புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
Page 11 of 15 •
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
First topic message reminder :
உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்’ ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் |
பிரேசிலில் இரண்டாவது முறையாக நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, 20-வது கால்பந்து உலகக் கோப்பை போட்டி. 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். பிரேசிலில் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் அதிகம் என்பதால், பாதுகாப்புக்காக மட்டும் 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 ரசிகர்களுக்கு ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு வசதிகள்!
போட்டியில் விளையாடும் ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போர்ச்சுகல் நாடு, தனது நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் '24ஜ்7’ துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நால்வர் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறது. வீரர்கள் தங்கும் அறைகளில் சத்தம் இல்லாத ஏ.சி. சாதனம் வேண்டும், குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஆறு சேனல்கள் டி.வி-யில் தெரிய வேண்டும், ஒவ்வொரு குளியல் அறையிலும் ஜக்கூஸி வேண்டும்... என ஏகப்பட்ட 'வேண்டும்... டும்’கள்!
எப்போதுமே உலகக் கோப்பையை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கோப்பையைத் தொடக்கிவைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி. இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன சென்சார்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
போட்டிகளைக் காண, சுமார் 36 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்கும் அளவுக்கு ஹோட்டல்கள் இன்னும் தயாராகவில்லை. இதனால் பல இடங்களில் வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்கள் தற்காலிக ஹோட்டல்களாக மாறியிருக்கின்றன.
2010-ல் தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பையில் 'வாக்கா வாக்கா’ எனப் பாடி இளைஞர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாப் பாடகி ஷகீரா, இந்த உலகக் கோப்பைக்கு 'லா லா லா’ என்ற புதிய ஆல்பம் மூலம் உற்சாகம் விதைத்திருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜெரார்டு பிக்-ன் மனைவியும்கூட. பிரபல கால்பந்து வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் எல்லாரும் இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்கள்.
போட்டியின் அதிகாரபூர்வ சின்னம் பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படும் ’brazilian three banded armadilo' எனும் ஒருவகை எறும்புத்தின்னி. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்து உடலை அதன் மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டுகொள்ளும். பந்து போல் காணப்படும் இதை, உண்ண வரும் எந்த விலங்கும், அதை கல் என நினைத்து விட்டுவிட்டுப் போய்விடும். ஆபத்து விலகியதும் 'பந்து’ வடிவத்தை விலக்கி எழுந்து நடக்கும். சுருண்டிருக்கும்போது கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் வடிவம் இருக்கும். இவை அழிந்துவருவது பற்றிய விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த இந்த எறும்புத்தின்னியைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் 32 நாடுகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கோப்பையில் ஆடும் நாடுகள்:
ஐரோப்பா (13):
ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா ஹெர்சகோவா.
தென்அமெரிக்கா (6):
பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, சிலி, கொலம்பியா, ஈக்வடார்.
வடக்கு, மத்திய அமெரிக்கா (4).
கோஸ்டாரிகா, ஹோண்டுரஸ், மெக்சிகோ, அமெரிக்கா.
ஆப்பிரிக்கா (5):
அல்ஜீரியா, கேமரூன், கானா, நைஜீரியா, ஐவேரி கோஸ்ட்.
ஆசியா (4):
ஆஸ்திரேலியா, ஐப்பான், ஈரான், தென்கொரியா
தள்ளாடிய மரகானா மைதானம்
ரசிகர்கள் எடையை தாங்காமல், மரகானா மைதானத்தின் மாடிப்படிக்கட்டுகள் தள்ளாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக மொத்தம் பல மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டன. ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா உள்ளிட்ட பல மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன.
இங்கு கடந்த வாரம் அர்ஜென்டினா, போஸ்னியா அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதைக்காண 74,738 பேர் திரண்டனர். அப்போது ரசிகர்கள் சென்றுவர அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிக்கட்டுகள், பாரம் தாங்காமல் தள்ளாடியது.
பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தவர்கள், மரத்தினால் ஆன இந்த படிக்கப்பட்டுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் காணப்பட்டனர்.
இதுகுறித்து மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் மார்டினஸ் கூறுகையில்,‘‘ ஆயிரக்கணக்கான மக்கள் இதில் நடந்து சென்ற போது, எப்படியும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன்,’’ என்றார்.
வேலை முடியலை:
சிலியை சேர்ந்த மிரண்டா கூறுகையில்,‘‘ ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு டிக்கெட்டுகள் பெற, மரத்தினால் ஆன, படிக்கட்டுகளில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது, கட்டுமான பணியாளர்கள், ஆடிக்கொண்டிருந்த படிகளை ‘வெல்டிங்’ வைத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்,’’ என்றார்.
மீண்டும் சோதனை:
அதேநேரம், இம்மைதானத்தில் உள்ள முக்கிய நபர்கள் வந்து செல்லும் பகுதி, கான்கிரீட் தளத்தினால் இருந்தது. இதுகுறித்து ரியோ டி ஜெனிரோ மாநில அரசு வௌியிட்ட அறிக்கையில்,‘ எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் இவைகள் ஆய்வு செய்யப்பட்டன. ரசிகர்கள் பாதுகாப்பு கருதி, மறுபடியும் சோதனை செய்துள்ளோம்,’ என, தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் எடையை தாங்காமல், மரகானா மைதானத்தின் மாடிப்படிக்கட்டுகள் தள்ளாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக மொத்தம் பல மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டன. ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா உள்ளிட்ட பல மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன.
இங்கு கடந்த வாரம் அர்ஜென்டினா, போஸ்னியா அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதைக்காண 74,738 பேர் திரண்டனர். அப்போது ரசிகர்கள் சென்றுவர அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிக்கட்டுகள், பாரம் தாங்காமல் தள்ளாடியது.
பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்தவர்கள், மரத்தினால் ஆன இந்த படிக்கப்பட்டுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்துடன் காணப்பட்டனர்.
இதுகுறித்து மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் மார்டினஸ் கூறுகையில்,‘‘ ஆயிரக்கணக்கான மக்கள் இதில் நடந்து சென்ற போது, எப்படியும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன்,’’ என்றார்.
வேலை முடியலை:
சிலியை சேர்ந்த மிரண்டா கூறுகையில்,‘‘ ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு டிக்கெட்டுகள் பெற, மரத்தினால் ஆன, படிக்கட்டுகளில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது, கட்டுமான பணியாளர்கள், ஆடிக்கொண்டிருந்த படிகளை ‘வெல்டிங்’ வைத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்,’’ என்றார்.
மீண்டும் சோதனை:
அதேநேரம், இம்மைதானத்தில் உள்ள முக்கிய நபர்கள் வந்து செல்லும் பகுதி, கான்கிரீட் தளத்தினால் இருந்தது. இதுகுறித்து ரியோ டி ஜெனிரோ மாநில அரசு வௌியிட்ட அறிக்கையில்,‘ எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் இவைகள் ஆய்வு செய்யப்பட்டன. ரசிகர்கள் பாதுகாப்பு கருதி, மறுபடியும் சோதனை செய்துள்ளோம்,’ என, தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேமரூனை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெளியேற்றியது குரேஷியா
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் கேமரூன் அணியை குரேஷியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் கேமரூன் அணி வெளியேறியது.
இடைவேளைக்குப் பிறகு குரேஷிய ஸ்ட்ரைக்கர் மரியோ மண்ட்சூகிக் 2 கோல்களை அடித்தார். பிரிவு ஏ-யில் இப்போது மெக்சிகோ அணிக்கும் குரேஷிய அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏனெனில் பிரேசில் அணி நிச்சயம் கேமரூனை வீழ்த்திவிடும்.
குரேஷியாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே நடைபெறும் ஆட்டம் நிச்சயம் ஒரு இறுதிப்போட்டி போல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஃபவுல் ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கேமரூன் அணி இந்த ஆட்டத்தில் கடைசி 50 நிமிடங்கள் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. காரணம் குரேஷிய ஸ்ட்ரைக்கர் மண்ட்சூகிக்கை கேமரூன் வீரர் அலெக்சாண்டர் சாங் மோசமான முறையில் ஃபவுல் செய்தார். இதன் பலனாக சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பெரிசிச் அனுப்பிய பந்தை ஓலிக் கோலாக மாற்றினார். 48வது நிமிடத்தில் இவான் பெரிசிச் 2வது கோலை அடிக்க இடைவேளைக்குப் பிறகு மரியோ மண்ட்சூகிக் 61 மற்றும் 73ஆம் நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார்.
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் கேமரூன் அணியை குரேஷியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் கேமரூன் அணி வெளியேறியது.
இடைவேளைக்குப் பிறகு குரேஷிய ஸ்ட்ரைக்கர் மரியோ மண்ட்சூகிக் 2 கோல்களை அடித்தார். பிரிவு ஏ-யில் இப்போது மெக்சிகோ அணிக்கும் குரேஷிய அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏனெனில் பிரேசில் அணி நிச்சயம் கேமரூனை வீழ்த்திவிடும்.
குரேஷியாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே நடைபெறும் ஆட்டம் நிச்சயம் ஒரு இறுதிப்போட்டி போல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஃபவுல் ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கேமரூன் அணி இந்த ஆட்டத்தில் கடைசி 50 நிமிடங்கள் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. காரணம் குரேஷிய ஸ்ட்ரைக்கர் மண்ட்சூகிக்கை கேமரூன் வீரர் அலெக்சாண்டர் சாங் மோசமான முறையில் ஃபவுல் செய்தார். இதன் பலனாக சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பெரிசிச் அனுப்பிய பந்தை ஓலிக் கோலாக மாற்றினார். 48வது நிமிடத்தில் இவான் பெரிசிச் 2வது கோலை அடிக்க இடைவேளைக்குப் பிறகு மரியோ மண்ட்சூகிக் 61 மற்றும் 73ஆம் நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நடப்பு சாம்பியன் ஸ்பெயினை வெளியேற்றியது சிலி
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி, சிலி அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கில் தோற்க, இன்றைய போட்டியில் சிலி அணி 2-0 என்று அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நெதர்லாந்து மற்றும் தற்போது சிலி அணிகள் அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற்றுவிட்டது.
மரகனாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிலி அணி முழு ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயின் அணி நிறைய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
எடுபடாத ஸ்பெயின் உத்தி
அதன் மூகோண வடிவ பாஸ் முறை இந்த உலகக் கோப்பையில் எடுபடாமல் போனது. முக்கோணம் நகர்ந்தால்தானே? அதனை சிலியும் முறியடித்தது. உத்தியை மாற்றியிருக்க வேண்டும்.
மாற்றாமல் அதே ஷார்ட் பாஸ் உத்தியைக் கடைபிடித்தது. இதனால் பந்தின் கட்டுப்பாட்டை அடிக்கடி இழந்ததோடு தங்கள் கோல் பகுதியில் நிறைய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
உலக சாம்பியன் மற்றும் இரட்டை ஐரோப்பிய சாம்பியன்கள் ஓர் உலக அளவிலான தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறுவது 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பாக கோப்பையைக் கையில் பிடித்துத் தூக்கிய கேப்டன் கேசிலாஸ் முகத்தில் ஈயாடவில்லை. பிரேசிலை விடுத்து ஸ்பெயினுக்கு ஆடிய கோஸ்டாவினால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ரசிகர்களின் வசைக்கு ஆளானார்.
சிலிர்க்க வைத்த சிலி
ஸ்பெயின் அணியின் பொற்காலம் உடைக்கப்பட்டது. அதன் வலி ஆட்டம் முடியும்போது அவர்கள் கண்களில் தெரிந்தது. துவக்கத்தில் சுமாராக ஆடிய ஸ்பெயின் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் இடைவெளிகளை உருவாக்கியது.
சிலி வீரர்கள் அலெக்சிஸ் சான்சேஸ், ஆர்ச்சூர்ரோ வைடால், அராங்விஸ் ஆகிய மூவர் கூட்டணி வலதுபுறத்தில் தங்களிடையே பாஸ்களுடன் வேகமாக முன்னேறினர்.
அராங்விஸ் சாதுரியமாக வார்கஸிடம் பந்தை அளித்தார். அவர் ஒரு டச்சில் கேசிலாஸைக் கடந்து எடுத்துச் சென்று கோலுக்குள் அடித்தார். இந்த ஒரு கோல் சிலியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியது. வேகம், ஆக்ரோஷம், திறன் என்று ஆட்டம் சிலிக்கு சாதகமாக சூடுபிடிக்கத் தொடங்கியது.
இதற்குப் பதிலாக சவால் கொடுக்க முடியாமல் ஸ்பெயின் ஃபவுல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிறைய ஃபவுல்கள் செய்தது. அப்படிப்பட்ட ஒரு எதிர்மறை அணுகுமுறைக் கணத்தில்தான் சிலிக்கு ஃப்ரீ கிக் கிடைக்க 2-வது கோல் அடிக்கப்பட்டது. இதுவே பின்பு வெற்றி கோலாகவும் மாறியது.
அற்புத கோல்
2வது கோல் ஸ்பெயின் அணியின் போதாமைகளை பறை சாற்றியது. ஸ்பெயின் அணியின் கோலை நோக்கி சிலி முன்னேற வலது புறத்த்தில் சிலி வீரர் சான்சேசிடம் பந்து அளிக்கப்படுகிறது. அவர் ஒரே அடியில் கோலாக மாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஸ்பெயின் வீரர் சாபி அலான்சோ (ஸ்பெயினின் ஒரே கோலை அன்று நெதர்லாந்துக்கு எதிராக அடித்தவர்) சான்சேசை முறை தவறி இடையூறு செய்ததாக சிலிக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. சான்சேஸெ ஃப்ரீ கிக்கை எடுத்துக் கொண்டார். ஒரே அடி அடித்தார். பந்து வளைந்து கோல் கீப்பர் கேசிலாஸிடம் செல்ல, அதனை அவர் பிடித்து வைத்துக்கொள்வதற்கு பதிலாக முன்பக்கமாக தள்ளி விட்டுத் தவறு செய்தார். பந்து நேராக சிலி வீரர் அராங்விஸிடம் வர அதனை அபாரமான கோலாக மாற்றினார்.
இதுதான் ஸ்பெயினை வெலியேற்றிய அந்தக்கணத்தின் அற்புத கோல். கேசிலாஸ் செய்த தவறு பந்தை பிடிக்காமல் தள்ளிவிட்டது. அதுவும் தள்ளி விடும்போது குறிபார்த்து சிலி வீரரிடம் தள்ளிவிட்டது!
அதன் பிறகு ஸ்பெயின் சில பல மூவ்களைச் செய்தாலும் ஆட்டம் கைவிட்டுப் போனதை அவர்கள் அறிந்தனர். அவர்களே எப்போது இறுதி விசில் ஊதப்படும் என்று காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆதிக்கத்தை முடித்த விசில்
ஸ்பெயினின் வலியைக் குறைக்கும் அந்த இறுதி விசிலும் ஊதப்பட்டது. அது ஸ்பெயினின் வெளியேற்றத்தை அறிவிக்கும் விசில் என்பதோடு ஸ்பெயினின் ஆதிக்கத்தை முடிக்கும் விசிலாகவும் அமைந்தது.
4 ஆண்டுகளுக்கு முன்பு சாவி (Xavi) வளர்த்தெடுத்த அணி, ஆனால் இன்று அவர் விளையாட முடியாமல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு தன் அணி வெளியேறியதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டது. அவரது காயமும் ஸ்பெயின் அணியின் இத்தகைய நிலைமைக்கு ஒரு வகையில் காரணமானது.
ஸ்பெயினின் சரிவை ஆங்கில ஊடகங்கள் "ஒரு ஆதிக்கத்தின் முடிவு" என்று கேட்பதற்கு வருத்தம் காண்பிப்பது போன்ற, ஆனால் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன் எழுதி வருகின்றன.
ஏதோ இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல ஸ்பெயின் மட்டுமே இடையூறாக இருந்ததுபோல் அவர்களுக்கு ஒரு நினைப்பு.
எது எப்படியிருந்தாலும் சிலி அணி ஓர் அபாயகரமான அணியாக மாறியுள்ளதை மற்ற அணிகள் அடுத்த சுற்று ஆட்டங்களின் போது கவனத்தில் கொள்வதே நல்லது.
ஸ்பெயின் ரசிகர்கள் கண்களில் கண்ணீரும் அதிர்ச்சியும் இரண்டறக் கலந்து வெளிப்பட்டது. ஸ்பெயின் வீரர்கள் உடல்மொழி உண்மையான தோல்விகளைச் சந்தித்த இயலாமையை வெளிப்படுத்தியது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி, சிலி அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கில் தோற்க, இன்றைய போட்டியில் சிலி அணி 2-0 என்று அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நெதர்லாந்து மற்றும் தற்போது சிலி அணிகள் அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற்றுவிட்டது.
மரகனாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிலி அணி முழு ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயின் அணி நிறைய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
எடுபடாத ஸ்பெயின் உத்தி
அதன் மூகோண வடிவ பாஸ் முறை இந்த உலகக் கோப்பையில் எடுபடாமல் போனது. முக்கோணம் நகர்ந்தால்தானே? அதனை சிலியும் முறியடித்தது. உத்தியை மாற்றியிருக்க வேண்டும்.
மாற்றாமல் அதே ஷார்ட் பாஸ் உத்தியைக் கடைபிடித்தது. இதனால் பந்தின் கட்டுப்பாட்டை அடிக்கடி இழந்ததோடு தங்கள் கோல் பகுதியில் நிறைய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
உலக சாம்பியன் மற்றும் இரட்டை ஐரோப்பிய சாம்பியன்கள் ஓர் உலக அளவிலான தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறுவது 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பாக கோப்பையைக் கையில் பிடித்துத் தூக்கிய கேப்டன் கேசிலாஸ் முகத்தில் ஈயாடவில்லை. பிரேசிலை விடுத்து ஸ்பெயினுக்கு ஆடிய கோஸ்டாவினால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ரசிகர்களின் வசைக்கு ஆளானார்.
சிலிர்க்க வைத்த சிலி
ஸ்பெயின் அணியின் பொற்காலம் உடைக்கப்பட்டது. அதன் வலி ஆட்டம் முடியும்போது அவர்கள் கண்களில் தெரிந்தது. துவக்கத்தில் சுமாராக ஆடிய ஸ்பெயின் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் இடைவெளிகளை உருவாக்கியது.
சிலி வீரர்கள் அலெக்சிஸ் சான்சேஸ், ஆர்ச்சூர்ரோ வைடால், அராங்விஸ் ஆகிய மூவர் கூட்டணி வலதுபுறத்தில் தங்களிடையே பாஸ்களுடன் வேகமாக முன்னேறினர்.
அராங்விஸ் சாதுரியமாக வார்கஸிடம் பந்தை அளித்தார். அவர் ஒரு டச்சில் கேசிலாஸைக் கடந்து எடுத்துச் சென்று கோலுக்குள் அடித்தார். இந்த ஒரு கோல் சிலியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியது. வேகம், ஆக்ரோஷம், திறன் என்று ஆட்டம் சிலிக்கு சாதகமாக சூடுபிடிக்கத் தொடங்கியது.
இதற்குப் பதிலாக சவால் கொடுக்க முடியாமல் ஸ்பெயின் ஃபவுல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிறைய ஃபவுல்கள் செய்தது. அப்படிப்பட்ட ஒரு எதிர்மறை அணுகுமுறைக் கணத்தில்தான் சிலிக்கு ஃப்ரீ கிக் கிடைக்க 2-வது கோல் அடிக்கப்பட்டது. இதுவே பின்பு வெற்றி கோலாகவும் மாறியது.
அற்புத கோல்
2வது கோல் ஸ்பெயின் அணியின் போதாமைகளை பறை சாற்றியது. ஸ்பெயின் அணியின் கோலை நோக்கி சிலி முன்னேற வலது புறத்த்தில் சிலி வீரர் சான்சேசிடம் பந்து அளிக்கப்படுகிறது. அவர் ஒரே அடியில் கோலாக மாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஸ்பெயின் வீரர் சாபி அலான்சோ (ஸ்பெயினின் ஒரே கோலை அன்று நெதர்லாந்துக்கு எதிராக அடித்தவர்) சான்சேசை முறை தவறி இடையூறு செய்ததாக சிலிக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. சான்சேஸெ ஃப்ரீ கிக்கை எடுத்துக் கொண்டார். ஒரே அடி அடித்தார். பந்து வளைந்து கோல் கீப்பர் கேசிலாஸிடம் செல்ல, அதனை அவர் பிடித்து வைத்துக்கொள்வதற்கு பதிலாக முன்பக்கமாக தள்ளி விட்டுத் தவறு செய்தார். பந்து நேராக சிலி வீரர் அராங்விஸிடம் வர அதனை அபாரமான கோலாக மாற்றினார்.
இதுதான் ஸ்பெயினை வெலியேற்றிய அந்தக்கணத்தின் அற்புத கோல். கேசிலாஸ் செய்த தவறு பந்தை பிடிக்காமல் தள்ளிவிட்டது. அதுவும் தள்ளி விடும்போது குறிபார்த்து சிலி வீரரிடம் தள்ளிவிட்டது!
அதன் பிறகு ஸ்பெயின் சில பல மூவ்களைச் செய்தாலும் ஆட்டம் கைவிட்டுப் போனதை அவர்கள் அறிந்தனர். அவர்களே எப்போது இறுதி விசில் ஊதப்படும் என்று காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆதிக்கத்தை முடித்த விசில்
ஸ்பெயினின் வலியைக் குறைக்கும் அந்த இறுதி விசிலும் ஊதப்பட்டது. அது ஸ்பெயினின் வெளியேற்றத்தை அறிவிக்கும் விசில் என்பதோடு ஸ்பெயினின் ஆதிக்கத்தை முடிக்கும் விசிலாகவும் அமைந்தது.
4 ஆண்டுகளுக்கு முன்பு சாவி (Xavi) வளர்த்தெடுத்த அணி, ஆனால் இன்று அவர் விளையாட முடியாமல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு தன் அணி வெளியேறியதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டது. அவரது காயமும் ஸ்பெயின் அணியின் இத்தகைய நிலைமைக்கு ஒரு வகையில் காரணமானது.
ஸ்பெயினின் சரிவை ஆங்கில ஊடகங்கள் "ஒரு ஆதிக்கத்தின் முடிவு" என்று கேட்பதற்கு வருத்தம் காண்பிப்பது போன்ற, ஆனால் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன் எழுதி வருகின்றன.
ஏதோ இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல ஸ்பெயின் மட்டுமே இடையூறாக இருந்ததுபோல் அவர்களுக்கு ஒரு நினைப்பு.
எது எப்படியிருந்தாலும் சிலி அணி ஓர் அபாயகரமான அணியாக மாறியுள்ளதை மற்ற அணிகள் அடுத்த சுற்று ஆட்டங்களின் போது கவனத்தில் கொள்வதே நல்லது.
ஸ்பெயின் ரசிகர்கள் கண்களில் கண்ணீரும் அதிர்ச்சியும் இரண்டறக் கலந்து வெளிப்பட்டது. ஸ்பெயின் வீரர்கள் உடல்மொழி உண்மையான தோல்விகளைச் சந்தித்த இயலாமையை வெளிப்படுத்தியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரேசில் செல்கிறார் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தைக் காண்பதற்காக அடுத்த மாதம் பிரேசில் செல்கிறார். உலகக் கோப்பை பரிசளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ரஷ்யா நடத்தவுள்ளது. பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை பரிசளிப்பு விழாவின்போது, 2018 உலகக் கோப்பை நடத்துவதற்கான பொறுப்பை விளாடிமிர் புதினிடம் பிரேசில் அதிபர் தில்மா ரௌசப் வழங்குவார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.-பிடிஐ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தைக் காண்பதற்காக அடுத்த மாதம் பிரேசில் செல்கிறார். உலகக் கோப்பை பரிசளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ரஷ்யா நடத்தவுள்ளது. பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை பரிசளிப்பு விழாவின்போது, 2018 உலகக் கோப்பை நடத்துவதற்கான பொறுப்பை விளாடிமிர் புதினிடம் பிரேசில் அதிபர் தில்மா ரௌசப் வழங்குவார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.-பிடிஐ
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஓரளவுக்கு இப்ப எல்லாரும் நல்லாதான் விளையாடுறாங்க..........
இதுல யார்தான் ஜெயிப்பாங்க
இதுல யார்தான் ஜெயிப்பாங்க
கானா - ஜெர்மனி த்ரில் டிரா: ரொனால்டோ உலக சாதனையை சமன் செய்தார் க்லோஸ்
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பிரிவு ஜி போட்டியில், பலமான ஜெர்மனி அணிக்கு எதிராக கானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரு அணிகளும் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது.
இந்த ஆட்டத்தில் பிரேசில் வீரர் ரொனால்டோவின் 15 கோல்கள் சாதனையைச் சமன் செய்தார் ஜெர்மனி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ். இடைவேளைக்கு முன்பாக இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி வீரர் மரியோ கூட்சீ 51வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆனால் கானா அணியின் ஆந்ரே அயூ 54வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார்.
63வது நிமிடத்தில் கானாவின் அசமோ கியான் ஒரு கோல் அடித்த்து கானாவை 2- 1 என்று முன்னிலைக்கு இட்டுச் சென்றவுடன் இன்று ஒரு பெருந்தோல்வி காத்த்திருக்கிறது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 36 வயது மிராஸ்லோவ் க்லோஸ் 71 வது நிமிடத்தில் அபாரமான கோல் ஒன்றை அடித்து ரொனால்டோவின் உலக சாதனையைச் சமன் செய்ததோடு ஜெர்மனி டிரா செய்யவும் உதவினார்.
இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனியின் அன்றைய ஹேட்ரிக் சாதனை வீரர் தாமஸ் முல்லர் அருமையாக ஒரு பாஸை அளிக்க கூட்சீ அதனை கோலாக மாற்றினார். இந்த முன்னிலையை நீண்ட நேரம் ஜெர்மனியினால் தக்க வைக்க முடியவில்லை. கானா வீரர் ஹாரிசன் அஃபுல் வலது புறமிருந்து ஒரு அபாரமான ஷாட்டை ஆட ஆந்ரே அயூ கோலுக்கு 6 அடி முன்னால் இருந்து எம்பி தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் கானா சமன் செய்தது.
இதற்கு சரியாக 9 நிமிடங்கள் கழித்து, சல்லே மன்டாரி ஜெர்மனியின் தடுப்பட்ட வீரர்களை இரண்டாகப் பிளது பந்தைக் கடத்திச் சென்று அசமோ கியானுக்கு அருமையாக பாஸ் அடிக்க அவருக்கு அதிசயமாக நிறைய இடைவேளி இருந்தது. விடுவாரா வாய்ப்பை? நேராக ஜெர்மனி கோல் கீப்பர் மானுயெல் நியூயரைத் தாண்டி கோல் அடித்தார், ஜெர்மனி அதிர்ச்சி அடைந்தது. காரணம் 2- 1 என்று கானா முன்னிலைப் பெற்றது.
பிறகே ஜெர்மனிக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உலக சாதனையை சமன் செய்யக் காத்திருக்கும் மிராஸ்லோவ் க்லோஸிற்கு வாய்ப்புக் கிடைத்தது. கார்னர் ஷாட்டை நெரிசலான கானா வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி கோலாக மாற்றினார். அதுவே ஜெர்மனி சமன் செய்த கோல் மற்றும் க்லோஸ், பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோவின் உலக சாதனை கோலை சமன் செய்த கோல்!!
இந்த ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து பிரிவு ஜி-யில் ஜெர்மனி ஒரு வெற்றி ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. யு.எஸ். அணி கானாவை வீழ்த்தியதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. கானா போர்ச்சுக்கல் அணியையும், ஜெர்மனி யு.எஸ். அணியையும், யு.எஸ் அணி போர்ச்சுகல்லுடன் விளையாட வேண்டியிருப்பதால் இந்தப் பிரிவும் இழுபறி நிலையில் உள்ளது.
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பிரிவு ஜி போட்டியில், பலமான ஜெர்மனி அணிக்கு எதிராக கானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரு அணிகளும் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது.
இந்த ஆட்டத்தில் பிரேசில் வீரர் ரொனால்டோவின் 15 கோல்கள் சாதனையைச் சமன் செய்தார் ஜெர்மனி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ். இடைவேளைக்கு முன்பாக இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி வீரர் மரியோ கூட்சீ 51வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆனால் கானா அணியின் ஆந்ரே அயூ 54வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார்.
63வது நிமிடத்தில் கானாவின் அசமோ கியான் ஒரு கோல் அடித்த்து கானாவை 2- 1 என்று முன்னிலைக்கு இட்டுச் சென்றவுடன் இன்று ஒரு பெருந்தோல்வி காத்த்திருக்கிறது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 36 வயது மிராஸ்லோவ் க்லோஸ் 71 வது நிமிடத்தில் அபாரமான கோல் ஒன்றை அடித்து ரொனால்டோவின் உலக சாதனையைச் சமன் செய்ததோடு ஜெர்மனி டிரா செய்யவும் உதவினார்.
இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனியின் அன்றைய ஹேட்ரிக் சாதனை வீரர் தாமஸ் முல்லர் அருமையாக ஒரு பாஸை அளிக்க கூட்சீ அதனை கோலாக மாற்றினார். இந்த முன்னிலையை நீண்ட நேரம் ஜெர்மனியினால் தக்க வைக்க முடியவில்லை. கானா வீரர் ஹாரிசன் அஃபுல் வலது புறமிருந்து ஒரு அபாரமான ஷாட்டை ஆட ஆந்ரே அயூ கோலுக்கு 6 அடி முன்னால் இருந்து எம்பி தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் கானா சமன் செய்தது.
இதற்கு சரியாக 9 நிமிடங்கள் கழித்து, சல்லே மன்டாரி ஜெர்மனியின் தடுப்பட்ட வீரர்களை இரண்டாகப் பிளது பந்தைக் கடத்திச் சென்று அசமோ கியானுக்கு அருமையாக பாஸ் அடிக்க அவருக்கு அதிசயமாக நிறைய இடைவேளி இருந்தது. விடுவாரா வாய்ப்பை? நேராக ஜெர்மனி கோல் கீப்பர் மானுயெல் நியூயரைத் தாண்டி கோல் அடித்தார், ஜெர்மனி அதிர்ச்சி அடைந்தது. காரணம் 2- 1 என்று கானா முன்னிலைப் பெற்றது.
பிறகே ஜெர்மனிக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உலக சாதனையை சமன் செய்யக் காத்திருக்கும் மிராஸ்லோவ் க்லோஸிற்கு வாய்ப்புக் கிடைத்தது. கார்னர் ஷாட்டை நெரிசலான கானா வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி கோலாக மாற்றினார். அதுவே ஜெர்மனி சமன் செய்த கோல் மற்றும் க்லோஸ், பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோவின் உலக சாதனை கோலை சமன் செய்த கோல்!!
இந்த ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து பிரிவு ஜி-யில் ஜெர்மனி ஒரு வெற்றி ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. யு.எஸ். அணி கானாவை வீழ்த்தியதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. கானா போர்ச்சுக்கல் அணியையும், ஜெர்மனி யு.எஸ். அணியையும், யு.எஸ் அணி போர்ச்சுகல்லுடன் விளையாட வேண்டியிருப்பதால் இந்தப் பிரிவும் இழுபறி நிலையில் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீண்டும் மெஸ்ஸி மேஜிக்: ஈரானை வீழ்த்தப் போராடிய அர்ஜென்டீனா!
ஈரான் அணியை கடைசி நிமிட கோலினால் வீழ்த்தி, அர்ஜென்டீனா அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மீண்டும் லயோனல் மெஸ்ஸியின் மேஜிக் கோல்தான் அர்ஜென்டீனாவை டிரா என்ற சங்கடத்திலிருந்து காப்பாற்றியது.
இடைவேளைக்குப் பிறகு ஈரானின் 3 கோல் முயற்சிகளை அர்ஜென்டீனா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோ தடுத்தார். இல்லையெனில் மெஸ்ஸி மேஜிக் என்று பேச இடமில்லாது போயிருக்கும்.
ஆனால், இந்த வெற்றியை ஈட்டப் படாத பாடுபட்டது உலகப் புகழ் பெற்ற மெஸ்ஸியை தன் வசம் வைத்திருக்கும் அர்ஜென்டீனா. ஈரான் தன் பங்கிற்கு தைரியமாக ஆடியது அவ்வளவே. ஆனால் 'கோல் போட முடியாது உங்களால்' என்று அர்ஜென்டீனாவிடம் சவால் விடுத்தது போல் இருந்தது அதன் தடுப்பு உத்தி.
மெஸ்ஸியை பெரும்பகுதி ஈரான் சாந்தமாக வைத்திருந்தது. அவருக்கென்று பிரத்யேகமாக வீரர்களை நியமித்தது ஈரான், அதனால் அவர் கடைசி நிமிடம் அந்த கோல் அடிக்கும் வரை சாதுவாகவே காணப்பட்டார்.
ஆனாலும் எப்படித் தடுப்பு உத்தி செய்தாலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டீனா இவ்வளவு போராடும் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மேலும் ஒரு சமயத்தில் அர்ஜென்டீன வீரர் பேபியோ சபலேட்டா ஈரான் வீரர் அஸ்கான் தேஜகாவை பெனால்டி பகுதிக்குள் பவுல் செய்ததாக பெனால்டி கொடுக்க ஈரான் தரப்பிலிருந்து பெரும் முறையீடு எழுந்தது. நடுவர் ஏன் அதனை ஏற்கவில்லை என்பது சர்ச்சைக்குரிய ஒன்று.
முதல் பாதியில் அர்ஜென்டீனாவிடமே பந்து அதிகம் இருந்தது. ஆனாலும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அரணை உடைக்க முடியவில்லை. முதல் கோல் வாய்ப்பு அர்ஜென்டீன வீரர் ஹிகுவேயிற்கு வந்தது. பெர்னாண்டோ காகோ அளித்த பாஸை கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் ஈரான் கோல் கீப்பர் மிக தைரியமாக ஹிகுவே காலடியில் பந்தை பிடித்தார்.
அதன் பிறகு மெஸ்ஸி மற்றும் ஏஞ்சல் டி மரியா இருவரும் இரண்டு ஃப்ரீ கிக் வாய்ப்புகளை ஈரான் கோல் போஸ்டிற்கு மேல் அடித்து விரயம் செய்தனர். பிறகு மெஸ்ஸி அதிசயமாக சில பாஸ்களை செய்தப் போதிலும் அர்ஜென்டீனா கோல் வாய்ப்பு கை கூடவில்லை.
மாறாக இடைவேளைக்கு சற்று முன் ஈரான் ஸ்ட்ரைக்கர் ஜலால் ஹொசைனி ஏறக்குறைய கோலை அடித்திருப்பார். அது ஈரானின் வலியை அதிகரிக்கும் விதமாக கோல் போஸ்டிற்கு மேலே சென்றது.
அதன் பிறகு ஈரான் வீரர் ரேசா தலையால் ஒரு பந்தை கோலை நோக்கி அடிக்க அர்ஜெடீன கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். இதற்கு அடுத்த படியாக பெனால்டி முறையீடு எழுந்தது. ஆனால் நடுவர் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு புகழ்பெற்ற டிரா நோக்கி ஆட்டம் சென்றது. குறித்த 90 நிமிட ஆட்டம் முடிவடைய காயத்திஆல் நிறுத்தப்பட்ட ஆட்ட நேரத்தை ஈடுகட்டும் நேரத்தில் மெஸ்ஸி மேஜிக் நிகழ்ந்தது.
வலது புறம் ஒரு பாஸை வாங்கிய மெஸ்ஸி சில பல உத்திகளைக் கையாண்டு பந்தை தான் அடிக்க முடியக்கூடிய இடைவெளி கிடைக்குமாறு செய்து கடைசியில் இடது காலால் ஒரே உதை உதைக்க பந்து ஈரான் கோலுக்குள் சீறிப்பாய்ந்தது. உண்மையில் அபாரமான கோல் இது. அவரது இத்தகைய கோல்களை நிறைய சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் வெகு அரிதாகவே சர்வதேச ஆட்டங்களில் இத்தகைய கோலை அவர் அடிப்பது வழக்கம்.
மெஸ்ஸி 2வது கோலை இந்த உலகக் கோப்பையில் அடித்துள்ளார். இரண்டுமே வெற்றி கோல்கள்.
ஈரான் அணியை கடைசி நிமிட கோலினால் வீழ்த்தி, அர்ஜென்டீனா அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மீண்டும் லயோனல் மெஸ்ஸியின் மேஜிக் கோல்தான் அர்ஜென்டீனாவை டிரா என்ற சங்கடத்திலிருந்து காப்பாற்றியது.
இடைவேளைக்குப் பிறகு ஈரானின் 3 கோல் முயற்சிகளை அர்ஜென்டீனா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோ தடுத்தார். இல்லையெனில் மெஸ்ஸி மேஜிக் என்று பேச இடமில்லாது போயிருக்கும்.
ஆனால், இந்த வெற்றியை ஈட்டப் படாத பாடுபட்டது உலகப் புகழ் பெற்ற மெஸ்ஸியை தன் வசம் வைத்திருக்கும் அர்ஜென்டீனா. ஈரான் தன் பங்கிற்கு தைரியமாக ஆடியது அவ்வளவே. ஆனால் 'கோல் போட முடியாது உங்களால்' என்று அர்ஜென்டீனாவிடம் சவால் விடுத்தது போல் இருந்தது அதன் தடுப்பு உத்தி.
மெஸ்ஸியை பெரும்பகுதி ஈரான் சாந்தமாக வைத்திருந்தது. அவருக்கென்று பிரத்யேகமாக வீரர்களை நியமித்தது ஈரான், அதனால் அவர் கடைசி நிமிடம் அந்த கோல் அடிக்கும் வரை சாதுவாகவே காணப்பட்டார்.
ஆனாலும் எப்படித் தடுப்பு உத்தி செய்தாலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டீனா இவ்வளவு போராடும் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
மேலும் ஒரு சமயத்தில் அர்ஜென்டீன வீரர் பேபியோ சபலேட்டா ஈரான் வீரர் அஸ்கான் தேஜகாவை பெனால்டி பகுதிக்குள் பவுல் செய்ததாக பெனால்டி கொடுக்க ஈரான் தரப்பிலிருந்து பெரும் முறையீடு எழுந்தது. நடுவர் ஏன் அதனை ஏற்கவில்லை என்பது சர்ச்சைக்குரிய ஒன்று.
முதல் பாதியில் அர்ஜென்டீனாவிடமே பந்து அதிகம் இருந்தது. ஆனாலும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஈரான் பாதுகாப்பு அரணை உடைக்க முடியவில்லை. முதல் கோல் வாய்ப்பு அர்ஜென்டீன வீரர் ஹிகுவேயிற்கு வந்தது. பெர்னாண்டோ காகோ அளித்த பாஸை கோலாக மாற்ற முயற்சித்தார். ஆனால் ஈரான் கோல் கீப்பர் மிக தைரியமாக ஹிகுவே காலடியில் பந்தை பிடித்தார்.
அதன் பிறகு மெஸ்ஸி மற்றும் ஏஞ்சல் டி மரியா இருவரும் இரண்டு ஃப்ரீ கிக் வாய்ப்புகளை ஈரான் கோல் போஸ்டிற்கு மேல் அடித்து விரயம் செய்தனர். பிறகு மெஸ்ஸி அதிசயமாக சில பாஸ்களை செய்தப் போதிலும் அர்ஜென்டீனா கோல் வாய்ப்பு கை கூடவில்லை.
மாறாக இடைவேளைக்கு சற்று முன் ஈரான் ஸ்ட்ரைக்கர் ஜலால் ஹொசைனி ஏறக்குறைய கோலை அடித்திருப்பார். அது ஈரானின் வலியை அதிகரிக்கும் விதமாக கோல் போஸ்டிற்கு மேலே சென்றது.
அதன் பிறகு ஈரான் வீரர் ரேசா தலையால் ஒரு பந்தை கோலை நோக்கி அடிக்க அர்ஜெடீன கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். இதற்கு அடுத்த படியாக பெனால்டி முறையீடு எழுந்தது. ஆனால் நடுவர் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு புகழ்பெற்ற டிரா நோக்கி ஆட்டம் சென்றது. குறித்த 90 நிமிட ஆட்டம் முடிவடைய காயத்திஆல் நிறுத்தப்பட்ட ஆட்ட நேரத்தை ஈடுகட்டும் நேரத்தில் மெஸ்ஸி மேஜிக் நிகழ்ந்தது.
வலது புறம் ஒரு பாஸை வாங்கிய மெஸ்ஸி சில பல உத்திகளைக் கையாண்டு பந்தை தான் அடிக்க முடியக்கூடிய இடைவெளி கிடைக்குமாறு செய்து கடைசியில் இடது காலால் ஒரே உதை உதைக்க பந்து ஈரான் கோலுக்குள் சீறிப்பாய்ந்தது. உண்மையில் அபாரமான கோல் இது. அவரது இத்தகைய கோல்களை நிறைய சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் பார்த்திருக்கலாம். ஆனால் வெகு அரிதாகவே சர்வதேச ஆட்டங்களில் இத்தகைய கோலை அவர் அடிப்பது வழக்கம்.
மெஸ்ஸி 2வது கோலை இந்த உலகக் கோப்பையில் அடித்துள்ளார். இரண்டுமே வெற்றி கோல்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேரியாக் காய்ச்சல் மாத்திரைகள் தீர்வதற்கு முன்னரே வெளியேறிய இங்கிலாந்து
உருகுவேயிற்கு எதிராக தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்ட். | கோப்புப் படம்
உருகுவேயிற்கு எதிராக தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்ட். | கோப்புப் படம்
பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்க வேண்டி வரும் என்று இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மலேரியாக் காய்ச்சல் தாக்காமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்டு வந்தனர்.
ஆனால் அவ்வளவு நாட்கள் பிரேசிலில் தங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. கோஸ்டா ரிகா, இத்தாலியை வீழ்த்திய போது இங்கிலாந்து வெளியேற்றப்பட்டது. மலேரியாக்காய்ச்சல் மாத்திரைகள் தீர்வதற்கு முன்னரே இங்கிலாந்து பிரேசிலில் இருந்து கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியின் ஆட்டத்தை கடுமையாக கேலி பேசியுள்ளன.
இங்கிலாந்து தோல்விக்கு ஏகப்பட்ட காரணங்களை அவரவர் தங்கள் மூளைக்கு உதித்த விதத்தில் கூறிவந்தாலும் ஏ.எஃப்.பி. செய்தி ஏஜென்சி இங்கிலாந்தின் பரிதாப வெளியேற்றத்திற்கு பிரதானமாக 5 காரணங்களை அலசியுள்ளது:
1. இங்கிலாந்து மேலாளர் ராய் ஹாட்க்சன் இளம் வீரர்களையும் கற்பனை சக்தி படைத்த வீரர்களையும் தேர்வு செய்ததாக பாராட்டப்படுகிறார். ஆனால் இத்தாலி மற்றும் உருகுவே ஆட்டங்களில் இங்கிலாந்து அணியில் ஒரு பேலன்ஸ் இல்லை. தாக்குதல் ஆட்டக்காரர்களான ரஹீம் ஸ்டெர்லிங், டேனி வெல்பெக், வெய்ன் ரூனி ஆகியோரை இடது புறத்தில் கொண்டு சென்று நிறுத்தி அணியின் தடுப்பு உத்தியில் ஓட்டை விழச்செய்தது முதல்படி தவறு. இந்தத் தவறு, அன்று இத்தாலி வீரர் பாலோடெல்லி கடைசியில் அடித்த வெற்றி கோல் நிரூபிக்கிறது. இத்தாலியின் ஆண்டனியோ காண்ட்ரீவா, லெய்டன் பெய்ன்சை சுலபமாகக் கடந்து சென்று பாலோடெல்லிக்கு பந்தை அளிக்க முடிந்தது. அதே போல் இத்தாலிக்கு எதிராக முக்கிய பங்காற்றிய ஸ்டெர்லிங் உருகுவே அணிக்கு எதிராக கிடுக்கிப்பிடியிலிருந்து மீள முடியவில்லை. மேலும் பதிலி வீரர் ராஸ் பர்க்ளி இரண்டு ஆட்டங்களிலும் சொல்லிக் கொள்ளும் விதமாக எதையும் செய்து விடவில்லை.
2. மேலாளர் ஹாட்க்சனின் நன்கு நிறுவப்பட்ட உத்தியான 4-2-3-1 என்ற களவியூகம் பிரேசில் உலகக் கோப்பையில் போதவில்லை. இத்தாலிக்கு எதிராக ரூனி, ஸ்டெர்லிங், வெல்பெக், டேனியல் ஸ்டரிட்ஜ் ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும், உருகுவே அணிக்கு எதிராக இவர்களது ஆட்டத்தில் ஒரு முறையாக வகுத்தெடுக்கப்பட்ட உத்தியை பின்பற்றாமல் இருந்தது. பந்து வந்தவுடன் ஏதோ அவசரகதியில் எடுத்துச் சென்று தடுக்கப்பட்டனரே தவிர ஆட்டத்தில் தீர்மானமான திட்டம் எதுவும் இல்லை.
3. இங்கிலாந்து வாங்கிய அனைத்துக் கோல்களும் அடிப்படையான பாதுகாப்பு தவறுகளே. கார்னர் ஷாட்டில் கவனமின்மையால் இத்தாலி வீரர் கிளாடியோ மர்சிசோ முதல் கோலை அடித்தார். பாலோடெல்லி அடித்த வின்னர் கோலின் போது இங்கிலாந்து வீரர் பெய்ன்ஸின் திறன் போதாமையாகவே இருந்தது. உருகுவே அணிக்கு எதிராக 6 வீரர்கள் அரணாக இருந்தும் உருகுவே வீரர் எடின்சன் கவானி, மிகச்சரியாக சுவாரேஸுக்கு பந்தை அளிக்க முடிந்தது. இதனால் முதல் கோல் விழுந்தது. இரண்டாவது கோலையும் சுவாரேஸ் எந்த வித இடையூறுமின்றி அடித்தார். இந்தத் தற்காப்பு உத்தியை முன்னாள் இங்கிலாந்து வீரர் ரியோ ஃபெர்டினாண்ட் “பள்ளிச்சிறுவர்களின் ஆட்டத்திற்கு ஒப்பானது” என்று வர்ணித்தார்.
4. உருகுவே அணிக்கு எதிராகவும் இத்தாலி அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து பந்தைத் தங்கள் வசம் வைத்திருந்ததில் முன்னிலை வகித்தது, ஆனால் திட்டமிடல் இல்லாததாலும் தேவையில்லாத அவசரம் காட்டியதாலும் கோல் போட முடியவில்லை. உருகுவே அணிக்கு எதிராக 1-1 என்று சமனிலையில் இருந்தபோது இங்கிலாந்து வெகு சுலபமாக ஆட்டத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தோல்வி அடைந்தது.
5.இங்கிலிஷ் பிரிமியர் லீகில் லிவர் பூல் அணிக்காக ஆடிய ஸ்டீவன் ஜெரார்ட் களைப்படைந்தார். அவரது ஆட்டத்தில் போதிய வேகமோ, சாதுரியமோ இல்லை. உருகுவே அணிக்கு எதிராக சுவாரேஸ் அடித்த 2 கோல்களுக்கும் மூல காரணம் ஜெரார்ட்தான். முதலில் தன் வசம் இருந்த பந்தை எளிதில் உருகுவே வீரருக்கு விட்டுக் கொடுத்தார். இதனால் முதல் கோல் விழுந்தது. இரண்டாவதாக தலையால் முட்டிப் பந்தை சுவாரேஸிடமே அளித்தார் இதுவே 2வது கோலாகவும் மாறியது. அவர் எழுச்சியடையாமல் சோர்வாக, களைப்பாக ஆடியது இங்கிலாந்தின் பின்னடைவைத் தீர்மானித்தது.
உருகுவேயிற்கு எதிராக தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்ட். | கோப்புப் படம்
உருகுவேயிற்கு எதிராக தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஜெரார்ட். | கோப்புப் படம்
பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்க வேண்டி வரும் என்று இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் மலேரியாக் காய்ச்சல் தாக்காமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்டு வந்தனர்.
ஆனால் அவ்வளவு நாட்கள் பிரேசிலில் தங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. கோஸ்டா ரிகா, இத்தாலியை வீழ்த்திய போது இங்கிலாந்து வெளியேற்றப்பட்டது. மலேரியாக்காய்ச்சல் மாத்திரைகள் தீர்வதற்கு முன்னரே இங்கிலாந்து பிரேசிலில் இருந்து கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியின் ஆட்டத்தை கடுமையாக கேலி பேசியுள்ளன.
இங்கிலாந்து தோல்விக்கு ஏகப்பட்ட காரணங்களை அவரவர் தங்கள் மூளைக்கு உதித்த விதத்தில் கூறிவந்தாலும் ஏ.எஃப்.பி. செய்தி ஏஜென்சி இங்கிலாந்தின் பரிதாப வெளியேற்றத்திற்கு பிரதானமாக 5 காரணங்களை அலசியுள்ளது:
1. இங்கிலாந்து மேலாளர் ராய் ஹாட்க்சன் இளம் வீரர்களையும் கற்பனை சக்தி படைத்த வீரர்களையும் தேர்வு செய்ததாக பாராட்டப்படுகிறார். ஆனால் இத்தாலி மற்றும் உருகுவே ஆட்டங்களில் இங்கிலாந்து அணியில் ஒரு பேலன்ஸ் இல்லை. தாக்குதல் ஆட்டக்காரர்களான ரஹீம் ஸ்டெர்லிங், டேனி வெல்பெக், வெய்ன் ரூனி ஆகியோரை இடது புறத்தில் கொண்டு சென்று நிறுத்தி அணியின் தடுப்பு உத்தியில் ஓட்டை விழச்செய்தது முதல்படி தவறு. இந்தத் தவறு, அன்று இத்தாலி வீரர் பாலோடெல்லி கடைசியில் அடித்த வெற்றி கோல் நிரூபிக்கிறது. இத்தாலியின் ஆண்டனியோ காண்ட்ரீவா, லெய்டன் பெய்ன்சை சுலபமாகக் கடந்து சென்று பாலோடெல்லிக்கு பந்தை அளிக்க முடிந்தது. அதே போல் இத்தாலிக்கு எதிராக முக்கிய பங்காற்றிய ஸ்டெர்லிங் உருகுவே அணிக்கு எதிராக கிடுக்கிப்பிடியிலிருந்து மீள முடியவில்லை. மேலும் பதிலி வீரர் ராஸ் பர்க்ளி இரண்டு ஆட்டங்களிலும் சொல்லிக் கொள்ளும் விதமாக எதையும் செய்து விடவில்லை.
2. மேலாளர் ஹாட்க்சனின் நன்கு நிறுவப்பட்ட உத்தியான 4-2-3-1 என்ற களவியூகம் பிரேசில் உலகக் கோப்பையில் போதவில்லை. இத்தாலிக்கு எதிராக ரூனி, ஸ்டெர்லிங், வெல்பெக், டேனியல் ஸ்டரிட்ஜ் ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும், உருகுவே அணிக்கு எதிராக இவர்களது ஆட்டத்தில் ஒரு முறையாக வகுத்தெடுக்கப்பட்ட உத்தியை பின்பற்றாமல் இருந்தது. பந்து வந்தவுடன் ஏதோ அவசரகதியில் எடுத்துச் சென்று தடுக்கப்பட்டனரே தவிர ஆட்டத்தில் தீர்மானமான திட்டம் எதுவும் இல்லை.
3. இங்கிலாந்து வாங்கிய அனைத்துக் கோல்களும் அடிப்படையான பாதுகாப்பு தவறுகளே. கார்னர் ஷாட்டில் கவனமின்மையால் இத்தாலி வீரர் கிளாடியோ மர்சிசோ முதல் கோலை அடித்தார். பாலோடெல்லி அடித்த வின்னர் கோலின் போது இங்கிலாந்து வீரர் பெய்ன்ஸின் திறன் போதாமையாகவே இருந்தது. உருகுவே அணிக்கு எதிராக 6 வீரர்கள் அரணாக இருந்தும் உருகுவே வீரர் எடின்சன் கவானி, மிகச்சரியாக சுவாரேஸுக்கு பந்தை அளிக்க முடிந்தது. இதனால் முதல் கோல் விழுந்தது. இரண்டாவது கோலையும் சுவாரேஸ் எந்த வித இடையூறுமின்றி அடித்தார். இந்தத் தற்காப்பு உத்தியை முன்னாள் இங்கிலாந்து வீரர் ரியோ ஃபெர்டினாண்ட் “பள்ளிச்சிறுவர்களின் ஆட்டத்திற்கு ஒப்பானது” என்று வர்ணித்தார்.
4. உருகுவே அணிக்கு எதிராகவும் இத்தாலி அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து பந்தைத் தங்கள் வசம் வைத்திருந்ததில் முன்னிலை வகித்தது, ஆனால் திட்டமிடல் இல்லாததாலும் தேவையில்லாத அவசரம் காட்டியதாலும் கோல் போட முடியவில்லை. உருகுவே அணிக்கு எதிராக 1-1 என்று சமனிலையில் இருந்தபோது இங்கிலாந்து வெகு சுலபமாக ஆட்டத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தோல்வி அடைந்தது.
5.இங்கிலிஷ் பிரிமியர் லீகில் லிவர் பூல் அணிக்காக ஆடிய ஸ்டீவன் ஜெரார்ட் களைப்படைந்தார். அவரது ஆட்டத்தில் போதிய வேகமோ, சாதுரியமோ இல்லை. உருகுவே அணிக்கு எதிராக சுவாரேஸ் அடித்த 2 கோல்களுக்கும் மூல காரணம் ஜெரார்ட்தான். முதலில் தன் வசம் இருந்த பந்தை எளிதில் உருகுவே வீரருக்கு விட்டுக் கொடுத்தார். இதனால் முதல் கோல் விழுந்தது. இரண்டாவதாக தலையால் முட்டிப் பந்தை சுவாரேஸிடமே அளித்தார் இதுவே 2வது கோலாகவும் மாறியது. அவர் எழுச்சியடையாமல் சோர்வாக, களைப்பாக ஆடியது இங்கிலாந்தின் பின்னடைவைத் தீர்மானித்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik wrote:ஓரளவுக்கு இப்ப எல்லாரும் நல்லாதான் விளையாடுறாங்க..........
இதுல யார்தான் ஜெயிப்பாங்க
நெதர்லாந்து, பிரேசில், ஜெர்மனி இவற்றில் ஒரு அணி கோப்பையை வெல்லும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிகக் குறுகிய நேரத்தில் போடப்பட்ட கோல்
உலக கோப்பை போட்டியில் மிக குறுகிய நேரத்தில் ‘கோல்’ பதிவு செய்த நாடு, துருக்கி.
2002-ல் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் துருக்கி வீரர் ஹக்கன் சுக்குர், ஆட்டம் தொடங்கிய 11 வினாடிகளில் முதல் கோலை பதிவு செய்தார்.
உலக கோப்பை போட்டியில் மிக குறுகிய நேரத்தில் ‘கோல்’ பதிவு செய்த நாடு, துருக்கி.
2002-ல் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் துருக்கி வீரர் ஹக்கன் சுக்குர், ஆட்டம் தொடங்கிய 11 வினாடிகளில் முதல் கோலை பதிவு செய்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 11 of 15 • 1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 15
|
|