புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_m10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_m10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_m10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_m10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_m10வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 5:50 pm

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் 564xNxvala_1892937g.jpg.pagespeed.ic.qG1jkG8upa

வீட்டுக்குள்ளே வந்துவிட்டால், எதிராளி யும் விருந்தாளி... படி தாண்டி வெளியே கால் வைக்கிற அடுத்த நொடியே போட்டுத் தள்ள வேண்டிய பகையாளி! இப்படி, விடியோ கேம்ஸ் மாதிரி விநோதமான விதிமுறை கொண்ட ஒரு முரட்டுக் குடும்பத்தை காட்டி, அந்த புதிர் வளையத்துக்குள் சிக்கும் நாயகன் சந்தானம் எப்படி மீண்டு, காதல் ஸ்கோரை ஜெயித்தார் என்று காட்டி இருக்கிறார்கள்.

சென்னையில் சைக்கிளை மிதித்து தண்ணீர் சப்ளை செய்யும் சந்தானம், ‘வேன் வாங்கினால்தான் வேலை’ என்று முதலாளி சொல்லவும், காசுக்கு வழி தேடுகிறார். சொந்த ஊரில் இருக்கும் பூர்விக சொத்து பற்றி தகவல் தெரிந்து, அதை விற்று பணமாக்கக் கிளம்புகிறார். போன இடத்தில்தான் ‘விடியோ கேம்’ மாதிரி வில்லங்க விளையாட்டு.

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘மரியாதை ராமண்ணா’, தமிழில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாக! அந்தப் படத்தை இயக்கிய எஸ்.எஸ். ராஜமௌலியே தமிழுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.

வெட்டிப் போட தயாராகிவிட்டார்கள் என்று தெரிந்த பிறகு, வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு சந்தானம் செய்கிற லூட்டிகள் குபீர் ரகம். அதற்கு முந்தைய ரயில் பயணத்தில், காமெடி கிறுக்கர்களைக் கலாய்க்கும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு நீளம் என்றாலும் அரங்கத்தில் அவ்வப் போது சிரிப்பு துள்ளுகிறது! ‘என்ன... கடன் வாங்கி காமெடி பண்றியா?’, ‘சிரிப்பே வரல, நீ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு சிரிச்சேன்’ என்று - தொய்வின் அலுப்பை தாண்டிச் செல்ல உதவுகின்றன பளிச் பஞ்ச்கள்.

கதாநாயக அவதாரத்திற்கு ஏற்ற புத்தி சாலி கோமாளி பாத்திரத்தை சரியாகவே தேர்ந்தெடுத்திருக்கிறார் சந்தானம். மாஸ் ஹீரோ பாணி ஸ்டைல்களை சில இடங்க ளில் காட்டினாலும் பல இடங்களில் அடக்கியே வாசித்திருக்கிறார். நடனக் காட்சிகளில் நன்கு உழைத்திருக்கிறார். இருந்தாலும் சில பாடல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவரையும் மீறி சிரிக்க வைத்து விடுகிறார்! படத்தின் இடையே அவருடைய நிறுவனத்தின் பெய ரில் அறக்கட்டளை வருவது போலக் காட்சிப் படுத்தியிருப்பது தேவையா?

பெண்களை மட்டம் தட்டுவதுதானே தமிழ் ஹீரோயிஸம்? காமெடியனாக இருக் கும்போதே பெண்களை இழிவுபடுத்தும் சந்தானம், கதாநாயகனாகும்போது சும்மா இருப்பாரா? இந்தப் படத் திலும் உண்டு. கதாநாயகி அஷ்னா ஜாவேரிக்கு வழக்கமான பணக் கார வீட்டுப் பெண் பாத்திரம் தான். லட்சணமான புதுவரவு. பிற்பாதியில் கொஞ்ச நேரம் வரும் விடிவி கணேஷ் சுமாராக சிரிக்கவைத்து விட்டுப் போகிறார்.

சித்தார்த் விபின் இசையில் ஓரிரு பாடல் கள் கேட்கும்படி இருக் கின்றன பின்னணி இசையும் இசை வாக இருக்கிறது. பாலத் தின் மேல் நடக்கும் கிளை மாக்ஸில் ஷக்தி, ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு அழகு.

ஆங்காங்கே ஓட்டைகளும் நெருடல்களும் இருந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை காப் பாற்றிவிடுகிறது. அதேசமயம், ‘நீங்கள் பார்த்துக் கொண்டி ருப்பது, ஒரு தெலுங்கு படத்தின் மறு பதிப்பு’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது காட்சி அமைப்பும், கதாபாத்திரங்களின் ‘கூடுதல்’ நடிப்பும்.

[thanks] தி இந்து [/thanks]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 5:58 pm

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - மாலைமலர் விமர்சனம்!

சென்னையில் சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சந்தானம். இவரின் முதலாளி குட்டியானையோடு (வேன்) வந்தால்தான் வேலை தருவேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிடுகிறார். தாய், தந்தை இல்லாத சந்தானம், தனக்கு தெரிந்தவரிடம் இதைப்பற்றிக் கூறி புலம்புகிறார். அதற்கு அவர் உனக்கு ஊரில் சொத்து இருப்பதாகவும், ஆனால் நீ அங்கு சென்றால் உன்னை கொன்றுவிடுவார்கள் என்று உன் தாய் இறப்பதற்குமுன் கூறியதாக சொல்கிறார்.

அதற்கு சந்தானம் முன் பகையெல்லாம் இப்போது இருக்காது. நான் அந்த ஊருக்குச் சென்று சொத்துக்களை விற்று வருகிறேன் என்று சொல்லி ரெயிலில் புறப்படுகிறார். ரெயிலில் நாயகி ஆஷ்னா சாவேரியை சந்திக்கிறார். இவர்களின் சந்திப்பு நட்பாக மாறுகிறது. இருவரும் ஒரே ஊருக்கு பயணிக்கிறார்கள். ஊருக்குச் சென்றவுடன் இருவரும் அவரவர் வேலையை பார்க்க பிரிகிறார்கள்.

சந்தானம் தன் சொத்தைவிற்க அந்த ஊரில் பெரியவரான நாகிரெட்டியை சந்திக்கிறார். அவர் சந்தானத்தை வீட்டிற்கு அழைத்து சென்று விருந்து வைக்கிறார். அங்கு நாயகி ஆஷ்னாவை சந்திக்கும் சந்தானம் அவர் ஊர் தலைவரின் மகள் என்று தெரிந்துக் கொள்கிறார்.

அதே சமயம் ஊர் பெரியவரும் அவருடைய மகன்களும் குடும்ப பகையைத் தீர்க்க, நீண்ட நாட்களாக தேடி வந்த நபர் சந்தானம் என்பதை தெரிந்துக் கொள்கிறார்கள். அதனால் சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அது என்னவென்றால் வீட்டிற்குள் யாரையும் கொல்ல மாட்டார்கள். வீட்டிற்கு வெளியே தான் கொல்வார்கள். வீட்டிற்குள் விருந்தாளிப் போல் உபசரிப்பார்கள்.

இதை அறிந்துக் கொண்ட சந்தானம் வீட்டிற்குள்ளேயே இருந்து இவர்களை ஏமாற்றி வருகிறார். இறுதியில் வீட்டை விட்டு வெளியேறி உயிரோடு தப்பித்தாரா? நாயகியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் முதல் தடவையாக கதாநாயகன் பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறார் சந்தானம். ஹீரோயிச பாடலுடன் அறிமுகம் ஆகும் சந்தானம் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டார். படத்தில் கமர்சியல் ஹீரோவாக இருப்பார் என எதிர்ப்பார்த்தால் முதல் பாடல் தவிர வழக்கமான சந்தானமாகவே காட்சியளித்திருக்கிறார். இவர் படம் முழுக்க வந்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சிறப்பாக நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்.

நாயகி ஆஷ்னா சாவேரி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.

படத்தில் நாகிரெட்டி மற்றும் அவரது மகன்கள், ராஜ்குமார், பவர் ஸ்டார், மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள்.

சித்தார்த் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாடல் காட்சிகளில் சக்தியின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான படத்தை தமிழில் சந்தானத்தை வைத்து இயக்கிய ஸ்ரீநாத், அதில் முழுமையாக கையாண்டு சிரிப்பு விருந்தாக படைக்கவில்லை. சந்தானம் படத்தில் சொல்லும் வசனம், இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்ல, ஆனா மனசு கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிரிக்கிறேன் என்னும் வசனம் இப்படத்திற்கும் பொருந்தும்.

மொத்தத்தில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ வல்லவர்களுக்கு மட்டும்.



வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 5:59 pm


தினமலர் விமர்சனம்



"அறை எண் 305-ல் கடவுள்", "கண்ணா லட்டு திண்ண" ஆசையா இரண்டு படங்களிலும் இரண்டு மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்த காமெடி நடிகர் சந்தானம், ஸோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "வல்லவனுக்கு புல்லும்" ஆயுதம். "நான்" ஈ ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கில் சூப்பர்-டூப்பர் ஹிட்டான "மரியாதை ராமண்ணா"வின் தமிழ் ரீ-மேக்!

சந்தானத்தின் நெருங்கிய நண்பரும், காமெடி நடிகருமான ஸ்ரீநாத்தின் இயக்கத்தில், தமிழில் வெளிவந்திருக்கும் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" எப்படி? இனி பார்ப்போம்...

கதைப்படி ஹீரோ சந்தானம், பழைய சைக்கிள் ஒன்றில் கடை கடையாக வாட்டர்கேன் போடும் வாட்டர் சப்ளையர் வேலை பார்க்கிறார். சந்தானத்தின் "கறார் முதலாளி ஒருநாள், லோன் போட்டாவது நீ "சின்ன யானை லோடு ஆட்டோ வாங்கி வந்தால் தான் உனக்கு வேலை, அதுவரை நம் பிஸினஸூக்கு இந்த ஓட்(டை)ட சைக்கிளும் ஒத்து வராது, நீயும் ஒத்து வரமாட்டாய்... என உதறிவிட, கதறி துடிக்கும் சந்தானம் காசுக்காக நாயாய், பேயாய் அலைகிறார்.

காலணா காசு கிடைத்தபாடில்லை... கடுப்பாகும் சந்தானம், அப்பா, அம்மாவை இழந்து அநாதையான தனக்கு, அடைக்கலம் கொடுத்திருக்கும் தூரத்து உறவிடம் பொழப்புக்கு என்ன செய்வேன்? என புலம்புகிறார். அந்த உறவோ, ஏன்? உனக்கென்ன குறை...? உனக்கு ஊரில் உங்க அப்பா சொத்து கொஞ்சம் இருக்கிறது என உயிலை எடுத்து காண்பிக்கிறார். அது கண்டு முகம் மலரும் சந்தானம் அதை கொடுங்கள், அந்த சொத்தை வித்து நான் பிழைத்து கொள்கிறேன் என்கிறார். ஆனால் அந்த உறவோ, அந்த ஊரில் பெரும் பகையும் உன் குடும்பத்திற்க இருக்கு என்பதால் தான் கடைசி வரை இந்த சொத்து விபரத்தை உன்னிடம் கூறாமல், வீட்டு வேலை செய்து உன்னை வளர்த்தார் உன் தாய்... அதனால் இந்த உயிலை இப்போதைக்கு உன்னிடம் தர முடியாது, நீ வெறுத்து போய் பேசியதால் உனக்கு ஆறுதல் அளிக்கும்படியாக இந்த உயிலை காண்பித்தேன், என்று கூற, பிடிவாதமாக அவரிடம் உயிலை பிடுங்கி கொண்டு அரவங்காடு எனும் அழகிய ஊரில் இருக்கும் தன் பூர்வீக சொத்தை விற்க ரயிலேறுகிறார் சந்தானம். தனக்கு ஆபத்பாந்தனாக அதுநாள் வரை இருந்த சைக்கிளையும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டு கிளம்பும் சந்தானம், ரயிலில் ஹீரோயினை சந்திக்கிறார்.

தன் பூர்வீக சொத்து விற்பனை சம்பந்தமாக ஊர் பெரிய மனிதரான ராயர் வீட்டுக்குபோகும் ஹீரோ சந்தானம், அங்கு அவர்கள் வழக்கப்படி விருந்தாளியாக உபசரிக்கப்படுகிறார். என்ன ஆச்சர்யம்.?! ராயரின் மகள்தான் சந்தானம் ரயிலில் சந்தித்த நாயகி ஆஷ்னா சவேரி என்பதும், அதைவிட ஆச்சர்யம், ப்ளஸ் அதிர்ச்சி, ஆஷ்னா சவேரி சந்தானத்தின் முறைப்பெண் என்பதும், ஆஷ்னாவின் அப்பா ராயரும், சகோதரர்களும் தான் 27 வருட பகையுடன் சந்தானத்தை போட்டுத்தள்ள காத்திருக்கும் பகையாளிகள் என்பதும் தான். இந்த டுவிஸ்ட். டுவிஸட்டுக்கே டுவிஸ்ட் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்திற்கு பெரும் ப்ளஸ்!

தங்கள் வீட்டிற்குள் கொலை செய்வதில்லை... எனும் கொள்கையுடைய ராயரும், அவரது மகன்களும் விருந்தாளியான சந்தானத்தை வெளியில் வரவைத்து கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். அதை தெரிந்து கொள்ளும் சந்தானம், அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஜமாய்ப்பது தான் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் காமெடி கதைக்களம்! இதில் அதகளம் செய்திருக்கும் சந்தானம், வீட்டை விட்டு வெளியில் வந்தாரா? பகையாளிகளை வென்றாரா? பகையை கொன்றாரா? நாயகியின் காதலை உணர்ந்தாரா.? அவரை மணந்தாரா? என்பது தான் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ்!

சந்தானம் வழக்கம் போலவே வரும் சீன்களில் எல்லாம் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். அதிலும் ராஜகுமாரன் கோஷ்டியுடன் அவர் செய்யும் அலும்பு செம காமெடி! ஹீரோவாக நடித்திருப்பதால் உஷாராக வழக்கமான தனது இரட்டை அர்த்த வசனங்களை எல்லாம் தவிர்த்து "பன்ச் டயலாக்கு பேசி பட்டையை கிளப்பி இருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல! அதிலும், "டைமிங்காக, ""மதுரை பெருமை பேச சசிக்குமார், விஷால் எல்லாம் இருக்காங்க, சென்னையை பற்றி பேச என்னை விட்டா யார் இருக்கா.? எனக்கேட்டும் இடத்திலாகட்டும், ""பொண்ணுங்களோட "ஆக்சலேஷன் மையிண்டு தான் பல காதல் பிரிவுக்கு காரணம் என்றும், அதையும் மீறி அப்பா அம்மா, எப்படியும் பிரிச்சுடுவாங்கக்கிற தைரியத்தல தான் பொண்ணுங் காதலிக்கவே செய்றாங்க என்றும்..., அவர் அடிக்கும் பன்ச்கள் ஆகட்டும், அதற்கு உதாரணமாக அதே ரயிலில் பிரயாணிக்கும் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து சொல்லும் ரஜினி, கமல், மாதவன், சிம்பு, டயலாக்குகள் ஆகட்டும்... இன்னும் இஷ்டத்திற்கு கொளுத்தி போடும் சிரிப்பு வெடிகளில் ஆகட்டும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. கீப் இட் அப் சந்தானம்!

ஆஷ்னா சவேரி, அசப்பில் சற்றே சதை போட்ட ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கிறார். நடிப்பிலும், இளமை துடிப்பிலும் கூட அப்படியே. "மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ், ராஜகுமாரன் உள்ளிட்டவர்களும் ஓ.கே.!

சித்தார்த் விபினின் பின்னணி இசை பலம். பாடல்களும், அதன் இசையும் பலவீனம். (ரீ-மேக் படத்திற்கு கூட டப்பிங் படங்கள் மாதிரியே தான் பாடல்கள் இருக்க வேண்டுமா? என்ன.?!) சக்தி, ரிச்சர்ட் என்.நாதன் இருவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. ரஜினியின் அண்ணாமலை படத்திற்குப்பின் "மிதிவண்டியையும் ஒருபாத்திரமாக்கி, அதற்கு டி.ஆர். டைப்பில் ஒரு குரலையும் கொடுத்திருப்பதற்காக இயக்குநர் ஸ்ரீநாத்தை பாராட்டலாம்!

ஆகமொத்தத்தில், ""வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - ரசிகர்களிடம் "சந்தானத்தை ஹீரோவக்கியுள்ள ஆயுதம்!"


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக