புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
61 Posts - 48%
heezulia
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
36 Posts - 28%
mohamed nizamudeen
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
176 Posts - 41%
heezulia
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
172 Posts - 40%
mohamed nizamudeen
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
prajai
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_m10அகரம் அமுதனின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகரம் அமுதனின் கவிதைகள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 12:42 pm

என் இனிய நண்பர் அகரம் அமுதன் அவர்களின் கவிதைகளை அவர் அனுமதியுடன் ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடன் தமிழ்நேசன்


ஆசைக்கே ஆசையெழும்!


அகரம் அமுதனின் கவிதைகள் Jcovergirl
நாடாத கண்களுண்டோ
நறுமுகையே நீநடந்தால்…
பாடாத வாய்களுண்டோ
பைங்கிளியுன் அழகைத்தன்னால்…

வைத்துக்கொண்டே வஞ்சனைகள்
செய்கின்ற சின்னஇடை
வள்ளலென எண்ணிச்சென்று
கஞ்சனிடம் பெற்றகொடை

பிடியளவு இடையிருக்க
படியளவு மார்கனக்க
அடியெடுத்து நீநடந்தால்
அன்னமே கால்கடுக்கும்

செப்புச்சிலை உன்மேனி
சிவந்தவிழி மலைத்தேனீ
தெங்கிளநீர் இரண்டோடும்
சேர்ந்தநிறம் மருதாணி

காதளவு கண்கள்-அவை
வள்ளல்வீட்டு வாசல்கள்
கன்னியுந்தன் வாய்வார்த்தை
கஞ்சன்கொண்ட கைப்பொருள்கள்

வெடியெடுத்துப் போட்டதுபோல்
வெண்ணிலவே நீநடந்தால்
மதுகுடித்த வண்டெனவே
வந்துமனம் வட்டமிடும்

பொடியெடுத்துப் போட்டவுடன்
பூத்துவரும் தும்மலைப்போல்
அன்னமுனைக் கண்டுவிட்டால்
ஆசைக்கே ஆசையெழும்!

-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 12:49 pm

இல்லவே இல்லை!

சாதிக்கோர் சுடுகாடு
நிறையவே உள்ளன
ஒன்றுகூட இல்லை
சாதிக்குச் சுடுகாடு!

-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 12:50 pm

கைக்கூலி! (வரதட்சிணை)


பெண்ணாய்ப்
பிறந்த யார்க்கும்
தரணியில்
தாலிதான்
வேலி; -அவ்
வேலியின்
வேலையைச் செய்ய
வேண்டுவதேன் கூலி?

கூலி பெற்று
குவலயத்தில்
வேலியின்
வேலையைச் செய்யும்
ஆண்கள்
ஆரும்
ஆண்கள் அல்ல
ஆண்களிற் போலி!


இன்று
ஏந்திழையர் –
வனப்பைப் பார்த்து
வருவதில்லை வரன்;
பணப்பை பார்த்து –மணம்
பண்ணுவதுதான் முறண்


ஒன்றுபோல்
ஒன்று;
இப்படி ஒன்றுதல்
இருவர்க்கும் நன்று!

ஏற்பதிகழ்ச்சி -
என்றாள் ஔவை; மீறி -
ஏற்கின் எவர்க்கும் -
ஏற்படும் கௌவை!

-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 12:52 pm

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!

‘அ’கரம் தொடங்கி ‘ன’கரம் ஈறாய்
அகிலம் தோன்றிய அருந்தமிழே!
‘ண’கரம் ‘ந’கரம் ‘ன’கரம் வேறாய்
நாவில் நடமிடும் நறுந்தமிழே!

‘ர’கர ‘ற’கரம் ஒலிபிற ழாமல்
பகர இனிமை தருபவளே!
‘ழ’கர ‘ள’கரத் தனிச்சிறப் பாலே
இளமை குன்றாத் திருமகளே!

வல்லினம் மெல்லினம் இடையினம் மூன்றால்
வளப்பம் குறையா வண்டமிழே!
சொல்லிலும் பொருளிலும் சுடர்மிகு வல்லமை
தோன்றிட இங்குறு தொல்தமிழே!

ஒன்றா? இரண்டா? மூன்று தமிழாய்
உலகில் முதலாய்ப் பிறந்தவளே!
நன்றாய் முதலிடை கடைச்சங் கத்தில்
நாவலர் நாவிற் சிறந்தவளே!

ஒருசொல் பலபொருள் பலசொல் ஒருபொருள்
உடையாய்! உளதோ உனக்கீடு?
பொருந்திய எழுத்துச் சொற்பொருள் யாப்பணி
பொலியவென் நெஞ்சே! பண்பாடு!

காப்பியன் வள்ளுவன் கம்பனைத் தந்து
காசினி யில்சிறப் புற்றாய்நீ
பூப்பினில் நறுந்தேன் பீய்ச்சிடும் பூவுனை
மோப்ப விழையும்நான் நற்றேனீ

காலை கடும்பகல் மாலை இரவிலும்
காதல் தானுன் மீதெனக்கு
தோளின் மீதே தொற்றிக் கொள்ளத்
தடையா தோஇப் போதுனக்கு?

நாரும் பூப்போல் நாறும்; பூவை
நாடின் என்பார் அதுபோலே
நேரில் தமிழை நேர்ந்தேன்; இன்பம்
நேருள தோசொல் இதுபோலே?

-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 12:56 pm

டெசோ! (வ.வா.ச) 1
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

அகரம் அமுதனின் கவிதைகள் 1302020739kk
முக்கியம் எதுவோ அஃதை
மூடியே மறைத்து விட்டு
மக்கிய பிறகெ டுத்து
மணிக்கணக் காகப் பேசிச்
சிக்கலைத் தீர்ப்ப தாகச்
செப்பிடும் கலையால் இன்றும்
மக்களை திசைதி ருப்ப
வந்துளேன் ஆத ரிப்பீர்!

பலமுறை நாட்டை ஆண்டு
பகற்கொள்ளை அடித்த போதும்
தலைமுறை ஆளும் ஆசைத்
தவிப்பினால் தக்க வற்றை
இலைமறை காய்ம றையாய்
இயற்றியே நல்லோன் போல
நலமுற வாழ்வோன் உம்மை
நாடினேன் என்சொல் ஏற்பீர்!

செந்தமிழ் நாட்டை ஆளத்
தேவையோர் மொழிப்போர் என்று
சிந்தையைப் பிழிந்து கண்டு
செயலிலும் இறங்கி வென்றே
இந்தியிற் கிறங்கல் பாடி
இந்நாட்டில் இங்கி லீசாம்
மந்தியிற் கிடங்கொ டுத்து
மகிழ்ந்தவன் என்பின் வாரீர்!

மயிரினும் கீழாய் உம்மை
மனத்தினில் எண்ணும் போதும்
‘உயிரினும் மேலாம் என்றன்
உடன்பிறப் புகளே!’ என்று
மயக்கத்தை ஏற்ப டுத்தும்
மணிமொழி பேசி உம்மை
இயக்கத்திற் கிழுந்து வந்த
இளவலென் இன்சொல் கேட்பீர்!

தடியெடுத் தானே தாடிக்
கிழவனும் மூக்கில் போடப்
பொடியெடுத் தானே காஞ்சிப்
புதல்வனும் ஈழம் காக்க
முடிவெடுத் தான பின்னே
முறையிட்டார் கனவில்; நானும்
அடியெடுத் தேகு கின்றேன்
அவ்வழி, அணிவ குப்பீர்!

(தொடரும்)
-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 12:59 pm


டெசோ! (வ.வா.ச) 2

(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

அகரம் அமுதனின் கவிதைகள் A4493e0a-fb79-4a3c-8107-bf6a49348073_S_secvpf.gif
இன்றுநாம் இங்குக் கூடி
இருப்பதன் நோக்க மென்ன?
அன்றுநம் கண்ணின் முன்னே
அழிந்தஈ ழத்தை மீட்கச்
சென்றுநாம் செய்ய வாகும்
செயல்கள்தான் என்ன என்ன
என்றுநாம் கூடி ஆய
இருப்பதே நோக்க மன்றோ!

‘புலிகளே போன பின்பு
புத்தீழம் கனவே’ என்னும்
சலிப்பிலே உழலு கின்ற
தமிழரே! புலிக ளாலும்
எளிதிலே முடிந்தி டாத
ஈழத்தை வென்று காட்டிக்
களிப்பிலே உம்மை ஆழ்த்தக்
களத்திலே இறங்கி விட்டேன்!

தலைக்குமேல் வெள்ளம் சூழந்த
தவிப்பிலே கலங்கும் மக்காள்!
‘இலைக்குமேல் கதிரே’* என்றிங்(கு)
என்பின்னே அணிவ குத்தால்
களைக்குமேல் களையெ டுத்துக்
கழனியைச் சீராக் கல்போல்
விலைக்குமேல் விலைகொ டுத்தும்
வெல்லேனோ ஈழத் தைநான்?

பொறுத்தது போதும் என்று
பொங்கிநான் எழுந்து விட்டால்
ஒறுத்தது போதும் வாரீர்
ஓடிடு வோமென் பாரே
சிறுத்தநெஞ் சம்ப டைத்த
சிங்களக் கடையர்; அந்த

நரித்தனம் எனக்கே யுண்டு
நானிலம் அறிதல் வேண்டும்!


என்னாட்டுத் தமிழர் காள்!நம்
இனம்முற்றாய் அழிந்த போதும்
பன்னாட்டு மன்றம் கூடப்
பதறிட வில்லை; இப்போர்
உண்ணாட்டுச் சிக்கல் என்றே
உதறிடப் பார்த்தா ரன்றித்
தன்னாட்டுச் சிக்கல் போலத்
தடுத்திட முனைந்தா ரில்லை;

(தொடரும்)
-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 1:00 pm

டெசோ! (வ.வா.ச) 3
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
அகரம் அமுதனின் கவிதைகள் Capture-kalainjar


தாய்த்தமிழ் நாட்டை ஆண்ட
தலைவனென் உதவி கேட்டுச்
சேய்த்தமிழ் ஈழம் கண்ட
செம்மலேன் அணுக வில்லை?
போய்த்திமிர் போரில் காட்டிப்
பொன்றிடத் துணிந்தா ரன்றி
வாய்த்திமிர் காட்டும் என்போல்
வலம்வர அறிந்தா ரில்லை!

பதறிடாச் செயலென் றைக்கும்
பக்குவம் அடையு மன்றிச்
சிதறிடா தென்று கண்டு
தெளிந்தத னாலே அன்று
கதறிய ஈழத் தைநான்
காத்திடத் துடித்தெ ழுந்தே
உதறிட வில்லை என்றன்
ஊராளும் விரும்பத் தைநான்!

நாற்காலி சிங்க ளர்கள்;
நானிங்கே அமர்ந்த தூவும்
நாற்காலி ஆன தாலே
நானதை விட்ட கன்றால்
நாற்காலி இரண்டும் செர்ந்தே
எண்காலில் ஆடும் என்றே
போர்காலப் பொழுதிற் கூட
பொறுமையாய் இருந்து விட்டேன்

பெரும்புயல் என்பேச் சென்று
பேசினீர்; ஆட்சி போனால்
வெறும்பயல் பேச்சென் றன்றோ
விளம்புவீர்; அதனா லும்தான்
இரும்பென நெஞ்சை ஆக்கி
இரண்டகம் அதிலே தேக்கித்
துரும்பையும் நகர்த்த வில்லை
துடித்திடும் ஈழத் துக்காய்!

ஆட்சியை விரும்பு வேனா?
அழிவுறும் ஈழ நாட்டின்
மீட்சியை விரும்பு வேனா?
விரைந்துசெங் கோலைக் காக்கும்
சூட்சுமம் தெரிந்த தாலே
துணைபோனே னன்றி ஆங்கே
சாட்சியம் இல்லாப் போர்க்குச்
சம்மதம் சொல்ல வில்லை!

(தொடரும்)
-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 1:03 pm

டெசொ! (வ.வா.ச) 4
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)

அகரம் அமுதனின் கவிதைகள் Css1849

அறைகுறை தமிழ்ப டித்தே
     அருந்தமிழ் அறிஞன் என்ற
நிறைகுடப் பெயரெ டுத்து
     நிற்கின்ற என்னைப் பார்த்துக்
குறைபலச் சொல்லு கின்றார்
     குறுகிய மனத்தர்; என்றன்
நிறைகளைச் சொல்லு கின்றேன்
     நீங்களே நிறுத்துப் பார்ப்பீர்;

தும்பைஏன் விட்டேன்? வாலைச்
சொடுக்கியே வீழ்த்திக் காட்டும்
தெம்பைநான் பெற்ற தாலே;
     தெரியாதார் போற்கேட் போரே!
கொம்பைஏன் விட்டேன்? முள்ளாய்க்
குளம்பிலே குத்திச் சாய்க்கும்
வம்படி வித்தை கற்று
வல்லமை படைத்த தாலே!

பார்க்கத்தான் முருங்கை; என்னைப்
பற்றிப்பார் புளியங் கொம்பு;
பார்க்கத்தான் சகுனி; வந்து
பழகிப்பார் சாணக் யன்நான்;
பார்க்கத்தான் வெறுங்கை; உள்ளே
பணத்தோட்டம் பூத்துக் காய்க்கும்;
ஆர்க்குத்தான் வாய்ந்த தென்போல்
     அரசியற் சூதும் வாதும்?

நன்முறை வழியில் அன்று
     நாயகம் ஈழம் கேட்டார்;
வன்முறை வழியில் நின்று
     வாங்கவே புலிகள் வேட்டார்;
என்முறை என்ன வென்றே
     இங்குளார் என்னைப் பார்த்துப்
பன்முறை கேட்ப தாலே
     பகருகின் றேன்நான் கேட்பீர்!

சீராடி தமிழர் நாட்டைச்
     சிறப்பாக ஆண்ட வன்நான்;
போராடி ஈழம் வென்றால்
     புதுமையா? உரிமை பேசிக்
கூராடிக் கொண்டால் உண்டா
     கௌரவம்? நானோ கங்கை
நீராடி ஈழம் வெல்வேன்
     நீங்கள்பார்க் கத்தான் போறீர்!

(தொடரும்)
-அகரம் அமுதன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon May 19, 2014 1:07 pm

டெசோ! (வ.வா.ச) 5
(வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
அகரம் அமுதனின் கவிதைகள் Images?q=tbn:ANd9GcR9UMBf1TZoa1Y97o_pzE_RLwTBVieQUWf32iej3BVL3rB8a3Zi

வில்லடி யாலே அன்று
     வென்றவன் ராமன்; பக்தன்
கல்லடி தந்த தாலே
     கனிந்தவன் ஈசன்; இன்றோ
செல்லடி யாலே நம்மைச்
     சிங்களர் கொன்றார்; நானோ
சொல்லடி யாலே அந்தத்
     துடுக்கரைக் வெல்வேன்; ஆணை!

பேசியே நாட்டை ஏய்த்த
     பெருமையிற் குரியோன் என்னை
ஏசியே பெருமை கொள்ளும்
     ஏந்திழை கண்டு நாணிக்
கூசியே சாகும் வண்ணம்
     குவலயத் தீழம் என்றன்
ஆசியால் விடுத லைபெற்(று)
     ஆங்குறும்; தமிழ்மேல் ஆணை!

அறிக்கைகள் விட்டு விட்டே
     அலரிடச் செய்வேன்; ஆளும்
வெறித்தன சிங்க ளர்க்கு
     வெறுப்பினை ஏற்ப டுத்தும்
குறிப்பினை எடுத்துக் கூறிக்
     குடைசலைத் தருவேன்; என்றன்
நரித்தன தின்முன் அந்த
     நாய்களா நிற்கக் கூடும்?

ஆருக்கும் அடங்கி டாமல்
     ஆடிடும் இராஐ பக்சே
நேருக்கு நேர்நின் றேநான்
     நிகழ்த்துவேன் சோற்போர்; அந்தப்
போருக்கு நடுவர் என்தாய்
     சோனியா; படம்பி டித்துப்
பாருக்குக் காட்ட வன்றோ
     பண்ணினோம் கலைஞர் டி.வி.

சிலம்பிலே ஈழம் ஆண்ட
     செந்தமிழ் மன்னன் பற்றி
நலம்படக் கூறி யுள்ளார்
     நற்றமிழ் இளங்கோ; ஆக
வளம்பல கொண்ட நாட்டை
     வந்துபின் நாளில் பற்றித்
தளமென ஆக்கிக் கொண்டார்
     தடியராம் காடை யர்கள்!

(தொடரும்)
-அகரம் அமுதன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக