ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10 
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10 
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10 
VENKUSADAS
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10 
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10 
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10 
VENKUSADAS
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

+4
krishnaamma
M.M.SENTHIL
ரா.ரா3275
சிவா
8 posters

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


Last edited by சிவா on Wed Feb 08, 2023 11:28 pm; edited 4 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 04, 2023 8:52 pm

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Modi-ji

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தொடர்பாக சர்வதேச ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

கடந்த மார்ச் 22 முதல் 28 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் இந்த கருத்து கணிப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 22 தலைவர்களின் பட்டியலை மார்னிங் கன்சல்ட் வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். ‘தி மார்னிங் போஸ்ட்’ தகவலின்படி பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீதம் பெற்று உலகின் முதல் பிரபலமான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் 19 சதவீதம் பேர் ஏற்கத்தக்கவை இல்லை என்றும், 5 சதவீதம் பேர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 61 சதவீதம் பெற்று 2வது இடமும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 55 சதவீதம் பெற்று 3வது இடமும் பிடித்துள்ளனர்.

இதில் 53 சதவீத ஆதரவுடன் ஸ்விட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 4வது இடமும், 49 சதவீதம் ஆதரவுடன் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 5வது இடமும், 49 சதவீதம் ஆதரவுடன் இத்தாலி அதிபர் ஜியோர்ஜியா மெலோனி 6வது இடமும் பிடித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீதம் பெற்று 7வது இடமும், பெல்ஜியம் அதிபர் அலெக்சாண்டர் டி குரு 39 சதவீதம் பெற்று 8வது இடமும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீதம் பெற்று 9வது இடமும் பிடித்துள்ளனர். மேலும், பட்டியலின்படி கடைசி இடமான 22வது இடத்தை தென்கொரிய அதிபர் யோன் சியோக் யோல் பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி பிப்ரவரியில் 78 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் குறைந்திருந்தாலும் பிரபலத்தின் அடிப்படையில் மற்ற உலகத் தலைவர்களை விட முன்னிலையில் உள்ளார். மேலும், பிரதமர் மோடி உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவராக இருப்பது, இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற விஷயங்களில் பிரதமர் மோடியின் பங்களிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்த நிலையில் மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு இந்தியா மற்றும் உலக அளவில் பிரதமர் மோடியின் தலைமைத்துவத் திறனுக்கு சான்றாக இருப்பதாகவே பரவலாக பேசப்படுகிறது.

130 கோடி மக்களை கொண்ட தேசத்தினை, மிக சிறந்த அறமும் தர்மமும் அடிப்படையாக கொண்ட இந்த தேசத்தினை, ஒரு நல்ல இந்தியன் ஆளும் போது என்ன பெருமை கிடைக்குமோ அது சரியாக கிடைக்கின்றது.

இதன் இன்னொரு அர்த்தம் இந்தியாவின் நிரந்தர பிரதமர் மோடி என்பது...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Fri Apr 07, 2023 2:59 pm

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Pm-modi-ji

ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பதே பா.ஜ.,வின் நோக்கம்: பிரதமர் மோடி


'ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு பா.ஜ., உறுதி எடுத்து உள்ளது,'' என, பிரதமர் மோடி பேசினார்.

பா.ஜ., துவங்கப்பட்டதன், 44வது நிறுவன தினம் நேற்று புதுடில்லியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி பேசியதாவது:

இந்நாள் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டிய நாளாக அமைந்துள்ளது. இந்நாள் ஹனுமன் ஜெயந்தி. ஹனுமன் தனக்காக உழைக்காமல் மற்றவர்களுக்காக உழைப்பவர். அவர் ஒரு தியாகி.

இதுபோல் நாமும் இந்த நாட்டிற்காக உழைக்க வேண்டும். பா.ஜ., எப்போதுமே எந்த பிரதிபலனும் பாராமல் மக்களுக்காக, நாட்டுக்காக உழைக்கிறது.

கடந்த 2014 முதல் நம் நாடு புதிய உத்வேகத்துடன் முன்னேறி வருகிறது. கடவுள் அனுமன், தீயவர்களை எந்தவித பயமும் இன்றி, துணிச்சலுடன் அழித்தார்.

அதுபோல் பா.ஜ., தலைமையிலான மத்திய அரசும், ஊழல் மற்றும் குடும்ப அரசியலை ஒழித்துக் கட்டுவதற்கு தீவிரமாக போராடி வருகிறது. ஊழலையும், குடும்ப அரசியலையும் ஒழித்து, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் பா.ஜ., உறுதியாக உள்ளது.

நாம் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருக்கலாம்; அதற்காக மெத்தனமாக இருக்கக் கூடாது. வரும் 2024 தேர்தலில், பா.ஜ.,வை யாராலும் வெல்ல முடியாது என மக்கள் ஏற்கனவே பேசத் துவங்கி விட்டனர்.

இதுபோன்ற நேரத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் இதயத்தையும் பா.ஜ., தொண்டர்கள் வெல்ல வேண்டும்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியல் நடத்துகின்றன; ஜாதி மற்றும் பிராந்திய மனப்பான்மையுடன் கட்சி நடத்துகின்றன. பா.ஜ., மட்டுமே அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்கிறது.

ஏழைகளையும், பழங்குடியினரையும் காங்கிரஸ் இழிவாக கருதுகிறது. இதுபோன்ற கட்சிகளால் யாருக்கும் பயன் இல்லை. என்னை குழி தோண்டி புதைக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித், பழங்குடியினர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். தாமரை மலர்வதற்கு இவர்கள் உதவியாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Sat Apr 08, 2023 5:59 pm

தமிழ் மொழி, கலாசாரத்தை நேசிக்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


'' தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவற்றை மிகவும் நேசிக்கிறேன்'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடந்த ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு ராமகிருஷ்ண மடம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் கவர்னர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:


ராமகிருஷ்ண மடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியானது. தமிழையும், தமிழக மக்களையும் சென்னையையும் நேசிக்கிறேன் . சென்னையின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எனது வாழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் முக்கியமான பங்கு உண்டு

வங்கத்தில் பிறந்த விவேகானந்தரை, கதாநாயகன் போல் வரவேற்றது தமிழகம். விவேகானந்தர் வந்து தங்கி சென்ற விவேகானந்தர் இல்லத்திற்கு வந்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள பிணைப்பை காசி தமிழ் சங்கமம் உணர்த்துகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் தமிழக இளைஞர்களை வழிநடத்துகிறது.

முந்தைய ஆட்சியில் அடிப்படை வசதிகள் கூட ஏழை மக்களுக்கு அளிக்கப்படவில்லை. தற்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க செய்துள்ளோம். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் அதிகமான தொழில் முனைவோரை கொண்ட மாநிலமாகவும், இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதன் மூலம் சமுதாயம் முன்னேற்றமடையும்.

இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார். பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார். தங்கள் மீதான தடைகளை பெண்கள் உடைத்து வருகின்றனர். அவரது நோக்கத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. விவேகானந்தரின் தத்துவங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும் வகையில், இந்தியாவிற்கான காலம் இது.

உலகிலேயே சிறந்த தொழில்நுட்ப அறிவியல் களம் இந்தியாவிலேயே உள்ளது. இந்தியர்களுக்கு உயர்கல்வி கிடைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார். உலக தரத்திலான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

திருக்குறள்


இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

''புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.''



என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

(இந்த குறளின் விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது என்பதாகும்).
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Wed Apr 12, 2023 7:15 pm

உன் பெயர் இல்லாமல் இந்த உலக வரலாற்றை எழுத முடியாது எங்கள் பாரத தேசத்தின் சக்கரவர்த்தியே....



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 ZvorbuS

எதிர்வரும் 2024 தேர்தலில்
பாஜக ஜெயிக்குமா.? அல்லது தோற்குமா.?
இப்போதைக்கு அது முக்கியமில்லை.

ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
இப்படி ஒரு மனிதன் இந்தியாவில் இருந்தார்
என்று வரலாறு சொல்லப் போகிறது.

எம்ஜிஆர் மாதிரி வள்ளல் என்று பேர் வாங்க வில்லை.

சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வில்லை.

பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையும் இல்லை.

தமிழகத்தில் எம்ஜிஆர் சொன்னால் அந்தக் காலத்துப் பெண்கள் அப்படியே செய்வார்கள். இதை எம்ஜிஆரே பொதுக்கூட்டங்களில் சொல்லியும் இருக்கிறார்.

அப்படி இவர் சொல்லி அத்தனை பெண்களும் கேட்பார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மோடியை இப்போதே தெய்வமாக வணங்குகிறார்கள்.

ஏன் அப்படி..?
காரணம் இருக்கிறது....
இந்தியாவில் தேனாறும் பாலாறும் ஓட வில்லை,
ஓடவும் ஓடாது. இந்தியா இன்னும் வறுமை உள்ள நாடு தான்.

ஆனால் ஒரே ஒரு புள்ளியில் இந்திய மக்கள் பெரும்பான்மையானோர் மோடியை விரும்புகிறார்கள்.

அது என்ன தெரியுமா.?
ஆமாம்...
இந்த மோடி இந்தியாவை கௌரவமாக வைத்து இருக்கிறார்.

நான் வறுமையில் இருந்தாலும் என் தேசம் கௌரவமான, பாதுகாப்பான நாடாக உள்ளது.

மற்ற நாட்டுத் தலைவர்கள் எதனாலேயோ என் மோடியை மதிக்கிறார்கள்.

என் இந்தியா சொன்னால் மற்ற நாடுகள் கேட்கின்றன. அது எனக்கு ஆறுதலாக இருக்கிறது.

என் நாட்டுக்கு ஆபத்து என்றால் எல்லா நாடும் ஓடோடி வருகிறது உதவிக்கு. உதாரணமாக சீனாவால் ஆபத்து என்றால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வருகிறோம் என்கிறார்கள்.

அமெரிக்காவால் ஆபத்து என்றால் ரஷ்யா வருகிறேன் என்கிறது.

தீவிரவாதிகள் நாடான ஆப்கானிஸ்தானத்திலோ நமது உதவிகளை ஏற்றுக் கொண்டு தீவிரவாத இயக்கங்கள் நம் மீது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தி விட்டன.

தமிழகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட மோடியை இப்போது வர மாட்டாரா என்று ஏங்கும் நிலை உருவாகி வருகிறது.

எல்லாத்துக்கும் என்ன காரணம்.?
ஒன்னே ஒன்னு தான்....

மோடியின் சகிப்புத்தன்மையுடன் கூடிய கடின உழைப்புடன் கூடிய நேர்மையான நெஞ்சுரம்.

இது எல்லோருக்கும் வாய்க்காது.!
இந்தியாவில் இப்படி ஒருவன் இருந்தார் என்றும், அவர் தன்னையும் காத்து மக்களையும் காத்தார் என்று வருங்கால வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் பறை சாற்றும்.

வாழ்க பாரத தனித்திருநாடு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Thu Apr 13, 2023 9:38 pm

உலகம் முழுதும் தமிழ் கலாச்சாரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் பேச்சு


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Gallerye_212132170_3293032.jpg?w=640&dpr=1

புதுடில்லி: உலகம் முழுதும் தமிழ் கலாச்சாரம் காணப்படுகிறது என டில்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடந்த தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சியில் பட்டு, வேட்டி சட்டையுடன் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார்.

நாளை தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி பட்டு வேட்டி, பட்டுசட்டை, அங்கவஸ்திரம் அணிந்து பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியது.


ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றுள் தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றிய பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன.
உலகின் பழமையான மொழி தமிழ். இதை ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கியிருக்கிறது:

சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையிலிருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரிலிருந்து கேப் டவுன் வரை, சேலத்திலிருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் காணலாம். பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் குறிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினர். விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் ,தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை,அனுராக் தாகூர், சி.பி. ராதாகிருஷ்ணன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Thu Apr 27, 2023 5:42 am

அடிமை மனப்பான்மையை ஒழிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கலாம் - சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் மாநாட்டில் பிரதமர்



பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 982155
சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் நேற்று காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் ‘சவுராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி’ புத்தகத்தை வெளியிட்டார்.

அடிமை மனப்பான்மையை ஒழித்துக்கட்டுவதன் மூலமாக இந்தியாவை வளர்ச்சி காணச் செய்ய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நிறைவு விழாவில் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்வோம். அடிமை மனப்பான்மையிலிருந்து நம்மை விடுவிப்பதன் மூலம் இந்தியாவை பாரம்பரியம், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றில் வளர்ச்சி காண செய்ய முடியும்.

2047-ம் ஆண்டுக்கான இலக்கை அடைவதில் தடைகள், அச்சுறுத்தல் கள் இருந்தபோதிலும் அவற்றை எதிர்கொள்வதில் இந்தியா தீரத் துடன் உள்ளது.

குஜராத் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே பாரம்பரிய பழக்கவழக் கங்களில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே நமது அனை வரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கம்தான் நாட்டிற்கு தற்போது அவசியமான ஒன்று. ஒத்துழைப்பு இருக்க வேண்டுமே தவிர, நமக்குள் கலாச்சார மோதல்கள் அவசியமில்லை.

அனைவரையும் இணைத்துக் கொண்டு முன்னேறிச் செல்வதுதான் இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம்.

சர்தார் வல்லபபாய் படேலுக்கும், மகாகவி சுப்ரமணிய பாரதிக்கும் இருந்த தேசிய உணர்வு, இந்தசவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள், நமது நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். தமிழகத்தில் உள்ள சவுராஷ்டிரா மொழி பேசும் மக்களை, அவர்களின் பூர்விக இடமான குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதிக்கு அழைத்துச் செல்லும் சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by T.N.Balasubramanian Thu Apr 27, 2023 6:40 pm

மதுரை -சௌராஷ்டிரவின் ஒரு அங்கம். 
கலை உலகம் போற்றும் கலைஞர்களை அளித்துள்ளது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Fri Apr 28, 2023 3:06 am

இலவசங்களால் மாநிலங்கள் கடனில் மூழ்கியுள்ளன: பிரதமர் மோடி

இலவசங்களால் மாநிலங்கள் கடனில் மூழ்கியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலவசங்களை விநியோகிக்கும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கா்நாடகத்தில் உள்ள 58,112 வாக்குச்சாவடி மையங்களில் கூடியிருந்த 50 லட்சம் பாஜக தொண்டர்களுடனான இணையவழி கலந்துரையாடலின்போது, பிரதமர் மோடி பேசியது:

நமது நாட்டில் உள்ள ஒருசில அரசியல் கட்சிகள், அதிகாரம் மற்றும் ஊழலுக்காக அரசியலை பயன்படுத்துகின்றன. அதிகாரத்திற்காகவும், ஊழலுக்காகவும் சாம, தான, பேத, தண்டம் உள்ளிட்ட எல்லாவற்றையும் பயன்படுத்துகின்றன.

இது போன்ற அரசியல் கட்சிகள் நமது நாட்டின் எதிா்காலத்தையும், கா்நாடகத்தின் எதிா்கால தலைமுறை, இளைஞா்கள், பெண்கள் பற்றி சிந்திப்பதே இல்லை. கா்நாடக பாஜக மீது மக்கள் அளவில்லா நம்பிக்கை வைத்துள்ளனா். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக தொண்டர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், பாஜகவுக்கு வரலாறு காணாத வெற்றியை ஈட்ட வழிவகுக்கும். நமது திட்டங்கள், இரட்டை என்ஜின் அரசுகளின் பயன்கள் குறித்து வாக்குச்சாவடி மட்டத்தில் மக்களுக்கு விளக்க வேண்டும். மக்களோடு மக்களாக அமர்ந்து, அவர்கோடு நெருங்கிபழகி, பேசி இவற்றை தெளிவுப்படுத்த வேண்டும். நீண்ட உரைகளை ஆற்றுவோா், அதை செய்துவருகிறார்கள்.

ஆனால், தொண்டர்கள் வாக்குச்சாவடி அளவில் பலத்தை செலுத்தி, வெற்றிபெற வேண்டும். கா்நாடகம் விரைவான ஒருங்கிணைந்த வளா்ச்சியை கான வலுவான, நிலையான பாஜக அரசு, அதுவும் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் அமைய வேண்டும். முந்தைய வரலாறுகளை முறியடித்து, கா்நாடகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவர மக்கள் தயாராக இருக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் பாஜகவின் தொண்டனாக, நானும் உங்களோடு(தொண்டர்கள்) இணைந்து தோ்தல் பணியாற்றி, கா்நாடக மக்களின் ஆசியையும், கன்னடர்களின் நம்பிக்கையையும் பெற கடமையாற்றுவேன்.

இலவசங்களை வழங்கும் அரசியலால், பெரும்பாலான மாநிலங்கள் கட்சிசாா்ந்த அரசியலுக்கு அதிகளவில் செலவிடுகின்றன. இது எதிா்கால தலைமுறைக்கான வளங்களை காலி செய்துவிடுகின்றன. நமது நாட்டை இதுபோல நடத்தக்கூடாது. அரசையும் இதுபோல நடத்தக்கூடாது. நிகழ்காலத்தை போல எதிா்காலத்தை பற்றியும் அரசுகள் சிந்திக்க வேண்டும். தினசரி தேவைகளுக்காக அரசை நடத்தக்கூடாது. சொத்துக்களை உருவாக்குவதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம், ஆண்டாண்டுகளுக்கு குடும்பங்களின் வாழ்க்கை நிலையானதாக இருக்கும். தோ்தலில் வெற்றிபெறுவதற்கு எவ்விதகுறுக்கு வழிகளையும் பாஜக கடைபிடிக்கவில்லை. ஆனால், நவீன அடிப்படை, எண்ம மற்றும் சமூக கட்டமைப்புகளில் நல்ல முதலீடுகளை செய்வதன் மூலம் வளா்ந்த இந்தியாவை கட்டமைக்க பங்காற்றி வருகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீடு(எஃப்.டி.ஐ.) என்பதை முதலில் வளா்த்தெடு இந்தியாவை என்று நான் விளக்கம் அளிப்பேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி அமைப்பது குறித்து பாஜக நினைப்பதில்லை. மாறாக, நாட்டை பற்றி பாஜக யோசிக்கிறது. நிகழ்கால தோ்தல் அரசியலுக்கு மாறாக, அடுத்த 25 ஆண்டுகாலத்தில் இந்தியாவை அடுத்தநிலைக்கு கொண்டு செல்வது குறித்து பாஜக சிந்தித்து செயல்பட்டுவருகிறது. தற்காலிக சவால்களை எதிா்கொள்வதற்கு தேவையான இலவச உணவுப்பொருட்கள், இலவச தடுப்பூசிகள் உள்ளிட்ட பல உதவிகளை ஏழைகளுக்கு அரசு வழங்கி வருகிறது. இது அரசின் கடமையாகும். ஆனால், இந்தியாவை முன்னேற்ற வேண்டுமானால், இலவச கலாசாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும். சில இலவசங்களை கொடுத்து உங்களை முட்டாளாக்க சில அரசியல் கட்சிகள் நினைக்கலாம். ஆனால், உங்கள் எதிா்காலம் மட்டுமல்லாது எதிா்கால தலைமுறையையும் சிந்தித்து கடமையாற்றும்படி இளைஞா்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஹிமாசலபிரதேசம், ராஜஸ்தானில் இலவச கலாசாரத்தை காங்கிரஸ் கடைபிடித்துவருகிறது. அங்கெல்லாம் மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அல்லது உத்தரவாதங்கள், வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. காங்கிரஸ் என்றால் ஊழலுக்கு உத்தரவாதம், சொந்த பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தரவாதம் என்று பொருளாகும். உண்மையான வாக்குறுதிகள் அல்லது உத்தரவாதங்களை கொடுக்க இயலாத மோசமான நிலைக்கு காங்கிரஸ் சென்றுள்ளது. நீங்கள் அனைவரும் அறிந்ததுபோல, காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் காலாவதியாகியுள்ளது. அப்படியானால், காங்கிரஸ் அளிக்கும் தோ்தல் வாக்குறுதிகள் அல்லது உத்தரவாதங்களால் என்ன பயன்? ஊழலின் ஊற்றக்கண்ணாக விளங்கி வருவதால், ஊழலை ஒழிக்க எவ்வித ஆா்வத்தையும் காங்கிரஸ் காட்டவில்லை. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழலை ஒழிக்க முன்னெப்போதும் இல்லாத அளவு வேகம் காட்டப்பட்டுள்ளது.

மக்கள் வங்கிக்கணக்கு, ஆதார் எண், கைப்பேசி போன்ற ஊழலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களாகும். நேரடி பலன் மாற்றதிட்டத்தின் காரணமாக இடைத்தரகா்களால் கொள்ளையடிக்கப்பட்டு வந்த ரூ.2.75 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இது ஏழைகள், நலிவுற்ற மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படுகிறது.பாஜக தொண்டர்களிடம் காணப்படும் வேட்கை, இதர கட்சிகளிடம் இருந்து அவர்களை வேறுபடுத்தி காட்டுகிறது. பாஜக மற்றும் இதர கட்சிகளுக்கும் இடையே காணப்படும் வித்தியாசம், அணுகுமுறையாகும். இதர கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தால், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவைவளா்ந்தநாடாக பாஜக முனைப்புக்காட்டுகிறது. கா்நாடகத்தில் நிலையான, வலுவான பாஜக அரசு அமைவதற்கு மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். கடந்தகாலங்களில் நிலையில்லா அரசுகள் எதிா்கொண்ட சிக்கல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி புரியவைக்க வேண்டும்.

இரட்டை என்ஜின் அரசுகளால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இது வளா்ச்சியின் வேகத்தை அதிகரிக்கிறது. இரட்டை என்ஜின் அரசுகள் இல்லாத நிலையில், அது மக்களின் துன்பத்தை இரட்டிப்பாக்கிவிடும். மக்களுக்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வளா்ச்சியின் வேகமும், அளவும் அதிகரிக்கின்றன. பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதில்லை. அப்படி செயல்படுத்தினால், அது மோடிக்கு நல்லபெயரை கொண்டுவந்து கொடுத்துவிடும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன.

ஒருசில மாநிலங்கள், மத்திய அரசு திட்டங்களை ஏற்பதே இல்லை. ஒருசில மாநிலங்களின் சம்பந்தப்பட்ட அரசுகள் மத்திய அரசு திட்டங்களின் பெயா்களையே மாற்றிவிடுகின்றன. அடுத்த 25 ஆண்டுகள், அமிா்த காலத்தில், வளமான, வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் உத்தரவாதத்தை அளிக்கிறோம். இதற்கான வேலையை பாஜக அரசு செயல்படுத்த தொடங்கிவிட்டது. வளா்ச்சி மற்றும் வளத்திற்கான இந்த பயணத்தில் கா்நாடகம் மிகப்பெரிய பங்கு வகிக்கப்போகிறது. கா்நாடகத்தின் வளா்ச்சியில் இந்தியாவின் வளா்ச்சி என்ற மந்திரத்தின் அடிப்படையில் எனது அரசு செயல்படுகிறது என்றார் அவர்.

இந்த இணையவழி கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் பசவராஜ்பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜக மாநிலத்தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Sat Apr 29, 2023 9:41 pm

’எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ அந்த அளவுக்கு தாமரை மலரும்'- பிரதமர் மோடி

“இதுவரை காங்கிரஸார் என்னை 91 முறை பலவிதமாக திட்டியுள்ளனர். ஏழைகளுக்காகவும் நாட்டிற்காகவும் பாடுபடுபவர்களை அவமதித்தது காங்கிரஸின் வரலாறு-பிரதமர் மோடி

வரும் மே 10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியது சர்ச்சை எழுத நிலையில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் பிதார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இதுவரை காங்கிரஸார் என்னை 91 முறை பலவிதமாக திட்டியுள்ளனர். ஏழைகளுக்காகவும் நாட்டிற்காகவும் பாடுபடுபவர்களை அவமதித்தது காங்கிரஸின் வரலாறு.

"நான் மட்டும் இப்படி தாக்கப்பட்டவன் அல்ல. கடந்த தேர்தலில் 'சௌகிதார் சோர் ஹை' (காவலாளி ஒரு திருடன்) என்று பிரச்சாரம் செய்தார்கள், பிறகு 'மோடி சோர்' (மோடி ஒரு திருடன்) என்று சொன்னார்கள், பிறகு 'ஓபிசி சமூகம் சோர்' என்றார்கள். தற்போது கர்நாடகாவில் தேர்தல் காலம் தொடங்கியுள்ள நிலையில், எனது லிங்காயத் சகோதர சகோதரிகளை சோர் என்று அழைக்கும் துணிச்சலைக் காட்டினர்.

காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் தம்மீது துஷ்பிரயோகம் செய்வதாகக் குறிப்பிட்ட மோடி, பாபாசாகேப் அம்பேத்கரையும் துஷ்பிரயோகம் செய்த கட்சி காங்கிரஸ் என்று கூறினார்.

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்களின் ஆசியுடன் அவர்களின் அத்துமீறல்கள் அனைத்தும் சேற்றில் கலந்துவிடும். நீங்கள் எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ அந்த அளவுக்கு தாமரை மலரும் என பிரதமர் பேசினார்.

நிலையற்ற மற்றும் கூட்டணி அரசாங்கங்களின் விளைவுகளை கர்நாடகா எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் "ஒரு நிலையற்ற அரசாங்கத்தின் கவனம் மக்களுக்கு சேவை செய்வதில் இருக்காது என்றார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் தலைவர் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, 'காங்கிரஸின் தயவில்' செயல்படுவதை ஒப்புக்கொண்டதை நினைவுபடுத்திய அவர், காங்கிரஸ் கட்சியினர் உங்களுக்காக எதையும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா Mon May 01, 2023 12:31 am

“இது மனதின் ஆன்மிகப் பயணம் ஆகிவிட்டது” - பிரதமரின் 'மனதின் குரல்' | முழு உரை


பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 PAe1EYU

மனதின் குரல் நிகழ்ச்சி எனது ஆன்மிகப் பயணமாக ஆகிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அவரது முழு உரை:



இன்று மனதின் குரலின் 100ஆவது பகுதி. உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, இலட்சோபலட்சம் செய்திகள் வந்திருக்கின்றன. முடிந்த மட்டிலும் அதிகபட்ச கடிதங்களைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்திகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். உங்களுடைய கடிதங்களைப் படிக்கும் வேளைகளில் பல சமயம் நான் உணர்ச்சிவயப்பட்டேன். உணர்வுகளில் அமிழ்ந்து போனேன். உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டேன். அடித்துச் செல்லப்பட்டேன். ஆனால் ஒருவழியாக, என்னையே நான் நிதானித்தும் கொண்டேன். நீங்கள் மனதின் குரலுடைய 100ஆவது பகுதிக்காக பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறேனே – பாராட்டுக்களுக்கு மொத்தச் சொந்தக்காரர்கள், மனதின் குரலின் நேயர்களான நீங்களும், நம்முடைய நாட்டு மக்களும் மட்டுமே. மனதின் குரல்… கோடானகோடி நாட்டு மக்களின் மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதசமி நன்னாள்… புனிதத் திருநாளான அன்று நாமனைவரும் இணைந்து மனதின் குரல் யாத்திரையைத் தொடக்கினோம். விஜயதசமி அதாவது தீமைகளின் மீது நல்லவைகளின் வெற்றித் திருநாள். மனதின் குரலும் கூட, நாட்டுமக்களின் நல்லவைகளின், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின், அற்புதமான திருநாளாகும். இந்த நன்னாள் ஒவ்வொரு மாதமும் வருகிறது. இதற்காக நாமனைவரும் காத்திருக்கிறோம். நாம் இதிலே நேர்மறைத்தன்மையைக் கொண்டாடுகிறோம். நாம் இதிலே மக்களின் பங்களிப்பையும் கொண்டாடுகிறோம். பல வேளைகளில், மனதின் குரல் தொடங்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகி விட்டன, இத்தனை ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்பதை நம்பக் கூட முடியவில்லை. இதன் ஒவ்வொரு பகுதியுமே விசேஷமானதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும், புதிய எடுத்துக்காட்டுகள், நாட்டுமக்களின் புதிய வெற்றிகளின் வீச்சு. மனதின் குரலில் ஒட்டுமொத்த நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் இணைந்தார்கள். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் ஆகட்டும், தூய்மை பாரதம் இயக்கம் ஆகட்டும், கதராடைகளின் மீதான அன்பாகட்டும், இயற்கை பற்றிய விஷயமாகட்டும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவாகட்டும், அமுத நீர்நிலைகளாகட்டும், மனதின் குரலானது எந்த விஷயத்தோடு இணைந்ததோ, அது மக்கள் இயக்கமாக மாறியது, இதை நீங்கள் தான் அப்படி ஆக்கினீர்கள். அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஓபாமா அவர்களோடு மனதின் குரலில் பங்கெடுத்த போது, இது உலகெங்கிலும் ஒரு விவாதப் பொருளானது.

மனதின் குரல் என்னைப் பொறுத்த மட்டில், மற்றவர்களின் குணங்களைப் போற்றுவதைப் போன்றது. என்னுடைய வழிகாட்டி ஒருவர் இருந்தார் – லக்ஷ்மண்ராவ் ஜி ஈனாம்தார். நாங்கள் அவரை வக்கீல் ஐயா என்றுதான் அழைப்போம். அவர் எப்போதும் ஒரு விஷயத்தைக் கூறுவார் – நாம் எப்போதும் மற்றவர்களின் குணநலன்களைப் பாராட்ட வேண்டும், எதிரில் இருப்பவர் உங்களுடைய நண்பராக இருந்தாலும் சரி, உங்களுடைய எதிரியாக இருந்தாலும் சரி, நாம் அவரவருடைய நல்ல இயல்புகளை அறிந்து கொண்டு, அவர்களிடமிருந்து கற்க முயல வேண்டும் என்பார். அவருடைய இந்தக் கூற்று எனக்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது. மனதின் குரல், மற்றவர்களின் குணங்களிடமிருந்து கற்க ஒரு மிகப் பெரிய சாதனமாக ஆகி விட்டது.

இந்த நிகழ்ச்சியானது, உங்களிடமிருந்து என்னை எப்போதும் விலக்கி வைக்கவே இல்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் குஜராத்தின் முதல்வராக இருந்த வேளையில், அப்போது சாமானிய மக்களைச் சந்திப்பது, கலந்து பழகுவது என்பது வெகு இயல்பான விஷயமாக நடந்து வந்தது. முதலமைச்சரின் பணிகள் மற்றும் நேரம் இப்படித் தான் இருந்தது. கலந்து பழகும், சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன. ஆனால் 2014ஆம் ஆண்டு, தில்லிக்கு வந்த பிறகு, இங்கே வாழ்க்கை மிக வித்தியாசமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. பணியின் வகை வித்தியாசமானது, பொறுப்பு வித்தியாசமானது, நிலைமைகள்-சூழ்நிலைகளின் கட்டுப்பாடு, பாதுகாப்பு தொடர்பான பகட்டு, குறைவான நேரம். தொடக்கக்கட்ட நாட்களில், நான் வித்தியாசமாக உணர்ந்தேன், ஒரே வெறுமையாக இருந்தது. என்னுடைய தேசத்தின் மக்களுடன் தொடர்பு கொள்வது கூட கடினமாக ஆகிவிடும் இந்த நிலைக்காக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நான் வீட்டைத் துறக்கவில்லை. எந்த நாட்டு மக்கள் எனக்கு அனைத்துமாக இருக்கிறார்களோ, அவர்களிடமிருந்தே நான் துண்டிக்கப்பட்டு என்னால் எப்படி இருக்க முடியும்!?

இந்தச் சவாலுக்கான தீர்வினை எனக்கு அளித்து, சாமான்ய மக்களோடு என்னை இணைக்கும் பாதையைத் துலக்கிக் காட்டியது தான் மனதின் குரல். பதவிச்சுமை, வரைமுறை, ஆகியவை நிர்வாக அமைப்பு எல்லை வரை மட்டுமே இருந்தன; ஆனால் மக்களுணர்வு, கோடானகோடி மக்களோடு, என்னுடைய உணர்வு, உலகின் பிரிக்க முடியாத அங்கமாகி இருந்தது. ஒவ்வொரு மாதமும் தேசத்தின் மக்களின் ஆயிரக்கணக்கான செய்திகளை நான் படிக்கிறேன், ஒவ்வொரு மாதமும், நாட்டுமக்களின் ஒன்றை மற்றது விஞ்சும் வகையிலான அற்புதமான வடிவங்களை தரிசிக்கிறேன். நாட்டுமக்களின் தவம்-தியாகத்தின் எல்லைகளையும் வீச்சுக்களையும் நான் காண்கிறேன், உணர்கிறேன். நான் உங்களை விட்டு விலகி இருக்கிறேன் என்ற உணர்வே என்னிடம் இல்லை! என்னைப் பொறுத்த மட்டிலே மனதின் குரல், ஒரு நிகழ்ச்சி அல்ல, இது என்னுடைய நம்பிக்கை, இது என்னுடைய வழிபாடு, என்னுடைய விரதம். மக்கள் இறைவனை பூசிக்கச் செல்லும் போது, பிரசாதத் தட்டோடு திரும்பி வருகிறார்கள் இல்லையா! என்னைப் பொறுத்த மட்டிலும், இறைவனின் வடிவமான மக்களின் பாதாரவிந்தங்களிலே பிரசாதத்தின் தட்டினைப் போன்றது மனதின் குரல். மனதின் குரல் என்னுடைய மனதின் ஆன்மீகப் பயணமாக ஆகி விட்டது.

தான் என்ற நிலையிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய பயணம் தான் மனதின் குரல். நான் என்பதிலிருந்து நாம் என்பதை நோக்கிய பயணம் தான் மனதின் குரல். நானல்ல, நீ தான் என்ற நற்பதிவுப் பயிற்சி மனதின் குரல்.

நீங்களே கற்பனை செய்து பாருங்கள்! என் நாட்டுமக்களில் ஒருவர் 40 ஆண்டுகளாக, வனாந்திரத்திலே, வறண்ட பூமியிலே மரங்களை நட்டு வருகிறார், எத்தனையோ மனிதர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் பாதுகாப்பிற்காக ஏரிகளையும் குளங்களையும் ஏற்படுத்தி வருகிறார்கள், அதனைத் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். ஒருவர் 25-30 ஆண்டுகளாக ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து வருகிறார், ஒருவர் ஏழைகளுக்கு மருத்துவச் சிகிச்சையில் உதவி வருகிறார். எத்தனையோ முறை மனதின் குரலில் இவர்களை எல்லாம் பற்றிக் குறிப்பிட்டு நான் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன். ஆகாசவாணியின் நண்பர்கள் எத்தனையோ முறை இவற்றை மீண்டும் மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டியிருந்திருக்கிறது. இன்று, இவை அத்தனையும் என் கண்களின் முன்னே வந்து செல்கின்றன. என்னை நானே மேலும் மேலும் சமர்ப்பித்துக் கொள்வதற்கு, நாட்டுமக்களின் இந்த முயற்சிகள் தொடர்ந்து எனக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன.

மனதின் குரலில் யாரைப் பற்றி எல்லாம் நாம் குறிப்பிடுகிறோமோ, அவர்கள் நமது நாயகர்கள், இவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை உயிர்ப்புடையதாக, உயிரோட்டமுடையதாக ஆக்கியிருக்கின்றார்கள். இன்று நாம் 100ஆவது பகுதி என்ற கட்டத்தை எட்டியிருக்கும் வேளையிலே, என்னுடைய இன்னொரு ஆசை என்னவென்றால், நாம் மீண்டும் ஒரு முறை, இந்த நாயகர்கள் அனைவரையும் அணுகி, அவர்களுடைய பயணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இன்று நாம் சில நண்பர்களோடு உரையாட முயல்வோம். என்னோடு இப்போது இணைந்திருப்பவர், ஹரியாணாவைச் சேர்ந்த சகோதரர் சுனில் ஜக்லான். சுனில் ஜக்லான் என் மனதில் ஏன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றால், ஹரியாணாவின் பாலின விகிதம் பெரும் சர்ச்சைக்குட்பட்டதாக இருந்தது, பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் இயக்கத்தை ஹரியாணாவில் நான் தொடக்கினேன். இதற்கிடையில் சுனில், மகளோடு செல்ஃபி எடுப்போம் என்ற இயக்கத்தின் மீது என் கவனம் சென்ற போது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் அவரிடமிருந்து கற்க முடிந்தது, அது மனதின் குரலில் இடம் பிடித்தது. பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையிலே மகளோடு ஒரு செல்ஃபி இயக்கம் ஒரு உலகாயத இயக்கமாக பரிணமித்தது. இதிலே விஷயம் செல்ஃபி எடுத்துக் கொள்வதோ, தொழில்நுட்பமோ அல்ல, இது மகள் தொடர்பானது, மகளின் முக்கியத்துவம் பற்றியது. வாழ்க்கையில் மகளின் இடம் எத்தனை மகத்தானது என்பது இந்த இயக்கம் வாயிலாக வெளிப்பட்டது. இப்படி ஏராளமான முயல்வுகளின் விளைவாகவே இன்று ஹரியாணாவில் பாலின விகிதாச்சாரம் மேம்பாடு அடைந்திருக்கிறது. இன்று சுனிலோடு கலந்து பேசுவோம் வாருங்கள்!

பிரதமர்: வணக்கம் சுனில்.

சுனில்: வணக்கம் சார், உங்க குரலைக் கேட்டவுடனேயே என்னோட சந்தோஷம் அதிகமாயிருச்சு சார்.

பிரதமர்: சுனில், செல்ஃபி வித் டாட்டர்ங்கறது எல்லாருக்குமே நினைவிருக்கும். இப்ப இது மறுபடி விவாதப் பொருளாயிருக்குங்கற வேளையில நீங்க எப்படி உணர்றீங்க?

சுனில்: எங்க மாநிலமான ஹரியாணாவுல நீங்க தொடுத்திருக்கற 4ஆவது ‘பாணிபத் போர்’ காரணமா, பெண்களோட முகங்கள்ல புன்சிரிப்பு மலரத் தொடங்கியிருக்கு; உங்க தலைமையில நாடு முழுக்க செய்த முயற்சிகள் காரணமா, உண்மையிலேயே என்னைப் பொறுத்த மட்டிலும் சரி, ஒரு பெண்ணின் தகப்பன்ங்கற முறையிலும் சரி, பெண் குழந்தைகளை நேசிப்பவன் எனும் வகையிலும் மிகப்பெரிய விஷயமா நான் பார்க்கறேன்.

பிரதமர்: சுனில், இப்ப உங்க மகள்கள் எப்படி இருக்காங்க, இப்ப அவங்க என்ன செய்திட்டு இருக்காங்க?

சுனில் : என் பெண்களான நந்தினியும், யாசிகாவும் முறையே 7ஆம் வகுப்பு, 4ஆம் வகுப்புல படிச்சிக்கிட்டு இருக்காங்க. ஓயாம உங்களை பாராட்டிக்கிட்டு இருப்பாங்க. அதுமட்டுமில்லாம, தேங்க்யூ பிரைம் மினிஸ்டர்னு சொல்லி, தங்களோட வகுப்பு சக மாணவர்களோடு சேர்ந்து உங்களுக்குக் கடிதமும் போட்டிருக்காங்க.

பிரதமர்: பலே பலே! சரி, குழந்தைகளுக்கு என்னோட, மனதின் குரல் நேயர்களோட கொள்ளை ஆசிகளை தெரிவியுங்க.

சுனில்: ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. உங்க காரணமாத்தான் தேசத்தில பெண் குழந்தைகளோட முகங்கள்ல புன்னகை தொடர்ந்து அதிகமாயிட்டு இருக்கு.

பிரதமர்: ரொம்ப ரொம்ப நன்றி சுனில்.

சுனில்: ரொம்ப நன்றி ஐயா.

மனதின் குரலில் நாம் நம் நாட்டின் பெண்சக்தியின் உத்வேகம் அளிக்கவல்ல பல நிகழ்வுகள்-எடுத்துக்காட்டுகள் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பது பெரும் நிறைவை அளிக்கிறது. நமது இராணுவமாகட்டும், விளையாட்டு உலகமாகட்டும், நான் எப்போதெல்லாம் பெண்களின் சாதனைகள் பற்றி பேசினேனோ, அப்போதெல்லாம் அவர்களை மனம் நிறையப் பாராட்டியிருக்கிறேன். நாம் சத்தீஸ்கரின் தேவுர் கிராமத்தின் பெண்களைப் பற்றிப் பேசியிருந்தோம். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக, கிராமங்களின் நாற்சந்திகள், சாலைகள், கோயில்களில் தூய்மைப்பணி செய்வது என்பதை இயக்கமாகச் செய்து வருகிறார்கள். இதைப் போலவே தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்கள், சூழலுக்கு நேசமான ஆயிரக்கணக்கான சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்தார்கள், இவர்களிடமிருந்தும் தேசம் நன்கு உத்வேகம் பெற்றது. தமிழ்நாட்டிலேயே 20,000 பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் இருக்கும் நாக நதிக்கு புத்துயிர் ஊட்டினார்கள். இப்படி எத்தனை எத்தனையோ இயக்கங்களுக்கு நமது பெண்கள் சக்தி தான் தலைமை தாங்கியது, மனதின் குரல் அவர்களின் முயற்சிகளை முன்னிறுத்தக் கூடிய ஒரு மேடையாக மாறியது.

இப்போது நம்மோடு தொலைபேசியில் ஒரு நண்பர் இணைந்திருக்கிறார், இவருடைய பெயர் மன்சூர் அஹமது. மனதின் குரலில், ஜம்மு கஷ்மீரத்தின் பென்சில்-ஸ்லேட்டுகள் பற்றிக் கூறும் வேளையில் மன்சூர் அஹமதுவைப் பற்றிக் குறிப்பிட்டோம்.

பிரதமர்: மன்சூர், எப்படி இருக்கீங்க?

மன்சூர்: தேங்க்யூ சார்.... ரொம்ப நல்லாயிருக்கேங்க.

பிரதமர்: மனதின் குரலோட இந்த 100ஆவது பகுதியில உங்களோட உரையாடுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

மன்சூர்: ரொம்ப நன்றி சார்.

பிரதமர்: சரி, உங்க பென்சில்-பலகை வேலை எப்படி போயிட்டு இருக்கு.

மன்சூர்: ரொம்பவே நல்லா போயிட்டு இருக்கு சார், நீங்க என்னைப் பத்தி மனதின் குரல்ல பேசின பிறகிலிருந்து என் வேலை ரொம்ப அதிகமாயிருச்சுங்கய்யா, மத்தவங்களுக்கும் இந்த வேலை வாயிலா இன்னும் அதிக வேலை வாய்ப்பை அளிக்க முடியுது.

பிரதமர்: எத்தனை நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தறீங்க?

மன்சூர்: இப்ப என் கிட்ட 200க்கும் மேற்பட்டவங்க வேலை செய்யறாங்க.

பிரதமர்: அட பரவாயில்லையே! ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

மன்சூர்: ஆமாம் சார்… இன்னும் இரண்டொரு மாதங்கள்ல இதை விரிவாக்கம் செய்ய இருக்கேன், இன்னும் 200 நபர்களுக்கு வேலை கொடுக்க இருக்கேன்.

பிரதமர்: பலே பலே!! இந்தா பாருங்க மன்சூர்….

மன்சூர்: சொல்லுங்க சார்.

பிரதமர்: அன்னைக்கு நீங்க சொன்னது எனக்கு இன்னும் கூட பசுமையா நினைவிருக்கு, இது எப்படிப்பட்ட வேலைன்னா, இதுக்கும் அடையாளம் கிடையாது, செய்யறவங்களுக்கும் அங்கீகாரம் இல்லை, மேலும் உங்களுக்கும் பெரிய கஷ்டம், இது காரணமா உங்களுக்கு பெரிய சிரமங்கள்லாம் ஏற்படுதுன்னு எல்லாம் நீங்க சொல்லிட்டு இருந்தீங்க. ஆனா இப்ப இதுக்கு ஒரு அடையாளம் கிடைச்சுப் போச்சு, 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பையும் நீங்க அளிக்கறீங்க.

மன்சூர்: ஆமாம் சார்… கண்டிப்பா.

பிரதமர்: மேலும் புதிய விரிவாக்கம் செய்து, இன்னும் 200 நபர்களுக்கு வேலை அளிக்க இருக்கீங்க, ரொம்ப இனிப்பான செய்தியை நீங்க அளிச்சிருக்கீங்க.

மன்சூர்: மேலும் சார், இங்க இருக்கற விவசாயிகளுக்கும் கூட இதனால பெரிய ஆதாயம் ஏற்பட்டிருக்கு சார். மரத்தை ரூ.2000த்துக்கு வித்திட்டு இருந்தாங்க, இப்ப இதுவே ஒரு மரம் ரூ.5000 வரை விலை போயிட்டு இருக்கு. அத்தனை தேவை அதிகமாயிருச்சு. மேலும் இதுக்குன்னு ஒரு அடையாளம் கிடைச்சிருக்கு, நிறைய தேவை அதிகமாயிருக்கு, இப்ப எங்க கிட்ட ஏகப்பட்ட ஆர்டர்கள் இருக்கு, இரண்டொரு மாதங்கள்ல நாங்க விரிவாக்கம் செய்ய இருக்கோம், விரிவாக்கம் செஞ்சு, மூணு நாலு கிராமங்கள்ல எத்தனை பசங்க பொண்ணுங்க இருக்காங்களோ, அவங்களுக்கு வேலையைக் கொடுக்கலாம், அவங்களோட வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும்.

பிரதமர்: பாருங்க மன்சூர், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்ங்கறதுக்கு வலு சேர்க்கறது எத்தனை முக்கியமானதுங்கறதை நீங்க கள அளவுல அதை செயல்படுத்திக் காட்டியிருக்கீங்க.

மன்சூர்: சரிங்கய்யா.

பிரதமர்: உங்களுக்கும், கிராமத்தில இருக்கற அனைத்து விவசாயிகளுக்கும், உங்களோட பணிபுரியற எல்லா நண்பர்களுக்கும், என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள், நன்றி சகோதரா!

மன்சூர்: ரொம்ப நன்றி சார்.

நமது தேசத்திலே, இப்படி எத்தனையோ திறமை மிக்கவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் தங்களுடைய உழைப்பின் துணையால் வெற்றியின் சிகரம் வரை சென்றடைந்திருக்கிறார்கள். எனக்கு நன்றாக நினைவுண்டு, விசாகப்பட்டினத்தின் வேங்கட முரளி பிரசாத் தற்சார்பு பாரதம் பற்றிய ஒரு அட்டவணையைப் பகிர்ந்திருந்தார். எப்படி தான் அதிகபட்ச இந்தியப் பொருட்களையே பயன்படுத்துவதாக அவர் விளக்கியிருந்தார். பேதியாவின் பிரமோத் அவர்கள் எல் ஈ டி பல்ப் தயாரிப்பு தொடர்பான ஒரு சின்ன அலகினை அமைத்த போது கட்முக்தேஷ்வரைச் சேர்ந்த சந்தோஷ் தரை விரிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார், மனதின் குரல் அவர்களுடைய பொருட்களை அனைவரின் முன்னிலையில் கொண்டு வர ஒரு சாதனமாக ஆனது. இந்தியாவில் தயாரிப்போம் இயக்கத்தின் பல எடுத்துக்காட்டுகள் தொடங்கி, விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் வரை பல விஷயங்கள் குறித்து மனதின் குரலில் நாம் விவாதித்திருக்கிறோம்.

உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், சில பகுதிகள் முன்பாக நான் மணிப்பூரைச் சேர்ந்த சகோதரி விஜயசாந்தி தேவி அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். விஜயசாந்தி, தாமரை நார்களைக் கொண்டு துணி நெசவு செய்கிறார். மனதின் குரலில் அவருடைய வித்தியாசமான, சூழலுக்கு நேசமான விஷயம் பற்றிப் பேசினோம், அவருடைய வேலை மேலும் பிரபலமாகிப் போனது. இன்று விஜயசாந்தி தொலைபேசித் தொடர்பில் நம்மோடு இருக்கிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 10 Empty Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
» நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum