புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 14, 2014 8:16 am

காஞ்சிபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தோற்றம் குறித்த அரிய வகைப் புகைப்பட கண்காட்சி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோயில்களின் நகரம் என்றால் அது காஞ்சிபுரம்தான். சைவ தலங்கள், வைணவ தலங்கள் நிறைந்து காணப்படும் நகரமாகும்.

பஞ்சபூத தலங்களில் மண் தலமான ஏகாம்பரேஸ்வர் கோயில் இங்கு உள்ளது. மேலும் விளக்கொளி பெருமாள் கோயில், அழகிய சிங்க பெருமாள் கோயில், அஷ்டபுஜ பெருமாள் கோயில், யதோக்தகாரி பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் என 108 திவ்ய தேசங்கள் நிறைந்த நகரம் காஞ்சிபுரம்.

இதற்கெல்லாம் மேலாக காமாட்சியம்மன் ஆலயம், ஆதிசங்கரர் தோற்றுவித்த சங்கரமடம், கந்தபுராணம் பாடல் அரங்கேறிய குமரக்கோட்டம் முருகன் கோயில் ஆகியன காஞ்சிபுரத்துக்கு மேலும் சிறப்பை தருகின்றன.

இங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, கட்டடக் கலைகளைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் ஒரு மாதம் எடுத்துக் கொண்டாலும் முழுவதுமாக பார்த்து ரசிக்க முடியாது என்று கூறினால் மிகையல்ல.

இவ்வளவு சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்பதை இன்றைய இளைஞர்களின் கண்முன் கொண்டு வரும் வகையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இந்த அரிய வகைப் புகைப்பட கண்காட்சிக்கு காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. மேற்கு ராஜ வீதி எஸ்.எஸ்.கே.வி. பள்ளிக்கு எதிரே தீபாவளி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

100 ஆண்டுகள் பின்னோக்கி... கட்டடக் கலைக்கு சிறப்புப் பெற்ற கைலாசநாதர் கோயில் 1900-ஆம் ஆண்டில் மகா மண்டபத்துக்கு முன்பு உள்ள சிறுகோயில்களின் தோற்றம், கோயிலின் பின்புறம், வடக்கு பிரகாரம், முன்மண்டபம், கருவறை விமானம் ஆகியவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதேபோல் வைணவ தலங்களில் கட்டடக் கலைக்கு பெயர் பெற்ற வைகுண்ட பெருமாள் கோயில் 1900-ஆம் ஆண்டில், முன்பகுதி, பின்புற தோற்றம் குறித்த தெளிவான புகைப்படங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்கும் ஏகாம்பரேஸ்வர் கோயில் கோபுரம், உள்பிரகாரம், குளம் ஆகியன 1868-ஆம் ஆண்டு இருந்தது கண்களுக்கு விருந்தளித்தது.

அதேபோல் சின்ன திருப்பதி என்ற புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 1896-ஆம் ஆண்டு உள்பிரகராம், மேற்கு கோபுர வாசல், கல்யாண மண்டப முகப்பு, கோயில் உள்புறம், குளம் ஆகியன இடம் பெற்றிருந்தது. 1900-ஆம் ஆண்டில் மதங்கேஸ்வரர் கோயிலின் பின்புற தோற்றம், முன்புற தோற்றம், 1900-ஆம் ஆண்டில் முத்தேஸ்வர் கோயிலின் கிழக்கு ராஜவீதி, 1890-ஆம் ஆண்டில் அமரேஸ்வரர் கோயில், 1890-ஆம் ஆண்டு சர்வ தீர்த்த குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம் ஆகிய பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இதேபோல் எண்ணற்றப் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையப் பேராசிரியர் பி. அண்ணாதுரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தனர். (தினமணி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக