறதா என்பதை கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலம் கண்காணிக்க முடியும். பந்து கோல் லைனைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்து விட்டால் கள நடுவர், 2 லைன்ஸ்மேன்கள் மற்றும் களத்துக்கு வெளியில் உள்ள நான்காவது நடுவர் ஆகியோரின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தில் கோல் என்ற அறிவிப்பு வரும்.
இதையடுத்து, களநடுவர் கோல் அடிக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கால்பந்து போட்டிகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. பிபா தலைவர் செப் பிளாட்டரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மனிதர்கள் விளையாடும் போட்டியில் நடுவர்களுக்கு உதவி செய்ய தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், 2010 உலக கோப்பைக்கு பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். தென்னாப்ரிக்காவில் 2010ல் நடந்த உலக கோப்பை போட்டியின் போது ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் பிராங்க் லாம்பார்டு அடித்த பந்து கோல் லைனைக் கடந்திருந்த போதிலும், கள நடுவர் பந்து கோல் எல்லையை கடக்கவில்லை என கருதி கோல் இல்லை என அறிவித்தார். பின்னர் தொலைக்காட்சி கேமராக்களில் பார்த்த போது பந்து கோல் எல்லையைக் கடந்து கோலுக்குள் சென்றிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இன்று துவங்கும் பிரேசில் உலக கோப்பையில் கோல் லைன் டெக்னாலஜியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த கோல் கன்ட்ரோல் டெக்னாலஜி நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. போட்டி நடக்கும் 12 ஸ்டேடியங்களிலும் கோல் போர்ட்டுகளைச் சுற்றி கேமராக்களை பதிக்கும் பணியில் இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காற்று, மழை மற்றும் கேமராக்களை வீரர்கள், கோல் கீப்பர்கள் மறைப்பது உள்பட பல்வேறு நிலைகளில் 2400 முறை இந்த தொழில்நுட்பத்தை வல்லுனர்கள் சோதனை செய்து பார்த்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் தவறு இல்லாத போட்டியாக பிரேசில் உலக கோப்பை அமையும் என்று கோல் கன்ட்ரோல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிரிக் புரோய்ச்ஹாசென் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 6 of 15 • 1 ... 5, 6, 7 ... 10 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 15
|
|