by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
பாராளுமன்ற கட்சி கூட்டம்
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மோடி, பிரதமராக தேர்வு
அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.
பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.
ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு
அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.
தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.
நன்றி தெரிவித்தார் மோடி
எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.
இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டணி கட்சிகள் கூட்டம்
தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு
அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.
ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு
இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.
அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு
இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
26–ந் தேதி பதவி ஏற்பு
பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதவி ஏற்பு விழா எங்கே?
பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.
வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக
புதிய இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி
மும்பை: மும்பை -சோலாப்பூர், மும்பை- சாய்நகர் ஷீரடி ஆகிய இரு வந்தேபாரத் ரயில் சேவையினை மஹராஷ்டிராவில் இன்று(பிப்.,10) பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், புதிய இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில். முதன் முறையாக மகாராஷ்ராவில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ரயில் மும்பை-புனே மக்களுக்கு பெரிதும் உதவும். இதனால் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பயன் அடைவார்கள்.
மஹாராஷ்டிரா முதல்வர் பேசியதாவது: பட்ஜெட்டில் மஹாராஷ்டிராவுக்கு என்ன கிடைத்தது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். ரயில்வேக்கு இதுவரை 13,500 கோடி ரூபாய் ஓதுக்கவில்லை. முதன்முறையாக மாநிலத்தில் ரயில்வேக்கு இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. எனக் கூறினார்.
கட்டாயத்தால் சீர்திருத்தங்களை கொண்டு வரவில்லை: பிரதமர்
லக்னோ: ''சீரமைப்புகளை இந்தியா கொண்டு வருவதற்கு கட்டாயமல்ல. அர்ப்பணிப்பு தான்'' என உ.பி., முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
லக்னோவில் நடந்த உ.பி., முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு சுகாதாரம், கல்வி, பசுமை வளர்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவை பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்று இந்தியா கட்டாயத்தால் சீர்திருத்தங்களை செய்யவில்லை. அர்ப்பணிப்புடன் செய்து வருகிறது.
மீன்வளம், கால்நடை, உணவுபதப்படுத்துதல், இயற்கை விவசாயம் உள்ளிட்டவற்றில் புதிய முன்னெடுப்புகளை மாநில அரசு செய்து வருகிறது. பயிர் பல்வகைப்படுத்துதல் மற்றும் உள்ளீட்டு செலவை குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு மோடி பேசினார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மஹாத்மா காந்தியிடம் இந்த திருமணம் பற்றி விருப்பம் இல்லை என நேரு கூறியபோது மகாத்மா பிரோஜ் கான் காந்தி என்று கூப்பிடு என்றாராம். கல்யாணம் ஆகி பிரோஜை விவாகரத்து செய்து ..............பிறகு பல பல கதைகள் உண்டு. பராபரியாக காதில் விழுந்தவை. பிரோஜ் கான் காந்தி,மத்திய லோக்சபாவில் MP இருந்த போது காங்கிரசில் நடந்த ஊழல்களை பற்றி கேள்விகள் எழுப்பி , நேருவிற்கு காங்கிரசிற்கு தலைவலியை ஏற்படுத்தியதாக கேள்வி.
விஷயத்திற்கு வருவோம். அந்த காந்தி (கண்டி ) பெயர்தான் இப்பவும் தொடருகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
திரிபுராவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கிறது: எதிர்கட்சிகளை கடுமையாக சாடினார் மோடி
அகர்தலா: திரிபுராவில் சேர்தல் பிரசாரத்தில் காங்., .இடதுசாரி உள்ளிட்ட எதிர் கட்சிகளின் ஊழல்களை கடுமையாக சாடி பிரதமர் மோடி பேசினார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் பிப்.,16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில், பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில், இன்று நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி திரிபுராவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. பா.ஜ ஆட்சியில் திரிபுரா மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளது. நாடு முழுவதும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேலோங்க பா.ஜ., அரசு பாடுபட்டு வருகிறது.
திரிபுராவை வன்முறை இல்லாத மாநிலமாக பா.ஜ., மாற்றியுள்ளது. திரிபுராவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு 5 ஆயிரம் கி.மீ சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அகர்தலாவில் ஒரு புதிய விமான நிலையம் கட்டப்பட்டது. வடகிழக்கு மற்றும் திரிபுராவை துறைமுகங்களுடன் இணைக்கும் வகையில் நீர்வழிப் பாதைகளை உருவாக்கி வருகிறோம்.
4ஜி இணைப்பு கிராமங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போது, பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது, வாழ்வதற்கு வசதியாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வாஷிங்டன்: பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது ஓராண்டை கடந்துள்ள நிலையில், தற்போது இரு தரப்பும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் நீடித்து வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்ட அறிக்கை:
ரஷ்ய அதிபர் புடின் இந்த போரை நிறுத்த வேண்டும். புடினுடன், பிரதமர் மோடி பேசினால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிசியோதெரபியுடன் யோகாவையும் சேர்த்து, ஒரு பிசியோதெரபிஸ்ட் அறிந்திருந்தால், அவரின், செயல்திறன் மற்றும் சக்தி ஆகியவை பலமடங்கு அதிகரிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், அகில இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கத்தின், தேசிய மாநாடு, துவங்கியது.இதில், காணொளி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு, உடனடியாக மருத்துவ உதவி கிடைக்க, 'டெலி-மெடிசின்' வசதியை, நாடு முழுவதும், பரவலாக விரிவாக்க வேண்டும்.பேரிடர் காலங்களில், பாதிக்கப்படுபவர்களுக்கு பிசியோதெரபிஸ்ட்கள் சிகிச்சை அளிப்பதில், முக்கிய பங்கு வகிப்பதுடன், பாதிக்கப்படுபவர்களுக்கு நம்பிக்கை அளித்து, உரிய நிவாரணமும் வழங்குகின்றனர்.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள, துருக்கிக்கு, தற்போது, அதிக எண்ணிக்கையிலான பிசியோதெரபிஸ்ட்கள் தேவைப்படுகின்றனர். இதுபோன்ற, சூழ்நிலைகள் எதிர்காலங்களில் ஏற்பட்டால், அதற்கேற்ப ஆலோசனைகளை, நீங்கள் மொபைல் போன் வாயிலாக கூறும் வகையில், உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
முன்பெல்லாம், குடும்ப மருத்துவர்கள் மட்டுமே இருந்த, பல குடும்பங்களில் தற்போது, பிசியோதெரபிஸ்ட்களும் உள்ளனர். எனவே, மக்களுக்கு சரியான உடற்பயிற்சிகள் மற்றும் பழக்கவழக்கங்களை, நீங்கள் கற்று கொடுக்க வேண்டும்.
சிறந்த பிசியோதெரபிஸ்ட் என்பவர், ஒரு நோயாளி மீண்டும், மீண்டும் தன்னிடம் சிகிச்சைக்கு வர வேண்டும் என, விருப்பப்படமாட்டார். மக்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதே, உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பிசியோதெரபியுடன் யோகாவையும் சேர்த்து, ஒரு பிசியோதெரபிஸ்ட் அறிந்திருந்தால், அவரின், செயல்திறன் மற்றும் சக்தி ஆகியவை பலமடங்கு அதிகரிக்கும் என்பது, என் கருத்து. இவ்வாறு, அவர் பேசினார்.
இதேபோல், கேலோ இந்தியா குளிர்கால போட்டிகளில், பிரதமர் மோடி பேசுகையில்,' 'பிட்' இந்தியா இயக்கம், நாடு முழுவதும் முன்னேறி உள்ளது. ஒவ்வொருவரும், உடல்தகுதிக்கு தேவையானவற்றை, கடைபிடிப்பது அவசியமாகும். இளைஞர்கள் கட்டுரைகள், விரிவுரைகள் வாயிலாகவும், 'ரீல்ஸ்' வாயிலாகவும், இதை செய்ய வேண்டும்,' என்றார்.
தில்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (பிப். 12) பிரதமர் நரேந்திரே மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பிற்பகல் 3 மணியளவில், ராஜஸ்தானின் தௌசாவில் சுமார் ரூ 18,100 கோடி மதிப்பீட்டிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
புதுதில்லி மும்பை விரைவுச்சாலையின் புதுதில்லி - தௌசா - லால்சோட் பகுதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தவுடன் புதுதில்லியிலிருந்து 246-கிமீ தூரம் கொண்ட ஜெய்ப்பூருக்கான பயண நேரத்தை 5 மணி நேரத்திலிருந்து சுமார் மூன்றரை மணி நேரமாகக் குறைக்கும். குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லி - மும்பை விரைவுச்சாலை 1,386 கி.மீ நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை ஆகும். இந்த விரைவுச்சாலை தில்லி மற்றும் மும்பையை இணைக்கும். இது இந்தியாவின் தேசிய தலைநகர் தில்லிக்கும், பொருளாதாரத்தின் தலைநகரான மும்பைக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துகிறது. அதன் பயண நேரத்தை 8 வழிச்சாலை அணுகல், கட்டுப்படுத்தப்பட்ட கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை, பயண நேரத்தை 24 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாகக் குறைக்க சீரமைப்பு மேம்படுத்தலுடன் கட்டப்படுகிறது. எதிர்காலத்தில் இது 12 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். 50 ஹவுரா பாலங்களுக்கு இணையான தில்லி மும்பை விரைவுச் சாலையின் கட்டுமானத்திற்காக 12 லட்சம் டன் இரும்பு பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த விரைவுச்சாலையின் முழு பணியும் நிறைவடைந்ததும், இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக இது மாறும். இது பயண நேரத்தைப் பொறுத்து பல நகரங்களை இணைக்கும்.
மேலும், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், பைப்லைன்கள் மற்றும் சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட பயன்பாட்டு பாதைகளை அமைப்பதற்காக 3 மீட்டர் அகலமான பிரத்யேக நடைபாதையும் இருக்கும்.
அதிவேக நெடுஞ்சாலையானது 500 மீட்டர், இடைவெளியில் 2,000க்கு மேற்பட்ட நீர் ரீசார்ஜ் புள்ளிகள் அமைத்து மழை நீர் சேகரிப்பை எளிதாக்குகிறது. மேலும், தானியங்கி போக்குவரத்து மேலாண்மை அமைப்பையும் கொண்டுள்ளது.
தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 15,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த 94 வழித்தட வசதிகள் இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 10 கோடி மனித வேலைநாள் கொண்ட வேலைவாய்ப்பை உருவாக்கும்.
தில்லி-மும்பை விரைவுச் சாலையில் அதிநவீன தானியங்கி போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இருக்கும். இந்தியாவிலும் ஆசியாவிலும் விலங்குகள் மேம்பாலங்கள், அண்டர்பாஸ்கள் ஆகியவற்றிற்கு இடமளிக்கும் முதல் அதிவேக நெடுஞ்சாலை இதுவாகும். ரணதம்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இது சீரமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை மோடி ஆட்சி செய்தால்... இஸ்லாமியரின் வைரலாகும் விருப்பம்!...
பாகிஸ்தான் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்ய வேண்டும் என இஸ்லாமியர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் பிரிவினை நடக்காமல் இருந்திருக்கலாம் என்றும், பாகிஸ்தானையும் மோடி ஆட்சி செய்திருந்தால் அத்தியாவசிய பொருள்களை குறைந்த விலையிலேயே வாங்கியிருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரிஃப் ஆட்சி குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
அதில் பேசிய இஸ்லாமியர் ஒருவர் பாகிஸ்தானில் நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்காமல் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால், அத்தியாவசிய பொருள்களை நேர்மையான விலைக்கு வாங்கி எங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திருப்போம். தக்காளியை கிலோ 20 ரூபாய்க்கும், கோழிக்கறியை கிலோ 150 ரூபாய்க்கும் வாங்கியிருப்பேன்.
நம் நாடு தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாமிய நாடாக நிலைத்துவிட்டது. ஆனால், இஸ்லாம்தான் இங்கு நிலைக்கவில்லை. பாகிஸ்தான் பிரதமருடன் ஒப்பிடும்போது நரேந்திர மோடியின் ஆட்சி சிறந்ததுதான். அந்நாட்டு மக்கள் அவரை மதிக்கின்றனர். பின்பற்றுகின்றனர். அவர் பாகிஸ்தானுக்கும் கிடைத்திருந்தால், அனைத்து பிரச்னைகளையும் கையாண்டிருப்பார். அப்படி அவர் கிடைத்தால், நமக்கு செபாஷ் செரீஃப், பெனாசீர், இம்ரான், ஏன் முஷாரஃப் கூடத் தேவையில்லை. இந்தியா உலக அளவில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது எனக் குறிப்பிட்டார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
- Sponsored content
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
» ஸ்ரீ நரேந்திர மோடி - இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதர்
» இன்றுரேடியோவில் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
» நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|