புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
Page 6 of 26 •
Page 6 of 26 • 1 ... 5, 6, 7 ... 16 ... 26
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
பி யு சின்னப்பா மற்றும் பாகவதர் - இவர்களின் பெயர்களை மட்டுமே இதுவரை அறிந்து வைத்திருந்தேன், ஆனால் தங்களின் இக்கட்டுரை மூலம் இருவரின் வாழ்க்கை மற்றும் சினிமா உலகில் இவர்களின் ராஜ்ஜியம் எவ்வாறிருந்தது என்பதை அறிந்து கொண்டேன். கட்டுரைக்கு மிக்க நன்றி மருத்துவரய்யா..!
அவர் சாப்பிட பயன்படுத்துவது தங்கத் தட்டுதான் ! அந்த தட்டு எப்படியும் 100 பவுன் கள் இருக்கும் ! இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத் தட்ட ரு. 2.25 கோடி இருக்கலாம் !
நல்லவேளை இப்பொழுது அவர் இல்லை, இருந்திருந்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பார்.
நல்லவேளை இப்பொழுது அவர் இல்லை, இருந்திருந்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பார்.
லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு
இது குறித்து தாங்கள் எழுதியதும் கூகிளில் தேடிப் படித்தேன்! அதனை கீழே தந்துள்ளேன்.
இது குறித்து தாங்கள் எழுதியதும் கூகிளில் தேடிப் படித்தேன்! அதனை கீழே தந்துள்ளேன்.
- லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கும் தியாகராஜ பாகவதரும்:
1940-களில் தியாகராஜ பாகவதர்தான் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவருடைய வெண்கலக் குரலுக்கு மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். மேடையிலோ திரையிலோ இவர் தோன்றினால் மக்கள் மெய் மறந்து சொக்கி நின்றனர். இவருடைய ஹரிதாஸ் படம் சென்னை பிராட்வே திரையரங்கில் சுமார் 700 நாள்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இவர் காரில் போகும்போதுகூட மக்கள் வழிமறித்து நிறுத்தி பாடச் சொல்லி கேட்பார்கள். இவர் நடித்து வெளியான சிந்தாமணி படத்தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தாமணி தியேட்டர் என்று பெயரிட்டது. திவான் பகதூர் என்று பட்டம் பெற்ற திரையுலகைச் சேர்ந்த ஒரே நடிகர் இவர்தான்.
இவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். இவர் குரல் மட்டுமல்ல, சிகையலங்காரமும் இளைஞர்களியே பிரபலம் அடைந்திருந்தது. பாகவதர் ஸ்டைல் என்று அதற்குப் பெயர். திரையுலகை இவர் அளவுக்கு ஆண்ட இன்னொருவரைச் சொல்வது கடினம். திரையுலகின் மூலம் இவர் அடைந்த லாபங்களும், திரையுலகம் இவர் மூலம் அடைந்த லாபங்களும் மகத்தானவை. தங்கத் தட்டில் உணவு உண்டவர். அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை ஒரு கொலை வழக்கால் தலைகீழாக மாறிப்போனது. அதுதான் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.
பாகவதரைப் போலவே இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொருவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். வில்லுப்பாட்டு, மேடை நாடகம், திரையுலகம் என்று பல துறைகளில் பிரசித்தி பெற்றவர். திரைப்படத்தில் தான் பங்குபெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு தானே வசனம் எழுதினார். சுமார் 150 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பல படங்களில் இவருக்கு ஜோடியாக பெண் கதாபாத்திரத்தில் நடித்த டி.எம்.மதுரம் கலைவாணரின் நிஜ வாழ்க்கையிலும் துணைவியாக ஆனார். திரைவானில் வெற்றிக்கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையையும் அதே லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தாக்கி சீரழித்தது.
இரு பெரும் நடிகர்களின் வாழ்வில் சுனாமியை ஏற்படுத்திய அந்த லட்சுமிகாந்தன் யார்? இன்றைய மஞ்சள் பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழந்த சினி கூத்து என்னும் சினிமா இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவர். சினி கூத்தில் சினிமாவைப் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல, சினிமாக்காரர்களைப் பற்றிய விமரிசனமும் இடம்பெற்றது. பரபரப்பான கிசுகிசுக்கள், எந்த நடிகருக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு போன்ற ‘சுவாரஸ்யமான’ செய்திகள் இடம் பெற்றன. நடிகர், நடிகைகளுடைய தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் என்ற பெயரில் பல புனைவுகள் தயார் செய்யப்பட்டு அச்சில் ஏற்றப்பட்டன. அதனால் பல நடிகர், நடிகைகளின் சமூக அந்தஸ்துக்கு பங்கம் ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் விதமாக தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு (இவர் பிரபல இயக்குனர். கோவை பக்ஷிராஜ் ஸ்டுடியோவின் உரிமையாளர்) மூவரும், அன்றைய சென்னை மாகாண ஆளுநரான ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிடம் சென்று லட்சுமிகாந்தனுக்கு சினி கூத்து பத்திரிக்கை நடத்த வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டி ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர். ஆளுநரும் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இசைந்து லட்சுமிகாந்தனுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார்.
ஆனால், லட்சுமிகாந்தன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளவில்லை. போலியான ஆவணங்களின் பேரில் தன் வெளியீட்டைத் தொடர்ந்து நடத்திவந்தான். அரசாங்கத்துக்கு இது தெரிய வரவே அந்த வெளியீட்டையும் முடக்கியது. லட்சுமிகாந்தன் இதற்கும் அசரவில்லை. ஹிந்து நேசன் என்ற வேறொரு பத்திரிகையைத் தொடங்கினான். மீண்டும் ஏகப்பட்ட கிசுகிசுக்களை எழுதினான். இம்முறை ஒரு முன்னேற்றம். சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள பெரும்புள்ளிகள், தொழில் அதிபர்கள் என்று அனைவரைப் பற்றிய ரகசியங்களையும், புனை கதைகளையும், கிசுகிசுக்களையும் எழுதித் தள்ளினான்.
லட்சுமிகாந்தன் எழுதும் கிசுகிசுக்களுக்கு பயந்தவர்கள், அவனுடைய நட்பைச் சம்பாதிக்க அவனுக்கு ஏகப்பட்ட பணத்தை வழங்கினர். இதன் காரணமாக லட்சுமிகாந்தன் சொந்தமாக ஒரு அச்சகத்தையே விலைக்கு வாங்கிவிட்டான். தனக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீ ராமுலு ஆகியோர்மீது நிறைய கிசுகிசுக்களை எழுதினான். அந்தக் காலகட்டத்தில் மேற்சொன்ன மூவரைத் தவிர்த்து லட்சுமிகாந்தனின் கிசுகிசுக்களால் பாதிக்கப்பட்டு அவனுக்குப் பல எதிரிகள் உருவாயினர்.
இந்நிலையில், 1944 ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சென்னை வெப்பேரி அருகே வந்து கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத சிலர் அவனைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர். கத்திக்குத்து காயத்துடன் அவன் மருத்துவமனைக்குச் செல்லாமல் அவனுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். அவனுடைய நண்பர் அவனை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். கூடவே தன்னுடைய ஜூனியரையும் லட்சுமிகாந்தனுக்கு துணையாக அனுப்பி வைத்தார். ஆனால் லட்சுமிகாந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், வெப்பேரி காவல் நிலையத்துக்குச் சென்று, நடந்த சம்பவங்களைப் பற்றிப் புகார் ஒன்றை கொடுத்தான். தன்னை அடையாளம் தெரியாத யாரோ குத்திவிட்டதாகத்தான் தெரிவித்தான். தியாகராஜ பாகவதரையோ என்.எஸ்.கிருஷ்ணனையோ புகாரில் குறிப்பிடவில்லை.
மருத்துவமனையிலும் அவன் புறநோயாளியாகத்தான் அனுமதிக்கப்பட்டான். காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அவன் எந்தவிதக் கவலையும் இல்லாமல் காணப்பட்டான். நகைச்சுவை உணர்வுடன் இருந்ததாகவும் சொல்வார்கள். மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்தவர்களிடம் லட்சுமிகாந்தன் ஒரு கொலை விஷயத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறான். சமீபத்தில் தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு வந்த போட் மெயில் ரயிலில், தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அது. அந்தக் கொலையில் ஒரு பிரபல சினிமா நடிகை சம்மந்தப்பட்டிருப்பதாகவும், கொலை நடந்த ரயிலில் அவள் பயணம் செய்ததாகவும், கொன்ற பிறகு, ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதாகவும் லட்சுமிகாந்தன் சொன்னான். அந்த நடிகைக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தான். தகுந்த ஆதாரங்களைக் கொண்டு அந்த நடிகையைச் சிக்கவைக்கப்போகதாகவும் தெரிவித்தான்.
மறு நாள் விடியற்காலையில் எதிர்பாராத விதமாக லட்சுமிகாந்தன் உயிரிழந்தான். லட்சுமிகாந்தனை யார் கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தபோது, தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் , ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய மூவரையும் அதற்குப் பொறுப்பாளிகளாக்கியது காவல் துறை. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், கோவிந் சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள். நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு நடந்த சமயத்தில் ஜூரி முறை இருந்தது. ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு தான், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இப்பொழுது இது நடைமுறையில் இல்லை.
வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது. ஆனால் ஸ்ரீராமுலு குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற முடிவையும் நீதிபதிக்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நாடு கடத்தும் தண்டனை நீக்கப்பட்டது).
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாகவதரும் கலைவாணரும் ப்ரிவி கவுன்சிலில் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்கள். ப்ரிவி கவுன்சில் லண்டனில் இருக்கிறது. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்படாத நிலையில், இந்திய உயர் நீதிமன்றங்களுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பியவர்கள் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலைத்தான் அணுக வேண்டியிருந்தது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்வது நிறுத்தப்பட்டது.
பாகவதர் மற்றும் கலைவாணருடய மேல்முறையீட்டை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபுதின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி ஷஹாபுதின் பின்னாளில் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கே அவர் பதவி உயர்வு அடைந்து இறுதியாக பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்). இம்முறை குற்றவாளிகளுக்காக வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ். வழக்கை விசாரித்த புதிய பெஞ்ச், தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு முடியும்வரை பாகவதரும் கலைவாணரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுபடுவதற்கு பாகவதரும் கலைவாணரும் தாங்கள் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் செலவு செய்திருந்தனர். தியாகராஜ பாகவதர், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 12 திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார். அவை அனைத்தும் கை நழுவிப் போனது. பாகவதரின் மவுசு காணாமல் போயிருந்தது. அவர் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மேடை கச்சேரிகளில் பாடினார்.
திராவிட இயக்கம் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த அண்ணாதுரை, தியாகராஜ பாகவதரைத் திராவிட இயக்கத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு பாகவதர் இணங்கவில்லை. பாகவதர் திரைப்படத்துறையிலிருந்து விலகிய பிறகு, தமிழ் திரைப்படங்கள் வேறொரு தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தது. நாத்திக கொள்கையையும், கடவுள் மறுப்புப் பிரசாரத்தையும் மக்களிடையே சேர்ப்பதற்கு திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன.
பாகவதரால் மீண்டும் உயரத்தைத் தொடமுடியாமலே போய்விட்டது. 1959ம் ஆண்டு, தன்னுடைய 49-வது வயதில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார். கலைவாணர் விடுதலையானபிறகு பல படங்களில் நடித்தார். புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். பல கலைஞர்களைத் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். மீண்டும் பாகவதர் போல் இல்லாமல், திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1957-ஆம் ஆண்டு தன்னுடைய 48வது வயதில் கலைவாணர் காலமானார்.
லட்சுமிகாந்தனை யார் கொலை செய்தார்கள் என்ற விவரம் இன்றுவரை மர்மமாகவே நீடிக்கிறது.
http://namathu.blogspot.com/2011/11/blog-post_4742.html
பாகவதரின் சில்க் சட்டை கிழிந்திருந்தது........ வேஷ்டி பயங்கரமாக கிழிக்கப்பட்டு...!
இந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை!
இந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை!
சின்னப்பா வை ஆதிரிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை இப்படி விமர்சனம் செய்தது !
எப்படி விமர்சனம் செய்தது என்று கூறவேயில்லையே!!!
எப்படி விமர்சனம் செய்தது என்று கூறவேயில்லையே!!!
எனினும் ' மாத்ரு பூமி ' தடையை வென்று வெளியாகி தோல்வி அடைந்தது !
இதற்கு இந்தப் படம் தடை செ\ய்யப்பட்டே இருந்திருக்கலாம் தானே!
இதற்கு இந்தப் படம் தடை செ\ய்யப்பட்டே இருந்திருக்கலாம் தானே!
நம்ம ' ஈகரை ' கூட ஒரு வகையில் ' சிவ கவி ' தான் ! என்ன.... பாகவதருக்கு ' சிவ கவி ' ! ஈகரைக்கோ ...... " சிவா கவி !
சிவனே கதி என்றிருக்கிறேனே தவிர சிவா கவி ஆகும் எண்ணம் இல்லை பாஸ்!
சிவனே கதி என்றிருக்கிறேனே தவிர சிவா கவி ஆகும் எண்ணம் இல்லை பாஸ்!
சென்னை பிராட்வே திரை அரங்கில் 3 தீபாவளிகளைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றது !
மூன்று வருடங்கள் உண்மையிலேயே மக்கள் சென்று பார்த்தனரா அல்லது பவர் ஸ்டாரின் லத்திகா படம் போன்று ஓட்டினார்களா? உண்மையைச் சொல்லுங்க பாஸ்!
மூன்று வருடங்கள் உண்மையிலேயே மக்கள் சென்று பார்த்தனரா அல்லது பவர் ஸ்டாரின் லத்திகா படம் போன்று ஓட்டினார்களா? உண்மையைச் சொல்லுங்க பாஸ்!
பி யு சின்னப்பா தனது 36 ஆம் வயதில் அகால மரணம் அடைந்தார் !
36-வயதிற்குள் இவ்வளவு சாதனைகளைப் படைத்தாரா? நினைக்கும் பொழுதே மலைப்பாக உள்ளது!
36-வயதிற்குள் இவ்வளவு சாதனைகளைப் படைத்தாரா? நினைக்கும் பொழுதே மலைப்பாக உள்ளது!
[note]சினிமா உலகின் அரியபல தகவல்களை தங்களின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய கட்டுரையில் படிக்க காத்திருக்கிறோம்/. தொடருங்கள்....![/note]
Post by Eegarai Net.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1068938moganan wrote:அன்பு மருத்துவர் சாந்தாராமிற்கு...
மூன்று விதமான களஞ்சியங்களையும் அத்தான் தகவல் களஞ்சியங்களையும் ஒரே மூச்சில் படித்து ஏப்பம் விட்டுவிட்டேன். அத்தான் பசியாறி விட்டேன்...
உங்களது எழுத்திற்கு சொல்லவும் வேண்டுமா? அரிய பல தகவல்கள்... அசத்தும் மொழி நடை...
ஆதிகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும் வருகிறீர்கள்... எம்ஜிஆர்- சரோஜா தேவி மேட்டரை டீலில் விட்டுவிட்டீர்கள்... புதிர் போட்டு விட்டால் மனது குமையத்தான் செய்கிறது?
கலக்குங்க மருத்துவரே... படித்து மகிழ பட்டாளமே இருக்கிறது...
அன்புள்ள திரு . மோகனன் அவர்களுக்கு ,
உங்களின் கடிதத்திற்கு நன்றிகள் பல !
எம்ஜிஆர் - சரோஜாதேவி சமாச்சாரத்தை மறுபடியும்
'உப்புமா ' மாதிரி மறுபடியும் கிண்டுகிறீர்கள் !
உங்களுக்காக நானும் கொஞ்சம்.........
சரோஜாதேவி , திருமணம் செய்துகொண்டதை எம்ஜிஆர்
விரும்பவில்லை !
காரணம் ?
" திருமணம் ஆனா சரோஜாதேவியோடு எம்ஜிஆர் நடித்ததால் ,
காதல் காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் முன்பு போல
ரசிகர்களைக் கவரும் வகையில் சோபிக்க மாட்டார் "
இப்படி எல்லாம் நான் எண்ண வில்லை.....எம்ஜிஆர் எண்ணினார் !
எனவே ' பெற்றால்தான் பிள்ளையா ' க்கு அப்புறம் ...
எம்ஜிஆர் 'உஜ்ஜாலாவுக்கு ' மாறிவிட்டார் ...
அத்தான் - ஜெயலலிதாவுக்கு ' ஆயிரத்தில் ஒருவன் ' ஆக
மாறிவிட்டார் !
பெங்க்களூரில் நடந்த சரோஜாதேவி திருமணத்திற்கும்
மற்றும்
சென்னை மைலாப்பூர் உட்லாண்ஸ் ஹோட்டலில் நடந்த
வரவேற்பு நிகழ்ச்சிக்கும் எம்ஜிஆர் போகவில்லை !
ஆனால் சரோஜாதேவிக்கு திருமணம் முடிந்து 19 ஆண்டுகள் கழித்து
சரோஜாதேவியின் கணவர் மரணம் அடைந்த போது,
தன மனைவி ஜானகியுடன் பெங்களூர் சென்று சரோஜாதேவிக்கு
ஆறுதல் சொன்னார் எம்ஜிஆர் !
அது மட்டுமா !
அபோது ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தார் .
" ராஜீவ் காந்தி இடம் சொல்லி உனக்கு எம். பி .
பதவி வாங்கித் தருகிறேன் , சரியா ? "
என்று எம்ஜிஆர் , சரோஜாதேவியிடம் கேட்டார் !
அதற்கு சரோஜாதேவியின் பதில் :
" அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் ! "
சரி, மருத்துவய்யா !
நான் என்ன உங்களைக் கேட்டேன் ?
" எம்ஜிஆரும் சரோஜாதேவியும் ஏன் ' பெற்றால்தான் பிள்ளையா'
படப் பிடிப்பில் பேசிக்கொள்ளவில்லை ? "
என்றுதானே கேட்டேன் ? "
என்று கேட்கிறீர்களா மோகனன் !
அது மட்டுமா !
" பெண் என்றால் பெண் " படத்தை சரோஜாதேவியை வைத்து
படத்தை இயக்க ஆரம்பித்த ஆரூர்தாஸை டெலிபோனில் அவரின்
'மென்னியைப் ' பிடித்து :
" ஆசிரியரே ! நீங்கள் இயக்கும் " பெண் என்றால் பெண் ' படத்தில்
சரோஜாதேவியைப் போடாதீர்கள் !
அவரை நீக்கிவிட்டு " அம்மு " ( ஜெயலலிதா ) வைப்
போடுங்கள் ? "
என்று ஏன் சொன்னார் ?
சில சமயங்களில் , சில விஷயங்களை
வெளிப்படையாக சொல்லாதிருப்பதே நல்லது , மோகனன் !
ஏன் என்றால் :
" ஏன் வீட்டுக்கு யாரவது 'ஆட்டோ ' வை அனுப்பி
விட்டால் ! ? "
பதில்கள் தொடரும் !
எம்கேஆர்சாந்தாராம்
அடடா...
இருங்க மருத்துவரே... உங்க வீட்டுக்கு ஆட்டோ பிடிச்சு நான் வரேன் இப்போ...
அடுத்த பதிவு எப்போது என காத்திருக்க வைக்காமல்.... விரைவில் (சு)வாசிக்கத் தாருங்கள்...
இருங்க மருத்துவரே... உங்க வீட்டுக்கு ஆட்டோ பிடிச்சு நான் வரேன் இப்போ...
அடுத்த பதிவு எப்போது என காத்திருக்க வைக்காமல்.... விரைவில் (சு)வாசிக்கத் தாருங்கள்...
சில சமயங்களில் , சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லாதிருப்பதே நல்லது , மோகனன் ! ஏன் என்றால் : " ஏன் வீட்டுக்கு யாரவது 'ஆட்டோ ' வை அனுப்பி விட்டால் ! ?
ஆட்டோவெல்லாம் பழசு, இப்பல்லாம் ஸ்கார்பியோ தான் !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1068984M.M.SENTHIL wrote:படிக்கும் போது அதில் லயிப்பு ஏற்படும் வண்ணம் பதிவது மிக சிலரால் மட்டுமே முடியும், அதில் நீங்களும் ஒருவர்.
அன்புள்ள திரு . M . S . செந்தில் அவர்களே,
தங்களின் மடல் கண்டு மிக்க மகிழ்வடைந்தேன் !
மிக்க நன்றியும் கூட !
நானும் உங்களின் கவிதைகளை ரசித்துப் படித்து
மகிந்திருக்கின்றேன் - ஆனால் அவைகளை விமர்சனம்
செய்யும் அளவுக்கு எனக்கு ' ஞானம் ' இல்லை !
உங்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்,
எம்கேஆர்சாந்தாராம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
டாக்டர் சார், உங்களை எப்படி , எப்படி புகழ்வதுன்னு தெரியல, இப்படி எழுத எல்லாராலும் முடியாது. இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்னு நினைக்கிறேன். நேரில் நடப்பது போன்று இருக்கிறது, உங்களது இந்த அற்புத படைப்பு.
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
அன்புள்ள திரு. சிவா அவர்களுக்கு,
என்னுடைய கட்டுரையை முழுவதையும் நன்கு படித்து அதனைப்
பற்றி நான் உட்பட அனைவரிடமும் பங்கு போட்டு பகிர்ந்து கொள்ளும்
உங்களின் பாங்கு என்னைக் கவர்ந்திருக்கிறது !
மிக்க நன்றியும் கூட , திரு . சிவா சார் !
மேலும்,
" லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு "
பற்றி நீங்கள் சொன்ன கட்டுரையை நான் எழுதவில்லை
என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .
அந்த கட்டுரையை யார் எழுதியது என்பது தெரியவில்லை !
பொதுவாக , என்னுடைய கட்டுரை 'கோனார் நோட்ஸ் ' மாதிரி
பத்தி பத்தி யாக ' சீரியஸ் ' ஆக எழுதவே மாட்டேன் !
படங்களுடன், சில சமயங்களில் நேரில் பேசுவது மாதிரி
வசன நடையுடந்தான் எழுதுவேன் என்பது உங்களுக்குத் தெரியும் !
என்று எழுதியது !
உண்மை !
அந்த 36 வயதில் சின்னப்பா செய்த சாதனைகள் அதிகம் !
அவர் இறந்து சுமார் 70 வருடங்கள் ஆனாலும் அவர்
பெயரை இப்போதும் சொல்லப்படுகிறது !
இவர் சொந்த ஊரான புதுக்கோட்டையில் பாதிக்கும்
மீள் உள்ள அசையா சொத்துக்களை அவர் வாங்கி
விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் !
அவர் புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிப்
" போடும் " வேகத்தைப் பார்த்து அப்போதைய
பிரிட்டிஷ் அரசு ஓர் உத்தரவே போட்டது !
என்ன அந்த உத்தரவு தெரியுமா !
" இனிமேலும் சின்னப்பாவுக்கு யாரும்
வீடுகளை விற்க்கக்கூடாது! "
எனினும் பி யு சின்னப்பா மகா குடிக்காரர் !
சின்னப்பா, தனக்கு ' உத்தம புத்திரன் ' படம் மூலம்
மறுவாழ்வு கொடுத்த 'மாடர்ன் தியேட்டர்ஸ் ' அதிபர்
டி. ஆர் சுந்தரத்தையே தன குடியால் பகைத்துக்
கொண்டார் !
( இந்த கதை பிறகு பார்க்கலாம் ! )
( ' ஜெகதலப்பிரதாபன் ' படத்தில் 5 சின்னப்பாக்கள் !
இசைத்தட்டு விளம்பரம் ! )
1948 ஆம் ஆண்டில் வெளிவந்த என் எஸ் கிருஷ்ணன்
இயக்கிய " மணமகள் " படத்தை பார்க்க விரும்பினார் ,
சின்னப்பா .
போய்ப் பார்த்தார் !
வீட்டுக்கு வந்தார் !
அங்கே .........
உடனே இறந்து விட்டார் !
என்னய்யா காரணம் ?
மாரடைப்பு " என்றார்கள் மருத்துவர்கள் !
அப்படியா ?
" இல்லை , வேறு காரணம் உள்ளது ! "
என்றார்கள் !
என்னவாம் ?
" பி யு சின்னப்பா , அவர் மரணம் அடையும் சில
நாட்கள் முன்பு தன வீட்டில் வேலை செய்த பணியாள் ஒருவரை
குடி போதையில் அடித்து நொறுக்கி விட்டார் .....
அதனால் என்னவோ அந்த பணியாள் இறந்து விட்டார் .
காவல் துறை இதனை மோப்பம் பிடித்து பி யு
சின்னப்பாவை கைது செய்ய முடிவு செய்தது !
பாகவதர் போல தானும் ' உள்ளெ ' செல்ல சின்னப்பா
விரும்பாமலும் அவமானத்தில் இருந்த தப்பிக்க
தன விரல்களில் அணிந்திருந்த வைர மோதிரங்களில் ஒன்றின்
வைரக் கற்களை விழுங்கி மரணம் அடைந்தார் ! "
என்றும் ' பேசி .....பேசி ....பேசி ...'
கொல்கிறார்கள் .....இல்லே ... கொள்கிறார்கள் !
எது எப்படியோ சின்னப்பா வின் இன்னும் பல
நூற்றாண்டுகளுக்கு மங்காமல் இருக்கும் !
உண்மை , சிவா சார் !
அந்த காலத்தில் வெளியாகும் படங்கள் ' ரொம்ப கம்மி ' , சார் !
விடியோ , நாடகம், இன்டர்நெட் , ஈகரை ( ! )
போன்ற பொழுது போக்குகள் அப்போது இல்லை !
முதலில் " ஹரிதாஸ் " , " பிரபாத் " என்கிற ஒரு தியேட்டரில்
வெளியிடப்பட்டதாம் ! அந்த 'பிரபாத் ' தியேட்டர் இப்போது
இல்லை, ஆனால் அந்த தியேட்டர் , இப்போது உள்ள
'பிராட்வே ' வுக்கு பக்கத்திலே இருந்தது !
சில மாதங்கள் ( ! ) 'ஹரிதாஸ் ' பிரபாத் ' இல் ஓடி,
பின்னர் ' பிராட்வே ' வுக்கு மாற்றப்பட்டது !
எம்கே ஆர்சாந்தாராம்
என்னுடைய கட்டுரையை முழுவதையும் நன்கு படித்து அதனைப்
பற்றி நான் உட்பட அனைவரிடமும் பங்கு போட்டு பகிர்ந்து கொள்ளும்
உங்களின் பாங்கு என்னைக் கவர்ந்திருக்கிறது !
மிக்க நன்றியும் கூட , திரு . சிவா சார் !
மேலும்,
" லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு "
பற்றி நீங்கள் சொன்ன கட்டுரையை நான் எழுதவில்லை
என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .
அந்த கட்டுரையை யார் எழுதியது என்பது தெரியவில்லை !
பொதுவாக , என்னுடைய கட்டுரை 'கோனார் நோட்ஸ் ' மாதிரி
பத்தி பத்தி யாக ' சீரியஸ் ' ஆக எழுதவே மாட்டேன் !
படங்களுடன், சில சமயங்களில் நேரில் பேசுவது மாதிரி
வசன நடையுடந்தான் எழுதுவேன் என்பது உங்களுக்குத் தெரியும் !
சின்னப்பா வை ஆதிரிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை இப்படி விமர்சனம் செய்தது ! எப்படி விமர்சனம் செய்தது என்று கூறவேயில்லையே!!! wrote:
உண்மைதான் சிவா சார் !
அந்த இணைப்புக்கள் எனக்குத் தெரியாமல்
" SUBMIT " செய்யும் போது 'ஜகா ' வாங்கி விடது !
நீங்கள் சரியாக கவனித்து விட்டீர்கள் !
நன்றி , சிவா ஐயா !
அந்த இணைப்புக்கள் எனக்குத் தெரியாமல்
" SUBMIT " செய்யும் போது 'ஜகா ' வாங்கி விடது !
நீங்கள் சரியாக கவனித்து விட்டீர்கள் !
நன்றி , சிவா ஐயா !
சின்னப்பா வை ஆதிரிக்கும்
தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை
இப்படி விமர்சனம் செய்தது !
தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை
இப்படி விமர்சனம் செய்தது !
' நடிப்பும் திறமையும் இல்லாத பாகவதர் தன்
குரலால் மட்டும் மக்களை வசியம் செய்கிறார் !
ஆனால் சின்னப்பா பல திறமைகளைக் கொண்டவர் ! -
சகலகலா வல்லவர் ! ""][/
குரலால் மட்டும் மக்களை வசியம் செய்கிறார் !
ஆனால் சின்னப்பா பல திறமைகளைக் கொண்டவர் ! -
சகலகலா வல்லவர் ! ""][/
பாகவதர் பத்திரிக்கை :
="" பாட்டுக்கே முதல் ஓட்டு !
அழகுக்கே முதல் ஓட்டு !
சண்டைக்கு கடைசி ஓட்டு !
கருப்பு இனத்தவருக்கு கடைசி ஓட்டு "
அழகுக்கே முதல் ஓட்டு !
சண்டைக்கு கடைசி ஓட்டு !
கருப்பு இனத்தவருக்கு கடைசி ஓட்டு "
என்று எழுதியது !
பி யு சின்னப்பா தனது 36 ஆம் வயதில் அகால மரணம் அடைந்தார் ! 36-வயதிற்குள் இவ்வளவு சாதனைகளைப் படைத்தாரா? நினைக்கும் பொழுதே மலைப்பாக உள்ளது! wrote:
பி . யு . சின்னப்பா !
உண்மை !
அந்த 36 வயதில் சின்னப்பா செய்த சாதனைகள் அதிகம் !
அவர் இறந்து சுமார் 70 வருடங்கள் ஆனாலும் அவர்
பெயரை இப்போதும் சொல்லப்படுகிறது !
இவர் சொந்த ஊரான புதுக்கோட்டையில் பாதிக்கும்
மீள் உள்ள அசையா சொத்துக்களை அவர் வாங்கி
விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் !
அவர் புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிப்
" போடும் " வேகத்தைப் பார்த்து அப்போதைய
பிரிட்டிஷ் அரசு ஓர் உத்தரவே போட்டது !
என்ன அந்த உத்தரவு தெரியுமா !
" இனிமேலும் சின்னப்பாவுக்கு யாரும்
வீடுகளை விற்க்கக்கூடாது! "
எனினும் பி யு சின்னப்பா மகா குடிக்காரர் !
சின்னப்பா, தனக்கு ' உத்தம புத்திரன் ' படம் மூலம்
மறுவாழ்வு கொடுத்த 'மாடர்ன் தியேட்டர்ஸ் ' அதிபர்
டி. ஆர் சுந்தரத்தையே தன குடியால் பகைத்துக்
கொண்டார் !
( இந்த கதை பிறகு பார்க்கலாம் ! )
( ' ஜெகதலப்பிரதாபன் ' படத்தில் 5 சின்னப்பாக்கள் !
இசைத்தட்டு விளம்பரம் ! )
1948 ஆம் ஆண்டில் வெளிவந்த என் எஸ் கிருஷ்ணன்
இயக்கிய " மணமகள் " படத்தை பார்க்க விரும்பினார் ,
சின்னப்பா .
போய்ப் பார்த்தார் !
வீட்டுக்கு வந்தார் !
அங்கே .........
உடனே இறந்து விட்டார் !
என்னய்யா காரணம் ?
மாரடைப்பு " என்றார்கள் மருத்துவர்கள் !
அப்படியா ?
" இல்லை , வேறு காரணம் உள்ளது ! "
என்றார்கள் !
என்னவாம் ?
" பி யு சின்னப்பா , அவர் மரணம் அடையும் சில
நாட்கள் முன்பு தன வீட்டில் வேலை செய்த பணியாள் ஒருவரை
குடி போதையில் அடித்து நொறுக்கி விட்டார் .....
அதனால் என்னவோ அந்த பணியாள் இறந்து விட்டார் .
காவல் துறை இதனை மோப்பம் பிடித்து பி யு
சின்னப்பாவை கைது செய்ய முடிவு செய்தது !
பாகவதர் போல தானும் ' உள்ளெ ' செல்ல சின்னப்பா
விரும்பாமலும் அவமானத்தில் இருந்த தப்பிக்க
தன விரல்களில் அணிந்திருந்த வைர மோதிரங்களில் ஒன்றின்
வைரக் கற்களை விழுங்கி மரணம் அடைந்தார் ! "
என்றும் ' பேசி .....பேசி ....பேசி ...'
கொல்கிறார்கள் .....இல்லே ... கொள்கிறார்கள் !
எது எப்படியோ சின்னப்பா வின் இன்னும் பல
நூற்றாண்டுகளுக்கு மங்காமல் இருக்கும் !
( சின்னப்பா, தன மனைவி ( அவரும் நடிகைதான் )
எ . சகுந்தலாவுடன் )
எ . சகுந்தலாவுடன் )
சென்னை பிராட்வே திரை அரங்கில் 3 தீபாவளிகளைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றது !
மூன்று வருடங்கள் உண்மையிலேயே மக்கள் சென்று பார்த்தனரா அல்லது பவர் ஸ்டாரின் லத்திகா படம் போன்று ஓட்டினார்களா? உண்மையைச் சொல்லுங்க பாஸ்!
மூன்று வருடங்கள் உண்மையிலேயே மக்கள் சென்று பார்த்தனரா அல்லது பவர் ஸ்டாரின் லத்திகா படம் போன்று ஓட்டினார்களா? உண்மையைச் சொல்லுங்க பாஸ்!
உண்மை , சிவா சார் !
அந்த காலத்தில் வெளியாகும் படங்கள் ' ரொம்ப கம்மி ' , சார் !
விடியோ , நாடகம், இன்டர்நெட் , ஈகரை ( ! )
போன்ற பொழுது போக்குகள் அப்போது இல்லை !
முதலில் " ஹரிதாஸ் " , " பிரபாத் " என்கிற ஒரு தியேட்டரில்
வெளியிடப்பட்டதாம் ! அந்த 'பிரபாத் ' தியேட்டர் இப்போது
இல்லை, ஆனால் அந்த தியேட்டர் , இப்போது உள்ள
'பிராட்வே ' வுக்கு பக்கத்திலே இருந்தது !
சில மாதங்கள் ( ! ) 'ஹரிதாஸ் ' பிரபாத் ' இல் ஓடி,
பின்னர் ' பிராட்வே ' வுக்கு மாற்றப்பட்டது !
பாகவதர் - சின்னப்பா !
இவர்களைப் பற்றி
பேச - எழுத - படிக்க -
எராளமான செய்திகள்
கடல் போல்
உள்ளன !
இவர்களைப் பற்றி
பேச - எழுத - படிக்க -
எராளமான செய்திகள்
கடல் போல்
உள்ளன !
எம்கே ஆர்சாந்தாராம்
- mkrsantharamபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மேற்கோள் செய்த பதிவு: 1069437மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் சார், உங்களை எப்படி , எப்படி புகழ்வதுன்னு தெரியல, இப்படி எழுத எல்லாராலும் முடியாது. இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்னு நினைக்கிறேன். நேரில் நடப்பது போன்று இருக்கிறது, உங்களது இந்த அற்புத படைப்பு.
அன்புள்ள திரு . மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு,
உங்களின் பாராட்டிற்கு தகுதி உடையவன் ஆக நான்
இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது !
ஆனால் , உங்களின் பாராட்டுக்களும் , ஊக்கங்களும்
எனக்கு மீண்டும் மீண்டும் ....இன்னும் இன்னும் .....
...அதிகம் , அதிகம் ....கொஞ்சம் , கொஞ்சமாக .....
எழுதத் தூண்டுகின்றன என்பதோ
உண்மை ! உண்மை ! உண்மை !
நன்றி , ஐயா !
எம்கே ஆர்சாந்தாராம்
mkrsantharam அவர்களுக்கு நன்றி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 6 of 26 • 1 ... 5, 6, 7 ... 16 ... 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 26
|
|