புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_m10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_m10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_m10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_m10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_m10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_m10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_m10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_m10ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 3:21 am


ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! - காரணங்களை அடுக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி

[noguest]''மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும். அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல்.

இந்த நிகழ்வால் பாகிஸ்தான், இலங்கை உடனான வெளியுறக் கொள்கைகள் அடியோடு மாறிவிடும் என்றோ அற்புதம் நிகழ்ந்துவிடும் என்றோ எதிர்பார்ப்பதிலும், இது மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை என்று பாராட்டுவதிலும், எந்த அர்த்தமும் இல்லை. அப்படி எதுவும் நடந்துவிடவும் முடியாது. வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான முடிவுகள், இரு நாட்டுப் பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், அதற்கான ஆலோசனைகள், திட்டங்கள் எல்லாம் முற்றிலும் வேறு முகம் கொண்டவை.

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் ராஜபக்ஷேவின் வருகையை இவ்வளவு கடுமையாக எதிர்த்தது, இங்குள்ள தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த நலன்களுக்கு விரோதமானது. இவர்கள் அனைவரும் தமிழர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்று உண்மையாக நினைத்திருந்தால், நிச்சயமாக அவ்வளவு கடுமையாக ராஜபக்ஷே வருகையை எதிர்த்திருக்க மாட்டார்கள்.

தமிழக முதலமைச்சர் மற்றும் ஏனைய தமிழக அரசியல் கட்சிகளின் இந்த எதிர்ப்பு, அங்கு முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு இன்னும் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். முள்வேலி முகாம்களுக்குள் இருக்கும் தமிழர்களை அங்கிருந்து வெளிக்கொண்டுவர வேண்டுமானால், அந்த நாட்டில் தனி மெஜாரிட்டியுடன் இருக்கும் ராஜபக்ஷேவோடு நீங்கள் சுமுக உறவை வளர்த்தால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட உறவை ஏற்படுத்த, இதுபோன்ற சமயங்களில் இவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எதிர்ப்பதும் கோஷம் போடுவதும் கொடும்பாவி எரிப்பதும் கட்சிக்கு ஆள் சேர்க்கத்தான் பயன்படுமே தவிர, இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு உதவாது. இன்றும் இலங்கையில் கொழும்பு உள்பட முக்கியமான நகரங்களில் வாணிபம் செய்துகொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள். அது இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டச் சூழலில் இவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, யாரும் சிந்திப்பது இல்லை.

இன்றுள்ள உலக அரசியல் சூழலில் இந்திரா காந்தி பங்களாதேஷில் செய்த போர் அரசியலை செய்ய முடியாது. நம்மால் மட்டுமல்ல... அமெரிக்காவால்கூட அப்படிச் செய்ய முடியாது. அதனால்தான் சிரியா, லிபியா, உக்ரைன், வட கொரியா விவகாரத்தில் அமெரிக்கா அடக்கி வாசிக்கிறது. அதுபோல், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்தியது போன்ற போராளி இயக்கத்தை இனிமேல் எந்த நாட்டிலும் யாரும் நடத்த முடியாது. இதை எல்லாம் நன்றாக யோசித்துப் புரிந்துகொண்டு, தங்களின் அடிப்படையான அரசியல் நிலைப்பாட்டை தமிழக அரசியல் கட்சிகள் மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னை மட்டுமே தமிழகத்தின் பிரச்னை அல்ல. இங்குள்ள பல பிரச்னைகளில் அதுவும் ஒரு பிரச்னை. அதைப் புரிந்துகொள்ளாமல், ராஜபக்ஷேவின் வருகையைக் காரணம் காட்டி, வலுவான பிரதமராக உருவெடுத்து இருக்கும் மோடியின் அழைப்பை நிராகரித்ததன் மூலம், தமிழகத்தின் நலனையும் இவர்கள் நிராகரித்துள்ளனர். ஏனென்றால், தமிழகத்தின் தயவில் மத்திய அமைச்சரவை நடந்துகொண்டிருந்தபோது, இவர்களில் 12 பேர் அங்கு அமைச்சர்களாக இருந்தபோதே, தமிழகத்துக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. இப்போது தொடக்கத்திலேயே மத்திய அரசை அவமதித்துவிட்டு, எந்த முகத்தோடு தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள், நிதியுதவி ஆகியவற்றைப் போய் கேட்பார்கள்? மத்திய அரசோடு சுமுக உறவு, அண்டை நாடுகளோடு இணக்கமான போக்கு ஆகியவற்றை வளர்க்க இவர்கள் முன்வர வேண்டும். அதுவே தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.'' - தீர்க்கமாக சொல்கிறார் கர்னல் ஹரிஹரன்.

விகடன்[/noguest]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 30, 2014 5:44 am

விளக்கம்... ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! 3838410834 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 30, 2014 10:31 am

அருமையான கருத்து,,,ஆனால் இதைப் புரிந்து கொள்ளும் சக்தி தமிழர்களிடையே வெகு குறைவு. அரசியல் லாபம் தேடும் அரசியல்வாதிகளின் மகுடிக்கு ஆடும் பாம்பாய் தான் பலரும் இங்குள்ளனர்



சதாசிவம்
ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 30, 2014 11:47 am

எல்லாம் சரி...எதிர்த்து ஒரு வார்த்த பேசாதீங்க...என்ன நடந்தாலும் வாய மூடிகிட்டு இருங்க...அதுதான் ராஜதந்திரம் என்று சொல்கிறாரா இவர்?...

இங்க இருந்து ஒருத்தன் கூட குரல் குடுக்கலேன்னா ஒண்ணுமே நடக்காது அங்க மட்டுமில்ல எங்க இருக்கவனுக்கும்...

அவரவர் தத்துவம்-நிலைப்பாடு அவரவர்க்கு...அந்த வகையில் இது அந்த அதிகாரியின் நிலைப்பாடு...
அதில் எங்களுக்கு/எனக்கு உடன்பாடு இல்லை...

மோடி,பக்சேவை அழைத்ததைத்தான் தவறு என்கிறார்களே ஒழிய வேறு எதுவும் இல்லை...

இங்க குரல் குடுக்கறவங்க அங்க போயி ஆயுதம் ஏந்த செய்வாங்களான்னு முடக்கு வாதம் பேசும் 'நியாய'வாதிகளும் இல்லாமல் இல்லை...

தமிழர்களுக்குள்ளேயே ஆதிக்கப் போக்கும் அழிச்ச்சாட்டியப் போக்கும் தாராளமோ தாராளம்...
இதில் கருத்து-எதிர்க் கருத்துப் பேசி நேரத்தை வீணடித்து நியாய-உணர்வு-கோபதாபங்களை மழுங்கடித்துக்கொள்வதற்கு மங்குனிப் பாண்டியாக சில இடங்களில் மவுனம் பேசிவிடல் சாதுர்யம்.



ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! 224747944

ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Rராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Aராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Emptyராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! Rராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக